Wednesday, January 26, 2011

தீர்வை தேடும் அமெரிக்கா! பிரச்சனையை தேடும் இந்தியா?

சமீபத்தைய பொருளாதார நெருக்கடியால் அமெரிக்காவின் வேலை இழந்தோர் எண்ணிக்கை மிக அதிகமாகி இரட்டை இலக்கத்தை நெருங்குகிறது. அரசின் எந்த நடவடிக்கையும் வேலை வாய்ப்பை பெருக்க முடியவில்லை. வேலை வாய்ப்பை பெருக்க அமெரிக்கா முன் இரண்டு வழிமுறைகள் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். ஒன்று கீனிசியன் (Keynesian)பொருளாதார முறைப்படி அரசின் செலவீனங்களை அதிகரிக்க வேண்டும். அதாவது அரசு உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்ற பெயரில் ரோடுகள் போடுவது, பாலம் அமைப்பது, அரசு அலுவலங்களில் மரபு சாரா சக்தி முறைப்படி அனைத்து மின் பொருட்களையும் மாற்றி அமைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்குவது. ஆனால் இது அமெரிக்காவின் முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு எதிரானது. மேலும் அரசு வேலை செய்ய ஒதுக்கும் நிதி, அதற்கான வேலையை சென்றடையும் போது பாதி கரைந்து போயிருக்கும் என்று கருதபடுகிறது.ஆனாலும் ஒபாமா பெரிய தொகையை அரசு செலவினத்துக்கு ஒதுக்கியும் வேலை வாய்ப்பை உயர்த்த முடியவில்லை.

அமெரிக்க அரசுக்கு அடுத்து இருக்கும் வழிமுறை தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை அதிகபடுத்த முயற்சி செய்வது. முதலாளித்துவ நாடான அமெரிக்காவிற்கு இது சிறந்த வழிமுறை.தனியார் துறையில் வேலை வாய்ப்பை பெருக்க தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவு கடன் வசதி போய் சேர வேண்டும். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் பண புழக்கம் குறைவானதால் கம்பெனிகளின் பண தேவையை பூர்த்தி செய்வதும் கடினமானது.தனியார் துறைக்கு கடன் வங்கிகள் மூலமாக தான் வர வேண்டும். அங்கு தான் பிரச்ச்னையே ஆரம்பிக்கறது!. நாட்டின் வேலை வாய்ப்பை பெருக்க சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் வளர்ச்சியால் தான் முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது அமெரிக்கா. மிக பெரிய பன்னாட்டு கம்பெனிகளின் வளர்ச்சியின் மூலம் மிக பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாது. அது மட்டுமன்றி பன்னாட்டு கம்பெனிகள் வேலையை குறைவான சம்பளம் உள்ள நாடுகளுக்கு அனுப்பி, லாபத்தை அதிகரித்து வளர்ச்சியை அதிகரிப்பது வழக்கம்.

தற்போது அமெரிக்காவின் முக்கிய பிரச்ச்னையாக இருப்பது அமெரிக்க வங்கி துறைதான்.

1.அமெரிக்க வங்கி துறையில் பெரும்பான்மையான விழுக்காடு விரல் விட்டு எண்ண கூடிய மிக பெரிய வங்கிகளின் கையில் உள்ளது.அந்த வங்கிகளின் வளர்ச்சி மிக பெரியதாக இருப்பதால் எதாவது ஒரு வங்கி வீழ்ந்தாலும் அதன் விளைவு அமெரிக்க பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாரத்தையே பாதிக்க கூடியதாக உள்ளது. வங்கிகள் அதிக லாபம் பெற அளவுக்கு அதிகமான அபாயகரமான வழிமுறைகளை கையாள ஆரம்பித்தன. தங்களின் அபாயகரமான முதலீட்டினால் நட்டம் அடையும் போது அரசை மிரட்டி(too big to fail) பணம் வாங்கி தங்களை காத்து கொள்ள ஆரம்பித்தது.

2. பெடரல் வங்கி தற்போது கிட்ட திட்ட வட்டியில்லா கடனாக வங்கிகளுக்கு பணத்தை அள்ளி இறைக்கிறது. அது மட்டுமின்றி தற்போது பெரும்பான்மை மதிப்பிழந்த வீட்டு கடன் பத்திரங்களை அதிக விலை கொடுத்து வங்கிகளிடமிருந்து வாங்குகிறது.இதற்காக செலவிடபட்டுள்ள( அச்சடிக்க பட்டுள்ள) பணத்தின் மதிப்பு சில டிரில்லியன் டாலர்களை தாண்டி விட்டது. இதற்கெல்லாம் கை மாறாக அரசு எதிர் பார்ப்பது வங்கிகள் சிறு மற்றும் நடுத்தர வங்கிகளுக்கு கடன் கொடுத்து நாட்டின் வேளைவாய்ப்பின்மையை குறைக்கும் என்ற நம்பிக்கை தான்.ஆனால் லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் பெரிய வங்கிகள் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி சிறு மற்றும் நடுத்தர வங்கிகளுக்கு கடன் கொடுக்கவில்லை. நாட்டின் ஒட்டு மொத்த வங்கி துறையும் தனியாரிடமும், அதுவும் ஒரு சிலரின் கையில் இருப்பதால் அமெரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு உதவி செய்ய அரசால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது..

3.அமெரிக்க பெடரல் வங்கி அள்ளி கொடுக்கும் பணத்தை இந்த வங்கிகள் யூக வணிகத்திற்கும், பங்கு சந்தையிலும், வளரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கும் வெள்ளமாக அள்ளி விடுவதால் அந்த பணம் செல்லுமிடம் எல்லாம் ஒரு ஸ்திரமற்ற நிலை ஏற்படுகிறது.விளை பொருட்கள் மற்றும் தாது பொருட்களின் விலை யூக வணிகத்தால் ஏறவும் செய்கிறது.

4.வங்கிகள் பெரியதாக வளர்ந்து உள்ளதால் அவர்களின் பணபலத்தால் வங்கிகள் மீதுள்ள அரசின் கட்டுபாடு அனைத்தையும்(Glass–Steagall Act etc) கிளிண்டன் மற்றும் புஷ் காலத்தில் விளக்க பட்டு விட்டன. கட்டுபாடு இல்லாததால் வங்கிகள் எடுக்கும் அபயகரமான முடிவகளும்(risk) அதிகமாகி வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது ஆனது

இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒரு சில வங்கிகள் மிக மிக பெரியதாக இருப்பதும், அவை லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் தனியாரிடம் இருப்பதும் தான். இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று பலவாறாக அமெரிக்கா யோசித்து வருகிறது.

இனி இந்தியா கதைக்கு வருவோம். கடந்த பொருளாதார சரிவின் போது குறைவான பாதிப்பில் தப்பியதற்கு காரணம் இந்தியவின் பொது துறையின் வங்கியின் வலிமை தான் என்பது பலராலும் ஏற்று கொள்ள பட்ட உண்மை.சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு கடனுதவி செய்வது மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி செய்வது போன்றவற்றில் இந்த பொது துறை வங்கிகளின் பங்கு மகத்தானது.ஆனால் கடந்த சில வருடங்களாக மன்மோகன் அரசு( மற்றும் பா.ஜ.க அரசு) வங்கிகளை சிறிது சிறிதாக தனியாரிடம் விற்றுவிட துடிப்போடு செயல்படுகின்றது. அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அவர்களின் வேகத்திற்கு ஒரு வேக தடையாக இருந்தாலும் அவர்கள் தங்கள் நோக்கத்தை கை விடுவதாக தெரியவில்லை.

வங்கிகளை தனியார் மயபடுத்துவது மட்டுமன்றி பல பொது துறை வங்கிகளை இணைத்து ஒரு சில வங்கிகளாக மாற்றவும் முயற்சி செய்கிறது. அமெரிக்காவில் வங்கியின் அளவு பெரியதாக இருப்பதன் பிரச்ச்னையை பற்றி பார்த்தோம். தற்போது தனக்கே ஆப்பு வைத்து கொள்வது போல் அரசு செயல்படுகிறது.வங்கிகளை இணைத்து ஒரு சில வங்கிகளாக்குவதன் நோக்கம் பிற்காலத்தில் அவற்றை தனியார் மயமாக்குவது எளிதாக இருப்பது கூட இருக்கலாம்.பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் விளைவு குறித்து விளக்கமாக இந்த பதிவில் எழுதி உள்ளேன்.

தற்போது RBI வெளியிட்டிருக்கும் கொள்கை குறிப்பின் படி நீரா ராடியா டேப்பில் சிக்கிய கம்பெனிகள் மற்றும் தனியார் வங்கிகளை பெரிய அளவில் இந்தியாவில் வங்கி துறையில் அனுமதித்து இந்திய வங்கி துறையை வளர்க்க முடிவிட்டுள்ளதாக தெரிகிறது. அதுவும் இந்த தனியார் வங்கிகளை கொண்டு கிராமபுற ஏழைகளுக்கு கடன் அளிக்க வழி செய்ய போவதாக கூறியுள்ளது. ஏழை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு இந்த தனியார் வங்கிகள் செயல் பட போகிறது என்பதை போக போக தான் தெரியும் Microcreditல் தனியாரின் பங்கு அத்திட்டத்தை எங்கு கொண்டு சென்றது என்பது பற்றி இந்த பதிவில் பார்த்தோம்.

வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் ஒரு ஜாக்பாட் அடிக்கும். ஆனால் மக்களுக்கு?

ஆக மொத்தம் பிரச்ச்னைக்கு தீர்வை சிந்திக்கிறது அமெரிக்கா. இந்தியாவோ தீர்வை விலக்கி பிரச்சனையை நோக்கி செல்ல நினைக்கிறது.

--

51 comments:

Anonymous said...

The problem lies with correupted people. As long we choose Italian National Congress(INC), the mafia will simply focus on increasing their bank balance at the expense of India and its people.

Bottomline is corrupted people must change.

Unknown said...

தலைப்பு ஒன்றே போதும்!! அமெரிக்க கால(ணி?)னியாகிவிட்ட இந்தியாவில் அங்கு நடக்கும் அவலங்களும் நடப்பதில்/நடக்கப்போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை...

புருனோ Bruno said...

தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் பல

ராஜ நடராஜன் said...

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு வங்கி பொருளாதார அமைப்பு என்பதோடு
பொருளாதார செலவீனமாக ஈராக்,ஆப்கானிய யுத்த்ங்களும் கிரியா ஊக்கிகள் என்பேன்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை வளர்ச்சியும்,வீழ்ச்சியும்... திட்டமிடல்,புதிய முறைகளை கையாளும் துணிவும் சில நேரங்களில் காலை வாரி விட்டு விடுவது காரணமாக இருக்கலாம்.

இந்தியா வங்கி சரித்திரம் உற்று கவனித்தால் வங்கிகள் நாட்டுடமை என்ற இந்திரா கொள்கையிலிருந்து இதுவரை ஆடி அசைந்து நிலையாகவே இருக்கிறதெனலாம்.கூடவே வங்கி மூடு மந்திரங்களாக எவன் திருடுகிறான் என்பது தெரிந்தும் பொருளாதார கண்ணோட்டம் என்பதை விட ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அங்கலாய்ப்பு மட்டுமே நாளை தள்ளி விடலாம் என்ற பொருளாதாரக் கொள்கையாக இருக்கிறது.

நன்றாக ஓடிய பம்பாய் ஐந்து நட்சத்திர ஓட்டல் Centaur ஐ தனியார் துறைக்கு விற்ற பி.ஜே.பி பொருளாதார பல்லி அருண்சூரி மாதிரி அலுவாலியா,சிங் கூட்டங்கள் அரசுத்துறை வங்கிகளை தனியார் துறைக்கு தாரை வார்க்கிறதெனலாம்.

Rex said...

I think the issue is related to gradual disappearance of production sectors. When you start importing goods your money start losing its values which eventually pulls down the economy and start affecting other sectors & increases an unemployment rate. India survived the strom because of the service industry boom but going forward there will be lot of competition for that sector too. Someone at the top level start thinking of an alternate solution now itself

P.S: I believe it should be "too big to fail" not fall.

சதுக்க பூதம் said...

வாங்க தஞ்சாவூரான் ,புருனோ

சதுக்க பூதம் said...

வாங்க ராஜ நடராஜன்

//அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு வங்கி பொருளாதார அமைப்பு என்பதோடு
பொருளாதார செலவீனமாக ஈராக்,ஆப்கானிய யுத்த்ங்களும் கிரியா ஊக்கிகள் என்பேன்.

///
போர் அரசின் செலவீனங்களை அதிகரித்தது. அது பொருளாதார சீர்கேட்டிற்கு ஒரு காரணமாக இருந்தாலும், சப் பிரைம் அதனால் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் விலை ஏற்றமும், வங்கிகளின் குறைவான வட்டியில், தரமற்ற கடன்களும் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்

சதுக்க பூதம் said...

வாங்க Rex

//I think the issue is related to gradual disappearance of production sectors//
உண்மைதான்
//When you start importing goods your money start losing its values which eventually pulls down the economy and start affecting other sectors//

உலக பொது நாணயமாக அமெரிக்க டாலர் இருக்கும் வரை அவ்வளவு சீக்கிரம் இது நடக்காது என்றே நினைக்கிறேன்

//P.S: I believe it should be "too big to fail" not fall//
நன்றி.எழுத்து பிழை. திருத்தி விட்டேன்

ராஜ நடராஜன் said...

//போர் அரசின் செலவீனங்களை அதிகரித்தது. அது பொருளாதார சீர்கேட்டிற்கு ஒரு காரணமாக இருந்தாலும், சப் பிரைம் அதனால் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் விலை ஏற்றமும், வங்கிகளின் குறைவான வட்டியில், தரமற்ற கடன்களும் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன் //

முக்கிய காரணியான வீட்டு வசதி (இலவசம்)திட்டத்தை குறிப்பிட மறந்து விட்டேனோ:)

K.R.அதியமான் said...

The issue is more complex than it appears. I recommend the excellent book 'Fault Lines' by Prof Raghuram Rajan (Universty of Priceton) :

http://press.princeton.edu/titles/9111.html

and his blog :

http://blogs.chicagobooth.edu/faultlines

நான் மிக விரும்பி படிக்கும் ஒரு தளம் :

http://www.cato.org/

சதுக்க பூதம் said...

வாங்க அதியமான்.ரகுராமின் புத்தகத்தை விட நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸின் Free Fall புத்தகத்தில் இந்த பிரச்ச்னையை நன்றாகவே விளக்கி இருப்பார். நோபல் பரிசு பெற்ற மற்றொரு பொருளாதார நிபுணர் கிரக்மேன் நியூயார்க் டைம்ஸ் பிளாக்கில் இந்த தனியார் வங்கிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற அரசு விதிக்க வேண்டிய கட்டுபாடு பற்றி விழுந்து விழுந்து எழுதுகிறார். யார் கேட்கிறார்கள். எல்லா ஊரிலும் அரசியல்வாதிகளுக்கு பணம் தானே முக்கியம். அது இந்தியாவாக இருந்தாலும் சரி. அமெரிக்காவாக இருந்தாலும் சரி. ஐரோப்பாவாக இருந்தாலும் சரி.

நல்ல வங்கி அமைப்பை அழித்து உலக பொருளாதாரத்தையே அழிவுக்க கூட்டி சென்ற மோசமான வங்கி துறையை இந்தியாவில் புகுத்த நினைப்பது தான் வருத்தம் அளிக்கிறது

K.R.அதியமான் said...

இந்த சிக்கல்களுக்கு அமெரிக்க வங்கிகள் மட்டும் காரணம் இல்லை. ஃபெட், அமெரிக்க அரசின் கொள்கைகள், சீனா மற்று இதர ஆசிய நாடுகள் அமெரிக்க டாலரை தூக்கி நிறுத்தியிருப்பது, யூரோ உருவானது போன்ற பல்வேறு காரணிகளை ரகுராமன் விரிவாக ஆராந்துள்ளார். பால் குருக்மேன் அவர்களின் பதிவுகளை இங்கு இந்து பத்திரிக்கையில் தொடர்ந்து படித்து கொண்டுதான் இருக்கிறேன். மாற்றுகருத்துக்கள் உண்டு. அவருடன் முரணபடும் ராஜன் எழுதுகிறார் :

http://forums.chicagobooth.edu/faultlines?entry=24

இந்திய வங்கிகள் தனியார் மயமானால், அமெரிக்க போல் சிக்கல் வராது. தனியார் மயம் தான் காரணம் என்றால், இங்கு உள்ள தனியார் வங்கிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கும். அரசு வங்கிகளின் பாதிப்பும், தனியார் வங்கிகளின் பாதிப்பும் ஒரே அளவில் தான் இங்கு. இந்திய வங்கி துறை கடும் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் securitation is not as sofisticated or free for all as in US. hence there can be no comparision between these two systems

K.R.அதியமான் said...

அயர்லாந் நாடு கடந்த 20 ஆண்டுகளில் அபார வளர்சி பெற்றது. ஆனால் இன்று தடுமாறுகிறது. மிக முக்கிய காராணி யூரோ ஸோனில் சேர்ந்தது தான் :

http://www.cityam.com/news-and-analysis/allister-heath/how-the-euro-caused-ireland%E2%80%99s-crisis

அதில் சேராமல் விவேகமாக இருந்து சமாளிக்கும் செக் நாட்டின் ஜனாதிபது எழுதிய பதிவு இது :

http://www.cato.org/pub_display.php?pub_id=11838

When Will the Eurozone Collapse?
by Václav Klaus

கரண்ஸி மார்கெட்டுகள் உண்மையில் சுதந்திரமாக செயல்படவில்லை. அது ஒரு மிக முக்கிய காரணி. மேலும்..

சதுக்க பூதம் said...

//இந்த சிக்கல்களுக்கு அமெரிக்க வங்கிகள் மட்டும் காரணம் இல்லை. //

அமெரிக்க வங்கிகள் மட்டும் காரணம் இல்லை. உண்மை தான். ஆனால் முக்கிய காரணம் அமெரிக்க வங்கிகள் தான். இது அனைவராலும் ஏற்று கொள்ள பட்ட உண்மை

//. ஃபெட், அமெரிக்க அரசின் கொள்கைகள்//

இரண்டையும் நிர்ணயிப்பது அமெரிக்க தனியார் வங்கிகளின் பணபலம் தான்.

ரீகன் காலம், கிளிண்டன் காலம், புஷ் காலம் என கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து அதிபர்களின் காலங்களிலும் அமெரிக்க அரசின் நிதிதுறையின் முக்கிய பொறுப்பு அனைத்தும் கோல்ட்மேன் சேக்ஸ், சேஸ் போன்ற ஒரு சில நிதி நிறுவனங்களில் பனியாற்றிய மற்றும் அதிக பங்கு வைத்துள்ள நபர்களி\ன் கையில் தான் உள்ளது. எனவே அமெரிக்க அரசின் கொள்கை என்பது ஒரு சில பெரிய தனியார் வங்கிகளின் கொள்கைகள் தான்

//சீனா மற்று இதர ஆசிய நாடுகள் அமெரிக்க டாலரை தூக்கி நிறுத்தியிருப்பது//

இவ்வாறு தூக்கி இருக்க முக்கிய காரணம் அமெரிக்க தனியார் வங்கிகளும் ஹெட்ஜ் பண்டுகளும் கரண்சி யூக தாக்குதலை ஆசிய மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மீது 90க்களில் நிகழ்த்தியதை கண்ட பயமாக கூட இருக்கலாம்.இது பற்றி எழுத தனி புத்தகம் எழுத வேண்டும்.

//இந்திய வங்கிகள் தனியார் மயமானால், அமெரிக்க போல் சிக்கல் வராது//
அமெரிக்கா போல் தனியார் வங்கிகள் கட்டுபாட்டில் ஒட்டு மொத்த இந்திய வங்கிகள் வந்தால் என்ன நடக்கும் என்று அனைவருக்குமே தெரியும். Microfinance துறையை தனியார் பணமும் தனியார் துறையும் இந்தியாவில் எப்படி சீரழித்துள்ளது என்று அனைவருக்கும் தெரியும் .

//அரசு வங்கிகளின் பாதிப்பும், தனியார் வங்கிகளின் பாதிப்பும் ஒரே அளவில் தான் இங்கு. இந்திய வங்கி துறை கடும் கட்டுப்பாட்டில் உள்ளது. //

ஒட்டு மொத்த வங்கி துறையும் ஒரு சிலரின் கைக்கு சென்றால் பணபலத்தாலும் லாபி பலத்தாலும் வங்கிகள் மீதான அரசின் கட்டுபாட்டை எப்படி உடைத்து ஒட்டு மொத்த நாட்டையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்ற நிகழ்வை அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் நாம் கண் முன்னால் காண்கின்றோம்.

// securitation is not as sofisticated or free for all as in US. hence there can be no comparision between these two systems

///
நம்ப பிரதமர் மற்றும் அரசியல்வாதிகளிடம் சில நூறு கோடிகளை தூக்கி எறிந்தால் கட்டுபாடு எல்லாம் தூள் தூளாக ஒரு சில விநாடிகள் போதும்.ஏற்கனவே மன் மோகன் சிங் இது போன்ற அமெரிக்க பொருளாதார இடை தரகர்களை ஆலோசகர் என்ற பெயரின் நியமித்து இந்திய வங்கி துறையையும் குட்டி சுவறாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். அது பற்றியது தான் இந்த பதிவு. இந்த பதிவு மற்றும் இதில் சுட்டியுள்ள பதிவுகளில் இது பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன்

சதுக்க பூதம் said...

//அயர்லாந் நாடு கடந்த 20 ஆண்டுகளில் அபார வளர்சி பெற்றது. ஆனால் இன்று தடுமாறுகிறது. மிக முக்கிய காராணி யூரோ ஸோனில் சேர்ந்தது தான் :

//

அமெரிக்க தனியார் வங்கிகள் எப்படி அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தை சீரழித்ததோ அதே போல் ஐரோப்பிய தனியார் வங்கிகள் எப்படி அயர்லாந்தை சீரழித்தது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்

அயர்லாந்து பெயில் அவுட் - நடந்தது என்ன?


இருபது ஆண்டுகளாக அயர்லாந்தில் நடந்தது வளர்ச்சி அல்ல. வீக்கம். இந்த பதிவுடன் தொடர்பு இல்லாவிட்டாலும் ஐரோப்பிய தனியார் வங்கிகளின் கோர முகத்தை சுட்டியதற்கு நன்றி. தனியார் வங்கி- லாப வெறி என்று வந்து விட்டால் அமெரிக்க தனியார் வங்கி என்ன, ஐரோப்பிய தனியார் வங்கி என்ன இந்திய தனியார் வங்கி என்ன. உண்மை தான்

சதுக்க பூதம் said...

//கரண்ஸி மார்கெட்டுகள் உண்மையில் சுதந்திரமாக செயல்படவில்லை. அது ஒரு மிக முக்கிய காரணி. மேலும்..

//

உண்மை தான். அமெரிக்க Fed இடம் ஓசியில் பணம் வாங்கி கொண்டு கரண்சி மார்க்கெட்டில் யூக வணிகத்தில் இந்த தனியார் வங்கிகள்/ஹெட்ஜ் பண்டுகள் செய்யும் அநியாயத்திற்கு அளவே கிடையாது. உலக அரசுகள் ஒன்று கூடி கடுமையான கட்டுபாடை கொண்டு வராவிட்டால் உலக பொருளாதாரம் இதை விட மோசமாக சென்றுவிடும்

K.R.அதியமான் said...

////. ஃபெட், அமெரிக்க அரசின் கொள்கைகள்//

இரண்டையும் நிர்ணயிப்பது அமெரிக்க தனியார் வங்கிகளின் பணபலம் தான்.
///

wrong argument. First try to read what R.Rajan says about all these. Wall Street did not 'determine' Fed's interest rates. US govt polices determine that.

Your views are over simplyfiying these issues and subscibe to the 'conspiracy' theroy of Wall streets. A holistic picture is seen in Rajan's book.

If wall st is so powerful, they couldn't prevent Fed rasing interest rates in the early 80s to nearly 20 %. Why not ? pls try Lee Iacoa's auto biography for details.

Irish story is excellently analysed in that Cato institute post and other post. If you can call Irish miralce as 'veekkam' then what can one say more ? What about Poland and Czech then ?

Indian banks performed well before privatisation too until the 60s. Corruption is very high in govt banks. remember Indian Bank fiasco and UTI ?

These very same wall street banks created wealth and helped reduce poverty for decades when the economy was doing fine. Now they alone are castigated as villains.

suppose if US govt did not subsidise housing loans (thru Freddie Mae and Fannn Mac) and Fed allowed interest rates to 'float' with market determined rates ; and if Asian central banks did not park their dollars with US T - bills, but allowed their currencies to depreciate ? will the scene be the same ? not likely.

/////சீனா மற்று இதர ஆசிய நாடுகள் அமெரிக்க டாலரை தூக்கி நிறுத்தியிருப்பது//

இவ்வாறு தூக்கி இருக்க முக்கிய காரணம் அமெரிக்க தனியார் வங்கிகளும் ஹெட்ஜ் பண்டுகளும் கரண்சி யூக தாக்குதலை ஆசிய மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மீது 90க்களில் நிகழ்த்தியதை கண்ட பயமாக கூட இருக்கலாம்.இது பற்றி எழுத தனி புத்தகம் எழுத வேண்டும்.////

Very wrong reasoning. All these Asian nations depend on exports to US and do not want to see their currencies rise against USD as it would erode their export competitiveness. that is the only major reason. and this is not real free markets.

You have migrated to this 'rich' USA in search of good life. All this good life there is solely due to free enterprise system unlike India where we tried 'socialism' and ended in disaster. Proof of pudding is in eating. Nationalisation of insutries and banks in India thorttled Indian economy and increased poverty until 1991. there is ample proof for all this..

K.R.அதியமான் said...

//உண்மை தான். அமெரிக்க Fed இடம் ஓசியில் பணம் வாங்கி கொண்டு கரண்சி மார்க்கெட்டில் யூக வணிகத்தில் இந்த தனியார் வங்கிகள்/ஹெட்ஜ் பண்டுகள் செய்யும் அநியாயத்திற்கு அள///

Who asked Fed to lower interest rates to near zero then ? the corporates ? not at all. it is the insane desire of political parties to pamper the people thru short term populism which ends in long term disasters. Pls try :

http://www.cato.org/pubs/journal/cj29n1/cj29n1-9.pdf
Federal Reserve Policy
and the Housing Bubble

K.R.அதியமான் said...

/////. ஃபெட், அமெரிக்க அரசின் கொள்கைகள்//

இரண்டையும் நிர்ணயிப்பது அமெரிக்க தனியார் வங்கிகளின் பணபலம் தான்.
////

இல்லை. மிக எளிமைபடுத்தப்ட்ட, தவறான அனுமானம். இதை நிருபியுங்களேன். முக்கியமாக நீங்க மேற்கோள் காட்டும் பால் குருக்மேன், ஷ்டிக்லிஸ் போன்றவர்கள் கூட இப்படி கருதுவதில்லை. அமெரிக்க வங்கிகளுக்கு அத்தனை influence இல்லை.

ஃபெடரல் ரிஸர்வ்தான் வட்டி விகிதங்களை நிர்ணியக்கிறது. அரசு வீட்டு கடன் நிறுவனங்களுக்கு (ஃபென்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக்) மானியம் அளித்தது. மேலும் பற்றாகுறை பட்ஜெட்டுகள் மிக மிக அதிகம் போட்டன. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் செயற்கையாக டால்ரை தூக்கி நிறுத்துகிறது. இவை நான்கும் தான் இந்த பொருளாதார சிக்கல்களுக்கு அடிப்படை காரணிகள். இந்த ‘ஆயுந்தங்களை’ கொண்டு அமெரிக்க வங்கிகள் சூதாடி, பெரும் அழிவிற்க்கு இட்டு செல்ல வகை செய்தன. இந்த ‘ஆயுதங்கள்’ இல்லாமல் இருந்திருந்தால் இப்படி விளையாடியிருக்க முடியாது. தனியார் வங்கிகள் ‘மட்டும்’ வில்லன்கள் என்று யாரும் சொல்வதில்லை. நான் அளித்த பல சுட்டிகளையும் நிதானமாக பாருங்கள். மேலும்...

சதுக்க பூதம் said...

//wrong argument. First try to read what R.Rajan says about all these. Wall Street did not 'determine' Fed's interest rates. US govt polices determine that.

//

அவர் எழுதுவது ஒரு பொருளாதார பைபிள் இல்லை. அவருடைய கருத்திலும் ஒரு சில உண்மை இருக்கிறது.

சைமன் ஜான்சன் எவ்வாறு வங்கிகள் அமெரிக்காவை சூறையாடுகிறது என்பது பற்றி 13 bankers என்ற புத்தகத்தில் அழகாக எழுதி இருப்பார்.

அவர் MIT பல்கலை கழக பொருளாதார பேராசிரியர்.இந்த புத்தகத்தில் அதை விட "holistic picture" ஆக விளக்கி இருப்பார். இது போல் பல்லாயிரம் லிங்க்களை கொடுத்து கொண்டே போகலாம்.


// Wall Street did not 'determine' Fed's interest rates. US govt polices determine that.

//
அமெரிக்க அரசால் பெடின் செயல்பாட்டில் ஒரு - கூட புடுங்க முடியாது. உங்களுக்கு அமெரிக்க நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் தெரியாது என்று நினைக்கிறேன். பெட் என்பது அரு அரசு நிறுவனம் இல்லை. இது தனியார் வங்கிகளின் கூட்டமைப்பு. அதன் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் அதற்கும் தனியார் வங்கிக்கும் இடையே உள்ள தொடர்பை இந்த புத்தகத்தில்( web of debt) பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.அரசுக்கு தெரியாமல் பெட் டிரில்லியன் டாலர்களை இந்த வங்க்கிக்கு வட்டி இல்லா கடனாகவும் வேறு வழியிலும் அள்ளி இறைத்துள்ளது. ஒரு சில செனட்டர்களின் கடுமையான முயற்சிக்கு பிறகே இந்த உண்மையை பெட் வெளியே கூறியுள்ளது. அதன் கணக்கு வழக்குகளை உண்மையாக தணிக்கையிட கூட அரசுக்கு உரிமை இல்லை. .

//Your views are over simplyfiying these issues and subscibe to the 'conspiracy' theroy of Wall streets. //
மன்னிக்கவும். உங்களுக்கு உலக நடப்பு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
இணையத்தின் எந்த பக்கத்தை திறந்தாலும் இந்த வங்கிகள் எவ்வாறு உலகை சூறை ஆடின என்று விளக்கி எழுதி உள்ளார்கள்.திராவிட இயக்கத்தினரை போல் எதாவது ஒரு தலைவர் சொலவது தான் வேத வாக்கு என்ற் நினைத்து கொண்டு, நம்முடைய சு சிந்தனையை/பகுத்தறிவை தூக்கி எறிந்து விடுவது நல்லது அல்ல.பல கோணங்களிலிருந்து கருத்துகளை ஆராய வேண்டும். தற்போது கீனிசியன், ஆஸ்ட்ரியன், லிபரடேரியன், வலது லிபரல், இடது லிபரல், மார்கெட் லிபரல், சோசியலிசம், கம்யூனிசம் என பல சிந்தாந்தங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு பொருளாதர வல்லுனர்களும் தங்களுடைய மனதிற்கு பிடித்த சிந்தாந்தங்களை எழுதுவார்கள்.நாம் அனைத்து சிந்தாந்தங்களையும் படித்து, நடைமுறை உண்மையை பார்த்து பகுத்தறிவு கொண்டு யோசித்து நிகழ்வுகளை அலச வேண்டும். நான் பொதுவாக ரகுராம் போன்ற ஒருவருடைய ஒரு புத்தகத்தை மட்டும் படித்து விட்டு நிகழ்வுகளை அலசுவது இல்லை.

//If wall st is so powerful, they couldn't prevent Fed rasing interest rates in the early 80s to nearly 20 %. Why not ? pls try Lee Iacoa's auto biography for details.

//

அப்போதைய பிரச்ச்னை வேறு. அப்போது தான் அமெரிக்கா தான் திவாலானதாக அறிவித்து விட்டு டாலருக்கு இணையாக தங்கத்தை தருவதை நிறுத்தி விட்டிருந்தது.அப்போதைய பிரச்சனையே வேறு. அது மட்டுமன்றி இது போன்ற சிறு ரிசசன்களை ஏற்படுத்துவது மூலம் பல சிறிய வங்கிகளை அழித்து ஒரு சில வங்கிகள் மோனோபொலி ஆவது வழக்கம். இது பற்றி பல புத்தகங்கள் வந்து விட்டன.

சதுக்க பூதம் said...

//Irish story is excellently analysed in that Cato institute post and other post. If you can call Irish miralce as 'veekkam' then what can one say more ? What about Poland and Czech then ?

//

ஐரீஸ் பிரச்ச்னை பற்றி என் பதிவின் லிங்க் கொடுத்தேள்ளேன். முதலில் அதை படித்து விட்டு அதற்கு மாற்று கருத்து இருந்தால் சொந்தமாக சிந்தித்து சொல்லவும். சும்மா கூகிள் சர்ச் செய்து ஜங்க் லிங்க்களை கொடுத்து திசை திறுப்ப வேண்டாம்

//Indian banks performed well before privatisation too until the 60s. Corruption is very high in govt banks. remember Indian Bank fiasco and UTI ?

//

இந்த பதிவை நீங்கள் முதலில் படித்து விட்டு பின்னூட்டம் இடுங்கள். அமெரிக்காவின் பிரச்ச்னையே வங்கிகள் தேவையானவர்களுக்கு தற்போது லென்டிங் செய்ய வில்லை என்பது தான். 1960க்கு முன் இந்திய வங்கிகள் இதையே செய்தது கொண்டிருந்தது. அதை தடுக்க தான் வங்கிகள் தேசியமயமாக்க பட்டன. இது பற்றியும் விரிவான பதிவிட்டுள்ளேன். இந்த பதிவில் லிங்க் கொடுத்துள்ளேன்

//These very same wall street banks created wealth and helped reduce poverty for decades when the economy was doing fine. Now they alone are castigated as villains.

//
இவை யாருக்கு வெல்த்தை தேடி கொடுத்தது என்பது தான் கேள்விகுறி. தற்போது அமெரிக்காவின் டாப் 5% பணக்காரர்களிடம், அமெரிக்காவின் பெரும்பாலான செல்வங்கள் குவிந்துள்ளன. இது பற்றி பல இடுக்கைகள் எழுதி உள்ளேன்


எங்கே போனது பணம்? - டாலர் அரசியல்- 4

//suppose if US govt did not subsidise housing loans (thru Freddie Mae and Fannn Mac) and Fed allowed interest rates to 'float' with market determined rates ; and if Asian central banks did not park their dollars with US T - bills, but allowed their currencies to depreciate ? will the scene be the same ? not likely.

//
என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை

//What about Poland and Czech then ?

//

அந்த நாடுகள் கம்யூனிசத்தில் இருந்ததன் மூலம் ஏற்ற தாழ்வுகளை முன்பே கலைந்திருந்தது. அதற்கும் இந்த இடுக்கைக்கும் சம்பந்தம் இல்லை

சதுக்க பூதம் said...

/If wall st is so powerful, they couldn't prevent Fed rasing interest rates in the early 80s to nearly 20 %. Why not ? pls try Lee Iacoa's auto biography for details.

//

அப்போதைய பிரச்ச்னை வேறு. அப்போது தான் அமெரிக்கா தான் திவாலானதாக அறிவித்து விட்டு டாலருக்கு இணையாக தங்கத்தை தருவதை நிறுத்தி விட்டிருந்தது.அப்போதைய பிரச்சனையே வேறு. அது மட்டுமன்றி இது போன்ற சிறு ரிசசன்களை ஏற்படுத்துவது மூலம் பல சிறிய வங்கிகளை அழித்து ஒரு சில வங்கிகள் மோனோபொலி ஆவது வழக்கம். இது பற்றி பல புத்தகங்கள் வந்து விட்டன.



//Very wrong reasoning. All these Asian nations depend on exports to US and do not want to see their currencies rise against USD as it would erode their export competitiveness. that is the only major reason. and this is not real free markets.

//
ஆசிய நாடுகள் ஏன் இந்த நிலைக்கு தள்ளபட்டுள்ளன என்பது பற்றி டாலர் அரசியல் என்ற பதிவில் எழுதி உள்ளேன். படித்து பாருங்கள்.(ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள். முந்தைய பதிவு பின்னூட்டங்களில் செய்தது போல் கெட்ட வார்த்தைகளில் திட்டி எழுத ஆரம்பித்து விடாதீர்கள்)

//You have migrated to this 'rich' USA in search of good life//
// All this good life there is solely due to free enterprise system unlike India where we tried 'socialism' and ended in disaster.//


இது பற்றி நான் தெளிவாக உங்களுக்கு ஒரு பின்னூட்டத்தில் பதில் இட்டு விட்டேன். மீண்டும் சொல்கிறேன். நான் ஒன்றும் பெரிதாக ரிச் ஆக வில்லை. என் தந்தை எந்த பொருளாதார நிலையில் இருந்தாரோ அந்த நிலையை விட குறைவாகவே இருக்கிறேன். சோசியலிச் காலங்களில் என் நான்கு வருட கல்லூரி பீசை விட என் குழந்தையின் ஒரு வார பிரி ஸ்கூல் பீஸ் அதிகம்..இது எல்லாம் இந்த முதலாளித்துவத்தால் வந்த வினை. மேலும் அப்போது இருந்த மன நிம்மதி மற்றும் சந்தோசம் தற்போது 10% கூட இல்லை.

// Proof of pudding is in eating. Nationalisation of insutries and banks in India thorttled Indian economy and increased poverty until 1991.//

ஏழ்மை குறைந்ததற்கு காரணாம் 1970- 80 களில் நடந்த பசுமை புரட்சி. அதன் விளைவாக சப்ளை சைட் பிரச்ச்னை சரியானது தான். உலகமயமாதலால் இந்தியா எதிர் கொள்ளும் பிரச்ச்னை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வெளி வந்து விட்டது. அது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் உங்கள் ராஜ குரு ரகுராம் இது பற்றி எழுத வாய்ப்பில்லை. அவரது பைனான்சியர்கள் அதற்கு அனுமதி அளிக்க மாட்டார்கள்.

//remember Indian Bank fiasco and UTI ?

//
இந்தியாவில் வங்கி ஊழலை இது போல் மைக்ட்ராஸ்கோப் பார்த்து தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிதி நெருக்கடி ஒட்டு மொத்த மேலை நாட்டு வங்கி துறையும் ஊழலை தவிர ஒன்றும் இல்லை என்று நிருபித்து விட்டது.

//Who asked Fed to lower interest rates to near zero then ? the corporates ? not at all. it is the insane desire of political parties to pamper the people thru short term populism which ends in long term disasters. Pls try :

//
இது பற்றி தெளிவாக விளக்கத்தை முன்பே கொடுத்து விட்டேன்.இந்த வங்கியாளர்கள் இதை கொண்டு அடித்து ஆடிய கதையை இணையமெங்கும் கொட்டி கிடக்கிறது படித்து பாருங்கள்.

இன்னொனொன்றும் சொல்லி விடுகிறேன். அய்ரோப்பிய முதலாளிகளும், ஜெர்மானிய/பிரஞ்சு வங்கிகளும் கொள்ளை அடிக்க ஆரம்பித்தது தான் அய்ரோப்பிய யூனியன்

// இந்த ‘ஆயுதங்கள்’ இல்லாமல் இருந்திருந்தால் இப்படி விளையாடியிருக்க முடியாது. தனியார் வங்கிகள் ‘மட்டும்’ வில்லன்கள் என்று யாரும் சொல்வதில்லை////

இவ்வளவு நாளாக நான் என்ன சொல்லி கொண்டு இருக்கிறேன். இந்த ஆய்தங்களை உருவக்கியதே இந்த வங்கிகள் தான் என்று விளக்கமாக ஆதாரத்துடன் விளக்கி கொண்டு உள்ளேன்.

//நான் அளித்த பல சுட்டிகளையும் நிதானமாக பாருங்கள்//

தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்றால் ஆதாரத்துடன் விளக்கத்தை தமிழில் பின்னூட்டமாக இட்டால் பப்ளிஸ் செய்கிறேன். தொடரலாம். சும்மா கூகிளில் சர்ச் செய்து ஜங்க் லின்க்குகளை இட்டு என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம். மேலும் நான் ஆதாரத்துடன் விளக்கி எழுதி உள்ள பதிவை லின்க்காக கொடுத்துள்ளேன். ஆதை படித்து பார்த்து தொடர்ந்து பின்னூட்டம் இடவும்.விவாதத்தை தொடரலாம்.நன்றி.

K.R.அதியமான் said...

