Wednesday, March 07, 2012

சோனியா கற்ற பாடமும் கற்க வேண்டிய பாடமும்

சமீபத்திய உத்திர பிரதேச தேர்தலின் முடிவில் ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தி உண்டென்றால் அது தேசிய கட்சி (என்று தங்களை அழைத்து கொள்ளும்) கட்சிகளுக்கு கிடைத்த தோல்வியாக தான் இருக்கும். நாட்டில் அதிக தொகுதிகளை கொண்டுள்ள உத்திர பிரதேசத்தில் விரைவில் வர கூடிய நாடாளுமன்ற மன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் பெரு வெற்றி பெற்றால் மீண்டும் நேரு,இந்திரா காந்தி கால இந்தி பேசும் பகுதிகளை கொண்டு இந்தி பேசும் பகுதிகளுக்கான மட்டுமான ஆட்சி உருவாக வாய்ப்புள்ளது.

பீகார் மற்றும் உ.பியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் ஒட்டு மொத்த வெற்றி மறைந்த பின் தான் மத்திய அரசின் கவனம் பிற மாநிலங்களின் வளர்ச்சியின் பக்கம் திரும்பி உள்ளது.உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி இதே வழியை தொடர வழி வகுக்க வாய்ப்புள்ளது.இந்த சட்ட மன்ற தேர்தலின் தோல்வியை அடுத்து சோனியா காந்தி தேர்தலின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணத்தை கூறி உள்ளார். அதாவது தவறான வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியதும், அளவுக்கு மீறிய தலைவர்களின் எண்ணிக்கையுமே இந்த தோல்விக்கு காரணம் என்றார்.இது உண்மையிலேயே ஒரு நல்ல படிப்பினை.

அப்படியே தவாறான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்த அல்ல சிபாரிசு செய்த தலைவர்களுக்கும் அந்த வேட்பாளர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே உள்ள சாதி மற்றும் இதர தொடர்பு மற்றும் அந்த தலைவர்களுக்கும் அடிமட்ட மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பு போன்றவற்றையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கட்டும்.

அப்படியே இன்னொன்றும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அவரை சுற்றி இருக்கும் தலைவர்களில் பெரும்பாலோர் அடிமட்ட மக்களிடம் தொடர்பே இல்லாத,ஜால்ரா மட்டுமே போட தெரிந்த தலைவர்கள். அந்த தலைவர்கள் தான் கட்சியின் அனைத்து மட்ட தலைவர்களையும் முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவர்கள். கட்சி தலைமையை ஒரு மாயையில் வைத்துள்ளனர்.தலைவர்கள் என்றில்லை. ராகுல் அறிவுறை கேட்கும் தலைவர்கள் மற்றும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தகுதி கூட அதுதான்.

இந்த உண்மைகளை எல்லாம் அவர் ஆராயாமல் இருப்பதே நல்லது. காங்கிரசின் வளர்ச்சி தற்போது நாட்டிற்கு ஆபத்தானது.

--