Saturday, April 18, 2009

நீதி கேட்கும் செருப்புகள்

பெரும் பாலான மனிதனுக்கு அநீதி இழைக்கும் போது அவர்கள் முறையிட நீதி மன்றம் இருக்கிறது. வாயில்லா மிருகங்களுக்கு நீதி தேடி தர புளு கிராஸ் போன்ற அமைப்புகள் இருக்கிறது.ஆனால் எங்களை அவ மரியாதை செய்தால் நாங்கள் எங்கு போய் முறையிடுவது? சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கிறீர்களா? சிறிது குனிந்து பாருங்கள். நீங்கள் காலில் அணிந்து இருக்கும் காலணி பேசுகிறேன்!

காடு, மலை, கல், கரடு,மழை, வெய்யில், சேறு, சகதி என்று எங்கு போனாலும் உங்கள் காலை பாது காக்கிறேன். இதற்கு பலனாக உங்களிடம் நான் எந்த உபகாரமும் எதிர் பார்க்கவில்லை. தயவு செய்து கேடு கெட்ட இந்த அரசியல்வாதிகளின் மேலெரிந்தும், அவர்களுக்கு என்னை மாலையிட்டும் அவ மரியாதை செய்யாதீர்கள். எங்களுக்கு உணர்வு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக எங்களை இப்படி அவ மரியாதை செய்கிறீர்கள். அதுவும் எந்த உணர்வும் இல்லாத இந்த அரசியல்வாதிகள் மீது எங்களை விட்டெறிந்து.

இனியாது எங்களை இப்படி அவ மரியாதை செய்யாமல் இருக்க உங்களை இரு கால் கூப்பி வேண்டி கொள்கிறேன்


புகைப்படம்:நன்றி தினபூமி

--

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்களுடன்

சதுக்க பூதம் said...

வாழ்த்துக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்