Friday, January 23, 2009

புஷ்ஷை (அமெரிக்க)வரலாறு விடுதலை செய்யுமா?

புஷ்ஷின் பதவிகாலம் முடிவை நோக்கி நெருங்க தொடங்கிவிட்டது. அமெரிக்க வரலாற்றில் தோல்வி அடைந்த ஜனாதிபதிகளில் ஒருவராக புஷ் கருதபடுகின்றார். தற்போது ஒட்டு மொத்த அமெரிக்க மக்களின் அதிருப்தியையும் அவர் பெற்றுள்ளார். அவரது தோல்விகளை பட்டியலிட்டால் ஒரு பதிவு போதாது. அவரது தோல்விகளில் முக்கியமானதாக கருதபடுவது
1.தேவையற்ற ஈராக் போர்
2.உலகெங்கிலும் தீவிரவாதத்தின் வளர்ச்சி
3.நிதி நெருக்கடி
4.காத்ரீனா சூறாவளி நிவரணத்தில் திறமையின்மை


புஷ்ஷின் தோல்விகளை விளாவாரியாக விவரித்து பதிவுகள் இணையமெங்கும் வந்து விட்டது. அது பற்றி கைக்குழந்தைக்கு கூட விஷயம் தெரிந்து விட்டது. ஆனால் அவருக்கு ஆதரவான கருத்துக்களை அறிவது மிகவும் கடினமாகவே உள்ளது. தனிபட்ட முறையில் புஷ்ஷின் ஆட்சியில் எனக்கு திருப்தி இல்லை. ஆனால் அவருக்கு சாதகமாக கூறபடும் கருத்துக்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக இந்த பதிவை இடுகிறேன்.

1.தேவையற்ற ஈராக் போர்

தோல்வி -ஈராக்கில் Weapans of Mass Destruction(WMD) இருக்கிறது என்று கூறி போர் செய்ய சென்று விட்டு அங்கு கத்தி,கடப்பாறை,ரைபிள் போன்ற WMD மட்டுமே கண்டுபிடித்தார்.

உண்மை காரணமாக கூறபடுபவை :அமெரிக்கா மனதில் வைத்திருந்த WMD என்பது அணு ஆயுதங்கள் அல்ல. யூரோ நாணயம்.அமெரிக்காவின் இந்த அளவு வளர்ச்சிக்கும், அதன் மிகப்பெரிய ராணுவ பட்ஜெட்டிற்கும், அது உலகின் மிகப்பெரிய ராணுவ சக்த்தியாக இருப்பதற்கும் முக்கிய காரணம் டாலர் உலக நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது தான். இது பற்றி என்னுடைய டாலர் அரசியல் என்ற பதிவில் கூறி இருந்தேன். சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு டாலருக்கு போட்டியாக எந்த நாணயமும் இல்லாமல் இருந்தது.புஷ் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு வருடம் முன்பு தான் யூரோ புழக்கத்துக்கு வந்தது. டாலரின் மதிப்பு உலக சந்தையில் நன்கு இருப்பதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் டாலரில் விற்கபடுவது தான். ஈராக்கிய அதிபர் சதாம் அமெரிக்காவின் மீது நடத்திய மிக பெரிய தாக்குதல், பெட்ரோலை யூரோவில் விற்பனை செய்ய முன் வந்தது தான். அதற்கு பதில் நடத்திய எதிர் தாக்குதல் தான் ஈராக் போர். இராக்கை அமெரிக்கா பெட்ரோலை டாலரில் விற்க அனுமதித்திருந்தால் உலக சேமிப்பு நாணய சந்தையில் பெருமளவை யூரோ பிடித்திருக்கும். அது அமெரிக்காவிற்கு பொருளாதார அணுகுண்டு தாக்குதல் போன்றது.ஈராக்கின் இந்த முயற்ச்சி இல்லாமலேயே யூரோ உலக சேமிப்பு நாணய சந்தையில் 10 வருடத்தில் 25% பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு உலக பொருளாதாரமே அரபு நாடுகளின் கச்சா எண்ணையை நம்பி இருப்பதால், அரபு நாடுகளிடையே ஒரு வலிமையான அரசு தோன்றி, அவர்களுக்குள் வலுவுள்ள leadership பிற்காலத்தில் தோன்றுவதை அமெரிக்காவினால் ஒருகாலும் அனுமதிக்க முடியாது.போருக்கு சென்ற பின் அங்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஒரு இசுலாமிய நாட்டில் முழு அமெரிக்க ஆதரவுள்ள அரசை அமெரிக்க ஆதரவுடன் ஏற்படுத்துவது இயலாத காரியம்.இனி வரும் காலங்களில் பிற அரபு நாடுகள் நாணயத்தை டாலரிலிருந்து மாற்றும் போது , அப்போதய அமெரிக்க அதிபர் அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதே புஷ்ஷின் செயலுக்கு ஒப்பீடாக அமையும்.

2.உலகெங்கிலும் தீவிரவாதத்தின் வளர்ச்சி


தோல்வி -உலகெங்கிளும் தீவிரவாதத்தின் வளர்ச்சி அதிகரித்த்ள்ளது. அமெரிக்காவில் நடை பெற்ற தீவிரவாத செயலை தடுக்க தவறிவிட்டார்

அவர் பக்க நியாமாக கூறபடுபவை:சோவியத் யூனியன் உடையும் வரை விடுதலை போராட்ட வீரர்களாக, அமெரிக்காவினால் வளர்த்து விடபட்டவர்கள் தான் இன்று தீவிரவாதிகளாக கருதபடுபவர்கள். சோவியத் யூனியன் அழிந்தவுடனே அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கவேண்டும் அப்போது ஆட்சியில் இருந்தவர்கள். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. கிளிண்டனின் ஆட்சியின் போது அவர்கள் குறிப்பிட தக்க வளர்ச்சி அடைந்தாலும், அவர்களை முழுமையாக ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அந்த கால கட்டத்தில் தங்கு தடையின்றி networkஐ உலகெங்கும் விரிவு படுத்தினர்.மேலும் செப்டம்பர் 11 தாக்குதல் புஷ் ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே நடைபெற்றது. எனவே அந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் அவருக்கு முன் இருந்த ஆட்சியாளர்களே. மேலும் அந்த தாக்குதலுக்கு பின் அமெரிக்காவில் அடுத்த தாக்குதல் நடைபெறாமல் தடுத்ததே புஷ் இன் சாதனையாக கருதபடுகிறது.அல் கொய்தா மற்றும் தலிபான் கூட்டனியின் வளர்ச்சியை பெருமளவு தௌத்து பெரிய தாக்குதலை ஏற்படுத்த முடியாமல் தடுத்ததும் அவரது வெற்றியாகவே கருத படுகிறது.

3.நிதி நெருக்கடி

தோல்வி-புஷ் ஆட்சியின் முக்கிய தோல்வியாக கருதபடுவது அமெரிக்காவின் பொருளாதாரத்தை மொத்தமாக சீரழித்து விட்டு உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பை குறைத்தது

அவர் பக்க நியாமாக கூறபடுபவை:இப்போது ஏற்பட்ட நிதி நெறுக்கடிக்கு முக்கிய காரணமாக கருத படுவது subprime என்றழைக்கபடும் கடனை திருப்பி தர இயலாதவர்களுக்கு தந்த கடன்கள்,பெரிய அளவில தங்கு தடையற்ற கடன் கொடுத்து ஒரு housing bubbleஐ வங்கிகள் உருவாக்க விட்டது மற்றும் Credit Default Swapஎன்னும் கடன் வகை .
அவர் பக்க நியாமாக கூறபடுபவை: கிளிண்டன் ஆட்சி காலத்தில் , ஏழை மக்கள் அனைவரும் வீடு வாங்க வேண்டும் என்பதற்காக Community ReInvestment Act என்னும் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தினார். இதன் விளைவாக ஏழை மக்களுக்கும் வீட்டு கடன் எளிதாக கிடைத்தது. அவ்வாறு கடன் பெற்றவர்களில் பெரும்பாலோனோர்க்கு கடனை திருப்பி தரும் வளிமை குறைவாகவே இருந்தது. அந்த வகை கடன்கள் தான் இன்று ட்ரில்லியன் டாலரை தாண்டி விட்டது. என்வே இந்த Subprime கடன்களுக்கு மூல கார்த்தாவாக கிளிண்டனே உள்ளார்.
1930களில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகபெரிய நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் கொண்டுவர பட்ட சட்டம் தான் Glass-Steagall சட்டம்.
அது மக்களிடம் டெப்பாசீட் வாங்கி வியாபாரம் செய்யும் வங்கிகள் அந்த பணத்தை பொறுப்பின்றி Investment Bankingல் முத்லீடு செய்வதை தடுத்தது.
கிளிண்டன் ஆட்சி காலத்தில் அதில் திருத்தம் செய்ய பட்டு சாதாரன வங்கிகளும் Investment bankingல் செயல்படலாம் என்று அறிவிக்க பட்டது. அதன் விளைவாக பெருமளவிலான் மக்கள் பணம் speculation அடிப்படையாக கொண்ட மற்றும் risk அதிகம் உள்ள முதலீடுகளில் முதலீடு செய்ய பட்டு பொருளாதாரம் சூதாட்டம் போல் வளர ஆரம்பித்தது.அதுவும் நெறுக்கடிக்கு ஒரு காரணமாகியது.
Credit Default swap என்ப்படும் சந்தை product கூட அறிமுக படுத்த பட்டது கிளிண்டனின் ஆட்சிகாலத்தில் தான். (ஆனால் அது பூதாகரமாக வளர்ந்தது புஷ்ஷின் ஆட்சிகாலத்தில்).

தவறுகளுக்கு மூல காரணம் கிளிண்டன் என்றாலும் புஷ் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்க தோன்றும். புஷ்ஷை பொருத்தவரை அவர் தீவிர முதலாளித்துவ கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்.அவருடைய அரசியல் ஆசானாக கருதபடும் ரொனால்ட் ரீகனுடைய கட்டுபாடற்ற பொருளாதாரம் மற்றும் உலகளாவிய கட்டுபடுத்தல் போன்ற கன்சர்வேட்டிவ் கொள்கையில் அதீத நம்பிக்கையுடையவர் புஷ்.அவருக்கு ஓட்டளித்தவர்களும் அப்படி பட்ட கொள்கையை பின் பற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் ஓட்டளித்தனர். ரீகன் காலத்தில் வெற்றி சூத்திரமானது புஷ் கலத்தில் தோல்விக்கு இட்டு சென்றது. எந்த ஒரு ஏற்ற இறக்கத்தையும் சந்தைதான் தீர்மானிக்க வேண்டும் என்ற கொள்கையால் அவர் அவற்றை சந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டார்.(சில நிறுவனங்கள் அழிவை நோக்கி சென்ற போது அதையும் மார்கெட் தான் தீர்மானிக்க வேண்டும் என்று விடாமல், அவை அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை காரணம் காட்டி அவற்றை மீட்டு லிபெரல் கன்செர்வேட்டிவ்களிடமும் கெட்ட பெயர் சம்பாதித்தது வேறு விஷயம்.)
இதைதான் புஷ் பின்வருமாறு கூருகிறார்.
“I inherited a recession, I’m ending on a recession,”

