Tuesday, July 07, 2009

பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு கடிவாலம் போட ஒபாமா முயற்சி?

    கடந்த ஒரிரு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதும் ஆக இருப்பது அனைவரும் அறிந்ததே.இதற்கு காரணம் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சியும் பின்னடைவும் என்று கூற பட்டாலும், அது மட்டும் உண்மையான காரணமாக இருப்பதில்லை. இந்த ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் மிக பெரிய பன்னாட்டு வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் , தனியார் முதலீட்டார்கள் போன்றவை கச்சா எண்ணை விலையை ஏற்ற இறக்க கணிப்பு வர்த்தகம்(speculative trading) மூலம் கட்டுபடுத்துவது தான் என்று பெரும்பாலானோரால் நம்ப பட்டது.பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள கடந்த மாதத்தில் கூட இது போன்ற நிதி நிறுவனங்களின் பங்கு மட்டும் 20 சதவிதத்தை தாண்டி இருந்துள்ளது.

அமெரிக்காவில் இது போன்ற வர்த்தகங்களை கட்டு படுத்தும் Commodity Futures Trading Commission என்ற அமைப்பு கச்சா எண்ணையில் நடக்கும் கணிப்பு வர்த்தகத்தை தடுக்க முயற்ச்சி எடுக்க தொடங்கி உள்ளது. எண்ணெயை உபயோகபடுத்தும் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்க அபாயத்திலிருந்து காக்க உதவும் வர்த்தகத்தை தவிர்த்து(Futures Trading),குறுகிய லாப நோக்கோடு இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடும் நிதி நிறுவனங்களின் வர்த்தகத்தை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவில் உள்ள பலமான லாபிக்களை எல்லாம் தாண்டி இது நடைமுறபடுத்த பட்டால் ஒபாமாவின் சாதனையாகவே இது இருக்கும். எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளை எல்லாம் இது போன்ற செயற்கையான விலை ஏற்றத்திலிருந்து அமெரிக்கா காப்பாற்றினால் பல கோடி ஏழை மக்கள் பயனடைவார்கள்.


--

No comments: