Friday, January 23, 2009

புஷ்ஷை (அமெரிக்க)வரலாறு விடுதலை செய்யுமா?

புஷ்ஷின் பதவிகாலம் முடிவை நோக்கி நெருங்க தொடங்கிவிட்டது. அமெரிக்க வரலாற்றில் தோல்வி அடைந்த ஜனாதிபதிகளில் ஒருவராக புஷ் கருதபடுகின்றார். தற்போது ஒட்டு மொத்த அமெரிக்க மக்களின் அதிருப்தியையும் அவர் பெற்றுள்ளார். அவரது தோல்விகளை பட்டியலிட்டால் ஒரு பதிவு போதாது. அவரது தோல்விகளில் முக்கியமானதாக கருதபடுவது
1.தேவையற்ற ஈராக் போர்
2.உலகெங்கிலும் தீவிரவாதத்தின் வளர்ச்சி
3.நிதி நெருக்கடி
4.காத்ரீனா சூறாவளி நிவரணத்தில் திறமையின்மை


புஷ்ஷின் தோல்விகளை விளாவாரியாக விவரித்து பதிவுகள் இணையமெங்கும் வந்து விட்டது. அது பற்றி கைக்குழந்தைக்கு கூட விஷயம் தெரிந்து விட்டது. ஆனால் அவருக்கு ஆதரவான கருத்துக்களை அறிவது மிகவும் கடினமாகவே உள்ளது. தனிபட்ட முறையில் புஷ்ஷின் ஆட்சியில் எனக்கு திருப்தி இல்லை. ஆனால் அவருக்கு சாதகமாக கூறபடும் கருத்துக்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக இந்த பதிவை இடுகிறேன்.

1.தேவையற்ற ஈராக் போர்

தோல்வி -ஈராக்கில் Weapans of Mass Destruction(WMD) இருக்கிறது என்று கூறி போர் செய்ய சென்று விட்டு அங்கு கத்தி,கடப்பாறை,ரைபிள் போன்ற WMD மட்டுமே கண்டுபிடித்தார்.

உண்மை காரணமாக கூறபடுபவை :அமெரிக்கா மனதில் வைத்திருந்த WMD என்பது அணு ஆயுதங்கள் அல்ல. யூரோ நாணயம்.அமெரிக்காவின் இந்த அளவு வளர்ச்சிக்கும், அதன் மிகப்பெரிய ராணுவ பட்ஜெட்டிற்கும், அது உலகின் மிகப்பெரிய ராணுவ சக்த்தியாக இருப்பதற்கும் முக்கிய காரணம் டாலர் உலக நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது தான். இது பற்றி என்னுடைய டாலர் அரசியல் என்ற பதிவில் கூறி இருந்தேன். சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு டாலருக்கு போட்டியாக எந்த நாணயமும் இல்லாமல் இருந்தது.புஷ் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு வருடம் முன்பு தான் யூரோ புழக்கத்துக்கு வந்தது. டாலரின் மதிப்பு உலக சந்தையில் நன்கு இருப்பதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் டாலரில் விற்கபடுவது தான். ஈராக்கிய அதிபர் சதாம் அமெரிக்காவின் மீது நடத்திய மிக பெரிய தாக்குதல், பெட்ரோலை யூரோவில் விற்பனை செய்ய முன் வந்தது தான். அதற்கு பதில் நடத்திய எதிர் தாக்குதல் தான் ஈராக் போர். இராக்கை அமெரிக்கா பெட்ரோலை டாலரில் விற்க அனுமதித்திருந்தால் உலக சேமிப்பு நாணய சந்தையில் பெருமளவை யூரோ பிடித்திருக்கும். அது அமெரிக்காவிற்கு பொருளாதார அணுகுண்டு தாக்குதல் போன்றது.ஈராக்கின் இந்த முயற்ச்சி இல்லாமலேயே யூரோ உலக சேமிப்பு நாணய சந்தையில் 10 வருடத்தில் 25% பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு உலக பொருளாதாரமே அரபு நாடுகளின் கச்சா எண்ணையை நம்பி இருப்பதால், அரபு நாடுகளிடையே ஒரு வலிமையான அரசு தோன்றி, அவர்களுக்குள் வலுவுள்ள leadership பிற்காலத்தில் தோன்றுவதை அமெரிக்காவினால் ஒருகாலும் அனுமதிக்க முடியாது.போருக்கு சென்ற பின் அங்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஒரு இசுலாமிய நாட்டில் முழு அமெரிக்க ஆதரவுள்ள அரசை அமெரிக்க ஆதரவுடன் ஏற்படுத்துவது இயலாத காரியம்.இனி வரும் காலங்களில் பிற அரபு நாடுகள் நாணயத்தை டாலரிலிருந்து மாற்றும் போது , அப்போதய அமெரிக்க அதிபர் அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதே புஷ்ஷின் செயலுக்கு ஒப்பீடாக அமையும்.

2.உலகெங்கிலும் தீவிரவாதத்தின் வளர்ச்சி


தோல்வி -உலகெங்கிளும் தீவிரவாதத்தின் வளர்ச்சி அதிகரித்த்ள்ளது. அமெரிக்காவில் நடை பெற்ற தீவிரவாத செயலை தடுக்க தவறிவிட்டார்

அவர் பக்க நியாமாக கூறபடுபவை:சோவியத் யூனியன் உடையும் வரை விடுதலை போராட்ட வீரர்களாக, அமெரிக்காவினால் வளர்த்து விடபட்டவர்கள் தான் இன்று தீவிரவாதிகளாக கருதபடுபவர்கள். சோவியத் யூனியன் அழிந்தவுடனே அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கவேண்டும் அப்போது ஆட்சியில் இருந்தவர்கள். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. கிளிண்டனின் ஆட்சியின் போது அவர்கள் குறிப்பிட தக்க வளர்ச்சி அடைந்தாலும், அவர்களை முழுமையாக ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அந்த கால கட்டத்தில் தங்கு தடையின்றி networkஐ உலகெங்கும் விரிவு படுத்தினர்.மேலும் செப்டம்பர் 11 தாக்குதல் புஷ் ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே நடைபெற்றது. எனவே அந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் அவருக்கு முன் இருந்த ஆட்சியாளர்களே. மேலும் அந்த தாக்குதலுக்கு பின் அமெரிக்காவில் அடுத்த தாக்குதல் நடைபெறாமல் தடுத்ததே புஷ் இன் சாதனையாக கருதபடுகிறது.அல் கொய்தா மற்றும் தலிபான் கூட்டனியின் வளர்ச்சியை பெருமளவு தௌத்து பெரிய தாக்குதலை ஏற்படுத்த முடியாமல் தடுத்ததும் அவரது வெற்றியாகவே கருத படுகிறது.

3.நிதி நெருக்கடி

தோல்வி-புஷ் ஆட்சியின் முக்கிய தோல்வியாக கருதபடுவது அமெரிக்காவின் பொருளாதாரத்தை மொத்தமாக சீரழித்து விட்டு உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பை குறைத்தது

