Friday, January 02, 2009

விலகுகிறது சனிபகவானின் கண் திரை, 4th Sep 2009ல் உலகம் அழியுமா? - கண்டுபிடித்தது NASA

சனி பகவானின் கண் கட்டபட்டுள்ளதன் காரணம் அனைவரும் அறிவர். உலகில் உள்ள அனைத்து பாவங்களையும் தன்னுள் சுமந்து கொண்டுள்ளதால் அவரின் கண்கள் கட்ட பட்டுள்ளது.

அவர் கண்ணை திறந்தால் பாவம் அனைத்தும் எதிரில் உள்ளவர்களை (பூமி போன்ற கிரகங்கள்) தாக்கி சிரமத்தில் ஆழ்த்தும்.இது இந்தியாவை சேர்ந்த அறிவாற்றல் நிறைந்த சோதிடர்களால் ஆதாரபூர்வமாக நிருபிக்க பட்டுள்ளது.

தற்போது சில காலமாக உலகில் சுனாமி,பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களும், பொருளாதார நெருக்கடி, மத சண்டைகள் போன்ற சமூக பிரச்சனைகளும் மிக அதிகமாகி
உள்ளது.இதன் மூல காரணத்தை அறிய முடியாமல் பல்வேறு துறை நிபுணர்களும்,ஞானிகளும்,சோதிடர்களும் திணறி வந்த நேரத்தில்,ஒரு புதிய உண்மையை கண்டுபிடித்து பிரச்சனைக்கான மூல காரணத்தை NASA சோதிடர்களுக்கு ஒரு முக்கிய clueவாக கொடுத்துள்ளது.

NASA கண்டுபிடித்த அதிர்ச்சிகரமான செய்தி இதுதான். பாவத்தை அடக்கி வைத்திருந்த சனி பகவானின் கண்ணை மறைத்து கட்ட பட்டிருந்த திரை அவிழ தொடங்கியுள்ளது. அவர் பாவ
கணைகளை பூமி மீது வீச தொடங்கி விட்டார்.அவரது கண்திறை மெல்ல மெல்ல விலகுவதை நாமும் கண்கூடாக பூமியிலிருந்து செப்டம்பர் 4 2009 வரை பார்க்கலாம்.செப்டம்பர் 4 அன்று அவரது கண் திறை முழுமையாக விலகி விடும்.

இந்த செய்தியை நம்பாதவர்கள் NASAவின் இந்த செய்தியை படித்து பாருங்கள்.

இதை படித்த பின் நீங்கள் உடனடியாக கூகிளில் தேட போவது சனி பகவானின் பாவ கணைகளின் தாக்குதலுக்கு எதாவது பரிகாரம் கிடையாதா என்பதாகத்தானே இருக்கும். கவலை
படாதீர்கள் அதையும் நானே உங்களுக்காக கண்டுபிடித்து இலவசமாக இந்த பதிவிலேயே இணைத்துள்ளேன். வைத்தீசுவரன் கோவில் பகுதியில் இருக்கும் பழங்கால ஓலை சுவடியில் இதற்கு பரிகாரம் உள்ளது.பரிகாரமும் மிகவும் எளிமையானது. இந்த பதிவை படித்து முடித்த இரண்டு நாட்களுக்குள் 10 பேருக்கு இந்த பதிவை forward செய்தால் பாவம் உடனே விலகும்.

சற்றுமுன் வந்த தகவல்:பொதுவாக உலகில் எந்த தீய நிகழ்வுகள் நடந்தாலும் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பிறகே நாஸ்ட்டர்டாம் பல ஆண்டுகளுக்கு முன்பே இதை கணித்துள்ளார் என்று செய்தி வரும். ஆனால் இம்முறை நிகழ்வு நடப்பதற்கு முன்பே நாஸ்டர்டாம் சனி பாகவானின் இந்த நிகழ்வை பற்றி முன்னறிவிப்பு செய்த செய்தியும் கசிய தொடங்கி உள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நன்கு விவரம் தெரிந்த வாசகர்கள் இந்த நிகழ்வுக்கும் 2012 prophecyக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ந்து பின்னூட்டமிட்டால் வாசகர்களுக்கும் நன்மையாக இருக்கும்.

--

5 comments:

Anonymous said...

என் பவத்தை கழிக்க நீங்க சொன்னமதிறியே பரிகாரம் செய்துடென்

Good citizen said...

சொதிடத்தைப் பற்றிய உங்களின் நையாண்டி சூப்பர் சனியின் விளக்கம் பற்றிய நாசாவின் லிங்க் வெகுத் தெளிவாக ஆங்கிலத்தில் விளக்கியிள்ளனர் இதையும் தவிர்த்து சனி பகவான் கண்ணைக் கட்டிய துணியை அவிழ்க்க போகிறார்ம்,ஜட்டியை அவிழ்க்கப்போகிறார் என்று ஜொதிட சிகாமணிகள் விடும் டுபாங்கூர்களை
நம்பிக்கொண்டிருக்கும் மூட திமிழர்களை விவெக் சொல்வது போல
இன்னும் ஆயிரம் பெரியார்கள் வந்தாளும் திருத்த முடியாது

சதுக்க பூதம் said...

Kannaiyan and moulefrite கருத்துக்கு நன்றி

RAMASUBRAMANIA SHARMA said...

let us stop all these supersticious beliefs...and do our work properly, which is like God...The Almighty will take care of every thing. However, opinion differs...

சதுக்க பூதம் said...

//let us stop all these supersticious beliefs...and do our work properly, which is like God...The Almighty will take care of every thing. However, opinion differs...//

நான் வழி மொழிகிறேன்