Showing posts with label நக்கல். Show all posts
Showing posts with label நக்கல். Show all posts

Saturday, January 29, 2011

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம் - இந்தியாவின் கனவு தகர்ந்தது?

கடந்த சில வருடங்களாக ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திர உறுப்பினராக பல வகையிலும் இந்தியா முயற்சி செய்வது அனைவரும் அறிந்ததே. தற்போது பாதுகாப்பு சபை நிரந்திர உறுப்பினர் நாட்டின் தலைவர்களை எல்லாம் ஒவ்வொருவராக அழைத்து அந்நாட்டின் பொருளாதாரம் உயர அவர்களிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கி குவிக்க, இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் இடுவது அனைவருக்கும் தெரிந்ததே.

அது மட்டுமன்றி இந்திய தொழில் துறைகளை/ நிதி துறைகளை ஒட்டு மொத்தமாக அழித்து மேலை நாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை தாரை வார்த்தால் தான் இந்தியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்திர இடம் கிடைக்கும் என்று கூறி அதற்கான முயற்சியிலும் இறங்கி வருகிறது.

அந்த முயற்சிகளுக்கு எல்லாம் இப்போது பெரிய ஆப்பு விழ போவதாக செய்திகள் வந்துள்ளது. தன் நாட்டு பிரஜைகளை ஒரு குட்டி தீவு நாட்டால் வெளிபடையாக கொன்று குவிக்கும் போது, அதை தடுக்க திரணியற்ற ஒரு நாட்டுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கொடுத்தால் அது ஐ.நா பாதுகாப்பு சபையையே கேலி கூத்தாக்கும் என்று மேலை நாடுகள் நினைப்பதால் இந்த முயற்சிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தன் நாட்டு அப்பாவி மீனவர்களை காக்க திரணியற்ற ஒரு நாட்டுக்கு உலக நாட்டமை பதவி கொடுப்பது பொருத்தமாக இருக்காது என்ற மேலை நாடுகளின் வாதங்களை எதிர் கொள்ள வழி இல்லாமல் இந்திய அரசும் திணறுவதாக தெரிகிறது.

பின் குறிப்பு: இந்த செய்தி உண்மையானால் மட்டுமே மன்மோகன் சிங் இந்திய மீனவர்களை காக்க எதாவது முயற்சி செய்வார்.வட நாட்டு மீடியாக்களும் தமிழர்களின் உயிருக்கு சிறிது மதிப்பு கொடுத்து இந்த பிரச்ச்னை பற்றி மீடியாவில் பெரிய செய்தியாக எழுதும்


--

Sunday, November 21, 2010

சோனியா, ராகுலுக்கு எதிராக E.V.K.S.இளங்கோவன் போர்கொடி!

தி.மு.க அல்லது அதிமுக என எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் , தி.மு.க/அதிமுக போன்ற கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்தி காங்கிரஸ் கட்சியினுள்ளே ஓர் கம்யூனிஸ்ட்டாக செயல் பட்டு வருகிறார் E.V.K.S இளங்கோவன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

ஆனால் தற்போது அவர் காங்கிரஸின் அகில இந்திய தலைமைக்கு எதிராக முக்கியமாக ராகுல் மற்றும் சோனியாவிற்கு எதிராக போர்கொடி தூக்கி நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆச்சரியத்தை தூண்டியுள்ளார்.இதோ அவர் பேசியுள்ள பேச்சின் ஒரு பகுதியை நீங்களே இங்கு பாருங்களேன்!( பேச்சை புரியாதவர்களுக்கு நான் சில விளக்கத்தை பிராக்கெட்டில் கொடுத்து உள்ளேன்).

தலைப்பு:

(சோனியா மற்றும் ராகுல் போன்றோரின்)குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும்-ஈவிகேஎஸ் இளங்கோவன்
காங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது(காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆட்சியின் விளைவாக ஒரு குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது போல் திறமை வாய்ந்த பலருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை).

தமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.(தமிழகத்திலேயே பரம்பரை ஆட்சி வர இப்படி கோபபடுபவர் இந்தியாவில் வருவதை கண்டு தீபிழம்பாக மாறி கொண்டு உள்ளார்) தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர். நீயும் இதையே செய். ஜால்ரா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் என்றார்.("தமிழகத்தில் " என்ற வார்த்தையை எடுத்து விட்டு இந்தியாவில் என்று போட்டு படித்து பாருங்கள்)

தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சோனியாவை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து இளங்கோவன் சோனியாவை எதிர்த்து பேசி உள்ளதால் இருவருக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பு இருக்களாம் எனவும் , சோனியாவை எதிர்த்த புதிய கோஷ்டி அகில இந்திய அளவில் உருவாகி வருவதையும் காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த ஆண்டுக்குள் ராகுலை பிரதமாராக்க நினைக்கும் சோனியாவின் முயற்சிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகவே கருத படுகிறது.

ஆனால் உண்மையில் அவருடைய பேச்சு அவரை எதிர்த்து அவரே பேசி கொண்டதாகவும் காங்கிரசின் எதிர் கோஷ்டியினர் கூறுகின்றனர். என்ன கேட்பதற்கே ஆச்சர்யமாக உள்ளதா?அதுவும் உண்மைதான். ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியலில் அடி மட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்தவர் இல்லை. அவரும் ஒரு வாரிசு அரசியல்வாதி தான். அவர் பெரியாரின் குடும்பத்தை சேர்ந்த E.V.K.சம்பத்தின் புதல்வராவார். E.V.K.சம்பத் திக, திமுக,தமிழ் தேசிய கட்சி என்று பல கட்சிகளில் இருந்து விட்டு காங்கிரசில் ஐக்கியமானவர்.

