Thursday, October 04, 2007

புதிய வகை ரீமேக் -நடிகர் Dr.விஜய் புதிய முயற்சி

இப்போது பழைய படங்களை மீண்டும் புதிய நடிகர்களை வைத்து எடுப்பது Fashion ஆகி உள்ளது. பில்லா, நான் அவனில்லை என பல படங்கள் அதுபோல வருகிறது. அஜித் தரப்பு பில்லா படத்தை வெளியிட இருப்பதால் அதற்கு பதிலடியாக தான் என்ன செய்வது என்று நீண்ட நாட்களாக Dr.விஜய் சிந்தித்து கொண்டு இருந்தார். மேலும் Doctor பட்டம் தற்போது கிடைத்திருப்பதால் அவருடைய பொறுப்பு பன்மடங்கு அதிகமாகி உள்ளதாக உணர்கிறார். இதை தொடர்ந்து Dr.விஜய் சரித்திரத்திலேயே இல்லாதவாறு புதிய வகை ரீமேக் முயற்சியை எடுக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இதன் படி அவர் நடித்த பல படங்களில் இருந்து பாடல் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை எடுத்து அவற்றை தேவையான படி தொகுத்து, புதிய படமாக ரீமேக் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து படங்களிலும் அவருடைய நடிப்பு அந்த கதாபாத்திரம் போல் இல்லாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பொதுவாகவே அவர் படங்களில் Logic இருக்காது, எனவே அவர் நடித்த படங்களில் இருந்தே காட்சிகளை வெட்டி எடுத்து அவற்றை ஒட்டி புதிய படத்தை எடுப்பது நிச்சயம் சாத்தியமானதே என கருதபடுகிறது. அதே சமயத்தில் படமும் நன்கு ஓடும் என்று கணக்கிடுகிறார்கள்.
இவ்வாறு ரீமேக் படம் எடுத்தால், உலக வரலாற்றிலேயே இது முதல் முறையாக இருக்கும். மேலும் வேறு எந்த நடிகரும் இதுபோல பிற்காலத்தில் கூட முயற்சி செய்ய முடியாது.
அனால் விஜய் இவ்வாறு ரீமேக் செய்து படம் வெளியிட்டாலும் அவரது ரசிகரும், பொதுமக்களும் அதை அவரது புதிய படம் என்றே நினைப்பார்கள் என்று எதிர்பாக்க படுகிறது. விஜய் எவ்வாறு அந்த படத்தை ரீமேக் படம் என்று மக்களுக்கு புரியவைப்பார் என்பது கேள்விகுறியே.

8 comments:

முரளிகண்ணன் said...

already appadi thaan nadakkuthu ha ha ha

துளசி கோபால் said...

:-)))))

சதுக்க பூதம் said...

வருகைக்கு நன்றி முரளி கண்ணன் and துளசி கோபால்

Unknown said...

over nakkal saamy :))

சதுக்க பூதம் said...

வருகைக்கு நன்றி Dev

ஒலிபெருக்கி said...

nakkal ellam ok remake idea ellam ok ana enna panrathu, block and white padathulaya oru nadigai nadicha padathin katchigalai thoguthu padamakkapattu vittathu

சதுக்க பூதம் said...

What is the film name ஒலிபெருக்கி?

கோசல்ராம் said...

டாய்லட்டில் ஒழிஞ்சியிருந்து யோசிச்சியளோ?