Saturday, October 30, 2010

உலகமயமாதல் இன்றைய நிலை பற்றி Free Market ஆதரவாளர் Friedman

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நடை பெற்றுவரும் உலகமயமாதல் இந்தியாவுக்கு நன்மையா? அல்லது தீமையா? என்று பல விதமாக விவாதங்கள் நடக்கிறது. ஆனால் இது நாள் வரை உலகமயமாதலை வேதமாக ஓதிய அமெரிக்கா தற்போது அதையே சாத்தானாக பார்க்க ஆரம்பித்து உள்ளது.இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் உலகமயமாதல் ஆதரவாளர்கள் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை அடுத்து அதிகம் பேசாமல் இருந்தனர். தற்போது நியூயார்க் டைம்ஸ்ல் Free Market ஆதரவாளரான FRIEDMAN, இதை பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். இந்தியர்களுக்கு உலகமயமாதல் நம்பிக்கையையும் அமெரிக்கர்களுக்கு அவநம்பிக்கையும் தந்துள்ளது(?) பற்றி எழுதி உள்ளார்.

வாரத்திற்கு 35 மணி நேரம் வேலை செய்யும் பிரான்ஸ் காரர்களை நாளைக்கு 35 மணி நேரம் வேலை செய்ய முயலும் இந்தியர்களை பார்த்து நிதர்சனத்தை உணர்ந்து முதலாளித்துவத்தை காக்க உழைக்க அழைக்கும் செய்தி குறிப்பிட தக்கது.Free marketக்கு ஆதரவான பதிவாக இருந்தாலும் அவருடைய பதிவு முதலாளித்துவம் எப்படி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வாழும் மக்களை தங்களின் வளர்ச்சிக்காக exploit செய்ய முயலுகிறதோ என்று அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய பதிவு.

It’s Morning in India

மேம்போக்காக படித்தால் உலகமயமாதல் ஆதரவாளர்களை சந்தோஷ பட வைக்கும் பதிவு.நீங்களும் இங்கு சென்று படித்து பாருங்கள்.

--

Sunday, October 24, 2010

ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி

எந்திரன் படத்தின் சிறப்பு பற்றியும் அதன் வரலாறு காணாத வெற்றி பற்றியும் அனைத்து ஊடகங்களும் பத்திரிக்கைகளும், பதிவர்களும் எழுதி தள்ளி கொண்டு உள்ளனர். அதுவும் அமெரிக்காவில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்து (டைட்டானிக், அவதார் போன்ற படங்களுக்கு சவால் விடும் வகையில்?) வசூலை கொட்டி உள்ளதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆங்கில படங்கள் அமெரிக்கா முழுவதும் பல்லாயிரம் தியேட்டர்களில் வெளியிட பட்டு பெற்ற வசூலை எந்திரன் சில தியேட்டர்களில்(100 க்கும் குறைவான) மட்டும் வெளியிட பட்டு வசூலை குவித்து சாதனை புரிந்திருக்க வேண்டும்.

தற்போது எந்திரன் படம் ஹாலிவுட்டையும் அதனையும் தாண்டி அமெரிக்க அதிபர் வரை கலக்கிய செய்தியை யாரும் வெளியிட வில்லை.நம்ப முடியவில்லையா? ஆனால் அது தான் உண்மை!அமெரிக்க வரலாற்றில் இது வரை இல்லாதவாறு, முதன் முதலாக ஒரு வளரும் நாட்டு படம் வசூல் சாதனையில் முதலிடம் பிடித்தது ஒபாமா காதுக்கு போகாமலா இருக்கும்?. இந்த செய்தியை கேட்டதும் முதலில் அவர் அதிர்ந்து போயிருக்கிறார். ஏற்கனவே உற்பத்தி தொழில் வேலை வாய்ப்புகள் சீனாவுக்கும் சேவை தொழில் வேலை வாய்ப்புகள் இந்தியாவிற்கும் சென்று கொண்டிருப்பதால் அமெரிக்க வேலை வாய்ப்பு குறைவதோடு இறக்குமதி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கால கட்டத்தில் அமெரிக்கா, உலகுக்கே பெரிய அளவில் ஏற்றுமதி செய்து வரும் தொழில் ஹாலிவுட் படங்களாக தான் இருக்கும்(ஆயுதம் மற்றும் மென்பொருள் புராடெக்ட்ஸ் தவிர). தற்போது தமிழ் படத்தால் அதற்கும் ஆப்பு வந்து விட்டதால் அவுட்சோர்சிங்க்கு தடை விதிப்பது போல் தமிழ் படத்துக்கும் தடை விதிக்கலாமா என்று யோசித்து வருவதாக தெரிகிறது.இவ்வாறு தடை விதித்தால் உண்மையான நஷ்டம் அடைய போவது படத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்காத அமெரிக்க ரசிகர்கள் தான்!

இந்த தடை Sun Picturesக்கு படத்துக்கு மட்டும் பொருந்துமா? அல்லது ரஜினி படத்துக்கு மட்டும் பொருந்துமா என்று தெரியவில்லை. எப்படியும் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும் போது தன் எதிர்ப்பை தமிழக அரசு நிச்சயம் தெரிவிக்கும் என்று தெரிகிறது..(இந்த படத்தின் உண்மையான வெற்றிக்கு காரணம் ஐஸ்வர்யா ராய் கட்டியிருந்த சேலையின் அழகு தான் போன்ற உண்மைகளை ஞானி போன்றவர்கள் அமெரிக்க அதிபருக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும்.).