மனசாட்சியின் படி தன்னை எதிர்த்து தானே அறிக்கை விடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்டாயம் ஒரு தனி தன்மை வாய்ந்த அரசியல்வாதிதான்!


--

Sunday, October 24, 2010

ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி

எந்திரன் படத்தின் சிறப்பு பற்றியும் அதன் வரலாறு காணாத வெற்றி பற்றியும் அனைத்து ஊடகங்களும் பத்திரிக்கைகளும், பதிவர்களும் எழுதி தள்ளி கொண்டு உள்ளனர். அதுவும் அமெரிக்காவில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்து (டைட்டானிக், அவதார் போன்ற படங்களுக்கு சவால் விடும் வகையில்?) வசூலை கொட்டி உள்ளதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆங்கில படங்கள் அமெரிக்கா முழுவதும் பல்லாயிரம் தியேட்டர்களில் வெளியிட பட்டு பெற்ற வசூலை எந்திரன் சில தியேட்டர்களில்(100 க்கும் குறைவான) மட்டும் வெளியிட பட்டு வசூலை குவித்து சாதனை புரிந்திருக்க வேண்டும்.

தற்போது எந்திரன் படம் ஹாலிவுட்டையும் அதனையும் தாண்டி அமெரிக்க அதிபர் வரை கலக்கிய செய்தியை யாரும் வெளியிட வில்லை.நம்ப முடியவில்லையா? ஆனால் அது தான் உண்மை!அமெரிக்க வரலாற்றில் இது வரை இல்லாதவாறு, முதன் முதலாக ஒரு வளரும் நாட்டு படம் வசூல் சாதனையில் முதலிடம் பிடித்தது ஒபாமா காதுக்கு போகாமலா இருக்கும்?. இந்த செய்தியை கேட்டதும் முதலில் அவர் அதிர்ந்து போயிருக்கிறார். ஏற்கனவே உற்பத்தி தொழில் வேலை வாய்ப்புகள் சீனாவுக்கும் சேவை தொழில் வேலை வாய்ப்புகள் இந்தியாவிற்கும் சென்று கொண்டிருப்பதால் அமெரிக்க வேலை வாய்ப்பு குறைவதோடு இறக்குமதி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கால கட்டத்தில் அமெரிக்கா, உலகுக்கே பெரிய அளவில் ஏற்றுமதி செய்து வரும் தொழில் ஹாலிவுட் படங்களாக தான் இருக்கும்(ஆயுதம் மற்றும் மென்பொருள் புராடெக்ட்ஸ் தவிர). தற்போது தமிழ் படத்தால் அதற்கும் ஆப்பு வந்து விட்டதால் அவுட்சோர்சிங்க்கு தடை விதிப்பது போல் தமிழ் படத்துக்கும் தடை விதிக்கலாமா என்று யோசித்து வருவதாக தெரிகிறது.இவ்வாறு தடை விதித்தால் உண்மையான நஷ்டம் அடைய போவது படத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்காத அமெரிக்க ரசிகர்கள் தான்!

இந்த தடை Sun Picturesக்கு படத்துக்கு மட்டும் பொருந்துமா? அல்லது ரஜினி படத்துக்கு மட்டும் பொருந்துமா என்று தெரியவில்லை. எப்படியும் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும் போது தன் எதிர்ப்பை தமிழக அரசு நிச்சயம் தெரிவிக்கும் என்று தெரிகிறது..(இந்த படத்தின் உண்மையான வெற்றிக்கு காரணம் ஐஸ்வர்யா ராய் கட்டியிருந்த சேலையின் அழகு தான் போன்ற உண்மைகளை ஞானி போன்றவர்கள் அமெரிக்க அதிபருக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும்.).

இது ஒருபுறமிருக்க அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் எந்திரன் வெற்றியால் அரண்டு போய் உள்ளனர். என்னடா இது பன்னாட்டு கம்பெனியிக்கும் எந்திரன் வெற்றிக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கீறிற்களா? பன்னாட்டு கம்பெனியினர் தங்களது நுகர்வு கலாச்சாரத்தை வளரும் நாடுகள் மீது திணிக்க ஹாலிவுட் படங்களை தான் முக்கிய ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள். தற்போது எந்திரன் வெற்றி ஹாலிவுட்டை மட்டுமல்லாமல் உலகையே ஒரு ஒரு கலக்கு கலக்கி உள்ளது. இனி ஹாலிவுட் படங்களை தமிழ் படங்களோடு போட்டி போட முடியுமா என்று சந்தேகம் தலை தூக்கி உள்ளது.

இனி தமிழ் படங்கள் ஹாலிவுட்டை ஆக்கிரமித்தால் வளரும் நாடுகளுக்கு தங்கள் கலாச்சாரத்தை திணிக்க வேறு ஒன்றை தேட வேண்டுமே என்ற கவலையில் இருக்கிறார்கள்.(சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஹாலிவுட் நிறுவனக்களை விட அழகாக இந்த வேலையை செய்யும் என்று யாரோ கூறுவது கேட்கிறது) அவர்கள் கவலை அடைவதோடு நிற்காமல் தமிழ் படங்களை உலகளவில் தடை செய்ய ஒபாமாவுக்கு தங்களது பலம் வாய்ந்த லாபிகள்(lobby) மூலம் முயன்று வருகிறார்கள். அமெரிக்காவில் கூடிய விரைவில் தேர்தல் வருவதால் அதிபருக்கு கிடைக்கும் அழுத்தத்தின் அளவும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்கா என்றால் முதலாளித்துவம் தானே. லாபத்துக்காக எந்த மாற்றத்தையும் உடனடியாக உணர்ந்து கொண்டு செயல் படுபவர்கள் தானே அமெரிக்க முதலாளிகள். தமிழ் படங்களின் இந்த அசுர வளர்ச்சியை கண்டு ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் டைரக்டர்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் வீடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். உதாரணமாக கடுமையான முயற்சிக்கு பிறகு ஹாலிவுட்டின் முன்னனி நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் தமிழ் இயக்குனர் முருகதாசை வளைத்து விட்டது.

இது ஒருபுறமிருக்க இந்த வருட ஆஸ்கார் விருது தங்களுக்கு கிடைக்கும் என்று தவம் இருந்து கொண்டிருந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் நினைப்பில் எந்திரன் படத்தின் ஆங்கில் 3-D பதிப்பு மண்ணை வாரி போட்டு விட்டது. ஒட்டு மொத்த ஆஸ்கார் விருதுகளையும் எந்திரன் வாங்கி குவிக்க போவதை பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கை தட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டு விட்டனர் ஹாலிவுட்டின் முன்னனி கலைஞர்கள்!.

அது மட்டுமல்ல அவதார் படத்தின் அடுத்த பாகத்தை எப்படி எடுக்கலாம் என்று ஜேம்ஸ் கேமரூன் நினைத்திருந்தாரோ அதே ஓட்டத்தில் அதைவிட சிறப்பாக எந்திரன் வெளிவந்து விட்டதை கண்டு அதிர்ந்து போய் உள்ளார் கேமரூன். சாதாரணமாக ஒரு படம் எடுக்க பல வருடங்கள் சிந்திக்கும் கேமரூன், தன் சிந்தனை எல்லாம் செயல் வடிமாக எந்திரன் வெளிபடுத்தி விட்டதால் புது கதை பற்றி சிந்தித்து படம் எடுக்க இன்னும் பல காலம் பிடிக்கும்.

இதைவிட முத்தாய்ப்பான செய்தி Massachusetts Institute of Technologyயின் Robotics and Artificial Intelligence துறை தலைவர் கூறியிருக்கும் செய்தி. பல ஆண்டுகளாக Artificial Intelligence பற்றி மண்டையை பிய்த்து கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தவரின் பல கேள்விகளுக்கு எந்திரன் படத்தில் ரஜினி காந்த் செய்யும் ஆராய்ச்சியை பார்த்த பின்பு விடை தெரிந்து விட்டதாம். ஆக எந்திரன் ஒரு படம் அல்ல. பல்கலைகழகங்களுக்கே வைக்க வேண்டிய பாடம் இதே பல்கலை கழகத்தை சேர்ந்த Disaster Management Instituteஇன் பேராசிரியர்கள் சுனாமிக்கான மூல காரணத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறிய போது, கமலின் தசாவதாரம் படம் மூலம் தில்லை வாழ் அந்தணர்களை சோழ மன்னன் கொடுமை படுத்தியதும், நாராயண மூர்த்தியை கடலில் போட்டதும் தான் சுனாமிக்கான மூல காரணம் என்பதை String Theory மூலம் அறிவியல் பூர்வமாக நிருபித்து அறிவியல் அறிஞ்சர்களிடம் பாராட்டை பெற்றது உங்களுக்கு நினைவிருக்களாம்.

உலகம் முழுதும் இவ்வாறாக எந்திரன் கலக்கி கொண்டு இருந்தாலும் இந்தியாவில் டிக்கெட் விலை காரணமாக ஏழை மக்களால் இந்த படத்தை பார்க்க முடியவில்லை. இன்றைய தேதியில் எந்திரன் படத்தை பார்க்காதவர்களை பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை பார்ப்பது போல் கேவலமாக பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எந்திரன் படத்தை பார்ப்பதையும் இன்றைய உணவு, தொலைகாட்சி போன்று அடிப்படை தேவையாக மாறி உள்ளதால் தமிழக அரசு மொத்தமாக மார்க்கெட் விலைக்கு எந்திரன் டிக்கட்டுகளை வாங்கி மானிய விலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு டிக்கெட் என்று ஏழைகளுக்கு வினியோகிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

ரஜினி காந்த இவ்வாறாக ஹாலிவுட்டையே கலக்கி தமிழக சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலிருந்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்து விட்டார் என்றால் பொய்யாகாது.

பின் குறிப்பு: எல்லோரும் எந்திரன் பற்றி பெரிதாக பில்ட் அப் கொடுத்து எழுதுகிறார்களே. நானும் முயன்றால் என்ன? என்று நினைத்ததால் தான் இந்த பதிவு. பெரும்பான்மையான செய்திகள் கற்பனை தான்(இதை போடா விட்டால் இதையும் உண்மை செய்தியாக வலையுளகில் உலா வந்து விட போகிறது என்ற பயம்?). எந்திரன் படம் பார்த்தேன் கிராபிக்ஸ் நிச்சயம் உலக தரத்தில் இருந்தது.

--

Monday, August 31, 2009

சீனாவின் தூண்டிலில் மத்திய அமைச்சர் கபில் சிபல்

இந்தி தெரியாத மக்கள் எல்லாம் இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தேச விரோதிகளாக உள்ளனர். இதை கூறுவது ஏதோ R.S.S தலைவர்களோ அல்லது முலயாம் கட்சியினரோ இல்லை. சோசியலிச கட்சியாக தன்னை காட்டி கொள்ளும் காங்கிரஸ் தான். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது அ.தி.மு.க இல்லை. இந்தி எதிப்பு போரில் பல்லாயிரம் பேர் சிந்திய ரத்தத்தில் வளர்ந்த தி.மு.க.

கபில் சிபல் கூறியதை பாருங்கள்.
All children are not fluent in Hindi as they are in their mother tongues. Hindi is necessary for students to integrate with the rest of the country.

