Thursday, March 19, 2009

பண வீக்கமும் முதலீடுகளின் மதிப்பும்- அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி பண வீக்கம் தான் என்று கூறுவர். அது மிகவும் உண்மைதான்.பண வீக்கத்தால் நமக்கு வருமானத்தை விட கூட ஆகும் செல்வை அரசு வரியாக போட்டுருந்தால் யாருமே அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற்றிருப்பர். ஆனால் நம் கண்ணுக்கு நேரிடையாக தெரியாமல் மறைமுக வரியாக வருடம் தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி அவ்வளவாக நாம் கவலை படுவதில்லை.

சூடான வெந்நீரில் ஒரு தவளையை தூக்கி போட்டால் அது உடனே முயற்ச்சி செய்து வெளியே குதித்து தப்பி விடும். ஆனால் அதே தவளையை சாதாரண நீரில் போட்டு சிறிது சிறிதாக கொதிக்க விட்டால் அது தப்பிக்க முயலாமல் இறந்து விடும். பண வீக்கம் என்பது இரண்டாவது வகையை சேர்ந்தது.

பண வீக்கம் என்பது குறைவான பொருளை நிறைய பணம் துரத்துவது எனலாம். கடந்த சில காலமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பணத்தை வரலாறு காணாத அளவில் அடித்து வெளியிடுவதால் கூடிய சீக்கிரம் மிக பெரிய பண வீக்கம் வர கூடிய வாய்ப்புகள் உள்ளது. 1990களில் ஜப்பானில் இது போன்ற பொருளாதார நெருக்கடி வந்த போது ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒத்தே தற்போது மற்ற நாட்டு அரசுகள் செயல் படுகின்றனர்.

இந்த பதிவு பண வீக்கத்தின் காரணத்தை ஆராய்வது இல்லை.

. தற்போது அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கையால் இரு வகை நிகழ்வுகள் நிகழும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிக்கினர்.

1. Price Inflation (வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவை பொருட்கள் வாங்குவது போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தல்)

2. Asset Deflation (வீடு, நிலம் மற்றும் பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு குறைதல்)

அதாவது நாம் அன்றாட தேவைகளுக்கு வாங்கும் பொருளின் விலை அதிகரிக்கும் ஆனால் நம்முடைய முதலீட்டின் விலை அந்த அளவுக்கு உயராது. இந்த நிலை தற்போதே இந்தியாவில் வர தொடங்க உள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை மேலை நாடுகளில் ஏற்படுத்த போகும் தாக்கத்தை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவாக இருக்கும். ஆனாலும் இதை பற்றி தற்போதைய நடுத்தர வயதினர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலத்தில் செலவிட என்று பல முதலீடுகளை செய்து வைத்திருப்பீர்கள். அதாவது நிலம், வீடு,மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தை முதலீடு என்று. ஆனால் அவற்றின் உண்மயான மதிப்பு பண வீக்கத்தை வைத்து பார்க்கும் போது மிகவும் குறைந்திருக்கும். அப்போதைய விலை வாசியும் மிக அதிகமாக இருக்கும். இது போன்ற நிகழ்வுகளால் அதிகம் பாதிக்க பட போவது பணி ஓய்வு பெற்றவர்களாக இருப்பர். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார சரிவால், பணியிலிருந்து ஓய்வு பெற நினைத்தவர்கள் போதிய பணம் இல்லாததால் இன்னும் நிரைய ஆண்டுகள் தங்கள் தள்ளாத வயதில் வேலை செய்ய வேண்டி உள்ளது.

இத்தகைய நிகழ்வு பற்றி டேனியல் அமெர்மேன் என்னும் பொருளாதார வல்லுனர் கூறுவதை கேளுங்கள்

If Your asset doubles in price, but a dollar will only buy what a quarter used to, then you didn’t double your money,you just lost half your savings, and any measures that doesn’t pick up on the difference isn’t worth using

இது போன்ற நிகழ்வுகளால் மக்கள் பொருட்களின் பண வீக்கம் (price inflation)மற்றும் சேமிப்பு பண வடிதல்(asset defalation) ஆகிய இரண்டாலும் பாதிக்க படுவர். இந்த பாதிப்பு முக்கியமாக பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகம் இருக்கும்.

--

4 comments:

Kalyan said...

நல்ல பதிவு. இப்போதிருக்கும் காலகட்டங்களில் இந்த மாதிரி பதிவுகள் அவசியம். வாழ்த்துக்கள்.

சதுக்க பூதம் said...

//நல்ல பதிவு. இப்போதிருக்கும் காலகட்டங்களில் இந்த மாதிரி பதிவுகள் அவசியம். வாழ்த்துக்கள்.
//
நன்றி கல்யாண். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

Anonymous said...

Excellent post. Thank you.
Leo.

சதுக்க பூதம் said...

நன்றி Leo