Monday, May 25, 2009

டாலரிலிருந்து யூரோவுக்கு மாறும் ரஸ்யா

டாலரின் மதிப்பை உலக பொருளாதார சந்தையில் உயர்த்தி பிடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உலகில் பெரும்பாலான நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

உலக நாடுகளின் சேமிப்பு செல்வங்களில் 64% டாலரே உள்ளது.சமீபத்தில் வெளியிட பட்ட யூரோ நாணயமும் தன் பங்கை அதிகரித்து 26% என்ற அளவில் முன்னேறி உள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்க அரசு தன் கடன்களை வேகமாக அதிகரித்து வருவதால் உலக சேமிப்பு நாணயத்தில் டாலரின் பங்கு குறையும் என ஒரு சில பொருளாதார நிபுணர்களால் கணிக்க பட்டு வந்தது.நிதி நெருக்கடியால் டாலரின் புழக்கம் சர்வதேச சந்தையில் சிறிதளவு குறைந்துள்ளது. ஆனால் பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள்(முக்கியமாக பெட்ரோல்) டாலரிலேயே நடைபெருகிறது. அதே சமயம் அமெரிக்க அரசின் டிரசரி பாண்டுகள் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருத படுவதால் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் டாலர் சொத்துக்களை கடந்த சில மாதங்களாக அதிக அளவில் வாங்கி குவிக்க தொடங்கியுள்ளன.

சீனா முதன் முறையாக அமெரிக்க அரசின் செயல்பாட்டால் தங்களது முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.ஆனால் அது சேர்த்து வைத்துள்ள டாலர் சொத்துக்களின் மதிப்பை காப்பாற்ற மேன்மேலும் டாலர் சொத்துக்ளை வாங்க வேண்டிய கட்டயத்தில் டாலர் வலையில் வீழ்ந்துள்ளது. அந்த வலையிலிருந்து மீண்டு வர சில முயற்ச்சிகளை எடுக்க தொடங்கி உள்ளது.

இது உலக அரங்கில் ஒரு மாற்றத்தின் தொடக்கமாக கருத பட்டது. தற்போது மற்றொரு மிக பெரிய நாடு இம்மாற்றத்திற்கான முயற்சியில் ஈடு பட தொடங்கி உள்ளது. அதுதான் ரஸ்யா. கடந்த ஆண்டு வரை தன் சேமிப்பு செல்வத்தில் பெரும் பகுதி டாலர் சார்ந்த சொத்துக்களையே வைத்திருந்தது. ஆனால் தற்போது அது டாலர் சொத்துக்களை பெருமளவு யூரோ சார்ந்த சொத்துக்களாக மாற்ற தொடங்கி உள்ளது.ரஸ்யாவின் 47.5 சதவித சேமிப்பு செல்வங்கள் யூரோ சார்ந்ததாக உள்ளது. ஆனால் டாலர் சார்ந்த செல்வங்களோ 41.5% தான் உள்ளது.

டாலருக்கு மாற்றாக மற்றொரு நாணயம் வளர்வது என்பது உடனடியாக நடக்க கூடிய செயல் அல்ல. கிரிகெட் தர வரிசையில் முதலிடம் மாறுவது போல் இது எளிதாக நடக்க கூடியது அள்ள. ஏனென்றால் பல நாடுகளின் சேம்ப்பின் மதிப்பு இதன் மூலம் குறைய கூடும். ஆனால் இந்த மாற்றத்தின் ஆரம்பம் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது

--

No comments: