Sunday, November 30, 2008

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் -தேவை சில மாற்றங்கள்

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடக்கும் பயங்கிரவாதத்தை பார்க்கும் போது தோன்றிய சில எண்ணங்கள்.

1)1992ல் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனை வந்த போது,அதை அரசியல்வாதிகளால் சமாளிக்க முடியாது எனற நிலை வந்தது.அதற்கொரு தீர்வாக உண்மையான திறமையான நிர்வாக அதிகாரியாக செயலபட்ட மன்மோகன் சிங் அவர்களை அப்போதைய பிரதமரான நரசிமம ராவ் நிதி அமைச்சராக பதவி அமர்த்தினார். அதற்கு நல்ல பலன் இருந்தது.அன்று நிதி அமைச்சகம் இருந்த நிலையில் தற்போது உள்துறை அமைச்சகம் உள்ளது.
எனவே தீவிரவாதிகளை ஒடுக்குவதில் திறமையான மற்றும் நேர்மையான ரொபைரோ போன்ற அதிகாரிகளை உள்துறை அமைச்சராக நியமித்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

2)ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிர கணக்கான கோடி பணத்தை பாதுகாப்புக்காக செலவிடுகிறோம். ஆனால் அவற்றில் பெரும் பகுதி F16 போன்ற மிகவும் costly ஆயுதங்கள் வாங்கவே செல்விடுகிறோம். அவற்றில் பெரும் பகுதி அரசியல்வாதிகளுக்கும் இடை தரகர்க்ளிடமும் லஞ்சமாக தஞ்சமடைகிறது. இவ்வகை ஆயுதங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய போரில் எப்போதாவது தான் தேவைப்படும். ஆனால் வருடத்தில் பலமுறை தீவிரவாத தாக்குதல்தான் நமக்கு பெரும் பிரச்சனை.என்வே பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையில் பெரும் பகுதியை இனியாவது தீவரவாதத்தை கட்டு படுத்தும் உளவு பிரிவிற்கும்,
தீவிரவாத எதிர் தாக்குதல் நடத்த பயிற்ச்சி,அதற்கு தேவையான உபகரணங்கள்(மும்பை எதிர் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களின் bullet proof கூட தரமற்றதாக செய்திகள் வந்துள்ளது)
மற்றும் அதிக அளவு கமாண்டொ படையினரை தயார் செய்தல் போன்று செலவிடலாம்.

3)கடந்த பல மாதங்களாக பல தீவிரவாத தாக்குதல் நடந்தாலும், அதில் பல அப்பாவி மக்களும், பாதுகாப்பில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரும் இறந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாத உள்துறை அமைச்சரை இத்தனை நாள் மாற்றாமல் இருப்பதற்கான காரணம், கடவுளுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை.(இந்த பதிவை எழுதும் போதுதான் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்துள்ள செய்தி வந்துள்ளது).அதைவிட மிக கொடுமையான விஷயம், இந்திய மக்களை பாதுகாப்பதற்கு முக்கியவத்துவம் கொடுப்பதை விட்டு ஒட்டு மொத்த இந்திய பாதுகாப்பு துறையின் focusயை தேவையின்றி இலங்கை அரசுக்கு உதவுவதில் மட்டும் கவனம் செலுத்தி, ஒரு இந்திய அரசின் தலமை அதிகாரியாக செயல்படாமல் இலங்கை அரசுக்கு தரகு வேலை பார்ப்பதில் மட்டுமே குறியாக இருந்த பாதுகாப்பு துறை ஆலோசகர் நாராயணன் போன்ற அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கி, இனியாவது இந்தியர்களின் பாதுகாப்பிற்கும், இந்தியாவிற்கும் accountability உள்ள நல்ல அதிகாரிகளை நியமித்து, அமைச்சர்களும் அவர்களுக்கு தெளிவான பாதையை காட்டி வழி நடத்த வேண்டும்.உளவுதுறை மராட்டிய மற்றும் குஜராத் கடற்பகுதியை பற்றி பல முறை எச்சரித்தும், அங்கு கடற்படையை அனுப்பாமல், கடற்படையின் முதன்மை பணியாக, அவற்றை இலங்கை அரசின் உதவிக்காக வங்காள விரிகுடாவில் நிறுத்தி விட்டு(இந்திய மீனவர்களை காப்பதையும் அவர்களுக்கு முக்கிய பணியாக கொடுக்கவில்லை), இந்தியர்களின் பாதுகாப்பை முற்றிலும் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகளை உடனடியாக நீக்கி இந்தியாவுக்காக உழைக்கும் அதிகாரிகளை பதவியில் அமர்த்த வேண்டும் .

Tuesday, November 18, 2008

அமெரிக்க நிதி நெருக்கடியின் மறுபுறம்

கடந்த சில மாதங்களாக நிகழும் அமெரிக்க நிதி நெருக்கடியின் காரணமாக அங்கு பெரிய நிதி நிறுவனங்கள் வீழ்வதும், பல நிறுவனங்களின் மதிப்பு மிகவும் குறைவதாகவும் உள்ளது. இதன் விளைவாக அங்குள்ள 3 மிகபெரும் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பிற நிறுவனங்களை மிக குறைந்த விளையில் வாங்கிகுவித்து கொண்டு உள்ளது.அரசாங்கமும் நாட்டில் மிகபெரிய நிதி நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்காக பல வகை சலுகைகளை கொடுத்து இந்த செயலை ஊக்குவிக்கிறது.இதன் விளைவாக அமெரிக்கர்களின் 40 சதவித (டெபாசிட்)சேமிப்பு பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிகுரூப், மற்றும் சேஸ் ஆகிய நிறுவனங்களின் கைகளுக்கு வந்துள்ளது.

அமெரிக்க நிதி நிலமை சரியாக வளர்ச்சி பாதையை அடையும்போது இந்த நிறுவனகளின் வளர்ச்சியும் மிகப் மிகபெரிய வளர்ச்சியாக இருக்கும்.அமெரிக்க பொருளாதாரமும் அதன் மூலம் உலக பொருளாதாரமும் இவர்கள் கட்டுபாட்டுக்கு வந்து விட சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.அந்த அளவிற்கு மிகபெரிய வளர்ச்சி அடைந்த உடன் அமெரிக்க அரசால் எந்த அளவுக்கு இந்நிறுவனங்களை கட்டுபடுத்த முடியும் என்பது கேள்விகுறியே. மேலும் இந்நிறுவனங்கள் தன்னுடைய வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ,அவற்றை எந்த தடங்களும் இன்றி செய்ய தொடங்கும்.இந்நிறுவனங்கள் எத்தகைய தவறு செய்து வீழும் நிலை வந்தாலும் அமெரிக்க அரசால் காப்பாற்ற பட்டே ஆக வேண்டிய சூழ்நிலை வரலாம்.Fannie mac மற்றும் Freddie mac போன்ற நிறுவனங்களை போல தைரியமாக பொறுப்பின்றி செயல் பட முயலலாம். ஏனெனில் இந்த நிறுவனங்களில் ஒன்று திவாலாகும் நிலை வந்தாலும் அமெரிக்காவின் FDIC(Fedral Deposit Insurance Corporation) ஒட்டு மொத்த நிதியும் காலியாகும் நிலை ஏற்படும். மொத்ததில் உலக பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் காரணிகளாக வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது.