Monday, February 23, 2009

ஆஸ்கார் விருது சந்தோஷமும்(A.R.Rahman) ,வருத்தமும்(MIA)




இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று A.R.Rahman சரித்திரம் படைத்த செய்தி உண்மையிலேயே உலக தமிழர்களுக்கு எல்லாம் மாபெரும் சந்தோஷம் கொடுக்கும் செய்தியாகும். அதுவும் இளம் வயதில் இவ்விருது பெற்றதாலும், அவருக்கு ஹாலிவுட்டில் பெரிய அளவில் அறிமுகம் கிடைத்ததாலும் அவருக்கு ஹாலிவிட்டில் மிகப்பெரிய பிராஜெக்ட்களில் இனி வாய்ப்பு கிடைத்து உலகலவில் அவர் பல சாதனைகளை படைக்க போகிறார் என்பதும் நிச்சயம்.அவருடைய வெற்றி பயணம் தொடர நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.

இந்த ஆஸ்காரில் வருத்தம் அடைய வைத்த செய்தி, விருது பெற பரிந்துரைக்க பட்டவர்களில் ஒருவரான MIAக்கு இந்த முறை விருது கிடைக்க வில்லை என்பது. ஹிப் ஹாப் படகர்களில் உலக அளவில் கலக்கி கொண்டிருக்கும் தமிழர் MIA. இலங்கையில் நடைபெரும் இன அழிப்பு பற்றி தைரியமாக மேல் நாட்டு மீடியாக்களில் எடுத்து கூரியவர் .அவருக்கு இந்த ஆண்டு கிராமி விருது பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தும் அது கிடைக்க வில்லை. இந்நிலையில் ஆஸ்கார் விருதும் கிடைக்காமல் போய்விட்டது பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் நிச்சயம் அவர் பல ஆஸ்கார் மற்றும் கிராமி விருது பெறுவார் என்பது நிச்சயம்

சுவிஸ் வங்கியின் ரகசியம்- அமெரிக்காவை பின்பற்றுமா இந்தியா?

உலகில் உள்ள அனைத்து நாடுகளிளும் உள்ள பெரிய ஊழல் பெருச்சாளிகளின் பணத்திற்கு பாதுகாப்பான சொர்க்கமாக உள்ளது சுவிஸ் வங்கி. அதற்கு முக்கிய காரணம் அங்கு பணத்தை முதலீடு செய்பவர்களின் பெயரும் கணக்கும் மிகவும் ரகசியமாக வைக்கபடுவது தான்.இவ்வாறு தன் சொந்த நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை சுவிஸ் வங்கியில் கணக்கில் வைப்பதால் அந்த நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றில் சில- வரி இழப்பு,பணத்தை வங்கியில் போட்டால் அதன் மூலம் புதிதாக உருவக்க படும் பணப்புழக்கம் குறைவு, ஊழல் மற்றும் லஞ்சப்பெருக்கம் மற்றும் சமூக விரோத கும்பல்களின் குழுமம் பெருக்கம் போன்றவை.

இந்த பிரச்சனகள் அமெரிக்காவை கூட விட்டு வைக்கவில்லை.2002 - 2006 வரை அமெரிக்கர்கள் சுமார் $20 பில்லியன் பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்து உள்ளனர். இதன் மூலம் $200 மில்லியன் அமெரிக்க அரசுக்கு வரி இழப்பாகி உள்ளது. சுவிஸ் வங்கி தன் வாடிக்கையாளர்களின் கணக்குகளை இரகசியமாக வைப்பது பல ஆண்டுகளாக உள்ள பழக்கம். ஆனால் அமெரிக்கா தற்போது சுவிஸ் வங்கியிடம் அழுத்தம் தெரிவித்து இவ்வாறு சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்யும் அமெரிக்கர்களின் பட்டியலை அமெரிக்க அரசிடம் தெரிவிக்க அனுமதி பெற்று விட்டது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சட்ட விரோதமாக வைத்திருக்கும் பணம் தான் அதிக அளவு உள்ளது என்று ஒரு பேச்சு வெகு காலமாக உள்ளது. அமெரிக்க அரசு செய்ததை போல் ஏன் இந்திய அரசும் சுவிஸ் வங்கியிடம் அழுத்தம் தெரிவிக்க கூடாது? மற்ற அனைத்திற்கும் அமெரிக்காவை பின் பற்றும் மன்மோகன் அரசு இதற்கு மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறது. இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஏன் அனைத்து கட்சியினரும் எழுப்ப முற்படவில்லை? மற்ற விஷயத்திற்கு எல்லாம் பத்திரிக்கை தர்மம் பேசி பெரிய பிரச்சனையை கிளப்பும் இந்திய பத்திரிக்கைகள் இந்த அத்தியாவசிய முக்கிய பிரச்சனையில் மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன்?

சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளது பெரும்பாலும் இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும்,மாபியாக்களும் அவர்களின் பிடியில் இருக்கும் பத்திரிக்கை உலகும் தான் என்பது இதன் மூலம் புலனாகிறது. மற்ற பிரச்சனைகளுக்கு பார்லிமெண்ட் மற்றும் இந்தியாவையே ஸ்தம்பிக்க வைக்கும் இடது சாரிகள் இந்த பிரச்சனையில் மட்டும் ஓடி ஒளிவது ஏன்?

அமெரிக்கா தற்போது நடவடிக்கை எடுத்து உள்ளதால், இந்த சந்தர்பத்தை இந்தியா அழகாக பயன் படுத்தி அங்கு பதுக்க பட்டுள்ள இந்திய பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்யலாம். உண்மையிலேயே இந்தியா முயற்சி செய்யுமா? இது பற்றி யார் கவலை பட போகிறார்கள்.


--

Tuesday, February 17, 2009

இந்திய steelகளில் கதிரியக்க(radioactive) பொருட்கள் கலப்படம்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் steelகளில் கதிரியக்க பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.முதலில் ரஷ்யாவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய பட்ட பொருட்களில்(steel) கதிரியக்க அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்க பட்டது.ஒரு வருடத்துக்கு அனுமதிக்கபடும் கதிரியக்க அளவை ஒரே நாளில் இந்திய steelகள் வெளியிடுவது கண்டுபிடிக்கபட்டது.உடனடியாக அது இந்தியாவிற்கு திரும்பி அனுப்பபட்டுள்ளது. அந்த steel முறையாக அழிக்கபட்டுள்ளதா? அல்லது அது இந்திய சந்தையில் விற்க பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

ரஷ்யாவிற்கு அனுப்ப பட்ட steelகளில் மட்டும் இவ்வகை கதிரியக்க பொருள் இல்லை. ஜெர்மனிக்கு அனுப்பபட்ட steelலும் கதிரியக்க பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது. கதிரியக்க பொருட்கள் உடல்நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பவை. இவை கேன்சரை கூட விளைவிக்களாம்.

இந்த செய்தியை நான் இது வரை இந்திய செய்தி தளங்களில் காண வில்லை.இது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. இந்த steelஐ உற்பத்தி செய்த நிறுவனம் மும்பையை சேர்ந்த Vipras Casting.

மேலை நாடுகளில் இது இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு மிகவும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய இறக்குமதியை எதிர்க்கும் லாபிக்கள் இதை முக்கிய ஆயுதமாக எடுத்துள்ளனர்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது- இத்தகைய அபாயகரமான steelகளை மீண்டும் இந்திய மார்க்கெட்டிலேயே லாப நோக்கில் விற்று விட கூடாது.இது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்படுவது அவசியம். இது பற்றிய செய்திகளை ஜெர்மனியின் முக்கிய பத்திரிக்கையான spiegel தலைப்பு செய்தியாக வெளியுட்டுள்ளது குறிப்பிட தக்கது.

--

Thursday, February 05, 2009

சிதம்பரம்- இன்னொரு சுனாமியை தமிழகம் தாங்குமா?

இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிவதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு தற்போது தமிழ் நாட்டில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழர்களையும் கூண்டோடு கைலாசம் அனுப்ப புதிய சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதுவே உண்மையான செய்தி. கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியால் பல்லாயிரம் தமிழ் மக்கள் இறந்தது நினைவிருக்களாம். இந்த துயர சம்பவத்துக்கான காரணத்தை கமல் போன்ற நோபல் பரிசு பெற தவறிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து தசாவதாரம் படத்தில் தெளிவாக விளக்கி உள்ளார். தில்லை வாழ் அந்தணர்கள் கோவிலில் செய்யும் ஆன்மீக பணிகளில் அரசியல்வாதிகள்(சோழ மன்னர்கள் ) தலையிட்டதுதான் சமீபத்திய சுனாமிக்கு காரணம் என்ற அறிவியல் உண்மையை அறிவியல் உலகின் சமீபத்திய கண்டு பிடிப்பான String Theoryயின் மூலம் சிறு குழந்தைக்கும் புரியும் வகையில் கமலகாசன் அவர்கள் நிருபித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு நீதி துறையின் உதவியோடு நடராஜரையும்,கோவிலையும் அங்கு வரும் வருமானத்தையும் தீட்சிதர்களிடமிருந்து விடுவித்து தன் பொறுப்பில் எடுத்து கொண்டுள்ளது. அன்று ஒரு அந்தணரை வெளியேற்றியதற்கே இன்று மாபெரும் சுனாமி தாக்கி உள்ளது. இன்று அனைவரின் அதிகாரத்தையும் பிடுங்கியதால் உலகில் என்ன என்ன அழிவுகள் ஏற்படும் என்பதை கற்பனையில் நினைத்து பார்த்தாலே படு பயங்கரமாக உள்ளது. இதன் விளைவு தமிழகத்தின் அழிவோடு விட்டு விடுமா அல்லது ஒட்டு மொத்த இந்தியா அல்லது உலகத்தையே அழிக்குமா என்பதுதான் இப்போதைய கேள்விகுறியாக உள்ளது. இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஆச்சாரியார்கள் கண்டறிந்து அதை நிறைவேற்றினால் உலகை காக்கும் புண்ணியமாவது கிடைக்கும்.

