Friday, March 06, 2009

நாணயமில்லாத நாணயம்- பணத்தை உற்பத்தி செய்யும் வங்கிகள்

அனைவரது வாழ்விலும் இன்றியமையாத பங்கை வகிப்பது பணம். பணம் என்றவுடன் நம் மனக்கண்ணில் தோன்றுவது காகிதத்தாலான ஒரு பொருள். அனால் அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அதன் மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது பற்றி சிந்திப்பவர்கள் நம்மில் சிலரே. இந்த பணத்தை உற்பத்தி செய்வது யார்? இது என்ன கேள்வி? அரசாங்கம் தானே என்று நம்மில் பலர் எண்ணுவோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு சாதாரண வங்கிதான் பெரும்பாலான பணத்தை உற்பத்தி செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?இது எப்படி சத்தியமாகும் ?ஆனால் உண்மை அதுதான்.

The other way around - Bank Robber

நன்றி- jugsi.com

வங்கிகள் தங்களிடம் உள்ள கையிறுப்பு தொகைக்கு அதிகமாக கடனை கொடுக்கிறது.அவ்வாறு கடனாக கொடுக்கப்படும் பணத்தை உபயோகபடுத்தப்பட்டு மீண்டும் வங்கியில் கையிறுப்பாக வைக்கப்படும் போது மீண்டும் அதிக அளவு கடன் கொடுக்கப்படுகிறது.உதாரணமாக 10,000 ரூபாயை ஒருவர் வங்கியில் டெபாசிட் செய்கிறார் என்று வைத்து கொள்வோம். அந்த வங்கி மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவித பணத்த கையிறுப்பாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக இது 5 லிருந்து 20 சதவிதமாக இருக்கும். இந்த உதாரணத்தில் 10% என்று வைத்து கொள்வோம்.வங்கி 1000 ரூபாயை கையிறுப்பாக வைத்து விட்டு 9000 ரூபாயை மற்றொருவருக்கு கடனாக கொடுக்கும். அந்த 9000 ரூபாயை கடன் வாங்குகிறவர் அந்த பணத்திற்கான காசோலையை இன்னொருவருக்கு கொடுத்து, அந்த மற்றொருவர் அந்த காசோலையை மீண்டும் ஒரு வங்கியில் செலுத்துவதாக வைத்து கொள்வோம்.

இந்த உதாரணத்தில் அனைவரும் ஒரே வங்கியை உபயோகப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம்.அந்த வங்கி அந்த பணத்தில் 900 ரூபாயை கையிருப்பாக வைத்து 8100 ரூபாயை கடனாக மற்றொருவருக்கு கொடுக்க முடியும். இது போல் தொடர்ச்சியாக கடன் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த பணத்திலிருந்து பல பேருக்கு அவ்வாறு கடன் கொடுப்பதன் மூலம் 100,000 ரூபாய் கொடுக்க முடியும். ஆனால் வங்கி வைத்திருக்கும் கையிருப்பு தொகையோ 10,000 ரூபாய் மட்டுமே. இந்த படத்தில் உள்ள புள்ளி விவரத்தை பார்த்தீர்களானால் வங்கி எவ்வாறு அதிக அளவு பணத்தை உருவாக்குகிறது என்பது விளங்கும்(Fractional Reserve System). கடன் வாங்குகிறவர் நேரடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பணத்தை மீண்டும் வங்கியில் செலுத்தாவிட்டால் இந்த சுழற்சி நடுவில் நின்று விடும். ஆனால் அவ்வாறு நடப்பது அரிது. இந்த சுழற்சசியின் வேகம் அப்போதைய பொருளாதார நிலையை பொறுத்து அமையும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், ஒவ்வொரு முறை அது கடன் கொடுக்கும் போதும் அந்த பணத்திற்கு வட்டியாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வருடமும் பெருமளவு வசூலிக்கிறது. மிக குறைந்த முதலீடு மட்டும் கொண்டு, இல்லாத பணத்தை உருவாக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். நாட்டில் பொருளாதாரம் மிகவும் வளர்ச்சி அடையும் போது பணமும் வேகமாக கை மாறி கொண்டிருக்கும்(velocity of money) போது மேற்கூறிய நிகழ்வும் வேகமாக நடக்கிறது. அதனால் தான் வங்கிகளும் அனைவருக்கும் முடிந்த வரை பணத்தை கடனாக கொடுத்து தங்களது வளர்ச்சியை மிக வேகமாக பெருக்கி கொள்ள முனைகிறது.



இந்த செயல்முறைக்கு ஆதரவானவர்களின் கருத்து, இவ்வாறு பணத்தை அதிக அளவு உற்பத்தி செய்து கொடுப்பதினால் அது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பது.

வங்கிகள் கடனுக்கு அடமானமாக பொருளை வைத்து தருவதால் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. அடமானமாக வைத்திருக்கும் பொருளின் விலை பெருமளவு குறைந்தால் தான் வங்கிகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது அல்லது அடமானமாக பொருளை பெறாமல் பெருமளவு கடன் கொடுத்தாலும் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு வங்கிகள் பணத்தை அதிக அளவு உருவாக்கி கடனாக கொடுத்துக் கொண்டே செல்வதனால் நாட்டில் பணப் புழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பொருட்கள் உற்பத்தியை விட பணத்தின் உற்பத்தி மிக அதிகமானால் அது பெரிய பண வீக்கத்தை உண்டாக்குகிறது.

மேலும் இது முக்கியமாக நிலம் மற்றும் வீடுகளின் விலையை பெரிய அளவில் உயர்த்துகிறது. இந்தியா போன்ற நாடுகளில் கடன் கொடுக்கும் முன் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு குறிபிட்ட தொகையை வாங்கி மீதி தொகையை வங்கி கடனாக கொடுக்கிறது. எனவே கடன் வாங்கி பொருளை, உதாரணமாக வீடு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வாங்கிய வீட்டின் மதிப்பு குறைந்தாலும் கணிசமான அளவு சொந்த பணத்தை போட்டிருப்பதால் எப்படியாவது முழு கடனையும் அடைத்து விட முயற்சி செய்வர், ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் தன் கையிலிருந்து மிக சொற்ப தொகை மட்டும் போட்டு வீடு வாங்க கடன் வாங்கி கடனுக்கான வட்டியை மட்டும் தவணை முறையில் செலுத்த முடியும்.

அவ்வாறு வீடு வாங்குபவர்களின் நோக்கமே, வீட்டின் விலை உயர்ந்தவுடன் விற்று விடலாம் என்பது தான். வரைமுறையின்றி இவ்வாறு கடன் கொடுத்ததால் அமெரிக்க ரியல் எஸ்டேட்டின் விலை பல மடங்கு செயற்கையாக உயர்த்தப்பட்டது. உண்மையில் சராசரி நடுத்தர வர்க்கத்தினரின் சம்பளத்தில் உயர்வில்லை. செயற்கையாக உயர்ந்த விலை உண்மையான நிலைக்கு வர தொடங்கிய போது கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிக் கொடுக்க விருப்பம் இல்லாமலும், திருப்பிக் கொடுக்க முடியாமலும் கடனை திருப்பிக் செலுத்தாத போது வங்கிகளின் கையில் மதிப்பு பெருமளவில் குறைந்த வீடுகளின் பத்திரம் மட்டுமே எஞ்சியது. அது உலக பொருளாதாரத்தையே படுபாதாளத்திற்கு தள்ளியது.

இவ்வாறு வங்கிகள் பெருமளவு கடனாக கொடுப்பதினால், முக்கியமாக நாட்டின் உற்பத்தி திறனை விட மிக அதிகமாக பணபுழக்கத்தை ஏற்படுத்துவதால் மற்றொறு பிரச்சனையும் ஏற்படுகிறது. கடனின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வட்டியின் அளவும் அதிகரிக்கும். அந்த வட்டியை திருப்பிக் செலுத்த பணபுழக்கத்தை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும். வங்கிகளின் நிலை மோசமானாலும் பெருக்கபட்ட வட்டியை திருப்பிக் கொடுக்க அரசுகள் செயற்கையாக பணத்தை வங்கிகளிடம் செலுத்தி பண புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். இது சுழற்ச்சியாக மாறும். இதுதான் அமெரிக்காவில் இன்று நடக்கிறது. இவ்வாறான செயலால் ஏற்படும் மற்றொரு விளைவு, இந்த பணபுழக்கம் ஆரம்பிப்பதற்கு முன் மக்களிடம் இருந்த பணத்தின் (சேமிப்பு மற்றும் சம்பளம்) வாங்கு திறன் குறைந்து செல்வ சீரழப்பு (wealth destruction) நிகழ்கிறது.இது போன்ற boom மற்றும் bustஇனால் அதிகம் பாதிக்க பட போவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தான்.

வங்கிகள் பற்றி படிக்கும் போது கல்லூரி காலங்களில் படித்த புது கவிதை தான் ஞாபகம் வருகிறது(அப்துல்ரகுமான் அல்லது கல்யாண்ஜியினுடையது என்று நினைக்கிறேன்)

வரங்களே இங்கு
சாபங்களானால்
தவங்கள்
எதற்காக?



வங்கிகள் இந்த முறையால் அடையும் லாபத்தை பார்ப்போம். அமெரிக்காவில் $1 மில்லியன்(10 லட்சம்) பணம் டெபாசீட் வைத்து கொண்டு மேற் சொன்ன முறையில் $10(1 கோடி) மில்லியன் வரை கடன் கொடுக்க முடியும். வங்கி 6 சத வட்டிக்கு கடன் கொடுக்கிறது என்று வைத்து கொள்வோம், வங்கிக்கு 1 ஆண்டில் வட்டியாக கிடைக்கும் பணம் $600000(6 லட்சம்). பணம் கையிறுப்பாக(depositors) வைத்திருப்பவர்களுக்கு 2% வட்டி கொடுத்தால் சுமாராக $200000($2 லட்சம்) கொடுக்க வேண்டும். எனவே $1 மில்லியன்(10 லட்சம்) வைப்பு நிதியின் மூலம் ஒரு வருடத்தில் வங்கி அடையும் லாபம் $400000(4 லட்சம்)! (குறிப்பு: இந்த கணக்கீடு ஒரு உதாரணமே. பணத்தின் திசைவேகம் மற்றும் திரும்ப கொடுக்க படாத கடன்களால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பு இதில் சேர்க்கபடவில்லை)


--

40 comments:

Machi said...

நிலைமை சரியானதும் வங்கிகளின் பங்குகளை வாங்க வேண்டியது தான். இன்னும் 1 அல்லது 2 ஆண்டுல சரி ஆகிடும்.

சதுக்க பூதம் said...

//நிலைமை சரியானதும் வங்கிகளின் பங்குகளை வாங்க வேண்டியது தான். இன்னும் 1 அல்லது 2 ஆண்டுல சரி ஆகிடும்.

//
உண்மை தான். முக்கியமாக அமெரிக்காவில் இந்த பொருளாதார பின்னடைவில் தப்பிக்கும் வங்கிகள் மிக பெரிய monster ஆக மாறி உலகையே முழுமையாக ஆட்டி வைக்கும் நிலைக்கு மாறும்.ஒவ்வொரு பொருளாதார மந்தம் முடியும் போதும் பல பெரிய வங்கிகள் வீழ்ந்து சில வங்கிகளின் வளர்ச்சி மிக பெரியதாகும்

Anonymous said...

//இந்த பணத்தை உற்பத்தி செய்வது யார்? இது என்ன கேள்வி? அரசாங்கம் தானே என்று நம்மில் பலர் எண்ணுவோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு சாதாரண வங்கிதான் பெரும்பாலான பணத்தை உற்பத்தி செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?இது எப்படி சத்தியமாகும் ?ஆனால் உண்மை அதுதான்.
//

padikumboothe viyapaga ullathu
For sure most of us would have not even given a thought how Money is been printed

so in tht way this article will be usefull for may to know abt it

இப்னு ஹம்துன் said...

வரங்களே சாபங்களானால்
இங்கே
தவங்கள் எதற்காக..

- இது அப்துல்ரகுமான் எழுதியது.

(பதிவு பத்தி அப்பால படிச்சிட்டு சொல்றேன்:))

K.R.அதியமான் said...

fractional banking system. yes, and this is the norm for many decades. prudnetial lending norms and govr regulations : they are the issue here. SLR and CRR in India, etc.

But what about the net increase in money supply called M3 ?
and the relationship between this M3 with govt deficits ?

http://www.rbi.org.in/scripts/WSSView.aspx?Id=13358

http://athiyaman.blogspot.com/2008/10/where-did-all-this-money-come-from.html

சதுக்க பூதம் said...

//இது அப்துல்ரகுமான் எழுதியது.//

தகவலுக்கு நன்றி. பதிவில் மாற்றம் செய்துள்ளேன்.

பதிவை பற்றி படித்த பிறகு தங்கள் கருத்தை கூறவும்

சதுக்க பூதம் said...

நீன்ட நாட்களுக்கு பின் என் பதிவிற்கு வருகிறீர்கள் அதியமான்

//fractional banking system. yes, and this is the norm for many decades. prudnetial lending norms and govr regulations : they are the issue here. SLR and CRR in India, etc.//
இந்தியா மட்டுமல்ல.அனைத்து நாடுகளிலும் இது போன்ற கட்டுபாடு உள்ளது.ஆனால் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய கையிறுப்பு பணம் மிக குறைவே.பொதுவாக இந்த சதவிதங்களை மாற்றுவதன் மூலம் மத்திய வங்கிகள் பண புழக்கத்தை கட்டு படுத்த முயலும்

//அந்த வங்கி மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவித பணத்த கையிறுப்பாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக இது 5 லிருந்து 20 சதவிதமாக இருக்கும்.//

என்று கூறியுள்ளேன்

//But what about the net increase in money supply called M3 ?
and the relationship between this M3 with govt deficits ?//

பண புழக்கத்துக்கு காரணம் இந்த Fractional reserve system மட்டும் என்று எங்கும் கூறவில்லை.

அரசின் பற்றாக்குறை பட்ஜெட் பற்றி சரியாக சுட்டி காட்டி உள்ளீர்கள். உலக வங்கி,பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து வளரும் நாடுகளை கடன் வலையில் விழ செய்து அரசின் வரி பணத்தில் முக்கிய பங்கை கடனுக்கு வட்டியாக கொடுத்து விட்டு, மேலும் ஆயுத வியாபாரிகளின் கை கூலியாக இருந்து பெரும் பணத்தை பாதுகாப்பு என்ற பெயரில் கொள்ளை அடித்து பற்றாக்குறை பட்ஜெட்டை போட்டு , அதை சரி செய்ய பணத்தை அச்சிட்டு பண புழக்கத்தை அதிகரிக்கிறார்கள்

இது பற்றி ஜான் பெர்க்கின்ஸின் "Confession of an economic hitman"(பொருளாதார அடியாளின் வாக்குமூலம்) என்ற நூலில் அழகாக விளக்குகிறார்.

M3 மற்றும் அரசு பண புழக்கத்தை எவ்வாறு அதிகரிக்கிறது மற்றும் அமெரிக்காவில் பெடரல் வங்கி அரசை ஆட்டுவிப்பது பற்றி ஒரு பதிவு எழுதி வருகிறேன்

சதுக்க பூதம் said...

இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

இணைத்துவிட்டேன் அப்பாவி தமிழன். தகவலுக்கு நன்றி

K.R.அதியமான் said...

//உலக வங்கி,பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து வளரும் நாடுகளை கடன் வலையில் விழ செய்து அரசின் வரி பணத்தில் முக்கிய பங்கை கடனுக்கு வட்டியாக கொடுத்து விட்டு, மேலும் ஆயுத வியாபாரிகளின் கை கூலியாக இருந்து பெரும் பணத்தை பாதுகாப்பு என்ற பெயரில் கொள்ளை அடித்து பற்றாக்குறை பட்ஜெட்டை போட்டு , அதை சரி செய்ய பணத்தை அச்சிட்டு பண புழக்கத்தை அதிகரிக்கிறார்கள்

இது பற்றி ஜான் பெர்க்கின்ஸின் "Confession of an economic hitman"(பொருளாதார அடியாளின் வாக்குமூலம்) என்ற நூலில் அழகாக விளக்குகிறார்.///

too simplistic view point.
"Confessions of Economic Hitman :
they do not apply to nations like India which has a functional democracy but which needed foreign investment and IMf loans.

wherever there is lack of democracy and transparency, there will be corruption and economic hitman. but all MNCs do not induldge in such sleazy tactics.
there are hundreads of MNCs which do not use or need such hitmen.
esp in nations like India.

and there was no conspiracy to trap third world countires into debt trap by West. on the contray, the foolish polices of socialistic third world nations bankrupted them and made them beg for dollars and foreign aid in the past.

Pls try my :
http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

also this very important article by Rajaji written in 1960 :

http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html

K.R.அதியமான் said...

Washington Could Use Less Keynes and More Hayek
http://online.wsj.com/article/SB123371237124446245.html

Beware: Recession May Be Hayekian ? (January 28, 2009)
http://swaminomics.org/articles/20090128.htm

http://swaminomics.org/articles/20090208.htm

http://swaminomics.org/articles/20090225.htm

சதுக்க பூதம் said...

//too simplistic view point.
"Confessions of Economic Hitman :
they do not apply to nations like India which has a functional democracy but which needed foreign investment and IMf loans.

wherever there is lack of democracy and transparency, there will be corruption and economic hitman. but all MNCs do not induldge in such sleazy tactics.
there are hundreads of MNCs which do not use or need such hitmen.
esp in nations like India.
//
உலக வங்கி கடன் பணம் எல்லாம் டிரான்ஸ்பெரன்ஸியுடன் ஊழல் இல்லாமல் திறம்பட செலவிடபட்டுல்ளதாக கூறும் உங்களது நகைச்சுவை உணர்வை பாராட்டுகிறேன். உலக வங்கி திட்டமே இங்கு உள்ள அரசியல்வாதிகளும் பன்னாட்டு கம்பெனிகளும் கொள்ளை அடிக்க தான் என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்த செய்தி.
சில மாதங்களுக்கு முன் கூட உலக வங்கி பிராஜெட்களில் முக்கிய பங்கு வகிக்கும் சீமென்ஸ் நிறுவனம் பல பில்லியன் டாலர்களை லஞ்சம் கொடுக்கவே தனி கவுண்டர் வைத்து இருந்தது கண்டுபிடிக்க பட்டு அதுவே ஒப்பு கொண்டது.சீமென்ஸ் போன்ற நேர்மையான நிறுவனமாக நம்பபடும் நிறுவனத்தின் கதியே இது என்றால் மற்ற நிறுவனங்களை சொல்ல வேண்டாம்.
//and there was no conspiracy to trap third world countires into debt trap by West//

உண்மையான கான்பிரசி பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன். அது பெரிய topic.முடிந்தால் பிரவுனின் Web of Debt என்ற புத்தகத்தை படித்து பார்க்கவும்

//Pls try my :
http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?
//
1991ல் இந்தியாவிற்கு வந்த பிரச்சனையின் காரணமே வேறு. சோவியத் காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான வெளிநாட்டு வர்த்தகம் நாடுகளுக்குள் பொருட்களை மாற்றி கொள்வதன் மூலம் நடந்ததால் தேவையற்ற பாரெக்ஸ் மற்றும் டாலர் வலையில் விழ தேவையின்றி நேர்மையான வர்த்தகம் இருந்தது. அமெரிக்க அரசு டாலருக்கு ஈடான தங்கத்தை தருவதாக கூறி மறைமுகமாக அதிக டாலரை வெளியிட்டு தங்கத்தை திருப்பி கொடுக்க முடியாத போது டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அரேபிய அமெரிக்க கூட்டு முயற்ச்சியால்(சதி) பெட்ரோலை டாலரில் மட்டும் விற்கவும் பெட்ரோலின் விலையை அதிக அளவு உயர்த்தி வளரும் நாடுகளின் வர்த்தகத்தை சீரழித்ததாலும் சோவியத் வீழ்ச்சியாலும் மொத்த வளரும் நாடுகளும் தங்கள் மக்களின் தேவையை கவனிக்காமல் வாளர்ந்த நாடுகளுக்கு சேவை செய்யும் கூலியாலாக மாற்ற பட்டனர். அது பற்றியும் பிறிதொரு பதிவில் இடுகிறேன்.

K.R.அதியமான் said...

//உலக வங்கி கடன் பணம் எல்லாம் ////

i didn;t say that. that is WB aid is 100 % perfect, etc. My question is does an MNC need to bribe anyone if it wants to invest in a nation like Ireland or Netherlands ?

