Wednesday, September 19, 2012

எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

           கடற்கறையின் அழகை ரசித்த பின் மனதிற்குள் தோன்றும் கேள்வி  ஆழ் கடலின் அடியில் என்னதான் இருக்கும் என்பது? நீச்சலின் மூலம் ஆழ் கடலுக்குள் சென்று பார்ப்பது கடினம். நன்கு பயிற்சியுடைய ஸ்கூபா டைவராக இருந்தால் சிறிது முயற்சி செய்து பார்க்களாம். சாதாரண மனிதர்கள்  ஆழ்கடலை டிஸ்கவரி சேனல் போன்ற தொலைகாட்சி மூலம் தான் பார்க்க முடியும். ஆனால் நேரில் பார்க்க ஒரே வழி அதி நவீன நீர்மூழ்கி கப்பல் தான்.

          நூறு அடிக்கும் மேல் கடலுக்கு அடியில் நீர் மூழ்கி கப்பல் மூலம் பயணம் செய்து ஆழ்கடலின் அழகை பார்க்க ஹவாய் பெருந்தீவில் வசதி உள்ளது.இதன் மூலம் நிஜ நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் அனுபவத்தையும் , ஆழ் கடலின் அழகை கண்டு களிக்கும் அதிசய அனுபவத்தையும் ஒரு சேர பெறலாம்.
நீர்மூழ்கி வழியே ஓர் பார்வை

      கோனா கடற்கரையிலிருந்து விசை படகு மூலம் கடலின் உட் பகுதிக்கு சிறிது தூரம் கூட்டி செல்கிறார்கள். அங்கு நீர்மூழ்கி கப்பல் தயராக நிற்கிறது. இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு அட்லான்டிஸ் என்று பெயர். அது 64 பேரை ஏற்றி செல்லும் உலகிலேயே பெரிய பயணிகள் நீர்மூழ்கி கப்பல் வகையை சேர்ந்தது.விசை படகுகிலிருந்து நீர்மூழ்கிக்கு மாறி ஏணி படி மூலம் நீர்மூழ்கிக்குள் அழைத்து செல்கிறார்கள். நீர்மூழ்கியில் அனைவரும் கடலை பார்க்க கண்ணாடி ஜன்னல் உள்ளது. நீர்மூழ்கி நகர தொடங்கியதும் சிறிது சிறிதாக கடலின் கீழ்மட்டத்தை நோக்கி செல்கிறது.
நீர்மூழ்கி உள்ளே! வெளியே!

      ஹவாய் பகுதி கடற்கரை பவழ பாறைகளுக்கு பெயற்பெற்றது. பவழ பாறை என்றவுடன் ஏதோ உயிறற்ற பாறை என்று நினைத்துவிடாதிர்கள்.பவழம் என்பது ஒரு வகை கடற்வாழ் உயிரினங்கள். அவை வெளியிடும் கால்சியம் கார்பனேட் பாறைகளாக வளர்ந்து நிற்கிறது.இந்த பவழ பாறைகள் மீன்கள். புழுக்கள், மொளாஸ்காக்கள்( 12ம் வகுப்பு விலங்கியல் பாடத்தில் படித்தது) மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு இருப்பிடமாக உள்ளது.  இந்த பவழ பாறைகள் வண்ண மயாமாக இருந்தாலும் புகை படங்களில் பார்ப்பதை போல் பளீர் வண்ணத்துடன் இல்லை.
பவழ பாறைகளும் மீன்களும்

பவழ பாறைகள்

   கடல் அடியில் கூட்டம் கூட்டமாக வண்ண மயமாக செல்லும் மீன்களை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.கோனா கடற்கரை பகுதியில் உள்ள பல வகை மீன்களை கொண்ட புகைபட அட்டையை கையில் கொடுத்து விடுகிறார்கள். அது மற்றுமின்றி அந்த நீர்மூழ்கியில் வரும் விவரிப்பாளர் கண்ணில் தென்படும் மீன் வகைகள் பற்றி விவரிக்கிறார்.மீன்கள் மற்றும் பவழ பாறைகளை தவிர கடலில் மூழ்கிய இரு கப்பலையும் கடலின் அடியே காண முடிகிறது.அனைத்து வண்ண மீன்களும் கூட்ட்ம் கூட்டமாக செல்லும் இது போன்ற காட்சிகளை டிஸ்கவரி சேனலில் மட்டுமே காண முடியும்.அதை நேராக பார்க்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது..

  நீர்மூழ்கி கப்பல் கடலின் அடியே 100 அடிகளுக்கு மேல் கீழ் நோக்கி செல்கிறது.இது போன்ற நீர்மூழ்கி பயண அனுபவமும் ஆழ்கடலை பார்த்து ரசிக்கும் வாய்ப்பும் நிச்சயம் ஒரு அறிய வாய்ப்பாகும்.

ஆழ்கடலின் அழகை கண்டு ரசித்தாகி விட்டது. நடுகடலில் நீந்திய படி கடல்வாழ் உயிரினங்களை கண்டு களித்தால் எப்படி இருக்கும். அடுத்த பதிவில் பார்ப்போம்.

முந்தய பகுதி
எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

அடுத்த பகுதி
எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling & Parasailing

--

No comments: