Wednesday, April 18, 2007

சென்னையில் மெட்ரோ விமானச்சேவை-இந்த வருட சூடான செய்திகள்-1

(சென்ற வருடம் நமக்கு கிடைத்த சூடான செய்திகள் போல இந்த வருடம்
நமக்கு கிடைக்க போகும் சூடான செய்திகள் குறித்து கற்பனை செய்த போது
கிடைத்த செய்திகள்)கடந்த சில வருடங்களாக சென்னையில் பூமி்க்கு மேல், பூமி்க்கு கீழ்,ஆகாயத்தில் என அனைத்து வகையிலும் ரயில்கள் வரப் போவதாக வருடத்திற்கு ஒரு நான்கு முறையாவது புது புது செய்திகளாக வந்து சென்னை வாசிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி கொண்டிருந்தது. இனி சென்னையின் அனைத்து பகுதிகளையும் தாண்டி அனைத்து வீடுகளையும் ரயிலின் மூலம் இணைக்க போவதாக வதந்திகளும் பத்திரிக்கையில் உலவி வந்தது(ஆனால் ஏனோ தெரியலிங்க, இந்த வேளச்சேரி project மட்டும் தான் முடியவே மாட்டேங்குது!). இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக தமி்ழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக METRO விமான சேவை சென்னையில் தொடங்க உள்ளதாக தமி்ழக அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி் சட்ட சபையில் அறிவித்துள்ளார்.முதற் கட்டமாக இந்த விமான சேவை சோழிங்கநல்லூர்,மகேந்திரா சிட்டி மற்றும் அம்பத்தூர் இடையே இயக்கப்படும் என்றார். பிறகு இந்த சேவை பிற பகுதிகளுக்கும் விரிவு படுத்த படும் என்றார்.இது குறித்த ஆய்வு பணி இன்னும் 5 வருடத்தில் ஆரம்பிக்கும் எனவும், இந்த பணி அடுத்த நூற்றாண்டில் முடிந்து விடும் என்றும் அமைச்சர் கூறினார்.

4 comments:

Ragland said...

Hi
This is Ragland.
My email Id is ragland.jebaraj@gmail.com
Where are you from?
What do you do?
Do let me know about more about you
Thanks
Ragland

Anonymous said...

romba nalla yerukunga unga karpanai
:)
why u r not writing on a regular basis?
after reading this i became ur fan
hope u will continue the good work
all the best

சதுக்க பூதம் said...

நன்றி அனானி

சீமாச்சு.. said...

//It is really great that still u remember your old friend death date even after 15 years.I too know about him. He is really a brillant and good person//

அன்பரே.. உங்களுக்கு என் ப்ரெண்ட் நடராஜனை எப்படித் தெரியும்? நீங்கள் மயிலாடுதுறையா? என்னையும் தெரியுமா?

கொஞ்சம் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியுமா?


அன்புடன்,
சீமாச்சு