அவர் பக்க நியாமாக கூறபடுபவை:இப்போது ஏற்பட்ட நிதி நெறுக்கடிக்கு முக்கிய காரணமாக கருத படுவது subprime என்றழைக்கபடும் கடனை திருப்பி தர இயலாதவர்களுக்கு தந்த கடன்கள்,பெரிய அளவில தங்கு தடையற்ற கடன் கொடுத்து ஒரு housing bubbleஐ வங்கிகள் உருவாக்க விட்டது மற்றும் Credit Default Swapஎன்னும் கடன் வகை .
அவர் பக்க நியாமாக கூறபடுபவை: கிளிண்டன் ஆட்சி காலத்தில் , ஏழை மக்கள் அனைவரும் வீடு வாங்க வேண்டும் என்பதற்காக Community ReInvestment Act என்னும் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தினார். இதன் விளைவாக ஏழை மக்களுக்கும் வீட்டு கடன் எளிதாக கிடைத்தது. அவ்வாறு கடன் பெற்றவர்களில் பெரும்பாலோனோர்க்கு கடனை திருப்பி தரும் வளிமை குறைவாகவே இருந்தது. அந்த வகை கடன்கள் தான் இன்று ட்ரில்லியன் டாலரை தாண்டி விட்டது. என்வே இந்த Subprime கடன்களுக்கு மூல கார்த்தாவாக கிளிண்டனே உள்ளார்.
1930களில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகபெரிய நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் கொண்டுவர பட்ட சட்டம் தான் Glass-Steagall சட்டம்.
அது மக்களிடம் டெப்பாசீட் வாங்கி வியாபாரம் செய்யும் வங்கிகள் அந்த பணத்தை பொறுப்பின்றி Investment Bankingல் முத்லீடு செய்வதை தடுத்தது.
கிளிண்டன் ஆட்சி காலத்தில் அதில் திருத்தம் செய்ய பட்டு சாதாரன வங்கிகளும் Investment bankingல் செயல்படலாம் என்று அறிவிக்க பட்டது. அதன் விளைவாக பெருமளவிலான் மக்கள் பணம் speculation அடிப்படையாக கொண்ட மற்றும் risk அதிகம் உள்ள முதலீடுகளில் முதலீடு செய்ய பட்டு பொருளாதாரம் சூதாட்டம் போல் வளர ஆரம்பித்தது.அதுவும் நெறுக்கடிக்கு ஒரு காரணமாகியது.
Credit Default swap என்ப்படும் சந்தை product கூட அறிமுக படுத்த பட்டது கிளிண்டனின் ஆட்சிகாலத்தில் தான். (ஆனால் அது பூதாகரமாக வளர்ந்தது புஷ்ஷின் ஆட்சிகாலத்தில்).

தவறுகளுக்கு மூல காரணம் கிளிண்டன் என்றாலும் புஷ் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்க தோன்றும். புஷ்ஷை பொருத்தவரை அவர் தீவிர முதலாளித்துவ கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்.அவருடைய அரசியல் ஆசானாக கருதபடும் ரொனால்ட் ரீகனுடைய கட்டுபாடற்ற பொருளாதாரம் மற்றும் உலகளாவிய கட்டுபடுத்தல் போன்ற கன்சர்வேட்டிவ் கொள்கையில் அதீத நம்பிக்கையுடையவர் புஷ்.அவருக்கு ஓட்டளித்தவர்களும் அப்படி பட்ட கொள்கையை பின் பற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் ஓட்டளித்தனர். ரீகன் காலத்தில் வெற்றி சூத்திரமானது புஷ் கலத்தில் தோல்விக்கு இட்டு சென்றது. எந்த ஒரு ஏற்ற இறக்கத்தையும் சந்தைதான் தீர்மானிக்க வேண்டும் என்ற கொள்கையால் அவர் அவற்றை சந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டார்.(சில நிறுவனங்கள் அழிவை நோக்கி சென்ற போது அதையும் மார்கெட் தான் தீர்மானிக்க வேண்டும் என்று விடாமல், அவை அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை காரணம் காட்டி அவற்றை மீட்டு லிபெரல் கன்செர்வேட்டிவ்களிடமும் கெட்ட பெயர் சம்பாதித்தது வேறு விஷயம்.)
இதைதான் புஷ் பின்வருமாறு கூருகிறார்.
“I inherited a recession, I’m ending on a recession,”

4.காத்ரீனா சூறாவளி நிவரணத்தில் திறமையின்மை

இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவாக எவரும் எதுவும் கூறவில்லை.இந்த விஷயம் அவரது நிர்வாக திறமையின்மையையே எடுத்து காட்டுகிறது.எதிபாராத மாபெரும் இயற்கை சீரழிவு வரும் போது, அதை அமெரிக்க எதிர்கொள்ள தயார்படுத்த படவில்லை. இனி அது போன்ற எதிர்பாராத இயற்கை பேரிழப்பு நடைபெரும் போது அதை எதிர் கொள்ள அமெரிக்கா தன்னை தயார் படுத்தி உள்ளதா? என்பதை எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

புஷ் பின்பற்றிய கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் , குறைவான வரி நிர்ணயம் (அதிகம் பணம் சம்பாதிக்கும் மேல் நிலையில் உள்ள 1% அமெரிக்கர்களுக்கு $1.35 ட்ரில்லியன் வரி விலக்கு அளித்தார்.)மற்றும் உலகளாவிய ராணுவ வலிமையை நிலைநாட்டுதல் காரணமாக $5.6 ட்ரில்லியன் அதிக இருப்பாக இருந்த அமெரிக்க நிதி நிலைமையை $6 ட்ரில்லியன் இழப்பாக இட்டு சென்றது.ஓய்வு பெற்றவர்களுக்கான health care benefit செலவு $13 ட்ரில்லியனிலிருந்து $43 ட்ரில்லியனாக உயர்ந்ததற்கு புஷ்ஷின் medicare drug benefit திட்டமும் ஒரு காரணம். இந்த செலவுகளை செய்ய இது வரை ஒவ்வொரு வருடமும் அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
கட்டுபாடற்ற சந்தையில் முழு நம்பிக்கை வைத்திருந்த புஷ் தனது ஆட்சியின் இறுதியில் deregulation என்ற நிலையிலிருந்து மாறி reregulation என்று நிலைக்கு இட்டு சென்றது. அனைத்து துறையிலும் தனியாருக்கு முழு பங்கு அளிக்க வேண்டும் என்ற அவரது கொள்கையை மாற்றி மிக பெரிய நிதி நிறுவனம் மற்றும் கார் நிறுவனங்களில் அரசின் பங்கை அதிக படுத்தும் நிலைக்கு தள்ளபட்டார்.

இந்தியாவை பொருத்த வரை புஷ் ஆட்சி இந்திய-அமெரிக்க உறவை வேறெப்போது இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்தது என்பது உண்மை.அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமலேயே அணு தொழில்நுட்ப தடையிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளித்தததற்கு புஷ்ஷின் தனிபட்ட ஆதரவே காரணம் எனலாம்.வேறு எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இது போன்ற ஒப்ப்ந்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே. புஷ் ஆட்சி காலத்தில் காஷ்மீர் பிரச்சனையில் சிறிதளவும் தலையீடு செய்ய வில்லை என்பதும் குறிப்பிட தக்கது.எந்த ஒரு பிரச்சனையிலும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவு, இந்திய எதிர்ப்பு என்ற நிலை மாறி இந்திய ஆதரவு என்ற நிலையும் இந்த ஆட்சியில் தான் ஏற்படுத்த பட்டது என்பது குறிப்பிட தக்கது.outsourcingக்கு எந்த தடையும் விதிக்காமல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிருவனங்களின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தார்.


இனிவரும் காலங்களில் அமெரிக்க எதிர் கொள்ள போகும் பிரச்சனைகளும், அதை அப்போது இருக்கும் ஜனாதிபதிகள் எவ்வாறு கையாள போகிறார்கள் என்பதை பொருத்து தான் புஷ்ஷை வரலாறு விடுதலை செய்யுமா என்பது முடிவு செய்ய படும்.


--

5 comments:

Anonymous said...

நல்ல பதிவு

u have seen in a diff angle which most of them dont do

Anonymous said...

Nice Though, words brilliantly toggled, crispy but so intrutive. all the best for your furthur achievements. by SSK

ராஜ நடராஜன் said...

புஷ் நாணயத்தின் மறுபக்கத்தைக் காட்டியுள்ளீர்கள்.ஈராக் பொறுத்த வரை சதாம் யூரோவுக்கு மாறியதும் ஒரு காரணம் என்றாலும் கூட சீனியர் புஷ் பாதியில் விட்டுப் போன ஈராக் யுத்தத்தை நிறைவு செய்தார் என்பதே சரியாக இருக்கும்.

சதுக்க பூதம் said...

கருத்துக்கு நன்றி ssk, annony மற்றும் ராஜ நடராஜன்.
//சீனியர் புஷ் பாதியில் விட்டுப் போன ஈராக் யுத்தத்தை நிறைவு செய்தார் என்பதே சரியாக இருக்கும்.
//
அதற்கு காரணம் பொருளாதார ரீதியாக ஒரு சில நிறுவனங்கள் லாபம் அடைவதும் சில நிறுவனங்கள் இனி வரும் பல காலத்துக்கு லாபம் ஈட்டுவது கூட இருக்கலாம்

Anonymous said...

Hey, I can't view your site properly within Opera, I actually hope you look into fixing this.