Monday, January 21, 2008

MONOPOLY விளையாட்டில் சென்னை நகரை சேர்க்க வாக்களியுங்கள்

Monopoly விளையாட்டு சிறுவயதில் நம்மில் பெரும்பாலானோரை கவர்ந்த விளையாட்டு ஆகும். பல பெயர்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும். நான் Trade என்ற பெயரில் இதை விளையாடி இருக்கிறேன்.விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் பொழுதை கழிக்க , இது ஒரு அருமையான விளையாட்டு. Monopoly கம்பெனியினர், இனி வரும் காலங்களில் எந்த நகரை இந்த விளையாட்டில் சேர்ப்பது என்பதை பொதுமக்கள் வாக்களிப்பு மூலம் தீர்மானிக்க முடிவு செய்துள்ளனர்.நம் சென்னை நகரத்தையும் இதில் சேர்க்க இது ஒரு சரியான வாய்ப்பு. நான் சென்னை நகரை இன்று wildcard ரவுண்டில் இனைத்திருக்கிறேன் இந்த தளத்துக்கு சென்று சென்னைக்கு வாக்களிக்கவும்.

Friday, January 11, 2008

விவசாயிகளின் உடனடி தேவை- நவீன உழவர் சந்தை

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி கடந்த சில வருடங்களாக அபரிமிதமாக உள்ளது. ஆனால் இந்த வளர்ச்சியை அனுபவிப்பவர்கள் 20% மக்கள் தொகையினர் மட்டுமே. மறுபுறம் ஏழை-பணக்காரர்களிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கிறது. மாநகர-நகர, கிராம புற வேறுபாடு அதிகரித்துள்ளது. விவசாயம் மற்றும் சிறு தொழில் மிகவும் பாதிக்கபடுகிறது. பட்டினிச்சாவும் அதிகரிக்கிறது.
இத்தகைய வளர்ச்சியை ஆதரிப்பவர்கள் இதன் மூலம் பயனடைந்த மக்களை ஆதாரம் காட்டியும், அரசின் macro economic indicator ஆதாரம் காட்டியும் பொருளாதார தாராலமயமாக்களினாலான வளர்ச்சியை அதிகரிக்கின்றனர். இந்த வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் இந்திய விவசாயத்தின் அழிவை காட்டியும், பட்டினி சாவை அதாரம் காட்டியும் எதிர்க்கின்றனர்.
இந்த மாற்றத்தினால் 20% மக்களிடம் வங்கும் சக்தி அதிகமாக உள்ளது. எற்றுமதி வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. இந்த 20% மக்களின் வாங்கும் சக்தியின் பயன் 60% ஏழை விவசாயிகளிடம் எவ்வறு கொண்டு போய் சேர்ப்பது என்று எந்த அரசியல்வாதியோ, சமூகசீர்திருத்தவாதியோ அல்லது திட்டமிடும் அதிகாரிகளோ சிந்திப்பதே இல்லை. அனைவரும் தங்கள் வாதத்தினால் மக்களை கவர நினைக்கிறார்களே தவிர நல்ல தீர்வை சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றிகரமாக முடிக்க நினைப்பதே இல்லை. வெகு சிலரே அவ்வாறு செயல்படுகிறார்கள்.
உதாரணமாக தமிழகத்தில் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு அரசு மானிய விலையில் நிலம் கொடுத்து நிறைய கம்பெனிகளை சென்னைக்கு இழுத்துள்ளது.சென்னையில் லட்சகணக்கானோர் சாப்ட்வேர் மற்றும் அது சார்ந்த தொழிலில் உள்ளனர் மற்றொரு புறம் விவசாயிகள் தங்கள் பயிரிட்ட பயிருக்கு நல்ல விலை கிடைக்காமல் இடை தரகர்களிடம் விற்று நட்டத்தில் வாழ்கின்றனர்.பல்வேறு இடை தரகர் உள்ள இந்த விற்பனை முறைக்கு மாற்றாக Reliance போன்ற பெருநிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து
விற்பனை செய்ய தொடங்கியது. இந்த முறையில் விவசாயிகளுக்கு தங்களுடைய விளை பொருளை விற்க சந்தர்ப்பம் கிடைத்தாலும் நல்ல விலை கிடைப்பதற்கான சாத்தியம் குறைவே.

இந்த பிரச்சனைக்கு முதல்வர் சென்ற ஆட்சி காலத்தில் உழவர்சந்தையை தீர்வாக கொண்டு வந்தார் அது ஒரு நல்ல திட்டம். அது நடுத்தர மக்களிடமும் விவசாயிகளிடமும் நல்ல ஆதரவை பெற்றது.சென்னையில் இருக்கும் உயர் நடுத்தர ம்ற்றும் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் குறிப்பாக கம்ப்யூட்டர் துறையில் அதிகம் சம்பாதிக்கும் இளைஞர்களிடமும் இத்தகைய ஒரு திட்டத்தை அறிமுக படுத்த வேண்டும். சாதாரண உழவர் சந்தை போல் இங்கு அறிமுகபடுத்தினால் அது தோல்வியுரும். இந்த மக்களை பொருத்தவரை அவர்களுக்கு நல்ல தரமான காய்கறிகள் மிகவும் அருகாமையில் கிடைக்க வேண்டும். அதற்காக சிறிது விலையை அதிகம் கொடுத்து வாங்கவும் தயங்க மாட்டார்கள். அவர்கள் வாங்கும் இடமும் வசதியாகவும், அலங்காரமாகவும் இருக்க வேண்டும். தேவையான பொருள்கள் அனைத்தும் ஒரு இடத்தில் கிடைக்க வேண்டும். இதை தற்போதைய உழவர்சந்தை மூலம் நடைமுறை படுத்துவது கடினம்.
தற்போது நிறைய அரசுசாரா நிறுவனங்கள்(தான் பவுண்டேசன்) மிகவும் சிறப்பாகவும், நல்ல மேலாண்மை திறமையுடனும் விவசாயிகளுக்கு பணி புரிந்து வருகிறது. அவ்வாறு "உண்மையிலேயே" சிறப்பாக பணிபுரியும் NGO வை நடுவர்களாக நியமித்து அவர்கள் மூலம் அனைத்து காய்கறிகள் மற்றும் பிற பொருள்களை விவசாயிகளிடம் நேரடியாக வாங்க வேண்டும்.அவர்களுடைய முக்கிய வேலை தரக்கட்டுப்பாடு மற்றும் கொள்முதல். அரசு மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் மற்றும் நில மானியம் கொடுத்துள்ளது. அவர்களது கட்டிடங்களும் பல ஏக்கர்கள் பரந்து விரிந்துள்ளது, எனவே இது போன்ற பெரிய கம்பெனியிலேயே ஒரு சிறிய கடை ஒன்றை தொடங்க அவர்களிடம் அனுமதி பெற வேன்டும். அந்த கடையை ரிலையன்ஸ் போன்ற கடையின் தரம் மற்றும் அமைப்புடன் அமைக்க பட வேண்டும். அது போன்ற கடைகளில் விவசாயிகளின் தரமான விளைபொருட்கள் நேரடியாக அங்கு பணி புரிபவர்களிடம் விற்க்கபட வேண்டும்.1000 பணியாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களில் இவ்வாறு கடை அமைக்கலாம். மேலும் IT Highway, Mahindra city போன்ற இடங்களில் பொதுவாக பெரிய கடை அமைத்து விவசாயிகளின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்.
மேலும் தரத்தை உறுதி செய்து மக்களிடம் நற்பெயர் பெற்றுவிட்டால் internetன் மூலம் நேரடியாக ஆர்டர் பெற்று மக்களிடம் நேரிடையாக விநியோகம் செய்யுமளவு விரிவு படுத்தலாம்.
இதன் மூலம் 20% மக்களின் வளர்ச்சியின் பயனின் ஒரு பகுதியாவது ஏழை விவசாயியை சென்றடையும். மேலும் அனைத்து கம்ப்யூட்டர் நிறுவனங்களும் சமூக சேவைக்கென்று ஒரு பகுதியை செலவழிக்கின்றனர். எனவே Infosys போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த நடுவர் வேலையை (NGOக்கு பதிலாக) செய்யலாம். இதைவிட சமூக சேவை வேறு எதுவும் இருக்காது. இந்த நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் நிறைய பேர் volunteer ஆக பணி புரிய ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் தரக்கட்டுபாட்டு சோதனையை தன்னிச்சையாக செய்யலாம். எனவே தரமும் நன்றாக இருக்கும் அந்த அமைப்பின் மீது நம்பிக்கையும் ஏற்படும்.
இவ்வாறான முயற்சி மட்டும் வெற்றி பெற்றால் இந்திய வரலாற்றிலேயே Amul, பசுமை புரட்சிக்கு அடுத்தபடியாக விவசாயத்தில் நடக்கும் மாபெரும் புரட்சியாக இது இருக்கும். ஒரு லட்சம் உயர் நடுத்தர மற்றும் உயர் தர வகுப்பை சேர்ந்த மக்கள் நேரடியாக விவசாயிகளின் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி வாங்குகிறார்கள் என்பதை நினைக்கவே அபரிமிதமாக இருக்கிறது.
இப்படிபட்ட ஒரு முயற்சியினால் கிடைக்கும் நன்மைகள்:
1. விவசாயிகளுக்கு நிரந்தர விற்பனை சந்தை கிடைக்கிறது
2. அவர்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்
3. மக்களுக்கு நல்ல தரமான பொருட்கள் கிடைக்கிறது.
4. மக்களுக்கு தரமான பொருட்கள் அருகாமையிலேயே கிடைக்கிறது.
5. இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கபடுகிறார்கள்,
6. ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் விவசாயிகளின் பலனை அபகரிப்பதா? அல்லது சிறு வணிகர்கள் மற்றும் இடைதரகர்கள் விவசாயிகளின் பயனை அபகரிப்பதா என்ற கேள்வி போய் பலன் அனைத்தும் விவசாயிகளுக்கே போய் சேரும்.
7. இந்த முறை வெற்றிகரமாக செயல் படுத்தபட்டால் வரும் காலங்களில் விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கு இதையே பயன்படுத்தலாம்.
8. நல்ல கட்டுபாட்டின் மூலம் இயற்கை விவசாய(organic) பொருட்களுக்கு தனியான விற்பனை சந்தையை உருவாக்கமுடியும்.

Monday, January 07, 2008

ம.க.இ.க- உயிர்ம எரிபொருள் எதிர்ப்பு(Jatropha(காட்டாமணக்கு) )- சில எண்ணங்கள்


இந்தியா ஒரு விவசாய நாடு. 60% மக்கள் விவசயத்தை நம்பி உள்ளனர்.ஏழை மக்களின்
எண்ணிக்கையும் கிராமத்தில்தான் அதிகம் உள்ளது. வளர்ந்து வரும் ஏழை-பணக்காரர் பிளவை குறைக்க வேண்டுமானால் விவசாய விளைபொருள்களின் தேவை வளர்ந்த சமூகத்திடையே அதிகரிக்க பட வேண்டும். அவர்களுடைய பணம் கிராம மக்களை கொண்டு போய் சேரவேண்டும்.

Jatropha(காட்டாமணக்கு)வின் மற்றொரு குணம், அது குறைந்த நீர்வளம் உள்ள பகுதியைலும் வளரும். இதன் மூலம் மிகவும் பின் தங்கிய வறண்ட மாவட்டங்களில் வாழும் ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளின் வாழ்க்கை தரம் உயர வாய்ப்புள்ளது. அவர்களின் முன்னேற்றத்துக்கு இது ஒரு அரிய வரபிரசாதம்.

நெல் மற்றும் கரும்பின் விலை உயரும் போதெல்லாம் ,கூலி தொழிலாளின் கூலி உயர்ந்து
உள்ளது வரலாற்று உண்மை. அது போல் Jetrobaவும் வறண்ட பகுதி மக்களின் வாழ்க்கை
தரத்தை வளர நிச்சயம் உதவும்.

இன்று இந்தியாவின் உழைப்பு மற்றும் செல்வங்கள் எல்லாம் பெட்ரோலை டாலரில்
வாங்க வேண்டிய காரணத்தால்(அது மட்டுமல்ல காரணம் என்றாலும் அதுவும் ஒரு முக்கிய
காரணம்) அமெரிக்க டிரசரியில் முதலீடு செய்து உள்ளோம். டாலர் மற்றும்
பெட்ரோலுக்கிடையே உள்ள தொடர்பை இந்த பதிவு விளக்குகிறது.

http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html

ம.க.இ.க வினர் தினமும் எதிர்க்கும் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியின் அடிப்படை காரணமே பெட்ரோலை பலநாடுகள் இறக்குமதி செய்வது தான். Jetroba பயிரிட்டு பெட்ரோல் இறக்குமதியை குறைப்பதன் மூலம் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியை குறைக்கலாம். இந்த அடிப்படை உண்மையை கூட ம.க.வி.கவினர் புரிந்து கொள்ள முடியாதது ஆச்சிரியமாக உள்ளது.

அடுத்து சுற்றுப்புற சூழல். உண்மையிலேயே சுற்று புற சூழலுக்கு பாடு படுபவர்களாக
இருந்தால் அவர்கள் எதிர்த்து போராட வேண்டியது, பெட்ரோல் உபயோகம், பாரம்பரிய நெல் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தான். அவை தான் green house gas அதிகம் வெளியிடுகிறது.அவர்க்ளுடைய இந்த கருத்து சரியான பிதற்றல்.
மேலும் jetroba பயிரிடுவது என்பது இறால் வளர்ப்பு போன்று ஒட்டு மொத்தமாக
விளைநிலத்தை பாழாக்குவது அல்ல.

உண்மையில் அரசு செய்ய வேண்டியது என்ன என்றால்

1.விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒட்டு மொத்தமாக
கொடுத்து அவர்களின் மூலம் பயிரிட நினைக்க கூடாது.

2.Jatropha(காட்டாமணக்கு) என்பது மேலை நாடுகள் பயிரிடும் பயிர் அல்ல. என்வே நல்ல வித்து உருவாக்குவது, அதற்கு தேவையான agronomic practise கண்டு பிடிப்பது போன்ற விவசாய ஆராய்ச்சிக்கு நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது இந்திய அரசாங்கம் அதிக அளவு பணத்தை அராய்ச்சிக்காக விவசாய பல்கலை
கழகங்கள் மூலம் செலவிடுகிறது. அவர்களுடைய அராய்ச்சி திருப்தி அளிப்பதாக இல்லை.
கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் நிறுவனம் அவர்களை விட நன்றாக செயல்படுகிறார்கள்.
அது போல் தனியார் நிறுவனங்களை jetroba அராய்ச்சிக்காக ஊக்குவிக்க வேண்டும்

3.Jetroba தொழில் நுட்பத்தில் உள்ள் மற்ற technology gapsம் சரி செய்ய பட வேண்டும்

4.கலைஞர் செய்யும் நில சீர்திருத்த திட்டத்தை jetroba பயிரிடும் பகுதிகளில் முழுமையாக
செயல் படுத்த வேண்டும். அதாவது நிலமற்றவர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது.

5.அங்கு இருக்கும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம்,நில சீர்திருத்த வசதி போன்ற
capital investment இலவசமாக செய்து கொடுக்க வேண்டும்.

6. Jatropha(காட்டாமணக்கு) விளை பொருளுக்கு நல்ல குறைந்த பட்ச ஆதார விலையை கொடுக்க வேண்டும்.

7.அரசு உதவியுடன் நல்ல பயிர் காப்பீட்டு திட்டத்தை(crop Insurance) அறிமுகபடுத்த
வேண்டும். இது புதிய பயிர் என்பதால், பயிர் காப்பீட்டு திட்டத்தை எளிதாக அறிமுக
படுத்தலாம்.

8.Contarct farming அறிமுகபடுத்தி விவசாயிகளுக்கு நல்ல தொழில்
நுட்பமும்,இடுபொருள்களுக்கான முதலீடும் எப்போதும் கிடைக்க செய்ய வேண்டும்.

பிடரல் காஸ்ட்ரோ உண்மையான தலைவர்தான். தன் மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க உதவியவர். பன்னாட்டு
கம்பெனிகளுக்கு விலை போகாதவர். ஆனால் அவர் கூறும் அனைத்தையும் எடுத்து கொள்ள
வேண்டும் என்று அவசியம் இல்லை. முன்பு சோவியத் கூறிய அனைத்தையும் எடுத்து
கொண்டு அதை utopean சமூகமாக கம்யூனிஸ்டுகள் காட்டினர் .அதனால் சோவியத் சரிவு
மக்களிடம் அவர்களின் சித்தாந்தத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.பிறகு சைனாவை
உதாரணம் காட்டினர்.அது சர்வாதிகார மற்றும் முதலாளித்துவ பாதைக்கு சென்ற போது
மக்களும், கம்யூனிசத்தின் ஒரு பகுதியினரும்(CPM) சித்தாந்ததின் மீது நம்பிக்கை இழந்தனர்.
CPM முதலாளித்துவ/சர்வாதிகார பாதைக்கு சென்றது. மீதமுள்ளோர் மக்களிடம் உள்ள
வெறுப்பு, ஏழ்மை போன்றவற்றை வைத்து கொள்கை, தீர்வு எதுவும் இல்லாமல் சில அன்னிய model வைத்து போராடுகின்றனர்.

