Wednesday, January 26, 2011

என் முதல் காதல் தோல்வி

பெரும்பான்மையோருக்கு முதல் காதல் தோன்றுவது கல்லூரியில் தான். எனக்கும் கல்லூரியில் தான் முதல் காதல் தோன்றியது. பொதுவாக கண்டதும் காதல் வருவது இயல்பு. எனக்கும் கண்டதும் காதல் தோன்றியது. ஆனால் என் காதல் சற்றே வித்தியாசமானது.கல்லூரியில் முதலாமாண்டு இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பித்தவுடன் தான் என் காதலி எனக்கு முதன் முதலில் அறிமுகமானால். அந்த காதலியை அறிமுக படுத்தியது பல்கலை கழக பேராசிரியர் தான். என்ன ஆச்சிரியமாக உள்ளதா? உண்மையில் அவர் எனக்கு என் காதலியை அறிமுக படுத்திய விதம் தான் காதல் தோன்ற முக்கிய காரணம் எனலாம். என் பேராசிரியர் எனக்கு அறிமுகபடுத்திய காதலியின் பெயர் மைக்ரோபயாலஜி. ஆம் மைக்ரோபயாலஜி பாடம் தான் என் முதல் காதலி .

நான் படித்தது விவசாய கல்லூரியில். அங்கு பெரும்பாலான பாடங்கள் உழவியல் மற்றும் களப்பணி சம்பந்தமாக இருக்கும். அங்கு படிக்கும் பாடங்களிளேயே அந்த காலத்தில் மிகவும் மாடர்னாக இருந்தது மைக்ரோபயாலாஜி. அது மட்டுமன்றி இந்தியாவிலேயே முதன் முதலில் மைக்ரோபயாலஜி தொடங்க பட்ட கல்லூரி எங்கள் கல்லூரி தான். மத்திய அரசு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து பல லட்சம் பெருமான பிராஜெக்ட்கள் அங்கு நடந்து கொண்டு இருந்ததால் பல நவீன ஆராய்ச்சி உபகரணங்கள் அங்கு இருந்தன. பல தரபட்ட நவீன ஆராய்ச்சி செய்ய கூடிய வாய்ப்பு இருந்தது. அதெல்லாம் தான் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம் என கூறலாம்.

மற்றவர்களுக்கெல்லாம் காதல் பார்க்கிலும் பீச்சிலும் வளரும். எனக்கு காதல் லைப்ரரியிலும், மைக்ரோ பயாலஜி ஆராய்ச்சி கூடங்களிலும் வளர்ந்தது. லைப்ரரியில் மேலை நாடுகளிலிருந்து வரும் சயின்ஸ்,நேச்சர் போன்ற பத்திரிக்கைகளில் வரும் துறை சார்ந்த ஆராய்ச்சியை படித்து மைக்ரோபயாலஜி மேல் வரும் காதல் அதிகமானது. என் அண்ணணை பார்க்க சென்னை சென்ற போது ஹிக்கின் பாதம்ஸில் பல கலர் கலரான படம் கொண்ட வெளி நாட்டு புத்தகங்களை அள்ளி கொண்டு சென்றேன். அந்த புத்தகங்களை படித்த போது என் காதலியின் அடி மனதை( foundation/basics) புரிந்து கொண்டேன்.

மற்ற காதலர்கள் எல்லாம் கிளப்களில் காதலியோடு நேரம் செலவு செய்த போது நான் மாணவர்களுடன் மைக்ரோபயாலஜி கிளப் ஆரம்பித்து சிறிய ஆராய்ச்சிகளை(?) செய்து நேரம் கழித்தேன்.மற்ற காதலர்கள் கனவுலகில் பூம்புகாருக்கும், ஸ்விட்சர்லாந்துக்கும் செல்லும் போது, நான் கனவுலகில் MIT மற்றும் UC-Berkley பல்கலை கழகத்தில் அராய்ச்சியாளனாகவும், நோபல் பரிசு பெற காதலியுடன் ஆராய்ச்சி செய்வதாகவும் கனவை கழித்தேன்.காதலின் ஆழத்தின் அடையாளம் கல்லூரி படிப்பில் கவர்னரிடமிருந்து கிடைத்த அவார்டின் மூலம் வெளிபட்டது.

