Wednesday, June 13, 2012

NCERT என்னும் கோயபெல்ஸ்கள் கூட்டம் - வந்த கார்டூனும் வந்திருக்க வேண்டிய கார்டூனும்

சமீபத்தில் பாட புத்தகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சை படுத்தி வந்த கார்டூன் தமிழகமெங்கும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.அந்த கார்டூனில் தமிழ் மாணவர்களை ஏதோ mobster போலவும், இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட்டும் அவர்கள் ஆங்கிலத்தில் கூறுவதை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் போராடுவது போலவும் கார்டூன் உள்ளது.
அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை. இதற்கு முன் அம்பேத்காரை அவமதித்து, உண்மைக்கு புறம்பாக வெளியிட பட்ட கார்டூனால் பெரும்பான்மை மக்கள் கொதித்தெழுந்தது அனைவர் நினைவிலும் இருக்கும்.

NCERT புத்தகத்தில் உண்மையில் வந்த கார்டூன் ஒன்று. வந்திருக்க வேண்டிய கார்டூன் மற்றொன்று. கீழே உள்ள கார்டூனையும் பதிவையும் பார்த்தால் அதன் காரணம் உங்களுக்கே புரியும்.



கருத்து சுதந்திரம் மீது  எப்படியெல்லாமோ தாக்குதல் நடந்த  போது அமைதியாக இருந்தவர்கள் இன்று கருத்து சுதந்திரம் மீது தாக்குதல் நடப்பதாக கூக்குரலிடுகிறார்கள்.இந்த கார்டூன் தினமலரிலோ,ஞானியின் ஓ பக்கத்திலோ வந்து அதை மக்கள் எதிர்த்தால் நிச்சயம்
கண்டிக்க படவேண்டிய  விஷயமாக இருக்கும். ஆனால் இந்த கார்டூன் பத்திரிக்கையிலேயே வரவில்லை. இது மாணவர்களின் பாட புத்தகத்தில் வந்துள்ளது.

முதலில்  பாட புத்தகத்தில் உண்மைக்கு புறம்பான செய்தியே இருக்க கூடாது. அது மட்டுமன்றி ஒரு நிகழ்வு பற்றியோ தலைவர் பற்றியோ நக்கலாக விமர்சித்து வரும் கார்டூன் படம் பாட புத்தகத்தில் இருந்து அதை மாணவர்கள் பார்த்தால் அவர்கள் அடி மனதில் பதிந்து விடும். பிற்காலத்தில் அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும்(Inception படத்தில் வருவது போல் அடிமனதில் பதிய வாய்ப்புள்ளது) உண்மைகளை படிக்க வேண்டிய பாட புத்தகத்தில் முதலில் தரகுறைவான கார்டூன்கள் தேவையா
என்பது கேள்விக்குறி.

இந்த கார்டூன் எதாவது உண்மையை அடிப்படையாக கொண்டு வரையபட்டதா என்றும், இந்தி திணிப்பின் வரலாறு பற்றியும் பார்ப்போம்.

ஒரு மொழி இந்தியா முழுதும் திணிக்க பட வேண்டும் என்றால் கல்வியின் மூலம் தான் திணிக்க பட வேண்டும்.முதலில் ஆங்கிலம் இணைப்பு/பொது மொழியாக வந்த பின்னனியை பார்ப்போம்,

பண்டைய இந்தியாவில் கட்டமைக்க பட்ட கல்வியானது வருணாசிரம முறை மூலம் ஒரு சிறிய  ஆதிக்க வர்க்கத்தினரின் பிடியில் இருந்தது. பெரும்பான்மை மக்களுக்கு அப்போது கல்வி என்று சொல்லி தரபட்டவை சென்றடைய வில்லை.அன்றைய கல்வியின் முக்கிய
பகுதி மதம் சார்ந்ததாகவே இருந்தது. எனவே பாட மொழியாக வட மொழியே இருந்தது.புத்த மதத்தினர் ஆட்சி நடத்திய காலத்தில் மட்டும் தற்போது உள்ளபடி கல்விக்கான மிக பெரிய கட்டமைப்பு  (நலந்தா பல்கலைகழகம் போன்றவை) தொடங்கபட்டு அனைத்து மக்களுக்கும் அன்றைய கல்வி அளிக்கபட்டது.

