Monday, January 24, 2011

Wikileak- FedLeak - நீரா ராடியா Tape Leak

சமீப காலமாக இந்தியா மற்றும் உலகை கலக்கி வரும் செய்தி Wikileak,FedLeak ,நீரா ராடியா Tape Leak என்ற மூன்று செய்தியாகத்தான் இருக்கும். இந்த மூன்று செய்தியும் ஊடகங்களால் பல தரபட்ட கோணங்களில் மக்களிடம் கொண்டு செல்ல பட்டாலும் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ள Crony Capitalism பற்றி யாருமே வாய் திறக்காதது ஆச்சரியமான செய்தி.

முதலில் நாம் அனைவரும் அறிந்த நீரா ராடியா டேப்பிற்கு வருவோம்.நீரா ராடியா டேப்பின் மூலம் தி.மு.கவும், அக்கட்சியின் அதிகார வர்க்கத்தினரும் அடித்த கொள்ளை பற்றி மட்டும் மிக அதிக அளவில் பேச படுகிறது. ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை விசாரணைக்கு உட்படுத்துவது அல்லது தண்டனை பெற்று தருவதன் மூலம் இந்த பிரச்ச்னையை தீர்க்க வேண்டும் என்று அனைத்து ஊடகங்களும் போர்கொடி நாட்டி வருகிறது. ஆனால் இந்த பிரச்ச்னை Tip of the iceberg தான். இந்த பிரச்சனையின் அடிப்படையை ஆராய்ந்தால் நமது கட்டமைப்பிலேயே பெரிய பிரச்சனை இருப்பது தெரியவரும்.

நான் கல்லூரியில் படிக்கும் போது எனது தோட்டகலை ஆசிரியர் ஒரு செய்தி கூறுவார். மின் கம்பங்களின் அருகில் மரம் இருக்கும் போது அதன் கிளை மின் கம்பியை உரசும் போது, மின் வாரிய தொழிலாளி அடிப்படை காரணத்தை புரியாமல் கிளையை மட்டும் கழித்து விடுவார். அது மரத்திற்கு prunning செய்தது போல் ஆகி,அடுத்த சீசனில் பல கிளைகளை உருவாகி கம்பியை மீண்டும் உரசும். எனவே கிளை எவ்வாறு வளர்கிறது, அதன் வளர்ச்சியை தடுக்க, நிரந்திர தீர்வை உண்டாக்க அறிவியல் பூர்வமாக எவ்வாறு prunning செய்ய வேண்டும் என்று புரிந்து செயல்பட வேண்டும்.இது மரத்திற்கு மட்டும் பொருந்த கூடியது அல்ல. இன்றைய அரசியல் ஊழல்களுக்கும் பொருந்தும். பிரச்சனையின் அடிப்படையை ஆராய்ந்தால் ஒழிய இதற்கு தீர்வு இல்லை.

நீரா ராடியா டேப் விஷயம் ஒரே ஒரு ஊழல் பற்றியது மட்டும் அல்ல. நாட்டில் நடக்கும் பல்லாயிரம் ஊழல்கள், ஏன் மிக பெரிய அளவில் நடக்கும் ஊழல்கள் அனைத்தின் சம்பத்த பட்டது.இந்த விவகாரத்தில் முக்கியமாக பார்க்க வேண்டியது மீடியாக்களுக்கும் இடை தரகர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு மற்றும் மிக பெரிய வர்த்தக குடும்பங்களுக்கு அரசியலில் இருக்கும் செல்வாக்கும் ஆகும். மிக பெரிய வியாபார குடும்பங்கள் தரகு லாபியை கொண்டு அரசு சொத்தை கொள்ளை அடிப்பதும், ஒவ்வொரு துறையிலும் monopoly அல்லது oligopoly ஆக வளர முயல்வதும் குறிப்பிட தக்கது. இதே வியாபார குடும்பங்கள் மீடியாக்களை வளைத்து போட்டு அரசின் கையில் இருக்கும் தொழில் துறைகளை தனியாருக்கு(தங்களுக்கு) தாரை வார்க்க அழுத்தம் கொடுத்து சந்தை பொருளாதாரம் பற்றி வாய் கிழிய பேசி crony capitalism நோக்கி அழைத்து செல்வது தான் கொடுமை.

