Saturday, April 18, 2009

நீதி கேட்கும் செருப்புகள்

பெரும் பாலான மனிதனுக்கு அநீதி இழைக்கும் போது அவர்கள் முறையிட நீதி மன்றம் இருக்கிறது. வாயில்லா மிருகங்களுக்கு நீதி தேடி தர புளு கிராஸ் போன்ற அமைப்புகள் இருக்கிறது.ஆனால் எங்களை அவ மரியாதை செய்தால் நாங்கள் எங்கு போய் முறையிடுவது? சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கிறீர்களா? சிறிது குனிந்து பாருங்கள். நீங்கள் காலில் அணிந்து இருக்கும் காலணி பேசுகிறேன்!

காடு, மலை, கல், கரடு,மழை, வெய்யில், சேறு, சகதி என்று எங்கு போனாலும் உங்கள் காலை பாது காக்கிறேன். இதற்கு பலனாக உங்களிடம் நான் எந்த உபகாரமும் எதிர் பார்க்கவில்லை. தயவு செய்து கேடு கெட்ட இந்த அரசியல்வாதிகளின் மேலெரிந்தும், அவர்களுக்கு என்னை மாலையிட்டும் அவ மரியாதை செய்யாதீர்கள். எங்களுக்கு உணர்வு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக எங்களை இப்படி அவ மரியாதை செய்கிறீர்கள். அதுவும் எந்த உணர்வும் இல்லாத இந்த அரசியல்வாதிகள் மீது எங்களை விட்டெறிந்து.

இனியாது எங்களை இப்படி அவ மரியாதை செய்யாமல் இருக்க உங்களை இரு கால் கூப்பி வேண்டி கொள்கிறேன்


புகைப்படம்:நன்றி தினபூமி

--

Tuesday, April 14, 2009

பாதை மாறும் முதலாளித்துவமும், சந்தை பொருளாதாரமும்



1970 க்கு பிறகு உலகம் முழுதும் மிக வேகமாக பரவ தொடங்கிய தத்துவம் முழுமையான சந்தை பொருளாதாரம்(Free Market) மற்றும் முதலாளித்துவம். அப்போது மிக வேகமாக ஏறிய எண்ணெய் விலை உயர்வால் வளரும் நாடுகளின் அன்னிய கையிருப்பின் நிலை மோசமாக போனது. அன்னிய கையிருப்பின் தேவையை நிவர்த்தி செய்ய வளரும் நாடுகள் மேலை நாடுகள் மற்றும் அது சார்ந்த நிதி அமைப்புகளை நோக்கி கையேந்தி நிற்க தொடங்கியது.அதற்கு வளரும் நாடுகள் மீது விதிக்க பட்ட கட்டுபாடு - முழுமையான சந்தை பொருளாதாரத்தை அமல் படுத்த பட வேண்டும், அரசின் கட்டுபாட்டை முழுமையாக விளக்க வேண்டும் மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவங்களுக்கு தடங்கள் இல்லாமல் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு இந்த சந்தை பொருளாதாரம் தான் பெரும் பாலான உலக நாடுகளின் ஒரே வாய்ப்பாக மாற தொடங்கியது. சில காலம் இந்த சந்தை பொருளாதாரமும் ஓரளவு அனைவருக்கும் நன்மை பயப்பதாகவே அறிய பட்டது.

ஆனால் சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை மாற தொடங்கிய பின் தான் பல பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தது. பொதுவாக சந்தை பொருளாதாரத்தில் தேவை அதிகமாக இருக்கும் போது அதை உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வரும்.பல நிறுவனங்கள் உற்பத்தி செய்ய போட்டி இருப்பதால், நல்ல தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். நிறைய நிறுவனக்கள் தொடங்க படுவதால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். அதிக வேலை வாய்ப்பு பெருகுவதால் மக்களின் வாங்கு திறன் கூடி ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே வளர்க்கும். ஆனால் உண்மையில் நடப்பது அதுவல்ல.வளரும் நாடுகளுக்கு வரும் முதலிடு அதிகம் உள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பர யுக்தி மற்றும் பிற வழிகளில் வியாபாரத்தை பெருக்கி உள் நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனக்களை ஒட்டு மொத்தமாக அழிக்கிறது. பொதுவாக இவ்வகை சிறு நிறுவனங்கள் அதிக மக்களை வேலைக்கு வைத்திருப்பர். பன்னாட்டு நிறுவனங்கள் இயந்திரமயமான தொழிற் சாலை வைத்திருப்பதால் அவற்றின் வேலைக்கான ஆட்களின் தேவையும் குறைவு. இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல இது. வளர்ந்த நாடுகளிலும் இது தான் நடக்கிறது. ஆனால் அங்கு மக்கள் தொகை வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விளைவு அதிகம் தெரிவதில்லை.
கடந்த சில காலமாக முதலாளித்துவம் தன் முழு வேகத்தை அடைய தொடங்கி உள்ளது. மிக பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிக பெரிய ஜெயன்ட்களாக மாற தொடங்கி உள்ளது. அவ்வாறு பெரிதாக வளர்ந்த நிறுவனங்களும் அத்துறையில் உள்ள பிற நிறுவனக்களை வாங்கி தன் துறையில் போட்டி இல்லாத மோனோபொலி என்ற நிலைக்கு முன்னேறுகிறது. முன்பு அரசாங்கம் துறைகளை தன் கட்டு பாட்டில் வைத்திருந்த போது இதே மோனோபொலி தான் இருந்தது. அரசாங்கமாவது ஒரு சில நேரத்தில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் இந்த தனியார் நிறுவனக்களின் நோக்கம் லாபம் மட்டும் தான். அவர்களுக்கு சமூக அக்கறை எல்லாம் இல்லை. இந்த நிறுவனங்கள் சந்தையில் போட்டி என்பதையும் வெகுவாக குறைத்து சந்தை பொருளாதாரத்தின் நோக்கத்தையே கேள்வி குறியாக்கி உள்ளது.
சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை, வாழ்க்கை போராட்டம் மற்றும் தகுதி உள்ளவை பிழைத்தல் போன்ற டார்வின் கொள்கை. அதாவது சந்தையின் போக்கை உணர்ந்து அதற்கேற்ற வியாபார நுணுக்கம் பின் பற்றும் திறமையான நிறுவனங்கள் சந்தையில் நிலைத்து நிற்கும். வியாபார நிறுவனக்களின் அசுர வளர்ச்சியால், தனிபட்ட நிறுவனங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகிறது. சந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் போது அந்நிறுவன அதிகாரிகள் பெரும் பணத்தை வருமானமாக குவிக்கின்றனர். ஆனால் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்காமல் அந்நிறுவனக்கள் வீழ்ச்சியை சந்திக்கும் போது நிறுவனங்களின் அழிவை ஏற்று கொள்ளாமல் மக்களின் வரி பணத்தை கொண்டு அந்நிறுவனங்களை காப்பாற்ற அரசை நிர்பந்திக்கின்றது. அரசும் அந்நிறுவங்கள் அழிந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மக்களின் வரி பணத்தை கொண்டு காப்பற்ற வேண்டிய கட்டயத்தில் உள்ளது. அது மட்டும் அல்ல. இந்த பெரிய நிறுவனங்களின் தாக்கம் மிக பெரியது என்பதால் அரசை மிரட்டி பணம் பறிக்கும் நிலையில் உள்ளன. இதற்கு அமெரிக்க மோட்டார் நிறுவங்களும், நிதி நிறுவனக்களும் சிறந்த உதாரணங்கள் ஆகும். சுருங்க கூற வேண்டும் என்றால் லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் பொதுமக்களுக்கு என்பது விதியானது. அதாவது


Privatizing the Profit
Socializing the Loss.



சந்தை பொருளாதாரத்தின் அடுத்த அடிப்படை போட்டி அதிகம் என்பதால் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் என்பது. ஆனால் உண்மையில் அப்படி நடக்க வில்லை. உதாரணமாக அதிக கண்டுபிடிப்புகள் தேவை படும் மருந்து தொழிலை பார்த்தால் புரியும். மற்ற துறை போல் இங்கும் ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. மருந்து கம்பெனிகள் கண்டுபிடிப்புக்கு அதிகம் செலவு செய்யாமல் சந்தையில் உள்ள மருந்துகளையே சிறு மாறுதல் செய்து தனிபட்ட விற்பனை உரிமம் பெற்று விளம்பரம் மற்றும் பண பலத்தின் மூலம் தன் வளர்ச்சியை பெருக்குகின்றனர்.மேலும் அவர்களின் பெரும்பான்மையான கண்டு பிடிப்புகள் அமெரிக்க அரசின் வரி பணத்தில் நடக்கும் ஆராய்ச்சிகள் மூலம் வருபவையே. மருந்து கம்பெனிகளின் ஆராய்ச்சியை பற்றி அறிய அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் The Truth About the Drug Companies: How They Deceive Us and What to Do About It

அதை விட மிகவும் கவலை பட வேண்டிய செய்தி மேலை நாடுகளின் நிதி நிறுவனக்களின் வளர்ச்சி. இந்த நிதி நிறுவனங்கள் எந்த கண்டு பிடிப்பும் இல்லாமல் வெறுமனே கணிப்புகளை(speculation) மட்டுமே முதலீடாக கொண்டு , எந்த வித பொருளாதார செயல் பாடும் இல்லாமல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பணத்தையும்,ரிஸ்க்கையும் வரிசையாக கைமாற்றி ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மாபெரும் அழிவிற்கு இட்டு சென்றனர். கடந்த வருடத்தில் உச்ச கட்டத்தில் அமெரிக்காவின் கார்ப்போரேட்டுகலின் லாபத்தில் இது போன்ற நிதி பரிமாற்ற மதிப்பு மட்டும் 41% அடைந்தது. எந்த அளவிற்கு தங்களுக்குள் பணத்தை பறிமாறிகொள்கிறார்களோ அந்த அளவு நிதி நிறுவனங்களின் மதிப்பும் வளர்ச்சியும் இருக்கும். அந்த அளவு அந்நிறுவனக்களில் பணியாற்றும் இடை தரகர்களின் லாபமும் இருக்கும். செயற்கையாக இது போல் மிக பெரிய வளர்ச்சி அடைந்த நிறுவங்கள் உண்மை நிலை தெரிந்த உடன் நட்டமடையும் போது, இதன் அளவு மற்றும் அது பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு கருதி அதை அரசு காப்பாற்ற வேண்டிய கட்டயத்தில் உள்ளது.

மொத்தத்தில் சந்தை பொருளாதாரம் என்பது அதன் அடிப்படையை இழந்து, லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட சிறிய அளவிலான முதலாளிகளின் கையில் சிக்கி திசை மாறி செல்ல தொடங்கி உள்ளது. அரசாங்கத்தால் எந்த அளவு இப்போக்கை கட்டு படுத்த முடியும் என்பது ஒரு கேள்வி குறியே.