இது ஒருபுறமிருக்க அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் எந்திரன் வெற்றியால் அரண்டு போய் உள்ளனர். என்னடா இது பன்னாட்டு கம்பெனியிக்கும் எந்திரன் வெற்றிக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கீறிற்களா? பன்னாட்டு கம்பெனியினர் தங்களது நுகர்வு கலாச்சாரத்தை வளரும் நாடுகள் மீது திணிக்க ஹாலிவுட் படங்களை தான் முக்கிய ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள். தற்போது எந்திரன் வெற்றி ஹாலிவுட்டை மட்டுமல்லாமல் உலகையே ஒரு ஒரு கலக்கு கலக்கி உள்ளது. இனி ஹாலிவுட் படங்களை தமிழ் படங்களோடு போட்டி போட முடியுமா என்று சந்தேகம் தலை தூக்கி உள்ளது.

இனி தமிழ் படங்கள் ஹாலிவுட்டை ஆக்கிரமித்தால் வளரும் நாடுகளுக்கு தங்கள் கலாச்சாரத்தை திணிக்க வேறு ஒன்றை தேட வேண்டுமே என்ற கவலையில் இருக்கிறார்கள்.(சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஹாலிவுட் நிறுவனக்களை விட அழகாக இந்த வேலையை செய்யும் என்று யாரோ கூறுவது கேட்கிறது) அவர்கள் கவலை அடைவதோடு நிற்காமல் தமிழ் படங்களை உலகளவில் தடை செய்ய ஒபாமாவுக்கு தங்களது பலம் வாய்ந்த லாபிகள்(lobby) மூலம் முயன்று வருகிறார்கள். அமெரிக்காவில் கூடிய விரைவில் தேர்தல் வருவதால் அதிபருக்கு கிடைக்கும் அழுத்தத்தின் அளவும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்கா என்றால் முதலாளித்துவம் தானே. லாபத்துக்காக எந்த மாற்றத்தையும் உடனடியாக உணர்ந்து கொண்டு செயல் படுபவர்கள் தானே அமெரிக்க முதலாளிகள். தமிழ் படங்களின் இந்த அசுர வளர்ச்சியை கண்டு ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் டைரக்டர்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் வீடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். உதாரணமாக கடுமையான முயற்சிக்கு பிறகு ஹாலிவுட்டின் முன்னனி நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் தமிழ் இயக்குனர் முருகதாசை வளைத்து விட்டது.

இது ஒருபுறமிருக்க இந்த வருட ஆஸ்கார் விருது தங்களுக்கு கிடைக்கும் என்று தவம் இருந்து கொண்டிருந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் நினைப்பில் எந்திரன் படத்தின் ஆங்கில் 3-D பதிப்பு மண்ணை வாரி போட்டு விட்டது. ஒட்டு மொத்த ஆஸ்கார் விருதுகளையும் எந்திரன் வாங்கி குவிக்க போவதை பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கை தட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டு விட்டனர் ஹாலிவுட்டின் முன்னனி கலைஞர்கள்!.

அது மட்டுமல்ல அவதார் படத்தின் அடுத்த பாகத்தை எப்படி எடுக்கலாம் என்று ஜேம்ஸ் கேமரூன் நினைத்திருந்தாரோ அதே ஓட்டத்தில் அதைவிட சிறப்பாக எந்திரன் வெளிவந்து விட்டதை கண்டு அதிர்ந்து போய் உள்ளார் கேமரூன். சாதாரணமாக ஒரு படம் எடுக்க பல வருடங்கள் சிந்திக்கும் கேமரூன், தன் சிந்தனை எல்லாம் செயல் வடிமாக எந்திரன் வெளிபடுத்தி விட்டதால் புது கதை பற்றி சிந்தித்து படம் எடுக்க இன்னும் பல காலம் பிடிக்கும்.

இதைவிட முத்தாய்ப்பான செய்தி Massachusetts Institute of Technologyயின் Robotics and Artificial Intelligence துறை தலைவர் கூறியிருக்கும் செய்தி. பல ஆண்டுகளாக Artificial Intelligence பற்றி மண்டையை பிய்த்து கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தவரின் பல கேள்விகளுக்கு எந்திரன் படத்தில் ரஜினி காந்த் செய்யும் ஆராய்ச்சியை பார்த்த பின்பு விடை தெரிந்து விட்டதாம். ஆக எந்திரன் ஒரு படம் அல்ல. பல்கலைகழகங்களுக்கே வைக்க வேண்டிய பாடம் இதே பல்கலை கழகத்தை சேர்ந்த Disaster Management Instituteஇன் பேராசிரியர்கள் சுனாமிக்கான மூல காரணத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறிய போது, கமலின் தசாவதாரம் படம் மூலம் தில்லை வாழ் அந்தணர்களை சோழ மன்னன் கொடுமை படுத்தியதும், நாராயண மூர்த்தியை கடலில் போட்டதும் தான் சுனாமிக்கான மூல காரணம் என்பதை String Theory மூலம் அறிவியல் பூர்வமாக நிருபித்து அறிவியல் அறிஞ்சர்களிடம் பாராட்டை பெற்றது உங்களுக்கு நினைவிருக்களாம்.