Corruption exists everywhere and the issue is to minimise it.

one important link :
http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

so what do u propose ? abolish WB and IMF and thorw out all MNCs from third world ? by all means propogate and implememt these ideas. and see the results.

Reg : 1991 balance of payments crisis. all i can say is you views do not address the core of the problem. Have you any idea of the grest rupee devaluation of 1966
by Indira Gandhi which costed her politically. that was the peak of the Indo - Soviet collabaration period. and Rajaji was warning about this mess right from the beginning. there is a policy called Import substituion industrialisation which was disatrostrous.

Pls answer my final question in my post about 1991.

//உலக வங்கி திட்டமே இங்கு உள்ள அரசியல்வாதிகளும் பன்னாட்டு கம்பெனிகளும் கொள்ளை அடிக்க தான் என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்த செய்தி.
///

you mean all the 110 crore Indians are aware of this conspiracy. then why didn;t Indians throw out these MNCs.

Actually, extreme free marketers are dead against WB and IMF and want every nation and company to fend for itself without any 'help' or 'aid' ; that is real free market with minimum govt intervention. but for IMF, India would have been bankruopted like present day Zimawae decades back.
and you would not have had the chance to educate and emigrate to US, but live a subsitance existence in a devasteated India.

There is plenty of arguments against the creation of these Brestton Wood Twins (IMF and WB)
from these Austrian School of Economists. may be they are right.

Seizing instances of corruption and 'hitman' amidst lacs of transcations and investemts and projecting them alone as the whole picture is gross generalisation from some instances.

Pls try the excellent book :

"In Defence of Globalisation" by
Jagadish Bagawathi (COloumbia University). This is a very important book and containts excellent info and arguments about
MNCs, WB, dollar, etc.

சதுக்க பூதம் said...

//My question is does an MNC need to bribe anyone if it wants to invest in a nation like Ireland or Netherlands ?
//
அவர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல. நெதர்லாந்திலும் முதலீடு செய்கிறார்கள். மேலும் அய்ரோப்பா மற்றும் அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் அதனால் வளர்ச்சி பெருக்கம் குறைந்து விட்டது. இந்தியா மற்றும் சீனாவில் தான் மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கைறது.என்வே அவர்கள் வளர வேண்டும் ஆனால் இங்கு தான் வர வேண்டும். அல்லது இந்தியரின் உழைப்பை மலிவாக்கி சுரண்ட வேண்டும்


//you mean all the 110 crore Indians are aware of this conspiracy. then why didn;t Indians throw out these MNCs.
//
இதற்கு பதில்- ரத்த வெறி பிடித்து மாபெரும் நடத்தி மற்றும் நடத்தி கொண்டிருக்கும் மோடி போன்றவர்களையும், ஊழலையே வாழ்க்கையாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் எப்படி தேர்ந்து எடுப்பதற்கான காரணம் என்னமோ அது தான் உங்கள் கேள்விக்கும் பதில்.மத,ஜாதி பாகுபாடு மற்றும் மீடியா ஒரு சிலரின் கைக்குள் இருப்பது முக்கிய காரணம்.

என் நெருங்கிய உறவினர்கள் தமிழக உலக வங்கி நிதி திட்டத்தின் திட்டமிடல் மற்ரும் திட்ட செயலாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்கள். அவர்கள் கூற்று படி எந்த திட்டத்திலும் 40 - 50 சத பணம் கூட திட்டத்திற்காக செலவிடபடவில்லை. மேலும் உலக வங்கியின் உள்ளே நடக்கும் பிராஜெக்ட்டுக்கு கூட எப்படி லஞ்சம் விளையாடியது என்பது சத்யம் மற்றும் விப்ரோ உதாரணம். அதன் உள் நிர்வாக வேளைக்கே இப்படி லஞ்சம் என்றால் அது கடன் கொடுக்க நடைபெரும் லஞ்சம் அந்த வேலையை முடிப்பதில் லஞ்சம் (அவற்றில் உலக வங்கியினர் லஞ்சம், திட்ட தயாரிப்புக்கு/திட்டமிடலுக்கு பன்னாட்டு நிறுவனம் அடிக்கும் பணம், அதை பெற பன்னாட்டு நிறுவனம் அடிக்கும் லஞ்சம், அது பிரித்து கொடுக்கும் வேலையை வாங்க உள் நாட்டு நிறுவனம் வாங்கும் லஞ்சம், செயலாக்கத்தில் மத்திய மாநில் அரசியல்வாதிகள் அடிக்கும் லஞ்சம், அதை கண்காணிப்பதில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகரிகளின் லஞ்சம் என வேலை முடிவதற்குள் பெரும் பகுதி லஞ்சமாகவே முடிந்து விடும்) என பெரும் பங்கு லஞ்சமாகவே கருப்பு பணமாக போய் முடிவில் பெரும் பங்கு சுவிஸ் வங்கியில் தான் போய் சேர்கிறது
//India would have been bankruopted like present day Zimawae decades back//

இந்தியா அந்த நிலைக்கு தள்ள பட்டதற்கான காரணத்தை போன பதிலில் தெளிவாக கூறியிள்ளேன்.

//you would not have had the chance to educate and emigrate to US, but live a subsitance existence in a devasteated India//
நான் எண்பது மற்றும் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் அதுவும் கார்பொரேசன் பள்ளியில் தான் படித்தேன். என் படிப்பிற்கு உலகமயமாதல் எந்த வகையிலும் உதவவில்லை.என் தந்தை அவரது சம்பளத்தில் என்ன சேர்த்தாரோ அதை தான் நானும் அடைந்து கொண்டிருக்கிறேன். பொருள்களின் விலை மற்றும் சம்பளம் இரண்டும் ஒரே அளவுதான் உயர்ந்து வருகிறது.

//but live a subsitance existence in a devasteated India.
//
பெற்றோர் வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள திருப்தியோ,மகிழ்ச்சியோ, நிலையான தன்மையோ இப்போது எனக்கு இல்லை. இது எனக்கு மட்டும் அல்ல.என்னை போன்ற பெரும்பாலோர்க்கும் பொருந்தும்

//Pls answer my final question in my post about 1991.
//

அதை பற்றி தானே நான் தெளிவாக பதிலளித்துள்ளேன். மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்

//1991ல் இந்தியாவிற்கு வந்த பிரச்சனையின் காரணமே வேறு. சோவியத் காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான வெளிநாட்டு வர்த்தகம் நாடுகளுக்குள் பொருட்களை மாற்றி கொள்வதன் மூலம் நடந்ததால் தேவையற்ற பாரெக்ஸ் மற்றும் டாலர் வலையில் விழ தேவையின்றி நேர்மையான வர்த்தகம் இருந்தது. அமெரிக்க அரசு டாலருக்கு ஈடான தங்கத்தை தருவதாக கூறி மறைமுகமாக அதிக டாலரை வெளியிட்டு தங்கத்தை திருப்பி கொடுக்க முடியாத போது டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அரேபிய அமெரிக்க கூட்டு முயற்ச்சியால்(சதி) பெட்ரோலை டாலரில் மட்டும் விற்கவும் பெட்ரோலின் விலையை அதிக அளவு உயர்த்தி வளரும் நாடுகளின் வர்த்தகத்தை சீரழித்ததாலும் சோவியத் வீழ்ச்சியாலும் மொத்த வளரும் நாடுகளும் தங்கள் மக்களின் தேவையை கவனிக்காமல் வாளர்ந்த நாடுகளுக்கு சேவை செய்யும் கூலியாலாக மாற்ற பட்டனர். //
Have you any idea of the grest rupee devaluation of 1966
by Indira Gandhi which costed her politically. that was the peak of the Indo - Soviet collabaration period.
//
அப்போதைய முக்கிய பிரச்சனை உணவு உற்பத்தி குறைந்து பஞ்சம் ஏற்பட்டு உணவு பொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது தான். மெக்சிகோ மற்றும் பிலிபைன்ஸ் நாட்டில் கண்டுபிக்க பட்ட நெல் மற்றும் கோதுமை பயிரின் மூலம் அந்த நிலை மாறி சுய சார்பு அடைந்தவுடன் அந்த பிரச்சனை போய்விட்டது(இந்த மாற்றத்திற்கு போர்டு பவுண்டேசன் போன்ற முதலாளித்துவ நிறுவனங் கள் உதவின என்பதை கட்டாயம் அனைவரும் ஒப்பு கொள்ள வேண்டும்)
//Rajaji was warning about this mess right from the beginning//

ராஜாஜியை பொருத்தவரை அவரின் கவனம் எல்லாம் 5% குறிபிட்ட சமூக மக்கள் மற்றும் உயர் தர மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும். அந்த பிரிவினருக்கு போட்டியாக யாரும் வர கூடாது என்பதுதான். தாழ்த்த பட்ட இளம் மாணவர்களை படிப்பதில் கவனம் செலுத்த விடாமல் பெரும் பண்ணைகளில் இளம் வயதிலேயே கூலி தொழிலாளியாக்க குல கல்வி திட்டம் மூலம் முயன்றதே சாட்சி.

