Showing posts with label தங்கம். Show all posts
Showing posts with label தங்கம். Show all posts

Monday, August 23, 2010

அமெரிக்க அரசின் தங்கத்திற்கு எதிரான போர் ஆரம்பம்?

அமெரிக்க அரசு தனது மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செலவீனங்களை சரி கட்ட புதிய சட்டத்தை(Health Care Reform Act of 2010,-Section 9006) அறிமுக படுத்தி உள்ளது. அந்த புதிய சட்டத்தின் படி $600க்கும் மேல் பொருட்களை விற்றால் முக்கியமாக தங்கம் மற்றும் வெள்ளியை விற்றால் அதனை வாங்குபவர்கள் அமெரிக்க அரசின் வருமான வரி துறையினரிடம் 2012 முதல் IRS க்கு form 1099 மூலம் அந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்க பட்டு அரசுக்கு $18 பில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.இதில் என்ன Conspiracy Theory என்று நினைக்கிறீர்களா?ஆது பற்றி அறிய பொருளாதாரத்தையும், சரித்திரத்தையும் சிறிது பின் சென்று பார்ப்போம்.

1500க்களில் இங்கிலாந்தில் வாழ்ந்த கிரஷாம் என்பவரின் கூற்று படி
"Bad money drives out good if their exchange rate is set by law."

அதாவது இரண்டு வகையான பணங்கள் நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதில் ஒரு பணத்தின் உலோக மதிப்பு அதிகமாகவும் மறு பணத்தின் உலோக மதிப்பை அரசு குறைத்து வெளியிடுகிறது என்றால், அதாவது இரு வேறு நாணயங்களில் 25 பைசாவில் 10கிராம் உலோகம்(உதாரணமாக தாமிரம்) இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அரசுக்கு அதிக அளவு பணம் தேவை தேவை படுவதால் ஒரு நாணயத்தில் 25 பைசாவில் 5 கிராம் மட்டும் உலோகம் வைத்து வெளியிட தொடங்கினால் மக்கள் குறைவாக உலோகம் உள்ள நாணயத்தை முடிந்த அளவு செலவு செய்து அதிக உலோகம் உள்ள முதல் நாணயத்தை சேமித்து வைக்க ஆரம்பிப்பார்கள். நாளாக நாளாக, வியாபாரிகள் முதல் நாணயத்தை கேட்க தொடங்குவார்கள். அதன் விளைவு முதல் நாணயத்தின் மதிப்பு மேலும் அதிகமாக, உலோக மதிப்பு குறைந்த இரண்டாம் நாணயத்தின் மதிப்பு மேலும் குறையும்.இதனை கிரஷாம் விதி என்பார்கள்.


இந்த விதி இரு உலோக அடிப்படையில் உள்ள நாணயத்தை பற்றியது என்றாலும், தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட கூடியது.1930க்களில் அமெரிக்க அரசு தேவைக்காக அதிக அளவு பணத்தை அச்சடிக்க ஆரம்பித்தது. அது வரை முழுமையாக, டாலருக்கு இணையான தங்கத்தை அரசு திரும்பி தரும் நிலையில் இருந்தது. ஆனால் அரசின் பண உற்பத்தியை கண்டு சந்தேகமடைந்த மக்கள் மிக பெறிய பண வீக்கம் அடைந்து பணத்தின் மதிப்பு குறையும் என்ற சந்தேகத்தில் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்கள். பொதுவாக தங்கத்தை பணவீக்கத்திலிருந்து தங்களை பாதுகாக்கும் காரணியாக (Hedge against Inflation)மக்கள் நினைப்பது வழக்கம்.டாலருக்கு இணையாக தங்கமும் ஒரு சேமிப்பு மற்றும் பண்ட மாற்று சக்தியாக வளர்வதை கண்ட அன்றைய அமெரிக்க பிரதமர் ரூஸ்வெல்ட் , மக்கள் வைத்திருக்கும் தங்கம் அனைத்தையும் அன்றைய மார்கெட் மதிப்புக்கு பணம் கொடுத்து பறிமுதல் செய்ய தொடங்கினார். மக்கள் தங்கத்தை வைத்திருந்தால் அதை குற்றமாக அறிவித்தார்.

தற்போதைய நிதி நெறுக்கடி மற்றும் தொடர்ச்சியான போரின் காரணமாக அமெரிக்க அரசு மற்றும் வங்கிகளின் பண நெறுக்கடி அதிகமானதால் பல ட்ரில்லியன் டாலர்களை சிறிது சிறிதாக அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்தில் கலக்க தொடங்கி உள்ளது. இது இன்னும் சில ஆண்டுகளில் Fractional Reserve System மூலம் மிக அதிகமான பண புழக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.இந்த சூழ்நிலையை கிரஷாம் விதியுடன் தொடர்பு செய்து பாருங்கள்.முன்பு சொன்னது போல் மதிப்பு மிக்க முதல் நாணயமாக தங்கத்தையும், மதிப்பு இழந்து கொண்டிருக்கும் இரண்டாம் நாணயமாக பணமும் இருப்பாதாக பாருங்கள்.

இனி அமெரிக்க அரசின் Health Care Reform Act of 2010,-Section 9006 சட்டத்திற்கு வருவோம். மேற் சொன்ன சட்டம் மூலம் அரசுக்கு தங்க விற்பனை பற்றிய அனைத்து செய்தியும் முழுமையாக போய்விடும். யார் யாரிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து விடலாம். மேலும் பிற்காலத்தில் தங்க விற்பனையை தனிமை படுத்தி அதற்கு மிக அதிகமான வரியை விதித்து, சாதாரண மக்களிடமிருந்து தங்க சேமிப்பை அன்னிய படுத்த முயலலாம். நிலமை மோசமானால் ரூஸ்வெல்ட் செய்தது போல் ஒட்டு மொத்த தங்கத்தையும் மக்களிடமிருந்து பறிமுதல் செய்து விட்டு, அரசு அடிக்கும் பணத்திற்கு மாற்றாக எதுவுமே இல்லாமல் செய்யலாம்.

ஆனால் தங்கத்துக்கு ஆதரவான பொருளியல் வல்லுனர்கள், தங்கம் என்பது பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ற சேமிப்பு செல்வமாக உள்ளது. தங்கத்தை அழிக்க முயன்றவர்கள் யாருமே வெற்றி பெற்றதில்லை என்கிறார்கள்.

இதையடுத்த அமெரிக்காவில் தங்கத்தை சேமித்து வைத்துள்ள நிறுவனங்கள் , தங்கத்தை அய்ரோப்பிய வங்கிகளுக்க மாற்ற முயல தொடங்கி விட்டதாக செய்திகள் வர தொடங்கியுள்ளன.

தங்கத்தின் மதிப்பு எவ்வாறு இருக்கும் எனபதை Supply angleலிருந்து பிறிதொரு பதிவில் காண்போம்

--

Monday, June 21, 2010

தங்கத்தை வாங்கி குவிக்கும் சவுதி அரேபியா

1989ம் ஆண்டு உலக சேமிப்பு செல்வத்தில்(Reserve) தங்கத்தின் பங்கு 32.7 சதவிதம் இருந்தது.யூரோ அறிமுகபடுத்த பின் அய்ரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை சிறிது சிறிதாக விற்க ஆரம்பித்தனர்.ஆசிய வங்கிகளோ அமெரிக்க கடன் பத்திரங்களை(டாலர்) அதிக அளவில் சேமிப்பு செல்வமாக வாங்கி குவிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக தங்கத்தின் பங்கு சேமிப்பு செல்வத்தில் 10.3 சதமாக குறைந்தது.அரசாங்கங்களால் அடிக்கப்படும் பணம் மற்றும் பணம் அடிப்படையிலான செல்வங்களுக்கு மாற்றாக இருக்கும் சேமிப்பு செல்வமாக( anti dollar) தங்கத்தை கருதலாம்.சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக மத்திய வங்கிகள் பண புழக்கத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் கூடிய விரைவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கணிப்பு பல பொருளாதார வல்லுனர்களிடம் உள்ளது.அதனால் பண வீக்கத்திடமிருந்த ஓரளவு பாதுகாப்பு பெற அனைவரும் தங்கத்தை நாடுவது வழக்கம்.அதன் விளைவாக தற்போது அய்ரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கும் வேகத்தை சிறிதளவு குறைத்துள்ளனர்.

