Monday, October 19, 2015

தமிழ்நாட்டு மின்வெட்டை போக்குமா டெஸ்லாவின் PowerWall

ஒவ்வொரு வருடமும் கோடையின் கத்தரி வெய்யில் அதிகரிக்கிறதோ என்னவோ? மின் வெட்டு அதைவிட அதிக அளவில் அதிகரிக்கிறது. கோடை காலம் வந்தாலே ஏன் மின்வெட்டு வருகிறது என்றால், அணைகளில் நீர் இல்லாததால் நீர் மின்சாரமும், காற்று வேகம் குறைவாக உள்ளதால் காற்று மின்சாரமும் கிடைக்காதது தான் என்கிறார்கள். என்னடா இது இந்த சூரிய பகவானுக்கு கருணையே இல்லையே? என்று எண்ண தோன்றும். ஆனால் உலகெங்கும் சூரிய ஒளி மூலம் பல்லாயிரம் வாட்டுகள் மின்சாரம் எடுக்கும் போது கோடை வெப்பத்தை கண்டு மின்வெட்டுக்கு வருத்த படவேண்டுமா என்று தோன்றும்.

அமெரிக்காவில் Solar Power

அமெரிக்காவில் வீட்டு கூறைகளில் சோலார் பேனல் வைத்து வீடுகளில் மின்சாரம் தயாரிக்கின்றனர். காலை மற்றும் இரவு வேலைகளில் வீடுகளுக்கு அதிக மின்சாரம் தேவைபடும். ஆனால் சூரிய ஒலி மூலம் கிடைக்கும் மின்சாரமோ பகல் நெரங்களில் அதிகம் கிடைக்கும். பகலில் வீடுகளுக்கு மின் உபயோகமும் குறைவு. ஆனால் தொழிற்சாலை மற்றும் அலுவலங்களுக்கு பகலில் அதிக மின்சாரம் தேவை. இந்த பிரச்சனையை சரி செய்ய வீடுகளில் விஷேச மோட்டார் பொருத்த படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சார கிரிடுகளிலிருந்து மின்சாரத்தை பெரும்  போது வீட்டின் மின்சார உபயோகத்துக்கு ஏற்ப மீட்டர் ஒரு திசையில் சுழலும்.  பகல் நேரங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிகம் தயாரிக்கும் போது, அந்த மின்சாரத்தை மின் பகிர்மாண நிறுவனம் பெற்று கொள்ளும். அப்போது மீட்டர் எதிர்புறம் சுழலும். மின்சார உபயோகத்தை விட உற்பத்தி அதிகமாக இருந்தால் அதற்குறிய பணத்தை கொடுத்து விடுவார்கள்.
 

ஆரம்பத்தில் இந்த சோலார் பேனலை நிறுவும் பணம் தான் அதிகம். ஆனால் ஒருமுறை செலவு செய்து விட்டால் ஒவ்வொரு வருடமும் அது உற்பத்தி செய்யும் மின்சாரம் மிக பெரிய வீட்டின் முழு தேவையையும் சரி செய்வதோடு கொஞசம் வருமானம் கூட வர வழி செய்யும்.ஒரு சில தனியார் நிறுவனங்கள் முழுமையான கட்டுமான செலவை தாங்களே ஏற்று கொண்டு மின்சாரத்திற்கான பணத்தை வசூலிக்கின்றன. வருடத்தில் பாதி நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்தியாவின் நிலையை நினைத்து பாருங்கள்.

மோடியின் டெஸ்லா விஜயம்

பாரத பிரதமர் மோடி சமீபத்தில்  சிலிக்கன் வாலிக்கு விஜயம் செய்த போது டெஸ்லா நிறுவனத்திற்கு வருகை தந்தது நினைவிருக்களாம். டெஸ்லா நிறுவனம் உலகிலேயே அதிக தரம் மற்றும் விலை கொண்ட சொகுசு மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஒரு முறை மின்சார காரின்  பேட்டரியை சார்ஜ் செய்தால் சுமார் 370 கிமீ ஓட்டலாம்.மிக அதிக விலையுடைய டெஸ்லா மின்சார காரை கொண்டு இந்திய கட்டுமான வளர்ச்சிக்கும்,  அடிப்படை தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்ய போகிறது என்று நினைக்களாம்.ஆனால் அவரது வருகையின் நோக்கம் டெஸ்லா நிறுவனத்தின் மற்றொரு கண்டுபிடிப்பை முன் வைத்து தான் .


Powerwall

டெஸ்லா நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு மின்சாரத்தை சேமித்து வைக்க புதியவகை லித்தியம் அயான் பேட்டரியை கண்டு பிடித்துள்ளது. இந்த பேட்டரியை குறைந்த விலையில் நெவேடா மாகாணத்தில் தயாரிக்கிறார்கள். தற்போது புதிய Powerwall என்ற புதிய பேட்டரியை அறிமுக படுத்த உள்ளனர். சூரிய சக்தியை மின்சாரமாக்கி அதிக  மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து கொள்ளும்.இந்தியாவில் அமெரிக்கா போன்ற கிரிடுகள் வைப்பதற்கு அதிக செலவு ஆவதோடு, வருடங்களும் ஆகும். ஆனால் ஒவ்வொரு விடுகளிலேயோ, கிராமங்களில் பெரிய அளவிலேயோ இந்த சோலார் பேனல் கொண்ட பேட்டரியை வைப்பதாக கொள்ளுங்கள். நாள் முழுவதும் அடிக்கும் வெயிலில் இருந்து தயாரித்த  மின்சாரத்தை பாட்டரியில் சேகரித்து கொண்டு இரவிலும்,காலையிலும் உபயோகிக்க முடியும். இது இந்தியர்களின் முழு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யும்.





இந்தத் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், Grid முறையிலான மின்சாரப் பரிமாற்றத்தின் தேவையில்லாமல் போகும். சூரிய ஒளி கொண்டு தூய்மையான மின்சக்தியை வீட்டுக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டு மக்கள் தங்கள் மின்சாரத் தேவையைத் தீர்த்து கொள்ள முடியும்.மின்வெட்டு தொல்லையிலிருந்தும், கொசுக்கடி தொல்லையிலிருந்தும் நிறைய மக்கள் தப்பிக்கலாம்.


கடந்த சில வருடங்களாக சூரிய ஒளி மின்சார  தொழில் நுட்ப வளர்ச்சியால் உற்பத்தி செலவு குறைந்து வருவது குறிப்பிட தக்கது. வரும் காலத்தில் இந்த நிலை தொடர்ந்து Solar Panel  மற்றும் பாட்டரிகள் விலை குறைந்து அனைத்து மக்களுக்கும் தூய்மையான சூரிய ஒளி மின்சாரம்  கிடைக்கும் நிலை
வெகு தொலைவில் இல்லை.


Monday, September 28, 2015

BATM - வளைகுடா பகுதியில் சித்த மருத்துவ பட்டறை

இன்றைய கால கட்டத்தில் நமது உடலுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா,இதற்கு நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் காரணமாக உள்ளது. பெரும்பான்மையான நோய்களுக்கு தாவரங்கள் மற்றும் இயற்கையிலேயே முழுமையாக குணபடுத்தும் தன்மை உள்ளது. தமிழகத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல நோய்களை முழுமையாக குணபடுத்த தேவைபடும் மூலிகைகள் பற்றி பாடல்களில் எழுதி சென்றுள்ளானர். அதைவிட முக்கியமாக எவ்வாறு முறையாக வாழ்ந்தால் நோயை தவிர்க்களாம் என்றும் கூறி சென்றுள்ளனர்.

நோயை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது எப்படி என்பது பற்றியும், பருவ காலங்களுக்கு ஏற்ப பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வது பற்றியும் விரிவாக விளக்க வருகிறார் சித்த மருத்தவர் Dr. . செல்வ சண்முகம். இவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் (World Siddha Trust) தலைவர் . கடந்த ஆண்டு பெட்னா விழாவுக்கு  மருத்துவர் செல்வசண்முகம் அமெரிக்கா வந்துசென்றபின் இங்கிருந்து தமிழகம் சென்று வந்த எத்தனையோ பேர் அவரைச் சென்னையில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர். அதற்குக்காரணம் அவருடைய ஆழமான உடற்கூறும் அறிவியலறிவும்,மருத்துவ அறிவும், அதை நயமாக எடுத்துரைக்கும் பாங்குமே.சித்த மருத்துவத்தின் அடிப்படையை அழகாகப் படங்களுடனும், ஆரோக்கியமான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டுகளுடனும், எளிமையான, இயல்பான, கலப்படமில்லாத தமிழில் எடுத்துரைப்பதில் வல்லவர்.

மருத்துவர் செல்வ சண்முகம் அவர்கள் சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆரோக்கியமான வாழ்வு வாழ தேவையான வாழ்வியல் முறையை விளக்கவும், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் ஆகிய நோய்களை கட்டு படுத்தும் வழி பற்றியும் விளக்க "நலம் காக்கும் சித்த மருத்துவம்என்ற பயிற்சி பட்டறையை வளைகுடா பகுதியில் நடத்த இருக்கிறார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் நடத்தும் இந்த பட்டறைக்கு அனுமதி இலவசம்

நாள்: அக்டோபர் 10ம் தேதி, சனிக்கிழமை
நேரம்: 1:30 - 6:30
இடம்: Coconut Hill Party Hall,46129 Warm Springs Blvd, Fremont, CA 94539




.வளைகுடா பகுதி தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

Sunday, January 25, 2015

தமிழ் பேராசிரியர் George L. Hartக்கு பத்மஷிரி விருது

இந்த வருடம் அறிவிக்கபட்டுள்ள பத்ம விருதுகளில் தமிழின் மேன்மைக்காக உழைத்த ஒரு அமெரிக்க தமிழ் பேராசிரியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்த வருடம் பெர்க்லி பல்கலைகழக தமிழ் துறையின் முன்னாள் பேராசிரியர் திரு அவர்களுக்கு பத்மஷிரி விருது கொடுத்திருப்பது அந்த விருதுக்கே பெருமை சேர்ப்பது ஆகும்.திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் சமஸ்கிரதத்தில் முனைவர் பட்டம் பெற்றாலும் தமிழின் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்.

மேலை நாட்டு பல்கலைகழங்களில் தமிழ் படிப்பிற்கு என்று தனி துறை 1970க்கள் வரை இல்லமல் இருந்தது. தமிழின் பெருமையை நாம் என்ன தான் பேசினாலும் மேலை நாட்டினர் மற்றும் மேலை நாட்டு பல்கலை கழக ஆராய்ச்சிகள் மூலம் வெளி சென்றால் தான் அது உலக அளவில் அனைவரையும் சென்றடையும். எனவே மேலை நாட்டு பல்கலைகழகங்களில் தமிழ் படிப்பு ஏற்படுத்துவது என்பது மிக முக்கியமானது. ஜெர்மானிய சமஸ்கிரத மொழிகளுக்கிடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்ய பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டு பல்கலைகழகங்களில் ஆய்வு மையம் உள்ளது. அதன் விளைவாக சமஸ்கிரதம் மொழி பற்றிய ஆய்வு மேலை நாடுகளில் நடைபெற்று  உலகளவில் அதன் பெருமை  மக்களிடம் சென்றடைந்தது. அது போன்ற பெரிய முயற்சி தமிழுக்காக பெரிய அளவில் எடுக்க படவில்லை. அந்த குறையை போக்கி பெர்க்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை உருவாக்க உதவியவர் திரு.George L. Hart அவர்கள் ஆவார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் அமைப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் உலகளவில் கிடைத்ததில் அவருடைய பங்கு முக்கியமானது.பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ்  கலாச்சார அமைப்புகளோடு தொடர்ந்து இணைந்து தமிழ் வளர்ச்க்காகவும், அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்லவும் பாடுபட்டு வருகிறார்.
.George L. Hart  அவர்களுக்கு பத்மஷிரி பட்டம் பட்டம் கிடைத்திருப்பது உலக தமிழர்கள் அனைவரும் பெருமை பட வேண்டிய செய்தியாகும்.

FeTNA 2015 விழாவிற்கு அவர் அனைவரையும் வரவேற்கும் காணொளி

இது நாள் வரை மத்தியில் அரசியல் அதிகாரம் கொண்டிருந்த திராவிட கட்சிகள் இதற்கான முயற்சி எடுக்காமல் இருந்தது வெட்க பட வேண்டியதே.