--

Friday, April 10, 2009

பாக்கிஸ்தானின் வியாபார தந்திரம்

ஒரு தொழிலில் 100 ரூபாய் முதலீடு செய்து 1000 ரூபாய் சம்பாதித்தால் அது லாபம் என்போம். அதையே 100 ரூபாய் முதலீடு செய்து 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் அது கொள்ளை லாபம். அந்த அளவு கொள்ளை லாபம் கிடைக்கும் தொழில் ஒன்று உண்டா? ஆம் இருக்கிறது. பாக்கிஸ்தான் அந்த வியாபார தந்திரத்தை கண்டுபிடித்து பெரிய அளவில் பயனடைகிறது. என்ன என்று கேட்கிறீர்களா? பாக்கிஸ்தான் தலிபான், லஸ்கர்-இ-தொய்பா என பல தீவிரவாத இயக்கங்களை சில மில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கி, அதன் பலனாக இன்று பல பில்லியன் டாலர்களை அமெர்க்காவிடமிருந்து நிதி உதவியாக பெற்று கொள்ளை லாபம் அடைகிறது. 21ம் நூற்றாண்டில இதுவும் ஒரு லாபமிகு தொழில் தான்.

--

Wednesday, April 01, 2009

எங்கே போனது பணம்? - டாலர் அரசியல்- 4




தற்போதைய நிதி நெருக்கடியால் பண புழக்கம் திடீரென குறைந்ததை அடுத்து அனைவரின் மனதிலும் எழும் கேள்வி- இது வரை உலகில் இருந்த பணம் எல்லாம் எங்கே போனது? அவை எல்லாம் திடீரென மாயமான மர்மம் என்ன?.

இது பற்றி அறிய பணம் எவ்வாறு உற்பத்தி செய்ய படுகிறது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்ய படும் பணத்திற்க்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்கு பிறகு gold convertibility என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே.பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது.

இதனால பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி அரசாங்கங்கள் கொடுக்கும் நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பலான பணம் வெளியிட படுவது "Money As Debt." என்று கூறபடும் பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான்.

உலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன்.அவை வெளியிட்டிருக்கும் பணத்தின்(M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன் . என்னுடைய முந்தய பதிவில் கூறியது போல் வங்கிகளால் கடன் மூலம் பெருக்க பட்ட பணம் $39 ட்ரில்லியன். பணம் எவ்வாறு பெருக்க பட்டுள்ளது என்று கூர்ந்து கவனியுங்கள்.

கடந்த பத்து வருடங்களாக நிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கபடும் முதலீட்டு வங்கி(investment bank), ஹெட்ஜ் முதலீடு மற்றும் பிற வங்கி சாரா பொருளாதார அமைப்புகளின்(Non banking financial institutions) வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் கடன் மற்றும் எடுக்கும் Riskக்கிற்க்கு இணையாக ஒரு பகுதியை வைப்பு தொகையாக வைக்க வேண்டியதில்லை. இவர்கள் எடுக்கும் Risk மிக அதிகமாக இருக்கும். வங்கி பிறருக்கு கடனை கொடுக்கும் போது அதற்கான Riskஐ Shadow banking System எடுத்து கொண்டு அந்த Riskக்கிற்கான பணத்தை வங்கியிடம் இருந்து வசூளித்துக் கொள்ளும். இதனால் வங்கிகள் எந்த கவலையும் இல்லாமல் கடன் பெருபவரின் தரத்தை பற்றி கவலை படாமல் பெருமளவு கடன் கொடுக்க ஆரம்பிக்க தொடங்கினர். இது போன்று குழபத்தை ஏற்படுத்தும் பல புது வகையான பொருளாதார பொருட்கள்(Financial products) உருவாக்கபட்டன. இது கடன்களின் மொத்த மதிப்பை $62 ட்ரில்லியன் ஆக்கியது. மேற்கண்ட நிகழ்வுகளால் எளிமையான, வரவுக்கு சம்பந்தம் இல்லாத கடன்களால் நிலம்,பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு வளர்ச்சிக்கு(growth) பதில் வீக்கமடைந்து(swelling) $290 ட்ரில்லியன்களானது.

தற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதிக செலவிட்டு மீண்டும் கட்டிடத்தின் அளவை பெரியதாக்க முயற்ச்சி செய்வது போல் உள்ளது.

பிஷ்சரின்(Fisher) எளிமை படுத்த பட்ட கீழ் காணும் சமன்பாடு(equation) பொருளாதாரத்தின் அடிப்படையை விளக்குகிறது

MV=PQ

M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு
V= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது.
P=ஒட்டு மொத்த முதலீடுகளின் விலை
Q=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி.


ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல் பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்க பட்டுள்ளது என்று பார்ப்போம். கீழே உள்ள் படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்ய பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிட பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது.




நன்றி -Wikipedia and shadowstats.com


பணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு "Money as debt" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.

உயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.







நன்றி--Lane Kenworthy


மற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.



நன்றி—Lane Kenworthy


இதே நிலை, அதாவது பண புழக்கம் அதிக அளவு வந்து உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதை தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன் பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்க பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்க பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது.
இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்க பட்டது.

மேலே சொன்ன சமன்பாட்டில்(MV=PQ) உள்ள படி ஒட்டு மொத்த பணத்தின் அளவு(M) அதிக பணம் அச்சிட பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும்(V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி(Q) அளவும் அந்த அளவு உயரவில்லை. உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின்(P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.

பணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்த பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது உண்டாகும் இழப்பே தற்போது ஏற்படும் இழப்புகள் எல்லாம். இந்த விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் இப்போது நட்டம் அடைவது இயற்கையானது தான். ஆனால் இந்த இழப்பை செயற்கையாக தடுக்க எடுக்க படும் முயற்சியின் விளைவை இனி வரும் காலங்களில் காணலாம்.

இந்த பதிவிற்கு தொடர்புடைய மற்ற பதிவுகள்:

டாலர் அரசியல்

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்


டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?

--

Tuesday, March 24, 2009

டாலருக்கு மாற்று- சீனா முதல் முறையாக போர்கொடி

உலக சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பதால் அதற்கு ஏற்படும் நன்மையை பற்றி டாலர் அரசியல் என்ற பதிவில் விரிவாக விளக்கியிருந்தேன். சமீபத்திய பொருளாதார நெருக்கடியாலும் அதை தொடர்ந்து அமெரிக்கா எடுக்கும் quantitative easing முறையாலும், அமெரிக்காவிற்கு கடன் அளித்துள்ள மற்றும் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள நாடுகள்,முக்கியமாக சீனா போன்ற நாடுகள் அதிருப்தி அடைந்திருந்தனர். சீனாவின் பிரதம மந்திரி சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் சீனா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு பற்றி கவலை தெரிவித்திருந்தார்.

G - 20 நாடுகளின் கூட்டமைப்பு தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து உலகம் தப்பிப்பதற்கான வழிமுறை பற்றி ஆராய ஏப்ரல் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் கூட உள்ளனர். இந்த சூழ்நிலையில் சீனாவின் மத்திய வங்கியின் தலைவர் உலக அளவில் டாலருக்கு மாற்றாக IMF உதவியுடன் புதிய சேமிப்பு நாணயத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்.சீனாவிடமிருந்து, அதுவும் சீனாவின் மத்திய வங்கி தலைவரிடமிருந்து இச்செய்தி வந்திருப்பது உலகலவில் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்க ட்ரசரி செக்ரட்டரி கெயிட்னர் சில நாள்களுக்கு முன் சீனாவின் நாணயத்தின் மதிப்பை குறைக்க வலியுறித்தியதிலிருந்து அமெரிக்கா சீனாவுடனான பனிபோர் வெளிபடையாக தெரிய ஆரம்பித்தது.

தற்போது IMFஇன் சிறப்பு பிரதிநித்துவம்(SDR) பெற்ற பண கூட்டமைப்பை பிற நாடுகளை சேர்த்து வலிமையாக்கி அதன் அடிபடையில் புதிய நாணயத்தை உருவாக்க வேண்டும் என்று சீனா அதிகாரி கூறியுள்ளார். இதன் மூலம் கடன் அடிபடையான நாடுகளின்(அமெரிக்கா) நாணயத்தை சேமிப்பு நாணயமாககொண்டுள்ளதால் ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பி, உலக அளவில் வலுவான பொருளாதார கட்டமைப்பு ஏற்படுத்தலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சீனாவின் மத்திய வங்கி தலைவர் கூறியுள்ளது

Zhou Xiaochuan, the governor of the Chinese central bank, implicitly criticised the status of the dollar as the world's sole reserve currency. "The price is becoming increasingly high, not only for the users, but also for the issuers of the reserve currencies," Mr Zhou said.

He added: "The role of the SDR has not been put into full play due to limitations on its allocation and the scope of its uses. However, it serves as the light in the tunnel for the reform of the international monetary system.

"The goal of reforming the international monetary system, therefore, is to create an international reserve currency that is disconnected from individual nations and is able to remain stable in the long run, thus removing the inherent deficiencies caused by using credit-based national currencies."

இந்த முடிவுக்காக சீனா எந்த அளவு அழுத்தம் தெரிவிக்க போகிறது என்றும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அதை எவ்வாறு எதிர் கொள்ள போகிறது என்று இனி வரும் நாட்களில் பார்ப்போம்

--

Thursday, March 19, 2009

பண வீக்கமும் முதலீடுகளின் மதிப்பும்- அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி பண வீக்கம் தான் என்று கூறுவர். அது மிகவும் உண்மைதான்.பண வீக்கத்தால் நமக்கு வருமானத்தை விட கூட ஆகும் செல்வை அரசு வரியாக போட்டுருந்தால் யாருமே அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற்றிருப்பர். ஆனால் நம் கண்ணுக்கு நேரிடையாக தெரியாமல் மறைமுக வரியாக வருடம் தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி அவ்வளவாக நாம் கவலை படுவதில்லை.

சூடான வெந்நீரில் ஒரு தவளையை தூக்கி போட்டால் அது உடனே முயற்ச்சி செய்து வெளியே குதித்து தப்பி விடும். ஆனால் அதே தவளையை சாதாரண நீரில் போட்டு சிறிது சிறிதாக கொதிக்க விட்டால் அது தப்பிக்க முயலாமல் இறந்து விடும். பண வீக்கம் என்பது இரண்டாவது வகையை சேர்ந்தது.

பண வீக்கம் என்பது குறைவான பொருளை நிறைய பணம் துரத்துவது எனலாம். கடந்த சில காலமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பணத்தை வரலாறு காணாத அளவில் அடித்து வெளியிடுவதால் கூடிய சீக்கிரம் மிக பெரிய பண வீக்கம் வர கூடிய வாய்ப்புகள் உள்ளது. 1990களில் ஜப்பானில் இது போன்ற பொருளாதார நெருக்கடி வந்த போது ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒத்தே தற்போது மற்ற நாட்டு அரசுகள் செயல் படுகின்றனர்.

இந்த பதிவு பண வீக்கத்தின் காரணத்தை ஆராய்வது இல்லை.

. தற்போது அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கையால் இரு வகை நிகழ்வுகள் நிகழும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிக்கினர்.

1. Price Inflation (வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவை பொருட்கள் வாங்குவது போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தல்)

2. Asset Deflation (வீடு, நிலம் மற்றும் பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு குறைதல்)

அதாவது நாம் அன்றாட தேவைகளுக்கு வாங்கும் பொருளின் விலை அதிகரிக்கும் ஆனால் நம்முடைய முதலீட்டின் விலை அந்த அளவுக்கு உயராது. இந்த நிலை தற்போதே இந்தியாவில் வர தொடங்க உள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை மேலை நாடுகளில் ஏற்படுத்த போகும் தாக்கத்தை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவாக இருக்கும். ஆனாலும் இதை பற்றி தற்போதைய நடுத்தர வயதினர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலத்தில் செலவிட என்று பல முதலீடுகளை செய்து வைத்திருப்பீர்கள். அதாவது நிலம், வீடு,மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தை முதலீடு என்று. ஆனால் அவற்றின் உண்மயான மதிப்பு பண வீக்கத்தை வைத்து பார்க்கும் போது மிகவும் குறைந்திருக்கும். அப்போதைய விலை வாசியும் மிக அதிகமாக இருக்கும். இது போன்ற நிகழ்வுகளால் அதிகம் பாதிக்க பட போவது பணி ஓய்வு பெற்றவர்களாக இருப்பர். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார சரிவால், பணியிலிருந்து ஓய்வு பெற நினைத்தவர்கள் போதிய பணம் இல்லாததால் இன்னும் நிரைய ஆண்டுகள் தங்கள் தள்ளாத வயதில் வேலை செய்ய வேண்டி உள்ளது.

இத்தகைய நிகழ்வு பற்றி டேனியல் அமெர்மேன் என்னும் பொருளாதார வல்லுனர் கூறுவதை கேளுங்கள்

If Your asset doubles in price, but a dollar will only buy what a quarter used to, then you didn’t double your money,you just lost half your savings, and any measures that doesn’t pick up on the difference isn’t worth using

இது போன்ற நிகழ்வுகளால் மக்கள் பொருட்களின் பண வீக்கம் (price inflation)மற்றும் சேமிப்பு பண வடிதல்(asset defalation) ஆகிய இரண்டாலும் பாதிக்க படுவர். இந்த பாதிப்பு முக்கியமாக பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகம் இருக்கும்.

--

Tuesday, March 17, 2009

கல்லூரி நினைவுகள் 2 - தேர்வு திருவிழா

கல்லூரியில் திருவிழா என்றால் நான்கு சம்பவ தினங்களை கூறலாம்.அது கல்லூரி கலை நிகழ்ச்சி தினம், கல்லூரி மாணவர் அமைப்புக்கான தேர்தல்(இப்போது எல்லாம் அது உண்டா என்று தெரியவில்லை),சுற்றுல்லா மற்றும். தேர்வு காலங்கள். தேர்வு காலம் என்பது கஷ்ட காலம் தானே இதில் திருவிழா எங்கு வந்தது என்று நினைக்கிறீர்களா? தேர்வுக்கு முன் நடுக்கும் ஏற்பாடுகளையும்,தேர்வு அன்று இரவு மாணவர்கள் விதம் விதமாக படிக்கும் முறை மற்றும் தேர்வு நடக்கும் போது நடக்கும் நிகழ்வுகளை இப்போது நினைத்து பார்த்தால் அது ஒரு திருவிழா என்று தான் கூற வேண்டும். நீங்களும் படித்து பார்த்து சொல்லுங்களேன்!
தேர்வுக்கான அணுகுமுறையை கையாளும் விதத்தை வைத்து மாணவர்களை பல பிரிவுகளாக பிரிக்கலாம். அவர்களில் சில முக்கிய பிரிவுகள்.

1.சிலபஸ்ஸில் உள்ள பாட திட்டத்தை வைத்து தேவையான பாடத்துக்கு மட்டும் கல்லூரி லக்ச்சரின் நோட்ஸ் வைத்தும், சரியாக கவர் ஆகாத பாடங்களை வாங்கிய புத்தகங்கள் மட்டும் நூலக புத்தகங்கள் மூலம் கவர் செய்து படிக்க நினைப்பவர்கள். இந்த பிரிவினரது எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.

2.இவ்வகை மாணவர்களுக்கு சிலபஸ் பற்றி எல்லாம் கவலை இல்லை. இவர்கள் ஆசிரியர் தரும் நோட்ஸை மட்டும் படிப்பார்கள்.அது தான் அவர்களுக்கு வேத வாக்கு.(இவர்கள் பார்வையில் நன்றாக, படிக்க எளிதான நோட்ஸ் வாசிக்கும் ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர்கள்!)

3.மூன்றாவது வகை மாணவர்களுக்கு ஆசிரியர், நோட்ஸ் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்கள் நம்பி இருப்பது தேர்வுக்கு முந்தய group study யை தான். பல குழுக்களாக இந்த மாணவர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன் இருப்பான். அவனது வேலை படத்திற்கு தேவையான் நோட்ஸ் மற்றும் தேவையெனில் புத்தகம் எடுத்து வைத்து பரிட்சைக்கு முந்தய நாள் குரூப் ஸ்டடியில் அவரது குழு மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்

4. நான்காவது வகை மாணவர்கள் புத்தகம், நோட்ஸ்,மாணவர்கள் எதையும் நம்பாதவர்கள். அவர்கள் நம்புவது எல்லாம் பிட் அடிப்பதை மட்டும் தான். படிப்பது என்பது அவர்களை பொருத்தவரை விஷயம் தெரிந்தவர்களிடம் முக்கிய கேள்விகளை collect செய்து அதற்கான பிட்களை பக்குவமாக எழுதி வைப்பதுதான். இதிலும் இரு பிரிவினர் உள்ளனர். புத்திசாலி பிட் அடிப்பவர்கள். கொஞ்சம் மந்தமானவர்கள். புத்திசாலி பிட் அடிப்பவர்களுக்கு அவர்கள் எழுதியுள்ள விடையை எப்படி கேள்வியாக மற்றி கேட்டிருந்தாலும் சரியான பிட்டை கண்டு பிடித்து விடுவார்கள். மந்தமானவர்கள் பரிட்சையின் போது சரியான பிட்டை புத்திசாலி பிட் அடிப்பவர்களிடம் சைகை முறையில் கேள்விக்கேற்ற பிட்டை கேட்டு பதில் எழுதுவர்.


இனி கல்லூரிக்கு வருவோம். செமஸ்டரின் கடைசி வேலை நாள் வந்த உடன் பெரும்பான்மை மாணவர்களின் முதல் வேலை நன்றாக கையெழுத்துள்ள மாணவர்களின் நோட்ஸை ஜெராக்ஸ் எடுப்பது. ஜெராக்ஸ் எடுப்பதற்கென்று ஒவ்வொரு குழு மாணவர்களும் ஒவ்வொரு மாணவரின் நோட்ஸை தேர்ந்தெடுத்திருப்பர். அந்த குழுவுக்குள் ஒரு ஏஜெண்ட் இருப்பார். அவர் எத்தனை பேருக்கு நோட்ஸ் வேண்டும் என்று கணக்கிட்டு மொத்தமாக ஜெராக்ஸ் எடுத்து வருவார். அவரிடம் தேவையானவர்கள் பணம் கொடுத்து நோட்ஸ் ஜெராக்ஸ் பெற்று கொள்வர். ஜெராக்ஸ் கடைகளில் இது போன்ற நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

இனி தேர்வுக்கான படிப்பிற்கான விடுமுறை ஆரம்பித்த பின் நடை பெறுவதை பார்ப்போம். விடுமுறை ஆரம்பித்தவுடன் எப்பொழுதும் மனதில் நினைப்பது, சென்ற செமஸ்டருக்கான படிப்பு விடுமுறையை வீணாக்கியது போல் இந்த முறையும் வீணாக்க கூடாது(கடைசி செமஸ்டர் வரை இதே நினைப்புதான்!). திட்டமிடல் மட்டும் மிக தெளிவாக இருக்கும்.எந்தெந்த நாள் எந்த பேப்பருக்கு செலவிடுவது எவ்வளவு நேரம் எந்த சாப்டருக்கு செலவிடுவது, ரிவிசன் செய்ய எவ்வளவு நேரம் என்று எல்லாம் செயற்கோளுக்கு எழுதும் மென்பொருள் போல துள்ளியமாக இருக்கும். முதல் நாள் விடுமறை வந்தவுடன் காலை மெதுவாக எழுந்து(technically speaking மதியம் எழுந்து) ஆற அமர மதிய உணவு உண்டு ,மெஸ்ஸிலிருந்து ரூம் செல்வதற்குள் பலருடன் அரட்டை அடித்து மதியம் குட்டி தூக்கம் போட்டு( இன்னும் நிறைய நாள் விடுமுறை இருக்கிறதல்லவா) மாலை எழுந்ததும் நண்பர்கள் கூறுவார்கள்- ஒழுங்கா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு பாடம் படிக்க ஆரம்பிக்கலாம். சிதம்பரம் நடராஜர் கோவில் மடபள்ளி புளி சாதம் மற்றும் வெளியில் விற்கும் பஜ்ஜி மீது அலாதி பிரியம் உண்டு.சரி என்று கிளம்பி விடுவோம் கோவில் போய் வந்து, அரட்டை அடித்தால் அன்று போய்விடும். சரி நளையிலிருந்து படிக்கலாம் என்று முடிவு செய்வோம். மறு நாள், எங்களிடம் விவாதிக்க படும் செய்தி, இனி தேர்வு முடியும் வரை கண்டிப்பா கடினமாக(?) படிக்க வேண்டும். அதை ஆரம்பிக்கும் முன் fresh ஆக ஒரு படம் பார்த்து விட்டு ஆரம்பித்தால் என்ன? இதுகூட லாஜிக்கலாக தான் தெரிகிறது என அன்று படம் பார்க்க கிளம்பி விடுவோம்.

இரண்டு நாள் வீணாகி விட்டதால் இனி நாட்களை வீணாக்க கூடாது என்று முடிவெடுப்போம். இனி அடுத்த நாள்.

காலை(?) வழக்கம் போல் மெதுவாக எழுந்து மதிய உணவு உண்டவுடன் நன்றாக களைப்பு வரும். இன்று night out செய்து விட வேண்டியது தான் என்று முடிவு எடுத்து விடுவோம். அதற்கு மதியம் நன்றாக தூங்கி எழுந்தால் தான் முடியும்.எனவே மீண்டும் ஒரு நல்ல தூக்கம். மாலை எழுந்து ஒரு நள்ள குளியல் போட்டு fresh செய்து வெளியில் வந்தால் நண்பர்களிடமிருந்து அழைப்பு வரும். PC போய் சண்முகம் கடையில் ஒரு தேனீர், பஜ்ஜி சாப்பிட்டு விட்டு படிக்க உட்காரலாம். இது கூட நல்ல ஐடியா தானே. உடனடியாக நண்பர்கள் கூட்டத்துடன் PC நோக்கி செல்வோம். சண்முகம் கடையில் டீ,பஜ்ஜி சாப்பிட்டு விட்டு கல்லூரி,மாநில மற்றும் உலக விஷயத்தை எல்லாம் அலசி முடிப்பதற்குள் இரவு 9 ஆகி விடும். மீண்டும் விடுதி வந்து இரவு உணவு உண்டு வரும் வழியில் மாணவர்களுடன் பேசி ரூமுக்குள் வந்து செட்டில் ஆவதற்குள் இரவு 10.30 ஆகி விடும். ரூமில் உள்ள மாணவர்களிடம் பேசி விட்டு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால் சிறிது பசிப்பது போல் தெரியும். பசியா? இருக்கவே இருக்கிறது சண்முகம் கடை. மீண்டும் நண்பர்களுடன் அரட்டையுடன் கடை நோக்கி பயணம். ஆம்லெட் அல்லது தோசை உண்டு டீ குடித்து, அரட்டை முடித்து விடுதி வந்து சேர இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடும். சரி இனி என்ன படிக்க போகிறோம் என்று நினைத்து, இன்று நாளே சரியில்லை என்று முடிவு செய்து நாளையிலிருந்து படிக்கலாம் என்று முடிவெடுத்து மீண்டும் தூக்கம்.

இனி அடுத்த நாள்.இது நாள் வரை நடந்த நிகழ்வுகளிளிருந்து கற்ற பாடம்- எப்படியும் பசங்களோடு சேர்ந்து இருக்கும் வரை படிக்க முடியாது. எனவே realisticகாக பிளான் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்போம். படிப்பதற்கு சரியான் நேரம் அதிகாலை தான். அப்பொழுதுதான் நண்பர்கள் எல்லாம் தூங்குவார்கள். எனவே disturbance இல்லாமல் படிக்கலாம்.

சரி அதிகாலை படிப்பு என்று தான் முடிவெடுத்து விட்டோமே. இன்றைய தினத்தை நன்றாக enjoy செய்ய வேண்டியது தான். அன்றைய தினமும் வழக்கம் போல் ஓடும். காலை 1 மணிக்கு(?) அலாரம் வைத்து படுப்போம். அலாரத்தில் ஸ்னூஸ் என்ற ஆப்சனை யார் தான் கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை. மீண்டும் மீண்டும் கடிகார அலாரம் ஸ்ணூஸ் செய்ய பட்டு பிறகு நிறுத்த படும்.

இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக படிக்காமல் சென்று கொண்டிருக்கும். விடுமுறை நாட்களின் முடிவை நெருங்கும் போது , சரி தலைக்கு மேல் வெள்ளம். இனி சாண் என்ன? முழம் என்ன? என்று பரிட்சை தினத்திலேயே பாடங்களை அட்டாக் செய்து விடலாம் என்று முடிவாகும். எங்களை தேற்றி கொள்ள மர்பி'ஸ் லா கை கொடுக்கும். அதான்
Time and efforts are inversely proportional to each other.

இது போன்ற தேர்வுக்கான விடுமுறை காலங்களில் நடக்கும் அதிசயம் ஒன்றுள்ளது. பெண்கள் விடுதியின் வாசலே கதி என்று இருக்கும் நண்பர்களை சாதாரன நாட்களில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. ஆனால் பெரும் பாலான பெண்கள் இவ்விடுமுறைகளில் ஊருக்கு சென்று விடுவதால் அந்த குரூப் மணவர்களிடம் நிறைய நேரம் செலவிடலாம். க்ரூப் ஸ்டடி மட்டும் நம்பி பாஸ் செய்தால் போதும் என்றும் நினைக்கும் மாணவர்களும் பிட் அடிக்கும் மாணவர்களும் தான் மனதில் படிக்க வேண்டும் என்ற கவலை இல்லாமல் மிகவும் enjoy செய்வார்கள்(மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டே enjoy செய்வார்கள்).

இவ்வாறு விடுதியில் இருந்தால் படிக்க முடியவில்லை என்று ஊருக்கு சென்று படிக்கலாம் என்ற் நினைத்து ஒரு மூட்டை புத்தகத்தை ஊருக்கு கொண்டு சென்றாலும் அங்கும் படிக்கும் மூட் வராது. ஒரு முறை இவ்வாறு புத்தகத்தை ஊருக்கு எடுத்து வந்த போது, எப்படியும் இங்க படிக்க போறதில்லை. அப்புறம் எதற்கு இந்த மூட்டையை இங்க தூக்கிட்டு வர? என்று என் அம்மா கூறியது நினைவிற்கு வருகிறது.

சரி படிப்பிற்கான விடுமுறை தான் இப்படி போய் விட்டது. எனி தேர்வு அன்று எப்படி போகிறது என்று பார்ப்போம். தேர்வு வந்தவுடன் அன்று இரவு அனைவரும் உண்மையிலேயே படிக்க ஆரம்பிப்பர். குரூப் ஸ்டடி படிக்கும் ரூம்களில் கலை கட்டும். பெரிய கும்பல் சேரும். கும்பலின் தலைவன் நோட்ஸை ஒரு பகுதியை படிப்பான். கூட்டத்தில் இருப்பவர்கள் நன்றாக கேட்பார்கள். மீண்டும் அவன் அதை அனைவருக்கும் புரியும் படி விளக்குவான். அனைவரும் அவரவருக்கு புரியும் படி புரிந்து கொண்டு, ரிவிசன் செய்ய தலைப்புகள் மட்டும் முக்கிய குறிப்புகளை குறிப்பெடுத்து கொள்ளுவார்கள். கொஞ்சம் கடுமையான பாடம் வந்தால் அதை எப்படி சாய்ஸ்ல் விடலாம் என்று ஆராய்வார்கள். அல்லது அதில் உள்ள முக்கிய தலைப்புகளை மட்டும் வைத்து எப்படி கதை எழுதி சமாளிக்கலாம் என்று திட்டமிடுவர். சில கடினமான பாடம் படித்தே ஆகவேண்டிய பகுதி வந்தால் முன்பு குறிபிட்டதில் உள்ள முதல் வகை பிரிவு மாணவர்களிடம் சென்று விளக்கம் கேட்டு கொள்வார்கள். குரூப் ஸ்டடியில் கலந்து கொள்ளும் மாணவர்களில் சிலரின் முக்கிய நோக்கம், பரிட்சையின் போது காப்பி அடிக்கும் போது ஒரு சில பகுதி மட்டும் பார்த்து மற்றதை தம் கேள்வி ஞானத்தில் வந்த சொந்த சரக்கின் மூலம் ஒப்பேத்தலாம் என்பது. மேலும் அவர்களில் சில சாதூரியமான மாணவர்கள் காப்பி அடிக்கும் போது ஒரு மாணவர் தவறாக எழுதினால் , அதை அறிந்து அடுத்தவரிடம் காப்பி அடித்து ஒரளவு நல்ல மதிப்பெண் பெறுவர். இவ்வகை மாணவர்கள் இரவு குரூப் ஸ்டடி செய்து நள்ளிரவு அல்லது அதிகாலை ரிவிசன் செய்து விடுவார்கள். பிட் அடிக்கும் மாணவர்கள் அதற்குள் தெளிவாக பிட் எழுதி வைத்து கொள்வர். நன்றாக படிப்பவர்களில் சிலர் இரவு நண்பர்களுக்கு அவ்வப்போது தேவையான் கடினமான பாடத்தை சொல்லி கொடுத்து விட்டு அதிகாலை எழுந்து முறையாக படிப்பர்.
இனி தேர்வு அன்று நடப்பதை பார்ப்போம்.

