Sunday, November 28, 2010

அயர்லாந்து பெயில் அவுட் - நடந்தது என்ன?

தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேச படும் செய்தி அயர்லாந்து பெயில் அவுட். வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படு பாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்க படுகிறது என்ற செய்தி. ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு தான். இதன் பயனை அனுபவிக்க போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும் , இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்பட போகும் இழப்புகள் விழ போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை. முன் பதிவில் அமெரிக்காவில் உள்ள வங்கிகளை காக்க நடந்த நூதன பெயில் அவுட் பற்றி எழுதி இருந்தேன். இது ஐரோப்பிய வங்கிகளை காக்க நடக்கும் நூதன பெயில் அவுட்.

ஒவ்வொரு நாடும் தனது வரவுக்கு மீறி செலவு செய்யும் போது மிக பெரிய பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக அரசுகள் போரில் ஈடு படும் போது இந்த நிலை ஏற்படும். மக்கள் நல பணிகளை வரவுக்கு மீறி அதிக அளவு செய்தாலும் இது போல் பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையின் அளவு நாட்டின் உற்பத்தியை விட மிக அதிகமாக சென்றால் அந்த நாட்டினால் கடனை திருப்பி தர முடியுமா? என்ற சந்தேகம் வருவதால், ரிஸ்க் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி கடனுக்கான வட்டி வீதம் மிக அதிகமாகும். இதன் விளைவாக புதிய கடனை வாங்கும் போதும், பழைய கடனை புதுப்பிக்கும் போதும் நிதி பிரச்ச்னை ஏற்பட்டு பெயில் அவுட் தேடி நாடுகள் செல்ல கூடும். ஆனால் அயர்லாந்தின் உண்மை நிலை அதுவல்ல. கடந்த இரு ஆண்டுக்கு முன்பு வரை அந்நாட்டு அரசின் பட்ஜெட் பற்றாக்குறை விகிதம் GDP இல் 12% தான் இருந்தது. இது பிற ஐரோப்பிய நாடுகளை(ஜெர்மனி - 40% , பிரான்ஸ் - 60% ) விட குறைவு.அப்படி என்றால் அரசு மிகவும் பொறுப்பாக அரசாங்கம் நடத்தி வந்து இருக்கிறது.

அயர்லாந்துக்கு வில்லன் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் அந்நாட்டு நிதி துறையில் இருந்த கட்டு பாடற்ற சுதந்திரத்தால் வந்தது.அமெரிக்க வங்கிகள் அமெரிக்க அரசு நடத்திய போர்களாளும், SubPrime கடன்களாளும் மிக பெரிய லாபத்தை குறுகிய காலத்தில் காட்ட தொடங்கிய போது, ஐரோப்பிய வங்கிகளும் அவர்களோடு போட்டி போட்டு லாபம் காட்ட எதாவது செய்ய முயன்றன.(அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய வங்கிகள் பெருமளவு லாபம் காட்டியது என்பதும் குறிப்பிட தக்கது).ஜெர்மனி பிரான்சு நாட்டு வங்கிகள் தங்கள் நாடுகளில் நிதி துறையில் கட்டுபாடு அதிகம் இருந்ததால் அங்கு கண்ட படி கடன் கொடுத்து லாபம் காட்ட முடியவில்லை. இந்த ஐரோப்பிய வங்கிகளோடு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வங்கிகளும் புதிய சந்தை தேடி ஐரோப்பாவில் வேட்டையை தொடங்கின. அப்போது ஐரோப்பாவில் அதிக அளவு செலவு செய்து கொண்டு இருந்த நாடுகளின் பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க கடன் கொடுத்தும் , அங்கு வங்கி துறை கட்டுபாடு குறைவாக இருந்த நாடுகளில் கடனை அள்ளி கொடுத்தும் தன் பேலென்ஸ் ஷீட்டை பெருக்கி காட்டினர்
.அயர்லாந்து நாடு இதில் இரண்டாவது ரகம்.வங்கிகள் தங்கள் கட்டுபாட்டில் இருந்த மீடியா மூலம் அயர்லாந்தில் மிக பெரிய வளர்ச்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு வர போவதாகவும்,நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை வரலாறு காணாத வளர்ச்சி காண போவதாக செய்திகளை பரப்பின.அயர்லாந்தில் நிதி துறையில் கட்டுபாடு சிறிதளவே இருந்ததால் கட்டுமான துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு அளவில்லா கடன் வழங்க பட்டது.இந்த கடனுக்கான பணம் எல்லாம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் மூலம் வந்தது. இந்த கடனின் அளவு எவ்வளவு அதிகம் என்று அறிய கீழ் காணும் படத்தை பார்த்தால் புரியும். இந்த படத்தில் ஐரோப்பிய நாடுகளின் அரசின் பட்ஜெட் பற்றாகுறையும், அந்த நாடுகளின் தனியார் வங்கிகள் அயர்லாந்துக்கு அளித்த கடனும் ஒப்பிட பட்டுள்ளது.ஜெர்மனி நாட்டின் பட்ஜெட் பற்றாகுறையை விட அந்நாட்டு வங்கிகள் அயர்லாந்துக்கு கொடுத்துள்ள கடன் தொகை அதிகம்!



வழக்கம் போல் ஒரு வீக்கம் வந்தால் ஒரு வாட்டம் வரத்தானே வேண்டும். அந்த வாட்டம் வர தொடங்கிய போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்ததை போலே ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடைந்தது. உண்மையில் சந்தை பொருளாதார கூற்று படி பார்த்தால் தவறான கணிப்பின் மூலம் கடன் கொடுத்த ஐரோப்பிய வங்கிகள் தங்கள் முதலீட்டில் நட்டத்தை சந்திக்க வேண்டும்.தாங்க முடியாத நட்டத்தை அடையும் அயர்லாந்து வங்கிகள் திவாலாக வேண்டும்.ஆனால் தங்களது தவறான முடிவால் ஏற்பட்ட நட்டத்தை ஏற்று கொள்ள ஐரோப்பிய வங்கிகள் தயாரக இல்லை. அயர்லாந்து நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் IMF மூலம் அழுத்தம் தர பட்டது.அரசு வேறு வழியின்றி திவாலை சந்திக்க இருந்த வங்கிகளை அரசுடமையாக்கியது. அதாவது வங்கிகள் சுமக்க வேண்டிய சிலுவையை அரசு சுமக்க தொடங்கியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால் பணத்தை வேண்டிய அளவு பிரிண்ட் செய்து Quantitative Easing என கூறி நிலமையை சமாளித்து விடலாம்.அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாவிட்டலாவது நாணய மதிப்பை குறைத்தல் அல்லது வேறு எதாவது யுக்தியை பின் பற்றி இருக்கலாம்.பாவம் அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.

வங்கிகளின் கடன் அரசின் தலையில் விழுந்ததால் அதன் கடன் சுமை அதிகமாகியது. அதன் கடனை திருப்பி செலுத்துமா என்ற நம்பக தன்மையும் குறைய ஆரம்பித்தது.அது மட்டுமல்ல, சந்தையில் அனுமானிப்பவர்கள் (Speculators) வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச ஆரம்பித்து விட்டனர்.சந்தையில் அயர்லாந்து கடன் பெற 8% க்கும் மேலாக வட்டி செலுத்த வேண்டிய கட்டயத்திற்கு தள்ள பட்டது. தனது அதிகமான கடனை 8% மேல் கொடுத்து வாங்கினால் , அந்நாடு மீண்டும் கடனுக்கான Vicious Circleல் வீழ வாய்ப்புள்ளது.அயர்லாந்து அரசு வட்டிக்கு கடன் வாங்க ஐரோப்பிய யூனியன் மற்றும் IMF நோக்கி செல்ல ஆரம்பித்தது. IMF இடம் சென்றால் தான் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமே!. அது ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு விழுந்திருக்க வேண்டிய பாரத்தை அயர்லாந்து மக்களிடம் இறக்கி வைக்க சொல்லி விட்டது. இந்த பிர்ச்ச்னைக்கு முன் நியாயமான பட்ஜெட் போட்டு அளவோடு மக்கள் நலனுக்காக செலவு செய்த அரசை மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்க சொல்லி அழுத்தம் கொடுத்து வெற்றியும் பெற்று விட்டது.அரசு எடுத்துள்ள ஒரு சில முடிவுளை நீங்கள் பார்த்தால் என்ன நடக்கிறது என்று நீங்களே யூகித்து கொள்வீர்கள்.

1.குறைந்த பட்ச தொழிலாளர் ஊதியம் 10 சதத்துக்கும் மேலாக குறைக்க பட்டுள்லது
2. ஏற்கனவே வீட்டு கடனை கட்ட முடியாதவர்கள் இருக்கையில் 530மில்லியன் யூரோவுக்கான புதிய வீட்டு வரி
3.மக்கள் நலவாழ்வுக்கான பட்ஜெட் 3பில்லியனுக்கும் மேல் கட்.
4. வருமான வரி உயர்வு.
5. பொது துறை தொழிலாளர்கள் ஆட் குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு.


இது போன்ற முடிவுகளை எடுத்துள்ளதால் அயர்லாந்து அரசுக்கு சிறிது குறைந்த வட்டியில் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் IMFஇடமிருந்தும் கடன் கிடைக்கும்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த கடன் அயர்லாந்து மக்களின் நன்மைக்காக செலவிட போவது இல்லை. இவை ஐரோப்பிய வங்கிகளின் கடனை வட்டியோடு திருப்பி செலுத்த தான் இவை உதவும். அதாவது ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கியிடம் கடன் வாங்கி ஐரோப்பி மற்றும் இங்கிலாந்து தனியார் வங்கிகளுக்கு பணத்தை கொடுப்பார்கள். இரண்டு கடனுக்கான வட்டியையும் முதலையும் அயர்லாந்து மக்களின் உழைப்ப்பின் மூலம் திருப்பி கொடுக்க வேண்டும்.இதை பார்த்தால் நம்மூர் கந்து வட்டி காரர்களின் கதை போல் உள்ளதள்ளவா?

இங்கிலாந்தில் பலர் அயர்லாந்துக்கு பெயில் அவுட் பணம் கொடுப்பதை எதிர்க்கிறார்கள். இங்கிலாந்து மத்திய வங்கி அயர்லாந்துக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் இங்கிலாந்தின் பல தனியார் வங்கிகளின் கதியும் அதோ கதி தான்!.உண்மையில் என்ன நடக்கிறது என்றால் இதன் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு தான் மிக பெரிய லாபம். அயர்லாந்து நாடு வெளி சந்தையிலிருந்து கடன் வாங்க வேண்டும் என்றால் 8% வட்டி கொடுக்க வெண்டும். ஆனால் இங்கிலாந்து 3.3% வட்டிக்கு பணம் வாங்க முடியும்( Quantitative easing முறையிலும் பணத்தை 0% வட்டியிலும் உற்பத்தி செய்யலாம்). எனவே இங்கிலாந்து அரசு 3.3% க்கு கடன் வாங்கி 5.8%க்கு அயர்லாந்துக்கு கொடுக்க போகிறது. ஆக மொத்தம் அனைத்து வகையிலும் இங்கிலாந்துக்கு லாபம் தான்.

இந்தியாவும் அயர்லாந்தின் நிலைக்கு வராது என்று நம்புவோம்.


--

Sunday, November 21, 2010

சோனியா, ராகுலுக்கு எதிராக E.V.K.S.இளங்கோவன் போர்கொடி!

தி.மு.க அல்லது அதிமுக என எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் , தி.மு.க/அதிமுக போன்ற கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்தி காங்கிரஸ் கட்சியினுள்ளே ஓர் கம்யூனிஸ்ட்டாக செயல் பட்டு வருகிறார் E.V.K.S இளங்கோவன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

ஆனால் தற்போது அவர் காங்கிரஸின் அகில இந்திய தலைமைக்கு எதிராக முக்கியமாக ராகுல் மற்றும் சோனியாவிற்கு எதிராக போர்கொடி தூக்கி நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆச்சரியத்தை தூண்டியுள்ளார்.இதோ அவர் பேசியுள்ள பேச்சின் ஒரு பகுதியை நீங்களே இங்கு பாருங்களேன்!( பேச்சை புரியாதவர்களுக்கு நான் சில விளக்கத்தை பிராக்கெட்டில் கொடுத்து உள்ளேன்).

தலைப்பு:

(சோனியா மற்றும் ராகுல் போன்றோரின்)குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும்-ஈவிகேஎஸ் இளங்கோவன்
காங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது(காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆட்சியின் விளைவாக ஒரு குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது போல் திறமை வாய்ந்த பலருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை).

தமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.(தமிழகத்திலேயே பரம்பரை ஆட்சி வர இப்படி கோபபடுபவர் இந்தியாவில் வருவதை கண்டு தீபிழம்பாக மாறி கொண்டு உள்ளார்) தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர். நீயும் இதையே செய். ஜால்ரா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் என்றார்.("தமிழகத்தில் " என்ற வார்த்தையை எடுத்து விட்டு இந்தியாவில் என்று போட்டு படித்து பாருங்கள்)

தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சோனியாவை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து இளங்கோவன் சோனியாவை எதிர்த்து பேசி உள்ளதால் இருவருக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பு இருக்களாம் எனவும் , சோனியாவை எதிர்த்த புதிய கோஷ்டி அகில இந்திய அளவில் உருவாகி வருவதையும் காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த ஆண்டுக்குள் ராகுலை பிரதமாராக்க நினைக்கும் சோனியாவின் முயற்சிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகவே கருத படுகிறது.

ஆனால் உண்மையில் அவருடைய பேச்சு அவரை எதிர்த்து அவரே பேசி கொண்டதாகவும் காங்கிரசின் எதிர் கோஷ்டியினர் கூறுகின்றனர். என்ன கேட்பதற்கே ஆச்சர்யமாக உள்ளதா?அதுவும் உண்மைதான். ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியலில் அடி மட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்தவர் இல்லை. அவரும் ஒரு வாரிசு அரசியல்வாதி தான். அவர் பெரியாரின் குடும்பத்தை சேர்ந்த E.V.K.சம்பத்தின் புதல்வராவார். E.V.K.சம்பத் திக, திமுக,தமிழ் தேசிய கட்சி என்று பல கட்சிகளில் இருந்து விட்டு காங்கிரசில் ஐக்கியமானவர்.

மனசாட்சியின் படி தன்னை எதிர்த்து தானே அறிக்கை விடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்டாயம் ஒரு தனி தன்மை வாய்ந்த அரசியல்வாதிதான்!


--

ஒபாமாவின் இந்திய படையெடுப்பு

உலகின் மிக பெரிய வர்த்தக நிருவனங்களின் முன்னனி அதிகாரிகள் 250 பேருடன் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார் அமெரிக்க பிரதமர்.அமெரிக்க சரித்திரத்தில் வேறு எந்த ஜனாதிபதியின் வெளி நாட்டு விஜயத்திலும் இத்தனை வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் வந்ததில்லை. இது ஒரு பயணமா? அல்லது படையெடுப்பா?.

ஒபாமாவின் இந்திய பயணத்திற்கான காரணம் பற்றி பலவிதமாக பலர் கூறி வந்தாலும் ஒபாமா வெளிபடையாக கூறும் காரணம் அமெரிக்க உற்பத்தி பொருளுக்கு இந்தியாவில் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தானாக இருக்கும்.

சரி ஒபாமா கூற வருவது எந்த வகை உற்பத்தி பொருட்கள் என்றும் அது எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்றும் பார்ப்போம். முதலில் பல்லாயிரம் கோடி பெருமான ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்க கையொப்பம் இட்டுள்ளார். நிச்சயம் இந்த ஆயுத தடவாடங்களின் பெரும் பகுதி அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒபாமா மூச்சிக்கு முன்னூறு தடவை தன்னுடைய ஆதர்ச நாயகனாக கூறுவது மகாத்மா காந்தியடிகளையும் அவரது அகிம்சை தத்துவத்தையும் தான். காந்தியின் அகிம்சை வழியில் நாடுகளுக்கெல்லாம் ஆயுதத்தை விற்பது வடிவேலு பட காமெடி போல் தான் உள்ளது.

அமெரிக்காவில் முக்கியமாக உற்பத்தி செய்யும் பொருள் ஆயுதத்துக்கு அடுத்த படியாக கம்ப்யூட்டர் மென்பொருட்களாகத்தான் இருக்கும் . தற்போது இந்தியாவில் மென்பொருட்கள் விற்பனைக்கு எந்த கட்டுபாடும் இல்லை. எனவே அவர் கூற வருவது நிச்சயம் கம்ப்யூட்டர் மென்பொருட்களாக இருக்காது.ஒபாமா முக்கியமாக கேட்பது சில்லறை வியாபாரத்தில் வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையான அனுமதியும் அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு இந்திய வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் முழுமையான அனுமதியும் தான்.

முதலில் வால்மார்ட் கதைக்கு வருவோம். வால்மார்ட்டுக்கு இந்தியாவில் முழு அனுமதி கொடுப்பதால் எப்படி அமெரிக்க பொருட்களுக்கு சந்தை விரிவாகுமா என்று பார்ப்போம். இன்று அமெரிக்காவில் வால்மார்ட்டில் விற்க படும் பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்ய படும் இடம் சீனா தான். எனவே வால்மார்ட் இந்தியாவில் கடைகளை தொடங்கினால் நிச்சயம் அமெரிக்க பொருட்களுக்கான சந்தை விரிவடைய போவது இல்லை. அப்படி என்றால் ஒபாமா கூறிய அமெரிக்க உற்பத்தி பொருள் எதுவாக இருக்கும்? இது பற்றி அறிந்து கொள்ள அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.

கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து அமெரிக்காவில் பண புழக்கத்தை அதிகரிக்க முதல் கட்டமாக பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை சிறிது சிறிதாக குறைத்தது. தற்போது அங்கு வட்டி விகிதம் கிட்ட திட்ட 0 சதவிதமாக இருக்கிறது. எனவே அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் வட்டி இல்லா பணத்தை வாங்கி குவித்து உள்ளனர். அது மட்டுமன்றி அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் இருந்த நட்டத்தை கொடுக்கும் கடன் பத்திரங்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கி விட்டது. அதன் விளைவு அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் பண கையிருப்பு நிறைய உள்ளது. தற்போது இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாகவே உள்ளது. மேலும் பொருளாதாரமும் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இந்திய நிதி நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை முழுமையாக திறந்து விட்டால், அமெரிக்காவில் வட்டி இல்லாமல் வாங்கிய பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து மிக பெரிய லாபம் அடைய முடியும். அவ்வாறு செய்வதால், அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தையும் அமெரிக்க பொருளாதாரத்தை போல சூதாட்ட களமாக்கி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்காலத்தை, முக்கியமாக பணி ஓய்வு பெற்ற பின் வரும் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அடுத்தது வால்மார்ட் போன்ற கம்பெனிகளின் கதைக்கு வருவோம். அமெரிக்க மத்திய வங்கி கடன் விகிதத்தை 0% கொடுப்பதால் வெளி மார்க்கெட்டில் கம்பெனிகளின் பாண்டுகளுக்கான கடன் விகிதம் மிக குறைவாக உள்ளது. உதாரணமாக வால்மார்ட் நிறுவனம் 0.75% வட்டிக்கு அமெரிக்காவில் கடன் வாங்கியுள்ளது. இது போல் வட்டியில்லா கடன் மூலம் பல பில்லியன் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் நடத்த முழு அனுமதி கொடுத்தால், இவர்களுடன் தினமும் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடை நடத்தும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் போட்டியிட முடியாமல் நலிந்து போக போவது திட்ட வட்டம்.

அதைவிட முக்கிய நிகழ்வு தற்போது Quantitative Easing என்ற பெயரில் அமெரிக்காவில் நடந்து வருவது. தற்போது QE என்ற பெயரில் அமெரிக்க மத்திய வங்கி அமெரிக்க அரசின் கடனையும், அமெரிக்க நிதி நிறுவனங்களின் கடனையும் வாங்கி வருகிறது. மத்திய வங்கி அரசின் கடனை வாங்குகிறது என்றால், அது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை பிரிண்ட் செய்து வெளியிடுகிறது என்று பொருள்.அதாவது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்ய படும் பணத்தின் விளைவாக தான் அமெரிக்க வட்டி விகிதமும், பெரிய நிறுவனங்களின் கடன் பத்திரத்துக்கான வட்டியும் மிக குறைவாக உள்ளது. இது போல் உற்பத்தி செய்யபடும் பணம் வளரும் நாடுகளுக்குள் வெள்ளமாக புகுந்து பங்கு சந்தை வீக்கம்-வாட்டத்தையும், வளரும் நாடுகளின் தொழில் துறையின் கட்டு பாடுகளை மிக பெரிய பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இந்த நிகழ்வுகள் சுலபமாக நடக்க தேவையானவற்றை செய்ய வலியுறுத்துவதுதான் அமெரிக்க அதிபரின் பயணத்தின் முக்கிய குறிக்கோள்.



உண்மையில் இதன் மூலம் சாதாரண இந்தியருக்கோ அல்லது சாதாரண அமெரிக்கருக்கோ அதிக பயன் இருக்க போவது இல்லை. பலன் அனைத்தும் மிக பெரிய நிதி நிறுவனங்களுக்கும், மிக பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தான்.

தைமூர் மற்றும் நாதிர் ஷா போன்றோரின் படையெடுப்பின் மூலம் இந்திய செல்வம் ஒரு முறை மட்டும் கொள்ளை போனது. ஆங்கிலேயர்களின் ஆட்சி மூலம் ஒரு சில நூற்றாண்டு செல்வம் கொள்ளை போனது. ஆனால் தற்போதைய ஒபாமாவின் படையெடுப்பின் விளைவு எப்படி இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

அமெரிக்க அதிபர் கூறிய படி இந்திய சந்தையில் அதிக இடம் தேடும் அமெரிக்க உற்பத்தி பொருள், தற்போது அமெரிக்க மத்திய வங்கி பெருமளவில் உற்பத்தி செய்யும் டாலராகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இன்றைய மற்றும் பிற்கால இந்தியர்களின் உழைப்பின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

--

Monday, November 01, 2010

Federal Reserveன் நூதன Bailout

2008 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பெரிய வங்கிகள் அனைத்தும் திவாலாக ஆகும் நிலையில் இருந்த போது, வங்கிகள் அனைத்தும் அமெரிக்க அரசின் உதவியை தேடியது. அதற்கு அமெரிக்கா எங்கிலும் எதிர்ப்பு அலை பரவியது. மக்களின் பணத்தை கொண்டு வங்கிகளை காப்பதா என்று பத்திரிக்கை எல்லாம் எழுதி தள்ளியது. ஆனால் தற்போது அமெரிக்க பெரிய வங்கிகள் எல்லாம் முன்பை விட பெரிய அளவில், டிரில்லியன் கணக்கில் Bail Out பெற்று கொண்டு உள்ளது.இம்முறை மறைமுகமாக!. இந்த Bail Out , பழைய Bail Out ஐ விட அதிக மதிப்புள்ளது. அது அமெரிக்க மக்களுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லன. ஆனால் அதற்கு எதிர்ப்பு குரலே சிறிதளவும் இல்லை.

2008ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து வங்கிகள் பணம் பெற்ற போது அவர்களது Subprime கடன்களின் risk அப்படியே இருந்தது. பண புழக்கத்தின் தேவைக்காக(Liquidity Crisis) மட்டும் கடன் பெற்றனர்.ஆனால் இம்முறை கமுக்கமாக தங்களது riskயும் பொருளாதார வீழ்ச்சியால் வந்த ரியல் எஸ்டேட் நட்டத்தையும் அப்படியே Federal Reserve(Fed) கைக்கு மாற்றி விட்டு, மிக பெரிய அளவில் Fedஇடமிருந்து பணத்தை வாங்கி குவிக்கிறார்கள்.கேட்க ஆச்சிரியமாய் உள்ளதா? இதன் பின்னனியை பற்றி பார்ப்போம்.

2008ல் வங்கிகள் கடன் வாங்கிய போது அமெரிக்க அரசு தன் கையில் இருந்த பணத்தை கொடுக்கவில்லை. Federal Reserve இடம் கடன் பத்திரத்தை கொடுத்து பணத்தை பெற்று வங்கிகளுக்கு கொடுத்தது. பெரும்பான்மை பணத்தை கூட முதலீட்டாளர்கள் அல்லது வெளிநாடுகளிடமிருந்து கடனாக பெறவில்லை. Federal Reserve உழைத்து சம்பாதித்த பணத்தையும் கொடுக்கவில்லை. பணத்தை எந்த அடிப்படையும் இல்லாமல் அச்சடித்து தான் கொடுத்து உள்ளது.(இது பற்றி பிறிதொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்)

வங்கிகள் இது பற்றி யோசிக்க ஆரம்பித்தது. எதற்காக அமெரிக்க அரசிடம் போய் கைகட்டி நின்று பணம் வாங்க வேண்டும். எப்படியும் அரசும் Fed இடமிருந்து தான கடைசியில் பணம் வாங்க போகிறது. நேரிடையாகவே தானே Fed இடமிருந்து பணம் வாங்கி விட்டால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தது.Federal Reserve என்பது அமெரிக்காவின் பெரிய வங்கிகளின் மறைமுக கட்டுபாட்டில் உள்ளது என்பது ஊறறிந்த ரகசியம்.

தற்போது அறிவித்துள்ள Quantitative Easing-2 முறைப்படி ,வங்கிகளின் கடன் பத்திரங்களை FED நேரிடையாகவே வங்கிகளிடமிருந்து வாங்க ஆரம்பித்துள்ளது.
இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் ஆதாயம் பற்றியும் இது எவ்வாறு முந்தய Bail Outகளிடமிருந்து வேறுபட்டது என்றும் பார்ப்போம்.

1.முந்தய Bail outல் தங்களிடமிருந்த Subprime Mortgageகளின் ரிஸ்க் வங்கிகளிடமே இருந்தது. ஆனால் இந்த பெயில் அவுட்டின் மூலம் வங்கிகள் தங்களிடம் இருக்கும் நட்டத்தை கொடுக்கும் பத்திரங்களை FED இடம் விற்று விடும். அதன் மூலம் மிக அதிக அளவு பணம் வங்கிகளுக்கு கிடைக்கும்.

2.நட்டத்தை கொடுக்கும் பத்திரங்களை தங்களது லாப - நட்ட கணக்கிலிருந்து Fed கணக்கிற்கு மாற்றி விடுவதால் வங்கிகள் நட்டத்தை குறைத்து நல்ல லாபம் காண்பிக்க முடியும். எப்படியும் Fed Balance Sheet ஐ யாரும் தணிக்கை செய்ய முடியாது. எனவே Fed ன் தற்போதைய நட்டம் பற்றி யாருமே கண்டு கொள்ள போவது இல்லை.

3.வங்கிகளும் நட்டமில்லாமல் தங்களது பத்திரங்களை Fedஇடம் விற்று விடும். உதாரணமாக அமெரிக்க மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்த போது ஒரு ரியல் எஸ்டேட் பத்திரத்தின் மதிப்பு $10000 க்கு வங்கி வாங்கியுள்ளது என்று வைத்து கொள்வோம். அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் பின் அதன் மதிப்பு $5000 ஆக குறைந்து விட்டது என்றால் அந்த பத்திரத்தின் மார்கெட் மதிப்பு $5000 தான் இருக்கும். ஆனால் இடம் அந்த பத்திரத்தை $10000க்கோ அல்லது அதை விட அதிகமாகவோ Fed இடம் விற்க வாய்ப்பு உள்ளது.

4.இதன் மூலம் கிடைக்கும் பணத்தை சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு கடனாக கொடுக்கும் என்று எதிர் பார்ப்போடு இந்த பிரிவர்த்தனை நடக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வங்கிகளின் செயல்பாட்டை பார்த்தால் இந்த பணத்தின் பெருமளவு Speculative Trading மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு சந்தையில் செயற்கையான ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி லாபத்தை சம்பாதிக்கவே பயன் பட போகிறது என்பது தெரிய வரும்.

5.இதில் முக்கிய அம்சம் Fed எந்த வங்கியிடமிருந்து எவ்வளவு டாலருக்கு பத்திரங்களை வாங்கியது என்று வெளியில் சொல்ல அவசியம் இல்லை. எனவே 2008 ந் போது எவ்வளவு பணம் எந்த வங்கிக்கு சென்றது என்று மக்களுக்கு தெரிந்ததால் மக்களிடம் அந்த வங்கிகளின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள உதவியது. அது மட்டுமல்ல, fed எந்த வங்கிக்கு உதவ வேண்டும் எதற்கு உதவ வேண்டாம் என்று முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே மிக பெரிய வங்கிகள் தங்களது influence கொண்டு Fed இடமிருந்து உதவியை பெற்று கொள்ளவும் சிறு வங்கிகளை அழித்து, பெரிய வங்கிகள் முழுங்கி கொள்ளவும் இது வழி வகுக்கும்.

6.இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பொது மக்களுக்கு எதுவுமே தெரியாமல், அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் கமுக்கமாய் பணத்தை கறக்கும் வேலையையும் வங்கிகள் முடித்து கொண்டனர்.

இது ஒரு நூதன் Bail Out தானே?

--