//"In Defence of Globalisation" by
Jagadish Bagawathi (COloumbia University). This is a very important book and containts excellent info and arguments about
MNCs, WB, dollar, etc.
//
அந்த புத்தகத்தின் ஒரு பகுதி ஏற்கனவே படித்துள்ளேன்.
நீங்கள் கூறும் வெளிநாட்டு முதலீட்டின் கதையை கூறுகிறேன்.
ரிசர்வி பேங்கின் M3 பற்றி கேட்கும் நீங்கள் பெடரல் வங்கியின் M3 முக்கியமாக 1988 லிருந்து எவ்வாறு உயர்ந்துள்ளது என்று பாருங்கள். 2007க்கு பின் அதை நீங்கள் நினைத்தாலும் பார்க்க முடியாது.ஏனென்றால் அதை வெளியிடும் அளவுக்கு தகுதியில்லை என்று பெடரல் முடிவு செய்து விட்டது.
அமெரிக்காவின் உற்பத்தி பெருக்கத்திற்கும் பண வெளியிட்டிற்கும் சம்பந்தமேயில்லை. அதற்கு தங்க மாற்றும் கிடையாது,பொருள் உற்பத்திக்கு சற்றும் சம்பத்தம் இல்லாமல் பண உற்பத்தியும் உள்ளது.அவற்றிலும் பெரும் பான்மையான மதிப்பு செயர்கையாக உயர்த்தபட்ட ரியல் எஸ்டேட் மதிப்பு.வெலாசிட்டி ஆப் மணி காரணமாக அது பெருக்க பட்ட அளவும் அதிகம்.
.சுருங்க கூற போனால் எந்த மதிப்பும் இல்லாத பேப்பருக்கு(அது பெட்ரோல் வாங்க தேவை என்ற ஒரே காரணம் என்பதால்) ஒட்டு மொத்த இந்தியவின் கனிம பொருட்கள்,உழைப்பு அனைத்தையும் மலிவாக்கி, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி விட்டோம். அது மட்டுமல்ல, அந்த வெற்று காகிதத்திற்காக நம் சுற்று சூழல் அனைத்தையும் வீணாக்கி,விளை நிலத்தை அழித்து இனிவரும் சந்ததியினரின் வாழ்க்கையும் screw up செய்து விட்டோம்.இதற்கு இந்தியா மட்டும் பலிகடா அல்ல.பெரும் பாலான ஏழை நாடுகலும் தான்.எனவே பிரச்சனைக்கு காரணம் அதீத லாபம் சம்பாதிக்க நினைக்கும் முதலாளித்துவ வாதிகளும் வங்கிகளும் தான்.அதன் மற்றொரு விளைவு, இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பளிக்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனக்கள் அழிக்க பட்டு இந்திய பெரு நிறுவங்களின் கணிசமான பங்குகலும் மேலை நாட்டு வங்கி மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களை அடைந்து விட்டது.இதை பற்றி மேன்மேலும் எழுதிக்கொண்டே போகலாம்.மேலும் மேலை நாடுகளில் வளர்ச்சியாக கூற பட்ட இந்த நிகழ்வு வளர்ச்சி அல்ல வீக்கம் என்று இன்று அனைவருக்கும் உணர்த்துகிறது.வீக்கத்தை வடியவிடாமல் தடுத்து மேலும் அதை பெருக்க முயற்ச்சி செய்தால் அது இதை விட பெரிய பிரச்சனியில் விடம் என்று பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் ஒத்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.


இந்த பதிவு பிராக்சனல் ரிசர்வ் பற்றியது. உலகில் பெரும்பாலான பணம் இந்த முறையில் தான் உற்பத்தியாகிறது. இதற்கான அடிப்படை ஆதாரமாக மாடர்ன் ம்ணி மெஷின் என்னும் பெடரல் வங்கியின் ஆவனத்தை அடிப்படையாக கொண்டு தான் எழுதி உள்ளேன். தேவையானால் அதற்கான ஆதாரங்களை தருகிறேன்

K.R.அதியமான் said...

சதுக்க பூதம்,

உங்க அவ்வப்போது படித்தாலும், பின்னூட்டம் இடாததற்க்கு காரணம், உங்கள நான் சீரியசா எடுத்தகறதில்ல.
அடிப்படை பொருளாதாரம் பற்றிய போதிய அறிவு உங்களுக்கு இல்லை என்பதே எம் அபி.

1991இல் இந்திய அன்னிய செலவாணி சிக்கலுக்கு காரணமாக இதை சொல்றீக :

//1991ல் இந்தியாவிற்கு வந்த பிரச்சனையின் காரணமே வேறு. சோவியத் காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான வெளிநாட்டு வர்த்தகம் நாடுகளுக்குள் பொருட்களை மாற்றி கொள்வதன் மூலம் நடந்ததால் தேவையற்ற பாரெக்ஸ் மற்றும் டாலர் வலையில் விழ தேவையின்றி நேர்மையான வர்த்தகம் இருந்தது. அமெரிக்க அரசு டாலருக்கு ஈடான தங்கத்தை தருவதாக கூறி மறைமுகமாக அதிக டாலரை வெளியிட்டு தங்கத்தை திருப்பி கொடுக்க முடியாத போது டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அரேபிய அமெரிக்க கூட்டு முயற்ச்சியால்(சதி) பெட்ரோலை டாலரில் மட்டும் விற்கவும் பெட்ரோலின் விலையை அதிக அளவு உயர்த்தி வளரும் நாடுகளின் வர்த்தகத்தை சீரழித்ததாலும் சோவியத் வீழ்ச்சியாலும் மொத்த வளரும் நாடுகளும் தங்கள் மக்களின் தேவையை கவனிக்காமல் வாளர்ந்த நாடுகளுக்கு சேவை செய்யும் கூலியாலாக மாற்ற பட்டனர். //

நமக்குள் ஏன் வீண் வாக்குவாதம். மேற்கொண்ட உங்க 'விளக்கத்தை' யாராவது ஒரு பொருளாதார‌
நிபுணர் அல்லது பேராசியரரிடம் காட்டி, அவரின் கருத்துக்களை அறிந்துகொள்ளுங்கள். பிறகு
தொடர்வோம்.

ராஜாஜி பற்றி உமது ஞானம் அவ்வளவுதான். குலக்கல்வி அல்ல அது. தொழிற் கல்வி. அதன்
காரணிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. லிங்க்குகள் பிறகு தருகிறேன். அவர் ஒரு
எலைட்டிஸ்ட் என்பது ஒரு இடதுசாரிகளின் சராசரி கோணம். ஆனால் அவரின் முழு வாழ்வையும்
ஆக்கங்களையும் அறிந்தவர்களுக்குத்தான் உண்மை புரியும்.

Pls try this fully first :

http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html

உலக வங்கியின் கடன்களில் சுமார் எத்தனை சதவீதம் ஊழல் காரணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது ?
90 % ? 60 % ? 15 % ? முதலில் இதற்க்கு சரியான பதிலை கண்டுபிடித்து சொல்லுங்கள். பிறகு
தொடரலாம் உலக வங்கியின் சதி பற்றி.

பண வீக்கம் பற்றி ஒரு மிக முக்கியமான நூல் இது. 20ஆம் நூற்றாண்டின் மிக மிக முக்கிய ஆய்வு நூல். யாரும் மறுக்க முடியவில்லை :

A Monetary History of the United States, 1867-1960
http://eh.net/bookreviews/library/rockoff

ஃப்ராக்ஸனல் பாங்கிங் பற்றிய உங்கள் கருத்துகள் சரிதான். ஆனால் அது மட்டும்தான் சிக்கலுக்கு காரணம்
என்பதை ஏற்க்க முடியாது.

டாலரின் ஆதிக்கம் மற்றும் பெட்ரோ டாலர், அமெரிக்க சதி பற்றி பல மாயைகளை மிக மிக தெளிவாக‌
விளக்கும் சுட்டி இது. முழுவதுமாக படிக்கவும் :

http://web.nps.navy.mil/~relooney/Rel_MEJ_S04.pdf

சதுக்க பூதம் said...

//உங்க அவ்வப்போது படித்தாலும், பின்னூட்டம் இடாததற்க்கு காரணம், உங்கள நான் சீரியசா எடுத்தகறதில்ல.
அடிப்படை பொருளாதாரம் பற்றிய போதிய அறிவு உங்களுக்கு இல்லை என்பதே எம் அபி.
//

நான் கூறிய பதிலுக்கும் அதில் கொடுத்த விளக்கத்திற்கு பதில் அளிக்காமல் நீங்கள் இவ்வாறு பதில் அளித்துள்ளதில் இருந்து உங்களுடைய சிறுபிள்ளைதனமும், பொருளாதாரம் பற்றிய உங்கள் "ஆழ்ந்த அறிவும் " நன்றாக தெரிகிறது.
பொதுவாக விவாதத்தில் பேச எதுவும் தெரியவில்லை என்றால் அது பற்றிய அறிவில்லாதவர்கள் எப்பொழுதும் கூறும் சொல்.
எனவே பொருளாதார அடிப்படை மற்றும் தற்போதைய நடப்பு பற்றி படித்தும் அப்படி படித்து புறியா விட்டால் எதாவது பொருளாதார ஆசிரியரிடம் பாடம் கற்று சிறிதாவது தெளிவடைந்த பின் வாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

ராஜாஜியின் அரசியல் மற்றும் பொருளாதார நூல்களை நன்றாகவே படித்துள்ளேன். காமராஜருடன் அவர் ஆடிய அரசியல் சதுரங்க ஆட்டமும் தெரியும். காந்தியும் அவரும் தமிழகத்தில் ஆடிய நாடகமும் தெரியும். அன்றைய முதலாலிகளின் லாபியாக சுதந்திரா கட்சி செயல் பட்ட விதமும் தெரியும்.

சதுக்க பூதம் said...

//நமக்குள் ஏன் வீண் வாக்குவாதம். மேற்கொண்ட உங்க 'விளக்கத்தை' யாராவது ஒரு பொருளாதார‌
நிபுணர் அல்லது பேராசியரரிடம் காட்டி, அவரின் கருத்துக்களை அறிந்துகொள்ளுங்கள். பிறகு
தொடர்வோம்.
//

நான் தெளிவாக தான் இருக்கிறேன்.தெளிவாக அறிந்த செய்தியை மட்டுமே எழுதுவது என் பழக்கம். உஙளுக்கு தெளிவில்லை என்றால் நீங்கள் தான் எதாவது பொருளாதார ஆசிரியரை அணுகி தெளிவு படுத்தி கொள்ளா வேண்டும்

K.R.அதியமான் said...

உங்க ஈகோ குறுக்க வரும் என்று ஏற்கனவே எமக்கு தெரியும். டாலர் பற்றியும், 1991 பற்றியும் உங்க தியரிகள் பற்றித்தான் அப்படி சொன்னேன்.

சிறுபிள்ளைதனம் உமக்குத்தான். நான் கேட்ட கேள்விகளுக்கும் உம்மால் விளக்கமுடியவில்லை.
டாலர் அரசியல் பற்றி மட்டும்தான் உம்மால் பேச முடியும். அது பற்றிய ஆழமான சுட்டியை முதலில்
படிக்க முயற்ச்சிக்கவும்.

Good Day. and good bye

K.R.அதியமான் said...

//நான் தெளிவாக தான் இருக்கிறேன்.தெளிவாக அறிந்த செய்தியை மட்டுமே எழுதுவது என் பழக்கம். உஙளுக்கு தெளிவில்லை என்றால் நீங்கள் தான் எதாவது பொருளாதார ஆசிரியரை அணுகி தெளிவு படுத்தி கொள்ளா வேண்டும்
///

this is tha mail from a very senoir and learned Economic Professior of MIDS :

.......So I only glanced through both your blogs.
>
> Even a cursory glance convinced me that you are doing an excellent job. You
> are speaking out your convictions unflinchingly. You are unmindful of
> possible reproach. You are expending your time and resources on causes dear
> to your convictions. My heartiest congratulations to you for a job well
> done.
>
> You have an innate capacity to defend market friendly, 'rightist' views. I
> am a 'slightly right of the middle' roader. So I am finding a large area in
> which my views coincide with that of yours. As I have shifted from
> 'slightly left of the middle' position which I held when I was young, my
> understanding of your position is even more apparent to me!
>
> I would commend two books by Nobel Laureate (late) Milton Friedman
> "Capitalism and Freedom", "Free to Choose" to you. The later book, intended
> for the general public, is co-authored by his wife Rose Friedman. You would
> find that most of the arguments there are congenial to your viewpoint.
>
> I suggested "Worldly Philosophers" by Robert L. Heilbroner for a general
> understanding of the economic thought of the great pioneers when you were
> here.

your arrogance and lack of manners shows in your silly retorts.

K.R.அதியமான் said...

//சிறுபிள்ளைதனமும், பொருளாதாரம் பற்றிய உங்கள் "ஆழ்ந்த அறிவும் " நன்றாக தெரிகிறது.///

இதற்க்கு நான் எழுத நினைத்த உண்மையான மறுமொழி :

'போடாங்கொய்யால..."

1991இல் நடந்தது பற்றி உமது 'விளக்கமும்' அதை பற்றிய எமது கருத்தையும் தர்க்க ரீதியாக சந்திக்க‌ துப்பில்லாமல், எழுதினால், நான் இப்படிதான் மறுமொழி செய்வேன்.

K.R.அதியமான் said...

இதற்க்கு நான் எழுத நினைத்த உண்மையான மறுமொழி :

'போடாங்கொய்யால..."

1991இல் நடந்தது பற்றி உமது 'விளக்கமும்' அதை பற்றிய எமது கருத்தையும் தர்க்க ரீதியாக சந்திக்க‌
துப்பில்லாமல், எழுதினால், நான் இப்படிதான் மறுமொழி செய்வேன்.

K.R.அதியமான் said...

இதற்க்கு நான் எழுத நினைத்த உண்மையான மறுமொழி :

'போடாங்கொய்யால..."

1991இல் நடந்தது பற்றி உமது 'விளக்கமும்' அதை பற்றிய எமது கருத்தையும் தர்க்க ரீதியாக சந்திக்க‌
துப்பில்லாமல், எழுதினால், நான் இப்படிதான் மறுமொழி செய்வேன்.

சதுக்க பூதம் said...

உஙளுடைய கேள்வி
//1991இல் இந்திய அன்னிய செலவாணி சிக்கலுக்கு காரணமாக இதை சொல்றீக :

//1991ல் இந்தியாவிற்கு வந்த பிரச்சனையின் காரணமே வேறு. சோவியத் காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான வெளிநாட்டு வர்த்தகம் நாடுகளுக்குள் பொருட்களை மாற்றி கொள்வதன் மூலம் நடந்ததால் தேவையற்ற பாரெக்ஸ் மற்றும் டாலர் வலையில் விழ தேவையின்றி நேர்மையான வர்த்தகம் இருந்தது. அமெரிக்க அரசு டாலருக்கு ஈடான தங்கத்தை தருவதாக கூறி மறைமுகமாக அதிக டாலரை வெளியிட்டு தங்கத்தை திருப்பி கொடுக்க முடியாத போது டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அரேபிய அமெரிக்க கூட்டு முயற்ச்சியால்(சதி) பெட்ரோலை டாலரில் மட்டும் விற்கவும் பெட்ரோலின் விலையை அதிக அளவு உயர்த்தி வளரும் நாடுகளின் வர்த்தகத்தை சீரழித்ததாலும் சோவியத் வீழ்ச்சியாலும் மொத்த வளரும் நாடுகளும் தங்கள் மக்களின் தேவையை கவனிக்காமல் வாளர்ந்த நாடுகளுக்கு சேவை செய்யும் கூலியாலாக மாற்ற பட்டனர். //

நமக்குள் ஏன் வீண் வாக்குவாதம். மேற்கொண்ட உங்க 'விளக்கத்தை' யாராவது ஒரு பொருளாதார‌
நிபுணர் அல்லது பேராசியரரிடம் காட்டி, அவரின் கருத்துக்களை அறிந்துகொள்ளுங்கள். பிறகு
தொடர்வோம்.
//
இதற்காக பல ஆதாரம் இருந்தாலும், அனைவராலும் பரவலாக படிக்க பட்டு ஏற்று கொள்ள பட்ட Web of debt(http://www.webofdebt.com/) என்ற புத்தகத்தில் உள்ள வரியையே உஙளுக்கு ஆதாரமாக தருகிறேன்.28 ம் அத்தியாயத்தில் இது உள்ளது.இணையத்தில் நாலு லின்க் படித்தால் மட்டும் போதாது. நீங்க நிறைய படிக்கோணும்!

The Web of Debt

The Shocking Truth about our monitery system and
How we can break free.

--Revised and Expanded with 2008 update
Ellen Hodgson Brown J.D

Third Millenium Press


Disillusionment with the promise of Indian independence set in,
however, as the private interests that had controlled colonial India
continued to pull the strings of the new Indian State. In 1973, the
country had a positive trade balance; but that was before OPEC entered
into an agreement to sell oil only in U.S. dollars. In 1974, the price of
oil suddenly quadrupled. India had total foreign exchange reserves of
only $629 million to pay an annual oil import bill of $1,241 million,
almost double its available reserves. It therefore had to get U.S. dollars,
and to do that it had to incur foreign debt and divert farming and
other industry to products that would sell on foreign markets. In 1977,
Indira Gandhi was forced into elections, in which key issues were the
IMF and the domestic “austerity” measures the IMF invariably imposed
in return for international loans. Indira was pushed out and was
replaced with a regime friendlier to the globalist agenda. Engdahl
writes, “the heavy hand of Henry Kissinger was present . . . in close
coordination with the British.”2

K.R.அதியமான் said...

//Disillusionment with the promise of Indian independence set in,
however, as the private interests that had controlled colonial India
continued to pull the strings of the new Indian State. In 1973, the
country had a positive trade balance; but that was before OPEC entered
into an agreement to sell oil only in U.S. dollars. In 1974, the price of
oil suddenly quadrupled. India had total foreign exchange reserves of
only $629 million to pay an annual oil import bill of $1,241 million,
almost double its available reserves. It therefore had to get U.S. dollars,
and to do that it had to incur foreign debt and divert farming and
other industry to products that would sell on foreign markets. In 1977,
Indira Gandhi was forced into elections, in which key issues were the
IMF and the domestic “austerity” measures the IMF invariably imposed
in return for international loans. Indira was pushed out and was
replaced with a regime friendlier to the globalist agenda. Engdahl
writes, “the heavy hand of Henry Kissinger was present . . . in close
coordination with the British.”2 ///

is that all ? how come now in 2009 after following IMF and WB prescription and US polices, we are rid of IMF for good. India has stopped borrowing from IMF long years ago by simply following IMF prescriptions.

Now we have parked some of our USD with IMF SDRs. ok.

try to answer my points in my post about 1991 instead generalised cliches of leftist camp..

சதுக்க பூதம் said...

//'போடாங்கொய்யால..."//
விவாதிக்க விஷயம் இல்லாமல் இது போல் நாகரீகம் இல்லாமல் பின்னூட்டம் இடுவது வருந்த தக்கது. இனி அது போல் தொடர்ந்தால் நாகரீகமற்ற மறுமொழிகள் மட்டுருத்த படும். விவாதிக்க தெரியாமல் XXX பிரொபொசரை துனைக்கு அழைப்பது நகைப்புக்குள்ளாக்குகிறது.

K.R.அதியமான் said...

you answer my post about 1991 and IMF clearly first. then you may or may not publish my comments.

you are the guye who always start this kind of attacks. i vividly remember our 'debates' in older issues.

by the the Professor name is
Thiru.S.Neelakanttan and if you want i can give you his phone no and id. i pasted his mail as a reply to your advice to me about showing my posts a a professor.
ok. so there.

சதுக்க பூதம் said...

//try to answer my points in my post about 1991 //

அதற்கு தானே நான் தெளிவாக பதில் அளித்துள்ளேன். பதிலை முதலில் முழுவதுமாக படிக்க கற்று கொள்ளுங்கள்

சதுக்க பூதம் said...

//Thiru.S.Neelakanttan and if you want i can give you his phone no and id.//

உஙளுக்கு தெரிந்தது அவ்வளவு தான் .அதற்கு மேல் தெரியாததால் அவரிடம் பேச சொல்கிறீர்கள். இதற்கும் அவருக்கு கேள்வி கேட்டு உஙள் அறிவை தெளிவு படுத்தி கொள்ளுங்கள் . கடைசியில் உங்கள் ஞானம் அவ்வளவு தான் என்று தெளிவு படுத்தி விட்டீர்கள்.

வருகைக்கு நன்றி

சதுக்க பூதம் said...

//your arrogance and lack of manners shows in your silly retorts.
//

யாருக்கு arrogance? யாருக்கு lack of manners?

பின்னூட்டங்களை படிப்பவர்களுக்கு தெரியும்

கீழ்கண்டவற்றை கூறியது யார்?
//உங்க அவ்வப்போது படித்தாலும், பின்னூட்டம் இடாததற்க்கு காரணம், உங்கள நான் சீரியசா எடுத்தகறதில்ல.
அடிப்படை பொருளாதாரம் பற்றிய போதிய அறிவு உங்களுக்கு இல்லை என்பதே எம் அபி.
//
//'போடாங்கொய்யால..."//

Anonymous said...

மிக அற்புதமான பதிவு நண்பரே. அதிக அளவு நேரம் எடுத்து எளிமையான எழுத்துகளுடன் தெளிவாக புரியும்படி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இதுபோல் இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

சதுக்க பூதம் said...

//மிக அற்புதமான பதிவு நண்பரே. அதிக அளவு நேரம் எடுத்து எளிமையான எழுத்துகளுடன் தெளிவாக புரியும்படி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இதுபோல் இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

//

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாசிலா. பொருளாதார ஜார்கன் இல்லாமல் தெளிவாக மற்ரும் எளிமையாக எழுதவும், கருத்து பிழை இல்லாமல் உறுதி செய்ய ஒன்றிற்கு இரண்டாக பல source களை refer செய்து எழுத வேண்டியுள்ளதால் நிறைய நேரமும் உழைப்பும் தேவை படுகிறது. நிச்சயம் இது போன்ற (மக்களுக்கு அடிபடையில் தெரிய வேண்டிய ஆனால் மறைக்க பட்ட செய்திகளை உள்ளடக்கிய) பதிவுகளை இனியும் வெளிவிடுகிறேன்

K.R.அதியமான் said...

Who murdered the financial system?

by Swaminathan S. Anklesaria Aiyar

http://www.swaminomics.org/articles/20081022.htm

Dated: October 22, 2008

Leftists claim that the global financial crisis was caused by reckless deregulation and greed. Rightists blame half-baked financial regulations and perverse incentives. Actually, the financial sector is deeply regulated, with major roles for both the state and markets. It
was not one or the other that failed but the combination.

The best metaphor for the mess comes from Jack and Suzy Welch, who
recall Agatha Christie's "Murder on the Orient Express." In this
novel, 12 people are suspects in a murder. And 12 turn out to be
guilty. What starts as a whodunit concludes as an everybody-dun-it.

In the same spirit, allow me to present the 12 murderers of the US
financial system.

1. The Federal Reserve Board. Alan Greenspan, Fed Governor in
1987-2006, was once hailed as a genius for keeping the US booming, but is now called a serial bubble-maker. He presided over bubbles in
housing, credit, and stock markets. He said it was difficult to identify asset bubbles in advance, so anti-bubble policies might be anti-growth. It was better to let bubbles build, and sweep up after they burst. Bernanke, like Greenspan, ignored the US housing bubble till it burst.

2.US politicians. Envisioning a home for every American, regardless of income, they provided excess implicit and explicit housing subsidies. One law forced banks to lend to sub-prime poor borrowers. Legislators
created Fannie Mae and Freddie Mac, government-sponsored entities that bought or underwrote 80% of all US mortgages, and enjoyed exemption from normal regulations. Politicians ignored Greenspan's warning that such a dominant role for two under-regulated giants posed a huge financial risk.

3.Fannie Mae and Freddie Mac. They resisted regulation, and spent over
$ 2 million lobbying legislators against any tightening of rules. As
mortgagers of last resort they should have been especially prudent. But they bought stacks of toxic mortgage paper collateralized debt obligations (CDOs)—seeking short-term profits that ultimately led to bankruptcy.

4.Financial innovators. Their ideas provided cheap, easy credit, and helped stoke the global economic boom of 2003-08. Securitisation of mortgages provided an avalanche of capital for banks and mortgage companies to lend afresh. Unfortunately the new instruments were so complex that not even bankers realized their full risks. CDOs smuggled
BBB mortgages into AAA securities, leaving investors with huge
quantities of down-rated paper when the housing bubble burst.
Financial innovators created Credit Default Swaps (CDSs), which
insured bonds against default. CDS issues swelled to a mind-boggling $
60 trillion. When markets fell and defaults widened, those holding
CDSs faced disaster.

5.Regulators. All major countries had regulators for banking,
insurance and financial/ stock markets. These were asleep at the
wheel. No insurance regulator sought to check the runaway growth of the CDS market, or impose normal regulatory checks like capital adequacy. No financial regulator saw or checked the inherent risks in complex derivatives. Leftists today demand more regulations, but these will not thwart the next crisis if regulators stay asleep.

6.Banks and mortgage lenders. Instead of keeping mortgages on their own books, lenders packaged these into securities and sold them. So, they no longer had incentives to thoroughly check the creditworthiness of borrowers. Lending norms were constantly eased. Ultimately, banks
were giving loans to people with no verification of income, jobs or
assets. Some banks offered teaser loans—low starting interest rates,
which reset at much higher levels in later years—to lure unsuspecting
borrowers.

7.Investment banks. Once, these institutions provided financial
services such as underwriting, wealth management, and assistance with IPOs and mergers and acquisition. But more recently they began using borrowed money—with leverage of up to 30 times—to trade on their own account. Deservedly, all five top investment banks have disappeared.
Lehman Brothers is bust, Bear Stearns and Merrill Lynch have acquired by banks, and Morgan Stanley and Goldman Sachs have been converted into regular banks.

8.Rating agencies. Moody's and Standard and Poor's were not tough or alert enough to spot the rise in risk as leverage skyrocketed. They allowed BBB mortgages to be laundered into AAA mortgages through CDOs.

9.The Basle rules for banks. These international negotiated norms
provided harmonized regulatory checks on financial excesses across
countries. The first set of norms, Basle-I, was widely criticized as
too rigid and blunt. So countries agreed on Basle-II, which allowed
banks to use credit ratings and models based on historical record to lower the risk-ratings of many securities. This dilution of norms led to excesses everywhere. Iceland's banks went bust holding
loans/securities totaling 10 times its GDP. The dilution of
risk-rating in Basle-II helped inflate the financial bubble.

10.US consumers. Their savings used to be 6% of disposable income some time ago, but more recently has been zero or even negative. They have gone on a huge borrowing spree to spend far more than they earn. This excess is reflected in huge, unsustainable US trade deficits.

11.Asian and OPEC countries. They undervalued their currencies to
stimulate exports and create large trade surpluses with the US. They
accumulated trillions in forex reserves, and put these mostly into
dollar securities. This depressed US interest rates, and further
fuelled borrowing there.

12.Everybody. Consumers, corporations, banks, politicians, the media--indeed everybody-- was happy when housing prices boomed, stock markets boomed, and credit became cheap and easily available. Bubbles in all these areas grew in full public view. They were highlighted by analysts, but nobody wanted to stop the lovely party. Everybody liked easy money and rising asset prices. This trumped prudence across countries.

So, forget the left-versus-right or regulations-versus-markets debate on the financial crisis. States, institutions, markets and everybody else was guilty. These actors will for some years don sackcloth and ashes, adopt stiffer regulations, and listen to lectures on the virtues of prudence and restraint. But after seven to ten years of the next business upswing, I predict that we will once again have a new
generation of bubbles, evading whatever new checks have been put in place. When everybody loves bubbles, they are both irresistible and inevitable.

http://www.swaminomics.org/

K.R.அதியமான் said...

உமக்கு பொருதார அறிவு பத்தாது என்று சொல்வது தனிமனித தாக்குதல் அல்ல. ஆனால் சிறுபிள்ளைத்தனம் என்று மறுமொழி செய்வது தனிமனித தாக்குதல்தான். அதன் எதிர்வினை தான் எம்மிடம் அப்படி எழுந்தது.

'கற்றது கைமண் அளவு' என்பது நம் அனைவருக்கும் பொருந்தும். 1991இன் சிக்கல் பற்றிய உமது விளக்கம்
மிக மிக தவறானது மற்றும் மேலோட்டமானது என்பது எம் வாதம். அதை ஒரு நிபுணரிடன் கேட்டு
உறுதி சொய்து கொள்ளாலாம் என்று சொன்னேன். அதை பொறுக்க உம் ஈகோ இடம் கொடுக்க வில்லை.
எம் கருத்து தவறானது என்று நிருபனமானால், நான் தயங்காமல் ஏற்றுக்கொள்வேன். ஆனால்...

கரண்ஸியின் மதீப்பீடு, டாலர் ஏன் இன்றும் ரிஸர்வ் கரண்ஸியாக உள்ளது, பெட்ரோ டாலர்கள் பற்றிய உமது கருத்துக்கள் மேலோட்டமான் இடதுசாரி வாதங்கள் தாம் .அவை பற்றிய துல்லியமான கருத்துகள் பற்றிய ஒரு மிக மிக முக்கிய சுட்டியை அளித்திருந்தேன். படித்துவிட்டு மறுக்க முயலவும். அதை தமிழில் மொழிபெயர்க்கும் அளவிற்க்கு எமக்கு நேரமும், திறமையும் இல்லைதான் :

http://web.nps.navy.mil/~relooney/Rel_MEJ_S04.pdf

K.R.அதியமான் said...

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் நான் எழுதிய மின்மடல் :

அன்புள்ள் ஜெ,

தனியார்மயம் மற்றும் பெருளாதாரம் : இவை மிக சிக்கலான, ஆழமான விசியங்கள்.
இவை பற்றி பல ஆய்வுகள் மற்றும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பேப்பர்கள் உள்ளன.

இந்திய‌ பொதுத்துறை ப‌ற்றி நான் சில‌ கால‌ம் முன் எழுதிய‌ ப‌திவு இது :
http://nellikkani.blogspot.com/2008/07/blog-post.html

ஊழ‌லின் ஊற்றுக‌ண் ம‌ற்றும் அர‌சின் ப‌ற்றாகுறை ப‌ட்ஜெட்டுக‌ளுக்கான‌ மூலம் நமது பொதுத்துறைதான்.

ச‌ரியான‌ ச‌ந்தை பொருளாதார‌ கொள்கைக‌ள் எங்கும் அம‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட‌வே இல்லை. அர‌சின் த‌லையீடுக‌ள் ம‌ற்றும் க‌ட்டுப்பாடுக‌ள் ப‌ல‌ ப‌ல distortionsக‌ளை உல‌கெங்கும் உருவாக்கி உள்ள‌ன. இவற்றின் cumulative effectsதான் இன்று இப்படி. மிக சிக்காலான subject இது. புரிந்து கொள்ள அதிக வாசிப்பனுபவம் தேவை.

த‌ற்போதைய‌ பொருளாதார‌ ச‌ரிவு ப‌ற்றி திரு.சாமினாதன் அங்கேஸ்வர் (மணி சங்கர அய்யரின் சகோதரர்) மிக‌ அருமையாக‌ எழுதுகிறார். நான் அவ‌ரின் தீவிர‌ வாச‌க‌ன். பார்க்க : அவ‌ரின் ப‌திவுக‌ள் :

Who murdered the financial system?
http://swaminomics.org/articles/20081022.htm

Beware: Recession May Be Hayekian
http://swaminomics.org/articles/20090128.htm

Obama Plan: recreating a rotten system
http://swaminomics.org/articles/20090225.htm

அன்புட‌ன்
க‌.ர‌.அதிய‌மான்
சென்னை ‍ 96

K.R.அதியமான் said...

What Caused the 1991 Currency Crisis in India?

http://www.imf.org/External/Pubs/FT/staffp/2002/03/pdf/cerra.pdf

சதுக்க பூதம் said...