இந்தி தெரிந்தால் தான் நீங்கள் தேசிய நீரோட்டத்தில் "Integrate" ஆவதாக ஒத்து கொள்வீர்களா என்ன?. அது மட்டுமல்ல. இந்தியா "Knowledge Economy" ஆக வந்த பிறகு ஆங்கிலத்தை எடுத்து விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பார்களாம். மற்ற மொழி எல்லாம் வளர கூடாதாம். இந்தி தான் இந்தியா முழுதும் ஏற்று கொள்ள பட வேண்டிய மொழியாக இருக்க வேண்டுமாம்.

//"Now the lingua franca is English for professionals. When we become producers of knowledge then we can set our language as the lingua franca," Sibal said.
//
இது என்ன நம்முடைய(our) மொழி. உங்களுடைய மொழி என்று சொல்லி கொள்ள வேண்டியது தானே.இதை கடுமையாக எதிர்க்காமல் பதவிக்கும் பணத்திற்கும் அடிமை ஆகி உள்ள கட்சிகள் தயவு செய்து தங்களை திராவிட கட்சிகள் என்று சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் கொல்ல பட்ட போது அது வெளியுறவு கொள்கையை பாதிக்கும் என்ற பெயரில் அமைதியாக இருந்தீர்கள். இந்த அமைதிக்கு என்ன காரணம்?.

பா.ஜ.க வாக இருந்தாலும் சரி. காங்கிரசாக இருந்தாலும் சரி. கடிசியில் இந்து-இந்தி- இந்தியாவில் வந்து நிற்கின்றனர்.தமிழர்களும் தொலை நோக்கி பார்வையில் சிந்திக்க வேண்டிய தருணம் விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது.

இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சீனா இந்தியாவை 25 துண்டாக்க வேண்டும் என்று திட்டமிடுவதாக செய்திகள் வந்தன. நம்ப ஊர் அரசியல்வாதிகள் கபில் சிபல் போல் இருந்தால், சீனா கஷ்டபட்டு இந்தியாவை உடைக்க வேண்டிய தேவையே இருக்காது. தானாகவே அது நடக்கும் .

--

Saturday, April 18, 2009

நீதி கேட்கும் செருப்புகள்

பெரும் பாலான மனிதனுக்கு அநீதி இழைக்கும் போது அவர்கள் முறையிட நீதி மன்றம் இருக்கிறது. வாயில்லா மிருகங்களுக்கு நீதி தேடி தர புளு கிராஸ் போன்ற அமைப்புகள் இருக்கிறது.ஆனால் எங்களை அவ மரியாதை செய்தால் நாங்கள் எங்கு போய் முறையிடுவது? சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கிறீர்களா? சிறிது குனிந்து பாருங்கள். நீங்கள் காலில் அணிந்து இருக்கும் காலணி பேசுகிறேன்!

காடு, மலை, கல், கரடு,மழை, வெய்யில், சேறு, சகதி என்று எங்கு போனாலும் உங்கள் காலை பாது காக்கிறேன். இதற்கு பலனாக உங்களிடம் நான் எந்த உபகாரமும் எதிர் பார்க்கவில்லை. தயவு செய்து கேடு கெட்ட இந்த அரசியல்வாதிகளின் மேலெரிந்தும், அவர்களுக்கு என்னை மாலையிட்டும் அவ மரியாதை செய்யாதீர்கள். எங்களுக்கு உணர்வு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக எங்களை இப்படி அவ மரியாதை செய்கிறீர்கள். அதுவும் எந்த உணர்வும் இல்லாத இந்த அரசியல்வாதிகள் மீது எங்களை விட்டெறிந்து.

இனியாது எங்களை இப்படி அவ மரியாதை செய்யாமல் இருக்க உங்களை இரு கால் கூப்பி வேண்டி கொள்கிறேன்


புகைப்படம்:நன்றி தினபூமி

--

Friday, April 10, 2009

பாக்கிஸ்தானின் வியாபார தந்திரம்

ஒரு தொழிலில் 100 ரூபாய் முதலீடு செய்து 1000 ரூபாய் சம்பாதித்தால் அது லாபம் என்போம். அதையே 100 ரூபாய் முதலீடு செய்து 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் அது கொள்ளை லாபம். அந்த அளவு கொள்ளை லாபம் கிடைக்கும் தொழில் ஒன்று உண்டா? ஆம் இருக்கிறது. பாக்கிஸ்தான் அந்த வியாபார தந்திரத்தை கண்டுபிடித்து பெரிய அளவில் பயனடைகிறது. என்ன என்று கேட்கிறீர்களா? பாக்கிஸ்தான் தலிபான், லஸ்கர்-இ-தொய்பா என பல தீவிரவாத இயக்கங்களை சில மில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கி, அதன் பலனாக இன்று பல பில்லியன் டாலர்களை அமெர்க்காவிடமிருந்து நிதி உதவியாக பெற்று கொள்ளை லாபம் அடைகிறது. 21ம் நூற்றாண்டில இதுவும் ஒரு லாபமிகு தொழில் தான்.

--

Thursday, February 05, 2009

சிதம்பரம்- இன்னொரு சுனாமியை தமிழகம் தாங்குமா?

இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிவதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு தற்போது தமிழ் நாட்டில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழர்களையும் கூண்டோடு கைலாசம் அனுப்ப புதிய சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதுவே உண்மையான செய்தி. கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியால் பல்லாயிரம் தமிழ் மக்கள் இறந்தது நினைவிருக்களாம். இந்த துயர சம்பவத்துக்கான காரணத்தை கமல் போன்ற நோபல் பரிசு பெற தவறிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து தசாவதாரம் படத்தில் தெளிவாக விளக்கி உள்ளார். தில்லை வாழ் அந்தணர்கள் கோவிலில் செய்யும் ஆன்மீக பணிகளில் அரசியல்வாதிகள்(சோழ மன்னர்கள் ) தலையிட்டதுதான் சமீபத்திய சுனாமிக்கு காரணம் என்ற அறிவியல் உண்மையை அறிவியல் உலகின் சமீபத்திய கண்டு பிடிப்பான String Theoryயின் மூலம் சிறு குழந்தைக்கும் புரியும் வகையில் கமலகாசன் அவர்கள் நிருபித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு நீதி துறையின் உதவியோடு நடராஜரையும்,கோவிலையும் அங்கு வரும் வருமானத்தையும் தீட்சிதர்களிடமிருந்து விடுவித்து தன் பொறுப்பில் எடுத்து கொண்டுள்ளது. அன்று ஒரு அந்தணரை வெளியேற்றியதற்கே இன்று மாபெரும் சுனாமி தாக்கி உள்ளது. இன்று அனைவரின் அதிகாரத்தையும் பிடுங்கியதால் உலகில் என்ன என்ன அழிவுகள் ஏற்படும் என்பதை கற்பனையில் நினைத்து பார்த்தாலே படு பயங்கரமாக உள்ளது. இதன் விளைவு தமிழகத்தின் அழிவோடு விட்டு விடுமா அல்லது ஒட்டு மொத்த இந்தியா அல்லது உலகத்தையே அழிக்குமா என்பதுதான் இப்போதைய கேள்விகுறியாக உள்ளது. இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஆச்சாரியார்கள் கண்டறிந்து அதை நிறைவேற்றினால் உலகை காக்கும் புண்ணியமாவது கிடைக்கும்.

--

Monday, January 12, 2009

நிதி நெருக்கடி பற்றி படிக்க! சிரிக்க!




நிதி நெருக்கடியை பற்றிய சில நகைச்சுவை வாதங்கள் மின்னங்ஞ்சல் மூலம் வந்தது. உண்மையிலேயே நகைச்சுவையாக உள்ளது. இதை முன்பே படிக்காதவர்கள் படித்து ரசிக்கலாம்(நிதி நெருக்கடியின் தாக்கம் உஙகளை பாதிக்காதவரை )


1. The US has made a new weapon that destroys people but keeps the building standing,. Its called the stock market - Jay Leno

2. Do you have any idea how cheap stocks are ?? Wall Street is now being called Wal Mart Street Jay Leno

3. The difference between a pigeon and a London investment banker . The pigeon can still make a deposit on a BMW

4. What's the difference between a guy who lost everything in Las Vegas and an investment banker ? A tie

5. The problem with investment bank balance sheet is that on the left side nothing's right and on the right side nothing's left.

6. I want to warn people from Nigeria who might be watching our show, if you get any e mails from Washington asking for money, it's a scam. Don't fall for it - Jay Leno

7. Bush was asked about the credit crunch. He said it was his favourite candy bar - Jay Leno

8. The rescue bill was about 450 pages. President Bush's copy is even thicker. They had to include pictures Jay Leno

9. President Bush's response was to meet some small business owners in San Antonio last week. The small business owners are General Motors, General Electric and Century 21. - Jay Leno

10. What worries me most about the credit crunch, is that if one of my cheques is returned stamped 'insufficient funds'. I won't know whether that refers to mine or the bank's.


--

Tuesday, January 06, 2009

Humpty Dumpty பொருளாதாரம்-அமெரிக்கா?

இந்த பாடல் குழந்தைக்கா? அமெரிக்க பொருளாதாரத்திற்கா?

Humpty Dumpty sat on a Wall
Humpty Dumpty had a great Fall
All the Kings Horses and All the Kings Men
Could not put Humty Together Again?!





--

Friday, January 02, 2009

விலகுகிறது சனிபகவானின் கண் திரை, 4th Sep 2009ல் உலகம் அழியுமா? - கண்டுபிடித்தது NASA

சனி பகவானின் கண் கட்டபட்டுள்ளதன் காரணம் அனைவரும் அறிவர். உலகில் உள்ள அனைத்து பாவங்களையும் தன்னுள் சுமந்து கொண்டுள்ளதால் அவரின் கண்கள் கட்ட பட்டுள்ளது.

அவர் கண்ணை திறந்தால் பாவம் அனைத்தும் எதிரில் உள்ளவர்களை (பூமி போன்ற கிரகங்கள்) தாக்கி சிரமத்தில் ஆழ்த்தும்.இது இந்தியாவை சேர்ந்த அறிவாற்றல் நிறைந்த சோதிடர்களால் ஆதாரபூர்வமாக நிருபிக்க பட்டுள்ளது.

தற்போது சில காலமாக உலகில் சுனாமி,பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களும், பொருளாதார நெருக்கடி, மத சண்டைகள் போன்ற சமூக பிரச்சனைகளும் மிக அதிகமாகி
உள்ளது.இதன் மூல காரணத்தை அறிய முடியாமல் பல்வேறு துறை நிபுணர்களும்,ஞானிகளும்,சோதிடர்களும் திணறி வந்த நேரத்தில்,ஒரு புதிய உண்மையை கண்டுபிடித்து பிரச்சனைக்கான மூல காரணத்தை NASA சோதிடர்களுக்கு ஒரு முக்கிய clueவாக கொடுத்துள்ளது.

NASA கண்டுபிடித்த அதிர்ச்சிகரமான செய்தி இதுதான். பாவத்தை அடக்கி வைத்திருந்த சனி பகவானின் கண்ணை மறைத்து கட்ட பட்டிருந்த திரை அவிழ தொடங்கியுள்ளது. அவர் பாவ
கணைகளை பூமி மீது வீச தொடங்கி விட்டார்.அவரது கண்திறை மெல்ல மெல்ல விலகுவதை நாமும் கண்கூடாக பூமியிலிருந்து செப்டம்பர் 4 2009 வரை பார்க்கலாம்.செப்டம்பர் 4 அன்று அவரது கண் திறை முழுமையாக விலகி விடும்.

இந்த செய்தியை நம்பாதவர்கள் NASAவின் இந்த செய்தியை படித்து பாருங்கள்.

இதை படித்த பின் நீங்கள் உடனடியாக கூகிளில் தேட போவது சனி பகவானின் பாவ கணைகளின் தாக்குதலுக்கு எதாவது பரிகாரம் கிடையாதா என்பதாகத்தானே இருக்கும். கவலை
படாதீர்கள் அதையும் நானே உங்களுக்காக கண்டுபிடித்து இலவசமாக இந்த பதிவிலேயே இணைத்துள்ளேன். வைத்தீசுவரன் கோவில் பகுதியில் இருக்கும் பழங்கால ஓலை சுவடியில் இதற்கு பரிகாரம் உள்ளது.பரிகாரமும் மிகவும் எளிமையானது. இந்த பதிவை படித்து முடித்த இரண்டு நாட்களுக்குள் 10 பேருக்கு இந்த பதிவை forward செய்தால் பாவம் உடனே விலகும்.

சற்றுமுன் வந்த தகவல்:பொதுவாக உலகில் எந்த தீய நிகழ்வுகள் நடந்தாலும் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பிறகே நாஸ்ட்டர்டாம் பல ஆண்டுகளுக்கு முன்பே இதை கணித்துள்ளார் என்று செய்தி வரும். ஆனால் இம்முறை நிகழ்வு நடப்பதற்கு முன்பே நாஸ்டர்டாம் சனி பாகவானின் இந்த நிகழ்வை பற்றி முன்னறிவிப்பு செய்த செய்தியும் கசிய தொடங்கி உள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நன்கு விவரம் தெரிந்த வாசகர்கள் இந்த நிகழ்வுக்கும் 2012 prophecyக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ந்து பின்னூட்டமிட்டால் வாசகர்களுக்கும் நன்மையாக இருக்கும்.

--

Tuesday, February 12, 2008

CPI(M) கட்சியின் திடீர் ஞானோதயம்

இலங்கையில் JVP கட்சி ஒரு இனவாத மற்றும் மதவாத கட்சி என்பது உலகறிந்த ரகசியம். பல்லாயிரம் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த கட்சி. கம்யூனிச தோல் போர்த்தி கொண்டு ரதத வெறி பிடித்து தமிழர்களை கொன்று குவித்த வரலாறு உலகெங்கும் தெரியும். அப்படி பட்ட கட்சியை தனது பொலிட்பீரோ கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கூப்பிட்டு, அவர்களுடைய படுகொலைகளை நியாய படுத்தி, தனது தார்மீக ஆதரவை கொடுத்து வந்து கொண்டிருந்தது CPM. அது மட்டுமல்லாது, அகில உலக கம்யூனிசத்தின் எழுச்சி நாயகனான இந்து பத்திரிக்கையின் ஆசிரியர்(இவரும் கட்சியின் power center)N.Ram அடிக்கடி இலங்கை சென்று JVP கட்சியினருக்கு பாராட்டு தெரிவித்து, பல அறிய "நல்ல" யோசனைகளும் சொல்லி வருவார்.
ஒரு வழியாக JVP கட்சியினரின் செயல்பாடுகள் எப்படியோ இப்போது CPI(M) கட்சியினருக்கு தெரிந்து விட்டது.இந்த ஆண்டு JVP கட்சியினரை தனது பொலிட்பியூரோ கூட்டத்துக்கு அழைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. செய்திக்கு இங்கு சென்று பார்க்கவும். தாமதமான முடிவு என்றாலும் வரவேற்க தக்கதே.

Wednesday, November 28, 2007

தட்ஸ்தமிழ் சிவாஜி படத்துக்கு கொடுக்கும் ஓவர் பில்டப்

பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் நாட்டு செய்தியை உடனுக்குடன் கொடுப்பது தட்ஸ்தமிழ் தளம். நான் தினமும் தவறாமல் பார்க்கும் தளம் இது. சிவாஜி படம் பற்றி எப்போதுமே ஓவர் பில்டப் கொடுக்கும். ஆனால் தற்போது வந்துள்ளா செய்தியை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நீங்களும் படித்து பாருங்களேன்.

"ரஜினி 'பர்ந்து பர்ந்து' சண்டை போடுவதை ரசித்த அவரது ரசிகர்கள் இனிமேல் பறந்து கொண்டே அவரது படத்தைப் பார்க்கலாம். அதாவது சிவாஜி படத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் திரையிட தீர்மானித்துள்ளதாம்.

உலகிலேயே ஒரு விமான நிறுவனம், ஒரு இந்தியப் படத்தை, அதிலும் தமிழ்ப் படத்தை தனது விமானங்களில் திரையிடுவது இதுவே முதல் முறையாகும்.

டிசம்பர் 1ம் தேதியிலிருந்து அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் சிவாஜி திரைப்படத்தை பார்க்கலாம். இதற்காக இருக்கைகளின் பின்புறம் படத்தைப் பார்ப்பதற்கேற்ற வசதி செய்யப்படவுள்ளது.

முழு செய்திக்கு தட்ஸ்தமிழ் செல்லவும்.

அந்த செய்திக்கு வந்த கமெண்ட்ஸ் ரசிக்கும் படி உள்ளது.