தற்போது ஆசிய மற்றும் பிற வளரும் நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தியா 200 டன் தங்கத்தை சர்வ தேசிய நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கியது.ஆனால் சீனாவோ கடந்த 6 ஆண்டுகளில் கமுக்கமாக தன் தங்க கையிருப்பை இரு மடங்காக்கி விட்டது. சீனா மறைமுகமாக அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.இந்தியா சீனா மட்டுமின்றி ரஸ்யா,வெனிசூலா,மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தியா சீனா போன்ற நாடுகள் தங்கத்தை அதிக அளவு வாங்கினாலும் தங்களது சேமிப்பு செல்வத்தில் தங்கத்தின் பங்கு 2 - 6 சதவிதம் மட்டுமே உள்ளது.ஆனால் அமெரிக்காவிடம் உலக சேமிப்பு செல்வத்தில் உள்ள தங்கத்தில் 77 சதவிதம் உள்ளது குறிப்பிட தக்கது.

இந்த வரிசையில் வெளி வந்துள்ள சமீபத்திய செய்தி சவுதி அரேபியா பற்றியது. சவுதி அரேபியாவின் தங்க கையிருப்பு 322.9 டன்கள் என்று தெரிய வந்துள்ளது. இது சவுதி அரேபியா வைத்திருந்ததாக கருதபட்ட தங்கத்தின் அளவை விட ( 143 டன்கள் ) இரு மடங்கிற்கும் அதிகமானது ஆகும்.சமீப காலமாக வளைகுடா நாடுகள் இணைந்து பொது நாணயத்தை வெளியிட முயற்சி செய்தனர். இந்த வருடம் அந்த நாணயம் வந்து இருக்க வேண்டும். யூரோ பிரச்சனையினாலும் பிற காரணங்களினாலும் அது மேலும் 5 ஆண்டுகளுக்கு தள்ளி போய் உள்ளது. அந்த பொது நாணயம் தங்க கையிருப்பை கொண்டு, தங்க மாற்று நாணயமாக இருக்கலாம் என்ற வதந்தி உளவி வந்தது.அந்த வதந்திக்கும் இந்த செய்திக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சீனா மிக அதிக அளவு தங்கத்தை வாங்கினால் தங்கத்தின் விலை அதிகம் உயர்ந்து, அதற்கு மாற்றான அமெரிக்க டாலரின் மதிப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.சீனாவின் சேமிப்பு பெருமளவு டாலராக இருப்பதால்,இது சீனாவுக்கு பெரிய பாதிப்பாக அமைய வாய்ப்புள்ளது. உலகில் அதிகமாக உபரி பணம் வைத்துள்ள சீனா இதனால் அதிக அளவு தங்கத்தை குறைந்த கால இடைவெளியில் வாங்குமா என்பதும் சந்தேகமே.மேலை நாடுகளின் தங்க கையிருப்பு குறைந்து வருவதால் அந்நாடுகள் மரபு சாரா முறைகளில் எதாவது உத்தியை கொண்டு தங்கத்தின் விலை ஏற்றத்தை கட்டு படுத்த வாய்ப்பு எப்போதும் உள்ளது!

--

Monday, June 01, 2009

கையிருப்பு தங்கத்தை விற்று தீர்க்கும் அமெரிக்கா?

அமெரிக்க நிதி நெருக்கடியை தொடர்ந்து, நிலமையை சரி செய்ய பெடரல் ரிசர்வ் வங்கி அதிக அளவு பணத்தை வெளியிட தொடங்கியது அனைவரும் அறிந்ததே. அதனால் டாலருக்கு மாற்றாக வேறு நாணயமோ அல்லது தங்கம் போன்ற பொருட்களோ அதிக முக்கியதுவம் பெறும் என்று பரவலாக எதிர் பார்க்க பட்டது .பெரும்பாலோனோரின் கணிப்பு தங்கம் அதிக விலை போகும் என்பதாயிருந்தது. ஆனால் தற்போது இன்னொரு உண்மை வெளியாக தொடங்கி உள்ளது. அமெரிக்கா தன்னிடம் உள்ள தங்கத்தை மிக வேகமாக விற்க தொடங்கி உள்ளது. கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு மட்டும் 5000 மெட்ரிக் டன் எடையுள்ள தங்கத்தை விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சுமார் 62% கையிருப்பு தங்கம் என்று கூறபடுகிறது. இதற்கு பின்னனியில் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.

--

Sunday, March 01, 2009

தங்கத்தின் விலை தொடர்ந்து உயருமா?


இனி வரும் காலங்களில் தங்கம் விலை எந்த அளவு உயரும்? இதுதான் இன்று உலக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் மக்கள் முக்கியமாக இந்திய மக்களிடம் அதிகம் விவாதிக்க படும் செய்தியாக உள்ளது?