கம்யூனிசத்தின் அடிப்படை சித்தாந்ததை மட்டும் வைத்து இந்தியா-இந்தியர்களின்
தேவையை கொண்டு கொள்கைகளை இந்தியர்களுக்காக வடிவமைத்து இருந்தால் இந்த
வெற்றிடம் ஏற்பட்டிருக்காது.இந்த வெற்றிடத்தால் ஏழை மக்க்ளுக்கு உண்மையிலேயே
போராட ஒரு உண்மையான அமைப்பும் இல்லாமல் போய்விட்டது.

தமிழ்மணி அவர்களின் இந்த பதிவு பார்த்து , அதன் மூலம் உயிர்ம எரிபொருள் பற்றிய இந்த கட்டுரையை படித்த பின் எழுதிய பதிவு இது. அவருடைய பதிவில் பின்னூட்டமாக இட்டது.

Friday, January 04, 2008

ஜப்பானியர்களை கவரும் இந்திய கல்விதரம்

ஜப்பானியர்களிடம் இந்திய கல்வி முறை அதிக பிரபலமடைவதாக செய்திகள் வருகின்றது. ஜப்பானில் உள்ள இந்திய பள்ளிகளில் இந்தியர்களை விட ஜப்பானியர்களே விரும்பி படிக்கிறர்களாம். இந்திய கல்வியில் உள்ள கணிதம்,அறிவியல் மற்றும் ஆங்கிலம் அதிக தரமுள்ளதாக கருதுகிறார்கள். புத்தக கடைகளிலும் இந்திய கணித புத்தகங்கள் அதிகம் கிடைக்கிறதாம். முழு செய்திக்கு இங்கு போய் பார்க்கவும்.

Wednesday, January 02, 2008

ஈராக் போர், உலகலாவிய வறுமை, பட்டினிச்சாவு போன்றவற்றிற்கான உண்மை காரணம்-Corporatocracy

இன்றைய உலகில் ஏற்படும் அடிப்படை பிரச்சனைகளான போர்,வறுமை,பட்டினி
போன்றவற்றிற்கான மூல காரணத்தை ஜான் பெர்க்கின்ஸ் அழகாக விளக்குகிறார்.MNC எவ்வாறு
வளரும் நாடுகளின் அரசியல்வாதிகளோடு சேர்ந்து மக்கள் வாழ்வை சீரழிக்கிறது என்பதை
"Confessions of an Economic Hit Man" என்ற தனது புத்தகத்தில் அழகாக
எழுதியிருந்தார்.பேராசை பிடித்த இந்த corporations அணுகுமுறையை இந்த வீடியோவில்
அழகாக விவரிக்கிறார்.
முதலில் பணத்தாசை காட்டி நாட்டின் தலைவர்களை தன் பக்கம் இழுப்பார்கள்.
அது முடியவில்லை என்றால் கொலை மிரட்டல் விடப்படும்.
இந்த வேலையை செய்பவர்கள் Economic Hitman எனப்படுவோர். ஒரு காலத்தில் இந்த
ரகத்தை சேர்ந்தவர் John Perkins. இவர் பெட்ரோலை டாலரில் மட்டும் விற்க சவுதி
அரேபியாவுடன் பேச்சி நடத்தியதில் முக்கியமானவர்.அந்த முடிவின் முக்கியத்துவத்தை இந்த
பதிவில் காணலாம்.
அதற்கு அந்த தலைவர்கள் மசியவில்லை என்றால், Jackals என்ப்படும் கொலையாளிகள்
அனுப்பபடுவர்.
கொலையாளிகள் மூலமும் கொல்ல முடியவில்லை என்றால் கடைசியில் ராணுவம்(ஈராக்கில்
நடந்தது) அனுப்பபடும்.
சமூக அக்கறை உள்ளவர்கள் அனைவறும் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்க
வேண்டும்
.
முதல் பகுதியில் ஈராக் மற்றும் பெட்ரோல் அரசியலை விளக்குகிறார்.



இரண்டாவது வீடியோவில் தென் அமெரிக்க நாடுகளில் நடக்கும் அரசியலை விவரிக்கிறார் .




மூன்றாவது வீடியோவில் நாம் என்ன செய்யலாம் என்று விளக்குகிறார்.