Sunday, May 29, 2011

ஜெயலலிதாவும், சர்வதேச நிதி நிறுவனமும் , அமெரிக்க நிதி நெருக்கடியும்

என்னாடா இது ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத பெயர்களை கொண்ட தலைப்பாக இருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறதா? கண்ணுக்கு தெரியாத சர்வ தேச நிகழ்வுகள் ஏற்படுத்தும் அரசியல் , பொருளாதார மற்றும் சமுக பிரச்சனையின் உண்மயான காரண கார்த்தாக்களை பெரும் பாலான மக்கள் உணராமல் உள்ளார்கள் என்பது பற்றி தெரிந்தது கொள்ளத்தான் இந்த பதிவு.

கடந்த முறை ஆட்சி அதிமுக அரசு பதவி ஏற்ற பின் ஜெயலலிதா எடுத்த மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் இன்னும் மறந்தது இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சி என்றவுடன் மக்கள் மனதில் பயத்துடன் தோன்றும் நிகழ்வு இது தானாக தான் இருக்கும்.அதற்கான விளைவையும் அது அனுபவித்து விட்டது.இந்த முறை அதிமுகவின் செயல்பாடு அதே போல் இருக்கும் என்ற பயம் நிறைய பேருக்கு இருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியம குறைவே(மக்கள் விரோத முடிவு எடுக்க மட்டும் சாத்தியம குறைவு! நல்லாட்சி நடக்குமா என்பதற்கு எந்த கியாரண்டியும் இல்லை!).அது எவ்வாறு என்று புரிந்து கொள்ள ஒரு சின்ன Flash Back.

பசுமை புரட்சிக்கு பின் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. அதன் பின் எழுபதுக்களின் நடுப்பகுதி வரையிலும் இந்தியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையேயான விகிதாச்சாரம் ஏற்று கொள்ளும் நிலையில் இருந்தது. 70க்களில் அமெரிக்கா டாலருக்கான தங்க மாற்றை கைவிட்டதும் அதை தொடர்ந்து நடந்த பெட்ரோல் விலை ஏற்றமும், இந்தியாவின் அப்போதைய நேச நாடான சோவியத் யுனியன் சிதைவும்( சோவியத் சார்பு நாடுகளிடம் வர்த்தகம் செய்ய டாலர் மட்டுமே முழுமையாக தேவை இல்லை. ) பொருளாதார போக்கை மாற்ற தொடங்கின.

அனைத்து நாடுகளுக்கும் உணவு மற்றும் எனர்ஜி (பெட்ரோல்) மிக அத்தியாவசியமானது. இந்தியா பெட்ரோல் தேவைக்கு வெளி நாடுகளை தான் நம்பியுள்ளது. 70க்களில் 2௦ டாலருக்கும் குறைவான கச்சா எண்ணெய் விலை மும்மடங்கு ஏறி 80களின் ஆரம்பத்தில்
80 டாலராகவும் தற்போது 1௦௦ டாலரையும் கடந்தது விட்டது.இந்தியாவின் முக்கிய இறக்குமதி கச்சா எண்ணெயாக இருப்பதால், இந்தியாவின் இறக்குமதி செலவு பல மடங்கு ஏறியது. இந்தியா மட்டுமல்லாமல் பெரும்பாலான நாடுகளின் நிலையும் இது.கச்சா எண்ணையின் விலையை அதிகரித்து கொண்டே போக தொடர்ந்து வந்த இராக், குவைத் போர்கள் உதவின.அதன் விளைவு இந்தியாவின் பேலன்ஸ் ஓப் பேமென்ட் (Balance of payment) அதிகரித்து கொண்டே வந்தது.வறுமை ஒழிப்பு, சமுக முன்னேற்றம் போன்றவற்றிற்காக அரசு செலவு செய்ய வேண்டி வந்ததாலும் இந்த சுமை மேலும் அதிகமானது.

90க்களில் இந்த பிரச்சனை மேலும் அதிகமானது.இந்தியா தன் தங்கத்தை அடமானம் வைக்க வேண்டி இருந்தது. இந்தியாவின் 90களின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய
காரணம் மேற்கூறய காரணிகளாக இருந்தாலும் அதை சோசியலித்துவத்தின் தோல்வி என ஊடகங்களால் செய்தி பரப்ப பட்டு வந்தது
(அது பற்றி தனி பதிவிடுகிறேன்).

