Sunday, October 10, 2010

Capitalism:A Love Story திரை விமர்சனம்

மைக்கேல் மூர் படம் என்றாலே சமூகத்தில் நிகழும் அவலங்களை மிக ஆழமாக கூறுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த படத்தில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப முதலாளித்துவத்தின் தீய விளைவுகள் பற்றி அழகாக கூறியுள்ளார். சோவியத் இருந்த வரை கம்யூனிசம் அல்லது மக்களாட்சி ஆகிய இரண்டு மட்டும் வாத பொருளாக இருந்தது. அப்போது முதலாளித்துவம் என்பது மக்காளாட்சியின் போர்வையில் ஓரளவு கட்டுபாட்டிலும் இருந்தது.

ஆனால் சோவியத் வலுவிழக்க ஆரம்பித்தவுடன், முக்கியமாக ரீகன் மற்றும் தாட்சர் ஆட்சியில் முதலாளித்துவத்தின் தாக்கம் மக்களாட்சியில் அதிகம் ஏற்பட ஆரம்பித்தது. அரசாங்கம் என்பது மக்கள் நன்மைக்காக கட்டுபாடுகளை நடைமுறைபடுத்துவது மக்களாட்சியாகவும், அரசாங்கமே அனைத்தையும் எடுத்து நடத்துவது சோசியலிசமாகவும் இருந்தது. ஆனால் சோவியத் யூனியன் மறைவிற்கு பின் உண்மையான மக்களாட்சி என்பது சோசியலிசம் போலவும் அதற்கு மாற்றாக முழு முதலாளித்துவமும் உள்ளது போன்ற நிலை ஏற்பட தொடங்கியது. மக்கள் நலனுக்காக அரசு தனியார் மீது விதிக்கும் கட்டுபாட்டுகள் அகற்றபடுவதால் ஏற்படும் விளைவுகளை உணர்ச்சி பூர்வமாக கூறி மக்களின் மனதிற்கு எடுத்து சென்று உள்ளார். ஆனால் தன் கருத்துக்களின் ஆழத்தையும் அதன் பின்னனி மற்றும் ஆதாரங்களையும் இன்னும் தெளிவாகவே விளக்கி இருக்கலாம் என்பதே என் கருத்து.



இப்படத்தில் அமெரிக்காவின் அரசு அதிகாரத்தில், முடிவுகளை எடுக்கும் அதிகாரத்திற்கு எந்த அளவு நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் பங்களிப்பு ரீகன் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என்று கூறியுள்ளார். வால் ஸ்ட்ரீட்டிலிருந்து மெயின் ஸ்ட்ரீட்டிற்குள் புகுந்து எவ்வாறு தங்களுக்கு தேவையான சட்டங்களை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்று அழகாக கூறியுள்ளார். இந்த நிகழ்வின் பெரும் பகுதியை நடத்திய கிளிண்டன் நிர்வாகத்தை பற்றி அதிகம் கூறாதது அவருடைய மனதில் உள்ள டெமாக்ரெட்ஸ் மீது உள்ள அபிமானத்தை காட்டுகிறது !பாதிக்க பட்ட மக்களிடம் பேட்டி எடுத்து , பாதிக்கபட்ட நிகழ்வுகளை காட்டி(முக்கியமாக வீடுகளை இழந்த) உணர்வு ரீதியாக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் விமானியின் ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு $20000 தான் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.ஜன்னல் செய்யும் நிறுவனம் மஞ்சள் நோட்டீசு கொடுத்த பின் அதில் பாதிக்க பட்ட தொழிலாளிகள் நியாயமான இழப்பீடுக்காக போராடிய விதம் நெஞ்சை தொடுவதாக உள்ளது.இந்த நிதி நெருக்கடி முடிவுக்கு வந்தபின் மிக பெரிய மான்ஸ்டராக வளர்ந்து இருக்க போகும் நிதி நிறுவனங்கள் பற்றி அவர் கூறுவது அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய அதிர்ச்சிகரமான உண்மை. இது பற்றி முன்பு பல பதிவுகள் எழுதி உள்ளேன்.

லெஹ்மேன் பிரதர்ஸின் வீழ்ச்சிக்கு பிறகு, மிக பெரிய நிதி நிறுவனங்களை காப்பாற்ற செனட்டர்கள் எப்படி நிர்பந்திக்க பட்டார்கள் என்ற செய்தியையும் விளக்கி உள்ளார். நிதி நிறுவனங்களை கட்டு படுத்தும் அமைப்புகளின் தலைவர்களுக்கும் நிதி நிறுவனங்களுக்குமேயான தொடர்பையும் அழகாக காட்டி உள்ளார்

இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு முதலில் மனதில் தோன்றியது இந்தியாவில் தற்போது மிக முக்கியமாக தேவை படும் உண்மையான தொழிலாளர்களின் யூனியனின் அவசியம். அமெரிக்காவில் ரீகன் காலத்திலிருந்து systemically யூனியன்கள் சிறிது சிறிதாக அழிக்க பட்டு விட்டது. தற்போது அவர்களுக்கு நியாயமான உரிமைகள் மறுக்கபடும் போது இணைந்து போராடுவதற்கான கட்டமைப்பே அவரகளிடம் இல்லை. அதே சமயம் மீடியாக்கள் முழுதும் ஒரு சில செல்வந்தர்கள் கையில் இருப்பதால் தொழிலாளர்களின் உண்மை நிலை ஒட்டு மொத்தமாக வெளி உலகுக்கு தெரியாமல் இருட்டடிக்க படுகிறது.இந்தியாவிலோ தற்போது ஒருபுறம் தொழிலாளர்களின் உரிமையை காப்பற்ற வேண்டியவர்கள் முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து யூனியன்களின் செயல்பாட்டையே கேலி கூத்தாக்குகிறார்கள். மறுபுறம் அரசாங்கங்கள் தொழிலாளர்களின் போராட்ட உரிமையை சிறிது சிறிதாக சட்டம் மூலம் பறித்து கொண்டு உள்ளார்கள்.

கம்யூனிஸ்டுகள் அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு எதிராக போராடிய திறனில் நூற்றில் ஒரு பகுதியாவது இந்தியாவில் உள்ள தொழிலாளிகளின் நலனுக்கு ஆதரவாக அல்லது ஏழைகளின் நலனுக்காக செலவிட்டார்களா என்பது கேள்வி குறியே.மேற்கு வங்காளத்தில் அவர்கள் நடத்தும் ஆட்சி பற்றி எதுவும் கூற வேண்டியது இல்லை. மற்ற கட்சியை பற்றி கூறாமல் கம்யூனிஸ்டுகளை பற்றி மட்டும் ஏன் கூறுகிறேன் என்றால் ஒடுக்க பட்ட மக்களுக்கு ஆதராவாக ஒரு இயக்கம் தோன்றுவது மிக மிக கடினம். அதையெல்லாம் மீறி ஒரு இயக்கம் தோன்றி விட்டால், ஒட்டு மொத்த ஒடுக்க பட்ட மக்களின் பார்வையும் அவர்கள் பக்கமே செல்லும். அந்த இயக்கங்களின் தலைமை ஒரு சில சுயநல கும்பலிடம் மாட்டி விட்டால் அந்த இயக்கங்களின் அடிமட்ட தொண்டர்கள் உண்மையானவர்களாகவும், தலைமை அவர்களின் சக்தியை வீணடித்து , போராட்டதை மழுங்கடித்து விடுவர். மக்களின் உண்மையான தேவையை திசை திருப்பி, குறைந்த முக்கியத்துவம் உள்ள பிரச்ச்னையை மக்கள் முன் பூதாகரமாதாக்குவார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளின் பொலிட்பீரோவிற்கு அடி மட்டத்திலிருந்து உழைத்து முன்னிரியவர்கள் செல்வதை விட வங்கி மற்றும் காப்பீடு துறையில் உள்ள புரோக்கர்கள் ஆதிக்கமும் theoritically கம்யூனிசம் படித்து மேல் தர வர்க்கத்திலிருந்து(உயர் நடுத்தர) வந்தவர்கள் ஆதிக்கமும் அதிகமாவது கூட இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இதன் விளைவாக பிற்காலத்தில் அது போன்ற எந்த இயக்கத்தையும் மக்கள் நம்ப மறுப்பார்கள். அது அவர்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

இந்த படம் நமக்கு கற்று கொடுக்கும் பாடம் - நாட்டிற்கு உடனடி தேவை தொழிலாளர்கள் நலனை பேனி பாதுகாக்க கூடிய உண்மையான தொழிற்சங்கங்களும் அவர்களின் உரிமையை நிலை நிறுத்த தேவையான சட்ட திட்டங்களும் தான்.சந்தை மற்றும் நிதி நிர்வாக அமைப்புகளின் மீது அரசின் கண்காணிப்பின் தேவையும் கட்டுபாடும் எவ்வளவு அவசியம் என்பது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு புரியும். நாட்டின் பொருளாதாரத்தை சூதாட்ட களமாக மாற்றிய நிறுவனக்களுக்கு இந்தியாவிலும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நமது பிரதமர் கூறி வருவதை அனைவரும் கவனிக்க வேண்டும்.

--

Sunday, October 03, 2010

உல்லாச தலைநகரம் லாஸ் வேகஸ் -3 - சூதாட்டங்கள்

லாஸ் வேகாஸ் என்றவுடனே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது சூதாட்டம், மது ,மாது மற்றும் மாமிசம். சூதாட்டத்தில் உலக அளவில் சில காலம் முன்பு வரை முதலில் இருந்தது இந்த நகரம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகளாவிய பன்னாட்டு வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் நூதனமான பல புதிய LIVE சூதாட்டங்களை அறிமுகபடுத்தி , சூதாட்டத்தின் மதிப்புகளும் டிரில்லியனை தாண்ட வைத்து நியூயார்க் நகரை சூதாட்டத்தின் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டர்கள்.

நெவேடா மாகாணத்தில் விபச்சாரம் ஒரு சில இடங்களில் அனுமதிக்க பட்டு இருந்தாலும் லாஸ்வேகாஸ் பகுதியில் அதற்கு அனுமதி இல்லை. இது சட்ட படி மட்டுமே. ஆனால் அங்கு தெருவெங்கும் மக்களுக்கு விபச்சாரத்துக்கு விசிட்டிங் கார்டு கொடுத்து அழைப்பவர்கள் ஏராளம். இந்த சட்டத்திற்கு புறம்பான நிகழ்ச்சி மறைமுகமாக நடைபெறுவதில்லை. நேரடியாகவே அனைத்து தெருக்களிலுமே நடைபெறுகிறது. ஆனால் இந்த தொழில் மிக பெரிய மபியாக்களின் கட்டு பாட்டில் உள்ளதால் அந்த விடுதிகளுக்கு செல்லும் மக்களின் உடமைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண நடன நிகழ்ச்சிகள் அனைத்து பெரிய விடுதிகளிளும் நடக்கும். அது மட்டுமன்றி ஒரு சில காசினோக்கள் நள்ளிரவு ஆப் சீசன் நேரங்களில் இது போன்ற நடனங்களை இலவசமாக சூதாடும் இடங்களில் நடத்தி வாடிக்கையாளர்களை இழுப்பதும் உண்டு.





தண்ணீர் பிரச்சனை இல்லாத ஒரு பாலைவனம் உண்டு என்று சொன்னால் அது லாஸ்வேகாசாக தான் இருக்கும். இங்கு அனைத்து வகை மது பாணங்களும் கிடைக்கும். வித்தியாசமான கோப்பைகளில் கிடைக்கும் மார்க்கரிட்டா இங்கு பிரபலம்

உணவு இங்கு மிக பிரபலம். ஒவ்வொரு விடுதியும் buffet வகை உணவை வைத்திருக்கும். அது மட்டுமன்றி பல வகையான சிறப்பு உணவுகளுக்குகான உணவு விடுதிகள் பல ஒவ்வொரு விடுதியிலும் இருக்கும். buffetல் உலகில் உள்ள அனைத்து வகையான உணவு(சீனா,மலசியா,தாய்லாந்து,ஜப்பான்,கொரியா,இத்தாலி,இங்கிலாந்து,பிரான்ஸ்,மெக்சிகன் ,american) வகைகளும் வைக்க பட்டிருக்கும். உணவு பிரியர்களுக்கு இது ஒரு நல்ல வர பிரசாதம்.

சூதாட்ட விடுதியில் நீங்கள் 1 செண்டு முதல் பல்லாயிரம் வரை வைத்து சூதாட்ட வசதி உள்ளது( மகாபாரதத்தில் வருவது போல் நாடு,நகரம் போன்றவற்றை வைத்து சூதாட வசதி உள்ளதா என்று தெரியவில்லை!). அங்கு இருக்கும் slot Machineகளில் 1 செண்டு முதல் சில டாலர் வரை வைத்து சூதாடலாம். குறைந்த முதலீட்டில் விளையாட வாய்ப்புள்ளதால் பெரும்பாலானோர் இதை தான் விரும்புவார்கள். ஸ்லாட் இயந்திரங்களில் பல வகை உள்ளது. அவற்றில் முக்கியமானது எண்கள்/எழுத்துக்கள் சுத்தும் வகை தான். அதாவது ஒவ்வொரு முறை விளையாடும் போதும் 3 - 5 row-க்களில் எண்கள் சுழன்று கொண்டு randomஆக ஒரு இடத்தில் நிற்கும். அப்போது கிடைக்கும் எண்களின் ஒப்பீட்டிற்கு(Combination) ஏற்றவாறு பரிசு இருக்கும். உதாரணமாக 333 என்று ஒரே எண் வந்தால் அதற்கு ஒரு பரிசு பொருள் இருக்கும். குறிப்பிட்ட எண்கள் combination வருவதற்கான நிகழ்தகவு(probability) குறைவாக இருந்தால் அதற்கு பரிசு அதிகம் இருக்கும்.



இந்த விளையாட்டுகளில் வரும் லாபமும் முதலீட்டை போலவே மிக குறைவு என்பது தான் பல பேருடைய கணிப்பு. ஆனால் உண்மை அது இல்லை. அமெரிக்காவில் இது போன்ற Slot Machine களை வைத்து விளையாடுவதில் ஒரு சில சட்ட திட்டங்கள் உள்ளது. அதன் படி ஒவ்வொரு விடுதியிலும் ஸ்லாட் இயந்திரங்களில் மக்கள் விளையாட போடும் பணத்தில் ஒரு கணிசமான சதவீதத்தை, கட்டாயமாக சூதாட்ட விடுதிகள் பரிசு பொருளாக விளையாடுபவர்களுக்கே கொடுத்து விட வேண்டும்.உதாரணமாக நெவேடா மாகாணத்தில் குறைந்தது 75% பணத்தை விளையாடுபவர்களுக்கு பரிசாக அளிக்க வேண்டும்.இந்த பரிசு பொருள் randomஆக வெவ்வேறு slot mnachineமூலம் jackpot என்ற பெயரில் பெரிய தொகையாக வழங்கபடும். எனவே அதிர்ஷ்டம் இருந்தால் குறைந்த முதலீட்டில் ஜாக்பாட் அடித்து நிறைய பணம் பார்க்கலாம். இங்கு விளையாட வருபவர்களில் ஒரு சிலர் இது போன்ற ஸிலாட் இயந்திரங்களில் நிறைய நேரம் விளையாடி விட்டு எழுந்து போகும் மக்களின் body language-ஐ கூர்ந்து கவனிப்பார்கள். அவர்களிடம் ஏமாற்றம் அதிகம் தெரிந்தால் அந்த இயந்திரங்களில் நிறைய நேரம் ஜாக்பாட் வரவில்லை என்று பொருள். எனவே அங்கு விளையாடினால் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால் அந்த இயந்திரங்களில் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

ஸிலாட் இயந்திரங்களுக்கு அடுத்த படியாக உள்ளது பிற Board Gameகள். கள் விளையாட மிக அதிக பணம் செலவ்ழிக்க வேண்டும் என்பது பலரின் நினைப்பு. ஆனால் உணமை அதுவல்ல. குறைந்த பணத்தை கொண்டே போர்ட் கேம்கள் விளையாடலாம். இனிவரும் பதிவுகளில் BlackJack,Roulette,Craps போன்ற விளையாட்டுகள் எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas) 2

--

Sunday, September 26, 2010

வாழும் வள்ளலார் - நாரயணன் கிருஷ்ணன் CNN Hero ஆக வாக்களியுங்கள்


வாடிய பயிரை காணும் போதெல்லாம் வாடினார் ராமலிங்க வள்ளலார். பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார்.இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா? இந்த அதிசயத்தை நடத்தும் நல்ல மனிதர் மதுரையை சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன். ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த அவர் வீதியில் சமுதாயத்தால் கைவிட பட்டு ஆனாதையாய் திரியும் ஏழைகளுக்கு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார்.தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார்.







உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுக்கும் CNN. இந்த வருடம் CNN தேர்ந்தெடுத்த 10 பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர். இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று வாக்களிக்களாம்.

http://heroes.cnn.com/vote.aspx


இதை படிக்கும் பதிவர்கள் தங்கள் வலை பூவில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வாசகர்களுக்கு ஒரு லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்.நவம்பர் 18 தான் வாக்களிக்க கடைசி நாள்.

CNN பத்திரிக்கையின் செய்தி அளிக்கும் விதம் குறித்து எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தாலும் இந்த CNN Hero என்ற வகையில் பல நல்ல உள்ளங்களை உலகுக்கு அறிமுக படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இது பாராட்ட பட வேண்டிய செயல். பிற டி.வி நிறுவனங்கள் மற்றும் பிரபல செய்தி தாள்கள் கடைபிடிக்க வேண்டிய செய்தி.

--

Wednesday, September 22, 2010

இந்தியாவுக்கான ஒளி மயமான எதிர்காலம்

ஆண்டு முழுவதும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கு ஆன மத்திய பட்ஜெட்டின் ஆரம்ப கல்வி செலவு(பட்ஜெட்டில் ஒதுக்கபட்டது) - 36000 கோடி

ஒபாமா இந்திய வரும் போது போயிங் நிறுவனத்திடம் இருந்து C-17 Globmaster III ரக விமான படைக்கான விமானம் 10 மட்டும் வாங்க ஆகும் செலவு - 26680 கோடி

--

Sunday, September 19, 2010

சீன பணத்தை சேமிப்பு நாணயம்(Reserve Currency) ஆக்கிய மலேசியா

இது நாள் வரை சீனா தன் சேமிப்பு கரன்ஸியாக டாலரை வைத்திருக்குமா அல்லது யூரோவுக்கு மாறுமா அல்லது தங்கம் வாங்கி குவிக்குமா என்ற செய்திகளே உலக பொருளாதாரத்தில் விவாதத்தில் இருந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்க பட்டு கொண்டு இருந்த இன்னோரு செய்தி தற்போது வந்துள்ளது. பொருளாதாரத்தில் மிக பெறிய அளவில் முன்னேறி வரும் சீனாவின் யுவானையே பிற நடுகள் சேமிப்பு கரண்சியாக சேர்க்க தொடங்கும் நாள் விரைவில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. சீனாவே இந்த முயற்சிக்கு தடை விதித்து வந்தது. சீனா தனது தடைகளை சிறிய அளவில் விளக்க ஆரம்பித்துள்ளது.

அந்த நிலையில் முதன் முதலாக சீனாவின் பாண்டுகளை வாங்கி தனது சேமிப்பு கரன்ஸியின் ஒரு பங்காக மாற்றி மலேசியா வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு சீனாவின் நாணயம் சர்வ தேச சேமிப்பு கரண்சியாக மாறினால், அந்த மாற்றத்தை முதன் முதலாக கொண்டு வந்த நாடு என்ற பெயரை மலேசியா பெருகிறது. பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மலேசியாவை தொடர்ந்து வேறு சில நாடுகளும் சீனாவின் நாணயத்தை சேமிப்பு கரன்ஸியாக வாங்க தொடங்கியுள்ளதாக கூறினாலும் அந்த நாடுகளின் பெயர்களை அந்த செய்தி தாள் வெளியிடவில்லை.

சீனா பெருமளவில் இந்த நடைமுறையை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் அதன் விளைவாக சீனாவின் நாணய மதிப்பு கூட வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி சீனா அமெரிக்க பாண்டுகளை வாங்குவதை போல் அமெரிக்கா சீனாவின் பாண்டுகளை தடையின்றி வாங்க ஆரம்பித்தால் சீனாவின் நாண்ய மதிப்பு உயர்ந்து அதன் ஏற்றுமதி தொழில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே சீனாவின் நாணயம் உலக சேமிப்பு நாணயத்தில் ஒரு முக்கிய பங்கை பிடிக்க பல வருடங்கள் ஆகலாம்.

--

Saturday, September 18, 2010

அமெரிக்கா , சீனா --இரு செய்திகள் இந்தியாவிற்கு?

கடந்த வாரம் இரு வேறு செய்தி தாள்களில் வந்த இரு செய்திகள் அனைவரின் சிந்தனைக்கும் உரியது.

முதலில் நியுயார்க் டைம் செய்திதாளில் வந்த இந்த செய்தி பற்றி பார்ப்போம்.

இந்த செய்தி அமெரிக்கா சிறந்த நாடுகள் வரிசையில் 11ம் இடத்துக்காக தள்ள பட்டதாக நியீஸ் வீக் பத்திரிக்கையில் வந்த செய்தியை பற்றிய பிரெட்மேன் இன் அலசல். அமெரிக்காவின் இந்த பின்னைடைவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் பள்ளியிலேயிருந்து மாணவர்கள் படிப்பின் ஆர்வம் குறைந்து வருவது தான் என்கிறார்.மேலும் அவர் முக்கிய காரணமாக கூறுபவை

the decline in U.S. education, competitiveness and infrastructure, as well as oil addiction and climate change.

அவர் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு போட்டியாக இந்தியா, சீனா வருவதற்கான காரணங்கள் பற்றி பின் வருபவற்றை குறிப்பிடுகிறார்

China and India have been catching up to America not only via cheap labor and currencies. They are catching us because they now have free markets like we do, education like we do, access to capital and technology like we do, but, most importantly, values like our Greatest Generation had

இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றியது.முதலாவதாக இந்தியாவில் பல்கலை கழக மற்றும் உயற் கல்வி கூடங்களின் தரம் பற்றி பார்ப்போம். மேலை நாடுகளின் இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பல்கலை கழகங்கள். அனைத்து அடிப்படை ஆராய்ச்சிகளும் அங்கு பல்கலை கழகங்களில் தான் நடைபெருகிறது. அடிப்படை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்க பட்ட உண்மைகளை கொண்டு அதை சந்தை படுத்தலுக்கு தேவையான பொருளாக மாற்றும் ஆராய்ச்சியும் பல்கலை கழகங்களில் தான் நடக்கும். அதற்கு பின் தனியார் கம்பெனிகள் உள் புகுந்து சிறிது முதலீடு செய்து மீண்டும் பல்கலை கழகங்களின் உதவியோடு ஆராய்ச்சியை தொடர்ந்து சந்தைக்கு உரிய பொருளாக கொண்டு வருவார்கள். எனவே பல்கலை கழக ஆராய்ச்சி என்பது முதலாளித்துவத்தின் முதுகெலும்பு. இந்தியாவிலோ முதலாளித்துவ பாதை தான் ஏற்றது என்று தேர்ந்தெடுத்தாலும் பல்கலைகழக ஆராய்ச்சியை உயர்த்துவது பற்றி யாருமே சிந்திப்பது இல்லை.

இங்கு உள்ள மத்திய கல்வி அமைச்சர்களின் குறிக்கோள் எல்லாம் எவ்வாறு இந்தியை அனைத்து மாநிலங்களிலும் புகுத்தி, ஆங்கிலத்தை ஒழித்து ஒட்டு மொத்த இந்திய கல்வி கட்டுமானத்தையே சீரழிப்பது என்பது பற்றி தான் உள்ளது.

எதோ வளர்ந்த நாடுகள் தான் பல்கலை கழக ஆரய்ச்சியில் முன்னேற்றம் செலுத்துகிறது என்று இல்லை. சீனா பல்கலை கழக ஆராய்ச்சிக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 5 வருடத்துக்கு 1 மில்லியன் டாலர் என்று நிதி உதவி அளித்து சீனா பல்கலைகழகத்துக்கு அழைக்கிறது. அவர்களுக்கு கொடுக்க படும் டார்கெட் எல்லாம் சயின்ஸ், நேச்சர் போன்ற உயர் தர அராய்ச்சி இதழ்களில் கட்டுரை வெளியிட வேண்டும் என்பதே.அவ்வாறு கட்டுரை வெளியிட இல்லை என்றால் 5 வருடத்துடன் அவர்களுடைய கான்ட்ராக்ட் விலக்க படும்.மிக பெரிய விஞ்ஞானிகள் அங்கு சென்று ஆராய்ச்சி செய்வதால் அங்கு தரமான ஆராய்ச்சி ஆரம்பிக்க படுவதுடன், பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சி திறன் அதிகமாகிறது. பிறகு ஒவ்வோரு மாணவனும் தரமான மற்றும் லேட்டஸ்டான ஆரய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தியாவின் பல்கலை கழகங்களில் பல மாணவர்கள் நல்ல தரமான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று சேர்கிறார்கள். ஆனால் பல்கலைகழகங்களில் உள்ள பேராசிரியர்களின் அறிவோ 40 வருட பின் தங்கியதாக உள்ளது. அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி தலைப்பும் ஒன்றுக்கும் உதவாத தலைப்பாக இருக்கும். பல்கலைகழகங்களில் நடக்கும் அரசியலில் மாணவர்கள் வீழ்ந்து கடைசியில் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். தற்போது மத்திய அரசு ஆராய்ச்சிக்கு என பல கோடி செலவு செய்தாலும், பலன் மிக குறைவே. அந்த பிராஜெக்ட் வாங்கவே சில சமயம் நீங்கள் திறமையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும். இந்திய பல்கலை கழக ஆராய்ச்சி பற்றிய என்னுடைய அனுபவத்தை தனி பதிவாக இடுகிறேன்.

அடுத்தது கல்லூரிகளில் கல்வி தரம். 3 முதல் 6 ஆண்டுகளுக்கு மாணவர்கள் கல்வி கற்க கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். அங்கு கொடுக்க படும் கல்வியின் தரம் மிக கவலை கூறியதாக உள்ளது. மேலை நாடுகளில் ஒரு பாடத்தில் மேல் படிப்பு வரை படித்தால் உண்மையிலேயே அவருக்கு அந்த பாடத்தில் நுண்ணிய அறிவு இருக்கும். ஆனால் இந்தியாவிலோ கல்லுரி முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு அந்த பாடத்தில் இருக்கும் அறிவு மிக மிக குறைவு. பாடத்தின் சிலபஸ் எல்லாம் மிக நன்றாகவே உள்ளது. ஆனால் கல்வி தரம் மிக குறைவாக உள்ளது. லோக்கல் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ,பள்ளி கூடத்தில் படிக்கும் போது அந்த பாட புத்தகத்துக்கு உள்ள தரத்தை விட குறைவாக ஒவ்வொரு பேப்பருக்கும் புத்தகம் போட்டு விடுகிறார்கள். மாணவர்களும் அதை மனபாடம் செய்து விட்டு சென்று வாந்தி எடுத்து விடுகிறார்கள். மேலை நாடுகளில் உள்ள மிக பெரிய பேராசிரியர்கள சிந்தனையை தூண்டும் விதமாக புத்தகங்கள் போடுகிறார்கள். அதை வாங்கி யாரும் படிப்பது கிடையாது. மேலும் ஆராய்ச்சி ஜேர்னல்கள் போன்றவற்றை புரட்டி பார்த்து படிப்பது என்பது விரல் விட்டு எண்ணும் நிலையில் தான் உள்ளது(அவை கல்லூரிகளில் வர வழிப்பதே குதிரை கொம்பு)

பல்கலை கழக ஆராய்ச்சி இப்படி என்றால் மற்றொரு முக்கிய பிரச்சனை கிராமபுற பள்ளிகளின் கல்வித்தரம்.கிராமபுறங்களில்(முக்கியமாக அரசு பள்ளிகளில்) உள்ள படிக்கும் பெருபான்மையான மாணவர்களின் கல்வி தரம் மிக மோசமாக உள்ளது. தற்போது தமிழகமெங்கும் கல்லூரிகள் பல அரசு மற்றும் தனியார் துறைகளில் தொடங்க பட்டதாலும், ஏழை மக்களுக்கு பள்ளி இலவச கல்வி கிடைப்பதாலும், அரசு உணவு பொருட்களை இலவசமாக வழங்குவதால் ஏழைமக்களின் சேமிப்பு மூலம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு செலவிட முடிவதாலும், அதை விட முக்கியமாக ஏழை மக்கள் தங்கள் குழைந்தைகளின் படிப்பு மற்றும் வளர்ச்சிக்கு பல தியாகங்களை செய்வதாலும் கிராம புரங்களிளிருந்து ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. அவர்களை பள்ளி படிப்பில் வலுவான கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டிய கிராம புற பள்ளிகள் தன் கடமையிலிருந்து தவறுகின்றனர். இதற்கு பல காரணம் உள்ளன, ஆசிரியர்களின் அலட்சியம்,முக்கியமாக ஆசிரியர்கள் நியமிக்க படாமல் இருப்பவை, அதை விட முக்கியமாக ஒவ்வொரு வகுப்பிலும் ஏதும் படிக்காமலேயே பாசாகி வந்து விடலாம் என்ற நிலமை. கடுமையான கஷ்ட்டதிற்கு நடுவில் தன் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர். ஆனால் கல்வி தரத்தில் போட்டி போட முடியாததால் அவர்களால் நல்ல வேலைகளுக்கும் போட்டியிட்டு செல்ல முடியாத நிலை.அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடின் பயனையும் முந்தய தலைமுறையில் முன்னேறிய பெற்றோரின் பிள்ளைகளே அனுபவிக்கும் நிலை. நேற்று பல்கலை கழகத்தில் ஆசிரியராக இருக்கும் என் நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும் போது அவர் தற்போது கிராம புறத்திலிருந்து வந்திருக்கும் மாணவர்களின் தரம் பற்றிய கூறிய செய்திகள் மிக அதிர்ச்சியாக இருந்தது(அவர் கிராம புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்று, கிராம புற மாணவர்களுக்கு உதவ பல முயற்சி எடுப்பவர். ஆனால் அவர் உதவ முன் வந்தாலும் அதை ஏற்று முன்னேற 90% மணவர்கள் தயாரக இல்லை என்பது கொடுமை)

இந்த நிலை தொடர்ந்தால் ஒரு புறம் கல்வியின் தரம் குறைவதுடன் மறுபுறம் ஏழை மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையா? என்று எண்ண தோன்றக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.

மற்றொரு செய்தி பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்திருக்கும் இந்த செய்தி. இது சீனாவின் சமீபத்தய பொருளாதாரம் மற்றும் வணிப ரீதியான செயல்பாடுகள் பற்றியது.

சீனா தற்போது மூல பொருட்கள் அதிகம் உள்ள தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெரும் அளவு மூல பொருட்கள் சார்ந்த துறைகளில் முதலீடு செய்கிறது.இதில் குறிப்பிட தக்க நாடு பிரேசில். உலகளவில் மூலபொருட்கள் உற்பத்தியில் முக்கிய இடத்தை வகிப்பது பிரேசில். இங்கு தற்போது மூல பொருட்களோடு பெட்ரோலும் பெருமளவு கண்டு பிடிக்க பட்டுள்ளது.கடந்த ஆண்டு வரை 100 மில்லியனுக்கும் குறைவாக இருந்த பிரேசிலுக்கான சீன முதலீடு இந்த ஆண்டு 10 பில்லியனை தாண்டும் என்று எதிர் பார்க்க படுகிறது.உதாரணமாக சீனா, பிரேசிலின் எண்ணெய் கம்பெனியான பெட்ரோபிராசில் 10 பில்லியன் டாலரும் , இரும்பு கம்பெனியில் 1.25 பில்லியனும் முதலீடு செய்துள்ளது.மூல பொருட்களின் முதலீடு மட்டுமல்ல. இரயில் போக்குவரத்து, கப்பல் கட்டுமானம், மின் உற்பத்தி நிலையங்கள் என உயர் தொழில்நுட்ப துறைகளிலும் தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சீனாவிடம் அதிகம் இருக்கும் அன்னிய செலாவனி கையிருப்பு இதற்கு பெருமளவில் கை கொடுக்கிறது. சீனா அமெரிக்க பாண்டுகளில் மட்டும் முதலீடு செய்து வளர்ந்த நாடுகளை மட்டும் நம்பி இருக்காமல் வளரும் நாடுகளின் தொழிற்துறையிலும் தற்போது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

கீழ் காணும் வர்த்தக ஒப்பந்தத்தை பார்த்தால் இரு நாடுகளுக்கான வர்த்தகம் எப்படி நடக்கிறது என்று புரியும்.வேல் எனப்படும் பிரேசிலின் இரும்புதாது வெட்டி எடுக்கும் கம்பெனி சீனாவை சேர்ந்த இரு வங்கிகளிடமிருந்து 1.23 பில்லியன் கடன் வாங்க உள்ளது. இந்த கடன் மூலம் அது 12 மிக பெரிய கார்கோ கப்பல்களை வாங்கும். அந்த கப்பல்கள் சீனாவில், சீன தொழிலாளிகளால் தயாரிக்க படும். அவ்வாறு வாங்கிய கப்பல் பிரேசிலில் உற்பத்தி செய்த இரும்பை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய உபயோக படுத்தபடும்.

தற்போது உலகளவில் டாலர் அடிப்படையில் நடக்கும் வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைத்து சீனா தன்னுடைய நாணயத்தின் அடிப்படையில் நடத்த முயற்சிகள் எடுக்க தொடங்கி உள்ளது. உலகளவில் பெருமளவில் மூல பொருட்களை உற்பத்தி செய்யும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளும், உலகளவில் உற்பத்தி தொழிலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவும் தன் வர்த்தகத்தை முழுமையாக டாலரில் நடத்தாமல் சீனாவினுடைய நாணயத்தில் நடத்தினால் அதன் விளைவு உலக பொருளாதாரத்தில் மிக பெரியதாக இருக்கும்


சீனாவின் உற்பத்தி துறை வளர்ச்சி பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய உற்பத்தி துறை தொழில் சீனாவுடன் போட்டி போட்டு கொண்டு வளர வேண்டிய நிலையில் உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு முக்கிய தேவை மனித உழைப்பு, மூல பொருட்கள் மற்றும் மின் மற்றும் எரிசக்தி. மனித உழைப்பு இந்தியா மற்றும் சீனாவில் எளிதாக கிடைக்கும். மின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா எவ்வாறு "தெளிவான" திட்டமிடலுடன் செயல் படுத்துதல் உள்ளது என்பது பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. உற்பத்தி தொழிலுக்கான அடிப்படை தேவையான் மூல பொருட்களை அடைய சீனா எவ்வாறு முயற்சி செய்கிறது என்று மேல் சொன்ன செய்தியில் பார்த்தோம். இந்தியா அது போன்ற பெரிய முயற்சிகளை எடுக்க வில்லை என்றால் வருங்காலத்தில் மூலபொருட்கள் பற்றாக்குறையால் அனைத்து தொழில்களும் சீனா நோக்கி செல்ல தொடங்கிவிடும்.ஏற்கனவே பல தொழில் துறைகளில் சீனா மூல பொருட்கள் சப்ளையை இந்தியாவிற்கு தடுப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.'

இந்தியாவில் தொழில்மயமாக்கள் அறைகுறையாக நடைபெற்று பின் மீண்டும் உற்பத்தி தொழிற்துறை நலிவடைந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். தொழில்மயமாக்கள் நடை பெரும் போது கிராமத்தில் உள்ள சிறு ,குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று நகர் நோக்கி தொழிற்சாலைகளில் வேலை தேடி வந்து இருப்பார்கள். விவசாய கூலி தொழிலாளர்களும் நகர் நோக்கி வந்திருப்பார்கள். இதனால் கிராமபுரங்களில் நில உடமையின் அளவு அதிகமாகி, விவசாயியின் கையிருப்பு நிலத்தின் அளவு அதிகமாகும். கூலி தொழிலாளர்கள் கிடைப்பதும் அரிதாகும். தற்போது தமிழக கிராமத்தில் அந்த நிலை வர தொடங்கை உள்ளது. அதனால் விவசாயம் இயந்திர மயமாகும். அங்கு தொழிலாலர்களின் தேவையும் இருக்காது.சில காலம் கழித்து தொழில்துறை நலிவடைந்து தொழிலாளிகள் மீண்டும் கிராமத்திற்கு விவசாயம் செய்ய சென்றாலும் அங்கு வழி இருக்காது.அதன் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.

ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களின் பெரும்பாலோனோரை தொழிற்துறைக்கு கொண்டு செல்வதன் மூலம் தான் இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும் என கூறி உள்ளார். தொழிற் துறை வளர்ச்சி பிற்காலத்தில் இந்தியாவில் நிலையாக இருக்க தேவையான மூல பொருட்கள் சப்ளை பற்றியோ , மின் மற்றும் எனர்ஜி தேவையை சரி செய்வது பற்றியோ அவர் தெளிவாக சிந்தித்து செயல் பட்டு கொண்டிருக்கிறாரா?

--

Tuesday, September 14, 2010

கம்யூனிசத்துக்கு சமாதி கட்டும் கியூபா?

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னும், சீனா சந்தை வழி பொருளாதாரத்துக்கு முழுமையாக திரும்பிய பின்னும் உலக கம்யூனிச இயக்கத்துக்கு ஒரு பெரும் பின்னடைவாக இருந்தது. அதை பயன் படுத்தி முழுமையான சந்தை பொருளாதாரத்தை நோக்கி சென்ற உலகுக்கு கடந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி அதிர்ச்சியாக இருந்தது. இது நாள் வரை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எடுத்து காட்டாக இருந்த கியூபா தற்போது கம்யூனிச பாதையை மாற்ற ஆரம்பித்து விட்டது.



சோவியத் யூனியன் போல் நடுவண் அரசு திட்டமிடல் செய்து தேவையான தொழில்களை அரசே தொடங்கி மக்களை அதில் வேலைக்கு அமர்த்தும் முறை கியூபாவில் இருந்தது. நாட்டின் தொழிற்துறையின் முழு கட்டுபாடும் அரசே கட்டு படுத்தியது. உலகில் சுகாதார வசதியில் வளர்ந்த நாடுகளை விட முன்னிலை பெற்றது.அமெரிக்கா கூட அந்த நாட்டிடமிருந்து கற்று கொள்ள வேண்டும் என்று மைக்கேல் மூர் தன்னுடைய சிக்கோ என்ற டாக்குமென்ட்ரியில் கூறி இருப்பார்.சோவியத் வீழ்ச்சிக்கு பின் அதற்கு சோவியத் யூனியனிலிருந்து கிடைத்த உதவிகள் நிறுத்த பட்டன. இரு ஆண்டுக்கு முன் பிடல் கேஸ்ட்ரோவின் சகோதரர் அதிகாரத்து வந்த பின் மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்ற தொடங்கின.கடந்த ஏப்ரல் மாதத்தில் முடி வெட்டும் கடைகள் பலவற்றை அரசு தன் கட்டு பாட்டிலிருந்து விளக்கி தொழிலாளர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டுறவிற்கு கொடுத்தது. விவசாய நிலங்கள் தனியார் வசம் ஒப்படைக்க தொடங்கியது.

கடந்த ஜூலை 26ம் நாள் கியூப புரட்சியின் நினைவு தினத்தில் காஸ்ட்ரோ பேசாத போதே பெரும் மாற்றம் நிகழ போகிறது என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன் காஸ்ட்ரோ கியூப கம்யூனிச முறை தோல்வி அடைந்து விட்டதாக கூறி பின்னர் அவ்வாறு கூறவில்லை என்றார். நேற்று கியூப அதிபர் கம்யூனிச மாதிரிக்கு முடிவு கட்டும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அரசு வேலையில் உள்ள 50,000 பேர் பணி நீக்கம் செய்ய படுவார்கள். அவர்கள் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது தொழிலாளிகள் நடத்த போகும் புதிய கூட்டுறவு தொழிற்துறையில் இணைந்து வேலை செய்யவேண்டும். அவர்களுக்கு அரசு தரும் இலவச உணவோ, போக்குவரத்து உதவியோ கிடைக்காது.

ஆனால் கியூபா முழுமையான சந்தை பொருளாதாரத்துக்கோ அல்லது மக்களாட்சிக்கோ போக போவது இல்லை. தற்போதைய செய்தி படி அது அரசு முழுமையாக கட்டு படுத்தும் தனியார் துறை மற்றும் கூட்டுறவு துறையை வெனிசூலாவின் சாவஸ் ஸ்டைலிலும், சீன வழி ஒற்றை கட்சி ஆட்சி முறையும் பின் பற்றபோவதாக தெரிகிறது.

ஆனால் இந்த முடிவு குறுகிய காலத்தில் அவசர அவசரமாக எடுக்க பட்டது அல்ல. கடந்த இரு வருடங்களாக திட்டமிட்டு எடுக்க பட்டது. எனவே வேலை இழக்கும் தொழிலாளர்கள் பாதிக்க படுவது குறைவாகவே இருக்கும்.


முழு சந்தை பொருளாதாரம் எவ்வாறு வசதியற்றவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை மறுக்கிறது என்று அமெரிக்காவின் அனுபவத்தில் பார்க்கிறோம்.வறுமை மிக மிக குறைவாக உள்ள அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்த முறை இந்தியாவில் நடமுறை படுத்த பட்டால்(தற்போது சிறிது சிறிதாக நடை முறை படுத்த பட்டு வருவது வேறு விஷயம்), அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதும் யூகிக்க முடிகிறது. அதே போல் அனைத்து வேலைகளையும் நடுவண் அரசின் மூலம் திட்டமிட்டு அரசே அனைத்து வேலைகளையும் செய்து கொள்வதும் நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை சோவியத்,(மாவோ கால) சீனா மற்றும் கியுபா போன்றவற்றில் பார்க்கிறோம். இனியும் UTOPIAN கம்யூனிச கொள்கையை கனவாக கொண்டு, கனவை நோக்கியே பயனிப்பதும் பயனில்லாதது.(நிச்சயம் முதலாளித்துவம் தன் நிஜ முகத்தை உலகெங்கும் காட்ட தொடங்கிய பின் அடுத்த cycleல் கம்யூனிசம் மீண்டும் வரும் என்பதும் நிஜம். ஆனால் அதற்காக காத்து கொண்டிருந்தால் தற்போதைய காலத்தில் ஒடுக்க பட்டவர்களை முன்னேற்ற எடுக்க கூடிய, நடைமுறை சாத்தியம் உள்ள வகைகளை பற்றி சிந்திக்க யாரும் இருக்க மாட்டார்கள்)
தற்போதைய சூழ்நிலையில் வசதி வாய்ப்பற்ற மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் அரசு கல்வி(இலவச கட்டணத்துடன் கூடிய அரசு கல்லூரிகள்), மருத்துவம்( தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் தாரை வாக்காமல் இலவச அரசு மருத்துவமனை) , முன்னேற்றக்கடன்( அரசு வங்கி மூலம் விவசாயம் மற்றும் சிறு தொழில்) தருவது மற்றும் அடைப்படை வசதிகளை செய்து தருவது போன்றவை இன்றி அமையாதவை.இவற்றை லாப நோக்குள்ள தனியார் வசம் முழுமையாக கொடுக்க முயற்சி செய்வது தவறானது ஆகும்.

அதே போல் தங்கு தடை இல்லாத சந்தை பொருளாதாரம் என்ற பெயரில் மக்களை தனியார் நிறுவங்களின் வேட்டை காடாக்கி அரசின் கட்டுபாட்டை முழுமையாக விளக்குவது என்பதும் மிக தவறாகும்.கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் பற்றி பேசி வந்த அமெரிக்காவே தற்போது அரசின் கட்டுபாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறி அதற்கான செயல்பாட்டிலும் இறங்கி உள்ளது.

தற்போதைய கியூபாவின் இந்த முடிவானது மக்கள் நலம் சார்ந்தது மட்டுமின்றி அனைத்து தொழில்களையும் அரசே எடுத்து நடத்தும் கம்யூனிசத்தின் தோல்வி மட்டும் தான். இதை உதாரணம் காட்டி ஒடுக்க பட்ட மக்களின் அடைப்படை நலனுக்காக அரசு நேரிடையாக மற்றும் மறைமுகமாக செய்து வரும் உதவிகளை முழுதும் நிறுத்த வேண்டும் என்ற கூக்குறல் எழ கூடும்.கூடிய விரைவில் ஊடகங்கிளில், கியூபாவின் இந்த செய்தியை மேற்கோள் காட்டி ஒபாமாவின் மக்கள் நல திட்டங்களை எதிர்த்து நிறைய கட்டுரைகளை காணலாம்.

--

Friday, September 10, 2010

திரைப்படம் - The Yes Men Fix The World (2009)

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம். போபால் விஷ வாயு விபத்து நடந்து 20ம் ஆண்டு நிறைவடையும் வேலை. விபத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கோ போதிய இழப்பீடு கிடைக்க வில்லை. இன்னும் பல்லாயிர கணக்கான மக்கள் தினந்தோறும் பலியாகி கொண்டும், பல வகை நோயினால் பாதிக்க பட்டு கொண்டும் உள்ளனர். விபத்தை உண்டாக்கிய தொழிற்சாலை இன்னும் விஷத்தை நிலத்தடி நீரிலும், மண்ணிலும் கக்கி கொண்டே இருக்கிறது. விபத்தில் பாதிக்க பட்டவர்கள் இழப்பீடுக்காக பல ஆண்டுகளாக போராடி கொண்டே இருந்த நேரம்.

அப்போது BBC தொலைகாட்சியில் DOW Chemicals கம்பெனியின் செய்தி தொடர்பாளர் தோன்றி DOW Chemicals போபால் விஷவாயு விபத்துக்கான பொறுப்பை ஏற்று $12 பில்லியன் பணத்தை விபத்தில் பாதிக்க பட்ட மக்களுக்காக கொடுக்க போகிறது என்றும் அவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் தொழிற்சாலையில் மீதமுள்ள விஷ கழிவுகளை அகற்ற ஒப்பு கொண்டதாக அறிவித்த உடன் உலகமே( DOW Chemicals பங்கு வைத்திருப்பவர்கள் தவிர) மகிழ்ச்சியில் ஆரவாரித்தது.




ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்களுக்கு பின் நீடிக்கவில்லை. பின்னர் தான் தெரிந்தது, அந்த அறிவிப்பை வெளியிட்டவர் DOW Chemicals கம்பெனிக்கு சம்பந்தமில்லாத போலி என்றும் போபால் விஷ வாயு விபத்தையும், அதில் பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்காததையும்,அந்த தொழிற்சாலையின் இன்றைய நிலையையும் உலக மீடியாவிற்கு வெளிச்சம் போட்டு காட்ட நடத்தபட்ட நாடகம் என்பது.

இதை திட்டமிட்டு நடத்தியவர்கள் Andy Bichlbaum மற்றும் Mike Bonanno. இவர்களுடைய வேலையே இதுபோல் லாப நோக்கை மட்டும் கொண்டு மக்கள் நலம் , அதிலும் ஏழை நாடுகளின் மக்கள் உயிரை கிள்ளு கீரையாக நினைத்து பேரழிவை ஏற்படுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் தடையில்லா சந்தையும், தனி மனிதனின் பேராசையும் தான் உலக முன்னேற்றத்துக்கு வழி என்று நினைத்து மக்கள் நலனில் கவலை படாத அரசாங்கங்களின் நிஜ முகத்தை உலக மக்கள் முன் காட்ட, பெரிய பன்னாட்டு கம்பெனிகள் அல்லது அரசின் பிரதிநிதிகள் என்று பொய்யாக வேடமணிந்து மிக பெரிய மீடியா அல்லது மிக பெரிய தொழிற் கருத்தரங்குகளுக்கு சென்று, உண்மையை நக்கலாக கூறி அதன் மூலம் நிதர்சனத்தை மீடியாவின் மூலம் மகக்ளிடம் கொண்டு செல்வது.இதையே தனது வேலையாக கொண்டு,உலகில் நல்ல மாற்றத்தை கொண்டு வர த்ங்களால் ஆன சிறிய முயற்சியை செய்கின்றனர்.

அவர்கள் நடத்திய திருவிளையாடல்கள் எலலாம் படத்துக்காக எழுத பட்ட கதையல்ல நிஜம்!

போபால் பிபீசி பேட்டி அவர்கள் நடத்திய திருவிளையாடள்களில் ஒன்று. இது போல் அவர்கள் நடத்திய பல நாடகங்களை தொகுத்து படமாக வெளியிட்டுள்ளனர். அந்த படம் தான் The Yes Men Fix the World (2009)

இது தான் அந்த படத்தின் டிரெயிலர்



இதை நடத்த அவர்கள் என்ற DowEthics பொய்யான வலை தளத்தை உருவாக்கி பல காலம் காத்திருந்தனர். அப்போது தான் பிபீசி தொலைகாட்சி நிறுவனம் அவர்களது வலை தளத்தை Dow Chemicals நிறுவனத்தின் உண்மையான வலைதளம் என்று நம்பி, போபால் விபத்தின் 20ஆவது ஆண்டு நிறைவின் போது, அவர்களை பேச அழைத்தது. அது நடந்த விதம் பற்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இங்கு போய் பாருங்கள்.

அவர்கள் செய்த வேறு சில திருவிளையாடல்கலையும் இந்த படத்தில் காட்டியுள்ளனர். அவற்றில் சில.

லண்டனில் நடந்த மற்றொரு கான்பிரன்ஸில் டௌ நிறுவன அதிகாரி போல் சென்றுள்ளனர். அங்கு டௌ நிறுவனம் புதிதாக கண்டு பிடித்துள்ளதாக கூறி Acceptable Risk Calculator என்ற ஒன்றை அறிமுக படுத்தினர். Acceptable Risk Calculator என்பது ஒரு புதிய பிராஜெக்டை தொடங்கும் போது, அதன் விளைவாக மனித உயிர்கள் பலியாக வாய்ப்பு இருந்தாலும் , லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்தால் எவ்வாறு ஏற்புடைய ரிஸ்க்கை கணக்கிடுவது என்பது பற்றியது.அதாவது எந்த பகுதியில் அந்த தொழிற்சாலையை கட்டலாம்(ஏழை மற்றும் வளரும் நாடுகளில்), எந்த மக்கள் இறந்தால் கம்பெனிக்கு பாதிப்பு ஏற்படுத்தாது போன்றவை பற்றியது.தங்க முலாம் பூசபட்டை எலும்புகூட்டை அதற்கு குறியாக காட்டி உலக மக்களின் கவனத்தை டௌ மருந்து கம்பெனியின் மீது விழ வைத்தனர்.

கனடாவில் 2007ம் ஆண்டு நடந்த Gas & Oil Exposition 2007 ல் அவர்கள் நடத்திய கூத்து தான் அற்புதமானது. இது எண்ணெய் கம்பெனிகள் சுற்றுபுற சூழல் பற்றி கவலை படாமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை உலகுக்கு காட்ட செய்த ஏற்பாடு.

Exxon Mobil என்ற மாபெரும் கம்பெனியின் முன்னாள் தலைவர் Lee Raymond, தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், அமெரிக்க அரசுக்கு பெட்ரோலிய கொள்கை பற்றி ஆலோசனை கூறும் National Petroleum Council என்ற அமைப்பின் தலைவரானார்.அவருக்கு பதிலாக அவரது ஆலோசகராக அந்த கான்பிரன்ஸில் முக்கிய பேச்சாளராக உள் நுழைந்தார் நமது ஹீரோ.NPC செய்து வரும் புதிய ஆராய்ச்சியின் விளைவாக வரும் புதிய கண்டுபிடிப்பை பற்றி அறிவிப்பு வரும் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்

மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் புதிய வகை எண்ணெய் விவீலியம் கண்டு பிடிக்க பட்டதாக அறிவித்தார். அது எதிலிருந்து எடுக்க பட்டது தெரியுமா? உலகில் மிக எளிதாக, மலிவாக கிடைக்கும் பொருளான மனித உடல் பகுதியிலிருந்து எடுக்கபட்டது. புவி வெப்பமாவதால் வருடந்தோறும் ஏழை நாடுகளில் பல்லாயிய கணக்கான மக்கள் சாவதால்,சாவிலிருந்தும் பணம் பண்ணுவதுதான் முதலாளித்துவத்தின் குறிக்கோள் என்று கூறி, அந்த உடலிலிருந்து எண்ணெய் எடுக்கும் புதிய தொழில் நுட்பத்தை உலகுக்கு காட்டி உலகெங்கிலும் அதிர்வலை ஏற்படுத்தினார். எக்சான் மொபில் கம்பெனியின் கழிவுகளை அகற்றி நோய் வந்து இறந்த தொழிலாளியின் உடல் பாகத்திலிருந்து மெழுகு வர்த்தியை தயாரித்து அதை அனைவரையும் ஏற்ற வைத்தார்.

காட்ரீனா புயலுக்கு பின் அங்கு வாழ்ந்த ஏழை மக்களின் வீடுகளை அபகரித்து ஏழைகளுக்கு அரசு கட்டி தரும் திட்டத்தை ஒழித்து பண முதலைகளை உள் கொண்டுவரும் அரசின் முயற்சியையும், நியூ ஆர்லியன்ஸ் மறுவாழ்வு என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டிற்கு நடக்கும் கண்காட்சிகளில் நடக்கும் கூத்தினை அவர்கள் வெளி கொண்ட விதம் பற்றியும் ,அவர்களாகவே வெளியிட்ட Newyork Times பத்திரிக்கை பிரதி பற்றியும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த படத்தின் ( உண்மையிலேய தான் நடத்திய திருவிளையாடல்கள்) மூலம் சந்தையில் அரசின் தலையீட்டின் அவசியத்தை அழகாக மக்கள் மனத்தில் பதிய வைத்திருக்கிறார்கள்.இந்த படம் சந்தை பொருளாதாரம் ஏற்படுத்தும் விளைவுகளை மிக நகைச்சுவையான முறையில் அழகாக எடுத்து காட்டுகிறது. விழிப்புணர்ச்சிக்கு இல்லை என்றாலும் கூட ஒரு நல்ல நகைச்சுவை படமாகவாவது கட்டயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.


இந்த படத்தின் நாயகர்கள் தற்போதும் Yes Lab என்ற பெயரில் லேப் நடத்தி வருகிறார்கள். மகக்ளை பலிகடா ஆக்கும் பன்னாட்டு/ அரசு நிறுவங்களின் தோலுரித்து காட்ட நினைக்கும் தன்னார்வ நிறுவனக்கள், இந்த லேபை அனுகினால் அவர்கள் நல்ல ஐடியா கொடுப்பதுடன் அதை நடத்தி முடிக்க திட்டமிட்டு, அது முழுதும் கூட இருந்து நடத்தி முடிப்பார்கள். சமுதார நலனுக்காக அவர்கள் நடத்தும் நாடகத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அவர்களை தொடர்பு கொண்டால், நீங்கள் இருக்கும் இடத்தின் அருகாமையில் அவர்கள் எதாவது நாடகம் நடத்தினால் உங்களை பயன் படுத்தி கொள்வார்கள்.

பின் குறிப்பு: முதலாளிகளை எதிர்த்து இந்தியாவில் இது போல் செய்தால், அதில் கலந்து கொள்பவர்களின் நிலை என்னவாகும் என்பது அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

--

--

Monday, September 06, 2010

கிழக்கிந்திய கம்பெனி 6 - இங்கிலாந்தில் கி.இ.கம்பெனி



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்



இது வரை இந்தியாவில் கிழக்கு இந்திய கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்த்தோம். இப்பதிவில் இங்கிலாந்தில் கி.இ.கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம்.

கி.இ.கம்பெனி என்பது வியாபாரிகள், வங்கி முதலாளிகள், அதிகார இடைதரகர்கள் மற்றும் ஒரு சில பணகாரர்களின் கூட்டணியால் ஆரம்பிக்க பட்டது. தற்போதுள்ள பன்னாட்டு கம்பெனியினரை போலவே அதுவும் லஞ்சங்களை இங்கிலாந்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு வாரி வழங்குவதில் கில்லாடிகள். இந்நிறுவனம் ஆரம்பிக்க பட்ட சில வருடங்களுக்கு பிறகு(1693) அது கணக்கில் காட்டி அரசியல்வாதிகளுக்கு அன்பளிப்பாக(!) கொடுத்த பணம் 100000 பவுண்டை தாண்டியது, இந்த பணத்தின் மதிப்பு அந்த காலத்தில் மிக அதிகமானது.

ஆரம்ப காலத்தில் கம்பெனியின் வருமானம் இந்தியாவிலிருந்து நடை பெற்ற வர்த்தகம் மூலம் தான் கிடைத்தது. இங்கிலாந்து அரசு கிழக்கிந்திய தீவுகளுக்கான வர்த்தகத்துக்கு
கி.இ.கம்பெனிக்கு ஏகபோக உரிமையை கொடுத்து இருந்தனர். இது தான் கம்பெனியின் லாபத்துக்கான துருப்பு சீட்டு. இந்த ஏக போக உரிமையை நிலை நிறுத்தி கொள்ள அரசியல்வாதிகளுக்கு பெருமலவில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் மட்டுமல்ல. இங்கிலாந்து மத்திய வங்கிக்கு பெருமளவில் கடனும் கொடுத்து வந்தது. இங்கிலாந்து அரசு நடத்தும் போர்களுக்கும் இங்கிலாந்து மத்திய வங்கி பணம் கொடுக்கும், அந்த பணத்தின் ஒரு பகுதி கி.இ.கம்பெனி கொடுத்து வந்தது.

கி.இ.கம்பெனியின் வளர்ச்சியால் அதில் பங்கு தாரர்களாக இருந்த பல பேர் பெரும் பணக்காரர்களாக மாறினர். இது அப்போது பரம்பரை பணக்காரர்களாக இருந்த ஒரு சில செல்வந்தர்களுக்கு பிடிக்க வில்லை. அது மட்டுமன்றி இங்கிலாந்தில் இருந்த நெசவு தொழில் லாபியும் கி.இ.கபெனிக்கு எதிரியாக இருந்தது. இவர்களின் வற்புறுத்தலால் இங்கிலாந்து அரசு கி.இ.கம்பெனியின் ஏக போக உரிமையை உடைக்க 1698 ல் புதிய கம்பெனியை தொடங்கியது. தற்போதைய பன்னாட்டு கம்பெனியினரை போன்றே வலுவான நிதி நிலையில் இருந்த கி.இ.கம்பெனியின் உரிமையாளர்கள் புதிய கம்பெனியின் பங்குகளை வாங்கி தள்ளினர். அந்த கம்பெனிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தனர். இருந்தாலும் அந்த புதிய கம்பெனி கி.இ.கம்பெனியுடன் போட்டி போட்டு சில காலம் இருந்தது. மீண்டும் பெரிய அளவு மறைமுக வேலைகளில் இறங்கிய கி.இ.கம்பெனியினர், இங்கிலாந்து அரசிடம் 3200000 பவுண்டுகள் கொடுத்து புதிய கம்பெனியை தன்னுடன் இணைத்து கொண்டனர். மேற் சொன்ன பணம் 3 ஆண்டுகளுக்கு கிழக்கிந்திய தீவுகளில் ஏக போக உரிமையுடன் வியாபாரம் செய்ய பொருந்தும். அதற்கப்புறம் ஒவ்வொரு ஆண்டும் பெருந்தொகையை அரசுக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

தற்போதைய பங்கு வர்த்தகம் போலவே அப்போதும் இருந்தது. கி.இ.கம்பெனியினர் ஒவ்வொரு முறை போரில் வெற்றி பெரும் போதும் இங்கிலாந்தில் அதன் பங்கின் மதிப்பு பெருமளவு உயரும். உதாரனமாக பிரான்சை வென்ற போது அதன் மதிப்பு 263 பவுண்டை தொட்டது. அது கொடுத்த டிவிடெண்ட் மதிப்பும் 12.5 சதவிதத்தை தாண்டியது. வங்காளத்தை வென்றவுடன் அதன் மதிப்பு இன்னும் கூடியது.ஒரு புறம் இந்தியாவில் இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி தன் லாபத்தை அதிக படுத்தியது. மறுபுறம் இங்கிலாந்தில் தன் பங்கின் மதிப்பு விடு விடுவென வேகமாக உயர்ந்தது.

கம்பெனியின் லாபம் அதிகமானவுடன் கம்பெனியின் உரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட்டு 1780ல் சுமார் 10 சதவித இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர்கள் கம்பெனி சார்ந்தவர்களாக
இருந்தனர்.கி.இ.கம்பெனியின் அதிகார வளர்ச்சி போலவே அதன் எதிரிகளின் வளர்ச்சியும் இருந்து. கி.இ.கம்பெனி லாபியை உடைக்க பல பேர் பல காலம் கடுமையாக போராடினர். 1780களில் கி.இ.கம்பெனியின் உரிமையை பார்லிமெண்ட் அமைக்கும் கமிட்டியிடம் கொண்டு வர முயன்று வெற்றி பெறும் நிலையில் இருந்த போது கி.இ.கம்பெனிக்கு அதிகார வர்க்கத்திடம் இருந்த சக்தி மூலம் ஆட்சியையே கலைத்து விட்டனர்.

ஆனால் கி.இ.கம்பெனியின் மீதான எதிர்ப்பு மேன் மேலும் அதற்கு பின்னர் அதிகமானது.1813ம் ஆண்டு கொண்டு வரபட்ட புதிய சட்டம் மூலம் இந்திய நாட்டை ஆளும் தலைமை பொறுப்பு இங்கிலாந்து மன்னரிடம் கொடுக்கபட்டது. இந்தியாவிற்கு இடையேயான வியாபார ஏக போக உரிமையும் பறிக்க பட்டது. 1833ம் ஆண்டு முதல் அதன் வியாபர உரிமையும் ரத்து செய்யபட்டது, இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளும் பொறுப்பு மட்டும் கொடுக்க பட்டது. முதல் இந்திய சுதந்திர போருக்கு பின் இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுபாட்டுக்குள் இந்தியா வந்தது.

சஞ்சீவ் மேத்தா என்ற இங்கிலாந்து வாழ் இந்தியர் தற்போது கி.இ.கம்பெனியை வாங்கி உள்ளார்.

கி.இ.கம்பெனிக்கும் இந்தியாவிற்குமான உறவில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயங்கள் சில .

1. மதவாதிகளுக்கும் அதற்கும் உள்ள உறவு. அந்த காலத்தில் போர்ச்சுகீசியர்கள் போன்ற ஐரோப்பியர்கள் தாங்கள் சென்ற காலனி நாடுகளில் எல்லாம் தங்களுடைய மதத்தை(கிறித்துவம்), முக்கியமாக தங்கள் மதத்தின் பிரிவை பின் பற்றாத வேற்று மதம் மற்றும் தன் மதத்தின் வேற்று பிரிவை சார்ந்த மக்களை கூட்டம் கூட்டமாக எரித்து (inquisition) கொன்ற காலம் அது. ஆனால் கி.இ.கம்பெனியோ தங்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் கிறித்துவ மிஷினரிகளின் செயல்பாட்டுக்கு தடை விதித்திருந்தது. இது உண்மையிலேயே நம்ப முடியாத அதிசயம்.ஏனென்றால் அப்போது மத்தத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையேயான உறவு மிக நெருக்கமானது. ஆனால் மக்களிடையே தங்கள் மதத்தை புகுத்துவதால் மத ரீதியான பிணக்கு அதிகரிக்கும் என்று மிஷனரிகளை அனுமதிக்கவில்லை. ஆனால் வியாபாரிகள் போர்வையில் மத போதகர்கள் இங்கு வந்திருந்ததும், கி.இ.கம்பெனியில் மத நம்பிக்கை அதிகம் கொண்டிருந்த அதிகாரிகள் அவர்களை அனுமதித்ததும் உண்மை. 1813 ல் இங்கிலாந்து அரசு கட்டயமாக மிஷனரிகளை அனுமதிக்க ஆணை பிறப்பித்தது. அதன் பின் புற்றீசல் போல் வந்த மிஷனரிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் 1857ல் முதல் இந்திய சுதந்திர போர் நடை பெற ஒரு காரணியாக ஆயிற்று.ஆனால் அதற்கு பின் கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவின் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளவிட முடியாது என்பதும் குறிப்பிட தக்கது.

2. கி.இ.கம்பெனியின் கால கட்டத்தில் இங்கிலாந்தின் மேற்கேயும் இது போலவே வியாபரம் நடந்தது. ஆனால் அங்கு வியாபாரம் நடத்தியவர்களின் முக்கிய குறிக்கோள் மக்களை அடிமைகளாக பிடித்து விற்று லாபம் சம்பாதிப்பது. ஆனால் கி.இ.கம்பெனியோ அது போன்ற அடிமை வியாபாரத்தை இந்தியாவில் செய்ய்வில்லை(வேறு சில தீவுகளில் செய்தது உண்மை).

3. கி.இ.கம்பெனி தன் லாபத்துக்காக இங்கிலாந்து நெசவு தொழிலாளிகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய துணிகளை பெருமளவு ஏற்றுமதி செய்தது. இதனால் இந்திய தொழில் துறையும் ஆரம்ப காலங்களில் பெருமளவு விரிவடைந்தது

கி.இ.கம்பெனியின் செயல்பாட்டிற்கும் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளின் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன என்று யோசிப்பதை இந்த பதிவை படிக்கும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

--

Sunday, August 29, 2010

தர்மபுரி பஸ் எரிப்பு- அன்று கோவை பல்கலையில் நடந்த போராட்டம்


வழக்கமான நான் இடும் பதிவை விட வேறுபட்ட பதிவு இது. தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகளை அநியாயமாக உய்ரோடு கொளுத்தி எரிய செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த செய்தி. அந்த நிகழ்வு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் அந்த நிகழ்ச்சி நடந்த அன்று கோவை வேளாண் பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய செய்தியும் அதை எவ்வாறு நடந்தது என்பதும் ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும். அது பற்றி பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அந்த போரட்டத்தில் பங்கு பெற்றவன் என்பதாலும் அப்போது நடந்த செய்திகள் பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன். இது எந்த கட்சியையும் குறை கூற எழுதபட்டதல்ல. ஆனால் உண்மையில் நடந்த செய்தி

இந்த துயர செய்தி நடந்து பல காலங்கள் ஆகி விட்டதால், அன்று நடந்த ஒரு சில நிகழ்வுகள் மறந்து இருக்கவும் ஒரு சில பிழைகள் இருக்கவும் சாத்தியகூறு உள்ளது. ஆனால்
தற்காலத்தில் நடக்கும் மாணவர் போராட்டம் எவ்வாறு தலைமை, வழி நடத்தல் மற்றும் தெளிவான குறிக்கோள் இல்லாமல் நடை பெறுகிறது என்றும் எவ்வாறு அரசியல் கட்சிகள் குறுக்கிடுகின்றன என்றும் அதிகாரம் எப்படி பயன் படுத்தபடுகின்றன என்பது பற்றியும்
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.

பிப்ரவரி 2ம் நாள் 2000ம் ஆண்டு அந்த துயர நிகழ்ச்சி நடந்த போது கோவை வேளாண் பல்கலையில் அனைத்து இளம் அறிவியற் (Bachelors) படிக்கும் மாணவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கல்லூரியை விட்டு வெளியே சென்றிருந்தனர். எனவே அங்கு இருந்தது
முதுகலை மாணவர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் தான்.மாணவர்கள் மத்தியில் மாபெரும் துயரமும் மறுபுறம் கொந்தளிப்பும் இருந்தது. ஏதாவது போராட வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் இந்த கொடுஞ்செயலை நிறைவேற்றியவர்களோ அப்போதைய எதிர்
கட்சியினர். எனவே ஆளுங்கட்சி நடைவடிக்கை எடுக்க போவது நிச்சயம். அது மட்டுமன்றி போராட்டம் என்று போராடி என்ன கோரிக்கையை வைப்பது? ஆனாலும் உணர்வு ரீதியாக கொந்தளித்திருந்த மாணவர்கள் நீதி கேட்டு ஏதாவது போராட வேண்டும் என்ற வெறியில் இருந்தனர். மாணவர்கள் அனைவரும் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள்.

ஆனால் போராட்டத்தை தலைமை ஏற்று, நூதனமான முறையில் வழி நடுத்தும் அளவிற்கு திறமை வாய்ந்த மாணவர்கள் யாரும் இல்லை. இந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது முழுக்க முழுக்க மாணவர்கள் தான். ஆனால் அப்போது என்ன
கோரிக்கைகளை வைப்பது என்று முடிவாக இல்லை. அந்த நேரத்தில் தான் பெரும்பாலான மாணவர்கள் அறியாமலேயே ஒரு நிகழ்வு நடந்தது. மணவர்களில் ஒரு சிலர் கம்யூனிச கட்சிகளுடன் தொடர்பு இருந்தது(அந்த மாணவர்கள் போராட்ட களத்தில் முன்னனியில் இல்லை என்பது வேறு விஷயம்). அந்த மாணவர்களுக்கு கம்யூனிச மாணவர்கள் அமைப்பிலிருந்து தொலைபேசி வந்தது. அப்போது கை தொலைபேசி எல்லாம் இல்லை. மாணவர்களை தொடர்வு கொள்ள ஒரே வழி விடுதியில் இருக்கும் பொது தொலைபேசி தான். விடுதி பொது தொலை பேசி மூலம் மாணவர்களை அவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் விடுதி தொலைபேசி முழுவது அரசாங்கத்தால் ஒட்டு கேட்க பட்டது அவர்களுக்கு அப்போது தெரியாது.

அப்போது கம்யூனிஸ்டு கட்சி அ.தி.மு.க வுனருடன் கூட்டில் இருந்தனர். அது மட்டுமன்றி தமிழக சட்டமன்றத்திற்கான இடை தேர்தல் அப்போது நடை பெற இருந்த சமயம். தர்மபுரி சம்பவத்தால் மக்களிடம் அதிமுக எதிர்ப்பு அலை பரவ தொடங்கி இருந்தது. அந்த எதிர்ப்பு அலையை எப்படியாவது தணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர் எதிர்கட்சி கூட்டணியினர். அதனால் மிக பெரிய அளவில் மாணவர்கள் போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்த எதிர்ப்பு அலையை ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பியோ அல்லது
இடைதேர்தலை சிறிது காலம் தள்ளி போடவைப்பதோ அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது.மேலும் பஸ் எரிப்பு விசாரனையை CBI வசம் ஒப்ப்டைக்க வேண்டும் போன்ற கோரிகைகளும் இருந்தது. ஆனால் கம்யூனிஸ்டுகள் மாணவர்களிடையே தொடர்பு
கொண்ட செய்தியை அறிந்தவுடன் ஆளும் அரசு தரப்பினர் உஷாராக ஆகினர். அது மட்டுமன்றி மாணவர் போராட்டமே எதிர் கட்சியினரின் தூண்டுதல் பேரில் தான் நடக்க உள்ளதோ என்ற சந்தேகம் ஆளும் தரப்பினரிடம் பரவ தொடங்கியது.

வழக்கமான மாணவர் போராட்டங்கள் எதிர் நோக்கும் அத்தனை பிரச்சனைகளையும் இந்த போராட்டம் எதிர் கொண்டது. கல்லூரிக்கு கால வரையற்ற விடுமுறை விட்டு கல்லூரி விடுதியிலுருந்து வலுகட்டாயாமாக மாணவர்கள் வெளியேற்ற பட்டனர்.உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் கூட மறுக்க பட்டன. (அப்போதைய விடுதி வார்டன் மிகவும் நல்ல மனிதர் என்பதால் சில உதவிகளை செய்தார்) அப்போது போராட்டத்தில் ஈடுபட்டது முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என்பதால் அவர்களுடைய ஆராய்ச்சிக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க பட்டு போராட்டத்தை கைவிட அறிவுருத்தபட்டனர்.கல்லூரி எங்கும் போலீஸ்
குவிக்க பட்டு தீயணைப்பு வண்டி என அனைத்தும் கல்லூரியை சுற்றி நிறுத்த பட்டது.பல்கலையின் கதவுகள் அனைத்தும் மூட பட்டு அதை சுற்றியும் பல்லாயிரகணக்கான போலீசார் குவிக்க பட்டனர். வெளியிலிருந்து எந்த மாணவர்களோ அல்லது பொது மக்களோ
பல்கலை கழகத்தின் உள்வர தடை விதிக்க பட்டது பல்கலை கழகம் இருந்த தெருவே போலிசாரால் மறிக்க பட்டது. இதன் மூலம் பிற கல்லூரி மாணவர்களோ அல்லது மாணவர் அமைப்புகளோ போராடத்தில் ஈடுபடும் மாணவர்களை தொடர்பு கொள்வது தடுக்க பட்டது.கல்லூரி எங்கிலும் ஒரு சில புது முகங்கள் உலவ ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் உளவு துறையை சேர்ந்தவர்கள். மாணவர்கள் அவர்களை ஒவ்வொருவராக விரட்டி அடித்து கொண்டு இருந்தார்கள்

இனி மாணவர்கள் பக்கம் வருவோம். போராட்டம் ஆரம்பித்தாகி விட்டது. இனி கோரிக்கைகளை தொகுக்க வேண்டுமே. போராட்டத்திற்கான கோரிக்கைகள் பற்றி மாணவர்களிடையே விவாதிக்க பட்டது. ஒரு புறம் மாணவர்கள்(முக்கியமாக மாணவிகள்) உணர்ச்சி வசத்தில் இருந்தனர். மறுபுறம் எதிர்கட்சி சார்பு கொண்ட மாணவர்களோ மாணவர்களின் இந்த மனநிலையை நன்கு பயன் படுத்த தொடங்கினர். ஒரு சிலர் இடை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். ஒரு மாணவர் முதல்வர் நேராக கோவை பல்கலை கழகத்திற்கு வந்து போராட்ட மாணவர்களிடம் நேரிடையாக பேச வேண்டும் என்றார். (அப்போது முதல்வன் திரைப்டம் வந்த சமயம் என்று நினைக்கிறேன்). அது நடக்கும் விஷயமா என்று ஒரு சிலர் கேட்டவுடன், கட்சி காரர்களின் திருமண விழாவுக்கு வரும் முதல்வர் இதற்கு ஏன் வர கூடாது? என்றார். பிறகு அது போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக வைக்க பட்டது. முதல்வர் வந்து நேரிடையாக பேசும் வரை போராட வேண்டும் என்று கோரினர்.இறந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், இந்த பிரச்ச்னையை தேர்தலுக்கு பயன் படுத்த கூடாது(அவ்வாறு பயன் படுத்தினால் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது மாணவர்களை கொன்று பிரச்ச்னையாக்க முயல்வார்கள் என்ற சந்தேகத்தால்), மாணவர்கள் மேல் தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் வேண்டும், நடு நிலையான விசாரணை வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைக்க பட்டன.அது தவிர பலகலை கழகம் சார்ந்த பொதுவான கோரிக்கைகளும் இருந்தது. முதல்வர் நேரில் வர வேண்டும் என்பது தவிர மற்ற கோரிக்கைகள் பற்றி அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருந்தனர்.

ஆனால் முதல்வர் நேரில் வர வேண்டும் என்ற கோரிக்கையால் போராட்டம் இழுத்து கொண்டே சென்றது. அப்போது த.மா.க மற்றும் பிற கட்சியினரும் இதை பயன் படுத்த முனைந்தனர். த.மா.கவின் உள்ளூர் தலைவர் மூலம் மாணவர்கள் ஆமோதித்தால் மூப்பனார் உடனடியாக மாணவர்களை சந்திக்க வர தயாராயிருப்பதாக் தெரிவிக்க பட்டது. மாணவர்கள் இதை ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர். அது மட்டுமன்றி ஒரு சில உள்ளுர் வாரிசு அரசியல்வாதிகள் இப்பிரச்ச்னைக்குள் நுழைந்து சமரசம் செய்து தன் நிலையை உயர்த்தி கொள்ள பார்த்தனர். ஆனால் மணவர்கள் அதற்கும் ஒத்து கொள்ளவில்லை.

அப்போதைய துணைவேந்தர் கண்ணையன் பிரச்ச்னையை தீர்க்க கடுமையாக முயற்சி செய்தாலும், அவர் சசிகலா சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆளும் கட்சிக்கு அவர் மேலும் சிறிய சந்தேகம் இருந்ததாக தெரிகிறது.அப்போது தீவிரமாக போரட வேண்டும் என்பதில் மாணவர்களை விட மாணவிகள் தீவிரமாக இருந்தனர்.போராட்டம் அப்படியே சென்று கொண்டு இருந்த போது கடைசியாக மாணவர்களில் ஒரு 10 பேரை தேர்ந்து எடுத்து அவர்கள் துணைவேந்தரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.துணைவேந்தருடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு அந்த மாணவர்கள் குழு சனி ஞாயிறு விடுமுறைக்கு பின் முதல்வரை சென்னை கோட்டையில் சந்திப்பது என முடிவானது.பிறகு தான் பிரச்சனைகள் பின் புறமாக வர தொடங்கின. முதல்வரை சந்திக்க சென்ற 10 மாணவர்கள் வீட்டு விலாசமும் காவல் துறையினரால் சேகரிக்க பட்டு அனைவரின் வீட்டுக்கும் போலீசார் நேரிடையாக சென்றனர். மாணவர்களின் பெற்றோரிடம் போலீசார் நேரிடையாக அழுத்தம் கொடுக்க தொடங்கினர். போராட்டத்தை உடனடியாக முடிக்கவில்லை என்றால் ஏற்பட போகும் பின் விளைவுகளை(மிரட்டல்?) அவர்களிடம் சொன்னார்கள். அதன் விளைவு பெரும்பாலான பெற்றோர்கள் உடனடியாக கோவை கல்லூரி விடுதிக்கே வந்து மாணவர்கள் போராட்டத்தை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க சொல்லி வற்புறுத்தினார்கள்.

பிறகு மாணவர்கள் குழு தனி வேனில் சென்னை நோக்கி சென்றது. முன்புறம் பின் புறம் காவல் துறை பாதுகாப்பு வாகனங்களோடு வேறு யாரும் மாணவர்களை இடையில் சந்திக்காத படி வாகனம் சென்னை சென்றது. பேச்சி வார்த்தையின் போது மாணவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்று கொள்ளபட்டன அல்லது பரிசீலனை செய்வதாக ஒத்து கொள்ள பட்டன. மாணவர்கள் இந்த பிரச்சனையை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்த கூடாது என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்த போது அவர் கூறியது-

நாங்கள் சாதனைகளை சொல்லி தான் ஓட்டு வாங்குவோமே தவிர
வேதனைகளை சொல்லி ஓட்டு வாங்க மாட்டோம்

இறந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக கூறிய அரசு அதை நிறைவேற்றவும் செய்தது.

இந்த சம்பவத்திலேயே மிகவும் சோகமான செய்திகள் சில.

தர்மபுரியில் பஸ்ஸில் மாணவிகள் எரிந்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர , யாருமே காப்பாற்ற முன்வரவே இல்லை. மனித நேயம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

மேலும் இந்த நிகழ்ச்சியை மூவர் இறந்த செய்தியாகவே பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அந்த பஸ்ஸில் இருந்த அனைத்து மாணவிகளையும் முழுவதுமாக எரிப்பதே இந்த செயலை நடத்தியவர்களின் நோக்கம். பஸ்ஸில் பின் புறம் முழுவதும் மாணவிகளின் பெட்டிகள் இருந்ததால் பின் புற கதவை திறக்க வழியே இல்லை. வன்முறை கும்பலோ பஸ்ஸின் முன் வாசம் முழுவதும் பெட்ரோலை ஊற்றி எறிய விட்டு விட்டதால் முன் வாசல் வழியேயும் தப்ப வழி இல்லை. அப்போது அடுத்த பஸ்ஸில் இருந்த வேளாண் கல்லூரி மாணவர்களின் துணிச்ச்லான முயற்சியால் தான் மற்ற மாணவிகளை காப்பாற்ற முடிந்தது. பின் கதவின் கண்ணாடியை உடைக்க கூட அப்பகுதி பொது மக்களிடமிருந்து அவர்களுக்க உதவி கிடைக்க வில்லை.அந்த மாணவர்களின் துணிச்சலையும் முயற்சியையும் அளவிடவே முடியாது.

பேருந்தில் தர்மபுரி அருகே சென்று கொண்டு இருந்த போது ஜெயலலிதாவின் கோர்ட் தீர்ப்பு பிரச்சனை பற்றி தெரிந்தவுடன் அந்த வாகன ஓட்டுனர் பாதுகாப்பான பகுதியில் நிறுத்த வேண்டும் என்பதால் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் நிறுத்தினார்.கலெக்டர்
அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தினாலும் பஸ் முழுமையாக கருகி எரியும் வரை தீயணைப்பு வண்டி அங்கு வரவே இல்லை.

கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை ஒரு பஸ்ஸிலும் மாணவிகளை ஒரு பஸ்ஸிலும் அமர்த்தி அழைத்து சென்றுள்ளனர். மாணவர்களுக்கு உள்ள maturityகூட ஆசிரியர்களுக்கு இல்லாதது கொடுமை. மாணவ மாணவிகள் என்று பிரிக்காமல் பேட்ச் வாரியாக பிரித்து
இருந்தால் அந்த பஸ்ஸின் உள் இருந்திருக்க கூடிய மாணவிகளை மாணவர்கள் நிச்சயம் முழுமையாக காப்பாற்றி இருப்பார்கள்.

அப்போது போலீசார் நடந்து கொண்ட விதம் கொடுமையிலும் கொடுமை.கதறிய வேளாண் கல்லூரி மாணவர்களை மிரட்டிய சம்பவம் கூட நடந்துள்ளது.
அந்த மாணவர்கள் கூறிய ஒரு சில போலீஸ் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கபட்டது. ஆனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தனரா என்று தெரியவில்லை.


கோர்ட்டில் வன்முறை கும்பலின் பலவகை மிரட்டலையும் மீறி தைரியமாக சாட்சி சொன்ன பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் நெஞ்சுரம் அதசயிக்க தக்கது.

அதன் பிறகு இறந்த குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல பல்கலை கழகம் சார்பில் சென்ற குழுவில் நாமக்கல்லை சேர்ந்த மாணவியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். தன் மகளை எறியும் தீயில் இழந்த அந்த குடும்பத்தினரின் கதறல் மிகவும் கொடுமையாக இருந்தது.

இந்த போராட்டத்தின் விளைவாக முதல்வருக்கு கோவை வேளாண் பல்கலை கழகம் மேல் ஏற்பட்ட கோபத்தை தவிர்க்க, புதிதாக கட்டபட்ட பட்டமளிப்பு விழா கட்டிடத்துக்கு "கலைஞர் அரங்கம்" என்று பெயர் வைக்க பட்டது. கோவை வேளாண் பல்கலைகழகத்தின்
மேல் ஜெயலலிதாவுக்கு இருந்த கோபத்தை அகற்ற மகராசி சிலை( மக - ராசி- ஜெயலலிதா மக ராசியை சேர்ந்தவர்) வைக்க பட்டது.

இந்த பதிவை எழுதி முடிக்கும் போது அந்த கொடும்பாவிகளுக்கான தூக்கு தண்டனை உறுதி செய்யபட்ட செய்தி வந்துள்ளது. நீதி இன்னும் இந்தியாவில் முழுமையாக சாகவில்லை!

--

Wednesday, August 25, 2010

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas) 2

பல பெரிய சூதாட்ட விடுதிகள் நகரத்தை 'Theme' ஆக கொண்டன. உதாரணமாக நியூயார்க் விடுதியின் வெளியே பெரிய சுதந்திர தேவியின் சிலையும், புரூக்ளீன் பாலத்தின் அமைப்பும் இருக்கும். இந்த விடுதியை சுற்றி அமைக்க பட்டுள்ள சாகச ரயிலில் (Train Ride) பயணிப்பபவர்களை பார்த்தாலே அடி வயிறு கலக்கும்.



பாரீஸ் விடுதி ஈபில் கோபுரத்துடன் வடிவமைக்க பட்டுள்ளது. அங்கு பணம் செலுத்தி கோபுரத்தின் உயரத்திற்கு சென்று வேகாஸின் அழகை கண்டுகளிக்களாம்.



வெனிஸ், பாரிஸ் போன்ற விடுதிகளின் உள்ளமைப்பு அந்நகரங்களின் தெருக்களை போலவே வடிவமைக்க பட்டுள்ளதால் அந்த நகரங்களிலே இருப்பது போன்ற உணர்வு உண்டாகும். வெனிஸ் விடுதியில் உண்மையான வெனிஸில் இருப்பது போல் படகு சவாரியும் உண்டு.அந்த விடுதிகளின் உள் வேலைபாடுகளும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் காணபடும்.



பெலாஜியோ விடுதி நீறூற்றும் மிராஜ் விடுதி எரிமலையும் காண்பவர்களை திகைக்க வைப்பவை. முக்கியமாக பெலாஜியோ நீறூற்றை ஈபில் கோபுர உயரத்திலிருந்து பார்த்தால் மிக அழகாக இருக்கும்.



அது தவிர சர்க்கஸ் சர்க்கஸ் போன்ற பெரிய விடுதிகளும் உள்ளன. கடைசியாக உள்ள விடுதி ஸ்டேரேட்டோஸ்பியர். இதை ஸ்டிரேட்டோ 'FEAR' என்றே கூறலாம். கோபுர வடிவில் உள்ள இந்த விடுதியின் 103ம் மாடிக்கு(1149 அடி உயரம்) சென்று வெளியே பார்த்தால் ஒட்டு மொத்த லாஸ்வேகாஸும் தெரியும். அங்கு இருக்கும் ரைடுகள் தான் மிகவும் மயிர் கூச்செரிக்க வைப்பவை. எத்தனையோ ராட்டினம் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு உள்ள ராட்டினமோ கட்டிடத்தை விட்டு வெளியே வந்து அதல பாதாளத்தை பார்க்க வத்து சுழல கூடியவை.



அதே போல் இங்கு உள்ள கார் ரைடு 1159 அடி உயரத்தில் பூமியை பார்ப்பது போல் சிறிது தூரம் கீழாக பயனித்து , அந்த உயரத்தில் கீழி நோக்கி காட்டிய படி சிறிது நேரம் வைத்திருக்கும்.



அது போல் மற்றொன்றில் கண்ணாடி லிப்டில் இருந்தவாறு அந்த உயரத்தில் மிக வேகமாக மேலும் கீழும் செல்லும். தற்போது புதிதாக ஒரு ரைடு வந்துள்ளது. அதன் படி மக்களை ஒரு கொக்கியில் கட்டிவிட்டு கயிறு கட்டி 1000 அடி உயரத்திலிருந்து தள்ளி விட்டு விடுவார்கள்! லாஸ் வேகாஸ் நகரின் நகர் பகுதியான 'Freemont Street' ல் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அங்கு தெருவில் நடக்கும் ஒலி-ஒளி காட்சி பிரசித்தி பெற்றது.



லாஸ் வேகாஸ் அருகில் உள்ள பகுதிகள் என்று பார்த்தால் கீழ்கண்டவற்றை சொல்லலாம்.

1.ஈதல் சாக்லேட் பாக்டரியில் சாக்லேட் செய்வதை நேரடியாக பார்க்கலாம்.



2. ஹூவர் அணைக்கட்டு 1 மணி நேர பயணத்தில் உள்ளது.



3. அங்கிருந்து கிராண்ட் கென்யான் செல்லலாம். கிராண்ட் கென்யானின் Sky Walk ம் மேற்கு பகுதியும் அருகாமையில் உள்ளது. தெற்கு பகுதியை சென்றடைய நிறைய நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் அங்கிருந்து தான் கிராண்ட் கென்யானின் உண்மையான அழகை கண்டு களிக்கலாம். Sky Walk என்ற பகுதியில் கிராண்ட் கென்யான் பள்ளதாக்கின் ஆழமான பகுதியில் கண்ணாடியாலான ஒரு நடை பாதையை அதள பாதாளத்தின் மேல் கட்டி உள்ளனர். அங்கிருந்து கீழே பார்த்தால் ????







இந்த புகைபடத்தை பார்த்தால் ஜீன்ஸ் படத்தின் "எனக்கே எனக்கா" பாட்டு ஜாபகம் வருகிறதா?

அடுத்த பகுதியில் லாஸ் வேகாஸின் 'Trade Mark'குகளான சூதாட்டம்,மது,மாது மற்றும் மாமிசம் பற்றி பார்ப்போம்

--

Monday, August 23, 2010

அமெரிக்க அரசின் தங்கத்திற்கு எதிரான போர் ஆரம்பம்?

அமெரிக்க அரசு தனது மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செலவீனங்களை சரி கட்ட புதிய சட்டத்தை(Health Care Reform Act of 2010,-Section 9006) அறிமுக படுத்தி உள்ளது. அந்த புதிய சட்டத்தின் படி $600க்கும் மேல் பொருட்களை விற்றால் முக்கியமாக தங்கம் மற்றும் வெள்ளியை விற்றால் அதனை வாங்குபவர்கள் அமெரிக்க அரசின் வருமான வரி துறையினரிடம் 2012 முதல் IRS க்கு form 1099 மூலம் அந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்க பட்டு அரசுக்கு $18 பில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.இதில் என்ன Conspiracy Theory என்று நினைக்கிறீர்களா?ஆது பற்றி அறிய பொருளாதாரத்தையும், சரித்திரத்தையும் சிறிது பின் சென்று பார்ப்போம்.

1500க்களில் இங்கிலாந்தில் வாழ்ந்த கிரஷாம் என்பவரின் கூற்று படி
"Bad money drives out good if their exchange rate is set by law."

அதாவது இரண்டு வகையான பணங்கள் நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதில் ஒரு பணத்தின் உலோக மதிப்பு அதிகமாகவும் மறு பணத்தின் உலோக மதிப்பை அரசு குறைத்து வெளியிடுகிறது என்றால், அதாவது இரு வேறு நாணயங்களில் 25 பைசாவில் 10கிராம் உலோகம்(உதாரணமாக தாமிரம்) இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அரசுக்கு அதிக அளவு பணம் தேவை தேவை படுவதால் ஒரு நாணயத்தில் 25 பைசாவில் 5 கிராம் மட்டும் உலோகம் வைத்து வெளியிட தொடங்கினால் மக்கள் குறைவாக உலோகம் உள்ள நாணயத்தை முடிந்த அளவு செலவு செய்து அதிக உலோகம் உள்ள முதல் நாணயத்தை சேமித்து வைக்க ஆரம்பிப்பார்கள். நாளாக நாளாக, வியாபாரிகள் முதல் நாணயத்தை கேட்க தொடங்குவார்கள். அதன் விளைவு முதல் நாணயத்தின் மதிப்பு மேலும் அதிகமாக, உலோக மதிப்பு குறைந்த இரண்டாம் நாணயத்தின் மதிப்பு மேலும் குறையும்.இதனை கிரஷாம் விதி என்பார்கள்.


இந்த விதி இரு உலோக அடிப்படையில் உள்ள நாணயத்தை பற்றியது என்றாலும், தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட கூடியது.1930க்களில் அமெரிக்க அரசு தேவைக்காக அதிக அளவு பணத்தை அச்சடிக்க ஆரம்பித்தது. அது வரை முழுமையாக, டாலருக்கு இணையான தங்கத்தை அரசு திரும்பி தரும் நிலையில் இருந்தது. ஆனால் அரசின் பண உற்பத்தியை கண்டு சந்தேகமடைந்த மக்கள் மிக பெறிய பண வீக்கம் அடைந்து பணத்தின் மதிப்பு குறையும் என்ற சந்தேகத்தில் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்கள். பொதுவாக தங்கத்தை பணவீக்கத்திலிருந்து தங்களை பாதுகாக்கும் காரணியாக (Hedge against Inflation)மக்கள் நினைப்பது வழக்கம்.டாலருக்கு இணையாக தங்கமும் ஒரு சேமிப்பு மற்றும் பண்ட மாற்று சக்தியாக வளர்வதை கண்ட அன்றைய அமெரிக்க பிரதமர் ரூஸ்வெல்ட் , மக்கள் வைத்திருக்கும் தங்கம் அனைத்தையும் அன்றைய மார்கெட் மதிப்புக்கு பணம் கொடுத்து பறிமுதல் செய்ய தொடங்கினார். மக்கள் தங்கத்தை வைத்திருந்தால் அதை குற்றமாக அறிவித்தார்.

தற்போதைய நிதி நெறுக்கடி மற்றும் தொடர்ச்சியான போரின் காரணமாக அமெரிக்க அரசு மற்றும் வங்கிகளின் பண நெறுக்கடி அதிகமானதால் பல ட்ரில்லியன் டாலர்களை சிறிது சிறிதாக அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்தில் கலக்க தொடங்கி உள்ளது. இது இன்னும் சில ஆண்டுகளில் Fractional Reserve System மூலம் மிக அதிகமான பண புழக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.இந்த சூழ்நிலையை கிரஷாம் விதியுடன் தொடர்பு செய்து பாருங்கள்.முன்பு சொன்னது போல் மதிப்பு மிக்க முதல் நாணயமாக தங்கத்தையும், மதிப்பு இழந்து கொண்டிருக்கும் இரண்டாம் நாணயமாக பணமும் இருப்பாதாக பாருங்கள்.

இனி அமெரிக்க அரசின் Health Care Reform Act of 2010,-Section 9006 சட்டத்திற்கு வருவோம். மேற் சொன்ன சட்டம் மூலம் அரசுக்கு தங்க விற்பனை பற்றிய அனைத்து செய்தியும் முழுமையாக போய்விடும். யார் யாரிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து விடலாம். மேலும் பிற்காலத்தில் தங்க விற்பனையை தனிமை படுத்தி அதற்கு மிக அதிகமான வரியை விதித்து, சாதாரண மக்களிடமிருந்து தங்க சேமிப்பை அன்னிய படுத்த முயலலாம். நிலமை மோசமானால் ரூஸ்வெல்ட் செய்தது போல் ஒட்டு மொத்த தங்கத்தையும் மக்களிடமிருந்து பறிமுதல் செய்து விட்டு, அரசு அடிக்கும் பணத்திற்கு மாற்றாக எதுவுமே இல்லாமல் செய்யலாம்.

ஆனால் தங்கத்துக்கு ஆதரவான பொருளியல் வல்லுனர்கள், தங்கம் என்பது பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ற சேமிப்பு செல்வமாக உள்ளது. தங்கத்தை அழிக்க முயன்றவர்கள் யாருமே வெற்றி பெற்றதில்லை என்கிறார்கள்.

இதையடுத்த அமெரிக்காவில் தங்கத்தை சேமித்து வைத்துள்ள நிறுவனங்கள் , தங்கத்தை அய்ரோப்பிய வங்கிகளுக்க மாற்ற முயல தொடங்கி விட்டதாக செய்திகள் வர தொடங்கியுள்ளன.

தங்கத்தின் மதிப்பு எவ்வாறு இருக்கும் எனபதை Supply angleலிருந்து பிறிதொரு பதிவில் காண்போம்

--

Sunday, August 22, 2010

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

லாஸ் வேகஸ்

இது மண்ணில் மனிதன் நிர்மாணித்த சொர்க்கம்

அடர்ந்த பாலைவனத்திற்கு நடுவே ஒர் புதிய உலகம்

இங்கு வரும் மக்களை நேற்றைய நினைவிலிருந்தும் நாளைய கனவில் இருந்தும் மறக்கடித்து இன்றைய நினைவில் (இங்கு தங்கியிருக்கும் வரை) வாழ வைக்கும் இடம்

மதங்களால் பாவங்கள் என நிர்ணயம் செய்தவை அனைவற்றையும் மக்கள் சுதந்திரமாக செய்ய அனுமதி பெற்றுள்ள பாவ நகரம்(Sin City)

நாள் தோறும் பல கோடீஸ்வரர்களை உருவாக்கியும் அழித்து கொண்டும் இருக்கும் இடம்

உலகின் உல்லாச தலை நகரம்(Entertainment Capital od World)



அமெரிக்க மக்கள் வேலை மற்றும் குடும்ப அழுத்தங்கள் மற்றும் பிரச்சனைகளை மறந்து சில நாட்கள் முழு சந்தோசமாக கழிக்க விரும்பும் இடம் லாஸ் வேகஸ். மக்கள் மகிழ்ச்சி கொடுக்க கூடியது என்று எதை பிரதானமாக நினைக்கிறார்களோ அது அனைத்தும் இங்கு கிடைக்கும். மது, மாது,மாமிசம்,சூதாட்டம்,கலை நிகழ்ச்சிகள்,உல்லாசம் மற்றும் பிரமாண்டம் அனைத்தும் உலகளவில் அதிகம் கிடைக்கும் இடம் என்றால் லாஸ் வேகஸை கூறலாம்.



(ஈபில் கோபுர உயரத்திலிருந்து இரவு நேர வேகாஸ்)





(ஸ்டிராட்டோஸ்பியர் உயரத்திலிருந்து பகல் நேர வேகாஸ்)

இந்த நகரின் சிறப்பே இங்கு அமைந்திருக்கும் பிரமாண்டமான சூதாட்ட வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் தான். லாஸ் வேகஸின் முக்கிய பகுதி முக்கிய ஸ்டிரிப்(Main Strip) என்று அழைக்க படும் வீதி தான். அந்த வீதியின் இரு ஒரங்களிலும் ராட்சஸ சூதாட்ட விடுதிகள் இருக்கும்.


ஒவ்வொரு விடுதியும் தனக்கென சில சிறப்பான கலை நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும். கலை நிகழ்ச்சி என்பது சிறந்த இசை நிகழ்ச்சியாகவோ, நகைச்சுவை நிகழ்ச்சியாகவோ அல்லது தனி திறமைகளை காட்டும் நிகழ்ச்சியாகவோ இருக்கலாம்.புளு மேன் காட்சி,சர்க் டியூ சொலி காட்சி, லயன் கிங் காட்சி போன்றவை இங்கு பிரபலம்.


அதே போல் ஒவ்வொரு விடுதியும் எதாவது ஒரு தீம் அடிப்படையில் வடிவமைக்க பட்டிருக்கும். ஒவ்வொரு விடுதியும் பிரமாண்டத்தில் ஒன்றுக்கொன்று போட்டி போடும்.ஒவ்வொரு விடுதிக்கும் எதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கும்.ஒரு சில விடுதிகளை பற்றி பார்ப்போம்.





MGM விடுதி சிங்கத்திற்கு பெயர் போனது. அங்கு எப்போதும் மக்கள் பார்வைக்காக நிஜ சிங்கம் வைக்க பட்டிருக்கும்.






லக்ஸார் விடுதியின் தீம் எகிப்து. அது பிரமாண்ட பிரமீடு வடிவில் கட்டபட்டிருக்கும். அதன் மேல் அமைக்க பட்டுள்ள விளக்கு பல மைல் தூரத்திற்கு வெளிச்சம் தரும். சில வருடங்களுக்கு முன் வரை அங்கு பண்டைய எகிப்து நாகரீகத்தை விவரிக்கும் விதம் அழகிய சிலைகள் இருக்கும். ஆனால் தற்போது அவற்றில் பெருமளவு அகற்றபட்டு மக்களை கவரும் பைக் போன்றவை வைக்க பட்டுள்ளது.இங்கு மனித உடல் மற்றும் டைடானிக் கப்பலின் நிஜ பாகங்களை கொண்ட கண்காட்சி வைத்திருக்கிறார்கள்.



எக்ஸ்காலிபர் விடுதி அரண்மனை தீமை கொண்டது.



மிக பெரிய பாலைவனத்தின் நடுவே அமைந்த இந்நகரில் உள்ள மாண்டலி பே விடுதியின் தீமோ கடல்(குடா?)!.இங்கு டால்பின் கண்காட்சி, கடல் சார்ந்த உணவு பொருட்களுக்கான சிறப்பான உணவகங்கள் மற்றும் செயற்கையாக அலை எழுப்பும் அழகிய கடல் ஒன்றையும் நிர்மானித்துள்ளனர்.

மற்ற விடுதிகள் மற்றும் சூதாட்டங்களை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Thursday, August 19, 2010

இன்றைய உலக பொருளாதாரம் - ஒரே நிமிடத்தில் விளக்கம்

இன்றைய உலக பொருளாதாரத்தின் போக்கை புரிந்து கொள்ள "The International" என்ற படத்தில் வந்த இந்த ஒரு கிளிப்பிங் போதுமானது. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் The International.






இது அமெரிக்காவின் Federal Reserve கடனுக்கும் பொருந்துமா?

ஒரு சிறிய விளக்கம்

"The International" என்ற படம் தற்போதைய பன்னாட்டு நிதி நிறுவனக்கள் எப்படி செயல் படுகிறது என்பது பற்றியது. அவர்களிடம் உள்ள மித மிஞ்சிய அதிகாரம் மற்றும் பணம் கொண்டு உலகளவில் எவ்வாறு சட்டத்துக்கு புறம்பான செயல்களை(ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல்) கொண்டு உலகெங்கிலும் அமைதியின்மை, போர் மற்றும் கலவரம் ஏற்படுத்தி அதில் காசு பார்க்கும் விதம் பற்றியதுமானது கதை.

ஆனால் நான் இந்த பதிவில் போட்டதிற்கு முக்கிய காரணம் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் கடனுக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும் இடைபட்ட தொடர்பை பற்றி இது கூறுவதால் தான்.

எந்த ஒரு நாட்டையும் அடிபணிய வைத்து அவர்களிடமிருந்து செல்வத்தை அட்டையாக உரிய முக்கிய வழி அவர்கள் மீது போர் தொடுத்து ஆக்கிரமிப்பு செய்வதோ அல்லது பிற வழிகளோ இல்லை. அவர்களை மிக நெடிய கடன் வலையில் வீழ வைத்தால் அந்த நாடுகளின் முடிவெடுக்கும் அதிகாரம் கடன் கொடுத்தவர்கள் கைக்கு சென்றுவிடும்.

உதாரணமாக 1970க்கு பிறகு அமெரிக்க அரசு செயற்கையாக ஏற்படுத்திய எண்ணை விலை உயர்வால் உலகின் பெரும்பான்மையான நாடுகள் தங்கள் Sovereignty ஐ இழந்து விட்டனர்(இந்தியா உட்பட). அதன் தொடர்ச்சியாக ஈராக் போர்,ஆப்கான் போர் என நடத்தி தீவாரவாதத்தை பெருக்கி உலகெங்கிலும் ஒரு பாதுகாபற்ற நிலை உருவாக்கி வரவுக்கு மீறிய ராணுவ செலவீனங்களை ஏழை நாடுகள் மீது திணித்து அவர்களை மாபெரும் கடனாளி ஆக்கி, உலக நிதி நிறுவனங்களின் கட்டுபாட்டிற்கு அவர்களை தள்ளி செல்கின்றனர்.


இதன் அடிபடையில் தான் இந்த படத்தில் நாடுகளை கட்டு படுத்த எளிய வழி அவர்களை கடனாளிகளாக ஆக்குவது தான் என்கிறது.


--

Sunday, August 15, 2010

கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்


1700ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP உலக GDPல் 2.8% ஆக இருந்தது. இந்தியாவின் GDP 25% ஆக இருந்தது. ஆனால் அதுவே 1850 ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP 9% ஆக உயர்ந்தும் ஆகவும் இந்தியாவின் GDP 12% ஆக தேய்ந்தும் போனது. இந்த அதிசயம் எப்படி நடந்து என்று பார்ப்போம்.

1600 லிருந்து 1800 வரை ஐரோப்பாவிற்கு வரும் வெள்ளியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து நெசவு,வாசனை மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய செலவிடபட்டது. மேலும் அந்த கால கட்டத்தில் உலக உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியில் 25% இந்தியா வசம் இருத்தது. அப்போதைய வியாபாரத்தால் கி.இ.கம்பெனிக்கு நல்ல லாபம் கிடைத்தாலும் இங்கிலாந்து நாட்டிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

அப்போதுதான் கி.இ.கம்பெனிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மொகலாய பேரரசு சிறிது சிறிதாக பலமிழக்க தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் ஆட்சியாளர்கள் சிறிய சிறிய மாகாணங்களை ஆள தொடங்கினர். மேலும் அவர்களுக்குள் பங்காளி சண்டை பெரிய அளவில் நடை பெற்றது. இதை கி.இ.கம்பெனி நன்கு பயன் படுத்த தொடங்கியது. ராணுவ பலம் மூலம் நாடெங்கிலும் தன் கட்டுபாட்டில் உள்ள பொம்மை அரசாங்கங்களை வைக்க தொடங்கியது.அவர்களிடமிருந்து பெருமளவு கம்பெனியும், கம்பெனியில் வேலை செய்யும் அதிகாரிகளும் பணம் கறந்தனர்.உதாரணமாக பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு, மீர் ஜபார் என்னும் பொம்மை ஆட்சியாளரை வங்காள மற்றும் வட இந்திய ஆட்சியில் அமர்த்தி அவரிடமிருந்து சுமார் 37.7 லட்சம் பவுண்டுகளை போருக்கு செலவாக பெற்றனர்.இது தற்போதைய மதிப்பில் டிரில்லியன்களை தாண்டும்.அதன் பிறகு அவர் டச்சு காரர்களுடன் சேர்ந்து கி.இ.கம்பெனிக்கு எதிராக திரும்பியவுடன் அவரை முழுமையாக அகற்றிவிட்டு ஆட்சியை தன் கையில் எடுத்து கொண்டது.

இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க இனி இங்கிலாந்திலிருத்து தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுவருவதை தவிர்க்க தொடங்கியது. தனக்கு தேவையான பணத்தை அநியாய வரி மூலம் இந்தியர்களிடமிருந்தே பெற்று கொண்டு அந்த பணத்தில் இந்திய பொருட்களை வாங்கி அதை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியது.மேலும் இந்தியாவிலிருந்து வரியாக பெற்ற பணத்தின் ஒரு பங்கையும் இங்கிலாந்து அரசுக்கு கொடுத்து இந்தியாவின் மீதான தன் கட்டுபாட்டையும், வியாபார தனி அதிகாரத்தையும் தன்னிடமே வைத்து கொள்ள தொடங்கியது.இதன் விளைவு இந்திய செல்வங்களை கி.இ.கம்பெனி அட்டையாக உரிய தொடங்கியது.இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்திலிருந்து பணம் செலவு செய்யாமலேயே ஒரு பக்க வர்த்தகமாக இந்திய்-இங்கிலாந்து வர்த்தகம் மாறியது.


முகலாயர்கள் காலத்தில் ஜமீந்தார்கள் என்போர் விவசாயிகளிடம் வரி வசூலித்து அரசுக்கு கொடுக்கும் பணியாளர்களாக இருத்தார்கள். ஆனால் கி.இ.கம்பெனியோ இந்திய நிலங்களை ஜமீந்தார்களிடம் ஏலம் விட தொடங்கியது. யார் அதிக வரி தருகிறார்களோ அவர்களுக்கே நிலம் சொந்தம் என அறிவித்தது. நிலம் ஏலத்தில் விடுவதால் ஏல தொகை அதிகமானது. அதன் விளைவு கம்பெனிக்கு லாபமும்,விவசாயிகளுக்கு கடுமையான இழப்பும் ஏற்பட்டது. ஜமீந்தார்கள் கடுமையான முறைகளை பின் பற்றி விவசாயிகளிடம் பணம் வசூல் செய்தனர். அவர்களால் பணம் வசூல் செய்ய முடியவில்லை என்றால் நிலம் அவர்களிடமிருத்து பிடுங்க பட்டு மீண்டும் ஏலம் விட படும். இதன் முக்கிய விளைவு என்ன என்றால் நிலத்தின் உரியாளர்களான ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தின் உரிமை பிடுங்க பட்டு ஜமீந்தார்கள் கைக்கு போனது. உண்மையான நில உரிமையாளர்கள் குத்தகைதாரர்களாக்க பட்டனர்.இம்முறைக்கு ஜமீந்தாரி முறை என்று பெயர்.ஜமீந்தாரி முறையினால் சுமார் 2 கோடி விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றும் இன்னும் முறையாக நில் சீர்திருத்தம் நடை பெறாததால் இழந்த நிலங்களை இன்னும் அவர்கள் பெற வில்லை. அதன் விளைவை தான் நாம் தற்போது மாவோயிஸ்ட் இயக்கமாக வட மற்றும் வட கிழக்கு இந்தியாவில் பார்க்கிறோம்.


தென்னிந்திய பகுதியில் கி.இ.கம்பெனி ரியோத்வாரி முறை என்னும் முறையை அமுல் படுத்தியது. இதன் படி நிலத்தின் உரிமை விவசாயிகளிடமே இருக்கும். அவர்கள் நேரிடையாக வரியை அரசிடம் கொடுக்க வேண்டும். அவர்களால் வரியை கொடுக்க முடியவில்லை என்றால் நிலம் பிறறிடம் கொடுக்கபடும். இது ஒருவகையில் ஜமீந்தாரி முறையை விட நல்ல முறையாக இருந்தாலும் சிறு விவசாயிகள் , ஒரு சில வருடங்கள் பருவ மழை பொய்ப்பின் காரணமாக வரி கட்ட முடியவில்லை என்றால் அவர்கள் நிலத்தை இழக்கும் அபாயம் இருந்தது.

அதிக வரியை கொடுக்க வேண்டி இருந்ததால் விவசாயிகள் உணவு பயிரிலிருத்து பணபயிர்களுக்கு(பருத்தி) மாற நிர்பந்திக்க பட்டனர்.மேலும் முகலாயர் ஆட்சியில் பஞ்சம் ஏற்பட்டால் மன்னர் அவ்வப்போது வரி விலக்கு அளிப்பது வழக்கம். ஆனால் கி.இ.கம்பெனியினருக்கோ லாபம் ஒன்றே குறிக்கோள். எனவே எப்படி பட்ட பஞ்சம் வந்தாலும் அவர்களுக்கு பணம் வந்து சேர வேண்டும் அதன் விளைவு வங்காலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு சுமார் 1 கோடி மக்கள் இறந்தனர்

முன் பதிவில் கூறியது போல் நெசவாளர்களும் துன்புறுத்தபட்டு குறைந்த லாபத்தில் அனைத்து துணிகளையும் கி.இ.கம்பெனிக்கு விற்க வற்பறுத்தபட்டார்கள். இதன் மூலம் குறைந்த விலையில் துணிகளை வாங்கி இங்கிலாந்தில் நிறைந்த விலைக்கு விற்றும் கம்பெனி நல்ல காசு பார்த்தது.

இவ்வாறாக இந்தியாவிலிருந்து கி.இ.கம்பெனியால் சுரண்டபட்ட செல்வத்தின் மதிப்பு வருடத்திற்கு 2 மில்லியனை தாண்டும் என கணக்கிடபட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்ன என்றால், இந்த பணம் தான் இங்கிலாந்தின் தொழில் புரட்சி நடப்பதற்கு தேவையான மூலதனமாக இருந்தது.தொழிற்புரட்சிக்கு தேவையான இயந்திரங்களை உருவாக்க 0.6 - 2 மில்லியன் பவுண்டுகள் தான் இங்கிலாந்திற்கு தேவை பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி முழுமையாக வளர்ச்சி பெற்ற பின் இந்திய - இங்கிலாந்தின் வணிக போக்கு வேறு மாதிரி திரும்ப தொடங்கியது. இங்கிலாந்து தொழிற் சாலைகளுக்கு தேவையான மூல பொருட்களை(பருத்தி, இரும்பு போன்றவை) குறைந்த விலைக்கு இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தது கி.இ.கம்பெனி. அந்த மூல பொருட்களை கொண்டு மதிப்பு கூடிய பொருட்களை இங்கிலாந்தில் உற்பத்தி செய்து அதை மிக அதிக விலைக்கு இந்தியாவில் இறக்குமதி செய்தது. அதன் விளைவு, இந்திய செல்வங்கள் பெருமளவு இங்கிலாந்து நோக்கி செல்ல ஆரம்பித்தது.

அடுத்த பதிவில் கி.இ.கம்பெனி இங்கிலாந்தில் செயல் பட்ட விதம் மற்றும் அதற்கும் இங்கிலாந்து அரசுக்குமான உறவு பற்றி பார்ப்போம்.

--

Saturday, August 07, 2010

மாபெரும் வீட்டு கடன் தள்ளுபடி- அமெரிக்காவில் உலவும் வதந்தி

தற்போது அமெரிக்க அரசு மற்றும் நிதி நிறுவனக்களில் அதிகாரத்தில் இருப்போர் மற்றும் விவரமறிந்தோர் மத்தியில் ஒரு பெரும் வதந்தி உலவி வருகிறது. அது தான் அமெரிக்க அரசு செய்ய போகும் வீட்டு கடன் தள்ளுபடி பற்றியது, கடந்த ஒரு வருடமாக என்ன ஸ்டிமுலஸ்(stimulus-- ஊக்கம்?) கொடுத்தாலும் அமெரிககாவின் பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை காட்டமுடியவில்லை. தற்போது முக்கியமான இடைக்கால தேர்தல் வேறு வர போகிறது. ஆனால் ஒபாமாவின் செல்வாக்கு தற்போது சிறிது சிறிதாக சரிந்து வருகிறது. எனவே எதாவது செய்து மக்களின் ஆதரவை பெர வேண்டிய நிலைக்கு ஒபாமா தள்ளபட்டுள்ளார்.

இதற்கு அவர் எடுக்கும் பிரம்மாஸ்த்திரம் தான் கடன் தள்ளுபடி என்று வதந்தி மிக வேகமாக பரவி விடுகிறது. அமெரிக்க பொருளாதாரம் மிக சூடாக இருந்த போது(2004 - 2008) வீடுகளின் மதிப்பு மிக வேகமாக உயர்ந்தது. சமீபத்திய பொருளாதார நெருக்கடி சமயத்தில் அதன் மதிப்பு மிக வேகமாக குறைய ஆரம்பித்தது. அதனால் வீடு வாங்கியவர்கள் தங்களின் வீட்டின் தற்போதைய மதிப்பை விட அதிக அளவு கடனை திருப்பி செலுத்த வேண்டி உள்ளது. ஒபாமாவின் புதிய திட்டத்தின் படி அவர்கள் வீடு வாங்கிய போது இருந்த விலைக்கும் அதன் தற்போதைய மதிப்பிற்கும் இடை பட்ட பணத்தை தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிகிறது. அதாவது ஒருவர் 2007ல் $700000 க்கு வீடு வாங்கி உள்ளார் என்று வைத்து கொள்வோம். தன் தற்போதைய மதிப்பு $400000 என்றால் $300000 தள்ளுபடி செய்ய பட்டு விடும். அதற்கான $500 பில்லியனுக்கும் மேலான பணத்தை அரசு கொடுத்து விடும்.இந்த வதந்தி உண்மையானால் அது இடை தேர்தல்களின் முடிவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளது.

அட இங்கியும் நம்ப ஊர் அரசியல் தான்!

இது ஒரு வதந்தி தான்.எந்த அளவு உண்மையான செய்தி என்று தெரியவில்லை.

முன்பு ஆசிய நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, உலக வங்கி மற்றும் IMF மூலம் அரசு மக்கள் நல திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும் செய்யும் செலவை குறைத்தால் தான் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரியாகும் என்று போதனை செய்தது.Structural Adjustment என்று புதிய நடைமுறைகளை திணித்தது.( அதை நடை முறை செய்ய முயன்ற சந்திர பாபு நாயுடு மற்றும் ஜெயலலிதாவுக்கு நடந்தது நாடறியும்). அதே பிரச்சனை மேலை நாடுகளுக்கு சென்ற ஆண்டு வந்த போது Structural Adjustment பற்றி ஒன்றுமே பேசாமல் பல டிரில்லியன் டாலர்களை Stimulus ஆக அள்ளி வீசியது.

விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை வெளி நாட்டில் படித்து இங்கு பீட்டர் விட்டு கொண்டிருக்கும் பொருளாதாரவாதிகள் மேலை நாடுகளை எடுத்து காட்டாக காட்டி அவ்வகை திட்டங்களை எள்ளி நகையாடி கொண்டிருந்தினர். தற்போது மேலை நாடுகளில் பிரச்சனை என்று வந்தவுடன் இந்தியாவை விட பல மடங்கு பணத்தை Tax Credit,Stimulus,தள்ளுபடி என்று அள்ளி வீசி கொண்டு ஊள்ளார்கள்.

தலை வலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்

--

Monday, August 02, 2010

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்


கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றம்,ஆரம்ப கால வளர்ச்சி மற்றும் தேயிலை தொடர்பு பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது இந்திய தொழில் துறையை எப்படி நசித்தது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.கி.இ.கம்பெனி வியாபாரத்தை மட்டும் நடத்திய வரை அது ஒரளவுக்கு இந்தியாவிற்கு நல்லதாகத்தான் இருந்தது.அவுரங்கசீப்பின் கடைசி காலத்திலிருந்து முகலாய பேரரசு பலமிழக்க தொடங்கியது. அவரின் மறைவிற்கு பிறகு முகலாய பேரரசு இந்தியாவின் மீது இருந்த தன் கட்டுபாட்டை இழக்க தொடங்கியது. அந்த காலத்தில் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியாவை வெற்றி கொண்டதோடு இல்லாமல் டெல்லியில் ஒரு ரத்த ஆறையே ஓட விட்டு சென்றான். இது முகலாய பேரரசை மேலும் பலவீனபடுத்தியது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவின் தெற்கு பகுதி மற்றும் பிற பகுதிகளை சிறிது சிறிதாக தன் ஆதிக்கத்தில் எடுத்து வர ஆரம்பித்தார்கள்.பல்வேறு மகாணங்களை வென்று அல்லது அங்கு தனது அதரளாவர்களை பொம்மை அரசாக வைத்து தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு பிரன்ச்சு ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் விரிய தொடங்கியது.இந்த கால கட்டத்தில் இந்தியாவின் நெசவு தொழில் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வீழ்ச்சி அடைந்தது என்று பார்ப்போம்.

நெசவு தொழில் முதலீடு - இங்கிலாந்து,இந்தியா - இரு வேறு முறைகள்

முன் பதிவில் கூறியது போல் கி.இ.கம்பெனியின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து, அய்ரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு துணிகளை அதிக அளவு ஏற்றுமதி செய்தது. அதன் விளைவாக இந்தியாவில் நெசவு தொழிலின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.இந்த வளர்ச்சி இந்தியாவில் பிற தொழிலில் இருப்பவர்கள் பலரை நெசவு தொழில் நோக்கி கொண்டு வந்தது. இதில் முக்கியமாக கவனிக்க பட வேண்டியது நெசவு தொழில் வளர்ச்சி நவீன தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சி அடைய வில்லை.இதன் வளர்ச்சி இந்தியாவில் அதிக மக்களை இழுப்பதன் மூலம் வளர்ந்தது. புதியவர்கள் நெசவு தொழிலில் இறங்கும் போது முதலீடு தேவை பட்டது. நெசவு தொழிலாளர்களுக்கு டாட்னி எனப்படும் முறைப்படி கடன் கொடுக்க பட்டது.முதலீட்டாளர்கள் பணத்தை நெசவு தொழிலாளிகளிடம் முதலீடாக கொடுப்பர்.உற்பத்தி செய்யும் துணிகளை முதலீட்டாளர்களிடம் முன்பே நிர்ணயிக்கபட்ட விலையில் விற்க வேண்டும். இங்கிலாந்தில் அதே கால கட்டத்தில் புட்டிங் அவுட் முறையில் கடன் கொடுக்க பட்டது. அதன் படி வியாபாரி உற்பத்தியாளரிடம் பருத்தி போன்ற மூல தனங்களை கொடுத்து உற்பத்தி செய்ய சொல்வார்கள். உற்பத்தியாளர்கள் துணியாக நெய்த பின் அதை வந்து வாங்கி கொள்வார்கள். இந்திய வியாபாரிகளோ பருத்தி வாங்குவது, எவ்வாறு உற்பத்தி செய்பது போன்ற முடிவுகளை உற்பத்தியாளர்களிடமே விட்டு விடுவார்கள்.இங்கிலாந்தில் மேற் கூறிய படி தொடங்கிய நெசவு தொழில் நாளாக நாளாக வேறு வடிவம் எடுக்க தொடங்கியது. வியாபாரிகள் ஒவ்வொரு உற்பத்தியாளரையும் பார்த்து மூலப்பொருட்களை கொடுத்து, உற்பத்தியை கண்காணித்து, துணியை வாங்குவதை விட, அனைத்து உற்பத்தியாளரையும் ஒரே இடத்துக்கு வர செய்து அங்கு அவர்களுக்கு மூல பொருட்களை கொடுத்து அங்கேயே துணியை நெய்ய வைத்து அவர்களிடம் நெய்ய பட்ட துணிகளை வாங்க தொடங்கினர். இது பிற்காலத்தில் தொழிற்கூட முறையில் (Industrial Production) உற்பத்தியை தொடங்க முன் மாதிரியாக இருந்தது .அதே நேரத்தில் அப்போது இங்கிலாந்தில் ஏற்பட்ட பருத்தி தட்டு பாடும்,இவ்வகை தொழிற்கூட முறை துணி உற்பத்தியும் இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட ஒரு காரணியாக இருந்தது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி போட்டியாளர்களை விட அதிக துணிகளை வாங்க இந்த டாட்னி முறையை உபயோக படுத்த தொடங்கியது. கி.இ.கம்பெனி டாட்னி கடன்களை கொடுத்து நெசவாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது .நெசவாளர்களிடம் இருத்து பல முறை துணிகளை வாங்க முடியாமல் இம்முறை பல தடவை கடை பிடிக்க படுவதும், விட்டு விடுவதாகுமாக இருந்தது.

கி.இ.கம்பெனியின் கட்டுபாட்டில் இந்திய நெசவாளர்கள்

கி.இ.கம்பெனி வியாபாரம் மட்டும் செய்து வந்த வரை இந்திய நெசவு தொழிலாளர்கள் நல்ல லாபமடைந்தனர். ஆனால் கி.இ.கம்பெனியினரிடம் அரசியல் அதிகாரம் கிடைக்க ஆரம்பித்தவுடன் நிலமை மாற தொடங்கியது.டாட்னி முறை வணிகம் மாறி, கம்பெனி படித்த இந்திய உயர் சாதியினரை குமாஸ்தாக்களாக பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் கடன் கொடுத்து நெசவாளர்களை கண்காணிக்க செய்து துணிகளை வாங்க ஆரம்பித்தது. நெசவாளர்களும் கி.இ.கம்பெனிக்கு மட்டும் துணிகளை நெய்து கொடுக்க கட்டாயபடுத்த பட்டனர். மறுத்தவர்கள் துன்புறுத்தபட்டார்கள். கி.இ.கம்பெனியினர் நிர்ணயித்த விலையிலேயே துணிகளை விற்க கட்டாய படுத்தபட்டார்கள்.இதன் விளைவி கி.இ.கம்பெனிக்கு இந்திய துணி ஏற்றுமதி மிக பெரிய லாபத்தை கொடுத்தது. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் துணிகளை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்து மிக பெரிய பணம் பார்த்தனர் கி.இ.கம்பெனி. இவ்வகை துணி வர்த்தகத்தில்,கம்பெனிக்கு முதலீட்டை விட மும்மடங்கு லாபம் கிடைத்தது.

இங்கிலாந்து நெசவாளர்கள் லாபி

இங்கிலாந்தில் இந்திய துணிகள் கடல் போல் பரவ தொடங்கியதால் இங்கிலாந்து நெசவு தொழில் பாதிக்க பட தொடங்கியது.இங்கிலாந்து நெசவு தொழிலாளர்கள் லாபி இதை தடுக்க மிக வேகமாக செயல்பட்டது. அவர்களின் வற்புறுத்தளால் 1685ம் ஆண்டு இந்திய துணிகளுக்கு 10 சதம் சுங்க வரி விதித்தது. 5 ஆண்டுகளில் அது 10 சதமாக உயர்த்தபட்டது.1719 ம் ஆண்டு இந்திய துணிகளை அணிபவர்களுக்கு 5 பவுண்டும் விற்பவர்களுக்கு 20 பவுண்டும் அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது.1813ம் ஆண்டு சுங்க வரி 85% அளவுக்கு உயர்த்த பட்டது.

இங்கிலாந்தில் ஒரு புரட்சி



அப்போது இங்கிலாந்தில் நடந்த ஒரு புரட்சி உலக பொருளாதாரம் மற்றும் வாணிபத்தின் போக்கையே மாற்ற தொடங்கியது. அந்த புரட்சி கத்தியின்றி ரத்தமின்ற நடந்தது. அது ஒரு அரசியல் புரட்சி அல்ல. அது ஒரு அறிவியல் புரட்சி அது தான் தொழிற்புரட்சி. உற்பத்திக்கு மனிதர்களை மட்டும் நம்பி கொண்டிருந்த நிலையை மாற்றி இயந்திரங்களை கொண்டு உற்பத்தியை தொடங்க ஆரம்பித்தனர். Production by mass என்ற நிலையை மாற்றி mass production என்ற சிந்தனைக்கு உலகை கொண்டு சென்றது.சாமுவேல் கிராம்டன் 1779ம் ஆண்டு கண்டு பிடித்த நெசவு இயந்திரம் தொழில் புரட்சிக்கு வித்திட்டது..

இந்திய நெசவு தொழிலின் வீழ்ச்சி

இந்திய நெசவு தொழிலின் அழிவுக்கு இங்கிலாந்து தொழிற்புரட்சி தான் காரணம் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் உண்மையில் இந்திய துணிகளின் தரத்திற்கு இணையாக இங்கிலாந்து தொழிற்சாலைகளில் நெய்ய பட்ட துணிகள் போட்டி போட முடியவில்லை.தொழிற்புரட்சி ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதாவது 1815ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 1.3 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. அதே நேரம் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 26000 பவுண்டுதான் இருந்தது. இதிலிருந்து இங்கிலாந்து தொழிற்புரட்சியால் இந்தியாவின் நெசவு தொழிலை நேர்மையான வாணிபத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று தெரிகிறது.

அதன் பிறகு இந்தியாவின் நெசவு தொழில் மிக வேகமாக அழிய தொடங்கியது.1832 ம் ஆண்டு முதல் இந்தியா இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்த நெசவு பொருட்களை விட, இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்த நெசவு பொருட்களின் மதிப்பு அதிகமாக தொடங்கியது.இந்தியாவின் நெசவு தொழிலின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை கூறலாம்.. முதலாவதாக இங்கிலாந்து தொடர்ச்சியாக இந்திய தூணிகளுக்கு விதித்த சுங்க வரையை தொடர்ச்சியாக அதிகரித்ததை கூறலாம். அடுத்ததாக நெப்போலியன் கால பிரான்ஸுக்கு எதிரான போரின் காரணமாக இங்கிலாந்தில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளை தடை செய்தது.இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளில் பாதிக்கு மேல் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்டது. ஆனால் பிரான்சுக்கு எதிரான போரின் போது, இங்கிலாந்து இவ்வகை ஏற்றுமதிக்கு தடை செய்தது. இதனால் இந்திய நெசவு வணிபம் பெரிதும் பாதிக்க பட்டது. கிழக்கிந்தய கம்பெனி அரசியல் அதிகாரம் பெரும் வரை,விவசாயிகளிடமிருந்து அரசு பெற்ற வரியின் மூலம் பெருமளவு நகர் புற வசதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் மற்றும் ஆட்சியாளார்களின் செலவினங்களும் அதிகரித்திருந்தது, அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக நெசவு தொழில் வளர்ச்சி தேவை பட்டது, ஆனால் கி,இ.கம்பெனி வரி வசூல் செய்ய அரம்பித்தவுடன் அந்த செல்வங்கள் இங்கிலாந்து நோக்கி செல்ல தொடங்கிஅதால் இந்திய நகர் புர வர்க்கத்தின் எண்ணிக்கையும் குறைந்தது, இதன் விளைவாக நெசவு பொருட்களுக்கு உள்நாட்டு தேவையும் குறைய ஆரம்பித்தது.ஆரம்ப காலங்களில் கி.இ.கம்பெனிக்கு இங்கிலாந்து அரசின் மீது அதிக தாக்கம் (influence) இருந்தது. அப்போது அதன் லாபத்திற்காக இந்திய துணிகளை இங்கிலாந்தில் விற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசின் மீது முடிந்த வரை அழுத்தம் கொடுத்து ஏற்படுத்தி வந்தது. ஆனால பிற்காலத்தில் அதன் தாக்கம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. 1813ம் ஆண்டு ஆங்கில அரசின் சட்டத்தின் மூலம் அதன் அதிகாரம் பெருமளவு குறைக்க பட்டு ஆங்கில அரசுக்காக இந்தியவை ஆளும் ஒரு ஏஜென்டு மட்டும் தான் என்ற நிலைக்கு தள்ள பட்டது. ஆங்கில அரசின் கட்டுபாட்டிற்கு இந்தியா வர ஆரம்பித்தவுடன், ஆங்கில அரசு தன் நாட்டு நெசவு தொழிலை ஊக்குவிப்பதே முதல் குறிக்கோளாக கொண்டு இந்திய நெசவு தொழிலை முழுமையாக அழிக்க தொடங்கியது. கடைசியாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியும் இந்திய சவு தொழிலின் அழிவுக்கு ஒரு காரணமாக இருந்தது எனலாம்.

அடுத்த பதிவில் கி.இ.கம்பெனியால் எவ்வாறு இந்திய செல்வங்கள் கொள்ளை போயின என்று பார்க்கலாம்.

--