Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Monday, April 21, 2014

கோச்சடையானுக்காக மோடியை சந்தித்த ரஜினி - பின்னனி தகவல்கள்

சமீபத்தில் சென்னையில் நடந்த மோடி மற்றும்  நடிகர் ரஜினி காந்தின் சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கான பின்னனி செய்திகள் தற்போது வெளிவர தொடங்கி உள்ளது. கோச்சடையான் படத்தை சிந்துபாத் தொடர் போல கடந்த சில வருடங்களாக முடிவே இல்லாமல் தொடர்ந்து எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.பல முறை படத்தை பார்த்தும் படம் திருப்தி இல்லாமல் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் மாற்றி எடுத்தும் பட குழுவினருக்கு திருப்தி இல்லையாம்.படகுழுவினருக்கே இந்த நிலை என்றால் மக்களிடம் இந்த படம் எவ்வாறு வெற்றி பெரும் என்று கவலையில் இருந்தவர்களுக்கு கடந்த சில காலங்களாக தமிழ் திரை உலகில் நடந்த சில நிகழ்ச்சிகள்  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

கமலஹாசன் நடித்து வெளியான விஸ்வரூபம் படம் இதே போல் தமிழக மக்களை கவரும் விதத்தில் இல்லாமல் இருந்தது.  சாதாரணமாக வெளியிட்டிருந்தால் அதிக பட்சம் ஒரு சில நாட்களே ஓடியிருக்கும். ஆனால் ஜெயா டிவியினருக்கு கேபிள் ரைட்ஸ் கொடுக்கும் பிரச்ச்னையால் தமிழக முதல்வரின் கோப பார்வைக்கு ஆளாகி,படம் வெளியிட தடை விதிக்க பட்டு மாபெரும்  எதிர்ப்பு மற்றும் மீடியா பப்ளிசிட்டிக்கு பிறகு வெளியிடபட்டு வெற்றியும் பெற்றது அனைவருக்கும் நினைவிருக்களாம்.அதே போல் விஜய் படமும்  தமிழக முதல்வரின் கோபத்தால் ஏற்பட்ட தடையால் படு தோல்வியிலிருந்து தோல்வி படம் என்ற நிலைக்கு முன்னேறியது.

பொதுவாக ரஜினி காந்த படம் வெளியாகும் போது அரசிலில்  இறங்குவதாக மறைமுக அறிக்கை அல்லது அரசியல் சார்பு அறிக்கை மூலம் பரபரப்பு ஏற்படுத்த படும். ஆனால் தற்போது அதுவும் "புலி வருது, புலி வருது" கதையை போல் மக்கள் நம்பாமல் இருப்பதால் வேறு வழி பார்த்த போது தான்  கமல் மற்றும் விஜய் படங்களின் சமீபத்திய வெற்றி நினைவுக்கு வந்துள்ளது. ரஜினியின் முக்கிய அரசியல் ஆலோசகரான டாஸ்மாக் புகழ் பத்திரிக்கையாளர் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க ஆலோசனை கொடுத்ததாக கூறபடுகிறது.தேர்தல் களம் சூடு பிடித்து மோடி அலையை கண்டு ஆளும் தரப்பு அஞ்சும் இந்த நிலையில் மோடியை ரஜினியை காந்த் சந்தித்தால் நிச்சயம் ஆளும் தரப்புக்கு கோபம் ஏற்பட்டு கோச்சடையான் பட வெளியீட்டிற்கு தடை ஏற்படுத்துவார் என்று யூகத்தை தெரிவித்துள்ளார்.அவ்வாறு தடை ஏற்படுத்தினால் அதிவே படத்திற்கு பப்ளிசிட்டியை ஏற்படுத்துவதோடு , அப்போது அனல் பறக்கும் வசனத்தை மீடியாக்களில் பேசுவதன் மூலம் மக்களின் உணர்ச்சியை தூண்டி கோச்ச்டையானை வெற்றி படமாக்க முடியும் என்று திட்டமிட்டுள்ளனர்.அதன் தொடர்ச்சியே ரஜினி - மோடி சந்திப்பு என்று கூறபடுகிறது. இதன் மூலம் கோச்சடையானுக்கு வெற்றி கிடைப்பதோடு, ரஜினி ரசிகர்களின் ஓட்டை பெற்று பா.ஜ.க கூட்டணிக்கு 20க்கும்  மேலான தொகுதியில் வெற்றி பெற வைக்க முடியும் என்பது அந்த பத்திரிக்கையாளரின் கணக்கு.இதை உணர்ந்த விஜய்யும் அதே   யுக்தியை பயன்படுத்த  உடனடியாக மோடியை சந்தித்தாக கூறபடுகிறது. ஆளும் தரப்பு இந்த வஞ்சக சூழ்ச்சியை புரிந்து கொண்டு திரைபட வெளியீட்டை பிரச்சனையாக்கமல் இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

பின் குறிப்பு: இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காவே எழுதபட்டது. முழுவதும் கற்பனையே. இதுவே உண்மையாக இருந்திருந்தால் நிர்வாகம்  பொறுப்பல்ல!

Monday, September 03, 2012

குஜராத் புரட்சியும் ஹசாரேக்கு மோடி கொடுத்த ஆப்பும்


குஜராத் முதல்வர் மோடி பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக புதிய புதிய புரட்சி செய்திகள்  ஊடகங்களில் வந்து கொண்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் வளர்ச்சியை கணக்கிடும்  மனித வள மேம்பாட்டு குறியிடில் (Human Developmentபெரிய  முன்னேற்றமின்மை  மற்றும் சிறிய மற்றும் குறு தொழில்களின் வளர்ச்சியில் பெரிதாக சாதிக்காதது  போன்ற தேவையற்ற  செய்திகளுக்கு போதிய முக்கியத்துவம் தராமல் மோடியின் பிற புரட்சிகளை பற்றி ஊடகங்கள் "பாராட்டும் " படியே செய்திகளை வெளியிடுகிறது.

தற்போது வளர்ந்த நாடுகளில் கூட நடக்காத மாபெரும் புரட்சி குஜராத் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது. அந்த புரட்சி பற்றிய செய்தியை நம் நாட்டு ஊடகங்களில் மட்டும் செய்தியாகி அழிந்து விடாமல் அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிக்கைக்கு  கூறி ஒட்டு மொத்த உலக மக்களையே திகைப்பில் ஆழ்த்தி விட்டார் மோடி. அந்த புரட்சியை நடத்துபவர்கள் மூன்று வயதுக்கும் குறைவான குஜராத் மாநில சிறுமிகள் என்றால் ஆச்சரியமாக உள்ளது அள்ளவா?.மோடி பதவி ஏற்றதிலிருந்தே குஜராத்தில்
 பிறக்கும் குழந்தைகள் மிகவும் அறிவு கூர்மையுடன் பிறப்பது "அனைவருக்கும் தெரிந்ததே". ஆனால் அனைவருக்கும் தெரியாத ," மூன்று வயதிற்கும் குறைவான கைகுழந்தைகளுக்கு தங்களுடைய அழகு பற்றி அளவிற்கதிகமான அக்கறை உள்ளது" என்ற பகீர் உண்மையை அமெரிக்கர்களுக்கும் உலகுக்கும் தெரிய படுத்தியுள்ளார் மோடி. எப்படி என்று கேட்கிறீர்களா?குஜராத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு அதிகம் இருப்பது பற்றி மோடியிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்: குஜராத்தில் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் உணவை அள்ளி கொடுக்கும் போது குழந்தைகள் தாங்கள் குண்டாகி விடுவோம். அழகு குறைந்து விடும் என்று சொல்லி உணவை உண்ண மறுத்துவிடுகிறார்கள் என்பது!

