Thursday, December 27, 2007

CNNன் இந்த செய்திக்கு என்ன அர்த்தம்?


CNNல் உள்ள் இந்த செய்தியை பாருங்கள். பாக்கிஸ்தானில் தீவிரவாதிகள் எண்ணிக்கையும் செயல்பாடும் அதிகம் உள்ளது எனவே அணு ஆயுதங்கள் அவர்கள் கைக்கு போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது அபாயகரமானது என்று சொன்னால் அது சரியாக இருக்கும். ஆனால் அனைவரும் படிக்கும் தலைப்பு செய்தியிலே "Pakisthan is the ONLY ISLAMIC STATE with nuclear arsenal." என்று கூறி உள்ளது.


இதில் "ISLAMIC STATE" என்று பொதுவாக கூறுவதன் அர்த்தம் என்ன? அப்படி என்றால் அனைத்து islamic stateம் அமெரிக்காவின் எதிரிகள். பாக்கிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அமெரிக்கா மிகவும் கவலை கொள்கிறது என்று அர்த்தமா? முன்பெல்லாம் சோவியத் யூனியன் கம்யூனிச நாடு. எனவே எதிரி என்று அறிய பட்டது. இப்போது கம்யூனிசத்திற்கு பதில் இஸ்லாம் வந்து விட்டதா?

Monday, December 24, 2007

சுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவாராவின் கருத்தும் சில நடைமுறை உண்மைகளும்

சுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவராவின் கருத்தை Sicko படத்தின் special featureல் பார்த்தேன்.அவர் கியுபாவில் மருத்துவராக பணி புரிகிறார். அவர் சுதந்திரம் பற்றி ஒரு வரியில் கூறியது உலகில் நடக்கும் பல உண்மைகளை வெளி கொணர்வதாக உள்ளது.
படத்தின் டைரக்டர் மைக்கேல் மூர் சுதந்திரம் பற்றி அவரது கருத்தை கேட்டத்ற்கு, குவாரவின் பதில்: நாம் நினைப்பவற்றை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதுதான் சுதந்திரம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையான சுதந்திரம் என்பது நாம் கூறும் கருத்துகள் பிறறால் கவனிக்க பட்டு மதிப்பளிக்க பட வேண்டும் அது தான் உண்மையான சுதந்திரம் என்றார்.
"But have somebody to consider your opinion".
அதாவது மக்களின் கருத்துகளை அதிகாரத்தில் இருபவர்கள் மதித்து அதன் தேவையை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவுகள் எடுக்க வேண்டும்.அமெரிக்கா போன்ற நாடுகளில் முழுமையாக கருத்து சுதந்திரம் இருந்தாலும் கடைசியில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து அதன்படி செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறியே. எந்த் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாளும் வெளியில் எப்படி பேசினாலும்,கடைசியில் அதிகார பீடத்திற்கு வரும் போது எந்த முக்கிய முடிவுகளையும் கட்டு படுத்துவது பணபலம் உள்ள அதிகார மையங்களே.அமெரிக்காவில் இந்த முடிவுகள் Lobby என்ப்படும் அதிகார குழுக்கள் மூல்ம் கட்டுபடுத்த படுகிறது.இந்தியாவில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கபடும் பிரதிநிதிகள் உண்மையிலேயே மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே? அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் அல்லது இடைதரகர்களிடம் பணம் வாங்கி அவர்களது கருத்துகளை நடைமுறை படுத்துகிறார்கள் அல்லது ஒருசில அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காக எடுக்கும் முடிவுகளை நடைமுறை படுத்த வேண்டிய அரசு அதிகார்கள் முட்டுகட்டை போட்டு அதை நடக்க விடாமல் செய்கின்றனர்.
மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைக்காகவும், மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றவும் உதவும் அரசை மக்களால் தேர்ந்தெடுத்தால்தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். மக்களும் பல கட்சியினரை தேர்ந்தெடுத்து பார்த்துதான் வருகின்றனர். எந்த் கட்சியினர் வந்தாலும் விளைவு ஒன்றே. அவர்கள் பாடுபட போவது பணக்காரர்களின் வளர்ச்சிக்கு தான். இப்படி நிலமை இருந்தால் இங்கு ஜனநாயகமும் சர்வாதிகாரமும் ஒன்றே.இந்த நிலை ஓட்டு பெட்டியாலும் மாறபோவது இல்லை. நக்சல்பாரி போன்ற இயக்கங்களும் தனி மனித சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்து கடைசியில் பொலிட்பீரோ அல்லது வேறு பெயரில் ஒரு அதிகார வர்க்கத்தை உருவாக்கி அவர்களின் நன்மைக்கும் அவர்களின் செல்வ செழிப்புக்குமே கொண்டு செல்கிறது.
இந்த நல்ல மாற்றத்தை கொண்டு வர வேறு என்னதான் வழி?

Tuesday, December 04, 2007

புகைபடங்களை உங்கள் சொந்த வர்ணணையுடன் இலவசமாய் ஆல்பம் தயாரிக்க GoldMail

பொதுவாக ஒவ்வொரு புகைபடத்திற்கு பின்னும் ஒரு சுவாரசியமான நிகழ்வு இருக்கும். நாம் புகைபடங்களை எடுக்கும் காலங்களில் அதை பற்றிய நினைவு நன்கு இருக்கும். காலப்போக்கில் அந்த புகைப்படம் மட்டும் நம்மிடம் இருக்கும்.ஆனால் அந்த சுவரசியமான நிகழ்வு மறந்து விடும்.
மேலும் நாம் புகைபடத்தை பிறரிடம் பகிர்வு செய்து கொள்ளும் போதும் புகைப்படம் மட்டும் பகிர்ந்து கொள்ள படும். அந்த நிகழ்வுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.
இதற்க்கு நாம் வீடியோ எடுத்து நிகழ்வுகளை சேமிக்கலாம். ஆனால் வீடியோ எடுக்கும் போது அனைத்து செய்திகளையும் சொல்வது கடினம். அதற்கு எடிட்டிங் மென்பொருள் உபயோக படுத்த வேண்டும். அதை பகிர்தலும் கடினம். அனைவரிடமும் வீடியே எடுக்க வசதி இருப்பதும் இல்லை.
புகைபட ஆல்பம் தயாரிக்க பிகாசா போன்ற மென்பொருள்கள் உள்ளன. ஆனால் புகைபடத்தோடு செய்திகளை நம் குரளில் பேசி ஆல்பத்தில் இணைத்து அனுப்ப முடியாது.பகைபட ஆல்பத்தை தயாரித்து நம் சொந்த குரளில் வர்ணணை கொடுத்து அதை பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுவதுதான் Goldmail .
Goldmail மூலம் நம்முடைய சொந்த குரளில் வாழ்த்துமடல் அனுப்பவும் ,Blog பதிவுக்கும் கூட உபயோக படுத்தலாம்.

நீங்களும் Goldmail பயன்படுத்தி உங்களுடைய நினைவுகளையும் நிகழ்வுகளையும் பத்திரபடுத்தி வைத்து பிறரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.இது ஒரு இலவச சேவை.