அப்போது இந்தியா சர்வதேச நிதி நிறுவனத்திடம் கையேந்த்தியது. IMF கடன் கொடுக்க பல நிபந்தனைகளை விதித்தது. அதற்கு Structural Adjustment என்ற பெயரிட பட்டது.அதில் ஒரு சில கட்டுபாடுகளை கிழே பாருங்கள்.

1. வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நல திட்டங்களை குறைக்க வேண்டும்.

2.ஏற்றுமதி பெருக்கம் சார்பான வளர்ச்சியும், விரைவில் ஆதாரங்களை ஏற்றுமதி செய்ய திட்டம்.(Resource Extraction)

3.நாணயங்களின் மதிப்பு குறைக்க பட வேண்டும்.

4.கட்டுபாடற்ற இறக்குமதி - ஏற்றுமதி

5.வெளிநாட்டு முதலீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

6.தனியார் மயமாக்கல்

6.பட்ஜெட் கட்டுப்பாடு

7.விலை கட்டுப்பாடு மற்றும் மான்யம் நீக்கம்

8.வெளிநாட்டு முதலிட்டாளர்களின் தேவைகேற்ப சட்டம் மாற்றி அமைப்பு.

9.ஊழல் ஒழிப்பு.

மேல் சொன்ன நிபந்ததனைகளை ஒத்து கொண்டால் பெருமளவு கடனை உலக வங்கி தயாராக இருந்தது. அரசியல்வாதிகளுக்கு பெருமளவு ஊழல் பணம் பெறவும், ஒரு சில நல திட்டங்களை நிறைவேற்றவும் இந்த கடன் தேவை. பன்னாட்டு கம்பெனிகளுக்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் தங்கள் தொழிற்சாலை தொடங்க மற்றும் ஏற்றுமதிக்கு கொண்டு செல்ல அடிப்படை வசதிகளை நகர்புறங்களில் பெருக்க கடன் தேவை.அதிமுக ஆட்சி செய்யும் முன் இருந்த திமுக அரசு மேற்சொன்ன நிபந்ததனைகளை ஏற்று கொள்வதாக கூறி முதல் தவணையாக கடன் பெற்றது. ஆனால் அடுத்து வந்த அதிமுக தொடர்ந்தது கடன் பெற உலக வங்கியின் நிபந்ததனைகளை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மக்கள் விரோத கொள்கைகளை எடுக்க ஆரம்பித்தது. அவ்வாறு செய்தால் மேலும் பல கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிக கடன் அதிக வருமானம் அரசியல்வாதிகளுக்கு. கம்பெனிகளுக்கு பெரும் லாபம். ஆனால் மக்கள் உழைப்பு பிற்காலத்தில் தொடர்ந்தது சுரண்ட படும். வாங்கிய கடனை உண்மையான நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் இன்றி உபயோக படுத்தினால் நிச்சயம் நன்மை தான். ஆனால் பொதுவாக அது நடப்பதில்லை. பல்லாயிரம் கோடி கடன் வாங்கி ரோடு போட்டால் அது 3 மாதத்துக்கு கூட வருவதில்லை.மேலும் கொடுக்க படும் கடன்கள் உண்மையான வளர்ச்சி திட்டத்துக்கு தர படுவதும் இல்லை.( ஜான் பெர்கின்ஸ் புத்தகம இது பற்றி அழகாக விளக்குகிறது).

உலக வங்கியின் கட்டுபாட்டால் எடுக்க பட்ட முடிவு தான் முந்தய அதிமுக அரசின் முடிவுகள்.மக்களின் கோபம் எல்லாம் ஆட்சியாளர்களின் மீது தான்.உலக வங்கியின் பங்கு பற்றி சாதாரண மக்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை. தமிழ் நாடு என்றில்லை. மத்திய ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் புரட்சி நடப்பதற்கான அடிப்படை காரணி கண்ணில் தெரியாத இடத்தில் இருக்க கோபம் மட்டும் ஆட்சியாளர்கள் பக்கம் திரும்பியுள்ளது. மக்களாட்சி உள்ள நாடுகளில் மக்களின் கோபம் வாக்கு பெட்டிகளின் மூலம் ஆட்சி மாற்றத்திலும்,முடி ஆட்சி நாடுகளில் மக்கள் கோபம் தெருக்களில் புரட்சியாகவும் வெளிபடுகிறது.

தற்போது மட்டும் உலக வங்கி தன் நிலையிலிருந்து எப்படி மாறி விட்டது என்கிறிர்களா? ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் நிதி நெருக்கடி வந்தால் பட்ஜெட் சமநிலை, கடுமையான கட்டுப்பாடு என போதனை செய்த உலக வங்கி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதே பிரச்சனை ஏற்பட்டவுடன் கினிசியன் பொருளாதார ( அதாவது நிதி நெருக்கடி காலங்களில் அரசாங்கம் செலவு அதிக செலவு செய்தால் தான் நாடு பழைய நிலைக்கு திரும்பும் என்ற கொள்கை) கொள்கையே கடை பிடிக்கலாம் என்று தன கண்டிப்பிலிருந்து சிறிது குறைத்து கொண்டு விட்டது.அதாவது ஆசிய நாடுகளுக்கு கடுமையான கொள்கை மேலை நாடுகளுக்கு அந்த பிரச்சனை என்றவுடன் கொள்கை மாற்றம். அமெரிக்காவின் டாலர் உலக பொது நாணயமாக இருப்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் அரசின் செலவினத்தை அதிகரித்து கொள்ளலாம்.எனவே அதிமுக அரசு தற்போது உலக வங்கியிளிருந்து தொடர்ந்து
கடன் பெற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்காது.(அதை பயன் படுத்தி கடந்த திமுக அரசு தேவையற்ற இலவசங்கள் மூலம் தமிழகத்தின் பற்றாக்குறையை இமாலய அளவுக்கு ஏற்றி விட்டது வேறொரு சோகமான கதை.)



அடுத்து ஸ்டிராஸ் கான் அரசியலுக்கு வருவோம். ஸ்ட்ராஸ் கான் தற்போது பதவி விலகிய பின் அந்த இடத்தை பிடிக்க போவது யார் என்ற போட்டி உலகளவில் எழுந்து உள்ளது. அந்த இடம் ஐரோப்பியர்க்கு தான் என்று ஐரோப்பிய நாடுகள் வரிந்து கட்டி கொண்டு நிற்கின்றன.( எப்போதும சர்வதேச நிதி அமைப்பின் தலைமை ஐரோப்பியரிடம் தான் இருக்கும்). இப்போது ஐரோப்பியரை அந்த பதவிக்கு கொண்டு வர முக்கிய காரணம் இருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் தற்போது கடன் பிரச்சனையில் சிக்கி கொண்டு உள்ளன (கிரிஸ்,அயர்லாந்து, போர்ச்சுக்கல் etc). அந்த நாடுகளின் கடன் பிரச்சனையை தீர்க்க சர்வ தேச நிதி நிறுவனத்திடம் கடன் வாங்க வேண்டும். ஆனால் ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகள் உண்ட கசப்பான மாத்திரைகளை உட்கொள்ளாமலேயே கடனை மற்றும் பெற வேண்டும். அதை திறம்பட நடத்தி காட்ட ஐரோப்பியர் தலைவராக இருக்க வேண்டிய தேவை உள்ளது.

மிக பெரிய பன்னாட்டு வங்கிகளுக்கோ வங்கி துறையில் கட்டுபாடுகளை விதிப்பதை எதிர்ப்பவர் சர்வதேச நிதி இணையத்தின் தலைவராக வர விரும்புவார்கள். அமெரிக்காவை பொறுத்தவரை உலக பொது நாணயமாக டாலரை தொடர்வதை விரும்புபவர் தலைவராக வர விரும்பும். இவை அனைத்திற்கும் ஏற்ற பிரான்ஸ் நிதி அமைச்சர் கிரிஸ்டின் லகார்டிற்கே அந்த நிறுவனத்தின் தலைவராக வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நினைக்கிறேன்.

--