4.காத்ரீனா சூறாவளி நிவரணத்தில் திறமையின்மை

இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவாக எவரும் எதுவும் கூறவில்லை.இந்த விஷயம் அவரது நிர்வாக திறமையின்மையையே எடுத்து காட்டுகிறது.எதிபாராத மாபெரும் இயற்கை சீரழிவு வரும் போது, அதை அமெரிக்க எதிர்கொள்ள தயார்படுத்த படவில்லை. இனி அது போன்ற எதிர்பாராத இயற்கை பேரிழப்பு நடைபெரும் போது அதை எதிர் கொள்ள அமெரிக்கா தன்னை தயார் படுத்தி உள்ளதா? என்பதை எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

புஷ் பின்பற்றிய கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் , குறைவான வரி நிர்ணயம் (அதிகம் பணம் சம்பாதிக்கும் மேல் நிலையில் உள்ள 1% அமெரிக்கர்களுக்கு $1.35 ட்ரில்லியன் வரி விலக்கு அளித்தார்.)மற்றும் உலகளாவிய ராணுவ வலிமையை நிலைநாட்டுதல் காரணமாக $5.6 ட்ரில்லியன் அதிக இருப்பாக இருந்த அமெரிக்க நிதி நிலைமையை $6 ட்ரில்லியன் இழப்பாக இட்டு சென்றது.ஓய்வு பெற்றவர்களுக்கான health care benefit செலவு $13 ட்ரில்லியனிலிருந்து $43 ட்ரில்லியனாக உயர்ந்ததற்கு புஷ்ஷின் medicare drug benefit திட்டமும் ஒரு காரணம். இந்த செலவுகளை செய்ய இது வரை ஒவ்வொரு வருடமும் அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
கட்டுபாடற்ற சந்தையில் முழு நம்பிக்கை வைத்திருந்த புஷ் தனது ஆட்சியின் இறுதியில் deregulation என்ற நிலையிலிருந்து மாறி reregulation என்று நிலைக்கு இட்டு சென்றது. அனைத்து துறையிலும் தனியாருக்கு முழு பங்கு அளிக்க வேண்டும் என்ற அவரது கொள்கையை மாற்றி மிக பெரிய நிதி நிறுவனம் மற்றும் கார் நிறுவனங்களில் அரசின் பங்கை அதிக படுத்தும் நிலைக்கு தள்ளபட்டார்.

இந்தியாவை பொருத்த வரை புஷ் ஆட்சி இந்திய-அமெரிக்க உறவை வேறெப்போது இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்தது என்பது உண்மை.அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமலேயே அணு தொழில்நுட்ப தடையிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளித்தததற்கு புஷ்ஷின் தனிபட்ட ஆதரவே காரணம் எனலாம்.வேறு எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இது போன்ற ஒப்ப்ந்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே. புஷ் ஆட்சி காலத்தில் காஷ்மீர் பிரச்சனையில் சிறிதளவும் தலையீடு செய்ய வில்லை என்பதும் குறிப்பிட தக்கது.எந்த ஒரு பிரச்சனையிலும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவு, இந்திய எதிர்ப்பு என்ற நிலை மாறி இந்திய ஆதரவு என்ற நிலையும் இந்த ஆட்சியில் தான் ஏற்படுத்த பட்டது என்பது குறிப்பிட தக்கது.outsourcingக்கு எந்த தடையும் விதிக்காமல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிருவனங்களின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தார்.


இனிவரும் காலங்களில் அமெரிக்க எதிர் கொள்ள போகும் பிரச்சனைகளும், அதை அப்போது இருக்கும் ஜனாதிபதிகள் எவ்வாறு கையாள போகிறார்கள் என்பதை பொருத்து தான் புஷ்ஷை வரலாறு விடுதலை செய்யுமா என்பது முடிவு செய்ய படும்.


--

Saturday, January 17, 2009

தமிழ் Typewritterயை உங்கள் blogல் எளிதாக இணைப்பது எப்படி?

தமிழ் எழுத்துகளை ஆங்கில வார்த்தை கொண்டு எழுத உபயோகபடுத்தும் unicode writterஐ என்னுடைய தளத்தில் இணைப்பது பற்றி பல நாட்களாக முயன்று எளிதான வழி ஒன்றும் என்க்கு கிடைக்கவிலலை. அந்த நேரத்தில் கூகிளின் AJAX API பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கூகிள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றும் Transliteration எழுதி செய்வதற்கான APIஐ பொது உபயோகத்திற்காக வெளியிட்டுள்ளது.அதை உபயோகபடுத்தி ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழி மாற்றும் Transliterator எழுதுவது மிக எளிதானது.

நான் கூகிளின் இந்த APIஐ பயன் படுத்தி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றும் எழுதி ஒன்றை தயாரித்துள்ளேன். இதை எளிதில் மற்றவர்களும் பயன்படுத்த widgetஆக உருவாக்கி http://www.widgetbox.comல் போட்டுள்ளேன். இதை அனைவரும் எளிதாக ஒரு கிளிக்கில் உங்களது blogல் இணைத்து கொள்ளலாம்.

பதிவர்கள் இந்த எழுதியை உங்கள் blogல் இணைக்கும் முறை

1.இந்த பதிவின் வலது புறம் உள்ள amma=அம்மா என்ற எழுதி widgetன் கீழ் உள்ள Get Widget linkஐ சொடுக்கவும் அல்லது
widgetஐ பெற இங்கு(http://www.widgetbox.com/widget/thanglish) சுட்டவும்.

2.அது திறக்கும் பக்கத்தில்(http://www.widgetbox.com/widget/thanglish) வலது புறம் உள்ள get widget ஐ சொடுக்கவும்

3.அது இன்னொரு சன்னலை திறக்கும். அந்த சன்னலின் அடியில் blogger,wordpress,typepad,igoogle போன்ற iconகள் இருக்கும்.

4.நீங்கள் உபயோகபடுத்தும் blogging வகையை சொடுக்கினால் அது login க்கு இட்டு செல்லும். அதன் பின் உங்கள் பிளாக்கில் எளிதாக இணைக்கலாம் .
அதில் கூறபட்ட blogging toolஐ நீங்கள் உபயோக படுத்தவில்லையென்றால், அது தரும் javascript code ஐ உங்கள் இணைய தளத்தில் தேவையான இடத்தில் paste செய்தால் உஙகள் இணைய தளம் எதுவானாலும், அதில் இந்த தமிழ் எழுதியை உபயோகபடுத்த முடியும்.

இதில் எதாவது பிரச்சணை இருந்தால் இதன் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இது பற்றிய கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளவும்.


--

Wednesday, January 14, 2009

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 2-கடன் தர சான்றிதழ்(Rating Agency) கொடுக்கும் அமைப்புகளின் செயல்பாடு

சோவியத் யூனியன் வீழ்ந்த பின் முதலாளித்துவம் உலகம் எங்கும் மிக வேகமாக பரவியது. சோவியத் யூனியன் இடத்தை இனி பிடிக்க போவது யார் என்று நினைத்த போது, பொருளாதார வல்லுனர்கள் கூறியது பான்டுகளை தர வரிசை படுத்தும் அமைப்புகள் என்றனர். அப்போது நகைச்சுவையாக கருதபட்டது தற்போது உண்மையாக மாற தொடங்கியது.

முதலில் தரவரிசை படுத்தும் நிறுவனங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு கடனை ஒரு முதலீட்டாளர் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். முதலில் அந்த கடனை வாங்கியவர் யார் என்று பார்க்க வேண்டும். பிறகு வாங்கியவரின் வருமானம் எவ்வளவு என்றும் அந்த வருமானத்தின் மூலம் என்ன? என்றும் பார்க்க வேண்டும்.ஒரே ஒரு கடன் என்றால் எளிதில் விசாரித்து விடலாம். பத்து பேர் வீட்டுகடன் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம். வங்கிகள் வீட்டுகடனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விட்டு, அந்த கடன்கள் அனைத்தையும் ஒன்றாக்கி அந்த ஒன்று படுத்தபட்ட கடனை முதலீட்டு வங்கிகளுக்கு(Investment bank) விற்று விடும். அனைத்து கடனையும் இம்முதலீட்டு நிறுவனங்கள் சரி பார்ப்பது மிகவும் கடினமான செயல். பல கடன்களை ஒன்று சேர்த்து ஒரே கடனாக கொடுக்கும் போது எவ்வாறு அதை சரி பார்ப்பது? அங்கு தான் தரவரிசை படுத்தும் நிறுவனங்களின் சேவை வருகிறது. இது போன்ற கடனின் தன்மையை அராய்ந்து , அதன் சாதக பாதகங்களை சரிபார்த்து அதற்கு தர சான்றிதழ்களை அளிப்பது இந்த நிறுவனங்களின் வேலை.உதாரணமாக இது போன்ற நிறுவனங்கள் ஒரு கடனுக்கு "AAA" என்று சான்று அளித்தால் அந்த கடன்கள் மிகவும் நம்பகமானவை.அந்த கடனை வாங்கியவர்கள் நிச்சயம் திருப்பி கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.AAA என்று தரவரிசை படுத்த பட்ட எந்த ஒரு கடனையும் முதலீட்டளர்கள் தைரியமாக முதலீடு செய்யலாம். ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதார முதலீட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிறுவன தரச்சான்றிதழ்கள் தான் அஸ்திவாரமாக உள்ளது.பென்சன் நிதி முதலீட்டு நிறுவனங்கள் போன்ற குறைவான் riskல் அதிக அளவு முதலீடு செய்யும் நிறுவங்கள், கடனின் riskஐ இது போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவங்கள் கொடுக்கும் சான்றிதழை கொண்டுதான் நிர்ணயிக்கின்றனர்.கடன் மட்டுமின்றி பத்திரம், கம்பெனி போன்ற பலவற்றிற்கும் இந்த நிறுவனங்கள் தர சான்றிதழ் அளிக்கும்.Moody's,Standard&Poor மற்றும் Fitch போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணம்.

அமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியாக உள்ள இந்த நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் நடந்ததோ வேறு.இந்த நிறுவங்கள் அதிக லாபத்துக்கு ஆசை பட ஆரம்பித்தன.இந்நிறுவங்களின் வாடிக்கையாளர்கள், கடனை தர வரிசை படுத்தி தர கேட்பவர்கள். எனவே வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தினால் தான் மீண்டும் தங்களிடம் வருவார்கள். மேலும் அதிக அளவு கட்டணமும் வசூலிக்க முடியும். அதன் விளைவு, தரசான்றிதழ் கேட்கபடும் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ஆராயாமல், AA மற்றும் AAA என சான்றிதழ்களை அடித்து தள்ளி விட்டனர்.இதன் மூலம் தர சான்றிதழ் கொடுக்கும் நிறுவனங்களின் லாபம் பல நூறு மடங்கு பெருகியது.
தனிபட்டவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும், பணம் திரும்பி கிடைக்க பல ஆண்டு பொருத்திருக்காமல், முதலீட்டு நிறுவங்களுக்கு இந்த கடனை தர சான்றிதழ் காட்டி விற்று(Credit Dedault Swap), மேலும் மேலும் கடன் கொடுக்க தொடங்கியது. இந்த வகை அடமான கடனின் மதிப்பு, சில ட்ரில்லியன் டாலர்களை கடந்தது .அவற்றில் இருந்த பெரும்பாலான subprime கடன்களை வாங்கியவர்களின் நம்பகதன்மை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுக்கு நிலையான வருமானமும் இல்லை.இருந்தாலும் அந்த கடனுக்கு மிகவும் அதிக தரவரிசை கொடுத்தனர். அமெரிக்க real estate வீழ தொடங்கிய போது இதுபோன்ற கடன்களை வாங்கியவர்கள் திருப்பி கொடுக்க முடியாத போது, அதில் முதலீடு செய்த நிறுவங்கள் படு பாதாளத்த்ற்கு விழ ஆரம்பித்தது.அது ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது.இது போன்ற நிறுவனங்களில், உண்மையை கூற முன் வந்த ஊழியர்களும் நீக்க பட்டனர்.நிறுவனங்கள் அதிக பத்திரங்களை கண்காணித்தாலும், குறைந்த அளவே ஊழியர்களை வைத்து லாப நோக்கில் செயல் பட்டனர்.
இனியாவது இது போன்ற நிறுவனங்களை அரசாங்கம் கண்கானித்து ஒழுங்கு படுத்துமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின் கட்டுப்பாடு


--

Monday, January 12, 2009

நிதி நெருக்கடி பற்றி படிக்க! சிரிக்க!




நிதி நெருக்கடியை பற்றிய சில நகைச்சுவை வாதங்கள் மின்னங்ஞ்சல் மூலம் வந்தது. உண்மையிலேயே நகைச்சுவையாக உள்ளது. இதை முன்பே படிக்காதவர்கள் படித்து ரசிக்கலாம்(நிதி நெருக்கடியின் தாக்கம் உஙகளை பாதிக்காதவரை )


1. The US has made a new weapon that destroys people but keeps the building standing,. Its called the stock market - Jay Leno

2. Do you have any idea how cheap stocks are ?? Wall Street is now being called Wal Mart Street Jay Leno

3. The difference between a pigeon and a London investment banker . The pigeon can still make a deposit on a BMW

4. What's the difference between a guy who lost everything in Las Vegas and an investment banker ? A tie

5. The problem with investment bank balance sheet is that on the left side nothing's right and on the right side nothing's left.

6. I want to warn people from Nigeria who might be watching our show, if you get any e mails from Washington asking for money, it's a scam. Don't fall for it - Jay Leno

7. Bush was asked about the credit crunch. He said it was his favourite candy bar - Jay Leno

8. The rescue bill was about 450 pages. President Bush's copy is even thicker. They had to include pictures Jay Leno

9. President Bush's response was to meet some small business owners in San Antonio last week. The small business owners are General Motors, General Electric and Century 21. - Jay Leno

10. What worries me most about the credit crunch, is that if one of my cheques is returned stamped 'insufficient funds'. I won't know whether that refers to mine or the bank's.


--

Friday, January 09, 2009

IT நிறுவனங்கள் தொடங்க தடை விதிக்கும் தமிழ்நாடு

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டு கொண்டு IT நிறுவனங்களை தங்களது மாநிலத்தில் தொடங்க வைக்க முயற்ச்சி செய்வது அனைவரும் அறிந்ததே. தொழில் துறை வளர்ச்சியை ஒதுக்கி வந்த மேற்கு வங்காளம் போன்ற பிற்பட்ட மாநிலங்கள் கூட தற்போது IT நிறுவங்களை தங்கள் மாநிலத்தில் இழுக்க முயற்ச்சி செய்து வருகிறது.ஆனால் ஒரே ஒரு மாநிலம் மட்டும் தன் மாநிலத்தில் கம்பெனிகளை தொடங்க வருபவர்களை, இங்கு தொடங்க கூடாது என்று அறிவுறித்தி திரும்பி அனுப்ப முயற்ச்சி செய்கிறது. அந்த மாநிலம் தமிழகம்
என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

இனி IT துறையில் தமிழகத்தில் முதலீடு தேவை இல்லை என்றும், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பினால் வேறு துறைகளில் மட்டும் தான் தனியார் கம்பெனிகள் தொழில் தொடங்க
அனுமதிக்க படும் என்று வெளிப்படையாக வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காட்டு வீராச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் திறமை சிறிதும்
இல்லாத அமைச்சரின் கையில் மின் துறை இருப்பதால், தமிழகத்தில் மின்சார சிக்கல் பல மடங்கு பெருகி, அது மாநில அரசிற்கே மிகப்பெரிய கெட்டப்பெயற் பெற்று கொடுப்பது உலகம்
அறிந்தது. இது வரை மின் துறையை மட்டும் கெடுந்து வந்த ஆற்காட்டார் தற்போது தமிழக IT துறையையும் கெடுக்க கிளம்பி விட்டதாக தெரிகிறது.IT துறை முதல்வரின் வசம்
இருப்பது குறிப்பிட தக்கது. எனவே இது முதல்வரின் கருத்தா? அல்லது முதல்வரின் பெயரை கெடுக்க செய்யப்படும் சதியா என்பது தெரிய வில்லை. சில நாள்களுக்கு முன்னர் கட்சியின்
பொருளாளர் பதவி ஆற்காட்டாரிடமிருந்து பறிக்க பட்டது நினைவில் இருக்கலாம்.