உலகம் முழுதும் இவ்வாறாக எந்திரன் கலக்கி கொண்டு இருந்தாலும் இந்தியாவில் டிக்கெட் விலை காரணமாக ஏழை மக்களால் இந்த படத்தை பார்க்க முடியவில்லை. இன்றைய தேதியில் எந்திரன் படத்தை பார்க்காதவர்களை பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை பார்ப்பது போல் கேவலமாக பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எந்திரன் படத்தை பார்ப்பதையும் இன்றைய உணவு, தொலைகாட்சி போன்று அடிப்படை தேவையாக மாறி உள்ளதால் தமிழக அரசு மொத்தமாக மார்க்கெட் விலைக்கு எந்திரன் டிக்கட்டுகளை வாங்கி மானிய விலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு டிக்கெட் என்று ஏழைகளுக்கு வினியோகிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

ரஜினி காந்த இவ்வாறாக ஹாலிவுட்டையே கலக்கி தமிழக சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலிருந்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்து விட்டார் என்றால் பொய்யாகாது.

பின் குறிப்பு: எல்லோரும் எந்திரன் பற்றி பெரிதாக பில்ட் அப் கொடுத்து எழுதுகிறார்களே. நானும் முயன்றால் என்ன? என்று நினைத்ததால் தான் இந்த பதிவு. பெரும்பான்மையான செய்திகள் கற்பனை தான்(இதை போடா விட்டால் இதையும் உண்மை செய்தியாக வலையுளகில் உலா வந்து விட போகிறது என்ற பயம்?). எந்திரன் படம் பார்த்தேன் கிராபிக்ஸ் நிச்சயம் உலக தரத்தில் இருந்தது.

--

Sunday, October 17, 2010

Food Inc -விவசாயமும் உணவு சார்ந்த தொழிலிலும் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம்

உணவு உற்பத்தி, உணவு பதபடுத்துதல் மற்றும் உணவை சந்தை படுத்தும் தொழில் ஒரு சில கம்பெனிகளின் கைக்கு சென்றதால் அமெரிக்காவில் ஏற்படும் பிரச்ச்னைகள் பற்றி விளக்கும் அழகிய படம் இது.


முதல் பகுதி அமெரிக்கவில் துரித உணவு எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அதன் விளைவுகளை பற்றியும் அளசுகிறது. அமெரிக்காவில் McDonalds போன்ற துரித உணவு கூடங்கள் மக்களின் உணவு தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறது. அவர்களிடம் உள்ள உணவுகளை தயாரிப்பதற்கும் தொழிற்சாலை முறையை பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு தொழிலாளியும் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அதன் விளைவு எளிதாக வேறு ஒருவரை அந்த வேலைக்கு மாற்ற முடியும் .எனவே சம்பளம் குறைவாக கொடுத்தால் போதுமானது. இந்த விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சில துரித உணவு நிறுவனங்கள் அமெரிக்காவின் பெரும்பான்மையான மாமிசம்(மாடு, கோழி, பன்னி) போன்றவற்றை வாங்குகிறார்கள். எனவே அவர்களுக்கு இத்தகைய பொருட்களை வினியோகிக்க பெரிய நிறுவனங்கள் தேவை படுகிறது. மேலும் அனைத்து பொருட்களின் சுவையும் ஒன்றாக இருக்க வேண்டும். அதன் விளைவு, இந்த மாமிச வினியோகம் என்பது ஒரு சிலரின் கைக்கு சென்று விட்டது.

பல்வேறு விவசாயிகள் மாமிசத்தை உற்பத்தி செய்தாலும் அதை வாங்க போவது இந்த ஒரு சில நிறுவனங்கள் தான். அதன் விளைவு ஒட்டு மொத்த மாமிச தொழிலையும் இந்த நிறுவனங்கள் கையில் உள்ளது. அதாவது தற்போது விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் கோழியை உரிமை கொண்டாட முடியாது. இக்கம்பெனிகள் கொடுக்கும் கோழியை இவர்கள் வளர்த்து கொடுக்க வேண்டியதுதான்.

அதாவது இந்தியாவில் சுகுணா கோழி நிறுவனம் செய்வது போல்.

இந்தியாவிலாவது கோழியை வெளி சந்தையில் விற்கலாம். ஆனால் அமெரிக்காவில் ஒட்டு மொத்த வினியோக உரிமையும் இந்த ஒரு சில நிறுவனங்கள் கையில் உள்ளதால், இந்த நிறுவனங்களை எதிர்த்து தனியே கோழியை உற்பத்தி செய்தாலும் அவற்றை பெரிய அளவு வாங்க யாருமே இருக்க மாட்டார்கள். அதன் விளைவு விவசாயிகள் இந்த நிறுவனங்களின் அடிமையாக மாற தொடங்கி விட்டார்கள்.

ஒரு சிறிய கோழி பண்ணை ஆரம்பிக்க ஆகும் செலவு சுமார் $3,00,000. ஆனால் அதை ஆரம்பித்தவுடன் இந்த கம்பெனிகள் அந்த பண்ணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பல்லாயிரம் பெருமான இயந்திரங்களையும், மாற்றியமைப்புக்கும் செலவு செய்ய கூறுவார்கள். விவசாயிகளுக்கோ வேறு வழி இல்லை. செலவு செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் கம்பெனியுடனான ஒப்பந்தம் ரத்து செய்ய படும். அதன் விளைவு விவசாயி கடனாளியாக மாறுகிறார். ஆனால் அவர்களது வருமானமோ $10000 மட்டும் தான்!
1970களில் முதல் ஐந்து மாமிச பதபடுத்துவோர் 25% சந்தையையை மட்டும் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது முதல் 4 கம்பெனிகள் 80% சத சந்தையை தன்னகத்தே கொண்டு உள்ளது!



அடுத்து மக்காசோளம் விவசாயத்தை பற்றி விளக்குகிறது. அமெர்க்கவில் கடைகளில் விற்கும் பெரும்பாலன உணவு பொருட்கள் சோளத்திலிருந்து தயாரிக்க பட்டதாகத்தான் இருக்கும். ஆடுமாடுகளுக்கு உணவாகவும் சோளம் தான் அதிக அளவு இருக்கிறது. எனவே மிக பெரிய கம்பெனிகள் சோளத்தை குறைந்த விளைக்கு வாங்க அரசாங்கத்திடம் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி சோளம், சோயா போன்ற விவசாய் பொருட்களுக்கு அதிக மானியம் பெற்று தருகிறார்கள். அதன் விளைவு அவர்களால் தானியங்களை உற்பத்தி விளையிலிருந்து மிக குறைவான விளைக்கு வாங்க முடிகிறது( இந்தியாவில் உர மானியம் போன்றவற்றால் தானியங்கள் விலை ஒரளவு குறைவாக சந்தையில் அரசால் வாங்கபட்டு பொது வினியோக முறைபடி குறைந்த விளைக்கு ஏழைகளுக்கு விற்க படுகிறது. ஆனால் அமெரிக்காவிலோ அந்த லாபம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தான் போகிறது)

அதன் விளைவு, உலக சந்தையில் தானியத்தின் விலை குறைவாக உள்ளது. இது நல்லது தானே என்று நீங்கள் நினைக்க கூடும் . ஆனால் இந்த செயற்கையான மலிவான தனிய உற்பத்தியை எதிர்த்து போட்டி போட முடியாமல் ஏழை ஆப்ரிக்க நாட்டு விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட தொடங்கி உள்ளனர். அதன் விளை இந்த நாடுகளில் பசியும் பட்டினியும் தலை விரித்து ஆடுவதோடு இல்லாமல் எப்போதும் உணவுக்கு மேலை நாடுகளை நோக்கி கையேந்த வேண்டி உள்ளது.

குறைந்த இடத்தில் அதிக கல்நடைகளை உற்பத்தி செய்ய தொழிற்சாலை முறை இருப்பதால் அதிக சுகாதாரம் இன்மை காணபடுகிறது. மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் வகை E.Coli பாக்டீரியாக்கள் உணவு பொருளில் கலந்து விடுகிறது. இதை தடுக்க அரசு இது போன்ற தொழிற்சாலைகளில் தணிக்கை செய்து இந்த பாக்டிரியாக்கள் அதிகம் இருக்கும் தொழிற்சாலையை மூட அதிகாரம் கேட்டு புதிய சட்டம் இயற்ற முயன்றால் பணம் படைத்த பன்னாட்டு கம்பெனிகளின் பணபலத்தால் அது தடுக்க பட்டுள்ளதையும் காட்டுகிறார்கள்.

அது மட்டுமன்றி இது போன்ற தொழிலை கட்டு படுத்தும் அரசின் அமைப்புகளுக்கு இந்த நிறுவங்களின் அதிகாரிகளையே தலைவர்கள் ஆக நியமித்து ஒட்டு மொத்த அமைப்பையே கடந்த 25 ஆண்டுகளாக சிறிது சிறிதாக கேளிகூத்தாக ஆக்க தொடங்கி உள்ளனர்.


இந்த துரித உணவகங்களில் விற்க படும் உணவுகளும் ஆரோக்கியம் குறைந்ததாக உள்ளது. அதன் விளைவு மக்கள் அதிக அளவு நோய்வாய் படுகின்றனர். அரசும் தானியங்களுக்கு கொடுக்கும் மானியத்தை போல் காய்கறி மற்றும் பழம் போன்றவற்றிற்கு கொடுப்பத்தில்லை. எனவே குறைந்த வருமானம் பெருவோர், இது போன்ற துரித உணவு வகைகளையே வாழ்நாள் முழுதும் உண்கிறார்கள்.

ஆனாலும் ஒரு சில கம்பெனிகள் ஆர்கானிக் உணவு பொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். இந்த உணவு பொருட்களை மக்களும் விரும்பி உண்ண ஆரம்பித்த உடன் இது போன்ற ஆர்கானிக் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளை பன்னாட்டு கம்பெனிகள் வாங்க தொடங்கி விட்டனர்.

இந்த படத்தை பார்த்து கொண்டு இருக்கும் போது வினவின் தளத்தில் உள்ள இந்த பதிவை பார்த்தேன். இந்த பதிவில் அவர்கள் கூறியிருக்கும் செய்தியும் இந்த படத்தில் வரும் செய்தியும் அப்படியே ஒத்து போய் உள்ளது.

இது போன்ற பிரச்ச்னைகள் தற்போது இந்தியாவிலும் வர தொடங்கி உள்ளது. வரும் முன் காப்பதே நலம்!

அடுத்தது தான் மிக முக்கியமான பகுதி. அது விவசாய விதை உற்பத்தியில் மான்சான்டோவின் பங்கு பற்றியது. அது பற்றி மருதம் தளத்தில் தனி பதிவிடுகிறேன்

--

Wednesday, October 13, 2010

ஆங்கிலம் - தமிழ் மொழி பெயர்ப்பு Widget

தமிழ் நமக்கெல்லாம் தாய்மொழியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் உள்ள பல வார்த்தைகளுக்கு தமிழில் மொழி பெயர்ப்பு நமக்கு சரியாக தெரிவதில்லை. அதுவும் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த கலை சொற்களுக்கு ஏற்ற தமிழ் வார்த்தைகளை கண்டு பிடிப்பதும் மிகவும் கடினம். தமிழில் பதிவிடும் போது பல ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை தேடியே அலுத்து போய் ஆங்கில வார்த்தையையே உபயோகிப்பது உண்டு.

