Monday, February 21, 2011

அமெரிக்காவில் ஒரு தொழிலாளர்கள் புரட்சி!

அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் செய்யும் புரட்சி பற்றி ஊடகங்கள் எங்கிலும் பார்க்கிறோம். ஆனால் அமெரிக்காவில் தொழிலாளர்கள் தங்கள் உரிமை பறி போவதை எதிர்த்து நடக்கும் போராட்டம் பற்றி வெகு சில ஊடகங்களே முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடுகிறது.தற்போது விஸ்கான்சின் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் உரிமையை பறிக்க சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளனர். அதை எதிர்த்து போராட்டம் தீப்பொறியாக ஆரம்பித்து தற்பொழுது பெரிதாக வெடிக்க தொடங்கி உள்ளது.




சுமார் 75000 அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்பாட்டம் அங்கு நடைபெற்றது. அமெரிக்காவில் இவ்வளவு ஊழியர்கள் தங்கள் உரிமயை காக்க போராடுவது சமீபத்திய நிகழ்வுகளில் புதுமையானது.இது போன்ற பெரிய அளவிலான மக்கள் போரட்டங்கள் லத்தீன் அமெரிக்க மக்கள் தவிர யாரும் செய்யவில்லை என்பது குறிப்பிட தக்கது. வங்கிகள் அமெரிக்காவில் ஏற்படுத்திய சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மாநிலங்களின் நிதி நிலமை மோசமாக உள்ளது.இதை காரணமாக காட்டி மாநில அரசு ஊழியர்களின் யூனியன் கட்டமைப்பை ஒட்டு மொத்தமாக அழிக்க விஸ்கான்சின் அரசு முயன்று வருகிறது. புதிய சட்ட திட்டத்தின் படி யூனியன் மூலம் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பேச்சு வார்த்தை நடத்துவது, யூனியனுக்கு பணம் வசூலிப்பது போன்ற யூனியன் சம்பந்தபட்ட அனைத்து நடிவடிக்கைகளிலும் நிறைய கட்டுபாடு விதிக்க படும். மொத்தத்தில் அரசு துறையில் தொழிற்சங்கங்களின் நடவடிக்கையை ஒட்டு மொத்தமாக முடக்கிவிட்டு அரசு துறை தொழிலாளர்களின் சலுகைகளை சிறிது சிறிதாக இனி வரும் காலங்களில் பற்றிப்பது தான் இந்த சட்ட திட்டத்தின் நோக்கமாக கருத படுகிறது.

இனி இதன் பின்னனியில் இருக்கும் அரசியல் பற்றி பார்ப்போம். சமீபத்திய பொருளாதார நெருக்கடியால் மக்கள் கோபம் தனியார் வங்கிகளின் மீதும் தனியார் முதலீட்டு நிறுவனங்களின் மீதும் திரும்பி இருந்தது. அந்த கோபத்தை அரசின் மீது திருப்ப தேனீர் விருந்து இயக்கம் குடியரசு கட்சி சார்ந்தவர்களால் தொடங்க பட்டது. அந்த இயக்கத்தினர் வலியுறுத்துவது சிறிய அரசாங்கம், குறைந்த அரசு கடன் மற்றும் குறைவான வரி. ஆனால் அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணமான தனியார் வங்கிகள், தனியார் லாபிக்கள் மற்றும் அவர்கள் மூலம் உடைத்து எறியபட்ட அரசின் கட்டுபாடு பற்றி இந்த இயக்கம் வாய் திறப்பது இல்லை.இத்தனைக்கும் அமெரிக்காவில் அடிப்படை பள்ளி கல்வி, அரசு நிர்வாகம், ராணுவம், முதியோர் நலம் போன்றவை மட்டும் அரசின் கையில் உள்ளது. சுகாதாரம், தொழிற் துறை, வங்கிகள் போன்ற அனைத்தும் தனியார் கையில் தான் உள்ளது. ஏனெனில் இந்த இயக்கத்தின் செயல்பாட்டுகளை வழி நடத்துபவர்கள் பலம் வாய்ந்த தனியார் லாபிக்களின் ஆதரவை பெற்றவர்கள்.கடந்த தேர்தலில் இந்த இயக்கத்தினரின் சிலர் வெற்றி பெற்றார்கள். அவர்களுடைய முக்கிய நோக்கமே அரசு பணியாளர்களின் தொழிற்சங்கங்களை அழித்து விட்டு அரசு தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்து அரசு கட்டுபாடற்ற தனியார் தொழிற் துறையை வளர்ப்பது தான் இந்த செயல்களுக்கு ஒரு சில பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள் ஆதரவு அளிப்பதாகவும் செய்தி உள்ளது.

கடந்த 20 - 30 வருடங்களில் அமெரிக்காவில் தனியார் துறைகளில் தொழிற்சங்கங்களின் அதிகாரங்களும் பல சட்ட திட்டங்கள் மூலம் கட்டு படுத்த பட்டு தனியார் துறைகளில் தொழிற்சங்கங்கள் பெயரளவுக்கு தான் உள்ளது. (அரசு துறை தொழிற்சங்கங்கள் 23% லிருந்து 36% ஆக 1973லிருந்து இன்றுவரை உயர்ந்துள்ளது. ஆனால் தனியார் துறை தொழிற்சங்கமோ 24% லிருந்து 7% ஆக குறைந்துள்ளது.) அமெரிக்க உற்பத்தி துறை சிறிது சிறிதாக அழிந்து மெக்சிகோ மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு சென்ற போது கூட அந்த தொழிற்சங்கங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தற்போது தனியார் தொழிற்துறையில் இருப்பவர்களை பொருத்தவரை தங்களுடைய சம்பளமும் குறைந்து, சலுகைகளும் குறைந்து எதிர்கால வளம் கேள்விக்குள்ளான நிலையில் இருக்கும் போது அரசு துறை ஊழியர்கள் மட்டும் நியாயமான உரிமைகளை தொழிற்சங்கம் மூலம் பெற்று வருவது அவர்களிடம் கோபத்தையே ஏற்படுத்துகிறது.

அடுத்து அரசு துறை தொழிலாளர்களின் நிலையை பார்ப்போம்.அமெரிக்காவில் அரசு துறையில் வேலை செய்வோரின் கல்வி தகுதியும் குறைந்தது இல்லை. அரசு துறை தொழிலாளர்களில் 54% பேர் நான்கு வருட கல்லூரி படிப்பு படித்துள்ளனர். தனியார் துறையில் இது 35% மட்டுமே. ஆனால் கல்லூரி படிப்பு படித்துள்ள அரசு துறை ஊழியர்கள் அதே தகுது உள்ள தனியார் ஊழியர்களை விட 28% குறைவான சம்பளம் பெருகிறார்கள். அவ்வளவு குறைவான சம்பளம் பெற்றும் அங்கே தொடர்ந்து இருப்பதற்கான காரணம் பணி ஓய்வு அடைந்த பின் அவர்களுக்கு கிடைக்க போவதாக நினைத்து கொண்டு இருக்கும் பலன்கள். ஆனால் அரசோ தொழிற்சங்கங்களை அழித்து பின் அவற்றையும் சிறிது சிறிதாக அழிக்க தொடங்கி உள்ளது . அதன் விளைவே மேற்சொன்ன போராட்டம்.

Animal Farm என்ற புத்தகத்தில் George Orwell கம்யூனிசத்தை பற்றி எழுதும் போது All are equal என்பது All are equal but some are more equal than others என்ற நிலைக்கு மாறிவிடும் என்பார்.தற்போது அதே நிலை அமெரிக்காவிலும் வந்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் கிரக்மேன் கூறுகிறார்.

இதோ அவருடைய கூற்றை படியுங்கள்.

In principle, every American citizen has an equal say in our political process. In practice, of course, some of us are more equal than others. Billionaires can field armies of lobbyists; they can finance think tanks that put the desired spin on policy issues; they can funnel cash to politicians with sympathetic views (as the Koch brothers did in the case of Mr. Walker). On paper, we’re a one-person-one-vote nation; in reality, we’re more than a bit of an oligarchy, in which a handful of wealthy people dominate.

உலகம் ஒரு உருண்டை!

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்த பிரச்ச்னை பற்றி வந்த தலையங்கம்


--

12 comments:

Rajasurian said...

கேபிடலிசம் தோல்வி பாதையில் தொடர்ந்து முன்னேறுகிறதோ?

Philosophy Prabhakaran said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_8099.html

அஞ்சா சிங்கம் said...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_8099.html
உங்களை வலைச்சரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறார்கள் ........
வாழ்த்துக்கள் .........

சதுக்க பூதம் said...

//கேபிடலிசம் தோல்வி பாதையில் தொடர்ந்து முன்னேறுகிறதோ//
வாங்க ராஜசூரியன். முதலாளித்துவம் அதன் இயல்பான பாதையிலேயே போகிறது. அதன் பணபலமும், அதிகாரங்களும் அரசியல்வாதிகளை அதிகம் பாதிக்கிறது. அரசு தான் தன் கடமையிலிருந்து தவறுகிறது

சதுக்க பூதம் said...

நன்றி பிரபாகரன்

சதுக்க பூதம் said...

நன்றி அஞ்சா சிங்கம்

Anisha Yunus said...

this is t first time i am reading ur blog, good write up anna. shud read all the links also. follow up this topic again, for it is a pleasure to read in tamil.:)

thank you.

vasu said...

வலுத்தவன் வாழ்வான் எனும் கொடியநிலையில் இருக்கிறோம்......
நிர்வாக மற்றும் பொருளாதார கொள்கைகளில் மிக பெரிய புரட்சிக்கு பின் தான் இந்நிலை சமனடையுமோ??

சதுக்க பூதம் said...

நன்றி அன்னு.மக்களை சென்றடைய வேண்டிய பொருளாதாரம் சார்ந்த தரமான பதிவுகளை தொடர்ந்து எழுத முயல்கிறேன்

சதுக்க பூதம் said...

வாங்க வாசு
//வலுத்தவன் வாழ்வான் எனும் கொடியநிலையில் இருக்கிறோம்......
நிர்வாக மற்றும் பொருளாதார கொள்கைகளில் மிக பெரிய புரட்சிக்கு பின் தான் இந்நிலை சமனடையுமோ??

//
உண்மை தான்.

ஆர்வா said...

பொதுசிந்தனையை தூண்டும் நல்லதொரு பதிவு. அருமை நண்பரே

நியூட்டனின் 3ம் விதி

ராஜ நடராஜன் said...

பொது ஊடகங்களில் அதிகம் வெளிப்படாத தகவல்.பகிர்வுக்கு நன்றி.