இதில் அதிர்ச்சியான செய்தி மீடியாக்களுக்கும்(முக்கியமாக வட இந்திய ஊடகங்கள்) இடை தரகர்களுக்கும் இடைபட்ட தொடர்பு. தேர்தல் நேரத்தில் பல பெரிய ஊடகங்கள் தவறான முன்னிலை நிலவரங்களை கருத்து கணிப்பு என்ற பெயரில் வெளியிட்டு மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்வது வாடிக்கையான செய்தி. ஆனால் தற்போது வெளி வந்திருக்கும் செய்தியை பார்த்தால் அவர்கள் வெளியிடும் பொருளாதார மற்றும் அரசியல் செய்தி யாவும் இடை தரகர்களிடம் பணம் வாங்கி கொண்டு Power Broker ஆக செயல்பட்டு திரிக்க பட்ட செய்தி என்பது தெளிவாகிறது. ஒரு புறம் திரிக்க பட்ட செய்தி வெளியாகிறது. மறுபுறம் பல முக்கிய செய்திகள் இருட்டடிப்பு செய்ய படுகிறது. உதாரணமாக தனியார் பெட்ரோலுக்கு கொடுக்க படும் மான்யம் குறித்த செய்தி. அரசுக்கு பல கோடி இழப்பை ஏற்படுத்தும் முடிவுகள் பத்திரிக்கைகள் வெளியிடாவிட்டால் மக்களை சென்றடையாது. இது போல் எத்தனை லட்சம் கோடி ஊழல்கள் பற்றிய செய்தி மறைக்க பட்டது என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.ஜனநாயகத்தின் காவலர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் பணநாயகத்தின் காவலர்களாக மாறுவது வருத்தத்திற்கு உரியது.

அடுத்து ஒரு சில பெரிய வர்த்தக குடும்பத்தின் பிடியில் ஒட்டு மொத்த இந்திய அரசே இருப்பது.டேப்பில் வெளி வந்த செய்தி படி பார்த்தால் ஒவ்வொரு துறை சார்ந்த தொழிலில் இருக்கும் மிக பெரிய வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை மந்திரியாக அமர்த்த லாபி செய்து வெற்றியும் பெருகின்றனர். அதன் விளைவு அந்த துறைகளில் இருக்கும் பொது துறையின் வளர்ச்சி systematic ஆக ஆழிக்க பட்டு தனியார் மயமாக்கபடும். தனியார் மயமாக்களும் முறையாக நடு நிலையுடன் சந்தை பொருளாதாரத்துக்கு ஏற்ற வாறு தனியார் துறையில் போட்டியை அதிக படுத்தி, பல கம்பெனிகளை களத்தில் கொண்டு வந்து போட்டியின் மூலம் மக்களுக்கு நல்ல சேவையை தருவதாக இருக்காது. இந்த குடும்ப நிறுவனங்களும், ஒரு சில அரசியல்வாதிகளும் மலிந்த குத்தகைக்கு ஒட்டு மொத்தமாக ஏலம் எடுத்து(நேரடியாக அல்லது மறைமுகமாக) பெரிய லாபம் சம்பாதிக்க உதவுவர்( வரும் காலத்தில் அவர்கள் ஒரு பன்னாட்டு கம்பெனியிடம் விற்று சென்றாலும் சென்று விடுவார்கள்).இது நமது பொருளாதாரத்தில் கேன்சரை விட கொடிய வியாதி. இதை தடுப்பது பற்றி யாருமே வாயை திறக்கவில்லை.மீடியாகளின் மூலம் நேர்மையான நிறுவனம் என்று அடையாளபடுத்தி வரும் டாடா நிறுவனம் கூட இதற்கு விதி விலக்கு அல்ல என்பது வருத்தமான செய்தி.

இது போன்ற செயல்களால் அரசுக்கோ, சாதாரண மனிதர்களுக்கோ, போட்டி சார்ந்த தனியார் துறைக்கோ பயனில்லை. பயனடைய போவது எல்லாம் ஒரு சில அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பமும், பெரிய வர்த்தக குடும்பங்களும் தான்.தற்போதைய பிரச்சனை ராசா மட்டும் அல்ல. ஒட்டு மொத்த system தான். அதை சரி செய்ய தற்போது முயற்சி எடுக்காவிட்டால் அதன் விளைவு மிக பயங்கரமாக இருக்கும்.ராசாவை மட்டும் CBI விசாரிப்பதால் இதற்கு முடிவு ஏற்பட போவது இல்லை.காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு துறையிலும் நிபுணுத்துவம் வாய்ந்தவரக்ளை ஒட்டு மொத்தமாக அழித்து ஜால்ராக்களை தலைவர்களாக இந்திரா காந்தி கொண்டு வந்ததாலும், திடீரென அதிகாரம் கிடைக்கும் மாநில கட்சிகளில், அறிவு ஜீவிகள் யாரும் இல்லாததும் திறமை வாய்ந்த மந்திரிகள் கிடைப்பதில் பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது( பா. ஜ. க பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் இந்திய முதலாளிகளின் ஏஜெண்டுகளாக தான் கொள்கை அளவிலேயே இருக்கிறார்கள்)..

ஒட்டு மொத்த மீடியாக்களும் ராசாவையும், தி.மு.கவின் ஊழல் பற்றி மட்டும் செய்தி வெளியிட்டு, பிரச்சனையின் அடிப்படை காரணியாக இருக்கும் Corporate lobbying மற்றும் பெரிய வியாபார குடும்பங்களின் சுரண்டல்களை ஒட்டு மொத்தமாக இருட்டடிப்பு செய்துவிடும். மக்களும் அரசியல்வாதியை திட்டி விட்டு, எதாவது ஒரு நடிகையின் விபச்சாரம் பற்றிய செய்திகள் செய்தி தாளில் வந்தால் இந்த பிரச்ச்னையை மறந்து விடுவார்கள். பெரிய வியாபார நிறுவனங்களின் அரிச்சந்திரன் வேடமும் கொள்ளையும் தொடர்ந்து நடக்கும்.சில வருடங்களில் அரசியல்வாதியும் பிரச்ச்னையிலிருந்து நீதிமன்றம் மூலம் விடுவிக்க படுவார்.

அடுத்தது Federal Reserve வெளியிட்டுள்ள கடன் கொடுத்தோர் பட்டியல் செய்திக்கு வருவோம். பொருளாதார நெருக்கடியின் போது கணக்கு வழக்கின்றி தனியார் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனை அள்ளி வீசியது Fed. ஆனால் அந்த விபரங்களை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மை பாதிக்க படும் என்று காரணம் கூறி மறித்து வந்தது . தற்போது மிகுந்த அழுத்தத்திற்கு பிறகு அது உண்மைகளை வெளியிட்டது. இதன் மூலம் டிரில்லியன் கணக்கிலான கடன்கள் அமெரிக்கா, ஐரோப்பிய தனியார் வங்கிகள் மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்க பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கடன் பெருவோரை முடிவு செய்யும் உரிமை. இந்த கடன்களின் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு எந்த ஒரு வெளிபடையான முறையையும் செயல்படுத்த படுவது இல்லை. Fed அதிகாரிகள் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்களாம். இந்த நடைமுறையும் ரகசியமாக இருக்கும். அதுமட்டுமன்றி Fed கணக்குகள் முறையாக தணிக்கை செய்ய படுவது இல்லை. கடன் கொடுக்க பணத்தை உருவாக்குவதும் எளிது. கம்ப்யூட்டரில் ஒரு பட்டனை தட்டுவதன் மூலம் பில்லியன் டாலரை உருவாக்க முடியும். அவ்வாறு உருவாக்க படும் பணத்தை முறையான தணிக்கை இல்லாததால் எப்படியும் பயன் படுத்த முடியும்.