தேசிய குடும்ப சுகாதார கருத்தாய்வு முடிவு படி பெரும்பான்மையாக மோடி பதவியில் இருந்த காலத்தில் குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடு 45% சதத்தில் இருந்து 47% சதமாக உயர்ந்தது.இது இந்திய சராசரியை விட அதிகம் என்பது குறிப்பிட தக்கது.இது மூன்று வயதுக்கும் குறைவான குழந்தைகள் பற்றி எடுக்க பட்ட புள்ளிவிபரம்! பச்சிளம் குழந்தைகள் கூட அழகுணர்ச்சி அதிகம் கொண்டு தன் தாய் பால் கொடுக்க, தான் குண்டாகி விடுவோம் என்று சொல்லி குடிக்க மறுத்து விடுவதால் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைந்து
காணபடுவதாக கூறியுள்ளார்.இந்த புரட்சி குஜராத்தில் மட்டும் தான் நடக்கும்!.

அந்த பேட்டியில் ஹசாரேவுக்கும் ஒரு ஆப்பு வைத்துள்ளார். குஜராத்தில் மக்கள் சத்து குறைந்து  சோகையாக இருப்பதற்கு காரணம் அங்கு பெரும்பான்மையான மக்கள் சைவ உணவு பழக்கம் கொண்டு இருப்பது தான் என்றார். ஏற்கனவே ஹசாரே மகாராஷ்டிர
மாநிலம் ராலேகான் பகுதியில் அசைவ உணவு சாப்பிட கூடாது என்று  சட்ட விரோதமாக கட்டை பஞ்சாயத்து செய்து வருவது உலகறிந்தது. ( Dalit families were compelled to adopt a vegetarian diet. Those who violated these rules — or orders — were tied to a post and flogged.)அவருக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக சைவ உணவு பழக்கம் தான் குஜராத்தின் சத்து குறைபாடிற்கு காரணம் என்று கூறியுள்ளார். எந்த முடிவையும் இரும்பு கரம் கொண்டு நடைமுறை படுத்தும் மோடி, குஜராத் மக்கள் அனைவரையும் கட்டாயம் அசைவ உணவு உண்ண ஆனையிட்டு விடுவார் என்ற பயம்  RSS இயக்கத்துக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது!

--

Tuesday, August 16, 2011

Wall Street - One Way



Wall Street - One Way
இது போக்குவரத்துக்கு மட்டுமா?
இல்லை அங்கு செல்லும் செல்வங்களுக்குமா?

--

Monday, January 24, 2011

பள்ளியில் இந்தி - தேவை ஒரு உடனடி மாற்றம்

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பள்ளிகளில் மும்மொழி கொள்கை அறிமுக படுத்த பட்டது. மும்மொழி கொள்கையின் படி வட இந்திய மாணவன் தன் தாய் மொழியான இந்தி, உலக மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி(தென்னிந்திய மொழியாக இருக்களாம்) கற்க வேண்டும். தென்னிந்திய மாணவர்கள் தங்களது தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்க வேண்டும்.உண்மையில் கொள்கை மேற்சொன்னதாக இருந்தாலும் நடைமுறையில் தென்னிந்திய மாணவர்கள் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்க வேண்டும் என்றும் வட இந்திய மாணவர்கள் இந்தி மட்டும் கற்றால் போதும் என்ற நிலையில் இருந்தது. இந்தியா முழுமைக்கும் இந்தியை திணிக்க இது ஒரு கருவியாக பயன்பட்டது.அதற்கு அன்றைய அரசியல்வாதிகள் சொல்லும் காரணம் தென்னாட்டு மக்கள் வட நாட்டுக்கு வேலை பார்க்க வரும் போது,இந்தி தெரிந்து இருப்பது அவசியம் என்பதாகும்.

சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்.பிக்கள் வட இந்தியாவிலிருந்து வந்ததாலும், அவர்களின் அழுத்தம் காரணமாக பெரும்பான்மையான பொது துறை நிறுவனங்கள் வட இந்தியாவில் தொடங்க பட்டது. வேலை வாய்ப்பும் அங்கு பெருகியது. அப்போது இந்தியா சோசியலிச பாதையில் இருந்ததால் அரசின் முதலீடு அதிகம். தனியாரின் பங்கு குறைவு. எனவே தமிழகத்திலிருந்து வட நாடு தேடி வேலை போவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.அப்போது வெளிநாடுகளுக்கு வேலை தேடி போவோரின் எண்ணிக்கையும் மிக குறைவு.

வேலைக்கு போகும் போது இந்தி கற்று கொள்வது ஒன்றும் கடினமான காரியமாக இல்லாவிட்டால் கூட அன்றைய சூழ்நிலையில் இந்தி படிக்க்காதது தான் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்ததாக தேசியவாதிகளால் செய்தி பரப்பபட்டது.

மாற்றம் தானே வாழ்வின் நியதி. மாற்றத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்பவர்கள் தானே வெற்றி கொள்ளவும் முடியும்.

தற்போது அரசு முதலீடு என்பது மிகவும் குறைந்து விட்டது. தனியார் முதலீடு தான் தொழிற்வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போதைய தொழிற் வளர்ச்சி அனைத்தும் தென்னிந்தியாவிலும், மகாரஷ்ட்ரா போன்ற மாநிலங்களிளும் தான் உள்ளது. அதன் விளைவு வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தெற்கு நோக்கி சாரை சாரையாக இடம் பெயர ஆரம்பித்து உள்ளனர்.தென்னிந்தியாவின் நகர் புறங்களில் பெரும்பான்மையான கூலி தொழிலாளர்கள் வட இந்தியாவிலிருந்து தான் வந்து கொண்டிருக்கிறார்கள். வேலை மட்டும் என்று இல்லை. தொழிற்கல்வி படிக்க கூட வட இந்திய மாணவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வர வேண்டி உள்ளது.

அவர்களுக்கு பெரும் பிரச்ச்னையாக உள்ளது மொழி தான். மகாராஷ்டிராவில் கூட மராட்டி தெரியாமல் நாள் தோறும் அடி வாங்கும் வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம்.தமிழகத்தில் அவர்கள் இந்தியை மட்டும் வைத்து கொண்டு பரிதவிப்பது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. .இதை உணர்ந்து கொண்டு மத்திய அரசு உடனடியாக புதிய மொழி கொள்கையை அறிவிப்பது அவசியம். வட இந்திய பள்ளிகளில் தமிழ் உட்பட தென்னிந்தய மொழிகள் மற்றும் மராட்டி போன்ற மொழிகளை கட்டாய பாடமாக்க வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று இல்லை. நித்தீஷ் குமார் போன்ற "மக்கள் நலம்" உயர விரும்பும் மாநில முதல்வர்கள் தங்களது மாநில அளவிளாவது உடனடியாக இதை நிறைவேற்ற வேண்டும்.

கபில் சிபல் போன்ற அமைச்சர்கள் மொழி கொள்கையில் உணர்ச்சி பூர்வமாக சிந்திப்பதை விட்டு அறிவு பூர்வமாக சிந்திக்க கற்றுகொள்ள வேண்டும்.வட இந்திய மாணவர்கள் மட்டும் மூன்று மொழிகளை படிப்பது தென்னிந்திய மாணவர்கள் இரு மொழி மட்டும் படிப்பது ஏற்று கொள்ள முடியாது தான்.இதற்கு என்ன தீர்வு? தமிழர்கள் வட இந்தியர்களை போல் தேசியவாதி இல்லை என்பது சோகமான உண்மை தான். எனவே நமக்கு பிரன்ச்சு, ஜெர்மனி, சீன மொழி போன்ற அன்னிய மொழி படிப்பது ஏற்று கொள்ள கூடியது தான். எனவே தமிழக பள்ளிகளில் மூன்றாம் மொழியாக ஒரு அன்னிய மொழியை அறிமுகபடுத்தலாம். தமிழர்களும் வெளி நாடுகளுக்கு வேலை தேடி செல்வதும் மிக அதிகமாக உள்ளது. எனவே தமிழக மாணவர்களுக்கும் இது உதவும்.