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து இந்திய பெண்மணிகளும் விரும்பி அணிவது தங்க ஆபரணங்கள். அப்படிபட்ட தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கான சாத்திய கூறுகளுக்கான காரணங்களை பற்றி பார்ப்போம்.

பொருளாதார வல்லுனர்களில் இரு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் தங்கம் என்பது பணத்தை போல் நினைத்த அளவு அதிகம் உற்பத்தி செய்ய முடியாது.அதை உற்பத்தி செய்யும் செலவும் பணத்தை உற்பத்தி செய்வதை விட மிக அதிகம். மேலும் தங்கத்தின் மதிப்பு பல காலமாக நிலை நிறுத்த பட்டுள்ளது(Stable Price). முக்கியமாக பணத்தை நாடுகள் செய்யும் உற்பத்தியை(Production) விட அதிக அளவு வெளியிடுவதால் பண வீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு குறைந்து விடும் நேரங்களில், மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை பணவீக்கத்தில் இருந்து காக்க தங்கத்தில் முதலீடு செய்ய முனைவதால் தங்கத்தின் மதிப்பு இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று வாதிடுவர்.

தங்கத்தின் விலை உயராது என்று கூறுகிறவர்கள் தங்கம் என்பது ஆபரண மதிப்பு மட்டுமே உள்ள ஒரு பொருள். தங்கத்தின் மதிப்பு பணத்துக்கு பதிலாக தங்கத்தை மாற்றாக (gold convertibility) அரசுகள் கொடுத்த வரை இருந்தது. அமெரிக்கா 1971ல் இந்த முறையை கைவிட்டதிலிருந்து தங்கத்தின் செயற்கையான மதிப்பு குறைய தொடங்கி விட்டது. மேலும் பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவை அரசாங்கம் அச்சிடும் பணத்தை அடிப்படையாக கொண்டவை,என்வே பணத்தை அடிப்படையாக கொண்ட இவ்வகை சொத்துக்களில் முதலீடு செய்தால் அவற்றின் வளர்ச்சி தற்போது குறைவாக இருந்தாலும் நிச்சயம் பொருளாதார சீர்கேடு சரியான பிறகு , தங்கத்தில் செய்யும் முதலீடு தரும் லாபத்தை விட அதிகமாக இருக்கும் என்பர். இவ்வகை காரணங்களால் தங்கத்தை Anti dollar(பணம்) என்று கூறுவர்


தங்கத்தை பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவும் ஆபரணம் செய்வதற்காகவும் வாங்குவார்கள். அரசோ செல்வ கையிருப்புக்காக (Reserve) வாங்குவர். உலகில் உள்ள தங்கத்தில் 19% நடுவண் வங்கிகளில்(Central Banks) சேமிப்பாக உள்ளது. பிற முதலீடுகளில்(அதாவது பாண்டுகள்,பங்கு சந்தை, நிலம் etc) அதிக அளவு லாபம் ஏற்படவிலலை என்றாலும், தங்கள் நாட்டின் நாணய மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடையும் என்று நினைத்தாலும் பொதுவாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முற்படுவர். உலகிலேயே அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இதற்கு காரணம் தங்கம் ஒவ்வொரு இந்தியராலும் முதலீடு செய்வதற்காகவோ அல்லது ஆபாரணம் செய்வதற்காகவோ வாங்குவதால் தான்.கடந்த சில வருடங்களாக சீன மக்களும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்து விட்டனர்.அவர்களுடைய தங்கம் வாங்கும் திறன் அமெரிக்காவை தாண்டி விட்டது.


தங்கத்திற்கு எதிராக கூறப்படும் வாதம்.

1. தங்கத்திற்கு என்று தொழிற்சாலைகளில் பெரிய உபயோகம் கிடையாது. கச்சா எண்ணெய் போன்ற commodityகளுக்கு அனைத்து துறைகளிலும் உள்ள உபயோகம் போல் தங்கத்திற்கு இல்லை.டாலரை கொடுத்து தங்கத்தை திருப்பி பெற(convertibility to gold) வாய்ப்பு முன்பு இருந்ததால்(விவரத்திற்கு டாலர் அரசியல் படிக்கவும்) தங்கத்திற்கு மதிப்பு இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லாததால் தங்கத்திற்க்கு மதிப்பு எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது.

2. உலகில் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது பணத்தின் மதிப்பு குறையும் என்பதால் தங்கத்தின் மதிப்பு கூடும் என்பர், ஆனால் பொருளாதார விழ்ச்சியின் போது அடிபடை பொருட்களின் தட்டுபாட்டாலும், மக்கள் வாங்கும் திறன் குறைவதாலும் அதன் மதிப்புதான் கூடுமே தவிர தங்கத்தின் விலை கூடபோவதில்லை.

3. பொருள்களுக்கு மதிப்பு உள்ளது.அனால் பணத்திற்கு? (டாலருக்கு) பணம் என்பது வெறும் பேப்பர் தான்.அதன் மதிப்போ மக்கள் அதன் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் உள்ளது. இதே போல் தான் தங்கதிற்கும். நாம் நம்பிக்கை வைத்துள்ளவரை தான் அதற்கு மதிப்பு. எனவே தங்கம் மற்றும் டாலர் இரண்டும் ஒரே நிலையில் தான் உள்ளது
‘Confidence is the most important thing, more important than gold or currency’

4. கடந்த கால வரலாற்றை பார்த்தால் பங்கு சந்தை மற்றும் Bondல் செய்த முதலீடு தங்கத்தை விட அதிக லாபத்தை தந்துள்ளது. உதாரணமாக 1801ம் ஆண்டு ஒரு டாலர் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு $8.8 மில்லியனாக பெருகியிருக்கும். அதையே Bondல் முதலீடு செய்திருந்தால் அது $14,000 அகியிருக்கும். அதையே தங்கத்தில் முதலீடு செய்தால் அது இன்று $150 ஆக மட்டுமே ஆகியிருக்கும்.

தங்கத்திற்கு ஆதரவாக கூறப்படும் வாதம்

1. தங்கத்தையும் பணத்தையும் ஒப்பீடு செய்பவர்கள் 1700ஆம் ஆண்டிலிருந்து கணக்கை எடுப்பர். ஆனால் 1971 வரை தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யபட்டதாக(Fixed Price) இருந்தது.அது முதலீடாக பார்க்க பட்டதை விட பணமாக தான் பார்க்க பட்டுள்ளது. அது போல் 1700ல் இருந்த எந்த கம்பெனியும் தற்போது இல்லை.எனவே தங்கத்தின் விலையை 1970க்கு பிறகுதான் பார்க்க வேண்டும் 1968- 80 க்குள் தங்கதின் விலை 230% உயர்ந்துள்ளது. ஆனால் பங்கு சந்தை அந்த அளவு உயரவில்லை. மேலும் பங்கு சந்தை வளர்ச்சியை, மூடிய நிறுவனங்கள் மற்றும் தோல்வி அடைந்த நிறுவனங்களை நீக்கி செயற்கையாக உயர்த்தி காண்பித்தும் தங்கதின் வளர்ச்சி அளவுக்கு அது இல்லை.

2. உலகின் சேமிப்பு செல்வமாக அதிக அளவில் இருப்பது டாலர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அமெரிக்க நிதி நெருக்கடியும் , அதன் அதிகரித்து வரும் பற்றாக்குறை பட்ஜெட் காரணமாகவும் அது அதிக அளவில் டாலரை அச்சடித்து வினியோகம் செய்வதால் டாலரின் மதிப்பு நீண்ட கால அளவில் எவ்வாறு நீடிக்கும் என்பது கேள்விக்குறியே. டாலருக்கு மாற்றாக கருதபட்ட யூரோவும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. எனவே உலக அளவில் அனைவரின் கவனமும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அதிக பணத்தை அடிப்பதால் பண வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.என்வே பணத்தின் மதிப்பு மிக அதிக அளவில் குறையலாம். அவ்வாறு குறையும் போது தற்போது உள்ள செல்வத்தை மதிப்பிழக்காமல் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்தால் தான் முடியும்.எனவே தங்கத்தில் அதிக அளவு மக்கள் முத்லீடு செய்வர்(Gold is best inflation hedge). இதன் மூலம் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.

3. தங்கத்தை நல்ல முதலீடாக கருதுபவர்கள் அதன் விலை பெருமளவுக்கு உயராமல் இருப்பதற்கான காரணம் தங்கத்தின் விலையை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த முதலீட்டு வங்கிகளும், மேல்நாட்டு மத்திய வங்கிகளும் நேரடியாக/மறைமுகமாக செய்த பரிவர்த்தணை காரணமாக செயற்கையாக குறைத்து வைத்து இருந்தது தான் என்கிறார்கள். இது நாள் வரை தங்கத்தின் விலை டாலரின் மதிப்பை சார்ந்து ஏற்ற இறக்கமாக இருந்தது.அதாவது இரண்டின் விலையும் ஒன்றை ஒன்று சார்ந்ததாக கருத பட்டது.தற்போது ஏற்பட்ட முதலீட்டு வங்கிகளின் வீழ்ச்சியால், இனி அவர்களால் இது போல் செய்வது கடினம் என்று கருதுகிறார்கள். அவர்களின் கருத்தை ஆமோதிப்பது போல் சர்வ தேச சந்தையிலும் தங்கத்தின் மதிப்பு கடந்த சில காலமாக டாலரின் ஏற்ற இறக்கத்திர்கு மதிப்பளிக்காமல் சீராக விலை ஏற தொடங்கி உள்ளது

4. Gold convertibility to dollar இல்லாததால் தங்கத்திற்கு மதிப்பு இல்லை என்று சொல்ல படுவது உண்மை என்றால், தங்கத்தின் விலை 1971க்கு பிறகு பெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ந்டக்க வில்லை. தங்கத்தின் விலை 1971 க்கு பிறகு gold convertibility to dollar மறைந்த பின்னும் விலை ஏறி கொண்டு தான் உள்ளது. எனவே அந்த கூற்று உண்மையில்லை.


உலக பொருளாதாரத்தில் எது எப்பொழுது நடைபெறும் என்று கணிப்பது இயலாத காரியம். சமீப காலமாக பொருளாதாரத்தின் அடிப்படை விதிகள் களங்கடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரியல் எஸ்டேட் துறை 30% மேல் வீழ்ச்சி அடையாது என்பது அனைவரின் கருத்து.அது பொய்த்து போனது தான் சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானது. இந்த பதிவை படிப்பவர்கள் தங்கத்திற்கான ஆதரவு மற்றும் எதிப்பு கருத்துகளை படித்து இனி வரும் காலங்களில் எந்த கருத்துக்கு அதிக வாய்ப்புள்ளது என்று முடிவு செய்து அதன் ஏற்றம் பற்றி முடிவு செய்யலாம்.

என்னை பொருத்தவரையில் தற்போதய நிதி நெருக்கடியால் டாலரின் தேவை அதிகம் இருப்பதால் தங்கம் விலை குறுகிய கால அளவில் தொடர்ந்து ஏறி கொண்டிருப்பது கடினம். ஆனால் தற்போது அமெரிக்க அரசு பல்லாயிரம் பில்லியன் பணத்தை வங்கிகளுக்கு கொடுத்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால் வங்கிகள் அவற்றை இன்னும் கடனுக்கு கொடுக்க ஆரம்பிக்கவில்லை. அவற்றை கடன் கொடுக்க ஆரம்பித்தால் அது பல டிரில்லியன் டாலர்கள் பண புழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும்(பில்லியன் எவ்வாறு ட்ரில்லியன் ஆகிறது என்று அடுத்த பதிவில் விளக்குகிறேன்).அப்போது பண வீக்கம் பெருமளவு அதிகரித்து டாலரின் மதிப்பு குறைய வய்ப்புள்ளது. எனவே அது போன்ற சூழ்நிலை(1-2 ஆண்டுகளில்) வந்தால் அல்லது வரும் என்று யூகம் கிளம்பும் போது தங்கம் விலை பெருமளவு உயர வாய்ப்புள்ளது. அதேசமயம் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் 1971 ல் Convertibility to gold எடுத்தது போன்ற தார்மீக ரீதியாக தவறான மற்றும் யாரும் எதிர் பார்க்காத unconventional ந்டவடிக்கை ஏதேனும் எடுத்து தங்கத்தின் விலையை குறைத்து டாலரின் மதிப்பை தக்க வைக்க முயலலாம்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் மேலை நாடுகளின் வங்கிகள் தங்களிடம் உள்ள தங்கத்தை சிறிது சிறிதாக விற்க தொடங்கி உள்ளது.அதற்கு காரணம் அரசுகளின் பணத்தை(டாலர்) அடிப்படையான முதலீடுகளின் லாபம், தங்கத்தினால் கிடைக்கும் லாபத்தை விட அதிகம் என்று கூற பட்டாலும், உலகலவில் தங்கத்தை சேமிப்பு செல்வமாக இருக்கும் பழக்கத்தை சிறிது சிறிதாக அழித்து நாடுகள் அடிக்கும் பணத்திற்கு மற்றாக பெரிய அளவில் எந்த செல்வமும்(govt reserve) முக்கியமாக தங்கம் வந்து விட கூடாது என்பதே என்று கருத பட்டது. (இங்கிலாந்து சுமார் 400 டன் தங்கத்தை 1999- 2002 ல் விற்று, தற்போதைய தங்க விலை ஏற்றத்தால் $10 பில்லியன் நட்டத்தை சந்தித்துள்ளத்து என்பது வேறு விஷயம்! )தற்போது உலகில் உள்ள பல பெரிய வங்கிகள் வீழ்ந்து உலக அளவில் விரல் விட்டு எண்ண கூடிய அளவில் மிக பெரிய வங்கிகள் உருவாவதால், இது போன்ற குறுக்கு வழி மற்றும் தார்மீகத்திற்கு அப்பாற்பட்ட வழிகளை உலக நாடுகளும் வங்கிகளும் சேர்ந்து பின் பற்றுவது மிகவும் எளிதாகலாம்.