இதுவும் ஒரு வகையில் இந்திய ஊழலோடு ஒப்பிடலாம். அதாவது Fed நிறுவனத்தினர் பலம் வாய்ந்த வங்கிகளுக்கும், பன்னாட்டு வங்கிகளுக்கும் நிதி நெருக்கடி காலத்தில் இவ்வாறு கடன் கொடுப்பதன் மூலம், பிரச்ச்னையில் சிக்கியுள்ள அவரது போட்டி நிறுவனங்களை விழுங்கி ஒவ்வொரு துறையுள்ளும் oligpoly அல்லது monopoly நிலைக்கு கொண்டு வர உதவும்.இது சந்தை பொருளாதாரத்தை முழுவதுமாக crony capitalism நோக்கி கொண்டு சென்று விட்டது.

அடுத்து wikileaks செய்திக்கு வருவோம். wikileaks செய்திகளில் குறிப்பிட தக்க செய்திகளில் ஒன்று ஈரான் மீது தாக்குதலை நடத்த சவுதி அரேபியா அமெரிக்கா மீது அழுத்தம் கொடுத்தது.சில மாதங்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த சவுதி அரேபியா ஆதரவளித்ததாக வந்த செய்தியை நான் நம்பவில்லை. ஆனால் தற்போதைய செய்தி அதை உறுதி படுத்துவதாக உள்ளது.இது நாள் வரை உலகெங்கிலும் உள்ள மக்கள், முக்கியமாக இசுலாமிய மக்கள் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் இராக் போன்ற நாடுகளின் மீது நடந்த தாக்குதலை இசுலாத்தின் மீது நடந்த தாக்குதலாக தான் பார்த்தார்கள். ஆனால் தற்போது மக்களுக்கு உண்மை புரித்திருக்க வாய்ப்புண்டு. அரபு நாடுகளை பொருத்த வரை இது போன்ற போர்களின் மூலம் பெட்ரோல் விலை விண்ணை நோக்கி உயர்ந்து பெரும் லாபம் ஈட்ட முடியும்.சர்வாதிகார அரசுகளின் மீது வளர கூடிய வெறுப்பை மேல் நாடுகள் மீது திருப்பி ஆட்சியாளர்கள் மக்கள் வெறுப்பிலிருந்து தப்பிக்க முடியும்.

--

7 comments:

Sankar Gurusamy said...

Nice article. The status of our current political system is making all citizens to worry about the future of the nation....

Hope for a good change in near future.

http://anubhudhi.blogspot.com/

Rajasurian said...

ஒண்ணுமே புரியல உலகத்துல என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது

உமர் | Umar said...

//காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு துறையிலும் நிபுணுத்துவம் வாய்ந்தவரக்ளை ஒட்டு மொத்தமாக அழித்து ஜால்ராக்களை தலைவர்களாக இந்திரா காந்தி கொண்டு வந்ததாலும்//

சோனியா?

சதுக்க பூதம் said...

வாங்க சங்கர் குருசாமி ,Rajasurian,கும்மி

//ஒண்ணுமே புரியல உலகத்துல என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது

//
உண்மை தான் ராஜசூரியன். இந்த உண்மை அனைவருக்கும் புரிவதற்குள் எல்லாம் மாறி இருக்கும்.

//சோனியா?

//

இந்திரா அப்போதிருந்த கட்டமைப்பை உடைத்து தானே முடிவு செய்து ஜால்ராக்களை கொண்டு வந்தார். சோனியா தொடரும் ஜால்ரா கூட்டங்களை continue செய்து அந்த ஜால்ரா கூட்டங்கள் கை காட்டும் புதிய கூட்டங்களை சேர்க்கிறார்.

guna said...

good thankyou

bandhu said...

விளக்கமாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளீர்கள். பிரச்சனையின் தீவிரம் மக்களுக்கு உரைக்க வேண்டும். எனக்கும் சில புதிய பார்வைகளை தந்தது.

சதுக்க பூதம் said...

நன்றி குணா, bandhu