Friday, May 29, 2009

மன்மோகன் சிங் இனிமேல் இதை மட்டும் செய்ய வேண்டாம்

20,000 மக்களை சில நாளில் கொன்று குவித்த இலங்கை அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கி ஐக்கிய நாடுகள் சபையில் வாதிட்டு தன் மன சாட்சியை கழற்றி வைக்க முடிவெடுத்தது மிகவும் கண்டிக்க தக்க செயல். இத்தனை நாட்களாக பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று மேல் நாட்டு அரசாங்கத்தையும், மேல் நாட்டு கம்பெனிகளையும் பற்றி ஆப்ரிக்க ஆசிய நாடுகளை உதாரணம் காட்டி பல காலம் பேசினோம். தற்போது அதைவிட மோசமான செயலை இந்தியா,சீனா போன்ற சோசியலிச நாடுகள் செய்து வருகிறது. மேலை நாடுகள் இவ்வாறு தவறு செய்யும் போதாவது அங்குள்ள மீடியா மற்றும் சிறு பிரிவினர் அந்த செய்தியை அந்நாடுகளில் உள்ள மக்களுக்கு கொண்டு செல்வர். ஆனால் இந்திய பெரும்பான்மை மீடியாக்கள் இந்த செய்தியை கையாண்ட விதம் அனைத்து இந்தியரையுமே தலை குனிய செய்கிறது.

இந்த மனித பேரவலத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கு பல கோடி பெருமான காண்டிராக்ட்கள் இலங்கையில் கிடைக்கலாம். அதனால் பல கோடி பெரும்பாலான பணம் ஆட்சியாலர்களுக்கும், கட்சிக்கும்,பின்னனியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கிடைக்கலாம்.



இந்தியரின் பல கோடி பணத்தை லஞ்சமாக பெற்ற குவாட்ரோச்சி போன்ற ஆயுத இடை தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயலும் போது அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சளை கண்டு மனம் உருகும் ஜீவ காருண்ய சீலரான மன்மோகனுக்கு பல்லாயிரம் மக்கள் கொல்ல படும் போதும் அதற்கு அவர் நேரிடையாக மற்றும் மறைமுகமாக உதவும் போது மட்டும் மன உளைச்சல் வராதது யாருக்கும் புரியாத புதிர்.

இதற்கு தனி மனித வன்மம்,ராஜ தந்திரம், பேராசை என எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். இனி தயவு செய்து காந்தி படத்துக்கு மட்டுமாவது அஞ்சலி செலுத்தாமல் இருக்கட்டும். காந்தியின் அற வழி கொள்கையை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து விட்டு அவர் படத்துக்கும் அவர் சமாதிக்கும் மட்டும் உலகை ஏமாற்ற அஞ்சலி செலுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

--

2 comments:

Unknown said...

It's a part of India's 'Curzonism' doctrine. Read Mr. Praful Bidwai's article on this.

சதுக்க பூதம் said...

varun,Can you please give me the link to the article ?