Thursday, October 04, 2007

புதிய வகை ரீமேக் -நடிகர் Dr.விஜய் புதிய முயற்சி

இப்போது பழைய படங்களை மீண்டும் புதிய நடிகர்களை வைத்து எடுப்பது Fashion ஆகி உள்ளது. பில்லா, நான் அவனில்லை என பல படங்கள் அதுபோல வருகிறது. அஜித் தரப்பு பில்லா படத்தை வெளியிட இருப்பதால் அதற்கு பதிலடியாக தான் என்ன செய்வது என்று நீண்ட நாட்களாக Dr.விஜய் சிந்தித்து கொண்டு இருந்தார். மேலும் Doctor பட்டம் தற்போது கிடைத்திருப்பதால் அவருடைய பொறுப்பு பன்மடங்கு அதிகமாகி உள்ளதாக உணர்கிறார். இதை தொடர்ந்து Dr.விஜய் சரித்திரத்திலேயே இல்லாதவாறு புதிய வகை ரீமேக் முயற்சியை எடுக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இதன் படி அவர் நடித்த பல படங்களில் இருந்து பாடல் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை எடுத்து அவற்றை தேவையான படி தொகுத்து, புதிய படமாக ரீமேக் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து படங்களிலும் அவருடைய நடிப்பு அந்த கதாபாத்திரம் போல் இல்லாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பொதுவாகவே அவர் படங்களில் Logic இருக்காது, எனவே அவர் நடித்த படங்களில் இருந்தே காட்சிகளை வெட்டி எடுத்து அவற்றை ஒட்டி புதிய படத்தை எடுப்பது நிச்சயம் சாத்தியமானதே என கருதபடுகிறது. அதே சமயத்தில் படமும் நன்கு ஓடும் என்று கணக்கிடுகிறார்கள்.
இவ்வாறு ரீமேக் படம் எடுத்தால், உலக வரலாற்றிலேயே இது முதல் முறையாக இருக்கும். மேலும் வேறு எந்த நடிகரும் இதுபோல பிற்காலத்தில் கூட முயற்சி செய்ய முடியாது.
அனால் விஜய் இவ்வாறு ரீமேக் செய்து படம் வெளியிட்டாலும் அவரது ரசிகரும், பொதுமக்களும் அதை அவரது புதிய படம் என்றே நினைப்பார்கள் என்று எதிர்பாக்க படுகிறது. விஜய் எவ்வாறு அந்த படத்தை ரீமேக் படம் என்று மக்களுக்கு புரியவைப்பார் என்பது கேள்விகுறியே.

Saturday, September 22, 2007

இராமாயணத்தை திரிக்கும் VHP, RSS, BJP.

சேது பாலத்தை ராமர் கட்டியதாக கூறி போராட துடிக்கும் சங் பரிவாருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து சேது பாலத்தை இராமர் கட்டினார் என்று தவறான கருத்தை பரப்பாதீர்கள். சேது பாலத்தை குரங்குகளும் அணில்கலும் சேர்ந்து தான் கட்டின என்பது இராமாயணம் படித்த அனைவரும் அறிந்ததே. சத்திரியரான இராமன் பாலம் எல்லாம் கட்ட Design செய்ய கூடாது என்பது வருணாசிரம விதி. மேலும் அவர் காட்டில் திரிந்த போது கட்டியதால் அவர் அந்த Projectக்கு financeம் செய்ய பணமும் இல்லை. எனவே குரங்குகளும் அணில்கலும் Design செய்து கட்டிய பாலத்தை மனிதன் கட்டினான் என்று ஏன் திரித்து கூறுகிரீர்கள்?
உலகிலேயே விலங்குகளால் கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற பெருமையை ஏன் பறிக்க முயல்கிறீர்கள்? த்யவு செய்து அணிலின் முதுகில் இருக்கும் கோட்டை பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்.

Friday, September 21, 2007

கேரள பெருஞ்சுவர் - கேரள CPM அதிரடி

கடந்த சில வருடங்களாக தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை கேரள அரசு எதிர்த்து போராடி வருவது அனைவரும் அறிந்த்தே. முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகமாக்கும் பிரச்சனை மற்றும் சேலம் ரயில்வே கோட்ட பிரச்சனை போன்றவை இதில் அடங்கும்.
இதன் அடுத்த பரிமாணமாக கேரளா மாபெரும் புதிய திட்டத்தை பரிசீலிப்பதாக தெரிகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வரும் காற்று கொண்டு காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் காற்றாலைகள் நிறைய உள்ளன. எனவே இவற்றுக்கு வரும் காற்றை தடுக்க சீன பெருஞ்சுவர் போல பல மடங்கு பெரிதாக, ஆனால் மிக உயரமாக கேரள பெருஞ்சுவரை மேற்கு தொடர்ச்சி மலை கணவாய் பகுதியில் கட்ட உள்ளது. இவ்வாறு பல மடங்கு உயரமான சுவர் எழுப்புவதன் மூலம் கேரளாவிலிருந்து வரும் காற்றை தடுக்க முடியும் என கேரள அரசு கணக்கிடுகிறது.
இது குறித்து கேரள பொதுபணிதுறை அமைச்சர் கூறும் போது இந்த திட்டத்தை தடுக்க தமிழக அரசு நிதிமன்றம் சென்றால், தாங்கள் நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் சீத்தாராம் எச்சூரி ஆகியோரை கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்து தடுத்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதையும் மீறி நீதிமன்றம் சென்றால் கூட நிதி மன்ற முடிவுகளை காவிரி பிரச்சனையில் கர்நாடகம் உதாசீன படுத்தியது போல் தாமும் உதாசீன படுத்தி விடுவோம் என்றார். இந்த அளவு பிரச்சனை நடப்பது தெரிந்தாலும் தமிழக பொதுபணிதுறை அமைச்சர் துரை முருகன் கேரளாவில் அவ்வாறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே நாளை மறுநாள் நடக்க இருக்கும் கட்டை பஞ்சாயத்தில் கேரளா இந்த திட்டத்தை கைவிடவும் அதற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த கன்யாகுமரி மற்றும் நாகர்கோவில் முதலிய மாவட்டங்களை கேரளாவிற்கு கொடுத்து விடவும் ஒப்பந்தம் ஏற்படுத்த நிர்பந்திக்க படும் என்று தெரிகிறது. இதை திமுக,அதிமுக, காங்கிரஸ் எம.பிக்கள் சம்மதித்து கையெழுத்திட்டுவிட்ட பிறகு கண் துடைப்பிற்கு மறியல் நடத்துவார்கள் என்று தெரிகிறது.
கேரளாவின் இந்த திட்டத்தை திராவிட கட்சிகள் பெயரளவுக்கு எதிர்த்தாலும் CPM கட்சி மட்டும் தனது முழு ஆதரவை தெரிவித்து உள்ளது. தமிழக CPM கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த திட்டத்துக்காக சம்பளமே வாங்காமல் உழைக்க போவதாக கூறியுள்ளது. இதனை இந்திய ஒருமைபாட்டிற்க்கு ஒரு உதாரணமாக பிற்கால சரித்திரம் சொல்லும் என CPM மாநில தலைவர் வரதராஜன் கூறினார். மேலும் அடுத்த தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பெருஞ்சுவரை உடைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டி தொட்டிகளிலும் தெருமுனைகளிலும் போராட்டமும், பொது கூட்டமும் நடத்த படும் என்று கூறினார். இதன் மூலம் தாங்கள் தமிழ் மக்களுக்காக பாடுபடுவது உறுதி படுத்த படும் என்றார். சீனாவின் நன்மைக்காக மத்திய பொலிட்பீரோ 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பது போல், கேரள கம்யுனிஸ்ட்களின் நன்மைக்காக இந்த திட்டத்தை ஆதரிப்பதாக அவர் கூறினார்.
பின் குறிப்பு: இது ஒரு கற்பனை செய்தி(இன்று வரை).

Wednesday, April 18, 2007

சென்னையில் மெட்ரோ விமானச்சேவை-இந்த வருட சூடான செய்திகள்-1

(சென்ற வருடம் நமக்கு கிடைத்த சூடான செய்திகள் போல இந்த வருடம்
நமக்கு கிடைக்க போகும் சூடான செய்திகள் குறித்து கற்பனை செய்த போது
கிடைத்த செய்திகள்)கடந்த சில வருடங்களாக சென்னையில் பூமி்க்கு மேல், பூமி்க்கு கீழ்,ஆகாயத்தில் என அனைத்து வகையிலும் ரயில்கள் வரப் போவதாக வருடத்திற்கு ஒரு நான்கு முறையாவது புது புது செய்திகளாக வந்து சென்னை வாசிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி கொண்டிருந்தது. இனி சென்னையின் அனைத்து பகுதிகளையும் தாண்டி அனைத்து வீடுகளையும் ரயிலின் மூலம் இணைக்க போவதாக வதந்திகளும் பத்திரிக்கையில் உலவி வந்தது(ஆனால் ஏனோ தெரியலிங்க, இந்த வேளச்சேரி project மட்டும் தான் முடியவே மாட்டேங்குது!). இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக தமி்ழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக METRO விமான சேவை சென்னையில் தொடங்க உள்ளதாக தமி்ழக அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி் சட்ட சபையில் அறிவித்துள்ளார்.முதற் கட்டமாக இந்த விமான சேவை சோழிங்கநல்லூர்,மகேந்திரா சிட்டி மற்றும் அம்பத்தூர் இடையே இயக்கப்படும் என்றார். பிறகு இந்த சேவை பிற பகுதிகளுக்கும் விரிவு படுத்த படும் என்றார்.இது குறித்த ஆய்வு பணி இன்னும் 5 வருடத்தில் ஆரம்பிக்கும் எனவும், இந்த பணி அடுத்த நூற்றாண்டில் முடிந்து விடும் என்றும் அமைச்சர் கூறினார்.

Wednesday, April 11, 2007

ஷக்கீரா பாடலை தேசியகீதமாக்க நாரயணமூர்த்தி கோரிக்கை

ஷக்கீராவின் "Hips Don't Lie" பாடலை தேசியகீதமாக்க நாரயணமூர்த்தி கோரிக்கை விட இருப்பதாக கூறப்படுகிறது.
தன்னுடைய companyக்கு வரும் பன்னாட்டு கம்பெனியின் உரிமையாளர்கலுக்கு தற்போதைய தேசியகீதம் பிடிக்கவில்லை என்றும்
அவர்கள் விரும்பும் ஷக்கீராவின் "Hips Don't Lie" பாடலை தேசியகீதமாக்க அவர் விரும்புவதாகவும் தெரிகிறது.இதன் மூலம் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் போன்ற தலைவர்கள் வரும் போது அவமானமின்றி வெளி நாட்டினருக்கு பிடித்த பாடலை தேசியகீதம் என்ற பெயரில் பாட விடலாம் என்றார்.இது பற்றி பத்திரிக்கையாளர் "Cho" அவர்களிடம் கேட்டதற்கு,அவர் "Hips Dont Lie" பாடலை சமசுகிரதத்தில் மொழி பெயர்த்து அதை தேசியகீதமாக்கினால், நாட்டுபற்று பிரச்சினையும் வராது என்றார்.

Friday, July 21, 2006

தீட்சிதர்களுக்கு நன்றி

தில்லை நடராசருக்கு தமிழ் புரியாது என்பதை உலகுக்கு உணர்த்தும் தீட்சிதர்களுக்கு நன்றி . இனியாவது தமிழில் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தாம் வேண்டி கொள்வதை மொழி பிரச்சனையால் தில்லை நடராசருக்கு புரிய இயலாது என்பதைப புரிந்து கொள்ளட்டும். மேலும் இயக்குநர் ஷங்கர் படபிடிப்பெடுத்த புண்ணிய தலத்தை அசிங்க படுத்த நடந்த முயற்சிகளை முறியடித்த தீட்சிதர்களுக்கு நன்றி.