// சும்மா கூகிளில் சர்ச் செய்து ஜங்க் லின்க்குகளை இட்டு என் நேரத்தையும் உங்கள் நேரத்தையு//

பால் க்ருக்மேனின் நடுனிலை இல்லாத பதிவை பற்றி மிக அருமையாக எழுதியுள்ள ராஜன் அவர்களின் சுட்டி, கேட்டொ இன்ஸ்டியுட் பதிவுகள் : இவை ஜங்க்குகள் என்று ஒற்றை வரியில் ஒதுக்கும் உம் ‘நேரத்தை’ வீணாக்க விரும்பவில்லை.

வங்கிகள் தான் ஃபெட்டை கட்டுபடுத்துகின்றன என்று sweeping statement வைக்கும் உங்களை, அதை நிறுபிக்கும்படி கேட்டால் இப்படி பதில் சொல்கிறீர்கள்.

///இந்த ஆய்தங்களை உருவக்கியதே இந்த வங்கிகள் தான் என்று விளக்கமாக ஆதாரத்துடன் விளக்கி கொண்டு உள்ளேன்.///

என்ன ஆதாரம் ? எதாவது ஒரு நிபுணர் அல்லது analysit இன் கட்டுரையாவது காட்டுங்களேன். நீங்கள் உங்கள் தனிபட்ட அனுமானங்களை, ஆதாரமாக சொன்னால் ஏற்க முடியாது.

‘கெட்ட வார்தை’ சொல்லி முன்பு திட்டியது தவறுதான். இனி அப்படி நிகழாது.

ஜங்க் என்று சொல்வது எம்மை பொருத்தவரை ஆணவம் மற்றும் அறியாமை. கேடோ இன்ஸ்டியூட் எமது ஆதர்ச நிறுவனம். இவை பற்றி ஆடம் ஸ்மித் பொருளாதார குழுவில் பல பேராசிரியர்களுடன் தொடர் விவாதத்தில் உள்ளேன். யாரும் இப்படி ஜங்க் என்று பேசமாட்டார்கள்.

K.R.அதியமான் said...

// சும்மா கூகிளில் சர்ச் செய்து ஜங்க் லின்க்குகளை இட்டு என் நேரத்தையும் உங்கள் நேரத்தையு//

பால் க்ருக்மேனின் நடுனிலை இல்லாத பதிவை பற்றி மிக அருமையாக எழுதியுள்ள ராஜன் அவர்களின் சுட்டி, கேட்டொ இன்ஸ்டியுட் பதிவுகள் : இவை ஜங்க்குகள் என்று ஒற்றை வரியில் ஒதுக்கும் உம் ‘நேரத்தை’ வீணாக்க விரும்பவில்லை.

வங்கிகள் தான் ஃபெட்டை கட்டுபடுத்துகின்றன என்று sweeping statement வைக்கும் உங்களை, அதை நிறுபிக்கும்படி கேட்டால் இப்படி பதில் சொல்கிறீர்கள்.

///இந்த ஆய்தங்களை உருவக்கியதே இந்த வங்கிகள் தான் என்று விளக்கமாக ஆதாரத்துடன் விளக்கி கொண்டு உள்ளேன்.///

என்ன ஆதாரம் ? எதாவது ஒரு நிபுணர் அல்லது analysit இன் கட்டுரையாவது காட்டுங்களேன். நீங்கள் உங்கள் தனிபட்ட அனுமானங்களை, ஆதாரமாக சொன்னால் ஏற்க முடியாது.

‘கெட்ட வார்தை’ சொல்லி முன்பு திட்டியது தவறுதான். இனி அப்படி நிகழாது.

ஜங்க் என்று சொல்வது எம்மை பொருத்தவரை ஆணவம் மற்றும் அறியாமை. கேடோ இன்ஸ்டியூட் எமது ஆதர்ச நிறுவனம். இவை பற்றி ஆடம் ஸ்மித் பொருளாதார குழுவில் பல பேராசிரியர்களுடன் தொடர் விவாதத்தில் உள்ளேன். யாரும் இப்படி ஜங்க் என்று பேசமாட்டார்கள்.

K.R.அதியமான் said...

///அய்ரோப்பிய முதலாளிகளும், ஜெர்மானிய/பிரஞ்சு வங்கிகளும் கொள்ளை அடிக்க ஆரம்பித்தது தான் அய்ரோப்பிய யூனியன்//

இது தான் உங்கள் புரிதலா ? அரசியல் ஒற்றுமை பற்றி ஒரு முயற்சி அது. ஆனால் முழுமையாக அது நிறைவு பெறாமல், பொருளாதார யூனியன் அமைத்தால் சரி வராது என்பது தான் நிதர்சனம். இதை பற்றி பால் க்ருக்மேன் மற்றும் ஸ்டிக்லிஸ் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று எடுத்தியம்புங்களேன் !!

இது போல் பேசுபவர்கள் யாரும் சோசியலிச நாடுகளுக்கு புலம் பெயர்வதில்லை. ‘கொள்ளை அடிக்கும்’ நாடுகளுகே சென்று சுகமாக வாழ்கின்றனர் !!!

///ஏழ்மை குறைந்ததற்கு காரணாம் 1970- 80 களில் நடந்த பசுமை புரட்சி. அதன் விளைவாக சப்ளை சைட் பிரச்ச்னை சரியானது தான்.//

இதுதான் உங்கள் விளக்கமா ? 1991இல் இந்தியா திவால் நிலைக்கு சென்றது எப்படி ? வறுமை அளவுகள் அதன் பின் குறைந்த வேகம், அதற்க்கு முன்பு எப்பவும் இல்லாத வேகத்தில். எப்படி ? தொழில் துறையை முடக்கி வைத்திருந்த காலங்கள் பற்றி முழு அறியாமை உங்களுக்கு. இவை பற்றி மிக விரிவாக எழுதியுள்ளேன்.

/// உலகமயமாதலால் இந்தியா எதிர் கொள்ளும் பிரச்ச்னை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வெளி வந்து விட்டது. அது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் உங்கள் ராஜ குரு ரகுராம் இது பற்றி எழுத வாய்ப்பில்லை. ////

உமது கட்டற்ற ஆணவத்தையும், யாரையும் முழுசா படிக்காமல் இப்படி ‘கருத்து’ சொல்லும் மனோபாவத்தையும் இது காட்டுகிறது. ரகுராம் ராஜனின் நூலை படிக்காமலே இப்படி பேசும் நீங்கள் தான் ‘பொருளாதார’ நிபுணர். (இது போன்ற ‘விவாத முறை’யினால் தான் முன்பு நான் நிதானம் இழந்து ‘கெட்ட’ வார்த்தை பேச வேண்டியதாயிற்று)

///அவரது பைனான்சியர்கள் அதற்கு அனுமதி அளிக்க மாட்டார்கள்.////

Sheer nonsense. அவர் ஒரு சுதந்திரமான அறிஞர். கல்லூரி பேராசியரியர். மிகவும் மதிக்கப்படுகிறவர். அவரின் கருத்துகளோடு முரண்படலாம். அது வேறு. அமெரிக்க பற்றி புரிதல் இல்லை உங்களுக்கு. வேறு பல குறைகள் இருந்தாலும், கருத்து சுதந்திரம் மிக அதிகம் உள்ள நாடு. பல விவாதங்கள் அங்கு தொடர்கின்றன. நோவாம் ஷாம்ஸ்க்கி தொடர்ந்து எழுதி, இயங்கி கொண்டுதான் இருக்கிறார். யாரும் அவரை ‘தடுக்க’ முயலவில்லை. அதுதான் அமெரிக்கா.

K.R.அதியமான் said...

////suppose if US govt did not subsidise housing loans (thru Freddie Mae and Fannn Mac) and Fed allowed interest rates to 'float' with market determined rates ; and if Asian central banks did not park their dollars with US T - bills, but allowed their currencies to depreciate ? will the scene be the same ? not likely.

//
என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை///

இதை புரிந்து கொள்ள முடியாவிட்டால் விவாதம் எப்படி தொடர்வது ? அமெரிக்க அரசு இரண்டு பெரும் வீட்டு வசதி கடன் நிறுவனங்களுக்கு மானியம் அளித்து, கேரண்டி அளித்த விசியம். ஃபெட் வட்டி விகுதங்களை செயற்க்கையாக சந்தை விகுதத்தை விட மிக குறைவாக வைத்திருந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பண வீக்க வெள்ளம் : இவற்றின் நிகர விளைவுகள். ஏற்றுமதி செய்யும் ஆசிய நாடுகள், தங்கள் டாலர்களை அமெரிக்க அரசு பத்திரங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதின் விளைவுகள் (இதில் சதி எதுவும் இல்லை. ‘சுயநலமே’ உள்ளது) : இவை பற்றி பேசாமல், வங்கிகள் அயோக்கியதனம் செய்கிறனர் என்று மட்டும் பேசுவது எப்படி சரியாகும் ? பொருளாதார அறிஞர்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்துதான் பார்பார்கள்.



//What about Poland and Czech then ?

//

அந்த நாடுகள் கம்யூனிசத்தில் இருந்ததன் மூலம் ஏற்ற தாழ்வுகளை முன்பே கலைந்திருந்தது. அதற்கும் இந்த இடுக்கைக்கும் சம்பந்தம் இல்லை///

அய்யா, நான் சொல்ல வந்தது, யூரோ வில் அவர்கள் சேராமல் விவேகமாக செயல்பட்ட விதம் பற்றி. அதை பற்றி ஒரு அருமையான சுட்டி (செக் தலைவர் எழுதியது) அளித்திருந்தேன். படிக்காமலே இப்படி பேசினா எப்படி ?
அது ஜ்ங்க என்று நிராகரிப்பது தான் விவாத முறையா ?
அந்த நாடுகள் கம்யுனிசத்தை பின் பற்றி பெரும் சீரழிவை அடைந்து,பின் புத்தி வந்து மாறின. 80கள் வரை அவை இருந்த நிலை, ஏற்ற தாழ்வற்றா நிலை பற்றி நன்றாக படித்து பாருங்கள். மேலும் அங்கு நடந்த அடக்குமுறைகள், கொடுங்கோல் சர்வாதிகாரம் பற்றி பேசலாமா ?

K.R.அதியமான் said...

///ஐரீஸ் பிரச்ச்னை பற்றி என் பதிவின் லிங்க் கொடுத்தேள்ளேன். முதலில் அதை படித்து விட்டு அதற்கு மாற்று கருத்து இருந்தால் சொந்தமாக சிந்தித்து சொல்லவும். சும்மா கூகிள் சர்ச் செய்து ஜங்க் லிங்க்களை கொடுத்து திசை திறுப்ப வேண்டாம்//

முன்பே அதை படித்திருந்தேன். ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வளவுதான். அதை ஜ்ங்க் என்று எம்மால் மிக சுலபமாக சொல்ல முடியும் தான். சொந்தமாக யார் சிந்திக்கின்றனர் என்பதை நாமே முடிவு செய்து கொள்ள வேண்டாமே. (இதெலாம் தனி மனித தாக்குதல் வகையில் சேருமே தோழர்).

K.R.அதியமான் said...

////If wall st is so powerful, they couldn't prevent Fed rasing interest rates in the early 80s to nearly 20 %. Why not ? pls try Lee Iacoa's auto biography for details.

//

அப்போதைய பிரச்ச்னை வேறு. அப்போது தான் அமெரிக்கா தான் திவாலானதாக அறிவித்து விட்டு டாலருக்கு இணையாக தங்கத்தை தருவதை நிறுத்தி விட்டிருந்தது.அப்போதைய பிரச்சனையே வேறு.///

நான் சொன்ன விசியங்கள் 70களின் பிற்பகுதியில் நடந்தன. அமெரிக்க கோல்ட் ஸ்டாண்டரை விட்டது 1972இல். அதற்க்கு காரணம் மிக அதிகம் செலவு செய்ததுதான். பெரிய சதி எதுவும் இல்லை. வரவுக்கு மேல் செலவு செய்வது அன்று முதல் தொடர்கிறது. அதனால் உலகில் அனைத்து நாடுகளுன் தங்க ஸ்டாணர்டை தொடர் முடியாமல் fiat moneyக்கு மாறி தொடர் அழிவுக்கு வழி வகை செய்கின்றன. இது கீயின்ஸ் என்ற நிபுணர் காட்டிய வழியை ஒத்தது.

விலைவாசி உயர்வை ஒட்டியே வட்டி விகிதங்களும் இருக்கும். இது அடிப்படை விதி. ஃபெட் அன்று அதை ஒட்டியே செயல்பட வேண்டிய நிலை.

ஃபெட் தனியார் வங்களின் கூட்டமைப்புதான். ஆனால் அரசுதான் அதன் சேர்மனை நிர்னியக்கிறது. தனியார் வங்கிகள் தான் ஃபெட்டின் வட்டி விகுதங்களை நிர்ணியக்கிறது என்னும் உங்கள் கோணம் முற்றாக தவறானது. நிருபிக்க முடியாது.

பால் குருக்மேன் இத்தனை எழுதுகிறார். பல ஆண்டுகளாக படிக்கிறேன். ஒரு முறை கூட இந்த ‘கருத்தை’ சொன்னதில்லை. வேறு யாரும் (இடதுசாரிகளும்) சொல்லி நான் பார்த்ததில்லை.

சதுக்க பூதம் said...

//வங்கிகள் தான் ஃபெட்டை கட்டுபடுத்துகின்றன என்று sweeping statement வைக்கும் உங்களை, அதை நிறுபிக்கும்படி கேட்டால் இப்படி பதில் சொல்கிறீர்கள்.
//

பெட் என்பது தனியார் வங்களின் கூட்டமைப்பு தான். அது எப்படி ஆரம்பிக்க பட்டது என்று அறிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் உள்ளன. உதாரணமாக Web of debt,The Creature from Jekyll Island போன்ற புத்தகங்களை படித்து பார்த்தால் தெரியும்.
கினீசியன் என்று இல்லை.
பெட்டின் அமைப்பு பற்றி உங்களுக்கு தெரிய வில்லை என்று நினைக்கிறேன். நேரம் கிடைக்கும் போது எவ்வாறு ராக்கபெல்லர், சேஸ் போன்ற தனியார் வங்கி முதலைகள் பெட்டை உருவாக்கி அமெரிக்காவையும் உலகையும் சூறையாடுகிறார்கள் என்று தனி பதிவிடுகிறேன். அது வரை வாய்ப்பு கிடைக்கும் போது மேற் சொன்ன புத்தகங்களை பார்த்தால் பெட் என்பது ஒரு Banking cartel என்பது உங்களுக்கு புரியும்.

அது மிக பெரிய கதை என்பதால் பின்னூட்டமாக முழு கதையையும் என்னால் இங்கு கூற முடியாது. மன்னிக்கவும்.பலர் இன்னும் பெட் என்பது அமெரிக்க அரசின் வங்கி என்று தவறாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.கீனிசியன் என்று இல்லை
ஆஸ்ட்ரியன் பொருளாதார நிபுனர்கள் பெட்டுக்கும், தனியார் வங்கிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை கூறும் சுட்டி. இது போன்ற சுட்ட்டியை தருவது எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், தொடர்ந்து கேட்பதால் தருகிறேன்
http://mises.org/media/4827/How-Bernanke-Is-Using-the-Printing-Press-to-Win-Friends-and-Influence-People

சதுக்க பூதம் said...

//என்ன ஆதாரம் ? எதாவது ஒரு நிபுணர் அல்லது analysit இன் கட்டுரையாவது காட்டுங்களேன். நீங்கள் உங்கள் தனிபட்ட அனுமானங்களை, ஆதாரமாக சொன்னால் ஏற்க முடியாது.

//
முந்தைய பின்னூட்டத்தில் அது பற்றி இட்டுள்ளேன்

சதுக்க பூதம் said...

//கெட்ட வார்தை’ சொல்லி முன்பு திட்டியது தவறுதான். இனி அப்படி நிகழாது.//

மிக்க நன்றி.பொதுவாக சரக்கு இல்லாதவர்கள் தான் விவாதத்தை தொடர முடியாமல் இது போல் கெட்ட வார்த்தையால் திட்ட ஆரம்பிப்பார்கள்/

/ஜங்க் என்று சொல்வது எம்மை பொருத்தவரை ஆணவம் மற்றும் அறியாமை. கேடோ இன்ஸ்டியூட் எமது ஆதர்ச நிறுவனம். இவை பற்றி ஆடம் ஸ்மித் பொருளாதார குழுவில் பல பேராசிரியர்களுடன் தொடர் விவாதத்தில் உள்ளேன். யாரும் இப்படி ஜங்க் என்று பேசமாட்டார்கள்.//

நானும் ஒரு குறுகிய பொருளாதார குருப் என்று இல்லாமல் இடது, வலது மற்றும் நடு நிலை பொருளாதார சிந்தனைவாதிகளிடம் தொடர்பு வைத்து கொண்டு தான் உள்ளேன். அதை இது போல் விளம்பரத்துக்கு பொதுவாக வெளியில் கூறி கொள்வது இல்லை.

எனக்கு ஆதரச சிந்தனை என்று எதுவும் இல்லை. ஒவ்வொர்வரும் தங்களுடைய சிந்தாந்த கண்ணாடி வழியே சிந்திப்பார்கள். செய்திகளை வெளியிடுவார்கள். எனவே, அனைத்தையும் கேட்டு தீர ஆராய்ந்து தான் கருத்தை வெளியிடுவேன்.

சுயமாக யோசிப்பது அறியாமை, ஆணவம் என்றால் எனக்கு அது உள்ளது என்று பெருமை படிகிறேன்.( Ignorance is Strength"" எனப்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை

எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு

சதுக்க பூதம் said...

//இது தான் உங்கள் புரிதலா ? அரசியல் ஒற்றுமை பற்றி ஒரு முயற்சி அது. ஆனால் முழுமையாக அது நிறைவு பெறாமல், பொருளாதார யூனியன் அமைத்தால் சரி வராது என்பது தான் நிதர்சனம்.//

அரசியல் ஒற்றுமை என்ற பெயரில் தனியார் முதலாளிகளின் லாப வெறிக்காக துவங்க பட்டது தான் ஐரோப்பிய யூனியன். இந்த பதிவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது பற்றி விவாதிக்க ஐரோப்பிய யூனியன் பற்றிய பதிவில் பின்னூட்டம் இட்டால் நன்றாக இருக்கும். அது மட்டுமன்றி அய்ரோப்பிய யூனியன் எதற்காக அமைக்க பட்டது என்பது மிக பெரிய topic.இந்த பதிவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது

// இதை பற்றி பால் க்ருக்மேன் மற்றும் ஸ்டிக்லிஸ் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று எடுத்தியம்புங்களேன் !!//
எனக்கு ஒன்றும் அவர்கள் messiah இல்லை. அவர்கள் ஒவ்வொரு பிரச்ச்னையிலும் என்ன சொல்கிறார்களோ அதை வேத வாக்காக எடுத்து கொண்டு அதற்கு ஆதரவான வாதங்களை மட்டும் தேடி கொண்டிருப்பவன் இல்லை.என்னுடைய கருத்து பற்றி தெளிவாக கூறிவிட்டேன்

//இது போல் பேசுபவர்கள் யாரும் சோசியலிச நாடுகளுக்கு புலம் பெயர்வதில்லை. ‘கொள்ளை அடிக்கும்’ நாடுகளுகே சென்று சுகமாக வாழ்கின்றனர் !!!//
நான் புலம் பெயரவில்லை. சுகமாக வாழ வில்லை.அது பற்றி எழுதிவிட்டேன்.கொள்ளை அடிக்கும் நாடுகள் என்பதை விட லாப வெறி கொண்டு கொள்ளை அடிக்கும் கூட்டம் உலகம் எங்கும் இருக்கிறது

சதுக்க பூதம் said...

//உமது கட்டற்ற ஆணவத்தையும், யாரையும் முழுசா படிக்காமல் இப்படி ‘கருத்து’ சொல்லும் மனோபாவத்தையும் இது காட்டுகிறது. ரகுராம் ராஜனின் நூலை படிக்காமலே இப்படி பேசும் நீங்கள் தான் ‘பொருளாதார’ நிபுணர். //

அந்த புத்தகத்தை படித்துள்ளேன் என்று கூறியுள்ளேன். அது மட்டுமன்றி பொருளாதாரம் பற்றி பேச அவரது புத்தகம் ஒன்னும் பொருளாதார அரிச்சுவடி இல்லை. இந்த பிரச்ச்னை பற்றி வந்துள்ள பல புத்தகங்களில் இதுவும் ஒன்று

(இது போன்ற ‘விவாத முறை’யினால் தான் முன்பு நான் நிதானம் இழந்து ‘கெட்ட’ வார்த்தை பேச வேண்டியதாயிற்று)
//

இது என்ன புது கதையாக உள்ளது. இது போல் விவாதத்தில் கெட்ட வர்த்தையில் திட்டுவதற்கு காரணத்தை முன் பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்

//Sheer nonsense. //
சரிங்க "அறிவாளி"

//அமெரிக்க பற்றி புரிதல் இல்லை உங்களுக்கு.//
நல்ல வேலை. உங்களை போல் உலக நடப்புகளை கரைத்து குடித்த அதி "மேதாவிகளின்" பின்னூட்டத்தை படித்தாவது ஏதோ என் அறிவை வளர்த்து கொள்கிறேன்

//நோவாம் ஷாம்ஸ்க்கி தொடர்ந்து எழுதி, இயங்கி கொண்டுதான் இருக்கிறார்///
/நோவாம் ஷாம்ஸ்க்கியோடு ரகுராமை கம்பேர் பண்ணுவது எந்த வகையில் பொருத்தம் எனபது அவர்களது கருத்துகளை படிப்பவர்களுக்கு புரியும்

//அமெரிக்க பற்றி புரிதல் இல்லை உங்களுக்கு. வேறு பல குறைகள் இருந்தாலும், கருத்து சுதந்திரம் மிக அதிகம் உள்ள நாடு. பல விவாதங்கள் அங்கு தொடர்கின்றன. //
அமெரிக்காவின் கருத்து சுதந்திரம் பற்றி எங்குமே நான் சொல்ல வில்லை. சம்பந்தம் இல்லாமல் அது பற்றி ஏன் கூறி விவாதத்தை திசை திருப்புகிறீர்கள் என்று புரியவில்லை.

சதுக்க பூதம் said...

//இதை புரிந்து கொள்ள முடியாவிட்டால் விவாதம் எப்படி தொடர்வது ?
அமெரிக்க அரசு இரண்டு பெரும் வீட்டு வசதி கடன் நிறுவனங்களுக்கு மானியம் அளித்து, கேரண்டி அளித்த விசியம். ஃபெட் வட்டி விகுதங்களை செயற்க்கையாக சந்தை விகுதத்தை விட மிக குறைவாக வைத்திருந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பண வீக்க வெள்ளம் ://

ஏற்கனவே டாலர் அரசியல் என்ற பதிவில் நான்கு பகுதியாக இந்த பிரச்ச்னை/ முந்தைய பிரச்ச்னை பற்றி விளக்கி உள்ளேன். அது மட்டுமன்றி பல பதிவுகளில் விலாவாரியாக எழுதி உள்ளேன். லிங்கையும் கொடுத்துள்ளேன். அதை படித்து பார்த்து கொள்ளுங்கள். அது பற்றி எழுத தனி புத்தகம் இட வேண்டும்.

//இவற்றின் நிகர விளைவுகள். ஏற்றுமதி செய்யும் ஆசிய நாடுகள், தங்கள் டாலர்களை அமெரிக்க அரசு பத்திரங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதின் விளைவுகள் (இதில் சதி எதுவும் இல்லை. ‘சுயநலமே’ உள்ளது) : இவை பற்றி பேசாமல், வங்கிகள் அயோக்கியதனம் செய்கிறனர் என்று மட்டும் பேசுவது எப்படி சரியாகும் ? பொருளாதார அறிஞர்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்துதான் பார்பார்கள்.
//

இந்த பிரச்ச்னைகளை ஒருங்கினைத்து தான் முன் பதிவிட்டிருந்தேன்

//அய்யா, நான் சொல்ல வந்தது, யூரோ வில் அவர்கள் சேராமல் விவேகமாக செயல்பட்ட விதம் பற்றி. அதை பற்றி ஒரு அருமையான சுட்டி (செக் தலைவர் எழுதியது) அளித்திருந்தேன். படிக்காமலே இப்படி பேசினா எப்படி ?
//

நான் எதோ ஐரோபிய யூனியன் எதோ உலகுக்கே ஆதர்சன முறையாக வந்துள்ளது போல் சொன்னதாக சொல்வது போல் சொல்கிறீர்கள். இந்த பதிவிற்கும் நீங்கள் பேசுவதற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா? எந்த பதிவு படிக்கிறோம். என்ன எழுதி இருக்கிறார். அது பற்றி விவாதிப்போம் என்று நீங்கள் பின்னூட்டம் இட்டால் அது முறையானது. நான் கூறிய கருத்துகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை என்று சம்பந்தம் இல்லாத டாப்பிக்கை பற்றி எதாவது சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இடுவது எந்த வகையில் பொருத்தம். அதுவும் நான் எழுதாத கருத்தை பற்றி என் கருத்து அப்படி இருக்கும் என்று கற்பனையாக நினைத்து கொண்டு, அதுவும் சம்பந்தம் இல்லாத பதிவில் எழுதுவது நியாயம் இல்லை. அதனால் ய்கான் அதை ஜங்க் என்று எழுதினேன்

//மேலும் அங்கு நடந்த அடக்குமுறைகள், கொடுங்கோல் சர்வாதிகாரம் பற்றி பேசலாமா //

கம்யூனிசம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கு வினவு பதிவில் பதில் அளித்து பார்த்திருக்கிறேன். அது பற்றிய விவாதங்களை அவர்களுடைய பதிவில் நடத்தினால் நன்றாக இருக்கும். நான் பொருளாதாரத்தோடு நிறுத்தி கொள்கிறேன்

சதுக்க பூதம் said...

//முன்பே அதை படித்திருந்தேன். ஏற்றுக்கொள்ள முடியவில்லை. //
அது உங்களது விருப்பம். கண்ணை கட்டி கொண்டு சூரியன் தெரியாவிட்டால் உலகில் சூரியன் மறைந்து விட்டதாக கூற முடியாது.

//அவ்வளவுதான். அதை ஜ்ங்க் என்று எம்மால் மிக சுலபமாக சொல்ல முடியும் தான். //
நான் நீங்கள் விவாதத்திற்கு வைக்கும் வாதம் எதையும் ஜங்க் என்று ஒதுக்க மாட்டேன். சும்மா அவர் சொன்னார் அதுதான் வேதவாக்கு. இவர் சொன்னார் அது தான் உண்மை. வேண்டுமென்றால் அங்கு போய் படித்து கொள்ளுங்கள் என்று சொல்லி ஓடுவதால் தான் ஜங்க் எனு சொல்கிறேன்.

நீங்கள் ஜங்க் என்று சொன்னால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. அயர்லாந்து பற்றிய உண்மை செய்தி பல்லாயிரம் பேரை சென்றடைந்து உண்மையை புரிய வைத்துள்ளது. அது தான் இந்த பதிவின் நோக்கம்.

சொந்தமாக யார் சிந்திக்கின்றனர் என்பதை நாமே முடிவு செய்து கொள்ள வேண்டாமே. (இதெலாம் தனி மனித தாக்குதல் வகையில் சேருமே தோழர்).

நீங்கள் சொல்லும் வாதங்களில் பெரும்பான்மையானது அவர் சொன்னார் அதுதான் உண்மை.இவர் சொன்னார் அது தான் வேதவாக்கு என்று சொல்வதால் தான் அப்படி சொன்னேன். நீங்கள் இந்த பதிவு சம்பந்தமாக ஒன்றிரண்டு வரிகள் முழுமையாக நீங்களாக கூறிய வாதங்களுக்கு மதிப்பளித்து தெளிவாக பதிலளித்துள்ளேன்

சதுக்க பூதம் said...

//நான் சொன்ன விசியங்கள் 70களின் பிற்பகுதியில் நடந்தன. அமெரிக்க கோல்ட் ஸ்டாண்டரை விட்டது 1972இல். அதற்க்கு காரணம் மிக அதிகம் செலவு செய்ததுதான். பெரிய சதி எதுவும் இல்லை. வரவுக்கு மேல் செலவு செய்வது அன்று முதல் தொடர்கிறது. அதனால் உலகில் அனைத்து நாடுகளுன் தங்க ஸ்டாணர்டை தொடர் முடியாமல் fiat moneyக்கு மாறி தொடர் அழிவுக்கு வழி வகை செய்கின்றன. இது கீயின்ஸ் என்ற நிபுணர் காட்டிய வழியை ஒத்தது.//

வங்கிகள் லாபி நாடுகளை எப்படி சண்டைக்கு இட்டு செல்கிரது என்று எத்தனையோ புத்தகங்கள் வந்து விட்டது. கீனிசியன் என்றில்லை. ஆஸ்ட்ரியன் கூட எத்தனையோ புத்தகங்கள் எழுதி விட்டனர்.தனியார் பெட் பணத்தை அடித்து தாக்குவதை கண்டு பயந்த கென்னடி, தனியார் பெட்டிடம் இருந்து அமெரிக்காவை காக்க வெள்ளி பணத்தை அடித்ததும் அவர் மர்மமான முறையில் படுகொலை செய்ய பட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை

//விலைவாசி உயர்வை ஒட்டியே வட்டி விகிதங்களும் இருக்கும். இது அடிப்படை விதி. ஃபெட் அன்று அதை ஒட்டியே செயல்பட வேண்டிய நிலை. //
இது ஓரளவு உண்மை என்றாலும் பெட் முடிவை அனுமானத்தின் மூலம் தான் எடுக்கிறது. எந்த பார்முலாவும் அதற்கு இல்லை.குறைந்த அளவு வட்டி விகிதத்திற்கும் பெட்ரோடாலருக்கும் இடைபட்ட தொடர்பை பெட்ரோடாலரில் விளக்கி விட்டேன். அது பற்றி மீண்டும் இங்கு எழுதுவது பொருத்தமாக இருக்காது.


ஃபெட் தனியார் வங்களின் கூட்டமைப்புதான். ஆனால் அரசுதான் அதன் சேர்மனை நிர்னியக்கிறது. தனியார் வங்கிகள் தான் ஃபெட்டின் வட்டி விகுதங்களை நிர்ணியக்கிறது என்னும் உங்கள் கோணம் முற்றாக தவறானது. நிருபிக்க முடியாது.

//ஃபெட் தனியார் வங்களின் கூட்டமைப்புதான்.. தனியார் வங்கிகள் தான் ஃபெட்டின் வட்டி விகுதங்களை நிர்ணியக்கிறது என்னும் உங்கள் கோணம் முற்றாக தவறானது.//

நீங்கள் கூறியதை நீங்களே திருப்பி படித்து பாருங்கள். முரண்பாடாக தெரியவில்லை?

//பால் குருக்மேன் இத்தனை எழுதுகிறார். பல ஆண்டுகளாக படிக்கிறேன். ஒரு முறை கூட இந்த ‘கருத்தை’ சொன்னதில்லை. வேறு யாரும் (இடதுசாரிகளும்) சொல்லி நான் பார்த்ததில்லை.//

ஏன் எதுக்கு எடுத்தாலும் அவர் என்ன சொன்னார்? இவர் என்ன சொன்னார் என்று பார்க்கிறீர்கள். நான் முன்பே சொல்லி விட்டேன் . யாரும் பொருளாதார கடவுள் இல்லை. அவர் ஒரு கீனிசியன் மற்றும் தேசியவாதி. அவருடைய கண்ணாடி கொண்டு மட்டும் தான் பார்ப்பார். அதற்கு தான் அனைத்து தரப்பினரின் பார்வையையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன். அனைத்தையும் படித்து தெரிந்து கொண்டு பகுத்தறிவு கொண்டு சுயமாக சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறேன். அடுத்தவர் சொல்வதை கண்மூடி தனமாக ஏற்று கொள்ளாமல் கொஞ்சம் சுயமாக சிந்தனை செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். அவ்வாறு சுய சிந்தனை வேண்டும் என்றால் உங்களுக்கு கோபம் வருகிரது. தனி மனித தாக்குதல் என்கிறீர்கள்.

K.R.அதியமான் said...

//சும்மா அவர் சொன்னார் அதுதான் வேதவாக்கு. இவர் சொன்னார் அது தான் உண்மை. வேண்டுமென்றால் அங்கு போய் படித்து கொள்ளுங்கள் என்று சொல்லி ஓடுவதால் தான் ஜங்க் எனு சொல்கிறேன்.
///

this applies to you too. instead of trying to answer to the basic issue : whether anyone anywhere had proved that the Fed's actions (esp fixing of interest rates) is mainly controlled by Amercan Banks.

The US banks totally control Fed. The interest rate of Fed is fixed thru proxy by these banks in a selfish and cynical mannner with the agenda of enriching the banks. Fed does not act for the good of the national economy and is neither independent nor under the control of US govt. this is your assertation, which no one else does.

I challege you to prove this above. IF possible try to quote any book or site or article from anywhere. All i can say is that your assertation is totally wrong.

Fed is controlled by US govt and is answerable to Congress. and it acts for the nation and not for the private banks.

If you can label Rajan as under control of financiers, then it shows your wisdom.

Getting off gold standard is a long history..

But first answer my question about Fed, US govt subsidy to mortage bank twins, and other points which are covered by Rajan and other economists.

K.R.அதியமான் said...

//ஃபெட் தனியார் வங்களின் கூட்டமைப்புதான்.. தனியார் வங்கிகள் தான் ஃபெட்டின் வட்டி விகுதங்களை நிர்ணியக்கிறது என்னும் உங்கள் கோணம் முற்றாக தவறானது.//

According to the Board of Governors, the Federal Reserve is independent within government in that "its decisions do not have to be ratified by the President or anyone else in the executive or legislative branch of government." However, its authority is derived from the U.S. Congress and is subject to congressional oversight. Additionally, the members of the Board of Governors, including its chairman and vice-chairman, are chosen by the President and confirmed by Congress. The government also exercises some control over the Federal Reserve by appointing and setting the salaries of the system's highest-level employees. Thus the Federal Reserve has both private and public aspects

//Under the Federal Reserve Act, the Chairman of the Board of Governors of the Federal Reserve System must appear before Congressional hearings at least twice per year regarding “the efforts, activities, objectives and plans of the Board and the Federal Open Market Committee with respect to the conduct of monetary policy”. The statute requires that the Chairman appear before the House Committee on Banking and Financial Services in February and July of odd numbered years, and before the Senate Committee on Banking, Housing, and Urban Affairs in February and July of even numbered years///

CAN YOU PROVE ANY INSTANCE WHEN FED ACTED FOR THE BANKS INTERESTS AGAINST THE NATIONAL INTERESTS ?

US MEIDA AND ANALYSTS WOULD NOT HAVE KEPT QUIET IF AND IF SUCH A THINK OCCURED ANYWHERE IN THE PAST.

TRY TO PROVE YOUR SWEEPING ASSERTATIONS ABOUT THE FED'S MOTIVES FROM ANY SINGLE INSTANCE OF SUCH MALAFIDE ACTIONS.

ALL YOU CAN DO IS WRITE ABOUT CONSPIRACY THEORIES.

K.R.அதியமான் said...

//யாரும் பொருளாதார கடவுள் இல்லை. அவர் ஒரு கீனிசியன் மற்றும் தேசியவாதி. அவருடைய கண்ணாடி கொண்டு மட்டும் தான் பார்ப்பார். அதற்கு தான் அனைத்து தரப்பினரின் பார்வையையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன். ///

THIS SUITS YOUR TOO SIR.

YOU ASSERTED THAT ONLY BANKS AND BANKS ALONE ARE RESPONSIBLE FOR THIS MESS.

RAJAN WRITES :

I argue that in an attempt to offset the consequences of rising income inequality, politicians on both sides of the aisle pushed easy housing credit through government units like the Federal Housing Administration, and by imposing increasingly rigorous mandates on government sponsored enterprises such as Fannie Mae and Freddie Mac.

Let me move on to Krugman’s second criticism of my diagnosis of the crisis. He argues that the Fed’s very accommodative monetary policy over the period 2003 to 2005 was also not responsible for the crisis. Here Krugman is characteristically dismissive of alternative views. In his review, he says that there were good reasons for the Fed to keep rates low given the high unemployment rate. Although this may be a justification for the Fed’s policy (as I argue in my book, it was precisely because the Fed was focused on a stubbornly high unemployment rate that it took its eye off the irrational exuberance building in housing markets and the financial sector), it in no way validates the claim that the policy did not contribute to the manic lending or housing bubble.

A second argument that Krugman makes is that Europe too had bubbles and the European Central Bank was less aggressive than the Federal Reserve, so monetary policy could not be responsible. It is true that the European Central Bank was less aggressive, but only slightly so; It brought its key refinancing rate down to only 2 percent while the Fed brought the Fed Funds rate down to 1 percent. Clearly, both rates were low by historical standards. More important, what Krugman does not point out is that different Euro area economies had differing inflation rates, so the real monetary policy rate was substantially different across the Euro area despite a common nominal policy rate. Countries that had strongly negative real policy rates – Ireland and Spain are primary exhibits – had a housing boom and bust, while countries like Germany with low inflation, and therefore higher real policy rates, did not. Indeed, a working paper by two ECB economists, Angela Maddaloni and José-Luis Peydró, indicates that the ultra-low rates by both the ECB and the Fed at this time had a strong causal effect in relaxing banks’ commercial, mortgage, and retail lending standards over this period

My book suggests that many – bankers, regulators, governments, households, and economists among others – share the blame for the crisis. Because there are so many, the blame game is not useful. Let us try and understand what happened in order to avoid repeating it. I detail the hard choices we face in the book. While it is important to alleviate the miserable conditions of the long-term unemployed today, we also need to offer them incentives and a pathway to building the skills that are required by the jobs that are being created. Simplistic mantras like “more stimulus” are the surest way to detract us from policies that generate sustainable growth.

K.R.அதியமான் said...

//நான் எதோ ஐரோபிய யூனியன் எதோ உலகுக்கே ஆதர்சன முறையாக வந்துள்ளது போல் சொன்னதாக சொல்வது போல் சொல்கிறீர்கள். இந்த பதிவிற்கும் நீங்கள் பேசுவதற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா? எந்த பதிவு படிக்கிறோம். என்ன எழுதி இருக்கிறார். அது பற்றி விவாதிப்போம் என்று நீங்கள் பின்னூட்டம் இட்டால் அது முறையானது. நான் கூறிய கருத்துகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை என்று சம்பந்தம் இல்லாத டாப்பிக்கை பற்றி எதாவது சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இடுவது எந்த வகையில் பொருத்தம். அதுவும் நான் எழுதாத கருத்தை பற்றி என் கருத்து அப்படி இருக்கும் என்று கற்பனையாக நினைத்து கொண்டு, அதுவும் சம்பந்தம் இல்லாத பதிவில் எழுதுவது நியாயம் இல்லை. அதனால் ய்கான் அதை ஜங்க் என்று எழுதினேன்
///

The crisis in Ireland was caused mainly due to it joinning Euro. repeat Euro. hence my referecen to Euro and relevant post from Cato Insitute. for the info of more sane readers here, i had pasted the relevant article too here.

So try to be rational and cool before writing nonsense as above.

All these issues : Euro, proping up of USD by Asian central banks, US govt subsidies and support to housing mortage firms (F.Mac and Fanny Mae), Fed's maintaining of interest rates near zero duing critical years (and this was not at the instance of private banks, as you try to assert blindly) are key aspects. Of course the bank too are to blame and are key players. No one denies that. Only you assert that Banks ALONE are responsible for all this.

Rajan's book is a eye opener for people like you. You get emotional and irrational when your arguments are refuted with links or quotes.
As i said earlier, you suffer from the arrogance of the ignorant.
ok.

K.R.அதியமான் said...

நண்பர் சதுக்க பூதம்,

அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிஸர்வ ஒரு தனியார் மற்றும் அரசின் கூட்டு முயற்சி. அதை பற்றி ஆங்கிலத்தில் பின்னுட்டமிட்டுள்ளேன்.

இந்த பொருளாதார சிக்கலுக்குகான ஊற்றுகண் மற்றும் மிக முக்கிய காரணி, ஃபெட் அதன் வட்டி விகிதங்களை கடந்த சில ஆண்டுகளாக மிக மிக குறைந்த அளவில் நிர்ணியத்துதான். இதை பற்றி இன்று மாற்று கருத்து யாருக்கும் இல்லை.
மற்ற காரணிகளான அமெரிக்க அரசின் மானியங்கள் மற்றும் வீட்டு கடன் பற்றிய கொள்கைகள், அமெரிக்க பட்ஜெட் பற்றாகுறை, அமெரிக்க டாலர் செயற்க்கையாக அதிக மதிப்பில் இருக்க ஆசிய நாடுகளின் டாலர் ரிஸர்வ்களை விற்காமல் அமெரிக டி.பில்களில் முதலீடு செய்யும் நிலை : இவை இதர காரணிகள். இவற்றை கொண்டு பேரழிவை ஏற்படுத்திய வங்கிகள்.

அமெரிக்க தனியார் வங்கிகள் (அங்கு அரசு வங்கிகள் இல்லை) தான் ஃபெட் இன் வட்டி விகுதத்தை தொடர்ந்து மறைமுகமாக நிர்ணியக்கின்றனர். தமது சுயனலத்திற்க்காக அவை ஃபெட்டை ஆட்டுவிக்கின்றன என்பது உங்கள் வாதம். இதே வாதத்தை முன் வைக்கும் எந்த ஒரு அறிஞர் அல்லது ஆய்வாளரையாவது காட்ட முடியுமா ?
எனக்கு தெரிந்து தீவர இடதுசாரிகள் கூட இப்படி சொல்வதில்லை.

ஃபெட் தனது செய்ல்பாடுகளை நாட்டின் பொருளாதார நலனை அடிப்படையாக கொண்டு தான் நிர்ணியக்கிறது என்பதே உண்மை. (பல சமயம் தவறான முடிவுகள். ஆனால் நோக்கத்தை பற்றி யாரும் இதுவரை நீங்கள் சொல்வது போல் கருதவில்லை).

நான் கேட்பதெல்லாம் ஏதாவது ஒரு ஆதாரம், நூல் ? பால் க்ருக்மேன், ஜோசஃப் ஸ்டிக்லிஸ் அல்லது வேறு யாராவது ? சொல்ல முடியுமா ?

//ஏன் எதுக்கு எடுத்தாலும் அவர் என்ன சொன்னார்? இவர் என்ன சொன்னார் என்று பார்க்கிறீர்கள். நான் முன்பே சொல்லி விட்டேன் . யாரும் பொருளாதார கடவுள் இல்லை.//

அப்ப நீங்க மட்டும் ஏன் பல நூல்களை, அறிஞர்களை மேற்கோள் காட்டுகிறீர்கள். நான் அதை செய்தால் இப்படி கூறுவதை என்னவென்பது ?

யூரோ உருவாகாமல் அல்லது அதில் அயர்லாந் சேராமல் (செக் நாடு போல) இருந்திருந்தால் அயர்லாந் இன்றை சிக்கலை சந்தித்திருக்காது என்பதையே நான் அளித்த பதிவு மிக மிக தெளிவாக நிருபிக்கிறது. வங்கிகள் மட்டும் தான் குற்றவாளிகள் என்ற உங்கள் வாதம் இதில் மறுக்கப்படுகிறது. வங்கிகளின் செயல்களை யாரும் மறுக்க வில்லை. ஆனால் மிக குறைந்த மத்திய வங்கி வட்டி விகுதங்கள் மற்றும் யூரோ
இல்லாமல் அவை இந்த அழிவை செய்திருக்கவே முடியாது.

எனக்கு தெரிந்து மத்திய வங்கியின் வட்டி விகுதங்களை தனியார் வங்கிகள் தந்திரமாக, அயோக்கியத்தனமாக, தனது லாபத்திற்காக கட்டுபடுத்தி தீர்மானிக்கின்றன என்ற குற்றச்சாட்டை எந்த ஒரு பொருளாதார நிபுணரும், அமைப்பும் கூறி கேட்டதில்லை. நீங்கள் தான் முதன் முறையாக அனுமானிக்கின்றீர்கள். யாராவது இதே போல் சொன்னதாக நிருபியுங்களேன்.

சதுக்க பூதம் said...

//this applies to you too. instead of trying to answer to the basic issue : whether anyone anywhere had proved that the Fed's actions (esp fixing of interest rates) is mainly controlled by Amercan Banks.

The US banks totally control Fed. The interest rate of Fed is fixed thru proxy by these banks in a selfish and cynical mannner with the agenda of enriching the banks. Fed does not act for the good of the national economy and is neither independent nor under the control of US govt. this is your assertation, which no one else does.

I challege you to prove this above. IF possible try to quote any book or site or article from anywhere. All i can say is that your assertation is totally wrong.

Fed is controlled by US govt and is answerable to Congress. and it acts for the nation and not for the private banks.//

பெட் யாருடைய கண்ட்ரோலில் இருக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லை.பெட் எவ்வாறு ஆரம்பிக்கபட்டது? அதன் ஷேர் ஹோல்டர் யார் என்று அறிந்து கொள்ள பல புத்தகங்களின் லிங்கை கொடுத்து விட்டேன்(நீங்கள் லிங்க் கேட்டதால்). முதலில் அதை படித்து அமெரிக்க பொருளாதார முறை எப்படி நடைபெருகிறது என்ற அடிப்படை உண்மையை அறிந்து கொண்டு விவாதத்தை தொடருங்கள். பெட்டுக்கும் அமெரிக்காவிற்கும் இடைபட்ட தொடர்வு இந்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடைபட்ட தொடர்பை( அதாவது மத்திய அரசின் முழு கட்டு பாடில் பெட் இருப்பது) போல் தொடர்ந்து எழுதுகிறீர்கள். முதலில் பெட்டின் ஷேர் ஹோல்டர் யார் என்று பாருங்கள். உண்மை புரியும்). முதலாளித்துவத்தின் அடிப்படையே ஷேர் ஹோல்டர்களுக்கு லாபத்தை ஏற்படுத்தி கொடுப்பது தான் என்பது ஊரறிந்த உண்மை.
இதற்கும் ரகுராம் ராசன் எழுதிய லிங்கை கொடுத்தால் தான் நம்புவேன் என்றால், நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் உலக பொருளாதார பிரச்ச்னைகளை ஆராயும் பலரது கருத்துக்களை படித்து விசாலமான அறிவு ஏற்பட்டால் ரகுராம் ராசன், பலநூறு பொருளாதார வல்லுனர்களில் அவரும் ஒருவர் என்று புரியும்( அவர் என்றும் தெரியாதவர் என்று நான் எங்கும் சொல்ல வில்லை. அவர் ஒன்றும் messiah அல்ல.)


பெட்ரோடாலர் - உலக வர்த்தத்திற்கான டாலரின் தேவை - பிற நாடுகள் டாலரை குவிக்க தேவையான அவசியம் - டாலருக்கான உலக தேவையின் demand பெருக்கம் - அமெரிக்க குறைந்த வட்டி விகிதம் - அமெரிக்க வங்கிகளின் கொள்ளை - உலகமயமாக்கல் - Financial globalization
மேற் கொண்ட தொடர்பு பற்றி நான் எழுதிய இடுக்கையை காட்டி விட்டேன். அதில் பொருளாதாரம் பற்றி அடிப்படை புரியாமல் இருக்கும் fesh reader க்கு கூட புரிந்து கொள்ள எளிமையாக விளக்கி உள்ளேன். அதை படித்து தெளிந்து கொள்ளுங்கள். அதை படிக்காமல் மீண்டும் மீண்டும் லிங்க் கொடு என்றால் நான் என்ன செய்ய முடியும்.



Fed என்பது அமெரிக்க மக்களின் நன்மைக்காக பாடு படவில்லை, அது ஒரு Banking Cartel அதை ஒழிக்க வேண்டும் என்று "EndtheFed" என்ற மாபெரும் இயக்கம் ஆரம்பிக்க பட்டுள்ளது.அதை ஆரம்பித்த Ron Paul தற்போது அமெரிக்க நிதி நிர்வாகத்தை கவனிக்கும் சென்ட் சபையில் முக்கிய பொருப்பேற்று உள்ளார்.
Fed என்பது அமெரிக்க அரசின் முழு கட்டுபாட்டில் இருந்தால் கென்னடி எதற்கு பணத்தை அரசே வெளியிட Executive Order 11110 வெளியிட்டார்? கொலை செய்ய பட்டார்? தெரியவில்லை என்றால் wiki இன் கீழ் காணும் லிங்க் போய் பாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Executive_Order_11110

சதுக்க பூதம் said...

நான் தமிழ்மணம் நட்சித்திர வாரமாக இருப்பதால் சில நல்ல பதிவுகளை நேரம் செலவு செய்து போட வேண்டும் நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் விவாதத்துக்காக அதிக நேரம் செலுத்தியதால் அது இயலவில்லை. இருந்தும் உங்களுக்கு நான் பொருமையாக பதில் சொல்லி கொண்டு இருக்கிறேன், அதற்கு வாசகர்கள் மீது உள்ள மதிப்பு தான் காரணம். ஆனால் நீங்கள் அடிப்படை புரியாமல், நான் கொடுத்த லிங்க்கையும் படிக்காமல், நீங்களகவும் பிறவற்றையும் படிக்காமல் மீண்டும்,மீண்டும் லிங்க் கொடு ஒத்து கொள்ள மாட்டேன் என்றால் நான் என்ன சொல்ல முடியும்.

உங்களுடைய வாதத்தின் போக்கு கிட்ட திட்ட சென்ற முறை நடந்தது போல் சென்று கொண்டு இருக்கிறது. இது வழக்கம் போல் உங்கள் standard கெட்ட வார்த்தையில் முடியும் போல் இருக்கிறது

யூரோ பிரச்ச்னை வேறு. அதுவும் ஐரோப்பிய வங்கிகளினால் ஏற்படுத்த பட்ட பிரச்ச்னை தான். யூரோ என்பதே அய்ரோப்பிய வங்கிகள் கொள்ளை அடிக்க செய்யபட்ட ஏற்பாடு தான். யூரோ பிரச்ச்னை தனியாக விவாதிக்க பட வேண்டிய வேறு பிரச்ச்னை. அய்ரோப்பிய யூனியன் என்பது அரசியல் அமைப்பு தான். பொருளாதாரத்துக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியதன் மூலம் உங்கள் பொருளாதார அறிவு நன்றாகவே தெரிகிறது.

(உங்கள் விருப்ப படி) நான் கொடுத்த லிங்க் புத்தகத்தை படித்து அல்லது வேறு அமெரிக்க நிதி துறையின் அடிப்படையை படித்து புரிந்து கொண்டு விவாதத்துக்கு வாருங்கள். தொடரலாம். அதை விட்டு நான் கொடுத்த லிங்குகளை படிக்காமலேயே லிங்க் கொடு, லிங்க் கொடு என்றால் நான் என்ன செய்ய முடியும். இது கிட்ட திட்ட
சந்தைக்கு போகுனும் காசு கொடு. ஆத்தா வையும் என்ற கதையாக உள்ளது.


சில பொருளாதார அடிப்படியை புரிந்து கொள்ள கிழ் காணும் wikipedia லிங்க் சென்று படியுங்கள்

http://en.wikipedia.org/wiki/Dollar_hegemony
http://en.wikipedia.org/wiki/Exorbitant_privilege
http://en.wikipedia.org/wiki/Triffin_dilemma

நான் மேலே கொடுத்த லிங்க் தனிபட்ட வல்லுனர்களின் கருத்தை என் வாதத்துக்கு ஆதாரமாக கொடுப்பது இல்லை. பொதுவாக wikipedia என்பது தனி பட்டவர்களின் விமர்சனம் இல்லாமல் உண்மையை மட்டும் தெரிய படிப்பது.

எனக்கு நேரம் கிடைக்கும் போது அனைவருக்கும் புரியும் படி எளிமையாக பொருளாதார ஜார்கன் இல்லாமல் இது பற்றி பதிவிடுகிறேன். தற்போது எனக்கு அதற்கு நேரமில்லை. மன்னிக்கவும்.

சதுக்க பூதம் said...

//அப்ப நீங்க மட்டும் ஏன் பல நூல்களை, அறிஞர்களை மேற்கோள் காட்டுகிறீர்கள். நான் அதை செய்தால் இப்படி கூறுவதை என்னவென்பது ?

//

Are you joking? Initially I didn't give any links. It is you , who asked the links. So I gave. Now you are telling that you also gave links. What happened to you?

சதுக்க பூதம் said...

பெடரல் ரிசர்வ் அமெரிக்க அரசின் கட்டுபாட்டில் இல்லாத வங்கி என்றும் தனியார் ஷேர் ஹோல்டராக உள்ள வங்கி என்றும், அது தனியார் வங்கிகளின் நலனுக்கு தான் முக்கியத்துவம் செலுத்தும் என்றும் நான் சொல்லியதை நிருபிக்க லிங்க் கொடுக்க சொன்னீர்கள். அதற்கு புத்தகம் மற்றும் லிங்க் கொடுத்து விட்டேன். அதை படிக்காமலேயே மீண்டும் மீண்டும் லிங்க் கொடுக்க சொன்னீர்கள்.
பெடரல் ரிசர்வின் ஆதியிலிருந்து அந்தத்தை அறிந்து கொள்ள ஒரு டாக்குமென்டரி படத்தின் லிங்கை என் தற்போதைய கடைசி பதிவில் கொடுத்து உள்ளேன். அதை முழுதும் பார்த்து உண்மை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் விவாதமும் முன்பு போலே( கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிப்பது) nonsense etc என்று ஆரம்பிக்கிறது.
நான் கொடுத்த லிங்க் மற்றும் புத்தகங்களை படித்து அடிப்படையை புரிந்து கொண்டு விவாதத்திற்கு வாருங்கள் என்றேன். எனவே உங்களுக்கு அமெரிக்க நிதி நிர்வாகம் பற்றி தெளிவு கிடைத்தபின் விவாதத்தை தொடரலாம் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் அதே comments spam செய்வதால் என் முன் பின்னூட்டத்திலேயே விவாதத்தை தற்காலிக்கமாக நிறுத்தி விட்டேன். அதையும் அந்த பதிவிலேயே தெரிவித்து விட்டேன்.

K.R.அதியமான் said...

SAthukka Bootham,

You are not democratic in allowing my comments which ask for a simple proof.

all i asked repeatedly was any article by any economist which corroborates your conspiracxy theroy. that is Fed interest rates are fixed not on national interest but for bank's selfish goals. that is your theory and no one has said that so far in these years. Don't quote books. Why don't you quote any post by Paul Krugman or Stiglitz or any other analyst who explictly support your 'views' ?

