Thursday, June 02, 2011

அபாயத்தில் இந்திய சீனா உறவு

இந்தியாவிற்கு சீனாவிடம் ராணுவ ரீதியான அபாயம் பற்றி பல செய்தி வந்து விட்டது. அதை விட மிக அபாயமான செய்தி தற்போது வளர்ந்து வரும் சீனாவுடனான வர்த்தக பெருக்கம் தான். கடந்த சில காலமாக இந்தியா சீனாவுடனான வர்த்தக உறவு பெருமளவு வளர்ந்து சீனா இந்தியாவின் வெளிநாடுகளுடனான வர்த்தகத்தின் முதலிடத்தை பெருமளவுக்கு வந்துள்ளது.

இந்தியா சீனாவிடமிருந்து செய்யும் இறக்குமதியின் மதிப்பு சீனாவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியை விட பெருமளவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 70% மூல பொருட்கள் ஆகும். அதாவது இந்தியாவின் இயற்கை வளத்தை நேரடியாக வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்கிறோம். அதே சமயம், சீனாவிடமிருந்து உற்பத்தி செய்ய பட்ட பொருளை அதிக அளவு இறக்குமதி செய்கிறோம்.

இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ய பட்ட மூல பொருட்களை கொண்டு சீனா, தன்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் தன்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவின் சிறு மற்றும் குறு தொழிற்கள் முற்றிலுமாக அழிய வாய்ப்புள்ளது.

தற்போதைய மத்திய அரசுக்கு இதை பற்றியெல்லாம் சிந்திக்க நேரமெங்கு இருக்க போகிறது!.

--

2 comments:

Anonymous said...

And then all the indian owners who earn money in this way will put in swiss banks. This is the poor india.

Rajasurian said...

:(