அப்போது எல்லாம் ஒரு நல்ல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றும் அகராதி இணையத்தில் இலவசமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். அதையே அவர்கள் இனைய சேவையாக(Web Service) கொடுத்தால் எவ்வாறு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.அதிர்ஷ்டவசமாக இன்று அண்ணா பல்கலைகழகம் உண்டாக்கியிருக்கும் இந்த தளத்தை பார்த்தேன்.ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து தரும் அகராதியை இணையத்தில் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.வார்த்தைகளின் அர்த்தம் மட்டுமல்லாது அது சம்பந்தான திருக்குறளையும் கொடுத்துள்ளனர்.அண்ணா பல்கலைகழகத்தின் இந்த் சேவை மிகவும் பாராட்டதக்கது.

ஆனால் அவர்கள் இணைய சேவையாக தரவில்லை. ஒவ்வொரு முறையும் அந்த தளத்திற்கு சென்று வார்த்தைகளின் தமிழ் அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு பதில் அதையே நமது தளத்தில் வைத்து கொண்டால் எப்போதும் உபயோகபடுத்துவது எளிதாக இருக்கும் அல்லவா? எனவே அதையே Widget ஆக நான் உருவாக்கி இருக்கிறேன். இந்த தளத்தின் வலது புறத்தில் அது உள்ளது. அதை நீங்கள் வேண்டுமானாலும் உங்கள் தளத்தில் எளிதாக இணைத்து கொள்ளளாம்.

இந்த எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றிய உங்களது ஆலோசனையும் வரவேற்க்கபடுகிறது.

பின் குறிப்பு: Web Serviceக்கு இணையான வார்த்தை இணைய சேவை என்பதை இந்த அகராதி கொண்டுதான் கண்டு பிடித்தேன்!

--

Tuesday, October 12, 2010

அரசாங்கங்களுக்கு ஆப்பு வைக்க போகும் Google Price Index

பொதுவாக நாட்டில் விலைவாசி ஏற்றம் எந்த அளவு உள்ளது அன்று அறிய மத்திய அரசுகள் வெளியிடும் பண வீக்க மதிப்பீடு மட்டுமே ஒரு அளவுகோளாக இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயத்தில் அரசு வெளியிடும் பணவீக்க அளவு குறைவாக இருந்தாலும் உண்மையில் விலைவாசை ஏற்றம் அதிகமாகவே இருக்கும். அரசு பணவீக்க மதிப்பை குறைத்து காட்டுவதன் மூலம் மக்களிடையே அரசின் மீது ஏற்படும் அதிருப்தியை சிறிது குறைக்க முடியும்.

இந்தியா போன்ற நாடுகளின் பண வீக்க மதிப்பீடே ஒரு காமெடியானது. இங்கு மொத்த விலையை பொருத்தே பணவீக்க மதிப்பு இருக்கும்(Wholesale Price index). மக்கள் பொருளை வாங்கும் போது கொடுக்கும் விலை எடுத்து கொள்ள பட மாட்டாது(Consumer Price Index). அது மட்டுமன்றி பணவீக்கத்தின் கணக்கீட்டிற்கு எடுத்து கொள்ளும் பொருட்கள் பலவற்றின் தேவையே தற்போது மக்களிடம் இருக்காது.

தற்போது இணைய வழி வர்த்தகம் வளர்ந்த நாடுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. கூடிய விரைவில் வளரும் நாடுகளிளும் இது அதிக முக்கியத்துவத்தை பெற போகிறது. எனவே பொருட்களின் உண்மை விலையை துள்ளியமாக இணையத்திலிருந்து அதுவும் பல தளங்களிளிருந்து பெருவது சாத்தியமே. அதை பயன் படுத்தி கூகிளில் வேலை பார்க்கும் பொருளாதார நிபுணர்கள்(திரு.Hal Varian) Google price Index என்னும் புதிய பணவீக்க மதிப்பீட்டு முறையை உருவாக்கி உள்ளார்கள்.

இது அரசாங்கம் பண வீக்கத்தை கண்டறிய கணக்கில் எடுத்து கொள்ளும் பொருட்களை மட்டும் கணக்கில் எடுக்காமல் மக்களின் உபயோகத்தை பொருத்து வேறு வகை பொருட்களை கணக்கில் எடுத்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது கூகிள் இந்த பண வீக்க அளவுகளை வெளியிடுவதா? வேண்டாமா? என்று முடிவு செய்யவில்லை.இந்த முடிவுகளை வெளியிட தொடங்கினால் அதன் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும். கூகிள் நேர்மையான முறையில் இந்த கணக்கிட்டை செய்தால் (ஓரளவு) உண்மையான பணவீக்க மதிப்பீடை மக்கள் அறிவார்கள். அதே சமயம் இதையே தவறாக உபயோக படுத்த நினைத்தால் உலக நாடுகளில் தனக்கு பிடிக்காத அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்த புள்ளியியல் மதிப்பை உயர்த்தி/தாழ்த்தி கூட துஷ்பிரயோகம் செய்யலாம். எப்படியும் மக்களுக்கு இது ஒரு மாற்று அளகாக இருக்கும்.

தற்போது மீடியாக்களில் மிக சிறிய செய்தியாக வந்து இருந்தாலும் பிற்காலத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போவது என்னமோ உண்மைதான்!

--

Sunday, October 10, 2010

Capitalism:A Love Story திரை விமர்சனம்

மைக்கேல் மூர் படம் என்றாலே சமூகத்தில் நிகழும் அவலங்களை மிக ஆழமாக கூறுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த படத்தில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப முதலாளித்துவத்தின் தீய விளைவுகள் பற்றி அழகாக கூறியுள்ளார். சோவியத் இருந்த வரை கம்யூனிசம் அல்லது மக்களாட்சி ஆகிய இரண்டு மட்டும் வாத பொருளாக இருந்தது. அப்போது முதலாளித்துவம் என்பது மக்காளாட்சியின் போர்வையில் ஓரளவு கட்டுபாட்டிலும் இருந்தது.

ஆனால் சோவியத் வலுவிழக்க ஆரம்பித்தவுடன், முக்கியமாக ரீகன் மற்றும் தாட்சர் ஆட்சியில் முதலாளித்துவத்தின் தாக்கம் மக்களாட்சியில் அதிகம் ஏற்பட ஆரம்பித்தது. அரசாங்கம் என்பது மக்கள் நன்மைக்காக கட்டுபாடுகளை நடைமுறைபடுத்துவது மக்களாட்சியாகவும், அரசாங்கமே அனைத்தையும் எடுத்து நடத்துவது சோசியலிசமாகவும் இருந்தது. ஆனால் சோவியத் யூனியன் மறைவிற்கு பின் உண்மையான மக்களாட்சி என்பது சோசியலிசம் போலவும் அதற்கு மாற்றாக முழு முதலாளித்துவமும் உள்ளது போன்ற நிலை ஏற்பட தொடங்கியது. மக்கள் நலனுக்காக அரசு தனியார் மீது விதிக்கும் கட்டுபாட்டுகள் அகற்றபடுவதால் ஏற்படும் விளைவுகளை உணர்ச்சி பூர்வமாக கூறி மக்களின் மனதிற்கு எடுத்து சென்று உள்ளார். ஆனால் தன் கருத்துக்களின் ஆழத்தையும் அதன் பின்னனி மற்றும் ஆதாரங்களையும் இன்னும் தெளிவாகவே விளக்கி இருக்கலாம் என்பதே என் கருத்து.



இப்படத்தில் அமெரிக்காவின் அரசு அதிகாரத்தில், முடிவுகளை எடுக்கும் அதிகாரத்திற்கு எந்த அளவு நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் பங்களிப்பு ரீகன் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என்று கூறியுள்ளார். வால் ஸ்ட்ரீட்டிலிருந்து மெயின் ஸ்ட்ரீட்டிற்குள் புகுந்து எவ்வாறு தங்களுக்கு தேவையான சட்டங்களை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்று அழகாக கூறியுள்ளார். இந்த நிகழ்வின் பெரும் பகுதியை நடத்திய கிளிண்டன் நிர்வாகத்தை பற்றி அதிகம் கூறாதது அவருடைய மனதில் உள்ள டெமாக்ரெட்ஸ் மீது உள்ள அபிமானத்தை காட்டுகிறது !பாதிக்க பட்ட மக்களிடம் பேட்டி எடுத்து , பாதிக்கபட்ட நிகழ்வுகளை காட்டி(முக்கியமாக வீடுகளை இழந்த) உணர்வு ரீதியாக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் விமானியின் ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு $20000 தான் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.ஜன்னல் செய்யும் நிறுவனம் மஞ்சள் நோட்டீசு கொடுத்த பின் அதில் பாதிக்க பட்ட தொழிலாளிகள் நியாயமான இழப்பீடுக்காக போராடிய விதம் நெஞ்சை தொடுவதாக உள்ளது.இந்த நிதி நெருக்கடி முடிவுக்கு வந்தபின் மிக பெரிய மான்ஸ்டராக வளர்ந்து இருக்க போகும் நிதி நிறுவனங்கள் பற்றி அவர் கூறுவது அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய அதிர்ச்சிகரமான உண்மை. இது பற்றி முன்பு பல பதிவுகள் எழுதி உள்ளேன்.

லெஹ்மேன் பிரதர்ஸின் வீழ்ச்சிக்கு பிறகு, மிக பெரிய நிதி நிறுவனங்களை காப்பாற்ற செனட்டர்கள் எப்படி நிர்பந்திக்க பட்டார்கள் என்ற செய்தியையும் விளக்கி உள்ளார். நிதி நிறுவனங்களை கட்டு படுத்தும் அமைப்புகளின் தலைவர்களுக்கும் நிதி நிறுவனங்களுக்குமேயான தொடர்பையும் அழகாக காட்டி உள்ளார்

இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு முதலில் மனதில் தோன்றியது இந்தியாவில் தற்போது மிக முக்கியமாக தேவை படும் உண்மையான தொழிலாளர்களின் யூனியனின் அவசியம். அமெரிக்காவில் ரீகன் காலத்திலிருந்து systemically யூனியன்கள் சிறிது சிறிதாக அழிக்க பட்டு விட்டது. தற்போது அவர்களுக்கு நியாயமான உரிமைகள் மறுக்கபடும் போது இணைந்து போராடுவதற்கான கட்டமைப்பே அவரகளிடம் இல்லை. அதே சமயம் மீடியாக்கள் முழுதும் ஒரு சில செல்வந்தர்கள் கையில் இருப்பதால் தொழிலாளர்களின் உண்மை நிலை ஒட்டு மொத்தமாக வெளி உலகுக்கு தெரியாமல் இருட்டடிக்க படுகிறது.இந்தியாவிலோ தற்போது ஒருபுறம் தொழிலாளர்களின் உரிமையை காப்பற்ற வேண்டியவர்கள் முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து யூனியன்களின் செயல்பாட்டையே கேலி கூத்தாக்குகிறார்கள். மறுபுறம் அரசாங்கங்கள் தொழிலாளர்களின் போராட்ட உரிமையை சிறிது சிறிதாக சட்டம் மூலம் பறித்து கொண்டு உள்ளார்கள்.

கம்யூனிஸ்டுகள் அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு எதிராக போராடிய திறனில் நூற்றில் ஒரு பகுதியாவது இந்தியாவில் உள்ள தொழிலாளிகளின் நலனுக்கு ஆதரவாக அல்லது ஏழைகளின் நலனுக்காக செலவிட்டார்களா என்பது கேள்வி குறியே.மேற்கு வங்காளத்தில் அவர்கள் நடத்தும் ஆட்சி பற்றி எதுவும் கூற வேண்டியது இல்லை. மற்ற கட்சியை பற்றி கூறாமல் கம்யூனிஸ்டுகளை பற்றி மட்டும் ஏன் கூறுகிறேன் என்றால் ஒடுக்க பட்ட மக்களுக்கு ஆதராவாக ஒரு இயக்கம் தோன்றுவது மிக மிக கடினம். அதையெல்லாம் மீறி ஒரு இயக்கம் தோன்றி விட்டால், ஒட்டு மொத்த ஒடுக்க பட்ட மக்களின் பார்வையும் அவர்கள் பக்கமே செல்லும். அந்த இயக்கங்களின் தலைமை ஒரு சில சுயநல கும்பலிடம் மாட்டி விட்டால் அந்த இயக்கங்களின் அடிமட்ட தொண்டர்கள் உண்மையானவர்களாகவும், தலைமை அவர்களின் சக்தியை வீணடித்து , போராட்டதை மழுங்கடித்து விடுவர். மக்களின் உண்மையான தேவையை திசை திருப்பி, குறைந்த முக்கியத்துவம் உள்ள பிரச்ச்னையை மக்கள் முன் பூதாகரமாதாக்குவார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளின் பொலிட்பீரோவிற்கு அடி மட்டத்திலிருந்து உழைத்து முன்னிரியவர்கள் செல்வதை விட வங்கி மற்றும் காப்பீடு துறையில் உள்ள புரோக்கர்கள் ஆதிக்கமும் theoritically கம்யூனிசம் படித்து மேல் தர வர்க்கத்திலிருந்து(உயர் நடுத்தர) வந்தவர்கள் ஆதிக்கமும் அதிகமாவது கூட இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இதன் விளைவாக பிற்காலத்தில் அது போன்ற எந்த இயக்கத்தையும் மக்கள் நம்ப மறுப்பார்கள். அது அவர்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

இந்த படம் நமக்கு கற்று கொடுக்கும் பாடம் - நாட்டிற்கு உடனடி தேவை தொழிலாளர்கள் நலனை பேனி பாதுகாக்க கூடிய உண்மையான தொழிற்சங்கங்களும் அவர்களின் உரிமையை நிலை நிறுத்த தேவையான சட்ட திட்டங்களும் தான்.சந்தை மற்றும் நிதி நிர்வாக அமைப்புகளின் மீது அரசின் கண்காணிப்பின் தேவையும் கட்டுபாடும் எவ்வளவு அவசியம் என்பது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு புரியும். நாட்டின் பொருளாதாரத்தை சூதாட்ட களமாக மாற்றிய நிறுவனக்களுக்கு இந்தியாவிலும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நமது பிரதமர் கூறி வருவதை அனைவரும் கவனிக்க வேண்டும்.

--

Sunday, October 03, 2010

உல்லாச தலைநகரம் லாஸ் வேகஸ் -3 - சூதாட்டங்கள்

லாஸ் வேகாஸ் என்றவுடனே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது சூதாட்டம், மது ,மாது மற்றும் மாமிசம். சூதாட்டத்தில் உலக அளவில் சில காலம் முன்பு வரை முதலில் இருந்தது இந்த நகரம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகளாவிய பன்னாட்டு வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் நூதனமான பல புதிய LIVE சூதாட்டங்களை அறிமுகபடுத்தி , சூதாட்டத்தின் மதிப்புகளும் டிரில்லியனை தாண்ட வைத்து நியூயார்க் நகரை சூதாட்டத்தின் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டர்கள்.

நெவேடா மாகாணத்தில் விபச்சாரம் ஒரு சில இடங்களில் அனுமதிக்க பட்டு இருந்தாலும் லாஸ்வேகாஸ் பகுதியில் அதற்கு அனுமதி இல்லை. இது சட்ட படி மட்டுமே. ஆனால் அங்கு தெருவெங்கும் மக்களுக்கு விபச்சாரத்துக்கு விசிட்டிங் கார்டு கொடுத்து அழைப்பவர்கள் ஏராளம். இந்த சட்டத்திற்கு புறம்பான நிகழ்ச்சி மறைமுகமாக நடைபெறுவதில்லை. நேரடியாகவே அனைத்து தெருக்களிலுமே நடைபெறுகிறது. ஆனால் இந்த தொழில் மிக பெரிய மபியாக்களின் கட்டு பாட்டில் உள்ளதால் அந்த விடுதிகளுக்கு செல்லும் மக்களின் உடமைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண நடன நிகழ்ச்சிகள் அனைத்து பெரிய விடுதிகளிளும் நடக்கும். அது மட்டுமன்றி ஒரு சில காசினோக்கள் நள்ளிரவு ஆப் சீசன் நேரங்களில் இது போன்ற நடனங்களை இலவசமாக சூதாடும் இடங்களில் நடத்தி வாடிக்கையாளர்களை இழுப்பதும் உண்டு.