ஆங்கிலேயர் இந்தியா வந்த போது கல்வி என்பது பெரும்பாலும் இந்து மற்றும் இசுலாமிய மத சார்ந்ததாக இருந்தது.முதன் முதலாக மெக்காலே அனைத்து தரப்பு மக்களும் பயனடைய அறிவியல் சார்ந்த ஆங்கில மொழி வழியிலான கல்வி முறையை அறிமுக படுத்தினார். அந்த காலத்தில் (இன்றும் கூட)) உலகின் அனைத்து மொழியில் உள்ள அறிவியல் தொழில்நுட்பங்கள் ஆங்கிலத்தில் இருந்தது. ஆங்கில மொழியை படிப்பதன் மூலம் இந்தியர்கள் அய்ரோப்பியர்களுக்கு இணையாக வளர்ச்சி அடைய முடியும் என்று
கருதினார். ஆனால் மெக்காலே திட்டம் நிறைவேற்ற பட்டால், அனைவருக்கும் கல்வி கிடைத்து  வருணாசிரம அடிப்படையே ஆட்டம் கொண்டு விடும் என்பதாலும், வட இந்திய மொழியின் ஆதிக்கம் குறைந்து விடும் என்பதாலும் கடுமையான எதிர்ப்பு காட்டபட்டது.

அன்றைய சமூக,பொருளாதார நிலை பற்றி அறியாமல் மெக்காலே கல்வி திட்டத்தை இன்றைய சூழ்நிலையில் ஒப்பீடு செய்து அதன் மீது வீச படும் சேறும் கணக்கிடலங்காது. மெக்காலே கல்வி திட்டம் பற்றிய விரிவான பதிவை கீழே உள்ள இடுக்கையில் விவரித்திருந்தேன்.
சபிக்கப்படும் வரங்கள் - மெக்காலே கல்வித் திட்டம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட வரை ஆங்கிலம் பொது மொழியாக ,இணைப்பு மொழியாக இருந்தது. ஆங்கிலம் அனைவருக்கும் பள்ளியில் பயிற்றுவிக்க பட்டதால் இந்தியர்கள் உலக அறிவை பெற்றனர். அன்று சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூட
ஆங்கில அறிவு பெற்று  அதன் மூலம் சுதந்திரம், சமத்துவம்,ச்கோதரத்துவம், சோசியலிசம், அறிவியல் என் அனைத்து அறிவையும்  பெற்றனர்.

இனி இந்தி திணிப்பின் அரசியலை பார்ப்போம்.

1. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்த பிரச்சனை தொடங்கி விட்டது.முதன் முதலில் ராஜாஜி 1937ம் ஆண்டு இந்தியை தமிழகத்தில் கட்டாய பாடமாக திணித்தார். அப்போது பெரியார் மற்றும் நீதி கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்து போராடினார்கள்.
இரண்டாம் உலக போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதால், காங்கிரஸ் கட்சி ஆட்சி பதவியை ராஜினாமா செய்தது. அதன் பின் வந்த கவர்னர் ஆட்சியில் இந்தி பாடம் கட்டாய பாடத்திலிருந்து விருப்ப பாடமாகியது.

2. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிளும் இந்தியை கட்டாய பாடமாக்க  பணித்தது.தமிழகத்திலும் இது நடை முறை படுத்த பட்டது. இந்தியில் பாஸ் மார்க் எடுத்தால் தான் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற நிலை
ஏற்பட்டது.மீண்டும் திராவிட கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து கட்டாய பாடம் என்பது கை விட பட்டது.

3.சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் ஆட்சி/தேசிய மொழி பற்றிய விவாதம் தொடங்கியது..அன்றைய ஆட்சியாளர்களை பொருத்தவரை ஆங்கிலம் என்பது அயல்நாட்டு மொழி. அது இந்து - இந்தி - இந்தியா என்னும் ஆதிக்க வர்க்க தத்துவத்திற்கு எதிரானது. எனவே
ஆங்கிலத்தை முழுமையாக நீக்கி விட்டு அந்த இடத்திற்கு இந்தியை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர்.சிறும்பான்மை மொழி வளர்ச்சியையும் முடிந்த அளவு நசுக்கி விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பதன் மூலம் இந்தி அடிப்படையிலான இந்திய தேசியத்தை நிலை நிறுத்துவதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்களாம்.

4. உலகமயமாதல் இல்லாத அந்த காலத்தில் ஆங்கிலத்தின் தேவை அந்த அளவு இருந்திருக்கவில்லை. பொதுவாக கல்லூரி படிப்பவர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைக்கு செல்வார்கள். ஆங்கில மொழியில் இருந்த சில அடிப்படை புத்தகங்களை
இந்திக்கு மொழி மாற்றம் செய்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் இந்தி வழி பாடமாக மாற்றினால்  ஆங்கிலம் முழுமையாக நீக்கபட்டு இந்தி வந்து விடும்.முதலில் மத்திய, அதற்கு பின் மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்கு இந்தியை கட்டாயமாக்கி,
அனைத்து அரசு அலுவல்களும் இந்தியில் மட்டும் கொண்டு வந்து விட்டால் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கட்டாய பாடமாக ஏற்று கொண்டே ஆக வேண்டும். எனவே அரசு வேலைவாய்ப்பு தேர்வு, வேலைகளில் இந்தியை முழுமையாக திணிப்பதும், பள்ளி
கூடங்களில் இந்தியை திணிப்பதும் அடிப்படை திட்டமாக இருந்தது.

5. பிகார்,உ.பி,ம.பி போன்ற இந்தி மாநிலங்களை(மற்றும் மகாராஸ்டிரா ) சேர்ந்த அறிவு ஜீவி அரசியல்வாதிகள் இந்தியை மட்டுமே தேசிய மொழியாக்க வேண்டும் என்று விஷம் கக்கினர்.இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்று மமதையாக பேசினர். இது இந்தி-இந்து- இந்தியா என்ற கோட்பாட்டின் மன போக்கே..மிக பெரிய விவாதத்திற்கு பிறகு 17வது இந்திய அரசியல் நிர்ணய பிரிவில் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்காமல்  ஆட்சி மொழியாக அறிவிக்க  பட்டது. சுதந்திரம் அடைந்த 15 வருடத்திற்கு
ஆங்கிலமும் துனை மொழியாக இருக்கும் என்று முடிவு செய்ய பட்டது.இதை முன்ஷி - அய்யங்கார் தீர்வு என்பர்.இந்த முயற்சியில் தென்னகத்தை சேர்த்த பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பெரும்பான்மையான உறுப்பினர்களும் உழைத்தனர்.அவர்களுடைய முயற்சியாலே இன்று ஆங்கிலமும், பிற மொழிகளும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இல்லையென்றால் மொழிவாரி சிறும்பான்மையினரின் நலன்களை முலையிலேயே கிள்ளி எரிந்து இருப்பார்கள்.

6.ஆனாலும் அந்த சட்டம், ஆங்கிலத்தை அடுத்த 15 வருடங்களுக்கு மட்டுமே அனுமதித்தது.5 ஆண்டுகளுக்குள் மொழி கமிஷன் ஆரம்பிக்க பட்டு அதன் மூலம் இந்தியை எவ்வாறு இந்தியா முழுவதும் பரப்புவதும் என்றும் ஆங்கிலத்தை எவ்வாறு முழுமையாக நீக்க படவேண்டும் என்றும் முடிவானது.

7.பி.ஜி.கெர் தலமையிலான மொழி கமிஷன் இந்தியை எப்படி முழுமையாக திணிப்பது என்று ஆய்வு செய்து இந்தியை முதன்மை மொழியாகவும், ஆங்கிலத்தை சில காலம் துணை மொழியாகவும் வைக்கலாம் என்று முடிவு செய்து அறிக்கையை ஜி.பி.பந்திடம் சமர்பித்து அதையும் அவர் ஒப்பு கொண்டார்.

தொடர்ந்து நடந்தவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

2 comments:

Robin said...

Good Post!

சிவக்குமார் said...

தொடர்கிறேன்