Sunday, January 25, 2015

தமிழ் பேராசிரியர் George L. Hartக்கு பத்மஷிரி விருது

இந்த வருடம் அறிவிக்கபட்டுள்ள பத்ம விருதுகளில் தமிழின் மேன்மைக்காக உழைத்த ஒரு அமெரிக்க தமிழ் பேராசிரியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்த வருடம் பெர்க்லி பல்கலைகழக தமிழ் துறையின் முன்னாள் பேராசிரியர் திரு அவர்களுக்கு பத்மஷிரி விருது கொடுத்திருப்பது அந்த விருதுக்கே பெருமை சேர்ப்பது ஆகும்.திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் சமஸ்கிரதத்தில் முனைவர் பட்டம் பெற்றாலும் தமிழின் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்.

மேலை நாட்டு பல்கலைகழங்களில் தமிழ் படிப்பிற்கு என்று தனி துறை 1970க்கள் வரை இல்லமல் இருந்தது. தமிழின் பெருமையை நாம் என்ன தான் பேசினாலும் மேலை நாட்டினர் மற்றும் மேலை நாட்டு பல்கலை கழக ஆராய்ச்சிகள் மூலம் வெளி சென்றால் தான் அது உலக அளவில் அனைவரையும் சென்றடையும். எனவே மேலை நாட்டு பல்கலைகழகங்களில் தமிழ் படிப்பு ஏற்படுத்துவது என்பது மிக முக்கியமானது. ஜெர்மானிய சமஸ்கிரத மொழிகளுக்கிடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்ய பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டு பல்கலைகழகங்களில் ஆய்வு மையம் உள்ளது. அதன் விளைவாக சமஸ்கிரதம் மொழி பற்றிய ஆய்வு மேலை நாடுகளில் நடைபெற்று  உலகளவில் அதன் பெருமை  மக்களிடம் சென்றடைந்தது. அது போன்ற பெரிய முயற்சி தமிழுக்காக பெரிய அளவில் எடுக்க படவில்லை. அந்த குறையை போக்கி பெர்க்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை உருவாக்க உதவியவர் திரு.George L. Hart அவர்கள் ஆவார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் அமைப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் உலகளவில் கிடைத்ததில் அவருடைய பங்கு முக்கியமானது.பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ்  கலாச்சார அமைப்புகளோடு தொடர்ந்து இணைந்து தமிழ் வளர்ச்க்காகவும், அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்லவும் பாடுபட்டு வருகிறார்.
.George L. Hart  அவர்களுக்கு பத்மஷிரி பட்டம் பட்டம் கிடைத்திருப்பது உலக தமிழர்கள் அனைவரும் பெருமை பட வேண்டிய செய்தியாகும்.

FeTNA 2015 விழாவிற்கு அவர் அனைவரையும் வரவேற்கும் காணொளி

இது நாள் வரை மத்தியில் அரசியல் அதிகாரம் கொண்டிருந்த திராவிட கட்சிகள் இதற்கான முயற்சி எடுக்காமல் இருந்தது வெட்க பட வேண்டியதே.

1 comment:

V Rajasekaran said...

It is a great achievement by him when so called Tamil leaders has not done any thing in this direction. At least politicians aim only vote bank for their vested interest. What about influential Tamil Scholars. That is why his achievement should be rated manifold.