Tuesday, October 23, 2012

கூடங்குளம் போராட்டமும் அமைதியாக சாதித்த மம்தா பானர்ஜியும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து காலம் காலமாக மக்கள் கடுமையாக போராடியும் ஒன்றும் செய்ய முடியாததை பார்க்கிறோம். போராட்டத்தை எதிர்த்து அனைத்து ஊடகங்களும், போலீசும்  கடுமையாக தாக்குதல் நடத்துவதை காண்கிறோம்.

ஆனால் எந்த வித எதிர்ப்பும் இன்றி கமுக்கமாக மம்தா பானர்ஜி ஒரு காரியத்தை செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் ரஸ்ய உதவியுடன் தொடங்க பட இருந்த அணுமின் நிலைய திட்டத்தை தொடங்க விடாமல் அனுமதி மறுத்துவிட்டார். கூடங்குளம் அணுமின் திட்டம் நிறைவேற்ற பட்டவுடன் மேற்கு வங்கத்தில் ஹரிபூரில் அணுமின் நிலையம் தொடங்க இருந்தது. தற்போது  மம்தா அதை தடுத்துள்ளார். தனது மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற மம்தா எந்த அளவிற்கும் இறங்குவார் என்பதற்கு இது ஓர் எடுத்துகாட்டு.

மம்தா பற்றிய ஓர்  flashback செய்தி- ராஜீவ் காந்தி கொலை செய்யபட்ட போது மேற்கு வங்கத்தில் குறிப்பாக  கல்கத்தாவில் தமிழர்களை கொல்ல கிளம்பியது ஒரு கும்பல். அப்போது அந்த கும்பல் முன் தன் ஆதரவாளர்களுடன் தடுத்து அமர்ந்து முதலில் தன்னை தாக்கி விட்டு பிறகு தமிழர்களை தாக்க செல்லுமாறு கூறி போராடி தடுத்தார் (இந்த செய்தியை அப்போது கல்கத்தாவில் இருந்தவர்  கூற கேட்டேன்)!

--