Sunday, September 19, 2010

சீன பணத்தை சேமிப்பு நாணயம்(Reserve Currency) ஆக்கிய மலேசியா

இது நாள் வரை சீனா தன் சேமிப்பு கரன்ஸியாக டாலரை வைத்திருக்குமா அல்லது யூரோவுக்கு மாறுமா அல்லது தங்கம் வாங்கி குவிக்குமா என்ற செய்திகளே உலக பொருளாதாரத்தில் விவாதத்தில் இருந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்க பட்டு கொண்டு இருந்த இன்னோரு செய்தி தற்போது வந்துள்ளது. பொருளாதாரத்தில் மிக பெறிய அளவில் முன்னேறி வரும் சீனாவின் யுவானையே பிற நடுகள் சேமிப்பு கரண்சியாக சேர்க்க தொடங்கும் நாள் விரைவில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. சீனாவே இந்த முயற்சிக்கு தடை விதித்து வந்தது. சீனா தனது தடைகளை சிறிய அளவில் விளக்க ஆரம்பித்துள்ளது.

அந்த நிலையில் முதன் முதலாக சீனாவின் பாண்டுகளை வாங்கி தனது சேமிப்பு கரன்ஸியின் ஒரு பங்காக மாற்றி மலேசியா வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு சீனாவின் நாணயம் சர்வ தேச சேமிப்பு கரண்சியாக மாறினால், அந்த மாற்றத்தை முதன் முதலாக கொண்டு வந்த நாடு என்ற பெயரை மலேசியா பெருகிறது. பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மலேசியாவை தொடர்ந்து வேறு சில நாடுகளும் சீனாவின் நாணயத்தை சேமிப்பு கரன்ஸியாக வாங்க தொடங்கியுள்ளதாக கூறினாலும் அந்த நாடுகளின் பெயர்களை அந்த செய்தி தாள் வெளியிடவில்லை.

சீனா பெருமளவில் இந்த நடைமுறையை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் அதன் விளைவாக சீனாவின் நாணய மதிப்பு கூட வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி சீனா அமெரிக்க பாண்டுகளை வாங்குவதை போல் அமெரிக்கா சீனாவின் பாண்டுகளை தடையின்றி வாங்க ஆரம்பித்தால் சீனாவின் நாண்ய மதிப்பு உயர்ந்து அதன் ஏற்றுமதி தொழில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே சீனாவின் நாணயம் உலக சேமிப்பு நாணயத்தில் ஒரு முக்கிய பங்கை பிடிக்க பல வருடங்கள் ஆகலாம்.

--

2 comments:

aandon ganesh said...

awareness report

Indian said...

Very interesting.