Warren Buffett on Gold:
It gets dug out of the ground in Africa, or someplace. Then we melt it down, dig another hole, bury it again and pay people to stand around guarding it. It has no utility. Anyone watching from Mars would be scratching their head.



--

Saturday, December 20, 2008

டாலர் vs தங்கம்

1970 க்கு முன்பு வரை அமெரிக்கா வெளியிட்ட டாலருக்கு நிகராக தங்கத்தை கையிருப்பில் வைத்திருந்தது.டாலரின் மதிப்பு ஒரளவு தஙத்தினால் நிலைநிறுத்த பட்டிருந்தது. ஆனால் 1970களுக்கு பிறகு இந்த நிலை மாற தொடாங்கியது.இது பற்றி டாலர் அரசியல் என்ற பதிவில் எழுதி இருந்தேன். 1970களுக்கு பின் அமெரிக்கா கணக்கின்றி டாலரை அச்சிட தொடங்கியது. அமெரிக்கா தான் வாங்கிய கடனுக்கு தஙகத்தை திருப்பி தர வேண்டியிருந்தால், தற்போதைய சூழ்நிலையில் எந்த அளவுக்கு திரும்பி கொடுக்க முடியும் என்று பார்ப்போம்.

அமெரிக்காவின் தற்போதைய கடன்: $10,598,468,155,070($10.5 டிரில்லியன்கள்)

அமெரிக்காவின் தங்க கையிருப்பு: 261,498,899.316 (261 மில்லியன்)அவுன்சுகள்.

1 அவுன்சு விலை $837 என்று வைத்து கொண்டால் அமெரிக்க கையிருப்பின் மொத்த மதிப்பு: 218,874,578,728($218 பில்லியன்).

இந்த தகவலை வைத்து பார்த்தால் 2% கடன்களுக்கு மட்டுமே தங்கத்தை திருப்பி கொடுக்க முடியும்


அதாவது சுமார் 4842 சதம் வீக்கமடைந்துள்ளது(inflated). இது கடன் தொகையை மட்டும் வைத்து கணக்கிட பட்டது.உள் நாட்டு பண புழக்கத்தை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.
அமெரிக்க அரசு gold convertability முறையை கைவிட்டு விட்டதால் அதற்கு தங்கத்தை கட்டாயம் சேமித்து வைக்கும் அவசியம் இல்லை. அது அவ்வாறு சேமித்து வைக்க தொடங்கியிருந்தால் தங்கம் விலையும் இப்போது போல் இருந்திருக்காது(அமெரிக்காவாலும் இந்த அளவு கடன் வாங்கி இருக்க முடியாது). எனவே இது முழுமையான தகவலாக இருந்திருக்காது. ஆனாலும் இந்த செய்தி உண்மையான டாலரின் மதிப்பையும்,தங்கத்தின் மதிப்பையும் கணிக்க உதவும்.

சமீபத்திய நிதி நெருக்கடியால் மேலும் சிறிதளவு தங்கத்தை விற்று விடவும், பெரிய அளவு பணத்தை அச்சிட போவதாகவும் செய்திகள் வெளிவர தொடங்கி உள்ளது. அவ்வாறு நடந்தால் நிலமை மேலும் மோசமாகக்கூடும்.