Thursday, May 22, 2014

கோச்சடையான் - விமர்சனம்

கோச்சடையான்  - ஒரு வரலாற்று கதையை  Motion Capture  மற்றும்  Animation  மூலம் அழகாக கொடுக்க முயன்று இருக்கிறார்கள். பழங்காலத்தில் கலிங்கபுரம், கோட்டைய பட்டினம் என்னும் இரண்டு நாடுகளுக்கிடையே நடக்கும் பகையை அடிப்படையாக கொண்ட படம். ரஜினி இப்படத்தில் தந்தை மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கலிங்கபுரத்தில் ஆனாதையாக வந்து தளபதியாக வளர்ந்து வெற்றி வீரனாக வலம் வந்து கோட்டையபட்டிணம் போரின் போது நடக்கும் திடீர் திருப்பத்தையும் அதை தொடர்ந்து வரும் திருப்பங்களையும் நல்ல கதையாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள்.

முழு கதையையும் சொல்ல விரும்ப வில்லை.சௌந்தர்யாவிற்கு இது நல்ல முதல் முயற்சி.படத்தில் அனிமேஷன் ஹாலிவுட் படங்களை தோற்கடிக்கும் அளவுக்கு இருந்தது என்றெல்லாம் ரொம்ப hype கொடுத்தார்கள்.Hype கொடுத்த அளவு நன்றாக இல்லை. ஓரளவு ameture தனமாகவே இருந்தது. ஆனால் மிகவும் மோசம் என்று சொல்லி விட முடியாது.தமிழ் படத்தில் இந்த அளவு முயற்சி எடுத்ததிற்கு நிச்சயம் பாரட்ட வேண்டும்.அனிமேஷன் படத்தில் ரஜினியின் ஸ்டைல்களை இன்னும் அழகாக காட்டியிருக்கலாம்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே போகிறது. இரண்டாவது பாதி ஓரளவு பரவாயில்லாமல் வேகமாக  போகிறது. கோச்ச்டையான் வரும் flashback  பகுதி  கொஞ்சம் நன்றாக உள்ளது.

படம் முழுக்க எப்போது பார்த்தாலும் பாட்டு வந்து கொண்டே இருப்பது எரிச்ச்லை உண்டு பண்ணுகிறது. ரஜினிகாந்துக்கு இன்னும் படத்தில் ஆன்மீக தாகத்தை சேர்த்து கொள்ளும் ஆசை விடாது போலிருக்கிறது.பண்டைய கால அரண்மனை மற்றும் பிற அமைப்புகளை கொண்டு வர மிகவும் அதிகமாகவே உழைத்திருக்கிறார்கள்.படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தின் தொழில்நுட்பத்தை பற்றியும், அனைவரின் உழைப்பு பற்றியும் அழகாக விளக்கி அந்த பின்னனியில் படத்தை பார்க்க வைத்துள்ளார்கள்.அந்த யோசனை கொடுத்தவரை பாராட்டியே ஆக வேண்டும்.

நாகேஷ் பாத்திரத்தை அழகாக வடிவமைத்து அவருக்கு மிக பொருத்தமாக வசனம் எழுதி அழகாக பேசவைத்திருப்பது படத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. படத்தில் உண்மையான நாகேஷ் நடித்திருப்பது போலவே உள்ளது.

இந்த படத்தை பார்க்கும் போது பொன்னியின் செல்வன் கதையை இதே தொழில் நுட்பத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க தோன்றியது.

அதிக எதிர்பார்ப்பில்லாமல் நிச்சயமாக ஒரு முறை பார்க்களாம்.

Tuesday, May 20, 2014

மோடியை நம்பியிருக்கும் ஜப்பான் கம்பெனிகள்

மோடியின் வரவை பாக்கிஸ்தான், இலங்கை என்று  ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு  விதமாக கணக்கிடுகிறது. மற்ற நாடுகள் எப்படி கணக்கிட்டாலும் இந்தியா தற்போது கவனிக்க வேண்டியது ஜப்பான் கம்பெனிகள் இந்தியா மீது காட்டும் ஆர்வம்.பொதுவாக மூலதனம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு மேலை நாடுகளை தான் எதிர்பார்ப்போமே! ஏன் ஜப்பான் மீது இந்த ஆர்வம் என்று எண்ண தோன்றும்.

கடந்த சில ஆண்டுகளாக சீனா மற்றும் ஜப்பானிடையே` அரசியல்  உறவு மிகவும் நலிந்து வருகிறது. கிழக்கு சீன பகுதியில் உள்ள சில ஜப்பானிய தீவுகள் மீது சீனா உரிமை கொண்டாடுகிறது.கடந்த 2012ம் ஆண்டு சீனாவில் உள்ள  ஜப்பானிய வணிக ஸ்தாபனத்தின் மீது தாக்குதல் நடத்தபட்டது.

ஜப்பானின் மிகப்பெரிய தொழில்  நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழில் நிறுவனங்களை மலிவான உற்பத்தி செலவுக்காக சீனாவில் வைத்திருந்தன. தற்போது சீனா - ஜப்பான் உறவு சீர்குலைந்து வருவதால் தங்களது தொழிற்சாலைகள் மற்றும் முதலீடுகளின் நிலை கேள்விக்குறையதாக போக வாய்ப்புள்ளதால் மாற்று வழியை பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக scalability அதிகம் உள்ள நாடு இந்தியா தான்.

ஜப்பானிய கம்பெனிகள் எளிமையான முதலீடு, முதலீட்டிற்கு பாதுகாப்பு,  எளிமையான தொழிலாளர் சட்டங்கள் (???),முதலீட்டுக்கான ஊக்கதொகை, எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படை கட்டுமான வளர்ச்சி போன்றவற்றை மோடியிடமிருந்து எதிர்பார்க்கிறது.

மேற்கூறிய எந்த மாற்றத்தை மோடி  ஏற்படுத்த தொடங்கினாலும் உற்பத்தி தொழிற்துறையில் ஜப்பானிய தொழிற்நிறுவனக்களின் முதலீட்டை அதிகளவு எதிர்பார்க்களாம்.