தண்ணீர் பிரச்சனை இல்லாத ஒரு பாலைவனம் உண்டு என்று சொன்னால் அது லாஸ்வேகாசாக தான் இருக்கும். இங்கு அனைத்து வகை மது பாணங்களும் கிடைக்கும். வித்தியாசமான கோப்பைகளில் கிடைக்கும் மார்க்கரிட்டா இங்கு பிரபலம்

உணவு இங்கு மிக பிரபலம். ஒவ்வொரு விடுதியும் buffet வகை உணவை வைத்திருக்கும். அது மட்டுமன்றி பல வகையான சிறப்பு உணவுகளுக்குகான உணவு விடுதிகள் பல ஒவ்வொரு விடுதியிலும் இருக்கும். buffetல் உலகில் உள்ள அனைத்து வகையான உணவு(சீனா,மலசியா,தாய்லாந்து,ஜப்பான்,கொரியா,இத்தாலி,இங்கிலாந்து,பிரான்ஸ்,மெக்சிகன் ,american) வகைகளும் வைக்க பட்டிருக்கும். உணவு பிரியர்களுக்கு இது ஒரு நல்ல வர பிரசாதம்.

சூதாட்ட விடுதியில் நீங்கள் 1 செண்டு முதல் பல்லாயிரம் வரை வைத்து சூதாட்ட வசதி உள்ளது( மகாபாரதத்தில் வருவது போல் நாடு,நகரம் போன்றவற்றை வைத்து சூதாட வசதி உள்ளதா என்று தெரியவில்லை!). அங்கு இருக்கும் slot Machineகளில் 1 செண்டு முதல் சில டாலர் வரை வைத்து சூதாடலாம். குறைந்த முதலீட்டில் விளையாட வாய்ப்புள்ளதால் பெரும்பாலானோர் இதை தான் விரும்புவார்கள். ஸ்லாட் இயந்திரங்களில் பல வகை உள்ளது. அவற்றில் முக்கியமானது எண்கள்/எழுத்துக்கள் சுத்தும் வகை தான். அதாவது ஒவ்வொரு முறை விளையாடும் போதும் 3 - 5 row-க்களில் எண்கள் சுழன்று கொண்டு randomஆக ஒரு இடத்தில் நிற்கும். அப்போது கிடைக்கும் எண்களின் ஒப்பீட்டிற்கு(Combination) ஏற்றவாறு பரிசு இருக்கும். உதாரணமாக 333 என்று ஒரே எண் வந்தால் அதற்கு ஒரு பரிசு பொருள் இருக்கும். குறிப்பிட்ட எண்கள் combination வருவதற்கான நிகழ்தகவு(probability) குறைவாக இருந்தால் அதற்கு பரிசு அதிகம் இருக்கும்.



இந்த விளையாட்டுகளில் வரும் லாபமும் முதலீட்டை போலவே மிக குறைவு என்பது தான் பல பேருடைய கணிப்பு. ஆனால் உண்மை அது இல்லை. அமெரிக்காவில் இது போன்ற Slot Machine களை வைத்து விளையாடுவதில் ஒரு சில சட்ட திட்டங்கள் உள்ளது. அதன் படி ஒவ்வொரு விடுதியிலும் ஸ்லாட் இயந்திரங்களில் மக்கள் விளையாட போடும் பணத்தில் ஒரு கணிசமான சதவீதத்தை, கட்டாயமாக சூதாட்ட விடுதிகள் பரிசு பொருளாக விளையாடுபவர்களுக்கே கொடுத்து விட வேண்டும்.உதாரணமாக நெவேடா மாகாணத்தில் குறைந்தது 75% பணத்தை விளையாடுபவர்களுக்கு பரிசாக அளிக்க வேண்டும்.இந்த பரிசு பொருள் randomஆக வெவ்வேறு slot mnachineமூலம் jackpot என்ற பெயரில் பெரிய தொகையாக வழங்கபடும். எனவே அதிர்ஷ்டம் இருந்தால் குறைந்த முதலீட்டில் ஜாக்பாட் அடித்து நிறைய பணம் பார்க்கலாம். இங்கு விளையாட வருபவர்களில் ஒரு சிலர் இது போன்ற ஸிலாட் இயந்திரங்களில் நிறைய நேரம் விளையாடி விட்டு எழுந்து போகும் மக்களின் body language-ஐ கூர்ந்து கவனிப்பார்கள். அவர்களிடம் ஏமாற்றம் அதிகம் தெரிந்தால் அந்த இயந்திரங்களில் நிறைய நேரம் ஜாக்பாட் வரவில்லை என்று பொருள். எனவே அங்கு விளையாடினால் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால் அந்த இயந்திரங்களில் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

ஸிலாட் இயந்திரங்களுக்கு அடுத்த படியாக உள்ளது பிற Board Gameகள். கள் விளையாட மிக அதிக பணம் செலவ்ழிக்க வேண்டும் என்பது பலரின் நினைப்பு. ஆனால் உணமை அதுவல்ல. குறைந்த பணத்தை கொண்டே போர்ட் கேம்கள் விளையாடலாம். இனிவரும் பதிவுகளில் BlackJack,Roulette,Craps போன்ற விளையாட்டுகள் எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas) 2

--