Friday, December 05, 2008

அமெரிக்கா- நிதி நெருக்கடியை எதிர் கொள்ள உபயோகபடுத்த போகும் யுக்தி-Quantitative Easing

அமெரிக்க அரசின் நிதி பற்றாக்குறை அது நடத்தி வரும் போர்களினாலும்,சமீபத்திய நிதி நெருக்கடியாலும், டிரில்லியன் டாலரை தாண்டி விட்டது.அது மேலும் பல நூறு பில்லியன் டாலர்களை மோட்டார் தொழிற்சாலை மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க தயாராக உள்ளது. இது நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க போகிறது.
இந்த இக்கட்டான நிலையை அமெரிக்கா எவ்வாறு சமாளிக்க போகிறது என்று உலகமே ஆவலோடு எதிர் பார்க்கிறது.

அமெரிக்கா செய்ய போகும் யுக்தி பற்றி எக்கனாமிஸ்ட் பத்திரிக்கை அழகாக கூறுகிறது
America is a much bigger country and its currency happens to be the world’s premier reserve currency. So it can print as much as it likes. For now, anyway.
எக்கனாமிஸ்ட் பத்திரிக்கையின் இந்த செய்தி அனைவரும் படிக்க வேண்டியது.

பொதுவாக இந்த நிலை பிற நாடுகளுக்கு வந்தால், அந்த நாடுகளின் அரசு செலவுகளை குறைத்தும், மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தும் சமாளிக்கும். நிச்சயம் அமெரிக்கா இப்போது அப்படி செய்ய போவது இல்லை. இதை சமாளிக்க பிறவழி, நாட்டின் பணபுழக்கத்தை அதிகரிப்பது. பொதுவாக இது போன்ற செயலால் நாட்டின் பண வீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு மிகவும் குறைந்து மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்(உதாரணம் ஜிம்பாப்வே.அந்த நாட்டின் பணவீக்கம் ஒரு கோடியே இருபதாயிரம் சதவீதம்!.ஒரு பாக்கெட் பிரெட்டின் விலை 1.6 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் ).

இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் அமெரிக்கா எளிதாக இப்பிரச்சனையை கையாள போகிறது.தேவையான அளவு பணத்தை, பணவீக்கம் அதிகரிக்காமல் அச்சிட போகிறது.மேலும் பல பில்லியன் டாலர்களை முன்னேறும் ஆசிய நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிடம் கடனாக பெறபோகிறது.இதற்கு காரணம் சைனா மற்றும் முன்னேறும் நாடுகளின் வளர்ச்சி, அமெரிக்கர்களின் செலவிடும் தன்மையில் தான் உள்ள்து. அவர்களின் பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் கிராக்கி இருக்கவேண்டும் என்றால், அவ்ற்றின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். அதற்க்கு டாலரின் மதிப்பை அதிக அளவில் வைத்திருக்க வேண்டும்.அவ்வாறு டாலரின் மதிப்பு அதிகமாக வைக்க, அமெரிக்க டாலர்களை தங்கள் கையிருப்பாக வாங்கி குவிக்க வேண்டும். அதாவது உற்பத்தி செய்யும் பொருளையும் அமெரிக்காவுக்கு கொடுத்து, அதன் மூலம் வரும் டாலர் பணத்தையும் அமெரிக்காவிடம் கொடுத்து பத்திரம் வாங்கி வைத்து கொள்ள வேண்டியது தான்.

பெட்ரோல் மூலம் கொழிக்கும் அரபு நாடுகளும், டாலர் விற்று வந்த பணத்தை அமெரிக்காவிடம் கொடுத்து பத்திரம் வாங்க வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அவர்கள் அமெரிக்க அரசிடமும் அமெரிக்க நிறுவனங்களிடமும் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு வெகுவாக குறையும்.
சுருங்க சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கர்கள் கூறுவது போல்

"The dollar is our currency, but your problem!"



4 comments:

Anonymous said...

நல்ல செய்தி நன்றி

Anonymous said...

//உதாரணம் ஜிம்பாப்வே.அந்த நாட்டின் பணவீக்கம் ஒரு கோடியே இருபதாயிரம் சதவீதம்!.ஒரு பாக்கெட் பிரெட்டின் விலை 1.6 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர்//

oh my god !!!!

மங்களூர் சிவா said...

/
"The dollar is our currency, but your problem!"
/

:))))))))

சதுக்க பூதம் said...

This is a nice video

http://www.theospark.net/2008/12/fred-thompson-explains-bailouts.html