தற்போது 50% நிறுவனங்கள் தமிழகத்தில் மூட பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளார். அது உண்மை என்றால் பத்திரிக்கைகளில் எப்போதே செய்திகள் வந்திருக்கும் அனைத்து தொழிற் துறைகளும் தமிழகத்தில் வளர வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. உற்பத்தி துறை வளர்வதன் மூலம் unskilled மற்றும் semiskilled தொழிளாலர்களுக்கு வேலை கிடைக்கும்.படித்த மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறையாக IT துறை உள்ளது .கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் பல நூறு பொறியியல் கல்லூரிகள் தொடங்க பட்டுள்ளன. அறிவியல் கல்லூரிகளிலும் பல கணிணி தொடர்பான பட்ட படிப்புகள் தொடங்க பட்டுள்ளன. இதில் பல லட்ச கணக்கான மாணவர்கள் பல லட்சம் கட்டணம் செலுத்தி படிக்க சேர்வதன் நோக்கமே IT துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தான். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை நடத்துவதும், இந்நாள் மற்றும் முந்நாள் அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பினாமிகளுமே ஆவர்.

தமிழகத்தில் IT நிறுவனங்கள் தொடங்கினால், இங்கு உள்ள கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.பிற மாநிலத்தில் கம்பெனி தொடங்கினாலும்,தமிழகத்தில்
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், IT நிறுவங்கள்,fesher recruitmentல் அந்தந்த மாநில கல்லூரிகளில் படிப்பவருக்கே முக்கியத்துவம் தருகிறது.மேலும்
நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் வாங்கும் திறனினால் மற்ற தொழில்களும் வளர்கிறது.
தமிழகத்தில் சென்னையை தவிர்த்த மற்ற நகரங்களிளும் IT கம்பெனிகளை தொடங்க கடுமையான முயற்சி செய்து வரும் நிலையில், இது போன்ற அமைச்சர்களின் செயல்பாடு பெரும்
பாதகங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.IT துறையின் எதிகாலம் பிரகாசமாக இல்லை என்றும், அதனால் அத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க கூடாது என்றும் ஆற்காட்டார் கூறியுள்ளார். முழு விவரங்களுக்கு இங்கு சுட்டவும், தான் தொடங்கும் தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று முடிவு செய்பவர்கள் அந்த தொழிலை தொடங்குபவ்ர்களே அன்றி அரசாங்கம் இல்லை.அப்படி பட்ட நிலையில் ஆற்காட்டார் இவ்வாறு கூறியிருப்பதன் காரணம் விளங்க வில்லை.IT கம்பெனிகளை இழுக்க பல மாநிலங்கள் முயற்ச்சி செய்வதால், அந் நிறுவனங்களை தொடங்க கம்பெனிகள் லஞ்சம் எதுவும் கொடுக்க மறுப்பதுதான் காரணமா என்று தெரியவில்லை.

தமிழகத்தை சேர்ந்த சில அமைச்சர்கள் நன்றாக செயல்பட்டு தமிழக முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், இது போன்ற மோசமான அமைச்சர்களை தொடர்வதன் மூலம் தி.மு.க மீண்டும் 20 வருட காலம் வெற்றியின்றி வனவாசம் செல்ல வேண்ய நிலை வந்தாலும் வரலாம்


--

Thursday, January 08, 2009

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின் கட்டுப்பாடு

கடந்த சில மாதங்களாக உலகில் நடந்து வரும் பொருளாதார மாற்றங்கள், இதுவரை நடைமுறை உண்மைகளாக நம்பப்பட்டு வந்த அடிப்படை விதிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது நிறைய பாடங்களை நிகழ்காலத்திற்கு மற்றும் வருங்காலத்திற்கு அளித்துள்ளது. முக்கியமாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு, கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் தான் வளர்ச்சிக்கு ஒரே வழி என்று நம்பப்பட்டு வந்தது. அரசாங்களின் அதிகார எல்லை குறைக்கபட்டு கார்பரேட்டுகளின் எல்லை விரிவாக்க தொடங்கியது.வளர்ந்த நாடுகளில் இந்த மாற்றம் பல காலமாக இருந்தாலும், இந்த மாற்றத்தின் வேகம் சில காலமாக அதிகரிக்க தொடங்கியது. IMF மற்றும் உலக வங்கிகளின் மூலமாக இந்த மாற்றங்கள் வளரும் நாடுகளின் மீதும் திணிக்க பட்டுள்ளது.

சர்வதேச நிதி நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சில விளைவுகளையும்,அது கொடுக்கும் சில பாடங்களையும் இனி வரும் சில பதிவுகளில் காண்போம்.

சந்தையில் அரசின் கட்டுப்பாடு

பொருளாதார சந்தையில் அரசின் கட்டுப்பாடு கூடாது என்றும் பொது சந்தையில் அரசின் தலையீடு இருக்க கூடாது (Free Market)என்றும், எந்த செயல் நடந்தாலும் அது நல்லதா அல்லது கெட்டதா என்பதை சந்தை தான் தீர்மானிக்க வேன்டும் என்றும் வளர்ந்த நாடுகள் கூறி வந்தன. கடந்த சில வருடங்களாக சந்தையில் பலவிதமான புதிய வகை விற்பனை பொருட்கள்(Credit Default Swap போன்றவை) அறிமுகபடுத்த பட்டு மிக அதிக ஆளவில் சந்தையில் கலக்க தொடங்கியது.அது போன்ற பொருட்கள் சந்தையில் எந்த அளவு பெருகி வருகிறது? அது சந்தையில் ஏற்படுத்த போகும் உண்மையான பாதிப்பு போன்றவற்றை அரசு கண்காணிக்க தவறியது.

