Monday, July 13, 2009

அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை?

India’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில்(மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம்.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரண கார்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை எளிதில் மாற்றத்தை ஏற்று கொள்ளும் தன்மை போன்றவை இருப்பதுடன் அதிகம் செலவழிக்கும் மன போக்கு இருப்பதால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணியாக உள்ளனர்.

வருங்காலத்தில் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை எதிர் நோக்கி இருக்கும் மிக பெரிய பிரச்சனை இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை பெருக போவதுதான்.அங்கு மக்கள் தொகை பெருக்கம் என்ற நிலை மாறி மக்கள் தொகை குறைய தொடங்க போகிறது. அங்கு 2050ல் இரண்டு பேர் வேலை பார்த்தால் ஒருவர் பென்ஷன் வாங்குபவராக இருப்பார். பத்தில் ஒருவர் 80 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பர்.கீழே உள்ள புள்ளிவிவரத்தை பார்த்தால் இது பற்றிய விவரம் உங்களுக்கு புரியும்.



15 முதல் 59 வயது வரை உள்ள மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயம் 60 வயதிறிகும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. 2050 வரை இந்தியாவில் இந்த மாற்றம் மிக குறைவாகவே இருக்கும். இந்தியாவின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து கொண்டால் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

மேல் நாட்டு பன்னாட்டு கம்பெனியின் முக்கிய சந்தையாக அமெரிக்கா இது வரை இருந்து வந்தது. மக்கள் தொகை பெருக்கம் குறைவால் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் வளர்ச்சிக்கு புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள படும். அப்போது அதிக இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளாக இருப்பது இந்தியாவும் சீனாவும் தான். எனவே இந்தியாவின் வளரும் மத்திய தர மக்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியின் அச்சாணியாக இருக்க போகிறது.

பொருட்களின் மதிப்பிற்கும் உற்பத்தி செலவிற்கும் உள்ள வித்தியாசம் அதிகரிக்கப்படும். ஏனென்றால் மேலை நாடுகளில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை குறைய போவதால் உற்பத்தி இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்ய பட்டு விடும். உலக வர்த்தக நிறுவனம் மூலம் பொருட்களுக்கான உரிமமுறை(patent) உலகெங்கிலும் கடுமையாக பின் பற்ற பட்டு, பன்னாட்டு நிறுவனக்களின் உற்பத்தி பொருட்களுக்கான விலையும் லாபமும் அதிகரிக்கப்படும்(அவுட்சோர்சிங் மூலம் உற்பத்தி செலவு கணிசமாக குறைக்க படும்). அதற்காக தான் உலக வர்த்தக பேச்சுவார்த்தையை மேலை நாடுகள் துரித படுத்துகிறது.

அடுத்ததாக வேகமாக குறைந்து வரும் தொழிளாளர்களின் எண்ணிக்கையை ஒரளவாவது அதிகரிக்க வேண்டும். நல்ல தரமான புதிய தொழிளாளர்கள் உலக சந்தையில் உருவாக்க பட வேண்டும்.அதற்கு இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி மிகவும் தேவை. அப்போது தான் நல்ல தரமான தொழிளாளர்கள் இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுனக்கம் காரணமாக வெளி நாட்டு தொழிளாளர்களின் தேவை சிறிது குறைந்து இருந்தாலும், பொருளாதாரம் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும் போது வெளி நாட்டு தொழிளாளர்களின் தேவையும் அதிகமாகும்.தற்போது அமெரிக்க மக்கள் தொகை பெருக்கத்தில் 40 சதவிதம் புதிதாக வெளி நாடுகளிருந்து வரும் தொழிளாளர்களே என்பது குறிப்பிட தக்கது.

அமெரிக்காவிற்கு இந்திய மத்திய வர்க்கத்தின் வளர்ச்சியின் தேவைக்கான முழு காரணமும் உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் அமெரிக்காவில் வயதானவர்களால் ஏற்பட போகும் பிரச்ச்னை பற்றி பார்போம்

--

17 comments:

Ungalranga said...

அப்போ..சரி..

நீ அமெரிக்காவின் குடுமி நம்ம கையில் இருக்க போவுது..

அந்த நாளுக்கு தானே காத்துகிட்டு இருக்கோம்..

நல்ல பதிவு...நன்றிங்க..!!

Cable சங்கர் said...

\நல்ல பார்வை..

vv said...

Sir,please add my e-mail-id with your blog, Bcz I need your posts. please. My email-id is
" v.vivekanandhan@gmail.com "

சதுக்க பூதம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரங்கன். இந்தியாவை முடிந்த வரை எக்ஸ்ப்ளாயிட் பண்ணாமல் இருக்க உலக வர்த்தக நிறுவன பேச்சுவார்த்தைகளில் இப்போதே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்

சதுக்க பூதம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குப்பன்_யாஹூ மற்றும் Cable Sankar

சதுக்க பூதம் said...

வருகைக்கு நன்றி VV.உங்கள் மின்னன்ஞ்சலை இணைத்து விட்டேன். உங்களுக்கு confirmation mail வந்து விட்டதா என்று பார்த்து சொல்லுங்கள். அதில் உள்ள linkஐ click செய்தால், இனி நான் publish செய்யும் பதிவுகள் அனைத்தும் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும். confirmation mail வர வில்லையென்றால் சொல்லுங்கள். வேறு வகையில் subscriber ஆக ஆக்கி கொள்ளளாம்

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

Vadielan R said...

சூப்பர் மேட்டர் தலைவா இனி நாம்தான் வல்லரசு அப்துல்கலாம் கனவு நனவாக போகிறது.

சதுக்க பூதம் said...

வாங்க ஆப்பு,வடிவேலன்
இனி வரும் 10 வருடங்களில் நடக்கும் நடப்புகள் தான் இந்தியா வல்லரசாகுமா என்று தீர்மானிக்கும்.

Anonymous said...

உலகத்திலேயே பிச்சைக்காரர் அதிகமான நாடும் இந்தியாதான். இந்தியா ஒன்றும் கிளித்துவிடும் என்று நினைக்காதீர்கள்.

இந்தியாவை சுற்று சீனா முத்துமாலை தொடுத்துள்ளது. அதன் ஆபரேஸ்ன் துவங்கினால் இந்தியா கிளியப் போவது உறுதி.

சதுக்க பூதம் said...

//உலகத்திலேயே பிச்சைக்காரர் அதிகமான நாடும் இந்தியாதான். இந்தியா ஒன்றும் கிளித்துவிடும் என்று நினைக்காதீர்கள்.
//
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழே நிறைய பேர் இருந்தாலும், இங்கு வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் இனி வரும் காலங்களில் பன்னாட்டு கம்பெனிகளின் முக்கிய சந்தையாக இருக்க போகிறது என்பது மறுக்க முடியாது

//இந்தியாவை சுற்று சீனா முத்துமாலை தொடுத்துள்ளது. அதன் ஆபரேஸ்ன் துவங்கினால் இந்தியா கிளியப் போவது உறுதி.
//
உண்மையிலேயே ஒரு ஆப்பரேசன் தொடங்கினால், விளைவு இரு நாடுகளுக்கும் அதிக பாதகமாகாத்தான் இருக்கும்

Vadielan R said...

""" Anonymous Anonymous said...

உலகத்திலேயே பிச்சைக்காரர் அதிகமான நாடும் இந்தியாதான். இந்தியா ஒன்றும் கிளித்துவிடும் என்று நினைக்காதீர்கள்.

இந்தியாவை சுற்று சீனா முத்துமாலை தொடுத்துள்ளது. அதன் ஆபரேஸ்ன் துவங்கினால் இந்தியா கிளியப் போவது உறுதி."""


கிழியப்போவது நாம்தான் எண்ணம் ஏன் உங்களிடம் இல்லை நாம் அனைவரும் சேர்ந்தால் கட்டாயம் சீனா போல் எத்தனை நாடுகள் வந்தாலும் எதிர்த்து நின்று விரட்டலாம். வெள்ளையரை முதன்முதலில் விரட்டிய் தாய் தமிழ்திருநாட்டில் பிறந்தவர் இவ்வாறு பேசுவது உங்களுக்கு நா கூசவில்லை

சதுக்க பூதம் said...

//கிழியப்போவது நாம்தான் எண்ணம் ஏன் உங்களிடம் இல்லை நாம் அனைவரும் சேர்ந்தால் கட்டாயம் சீனா போல் எத்தனை நாடுகள் வந்தாலும் எதிர்த்து நின்று விரட்டலாம். வெள்ளையரை முதன்முதலில் விரட்டிய் தாய் தமிழ்திருநாட்டில் பிறந்தவர் இவ்வாறு பேசுவது உங்களுக்கு நா கூசவில்லை
//

good spirit
well said வடிவேலன் ஆர்.
சீனாவை விடுங்கள்.ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த serviceஐ லாப நோக்கில்லாமல் சுயநலமிலாமல் சமுதய முன்னேற்றத்துக்கு செய்தால் நிச்சயம் இந்தியா முன்னேறும்

Vadielan R said...

"""good spirit
well said வடிவேலன் ஆர்.
சீனாவை விடுங்கள்.ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த serviceஐ லாப நோக்கில்லாமல் சுயநலமிலாமல் சமுதய முன்னேற்றத்துக்கு செய்தால் நிச்சயம் இந்தியா முன்னேறும்"""

இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும் அதன் மூலமே இது சாத்தியம் அது மட்டுமல்லாமல் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை லாப நோக்கில்லாமல் அளிக்க வேண்டும்.

சதுக்க பூதம் said...

//இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும் அதன் மூலமே இது சாத்தியம் அது மட்டுமல்லாமல் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை லாப நோக்கில்லாமல் அளிக்க வேண்டும்.
//
நிச்கயமாக. நாமும் கூட முன் மாதிரியாக எதாவது செய்ய வேண்டும்

Vadielan R said...

என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் பதிவர்கள் மூலமாக செய்யலாமா அல்லது எப்படி செய்யலாம்

சதுக்க பூதம் said...

//என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் பதிவர்கள் மூலமாக செய்யலாமா அல்லது எப்படி செய்யலாம்//
உங்களுடைய மின்னன்ஞ்சல் அனுப்பினால் அது பற்றி நாம் சிறிது விவாதிக்கலாம்
my email id is sathukapootham@yahoo.com