//Who murdered the financial system?

by Swaminathan S. Anklesaria Aiyar//
அய்யருடைய இந்த கட்டுரை இந்த பதிவிற்கும், நாம் செய்த விவாதத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் முதலாலித்துவத்தின் இன்றைய வீழ்ச்சியை மறுக்க முதலாலித்துவவாதிகள் கூறும் கருத்தின் தொடுப்பாக இருப்பதால் வாசகர்களுக்கு முதலாலித்துவவாதிகளின் பார்வையும் போய் சேரும் என்பதால் இதை பதிவிடுகிறேன்(இன்றைய பொருளாதார நெருக்கடி பற்றி - நிதி நெருக்கடி சில பாடங்கள் என்ற பெயரில் தொடராக எழுதி வருகிறேன். அதில் தர நிர்ணய அமைப்பு, நிர்வகத்தை கட்டுபடுத்தும் அமைப்பினர் செய்த தவறுகள் குறித்து இந்த லின்க்கில் உள்ளதை விட தெளிவாக எழுதி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது மற்ற காரணிகளையும் விவரித்து எழுதுவேன்.

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 2-கடன் தர சான்றிதழ்(Rating Agency) கொடுக்கும் அமைப்புகளின் செயல்பாடு

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின் கட்டுப்பாடு

சதுக்க பூதம் said...

//உமக்கு பொருதார அறிவு பத்தாது என்று சொல்வது தனிமனித தாக்குதல் அல்ல. //


பேசி கொண்டிருக்கும் விவாதத்தில் பதிலலிக்க தெரியாமல், அதற்கான மாற்று கருத்து இல்லாமல் இது போல் வெறி கொண்டு பேசுவது தனி மனித தாக்குதல் தான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு பிரிவு மாணவர்களை NPK என்று அழைப்போம். அதற்கு பொருள் நினைப்பு தான் பொழப்பை கெடுக்குது. தனக்கு தான் உலகில் எல்லாம் தெரியும். மற்றவர்கள் எல்லாம் ஞான சூன்யம் என்று நினைப்பது தவறு.
//கற்றது கை மண் அளவு//

அதை நீங்கள் புரிந்து கொண்டால் சரிதான்.

என் பதிவில் நாகரீகமான விவதத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன். நீங்கள் செய்வது அநாகரீகமாக பின்னூட்டம் இட விரும்பினால், அதை என்பதிவில் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

//ஏற்றுக்கொள்வேன். ஆனால்...

கரண்ஸியின் மதீப்பீடு, டாலர் ஏன் இன்றும் ரிஸர்வ் கரண்ஸியாக உள்ளது, பெட்ரோ டாலர்கள் பற்றிய உமது கருத்துக்கள் மேலோட்டமான் இடதுசாரி வாதங்கள் தாம் //


வலது சாரி, இடது சாரி என்று தேவையற்ற அரசியலில் ஈடு படாதீர்கள். நீங்கள் எதன் அடிப்படையில் மேலோட்டம் என்று கூறுகிறீர்கள் என்று தெரிய வில்லை. நான் தெளிவாக அதாரத்தோடு நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளேன். என் பதிலில் உள்ள தகவல் பற்றி விவாதிக்க பொருள் இல்லாமல் இது போல் தனி மனித தாக்குதல் செய்வதும், வெறுமனே மேலோட்டமானது என்று எழுதுவதும் ஏற்று கொள்ள முடியாது.
இது போல் ஜெய மோகனுக்கு (அவர் என்ன கொம்பு முளைத்தவரா என்ன?) எழுதிய கடிதம் என பின்னூட்டம் இடுவது உண்மையிலேயே நகைச்சுவையாக உள்ளது.

இது வரை நான் கூறிய கருத்துக்களுக்கு நீங்கள் பதிலே அளிக்க வில்லை.

// 1991இன் சிக்கல் பற்றிய உமது விளக்கம்
மிக மிக தவறானது மற்றும் மேலோட்டமானது என்பது எம் வாதம்//

இதில் என்ன தவறு என்று கூறவில்லை
நான் எழுதும் கருத்துக்கள் ஒரு சாராரின் பதிவுகளை மட்டும் படித்து எழுத பட்டதல்ல. இரு பிரிவினரின் கருத்துக்களையும் அறித்து, பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடுகளை படித்து, பல புத்தகங்களை படித்தும் எழுதியது.

என் விவாதத்திற்கு பதில் அளிக்காமல் வேறு ஒரு பொருளாதார நிபுணரை பார்த்து கேட்டு கொள்ளுங்கள் என்று கூறுவதாலும், தனி மனித தாக்குதலிலேயே குறியாக இருப்பதாலும், விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாத செய்திகளை பின்னுட்டமிட்டு விவதத்தை திசை திருப்பி கொண்டு இருப்பதால் இந்த பதிவில் உஙகள் பின்னூட்டத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

குறிப்பு:- இது வரை உங்கள் பின்னூட்ட கருத்து அனைத்தையும் மட்டுறுத்தாமல் வெளியிட்டுள்ளேன். இந்த பின்னூடங்களை படிப்பவர்களுக்கு உங்கள் கேள்விக்கான என் பதில் மேலோட்டமானதா? அல்லது விளக்ககூடியதா என்பது தெரியும்.

யார் செயல் நாகரீகமற்றது என்பதும் தெரியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

K.R.அதியமான் said...

//இவ்வாறு வங்கிகள் பெருமளவு கடனாக கொடுப்பதினால், முக்கியமாக நாட்டின் உற்பத்தி திறனை விட மிக அதிகமாக பணபுழக்கத்தை ஏற்படுத்துவதால் மற்றொறு பிரச்சனையும் ஏற்படுகிறது. கடனின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வட்டியின் அளவும் அதிகரிக்கும்.///

vwery very untrue. first of all
veleocity of moeny is good sign but increase in NET money stock disproportionate to real growth in output (due to govt deficts, etc) is bad. Banks cannot CREATE money on their own. this cycle is underwritten by trust and a repayment cycle. Increase in money supply is always the action of Central Banks of govts. ok.

and most importantantly interset rates are not determined by this phenemonen and Banks and other private institutions are totally powerless in determining the rate of interest. Interest rates are always a function of the current and perceived INFLATION rate and value of currency. and also dependent on the Central Banks lending / repo rates.

Can you show any proofs or links for your 'theroy' ? or did you invent the above yourself ?

and hopw come the grwoth and prosperity of WEstern Europe and N.America all these decades worked due to this increase in veleoctiy and no one complained about this subject ?

You ar not a communist nor a socialist ? then what alternative do you propose to the existing set up ? can you explain ?

K.R.அதியமான் said...

//// 1991இன் சிக்கல் பற்றிய உமது விளக்கம்
மிக மிக தவறானது மற்றும் மேலோட்டமானது என்பது எம் வாதம்//

இதில் என்ன தவறு என்று கூறவில்லை
நான் எழுதும் கருத்துக்கள் ஒரு சாராரின் பதிவுகளை மட்டும் படித்து எழுத பட்டதல்ல. இரு பிரிவினரின் கருத்துக்களையும் அறித்து, பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடுகளை படித்து, பல புத்தகங்களை படித்தும் எழுதியது.
/////

பதிவிற்க்கு நேரடி சம்பந்தமில்லைதான். ஆனால் உங்கள் பின்னூட்டங்களுக்கு எதிர்வினைதான் இவை.
முக்கியமாக 1991 சிக்கல் பற்றி உங்கள் 'கருத்துகளுக்கு' எதிர்வினை.

1991 சிக்கல் பற்றி நம் இருவரின் மாறுபட்ட கருத்துக்களை வேறு ஒரு நடுவர் (பொருளாதார பேராசியர் அல்லது நிபுணர்) யாரிடமாவது கேட்டு முடிவு செய்துகொள்ளாமே ? அய்.எம்ஃப் வலைமனையில் இருந்து
ஒரு மிக ஆழமான ஆய்வின் லிங்க்கை அளித்திருந்தேனே ? அதை பற்றிய உமது மேலான கருத்து என்னவோ ?

and i welcome and thank you for publishing ALL my comments so far.
I want everyone on Thamizmanam to read all of this. :))

K.R.அதியமான் said...

என்ன சத்தத்தையே காணாம். நான் அனுப்பிய 'பதிவிற்க்கு நேரடி தொடர்புடைய' மறுமொழிகளை காணாம். வட்டி விகுதம் மற்றும் பண வீக்கம் பற்றிய அடிப்படை உண்மைகள் தாமே எழுதியிருந்தேன்.

உம் அகராதியில் அதுவும் 'தனி மனித தாக்குதல்' தானோ ? :))

சதுக்க பூதம் said...

// //இவ்வாறு வங்கிகள் பெருமளவு கடனாக கொடுப்பதினால், முக்கியமாக நாட்டின் உற்பத்தி திறனை விட மிக அதிகமாக பணபுழக்கத்தை ஏற்படுத்துவதால் மற்றொறு பிரச்சனையும் ஏற்படுகிறது. கடனின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வட்டியின் அளவும் அதிகரிக்கும்.///
//
//Can you show any proofs or links for your 'theroy' //

இதற்கு கூட உங்களுக்கு ஆதாரம் வெண்டுமா? தருகிறேன்.
நீங்கள் 100 ரூபாய் 10% வட்டிக்கு கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.
நீங்கள் வட்டியாக கொடுக்க வேண்டிய பணம் 10/100*100=10 ரூபாய்.
அதுவே நீங்கள் அதிக அளவு பணம், உதாரணமாக 1000ரூபய் கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் கட்ட வேண்டிய வட்டியின் அளவு 10/100*1000=100 ரூபாய்.

அதாவது நீங்கள் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் கட்ட வேண்டிய வட்டியின் அளவும் அதிகரிக்கும்.

இதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் கீழ் கண்ட லின்க் சென்று பார்க்கவும்


http://www.webmath.com/simpinterest.html

முதலில் இருக்கும் பாக்ஸ் நீங்கள் வாங்கும் கடன் தொகையை குறிக்கும். அதில் சிறிது சிறிதாக தொகையை அதிகரித்து நீங்கள் கட்ட வேண்டிய தொகையை பாருங்கள். அது அதிகரித்து கொண்டே செல்லும்

//? or did you invent the above yourself ?//

கோட்பாடுகளை கண்டுபிடிக்கும் அளவு பெரிய ஆள் இல்லை நான். இது என் பள்ளி படிப்பின் போது கணித பாடத்தில் படித்தது.
இதை நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் பாணியில் ஜெய மோகன் அல்லது அய்யர் போன்ற பொருளாதார நிபுணர்களுடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

//veleocity of moeny is good sign but increase in NET money stock disproportionate to real growth in output (due to govt deficts, etc) is bad. Banks cannot CREATE money on their own. this cycle is underwritten by trust and a repayment cycle. Increase in money supply is always the action of Central Banks of govts. ok.//

சிறிய அளவு பணத்தை எவ்வாறு வங்கிகள் அதிகமாக பெருக்குகின்றன என்பது தான் இந்த பதிவு. நீங்கள் தலைப்பை மட்டும் படித்து விட்டு பதிவை படிக்காமல் வாதிடுகிறீகள் என்பது இதிலிருந்து தெரிகிறது. பணத்தின் திசைவேகம் அதிகமானால் வங்கிகளும் அதிக அளவு பணத்தை உடனடியாக பெருக்க முடியும் என்று இந்த பதிவில் அழகாக விளக்கி உள்ளேன்.