Fed ownership is open and no big deal. Why no one has expressed this conspiracy theroy.

You refuse to publicise my recent tamil comment about Ron Paul. You quote him and i explained it. and about other issues. This is not SPAM, but shows your intolerence. that is all. this shows how honest you are in arguing. I never block any comment from anyone.

When fed maintained its interest rates at near zero for many years in the 2000s, till date no one has accused it of being unethical. Why ? This is such a important matter and it is surprising that no one has shared your 'conspiracy' theroy.

Anyway, you can block my comments. No big deal.

சதுக்க பூதம் said...

//SAthukka Bootham,

You are not democratic in allowing my comments which ask for a simple proof.//
அதியமான் யார் டெமாக்ரடிக் இல்லை?

அபாச வார்த்தைகளை கொண்டு கேவலமாக திட்டிய பின்பும் உங்கள் பின்னூட்டங்களை நான் பிரசுரித்து வந்தது டெமாக்ரெடிக்கா இல்லையா? எத்தனை பின்னூட்டங்களை இந்த பதிவிலேயே நான் இட்டுருக்கிறேன் என்று நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.
தமிழில் பின்னூட்டம் இடுங்கள் என்றேன். தொடர்ந்து ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டீர்கள் அதையும் பதிவிட்டேன்
நான் மீண்டும் ஆபாசமாக எழுதுவது/ திட்டுவது போன்றவற்றை செய்யாதீர்கள் என்று சொன்ன பின்னும் மீண்டும் அவ்வாறே செய்ய(nonsense etc) ஆரம்பித்து பின்னூட்டம் இட்டு, மீண்டும் தொடர்ந்து உங்கள் பின்னூட்டத்தை வெளியிட வேண்டும் என்று சொல்வது உங்களுக்கே over ஆக தெரியவில்லை. காரணத்தை தெளிவாக தெரிவித்த பின் தான் பின்னூட்டத்தை வெளியிடுவதை நிறுத்தியுள்ளேன்.
ஆபாசமாக பின்னூட்டம் இடுபவர்களின் பின்னூட்டத்தை யாராயிருந்தாலும் தடை செய்வார்கள்.

//all i asked repeatedly was any article by any economist which corroborates your conspiracxy theroy. that is Fed interest rates are fixed not on national interest but for bank's selfish goals. that is your theory and no one has said that so far in these years.

பெடரல் வங்கி அமெரிக்க மத்திய அரசினுடையது அல்ல. அது ஒரு Banking cartel, அது யாருடைய பலனுக்கு வேலை செய்கிறது என்பதை விளக்கும் புத்தகத்திற்கான லிங்க் கொடுத்து விட்டேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் திரும்பி திரும்பி அதையே கேட்கிறீர்கள். நான் மேற் சொன்ன புத்தகங்களை படியுங்கள் என்று பல முறை சொல்லி விட்டேன். அதை படிக்காமல் மீண்டும் மீண்டும் லிங்க் கொடுங்கள், கான்ஸ்பிரசி தியரி என்று சொல்லி கொண்டு இருந்தால் நான் என்ன செய்யமுடியும்.

என்னால் புத்தகங்களை வாங்கி உங்கள் வீட்டுக்கு வந்து வாசித்து காட்ட முடியாது. அது பிராக்டிகலாக பாசிபில் இல்லை. மன்னிக்கவும்.நீங்கள் தான் படிக்க வேண்டும்.

பெட்டின் ஷேர் ஹோல்டர்கள் யார் என்று இணைய தளத்தில் பார்த்தால் தெரியும். டாடா கம்பெனி என்றுமே பிர்லா கம்பெனியின் ஷேர் ஹோல்டர்களின் நன்மைக்காக பாடு படாது. டாடா கம்பெனி டாடா கம்பெனியின் ஷேர் ஹோல்டர் நன்மைக்காக தான் செயல்படும். இது தான் பொருளாதார அடிப்படை. இதை நிருபிக்க பெரிய பொருளாதார அறிஞ்சர்கள் எல்லாம் தேவை இல்லை. அவ்வாறு செய்வதை முதலில் கான்ஸ்பிரசி தியரி என்று சொல்ல கூட முடியாது. அது தான் நியதி. பெட் தன் ஷேர் ஹோல்டர்களின் நன்மைக்கு தான் செயல்படும்.முதலில் Fed அமெரிக்காவின் நன்மைக்காக செயல்பட்டால் ஏன் அதை Audit செய்ய வேண்டும் என்று சொன்ன போது ஒத்து கொள்ளவில்லை

சதுக்க பூதம் said...

பெட்ரோடாலர் - டாலர் உலக பொது நாணயமாக இருப்பது - டாலரின் demand உலக மார்கெட்டில் உயர்த்தி வைப்பது - dollar denominated asset-க்கு அதிக மதிப்பை சர்வதேச சந்தையில் நிலை நிறுத்துவது -- அதனால் டாலர் அடிபடையிலான கடனுக்கு குறைவான வட்டி நிலை நிறுத்துவது -அதனால் உள் நாட்டு கம்பெனிகளுக்கும், வங்கிகளுக்கும் குறைவான வட்டிக்கு பணத்தை கொடுப்பது - குறைவான வட்டி பணத்தால் வீக்கம் ஏற்படுவது -அரசு போருக்கு cheap finance செய்வது- அந்த பணத்தை கொண்டு வளரும் நாடுகளை சூறையாடுவது இது பற்றி தான் பெட்ரோடாலர் பதிவிலேயே சொல்லி விட்டென். அப்போது அதை ஏற்றுகொள்ளவில்லை. இப்போது மட்டும் ஞானோதயம் எங்கிருந்து வந்தது?

முதலில் கோட் கொடு என்றீர்கள். சரி கோட் கொடுத்தால் புத்தகத்தை கொடுக்காதீர் என்கிறீர்கள். Are you out of mind?அப்புறம் ரகுராம் கோட் மட்டும் கொடு என்பீர்கள்.
ஐயா நான் எத்தனை தடவை கூறிவிட்டேன், நான் ஒன்றும் கிரக்மேன் மற்றும் ஜோசப்பின் கொள்கைகளின் அடிமை அல்ல என்று. ஆதாரம் கேட்டீர்கள். கொடுத்தாயிற்று. அதை படிக்க விருப்பம் இல்லை அல்ல்லது நான் கொடுத்த வீடியோ லிங்கை பார்க்க விருப்பம் இல்லை என்றால் வாதத்திற்கு ஏன் வருகிறீர்கள்.அதை படித்து உண்மையை புரிந்து கொள்ளாமல் விதண்டா வாதம் செய்தால் நான் என்ன தான் செய்வது.



//Fed ownership is open and no big deal. Why no one has expressed this conspiracy theroy.//

ஆரம்பத்தில் உணமை புரியாமல் அரசினுடையது என்று சொல்லி விட்டு தற்போதாவது உண்மையை ஒத்து கொண்டதற்கு நன்றி. உங்கள் ரகுராம் இதை பற்றி எழுதா விட்டால் உலகில் யாருமே எழுதவில்லை என்று நினைக்காதீர்கள். அது பற்றிய புத்தகத்தை லிங்க் கொடுத்துவிட்டேன்.வீடியோவின் லிங்கையும் கொடுத்து விட்டேன். வேறு என்ன தான் செய்ய முடியும் .

குவாண்டிடேடிவ் ஈசிங் 2 என்ற பெயரில் டிரில்லியன் டாலர் பணத்தை பெட் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளுக்கு தூக்கி வீசியது பற்றி எத்தனையோ பதிவிட்டு விட்டென். முதலில் அந்த விவரத்தை பெட் தர மறுத்து பின் கடுமையான அழுத்தத்துக்கு பிறகு தான் அதை வெளியிட்டது உலகறியும்.இதுவே பெட் யாருடைய நன்மைக்கு செயல்படுகிறது என்பதற்கான உதாரணம்.


சொன்ன புத்தகங்களை தான் படிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அதையே சொல்லி கொண்டு இருத்ததற்காக fed ஆதியையும் அந்தத்தையும்,அது யார் நலனுக்காக செயல்படுகிறது விளக்கும் வீடியோ லிங்கை தனி பதிவாகவே உங்களுக்காக வெளியிட்டு விட்டேன். அதையும் பார்க்காமல் மீண்டும் மீண்டும்

ஆத்தா வையும், சந்தைக்கு போணும் காசு கொடு

என்ற கதையாக லிங்க் கொடு நீ மட்டும் தான் சொல்ற என்று திரும்ப திரும்ப சொன்னால் ஒரு மனிதனால் என்ன தான் செய்ய முடியும்.அந்த வீடியோவின் slang கூட எளிமையாக புரியும் படி தான் உள்ளது

http://tamilfuser.blogspot.com/2011/01/blog-post_8153.html
http://video.google.com/videoplay?docid=-515319560256183936#

அது மட்டுமின்றி வாதத்துக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதால் சம்பந்தம் இல்லாமல் நான் எதோ அமெரிக்காவில் மாற்று கருத்துக்கு பேச்சுரிமை இல்லை என்று மறுப்பவன் போலவும், அமெரிக்காவில் பேச்cசுரிமை இருப்பது பற்றியும், யூரோப்பியன் யூனியன் நல்லது என்று நான் சொன்னது போல் அதௌ தவறானது என்றும் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் விவாதத்தை திசை திருப்புகிறீர்கள். விவாதத்தை முழுதும் படித்து பாருங்கள். நீங்கள் வைக்கும் வாதத்துக்கு எல்லாம் பதில் கொடுத்தவுடன் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் மேற் சொன்னவாறு விவாதத்தை திசை திருப்புகிறீர்கள்.
கூகிளில் சென்று தேடி பாருங்கள் லட்ச கணக்கில் ஆதாரம் கொட்டி கிடக்கும்.
லிங்க் கொடு, லிங்க் கொடு என்று கேட்டு விட்டு கடைசியில் என்க்கு சொந்த புத்தி இல்லாதது போலவும் நீங்கள் தானே லிங்க் கொடுக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.

சதுக்க பூதம் said...

//You refuse to publicise my recent tamil comment about Ron Paul. You quote him and i explained it. and about other issues. This is not SPAM, but shows your intolerence. that is all. this shows how honest you are in arguing. I never block any comment from anyone.//

நான் மேலே குறிபிட்ட காரணங்களால் விவாதத்தை முடித்து விட்டேன்( முக்கியமாக விவாதம் வேறு திசை நோக்கி போவதை உங்களுக்கு சுட்டி காட்டிய பிறகு) என்று சொன்ன பின் வந்த பின்னூட்டங்களை மட்டும் பதிவிடவில்லை. அதற்கு முன் வந்த பின்னூட்டங்கள் அனைத்தையும் பதிவிட்டு விட்டேன்

பெட் என்பது தனியார் வங்கிகளுக்கு பணத்தை அள்ளி வீசுவதையும் அது மறை முகமாக செயல்படுவதை தடுக்க "Audit the Fed" மற்றும் "End the Fed" ஆகியவற்றை அவர் வலியிருத்துகிறார் என்று தான் நானே சொல்லி விட்டேனே?

http://www.youtube.com/watch?v=Ysk64ZEnv8g

ரான் பால் போல் நான் ஒரு லிபரடேரியன்{???) என்று சொல்லி கொள்ளும் நீங்கள் பெடரல் ரிசர்வுக்கும் கோல்ட்மேன் சாக்ஸுக்கும் உள்ள தொடர்பு பற்றி ரான் பாலே சொன்ன வீடியோவை பாருங்கள். இதை விட மிக பெரிய ஆதாரம் எதுவும் நீங்கள் எதிர் பார்க்கிறீர்களா? எனன?

சதுக்க பூதம் said...

வங்கிகளுக்கும் பெடரல் ரிசர்வுக்கும்,நிதி நெருக்கடிக்கும் உள்ள தொடர்பை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


http://www.youtube.com/watch?v=XPIFHBOsUug&feature=related

நிங்கள் சொல்லும் ஆஸ்ட்ரியன் லிபெரடேரியன் சைட்டான misesல் ராபர்ட் மர்பி பெடரல் ரிசர்வுக்கும், பெரிய வங்கிகளுக்கும் இடைபட்ட தொடர்பை புட்டு புட்டு வைக்கிறார்.

http://mises.org/media/4827/How-Bernanke-Is-Using-the-Printing-Press-to-Win-Friends-and-Influence-People

நீங்கள் சொல்லி கொள்ளும் லிபரடேரியன் கூறும் ஆதாரத்தை கொண்டே பெடரல் ரிசர்விற்கும் தனியார் வங்கிகளுக்கும் இடைபட்ட தொடர்பை நிருபித்துள்ளேன்


அனைத்து தரப்பிலிருந்தும் ஆதாரத்தை தெளிவாக லிங்கோடு கொடுத்து விட்டேன். இதற்கு மேலும் என் வாதத்தை மீண்டும் புருவ் செய்ய சொன்னால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த பதிவை படிக்கும் வாசகர்கள் அனைத்து வாதங்களையும் படித்து இந்த வீடியோக்களை பார்த்தால் என் வாதத்தின் உண்மை தெளிவாக புரியும். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.



When fed maintained its interest rates at near zero for many years in the 2000s, till date no one has accused it of being unethical. Why ? This is such a important matter and it is surprising that no one has shared your 'conspiracy' theroy.

பெரும் வங்கிகள் பெட்டின் முடிவை எவ்வாறு கட்டுபடுத்துகிறது என்பதற்கு மேற் சொன்ன ஆதாரம் போதும் என்று நினைக்கிறேன்

//Anyway, you can block my comments. No big deal. //

இந்த கடைசி வார்த்தைக்காக தான் இந்த பின்னூட்டத்தை இட்டு இதை படிக்கும் அனைவருக்கும் என்ன உண்மை என்று தெரிய வாய்ப்பளித்துள்ளேன்.

Anonymous said...

Great site. A lot of useful information here. I’m sending it to some friends!