--

Sunday, February 01, 2009

தேசியவாதிகளை குழப்பும் கார்போரேட்டுகள்

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டினரால் தொடங்கபடும் கம்பெனிகளின் வளர்ச்சிக்கும் அதற்கு சலுகைகளை கொடுத்து அதன் முன்னேற்றத்திற்கும் போராடுவதுதான் பல காலமாக தேசியவாதிகளின் நோக்கமாக இருந்தது. உள் நாட்டு முதலீட்டாளர்களின் வளர்ச்சியால் உள்நாட்டு தொழில் துறை வளர்ந்து, நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் அதற்க்கான காரணமாக இருந்தது. இதில் பெருமளவு உண்மையும் இருந்தது. ஆனால் ஒரு சில உள்நாட்டு தொழில் அதிபர்கள இதையே போட்டியை குறைக்க ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, தனக்கு கிடைக்கும் லாபங்களை அத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு செலவிடாமல், தவறான வழிகளில் தங்களுடைய சொந்த லாபங்களுக்கு பயன்படுத்த தொடங்கினர்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின் வளர்ந்த நாடுகளின் முதலாளிகளால் உலகுக்கு திணிக்க பட்ட உலகமயமாதல் கொள்கை(Globalalization) ,உலக நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் களங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கின.வளரும் நாடுகள் மற்றுமின்றி வளர்ந்த நாடுகளிலும் இந்த மாற்றத்தின் தாக்கம் வெகுவாக இருக்கிறது.தேசியவாதிகளிடம் தற்போது ஏற்பட்டுள்ள மிக பெரிய குழப்பம், உண்மையிலேயே எந்த கம்பனியை தங்களுடைய நாட்டின் கம்பெனி என்று அழைப்பதுதான்.இதில் எதற்கு குழப்பம், இது மிகவும் எளிதான விஷயம் தான் என்று நினைக்கிறார்களா?தற்போது கம்பெனிகளின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்களும் பாருங்களேன். உலகமயமாக்காலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானது பொருளின் உற்பத்தியை எப்பாடுபட்டாவது மலிவாக உற்பத்தி செய்வதும், மூலதனங்கள் நாடுகளின் எல்லையை கடப்பது எளிதானதும் ஆகும்.

பொருளின் உற்பத்தியை மலிவாக்க கம்பெனிகள் செய்யும் முயற்ச்சியால் ஏற்படும் பாதிப்பு பற்றி பார்ப்போம்.ஒரு உற்பத்தி பொருளை சுதேசி பொருள் என்று எப்படி அழைப்பது?அந்த பொருளை உற்பத்தி செய்யும் கம்பெனி துவங்க பட்ட நாடு சொந்த நாடாக இருந்தால் அதை சுதேசி பொருள் என்று அழைப்பதா? அல்லது அந்த பொருளின் உற்பத்தி முழுவதும் அந்நாட்டு தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்து, அந்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் வியாபார பெருக்கம் செய்யும் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்ட கம்பெனிதயாரித்த பொருளை சுதேசி பொருள் என்பதா?. இப்பிரச்சனை அமெரிக்க கார் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தற்போது பெருமளவு வெளியில் பேச தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக போர்டு கம்பெனியின் கார்களின் பெரும்பாலான பகுதிகள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்ய பட்டு, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் இணைக்க படுகின்றன. ஆனால் கம்பெனி அமெரிக்காவை தலமையிடமாக கொண்டுள்ளது.ஒரு சில டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் 85% பகுதிகள் அமெரிக்காவில், அமெரிக்கர்களை கொண்டு தயாரிக்க படுகிறது.அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் வெளி நாட்டினரை வைத்து வெளி நாட்டில் தயாரித்து அமெரிக்காவில் விற்கும் காரை அமெரிக்க கார் என்பதா? அல்லது அமெரிக்கர்களை வைத்து அமெரிக்காவில் தயாரிக்கும் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்ட காரை அமெரிக்க கார் என்பதா?(ஏனென்றால் லாபத்தை தன் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது). இதை படிக்கும் உஙகளுக்கு இதன் விடை தெரிந்தால் அமெரிக்கர்களுக்கு கொஞ்சம் தெரியபடுத்துங்களேன்?.

அடுத்ததாக ஒரு சில கம்பெனிகளை சுதேசி கம்பெனி என்று அரசு பல சலுகைகள் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அந்த நிறுவனம் பலம் வாய்ந்த பன்னாட்டு நிறுவங்களோடு போட்டி போட வேண்டும் என்பதால் அதற்கு பல சலுகைகளை இந்தியா போன்ற நாடுகளின் அரசுகளும் தங்கள் நாட்டு கம்பெனிக்கு பல சலுகைகளை கொடுத்து ஊக்குவிக்கிறது. கம்பெனியும் நன்கு குறிப்பிடதக்க வளர்ச்சியை அடைந்த பின் அதை ஒரே நாளில் மற்றொரு பன்னாட்டு கம்பெனி வாங்கிவிடுகிறது. அதுவரை அதன் வளர்ச்சிக்கு lobby செய்த தேசியவாதிகள் வாயடைத்து போகின்றனர். இதற்கு ரான்பாக்சி கம்பெனி ஒரு நல்ல உதாரணம்.மருந்து உற்பத்தி தொழிலில்(Pharmaceutical) இந்திய திறமைக்கு ஒரு எடுத்துகாட்டாக உலக அரங்கில் பேச பட்டது.அரசும் நேரடியான மற்றும் மறைமுக சலுகைகள் பல அளித்தது. ஆனால் ஜப்பானை சேர்ந்த டெய்ச்சி நிறுவனம் அதை வாங்கிவிட்டது.தற்போது அது ஜப்பானிய நிறுவனமாக ஆகிவிட்டது.

உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடைக்கலமாவது மேற்கண்ட முறையில் மட்டும் இல்லை. சில ஆண்டுகளாக ஏற்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தாலும், உலகமயமாக்களாலும் பல நாடுகளும்(உதாரணமாக அரபு நாடுகள்), தனியாரும் தங்களிடம் உள்ள அளவிட முடியாத செல்வங்களை சொவரைன் முதலீடு மூலமும் பிற வழிகளிளும் சிறிது சிறிதாக நல்ல எதிர்காலம் உள்ளதாக கருத படும் கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.இவை வளரும் நாடுகள் அன்றி வளர்ந்த நாடுகளில் உள்ள சிட்டி குரூப்,UBS போன்ற நிறுவனக்களில் கூட முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது கம்பெனிகளின் பங்குகளில் இவர்களது பங்கு பெரும் பங்கு இல்லை என்றாலும் முடிவுகளை கட்டுபடுத்தும் அளவுக்கு அதிகாரம் உள்ள நிலையை நோக்கி அவை நகர்ந்து வருகிறது.கம்பெனி உள்நாட்டு கம்பெனியாக இருந்தாலும் அதை கட்டு படுத்துவது(நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ) வெளி நாட்டினர் என்றால் அது உள்நாட்டு கம்பெனியா அல்லது வெளிநாட்டு கம்பெனியா என்ற வாக்குவாதம் கூட வர தொடங்கியுள்ளது.

உலகமயமாக்கலாலும், சமீபத்திய பெட்ரோல் விலை ஏற்றத்தால் அதிக பணம் சிலரிடம் சேர்ந்ததாலும், அமெரிக்க நிதி நெறுக்கடியால் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது மதிப்பின் பெரும் பகுதியை இழக்க ஆரம்பித்ததாலும் இது போன்ற குழப்பங்கள் மிக அதிகமாகி பின் வரும் காலங்களில் மிக பெரிய வாதபொருளாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.

நிறுவனங்களின் முதலீட்டளர்களினால் நிறுவனங்களுக்கு மட்டும் இந்நிலை என்றால் பரவாயில்லை. தற்போது மேலை நாடுகளின் அரசும் ஒரு நிறுவனம் போல்தான் செயல்படுகிறது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை ட்ரில்லியன் டாலரை தாண்டி விட்டது. அது தன் பற்றாக்குறையை ஈடுகட்ட சீனா மற்றும் ஜப்பானின் முதலீட்டை தான் நம்பி உள்ளது. அமெரிக்க அரசின் பெரும்பகுதி முதளீட்டாளர்களாக இந்நாடுகள் ஆகி விட்டால், அமெரிக்காவை அமெரிக்க அரசு என்றழைப்பதா? அல்லது ஆசிய அமெரிக்க அரசு என்று அழைப்பதா? என்ற விவாதம் பிற்காலத்தில் வராமல் இருந்தால் நல்லதுதான்!


--