Tuesday, January 25, 2011

பூனைக்கு யார் மணி கட்டுவது?

இந்தியாவின் வளரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய வளர்ச்சி இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் நிலை வரலாம். கடந்த ஆண்டு ஒரு சில நாடுகளில் ஏற்பட்ட இயற்கை சீரழிவால் உணவு உற்பத்தியின் அளவு குறைந்தது. அதனால் உணவு தானியங்களின் விலை உலக சந்தையில் பெருமளவு ஏறியது. இத்தனைக்கும் இந்த கால கட்டத்தில் இந்தியா மற்றும் சீனா(உலக மக்கள் தொகையில் 40% மக்கள் வசிக்கும் பகுதி) உணவு தானிய தன்னிறை அடைந்திருந்தது. இந்தியாவோ அல்லது சீனாவோ தன் உணவு தானிய தேவையின் 10% வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட நமக்கு தேவையான உணவு பொருட்கள் உலக சந்தையில் கிடைப்பது அறிது.அது மட்டுமன்றி உணவு தானியத்தின் விலை பல மடங்கு ஏற வாய்ப்புள்ளது. அவ்வாறு விலை ஏறினால், இந்திய அரசால் பொது வினியோக முறையில் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு அளிப்பது கடினமாகி பட்டினி சாவு வர கூடும். எனவே எக்காரணம் கொண்டும் இந்தியா தன் உணவு தானிய தேவையில் தன்னிறைவை கடைபிடிக்க வேண்டியது கட்டாய தேவையாகும்.

விவசாய உற்பத்தி பெருக்கத்திற்கு வேளாண் ஆராய்ச்சி அடிப்படையாகும். விவசாய ஆராய்ச்சிக்கு இந்தியா செலவிடும் தொகை மிக மிக குறைவு. இந்த பதிவு அதை பற்றியதல்ல. இந்த பதிவு வேளாண் பல்கலை கழகங்கள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் தற்போது நடக்கும் ஆராய்ச்சியின் தரம் பற்றியது.

பெரும்பாலான வேளாண் பல்கலைகழகங்கள் வேளாண் ஆராய்ச்சி journal வெளியிடும். அவற்றில் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்த ஆராய்ச்சி பற்றி கட்டுரை இருக்கும். இந்திய ஆராய்ச்சி journal கட்டுரைகளின் முடிவை பார்த்தால் இந்திய வேளாண்மை ஆராய்ச்சியில் ஒரு புரட்சியே நடப்பதாக தோன்றும். பெரும்பாலான கட்டுரைகளின் படி நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி உணவு பயிர்களின் விளைச்சளை 30 லிருந்து 200 சதவீதம் அதிகரிக்களாம் என்று தெரிவிக்க பட்டிருக்கும். ஆராய்ச்சி கட்டுரையில் உள்ள தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன் படுத்தி இருந்தால் இந்தியா உலகுக்கே உணவு கொடுக்க முடியும் என்று கணக்கிட முடிந்திருக்கும். ஆராய்ச்சி முடிவுகள் விவசாயிகளை சென்றடையாதது தான் பிரச்ச்னை என்று நினைக்க தோன்றும்.

ஆனால் உண்மை அதுவல்ல. அந்த ஆராய்ச்சி கட்டுரையில் கொடுக்க பட்டுள்ள தொழில் நுட்பத்தை பயன் படுத்தினால் அவர்கள் குறிபிட்டுள்ளது போல் விளைச்சல் பெரும்பாலான சமயம் அதிகரிக்காது. ஏனென்றால் பெரும்பாலான ஆராய்ச்சிகளின் போது விளைச்சல் மற்றும் பிற குறியீடுகளின் அளவு ஆராய்ச்சியின் போது வளரும் பயிரின் விளைச்சல் மற்றும் பயிரின் வேதியல் பகுப்பாய்வு(Chemical Analysis) மூலம் அளவிட படுவதில்லை. ஆராய்ச்சியின் தலைப்பு முடிவு செய்ய பட்ட உடனே ஆராய்ச்சியின் முடிவும் முடிவு செய்ய பட்டு விடும். பெரும்பாலான வேளாண் ஆராய்ச்சிகள் புள்ளியியல் ரீதியான ஆராய்ச்சி கட்டமைப்பு (Statistically deriven Experimental Design) மூலம் உறுதி செய்ய வேண்டும். உண்மையான ஆராய்ச்சி செய்து, முடிவை புள்ளியியல் முறைபடி analysis செய்தால் ஓரளவு உண்மை நிலை கிடைக்கும்.ஆனால் ஆராய்ச்சியாளர்களோ புகை படம் எடுக்க மட்டும் பயிரை நிலத்தில் விதைப்பார்கள். பயிரின் விளைச்சளை நிலத்தில் அளக்காமல் கணிபொறியில் புள்ளியியல் மென்பொருள் மூலம் டேட்டாவை கூட்டி குறைத்து போட்டு தமக்கு தேவையான முடிவை கொண்டுவந்து விடுவார்கள். வேளாண் ஆராய்ச்சியில் முடிவுகள் அது செய்ய படும் சுற்றுசூழல் கொண்டும் பாதிக்க படுவதால் இன்னொரு இடத்தில் அந்த விளைச்சல் கிடைக்காவிட்டால் சுற்றுசூழல் மீது கை காட்டிவிட்டு சென்று விட முடியும்.அனைத்து வேளாண் ஆராய்ச்சிகளும் இப்படி நடக்கிரது என்று சொல்ல வரவில்லை. பெரும்பாலான ஆராய்ச்சிகள் இப்படி தான் நடக்கிறது.

அடுத்தது தனியார் துறை கொடுக்கும் பிராஜெக்ட் பற்றி பார்ப்போம். பெரும்பாலான பூச்சி கொள்ளி மருந்து கம்பெனிகள் மற்றும் உர கம்பெனிகள் தங்களுடைய பிராடக்ட்டின் தரம் குறித்து சான்றிதழ் கொடுக்க ஆராய்ச்சி பிராஜெக்ட் கொடுப்பார்கள். அவர்கள் விருப்ப படும் முடிவை ஆராய்ச்சி முடிவாக கொடுத்தால் தான் அடுத்த பிராஜெக்ட் கிடைக்கும் என்று அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவை கொடுப்பர்கள்.தனியார் துறைக்கான ஆராய்ச்சி இப்படி என்றால் அரசு துறை பற்றி கேட்கவே வேண்டாம். முதலில் அரசு பிராஜெக்ட் வாங்கவே அதிகார வர்க்கத்தினரிடம் சிபாரிசு பெற்றவர்களாகவோ, அரசியல் செல்வாக்கு கொண்டவர்களாகவோ இருக்க வேண்டும். அது மட்டுமன்றி வட நாடு- தென் நாடு பிரிவினை வேறு.இந்த பலத்தை எல்லாம் கொண்டு பிராஜெட் வாங்கிவிட்டால் போதும். பிராஜெக்ட் முடியும் போதும், ரிவியூ போதும் அழகாக ரிப்போர்ட் எழுத தெரிந்தால் போது. பிராஜெக்ட் முடித்து விடலாம்.உண்மையான கண்டு பிடிப்பு பற்றி யாரும் கவலை பட போவது இல்லை.இதையெல்லாம் மீறி விரல் விட்டு எண்ணகூடிய அளவில் சில பேர் ஒழுங்காக ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் உண்மையிலேயே பாராட்ட பட வேண்டியவர்கள்.

ஒரு சில ஆராய்ச்சி மாணவர்கள் உண்மையான ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்ய வருவார்கள். ஆனால் அவரக்ளுக்கு அமையும் கைடோ ஆராய்ச்சியில் பல தலைமுறை பின் தங்கி இருப்பவராக இருப்பார். ஆராய்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதியும் குறைவாக இருக்கும். பல்கலை கழகங்களில் நடக்கும் அரசியலோ மிக பயங்கரமானதாக இருக்கும்.இவற்றையெல்லாம் கடப்பதற்குள் அந்த மாணவன் ஜோதியில் ஐக்கியமாகி விடுவார்.விவசாய கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களில் இது போன்றே ஆராய்ச்சி தொடர்ந்தால் விவசாயிகளிடம் விவசாய பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியில் நம்பிக்கை குறைந்து விடும். அதுமட்டுமன்றி மக்கள் தொகை பெருக்கத்திற்கிணையான உணவு உற்பத்தி பெருக்கத்திற்கு வழி வகை இல்லாமல் போய்விடும்.இந்த பிரச்சனை எல்லாம் அதிகார வர்க்கத்திற்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்கு தெரியும். யார் பூனைக்கு மணி கட்டுவது?

--

4 comments:

டக்கால்டி said...

Every citizen should do farming and join in military for atleast 30 days in a year. If a law has been made for this then our country will be the super power.

சதுக்க பூதம் said...

//Every citizen should do farming and join in military for atleast 30 days in a year. If a law has been made for this then our country will be the super power//

அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

பாலா said...

நல்ல பகிர்வு...
தொழில் துறை வந்தவுடன் விவசாயம் மீதான நமது கவனம் குறைந்து கொண்டே தான் உள்ளது..
விளை நிலங்கள், விவசாய ஊழியர்கள் என விவசாயம் சார்ந்த எல்லாம் குறைந்து கொண்டே தான் வருகிறது..

Anonymous said...

Very nice post. What you say about research is 100% true.