இதற்கும்

// sign but increase in NET money stock disproportionate to real growth in output (due to govt deficts, etc) is bad//

இதற்கும்

// முக்கியமாக நாட்டின் உற்பத்தி திறனை விட மிக அதிகமாக பணபுழக்கத்தை ஏற்படுத்துவதால்//

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.( அது என்ன etc என்று விட்டு விட்டீர்கள்?) பெடரல் ரிசர்வின் மாடர்ன் மணி மெசின் என்னும் ஆவனத்தின் படி பிராக்சனல் ரிசர்வ் மூலம் பெருக்க படும் பணத்தின் அளவு தான் அரசு வெளியிடும் பணத்தை விட அதிகம். இந்த ஆவனங்களை பற்றி ஜெய மோகன் போன்ற பொருளாதார மேதைகளுக்கு தெரிய வாய்ப்பு குறைவு. அய்யருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவருக்கு மின் அஞ்சல் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்.

// and most importantantly interset rates are not determined by this phenemonen and Banks and other private institutions are totally powerless in determining the rate of interest. Interest rates are always a function of the current and perceived INFLATION rate and value of currency. and also dependent on the Central Banks lending / repo rates Increase in money supply is always the action of Central Banks of govts. ok.//

இன்னொரு செய்தி. டாலரின் மதிப்பையும் ,வெளியீட்டையும் கட்டு படுத்தி அதன் மூலம் மறைமுகமாக உலகில் உள்ள அனைத்து கரன்சி மதிப்பையும் கட்டு படுத்தும் பெடரல் வங்கி என்பது அமெரிக்க அரசின் வங்கி அல்ல. அது ஒரு தனியார் வங்கிகளின் கூட்டமைப்பு தான்

Federal bank is a private Institution.

//. Interest rates are always a function of the current and perceived INFLATION rate//


என்னுடைய டாலர் அரசியல் என்ற பதிவில் நான் முக்கியமாக கூறியிருக்கும் செய்தி இதுதான்.

வளரும் நாடுகளை கடன் வலையில் விழ வைத்து(OPEC- அமெரிக்கா கூட்டு சதி மூலம்) அவர்களின் உழைப்பையும்,மூல பொருட்களின் மதிப்பையும் மலிவாக்கி அவர்கள் டாலர் தேவையை அதிகமாக்கி அமெரிக்காவுக்கு தேவையான் பொருட்களை மலிவாக உற்பத்தி செய்ய வைக்கின்றனர். அதே நேரத்தில் அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாக டாலரை உற்பத்தி செய்கின்றனர். அவ்வாறு பண புழக்கத்தை அதிகரிப்பதால் பொருட்களின் விலை அதிகமாகும் .ஆனால் ஏழை நாடுகளில்ருந்து பொருளை மலிவாக இறக்கு மதி செய்வதன் மூலம் அமெரிக்காவில் விலை ஏற்றத்தை தடுத்து விட்டனர், இதை அமெரிக்காவின் பண உற்பத்தி, பொருள் உற்பத்தி, அதே சமயம் தொழிலாளர்களின் குறைவான ஊதிய உயர்வுலிருந்து அறியலாம்.ஏற்கனவே வளரும் நாடுகளின் நாணய மதிப்பு குறைக்க பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகம் அடிக்க பட்ட பணம் வங்கிகள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள் கையில் சென்று அதை வைத்து கொண்டுவளரும் நாடுகளில் உள்ள அனைத்து கம்பெனிகளிலும் பங்கு வாங்குதல் மற்றும் கனிம வளத்தை வாங்குதல் ஆகியவற்றில் செலவிடுகின்றனர்.மேலும் பங்கு சந்தையில் செயற்கையான வீக்கம் மற்றும் வடிதலை(boom and bust) ஏற்படுத்துகின்றனர்.உலக சொத்து அனைத்தும் சிலரின் கைக்கு செல்கிறது.

இதற்கு உதாரணம் சமீபத்திய உலக நடப்புகளே

//1991 சிக்கல் பற்றி நம் இருவரின் மாறுபட்ட கருத்துக்களை வேறு ஒரு நடுவர் (பொருளாதார பேராசியர் அல்லது நிபுணர்) யாரிடமாவது கேட்டு முடிவு செய்துகொள்ளாமே ? அய்.எம்ஃப் வலைமனையில் இருந்து
ஒரு மிக ஆழமான ஆய்வின் லிங்க்கை அளித்திருந்தேனே ? அதை பற்றிய உமது மேலான கருத்து என்னவோ ?//

என் கருத்து பற்றி என்க்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் அதற்கு நீங்கள் கேட்ட கேள்விக்கும் தெளிவாக பதிலளித்துள்ளேன். அதற்கு நீங்கல் எதுவும் பதிலளிக்காமல் வெறுமனே மேலோட்டம் என்றும் மூன்றாம் நபரை பார்க்கவும் கூறுகிறீர்கள்.
பொருளாதார நிபுனர்களில் இரு பிரிவினர் உள்ளனர். முதலாளித்துவ பொருளாதார நிபுனர்கள், எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என நினைக்கும் டெவலப்மன்டல் பொருளாதார நிபுனர்கள். நான் அனைத்து கருத்தையும் படித்து பின் தான் எழுதுகிறேன். என்னாலும் கூகிலில் தேடி (அல்லது என்னிடம் இருக்கும் லிங்கிலிருந்து எடுத்து) நூற்று கணக்காக லிங்க் கொடுத்து விவாதத்தை திசை திருப்ப முடியும். அதை விரும்பாததால் தான் மிகவும் தேவையான வற்றை மட்டும் கொடுத்துள்ளேன்.

//and hopw come the grwoth and prosperity of WEstern Europe and N.America all these decades worked due to this increase in veleoctiy and no one complained about this subject ?//

மேலை நாடுகளின் சொத்திற்கு பல காரணம் உள்ளது. அங்கு எப்போது தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதன் பரப்பளவு, மக்கள் தொகை, மக்கள் தொகை பெருக்க விகிதம், அவர்களின் பண மதிப்பு எவ்வாறு செயற்கையாக மற்றும் பலத்தின் மூலம் உயர்த்தி வைக்க பட்டுள்ளது மற்றும் பல காரணி உள்ளது. சில விஷயத்தை பற்றி பின்னூட்டத்தில் விளக்கி உள்ளேன். சிலவற்றை டாலர் அரசியலிலும் மற்றும் பிற பதிவிலும் விளக்கி உள்ளேன். இனி வரும் பதிவுகளிலும் எழுதுகிறேன் .
Velocity of money is not matter. Artificial demand of dollar that was created, degradation of third world economy , opening of third world economy for foreign investment which altogether leads to artificial boosting of value of real estate and others in developed economy matters.

//You ar not a communist nor a socialist ? then what alternative do you propose to the existing set up ? can you explain ?//

அனைத்து சிஸ்டத்திலும் குறை உள்ளது. ஆனால் ஏழை மக்கள் அதிகம் உள்ள , பரப்பளவு அதிகம் உள்ள நாடுகளுக்கு மக்களின் அடிப்படை தேவை, கல்வி,சுகாதாரம், வங்கி மற்றும் மற்ற முக்கிய துறைகளில் ஒரு பகுதி போன்றவற்றை அரசும் , மற்ற துறைகளில் தனியார் துறையும்(சில துறைகளில் அரசு மற்றும் தனியார் துறையும்) நிர்வகிக்கும் அமைப்பே ஒரளவு நன்மை தரும்.


//and i welcome and thank you for publishing ALL my comments so far.
I want everyone on Thamizmanam to read all of this. :))//

நன்றி. முன் பதிவோடு பின்னுட்டத்தை நிறுத்துவதாக கூறியிருந்தேன். நீங்கள் அனுப்பியதால் அதை வெளியிட்டுள்ளேன். முன் சொன்ன காரணாத்திற்காக இத்துடன் உங்களின் பின்னூட்டத்தை இப்பதிவில் நிறுத்தி கொள்கிறேன்.

//என்ன சத்தத்தையே காணாம். நான் அனுப்பிய 'பதிவிற்க்கு நேரடி தொடர்புடைய' மறுமொழிகளை காணாம். வட்டி விகுதம் மற்றும் பண வீக்கம் பற்றிய அடிப்படை உண்மைகள் தாமே எழுதியிருந்தேன்//

என் கடுமையான வேலை பளுவுக்கு இடையே இந்த பதிவை இடுகிறேன். உங்கள் கேள்விக்கு விடையை அளிக்க தான் இத்தனை நேரமாயிற்று.
அனைவருக்கும் இன்றைய பொருளாதாரத்தின் உண்மை தெரியதான் இப்பதிவை பெரும் சிரமத்திற்கும் இடையில் எழுதுகிறேன்

அனைத்தும் தெளிவாக விளக்க பட்டுள்ளதால், இத்துடன் விவாதத்தை முடித்து கொள்கிறேன். இந்து போன்ற தலைப்பில் இனி வரும் காலங்களில் பதிவிடுவேன்.அதில் எதுவும் மாற்று கருத்து இருந்தால், விருப்பபட்டால், நாகரீகமான விவாதத்தை தொடரும் ஆட்டிடியூட் இருந்தால் அதில் பின்னாட்டமிடவும்.
இதற்கு மேல் பின்னூட்டமிட்டாலும் நான் அதை பிரசூரிக்க போவதில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.இது போல் மூன்றாவது நபரிடம் கேட்டு கொள்ளுங்கள், மேலோட்டமானது ஆகிய இரண்டு கருத்து தவிர அனைத்தையும் தெளிவாக விளக்கி விட்டேன். இதற்கு மேல் விவாதம் நடப்பதால் ஒன்றும் பயன் இருக்க போவதில்லை.
நன்றி