கம்பெனிகளும் உண்மை நிலமையை மூடி மறைக்க தொடங்கியது. அதிக அளவு லாபம் ஏற்படுவதாக கணக்கு காட்டி,நிதி நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் பல பில்லியன் டாலர்களை போனசாக பெற்றெனர்.அரசாங்கம் இது போன்ற நிகழ்வுகளை ஒழுங்காக
கண்காணித்திருந்தால் இது போன்ற தவறுகள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க பட்டு, பிரச்சனை இந்த அளவு வராமல் தடுக்க பட்டிருக்களாம்.

நிதி நிறுவனங்களின் வளர்ச்சி அளவுக்கு மீறி இருந்த போது அமெரிக்க அரசு அதை எவ்வாறு கையான்டது என்று பார்த்தால் நகைச்சுவையாக இருக்கும்.அமெரிக்காவின் பொது சந்தையில் உள்ள Riskஐ கண்காணிக்கும் அமைப்பு Securities & Exchange Commission (SEC).பொருளாதாரமும் அதில் உள்ள complexity அதிகரிக்கும் போது அந்த நிறுவனத்தின் பணியாற்றும் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும்.ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை சில நூற்றிலிருந்து வெறும் ஒன்றாக குறைக்க பட்டுள்ளது.நீங்களே நினைத்து பாருங்கள், ஒரே ஒருவர் உலக பொருளாதாரத்தையே எவ்வாறு கண்காணிக்க முடியும் என்று?

செனட் விசாரணையில் நடந்த உரையாடல் இங்கே

In recent testimony under oath by Mr Lynn Turner, Chief Accountant of the Securities & Exchange Commission (SEC) testified that the SEC Office of Risk Management which had oversight responsibility for the Credit Default Swap market, an exotic market worth nominally some $62 trillions, was cut in Administration ‘budget cuts’ from a staff of one hundred down to one person. Yes, that was not a typo. That’s one as in ‘Uno.’

Vermont Democratic Congressman Peter Welsh queried Turner, ‘... was there a systematic depopulating of the regulatory force so that it was impossible actually for regulation to occur if you have one person in that office? ...and then I understand that 146 people were cut from the enforcement division of the SEC, is that what you also testified to?’ Mr. Turner, in Congressional testimony replied, ‘Yes…I think there has been a systematic gutting, or whatever you want to call it, of the agency and it's capability through cutting back of staff.’

இதே அமெரிக்க ஊடகங்கள்தான் இந்தியாவில், அரசு சந்தையை கண்காணிப்பதும் கட்டுபடுத்துவதும் தவறு என்று கூறி வந்துள்ளது.தற்போது மேல்நாட்டு கம்பெனிகள் இந்திய பங்கு சந்தையில் அதிக அளவு செயல்பட ஆரம்பித்துள்ளனர். எனவே தவறுகள் நிறைய நடக்க சாத்திய கூறுகள் உள்ளது.எனவே அரசும் கண்காணிப்பை அதிக படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.

1930களில் நடைபெற்ற மாபெரும் பொருளாதார நெருக்கடியில் கற்ற பாடங்களின் அடிப்படையில், மக்களின் நன்மைக்காகவும், சந்தையின் நன்மைக்காகவும் பல முக்கிய கட்டுபாட்டு சட்டங்கள்(Glass-Steagall Act of 1933) இயற்றப்பட்டன.50 ஆண்டுகளாக அந்த சட்டங்களும் நன்றாக செயல் படுத்த பட்டு பெரிய விபரீதங்கள் நடைபெறாமல் தடுக்க பட்டு வந்தது. ஆனால் ரீகன் ஆட்சி காலத்திலிருந்து கட்டுபாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. கிளின்டன் காலத்தில் அதில் பெரிய அளவு கட்டுபாடுகள் தளர்த்த பட்டது.கட்டுபாடுகளை தளர்த்த நிதி நிறுவன லாபிக்கள் சுமார் $200 மில்லியன் செலவு செய்துள்ளனர்.அதன் விளைவு பல ட்ரில்லியன் டாலர் இழப்பு உலகத்துக்கும், பல பில்லியன் டாலர்கள் லாபமாக நிதி நிறுவன நிர்வாகிக்களுக்கும் கிடைத்தது.

அடுத்த பதிவில் கடன் தரச்சான்றிதழ்(Credit Rating Agency) கொடுக்கும் நிறுவனங்களின் பங்கு பற்றி காண்போம்


--

Tuesday, January 06, 2009

Humpty Dumpty பொருளாதாரம்-அமெரிக்கா?

இந்த பாடல் குழந்தைக்கா? அமெரிக்க பொருளாதாரத்திற்கா?

Humpty Dumpty sat on a Wall
Humpty Dumpty had a great Fall
All the Kings Horses and All the Kings Men
Could not put Humty Together Again?!





--

Friday, January 02, 2009

விலகுகிறது சனிபகவானின் கண் திரை, 4th Sep 2009ல் உலகம் அழியுமா? - கண்டுபிடித்தது NASA

சனி பகவானின் கண் கட்டபட்டுள்ளதன் காரணம் அனைவரும் அறிவர். உலகில் உள்ள அனைத்து பாவங்களையும் தன்னுள் சுமந்து கொண்டுள்ளதால் அவரின் கண்கள் கட்ட பட்டுள்ளது.

அவர் கண்ணை திறந்தால் பாவம் அனைத்தும் எதிரில் உள்ளவர்களை (பூமி போன்ற கிரகங்கள்) தாக்கி சிரமத்தில் ஆழ்த்தும்.இது இந்தியாவை சேர்ந்த அறிவாற்றல் நிறைந்த சோதிடர்களால் ஆதாரபூர்வமாக நிருபிக்க பட்டுள்ளது.

தற்போது சில காலமாக உலகில் சுனாமி,பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களும், பொருளாதார நெருக்கடி, மத சண்டைகள் போன்ற சமூக பிரச்சனைகளும் மிக அதிகமாகி
உள்ளது.இதன் மூல காரணத்தை அறிய முடியாமல் பல்வேறு துறை நிபுணர்களும்,ஞானிகளும்,சோதிடர்களும் திணறி வந்த நேரத்தில்,ஒரு புதிய உண்மையை கண்டுபிடித்து பிரச்சனைக்கான மூல காரணத்தை NASA சோதிடர்களுக்கு ஒரு முக்கிய clueவாக கொடுத்துள்ளது.

NASA கண்டுபிடித்த அதிர்ச்சிகரமான செய்தி இதுதான். பாவத்தை அடக்கி வைத்திருந்த சனி பகவானின் கண்ணை மறைத்து கட்ட பட்டிருந்த திரை அவிழ தொடங்கியுள்ளது. அவர் பாவ
கணைகளை பூமி மீது வீச தொடங்கி விட்டார்.அவரது கண்திறை மெல்ல மெல்ல விலகுவதை நாமும் கண்கூடாக பூமியிலிருந்து செப்டம்பர் 4 2009 வரை பார்க்கலாம்.செப்டம்பர் 4 அன்று அவரது கண் திறை முழுமையாக விலகி விடும்.

இந்த செய்தியை நம்பாதவர்கள் NASAவின் இந்த செய்தியை படித்து பாருங்கள்.

இதை படித்த பின் நீங்கள் உடனடியாக கூகிளில் தேட போவது சனி பகவானின் பாவ கணைகளின் தாக்குதலுக்கு எதாவது பரிகாரம் கிடையாதா என்பதாகத்தானே இருக்கும். கவலை
படாதீர்கள் அதையும் நானே உங்களுக்காக கண்டுபிடித்து இலவசமாக இந்த பதிவிலேயே இணைத்துள்ளேன். வைத்தீசுவரன் கோவில் பகுதியில் இருக்கும் பழங்கால ஓலை சுவடியில் இதற்கு பரிகாரம் உள்ளது.பரிகாரமும் மிகவும் எளிமையானது. இந்த பதிவை படித்து முடித்த இரண்டு நாட்களுக்குள் 10 பேருக்கு இந்த பதிவை forward செய்தால் பாவம் உடனே விலகும்.

சற்றுமுன் வந்த தகவல்:பொதுவாக உலகில் எந்த தீய நிகழ்வுகள் நடந்தாலும் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பிறகே நாஸ்ட்டர்டாம் பல ஆண்டுகளுக்கு முன்பே இதை கணித்துள்ளார் என்று செய்தி வரும். ஆனால் இம்முறை நிகழ்வு நடப்பதற்கு முன்பே நாஸ்டர்டாம் சனி பாகவானின் இந்த நிகழ்வை பற்றி முன்னறிவிப்பு செய்த செய்தியும் கசிய தொடங்கி உள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நன்கு விவரம் தெரிந்த வாசகர்கள் இந்த நிகழ்வுக்கும் 2012 prophecyக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ந்து பின்னூட்டமிட்டால் வாசகர்களுக்கும் நன்மையாக இருக்கும்.

--

2008ல் படிக்க மறந்த செய்தி

2008ல் எத்தனையோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. பெரும்பாலான செய்தியை நாம் படித்திருப்போம். ஆனால் ஒரு சில சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் சிறு செய்தியாக வந்து நம் கண்ணுக்கு படாமல் இருக்க வாய்ப்புண்டு.நான் தற்போது படித்த இந்த செய்தி முன்பு என் கண்ணில் அகப்படவில்லை.செய்தி இது தான்...

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏவுகணை தாக்குதல் தடுப்பு உதவி(Missile Shield) ஒப்பந்தம் ஏற்படுவதற்கான முதற் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கி விட்டது. சென்ற வருடம் பிப்ரவரி மாதம் இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்பு செக்ரட்டரி கேட்ஸ் இது பற்றிய பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார்.பிற்காலத்தில் சீனா இந்தியாவை தாக்கினால், அந்த நேரத்தில் இந்தியாவிற்கு உபயோகமாக இருக்கும் என்று கூற படுகிறது. அது போல அமெரிக்காவிற்கும் ,ஆசியாவில் சீனாவிற்கு எதிராக ஒரு பிடியாக கருதபடுகிறது.பின் வரும் காலங்களில் சீனா அமெரிக்காவிற்கு எதிராக பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்காவிற்கும் இந்த ஒப்ப்ந்தம் உபயோகமாகயிருக்கும். இதனால் அமெரிக்கவும் பல கோடி மதிப்புள்ள ஆயுத தளவாடங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புண்டு.

விரிவான செய்திக்கு இங்கு சுட்டவும்