Thursday, January 27, 2011

தமிழக மீனவர்களின் ரத்தக்கண்ணீர்

இலங்கை ராணுவத்தினரின் ரத்தவெறிக்கு தமிழக மீனவரகளின் பலி தொடர் கதையாகிறது. தமிழக மீனவர்கள் உண்மையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை இந்திய அரசு மறந்து விட்டது. பிரான்சு நாட்டில் தன் இனத்தவர்கள் தலை பாகை அணிய தடை விதிக்க பட்டதை கண்டு பொங்கி எழுந்த நமது பாரத பிரதமர், பிரான்சு ஜனாதிபதியிடம் அதை முக்கிய பிரச்ச்னையாக பேசி, தீர்வை காண முயன்றார். ஆனால் இன்று இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் அன்னிய நாட்டு ராணுவத்தால் படுகொலை செய்ய படுவதை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்க நினைக்க கூடவில்லை.

மத்திய அரசு மந்திரி பதவியில் இருக்கும் தமிழக அமைச்சர்கள் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வ காண நினைப்பதையே பாவமாக கருதுகிறார்கள்.தன் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவும், தன் குடும்பத்தினருக்கு பதவி வாங்கவும் வித விதமான சத்தியாகிரக போராட்டங்களை நடத்தும் தமிழக அரசியல்வாதிகள் நம் மக்கள் மாண்டு வீழவதை பற்றி கவலை கொள்வதே இல்லை.

இதற்கு தீர்வு தான் என்ன. அரசியல்வாதிகளிடம் ரத்தக்கண்ணீர் விட்டால் தீர்வு கிடைக்காது. மீனவர்கள் தங்கள் சாதி மத வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேர்ந்து தங்கள் பலத்தை தேர்தலில் காட்ட வேண்டும். ஒரு 50 தொகுதியிலாவது தாங்கள் ஒற்றுமையின் மூலம் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க முடியும் என்று நிருபித்தால் தான் நீங்கள் சொல்வதை நாளை யாரும் கேட்பார்கள். ஆளும் கட்சியை எதிர்த்து வாக்களித்தால் பிரச்சனை தீரும் என்று சொல்ல வில்லை. ஆனால் தேர்தல் முடிவுகளையும் ஆட்சியாளர்களையும் முடிவு செய்யும் வலிமை உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் நிருபிக்க வேண்டும். இதற்கு தேவை உங்கள் ஒற்றுமை.

ஏனென்றால் ஆட்சியாளர்கள் காதுக்கு கேட்பது இரண்டு ஓசைகள் மட்டும். ஒன்று நோட்டு. மற்றொன்று ஓட்டு.

மீனவர்கள் பிரச்சனை பற்றி எழுத வேண்டுகோள் விடுத்த பதிவர் செந்தழல் ரவிக்கு நன்றி

--

3 comments:

உமர் | Umar said...

பதிவிட்டமைக்கு நன்றிகள்.

பொட்டி தட்டும் நாம் தட்டி கேட்க சில டவிட்டுகளாவது ட்விட்டுவோம்.

உமர் | Umar said...

Please join The Global Campaign for #TNfisherman on twitter . 28.01.11 Time 9.00PM - 10.00PM Indian Standard Time. RT pls

சதுக்க பூதம் said...

வாங்க கும்மி. நான் டிவிட்டரை பயன் படுத்துவதில்லை.என்னால் முடிந்த அளவு, ஒரு பதிவாவது இட்டு விட்டேன்