இளங்களை விவசாயம் படித்து முடித்த பின் ஸ்டெர்லிங் டிரீ மேக்னம் நிறுவனத்தில் கருத்தம்மா மண்ணில் கிடைத்த வேலையை 5 மதங்களில் உதறி விட்டு காதலியை தேடி முதுகலை படிக்க வந்தேன்.

முது கலை படிப்பின் போதும் என் காதல் தொடர்ந்தது. நான் செய்ய நினைத்த ஆய்வுகளை இந்தியாவில் செய்வது மிகவும் கடினம் என்பதை அப்போது தான் உணர்ந்தேன். ஆனாலும் பாடத்தின் மீது இருந்த காதலின் ஆர்வம் மட்டுமே குறையவில்லை.காதலர்களுக்கு எப்போதாவது கிடைக்கும் அறிய வாய்ப்பை தவற விட்டால் காதலில் வெற்றி பெருவது கடினம். GRE எழுதி மேலை நாடுகளில் மேற்படிப்புக்கு சென்றிறுந்தால் காதல் வெற்றி பெற வாய்ப்பிருந்திருக்கும். அந்த வாய்ப்பை தவற விட்டது என் காதல் தோல்விக்கான முக்கிய காரணமானது.

அனைவருக்கும் காதலுக்கான எதிர்ப்பு சமூகத்தில் இருந்து தான் வரும். எனக்கும் எதிர்ப்பு சமூகத்திலிருந்து தான் வந்தது.என்னத்தான் படித்து கல்லுரியில் முதல் மதிப்பெண் வாங்கினாலும் ஒவ்வொருவரின் தகுதியும் அவர்கள் வாங்கும் சம்பளத்தின் மூலம் மட்டும் தான் இந்த சமூகத்தில் எடை போட படுகிறது.என்னுடைய ஆராய்ச்சி கட்டுரை பற்றி ஹிந்து பத்திரிக்கையில் வந்த செய்தி பற்றி வெளியில் கூறினால் கிடைத்த பதில், இப்ப கல்லுரி முடித்த உறவினர்கள் எல்லாம் சாப்ட்வேரில் 30000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். நீ இவ்ளோ மார்க் வாங்கியும் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லையா என்பது.

கல்லூரியில் வாங்கிய பதக்கங்களும், அறிவும் தனியார் கம்பெனியின் வாட்ச்மேனை தாண்டி HR Department கூட சென்றடையவில்லை. Resumeகள் வாட்மேனின் குப்பைதொட்டியில் தான் விழுந்தது.1990களில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் பெரும் பாலானோருக்கு வேலையின்மையின் வலி நன்கு தெரிந்து இருக்கும்.அப்போது எல்லாம் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் வரும் நாள் தான் தீபாவளி. அதில் எதாவது ஒரு மூலையில் வேலை வாய்ப்பு எதுவும் வருமா என்று ஆவலுடன் தேடும் நாட்கள் இனியவை. பல கனவுடன் பணம் செலவு செய்து ரெசியூம் xerox எடுத்து கவரிங் லட்டர் அடித்து கவர் வாங்கி போஸ்ட் செய்ய செலவு செய்தது தான் மிச்சம்.அப்போது எல்லாம் வருடத்தில் ஓரிரு முறை வேலை வாய்ப்பை கொடுப்பது வங்கிகள் தான்.வங்கிகளுக்கான தேர்வில் பல லட்சம் பேருடன் போட்டியிட்டு நேர்முக தேர்வுக்கு செலக்ட் ஆனாலும் அங்கு நடக்கும் முறைகேடுகளை தாண்டி வேலை கிடைப்பது கடினமே

காதலின் மோகத்தால் ஆராய்ச்சி செய்ய வேளாண் பல்கலைகழகத்தில் சேர்ந்தேன்.ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சிகள் 1970களில் நடக்க வேண்டியவையே அப்போதும் அங்கு நடந்து கொண்டிருந்தது. நவீன ஆராய்ச்சிக்கும் தற்போது நடக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இடைவேளி வெகு தொலைவு. அது மட்டுமன்றி ஆராய்ச்சிக்கான தலைப்பும், ஆராய்ச்சிக்கான கைடும் தேர்வு செய்யும் உரிமை ஆராய்ச்சி மாணவர்களுக்கு இல்லை.பெரும்பாலான ஆராய்ச்சிகளின் முடிவை தலைப்பை பெற்றதுமே முடிவை கணித்து புள்ளியியல்(statistics) அறிவு மூலம் தலைப்பு கிடைத்தவுடனேயே thesis எழுத ஆரம்பித்து விடலாம்.இதெல்லாம் எனக்கு ஒரு சிறு ஊடலை ஏற்படுத்தினாலும் சமூக அழுத்தங்கள் தான் காதலின் முக்கிய எதிரியாக இருந்தது.

அப்பொழுது எல்லாம டெல்லி வேளாண் மையத்தில் ஆராய்ச்சி நிதி உதவி செய்ய பரிச்சை எழுதினால் முடிவு தெரிய ஒரு வருடம் ஆகும்.உண்மையில் ஆராய்ச்சி மாணவர்களின் நிலை இந்தியாவில் பரிதாபமானது. உண்மையிலேயே அறிவியலில் ஆர்வம் இருந்து மிகவும் பிரகாசமான மாணவர்கள் இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பை தொடங்க விரும்பினால் நிலமை மிகவும் மோசம். ஆராய்ச்சி படிப்பு வரை முடிக்க கல்லூரி படிப்பை சேர்த்து சுமார் 10 - 15 வருடங்கள் ஆகும். இங்கு இருக்கும் கைடுகளுடன் சண்டை போட்டு நல்ல தலைப்பை வாங்கி, பல்கலை கழகத்தில் இருக்கும் மோசமான infrastructure கொண்டு ஆராய்ச்சியை முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.ஆராய்ச்சியை முடித்தாலும் நல்ல வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு.(தற்போது ஓரளவுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது என்று கேள்வி பட்டேன்).

மேலை நாடுகளில் இந்தியாவை போல் சம்பளம் மட்டும் அளவு கோலாக பார்க்க படுவதில்லை. ஆனால் இந்தியாவிலோ ஆராய்ச்சி பேப்பரை நேச்சர் ஜேர்னலில் போட்டால் கூட அதை ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். அவர்கள வாங்கும் சம்பளம் மட்டும் தான் அளவுகோல்.
சமூக அவலத்தை தட்டி கேட்கும் நக்சலைட்டாக இருப்பவர்கள் சமூக அளவீடுகள் அனைத்தையும் தூக்கி எறிந்து தன் லட்சியம் மட்டும் குறிக்கோளாக கொண்டு வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பார்கள். அதே பொன்ற மன நிலைதான் ஒரு ஆராய்ச்சி மாணவருக்கும் இருக்க வேண்டும்
. அந்த அளவு உறுதியான மனநிலை எனக்கு இல்லாமல் போனது என் துரததிர்ஷ்டம்.சிறுவர்களாய் பார்த்த உறவினர்கள் எல்லாம் கல்லூரி முடித்தவுடன் சாப்ட்வேரில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு போகும் போது வேலைக்கு போகாமல் ஆராய்ச்சியை விருப்பமாக செய்து கொண்டு இருப்பது சமூக அளவில் ஒரு குற்ற உணர்வையே ஏற்படுத்தியது.

கடுமையான மன அழுத்தத்திற்கு பின் காதலியை (தற்காலிகமாக?) பிரிந்து மென்பொருள் துறைக்கு சென்று பின் Bioinformatics துறைக்கு சென்று காதலியுடன் சேரலாம் என்ற முடிவை எடுத்தேன்.விவசாயமும் வேளாண் நுண்ணியிரியலும் என் மனதுக்கு பிடித்தமான பாடமாக இருந்தாலும் 8 வருட தொடர்பை ஒரு நாளில் அறுத்து விட்டு மென்பொருள் துறைக்கு நுழைய முதலில் டைப் ரைட்டிங் கிளாசில் வந்து சேர்ந்தேன். மென்பொருள் துறையில் ஒரு நல்ல நிலைக்கு தற்போது வந்தாலும் என்றுமே மனதின் அடிமட்டத்தில் விவசாயம் மற்றும் நுண்ணியிரியல் மீது உள்ள காதலின் தோல்வி வாட்டத்தை கொடுத்து கொண்டு தான் உள்ளது.

சில மாதத்துக்கு முன் இந்தியாவில் உள்ள முக்கிய NGO வில் உயர் பதவியில் இருக்கும் என் நண்பனிடம் பேசும் போது, விவசாய நாடான இந்தியாவில் , எத்தனையோ கணிபொறியாளர்கள் தோன்றினாலும், விவசாயத்துக்கு உதவும் வகையில் உள்ள மென்பொருட்கள் மிகவும் குறைவாகவே உள்ளது என்பது பற்றி பேசி கொண்டிருந்தேன். அதற்கு அவன் எனக்கு விவசாயத்தில் எந்த இடத்தில் மென் பொருள் தேவை என்று தெரியும். உனக்கு மென்பொருள் தெரியும். நாம் ஏன் தீர்வை நோக்கி சிந்திக்காமல் பிரச்ச்னையை பற்றி பேச வேண்டும் என்றான். சரி விவசாயம் சம்பந்தான மென்பொருள் செய்யலாமே என்று பேச ஆரம்பித்தோம். என் இரண்டாவது காதல் தொடங்கியது.(நேரமின்மை, பிற பொறுப்புகள் மற்றும் சோம்பேரி தனத்தை காரணம் கொண்டு இந்த காதலும் தோற்றுவிட கூடாது).

பிற கல்லூரி சம்பந்தமான பதிவுகள்

அண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி

கல்லூரி நினைவுகள் 2 - தேர்வு திருவிழா


--

8 comments:

ஆயில்யன் said...

விவசாயத்துறை நீர்ப்பாசனம் போன்ற அடிப்படை வாழ்வாதாரங்களினை பற்றிய அலட்சியமான மனோநிலையிலேயே அரசு இருக்கிறது! அதை புரிந்து உணரும்போது பல இழப்புகளினை சந்தித்திருப்போம்! :(


விவசாயத்துறையில் மென்பொருட்கள் நிச்சயம் ஒரு பெரிய திருப்பம்/சாதனையாக அமையக்கூடும்! காதலியுடனான வாழ்வு இனித்திட வாழ்த்துகள் :)

சதுக்க பூதம் said...

வாங்க ஆயில்யன்.

//விவசாயத்துறை நீர்ப்பாசனம் போன்ற அடிப்படை வாழ்வாதாரங்களினை பற்றிய அலட்சியமான மனோநிலையிலேயே அரசு இருக்கிறது! அதை புரிந்து உணரும்போது பல இழப்புகளினை சந்தித்திருப்போம்! :(//

நீங்கள் சொல்வது உண்மைதான். காமராஜர் ஆட்சிக்கு பிறகு மிக பெரிய நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்தபடவில்லை.

//

Raj Chandirasekaran said...

Hi

You must be from Annamalai University. That is where India's first department of Agricultural Microbiology was established under Dr.G. Rangasamy. I am also an alumni of Faculty of Agriculture Annamalai University (1997-2001). May I know your name? Please contact me through e-mail.
Thanks
Raj

Anonymous said...

I understand your points about research, though I am not in the field of agri. True research is not encouraged in our country. Whatever is done during PG courses is like a sambirathaayam to finish off the PG. It is not recognised as a qualification for job. Things are getting better now.

Unknown said...

hello sir,
we are a social enterprenurs.we are forming a brand new social venture. with help of a venture capital company.we are looking for a change in the field of EDUCATION,AGRICULTURE,SOCIOECONOMICALIMPROVEMENT OF PEOPLES,MEDICINE&PUBLIC SANITATION.for that we want detailed plans from the scholars.its a trial pl help us to improve the socity with help of ur knowledge.mail us @superblogr@gmail.com

Raman said...

Superb love story... But i am sorry for your first love failure.... Best wishes for the second stage of the love with same lover...Everything in this post is 'yedhaarthamaana unmai'...

Thiagarajan.S PMP said...

All the best for your 2nd love

Thiagarajan.S PMP said...

All the best for your 2nd love.