--

Sunday, November 21, 2010

சோனியா, ராகுலுக்கு எதிராக E.V.K.S.இளங்கோவன் போர்கொடி!

தி.மு.க அல்லது அதிமுக என எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் , தி.மு.க/அதிமுக போன்ற கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்தி காங்கிரஸ் கட்சியினுள்ளே ஓர் கம்யூனிஸ்ட்டாக செயல் பட்டு வருகிறார் E.V.K.S இளங்கோவன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

ஆனால் தற்போது அவர் காங்கிரஸின் அகில இந்திய தலைமைக்கு எதிராக முக்கியமாக ராகுல் மற்றும் சோனியாவிற்கு எதிராக போர்கொடி தூக்கி நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆச்சரியத்தை தூண்டியுள்ளார்.இதோ அவர் பேசியுள்ள பேச்சின் ஒரு பகுதியை நீங்களே இங்கு பாருங்களேன்!( பேச்சை புரியாதவர்களுக்கு நான் சில விளக்கத்தை பிராக்கெட்டில் கொடுத்து உள்ளேன்).

தலைப்பு:

(சோனியா மற்றும் ராகுல் போன்றோரின்)குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும்-ஈவிகேஎஸ் இளங்கோவன்
காங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது(காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆட்சியின் விளைவாக ஒரு குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது போல் திறமை வாய்ந்த பலருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை).

தமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.(தமிழகத்திலேயே பரம்பரை ஆட்சி வர இப்படி கோபபடுபவர் இந்தியாவில் வருவதை கண்டு தீபிழம்பாக மாறி கொண்டு உள்ளார்) தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர். நீயும் இதையே செய். ஜால்ரா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் என்றார்.("தமிழகத்தில் " என்ற வார்த்தையை எடுத்து விட்டு இந்தியாவில் என்று போட்டு படித்து பாருங்கள்)

தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சோனியாவை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து இளங்கோவன் சோனியாவை எதிர்த்து பேசி உள்ளதால் இருவருக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பு இருக்களாம் எனவும் , சோனியாவை எதிர்த்த புதிய கோஷ்டி அகில இந்திய அளவில் உருவாகி வருவதையும் காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த ஆண்டுக்குள் ராகுலை பிரதமாராக்க நினைக்கும் சோனியாவின் முயற்சிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகவே கருத படுகிறது.

ஆனால் உண்மையில் அவருடைய பேச்சு அவரை எதிர்த்து அவரே பேசி கொண்டதாகவும் காங்கிரசின் எதிர் கோஷ்டியினர் கூறுகின்றனர். என்ன கேட்பதற்கே ஆச்சர்யமாக உள்ளதா?அதுவும் உண்மைதான். ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியலில் அடி மட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்தவர் இல்லை. அவரும் ஒரு வாரிசு அரசியல்வாதி தான். அவர் பெரியாரின் குடும்பத்தை சேர்ந்த E.V.K.சம்பத்தின் புதல்வராவார். E.V.K.சம்பத் திக, திமுக,தமிழ் தேசிய கட்சி என்று பல கட்சிகளில் இருந்து விட்டு காங்கிரசில் ஐக்கியமானவர்.

மனசாட்சியின் படி தன்னை எதிர்த்து தானே அறிக்கை விடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்டாயம் ஒரு தனி தன்மை வாய்ந்த அரசியல்வாதிதான்!


--