Monday, September 28, 2015

BATM - வளைகுடா பகுதியில் சித்த மருத்துவ பட்டறை

இன்றைய கால கட்டத்தில் நமது உடலுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா,இதற்கு நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் காரணமாக உள்ளது. பெரும்பான்மையான நோய்களுக்கு தாவரங்கள் மற்றும் இயற்கையிலேயே முழுமையாக குணபடுத்தும் தன்மை உள்ளது. தமிழகத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல நோய்களை முழுமையாக குணபடுத்த தேவைபடும் மூலிகைகள் பற்றி பாடல்களில் எழுதி சென்றுள்ளானர். அதைவிட முக்கியமாக எவ்வாறு முறையாக வாழ்ந்தால் நோயை தவிர்க்களாம் என்றும் கூறி சென்றுள்ளனர்.

நோயை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது எப்படி என்பது பற்றியும், பருவ காலங்களுக்கு ஏற்ப பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வது பற்றியும் விரிவாக விளக்க வருகிறார் சித்த மருத்தவர் Dr. . செல்வ சண்முகம். இவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் (World Siddha Trust) தலைவர் . கடந்த ஆண்டு பெட்னா விழாவுக்கு  மருத்துவர் செல்வசண்முகம் அமெரிக்கா வந்துசென்றபின் இங்கிருந்து தமிழகம் சென்று வந்த எத்தனையோ பேர் அவரைச் சென்னையில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர். அதற்குக்காரணம் அவருடைய ஆழமான உடற்கூறும் அறிவியலறிவும்,மருத்துவ அறிவும், அதை நயமாக எடுத்துரைக்கும் பாங்குமே.சித்த மருத்துவத்தின் அடிப்படையை அழகாகப் படங்களுடனும், ஆரோக்கியமான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டுகளுடனும், எளிமையான, இயல்பான, கலப்படமில்லாத தமிழில் எடுத்துரைப்பதில் வல்லவர்.

மருத்துவர் செல்வ சண்முகம் அவர்கள் சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆரோக்கியமான வாழ்வு வாழ தேவையான வாழ்வியல் முறையை விளக்கவும், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் ஆகிய நோய்களை கட்டு படுத்தும் வழி பற்றியும் விளக்க "நலம் காக்கும் சித்த மருத்துவம்என்ற பயிற்சி பட்டறையை வளைகுடா பகுதியில் நடத்த இருக்கிறார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் நடத்தும் இந்த பட்டறைக்கு அனுமதி இலவசம்

நாள்: அக்டோபர் 10ம் தேதி, சனிக்கிழமை
நேரம்: 1:30 - 6:30
இடம்: Coconut Hill Party Hall,46129 Warm Springs Blvd, Fremont, CA 94539




.வளைகுடா பகுதி தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.