தேர்வு கூடத்தில் யார் மேற்பார்வையளராக வருவார்? இது தான் காப்பி அடிப்பவர்கள் மற்றும் பிட் அடிப்பவர்களின் கேள்வி. ஒரு சில ஆசிரியர்கள் பிட்/காப்பி அடிப்பவர்களை பிடிப்பதில் பேர் போனவர்கள். அவ்வகை ஆசிரியர்கள் வந்தால் பிட் அடிப்பவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் விதியை நொந்த படியே அரை மணி நேரத்தில் தேர்வு கூடத்தை விட்டு வெளியில் சென்று விடுவர்.

ஒரு சிலருக்கு தேர்வின் மதிப்பெண்ணும் தான் எழுதும் கூடுதல் விடை தாளின் என்ணிக்கையும் நேர் விகிதத்தில் இருக்கும் என்று நினைப்பு. பரிட்சை எழுத ஆரம்பித்த 10 நிமிடத்தல் கூடுதல் விடைதாள் கேட்டு விடுவர்.அது கடினமான வினா தாளாக இருந்தாலும் சரி.எளிதான வினா தாளாக இருந்தாலும் சரி. கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் போது என்று நினைக்கிறேன். பரிச்சையின் போது மூன்றாம் ஆண்டிற்கான வினாதாளை தவறுதலாக கொடுத்து விட்டனர். வினாதாளை வாங்கி முதலில் கேள்வியை பார்த்த போது குழப்பமடைந்தோம். பிறகு தவறு புரிந்து விட்டது. எங்களுக்குள் சைகையில் தகவல் பறிமாரி கொண்டிருந்தோம்.யார் அதை மேற்பார்வையாளரிடம் சொல்வது. யோசித்தி கொண்டு இருக்கும் போதே 10 நிமிடம் ஆகி விட்டது. பிறகு மெதுவாக நான் எழுந்து மேற்பார்வையாளரிடம் சொல்லி கொண்டிருந்த போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது ஒரு மாணவர் எழுந்து கூடுதல் விடைதாள் கேட்டார். மேற்பார்வையாளரும் என்னப்பா? கூடுதல் விடைதாள் வாங்கி அவர் எழுதுகிறார். நீ தவறான கேள்விதாள் என்கிறாயே? என்றார். நாங்கள் எல்லாம் அந்த மாணவரை பார்த்து ஆடி போய் விட்டோம். பிறகு அந்த எக்சாம் கேன்சல் செய்ய பட்டு மறு தேர்வுக்கு ஆணையிட்டனர். இன்று வரை அந்த மாணவர் விடை தாளில் என்னதான் எழுதினார் என்பது எங்கள் அனைவருக்கும் கேள்விகுறியே.

தேர்வு எழுதும் தினத்தின் ஹீரோ என்றால் பிட் அடிக்கும் மாணவர்களை தான் கூற வேண்டும். பிட் அடிப்பதை கலை என்றும் கூறலாம் அறிவியல் என்றும் கூறலாம். ஒவ்வொரு முறை அவர்கள் பிட் அடிக்க கடை பிடிக்கும் முறைகளை கண்டால் பிரமிப்பை ஏற்படுத்தும்.

நான் படிக்கும் காலத்தில் இருந்த சில பிட் அடிக்கும் முறைகள்

1. முழு கை சட்டையின் கை பகுதியின் பின் புறம் பிட் எழுதுவர்
2. டேபிலின் அடியில் மடித்து வைக்க பட்ட பேப்பரை ஒட்டி வைத்தல்
3. ஸ்கேலின் பின் புறம்
4. ரீபில் பேனாவின் ரீபிலை எடுத்து விட்டு அதனுள் பிட் சுருள் வைத்தல்
5. சட்டை காலர் உள் பகுதி
6. கால்குலேட்டர் பின் புறம்
7. சிலீப்பரின் பின் புறம்
8. சட்டை அடிபுறத்தின் பின் புறம் பிட் எழுதி டக் செய்து கொள்வர்

இவை எல்லாம் சில வகை பிட் அடிக்கும் தொழில் நுட்பங்கள்.


பரிட்சை காலத்தில் தான் தூக்கத்தின் அருமை புரியும். அனைத்து தேர்வும் முடிந்தால் நிம்மதியாக ஒரு தூக்கம் போடுவோமே? அது உண்மையிலேயே ஒரு சுகமான அனுபவம்.

அண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி


--

Friday, March 06, 2009

நாணயமில்லாத நாணயம்- பணத்தை உற்பத்தி செய்யும் வங்கிகள்

அனைவரது வாழ்விலும் இன்றியமையாத பங்கை வகிப்பது பணம். பணம் என்றவுடன் நம் மனக்கண்ணில் தோன்றுவது காகிதத்தாலான ஒரு பொருள். அனால் அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அதன் மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது பற்றி சிந்திப்பவர்கள் நம்மில் சிலரே. இந்த பணத்தை உற்பத்தி செய்வது யார்? இது என்ன கேள்வி? அரசாங்கம் தானே என்று நம்மில் பலர் எண்ணுவோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு சாதாரண வங்கிதான் பெரும்பாலான பணத்தை உற்பத்தி செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?இது எப்படி சத்தியமாகும் ?ஆனால் உண்மை அதுதான்.

The other way around - Bank Robber

நன்றி- jugsi.com

வங்கிகள் தங்களிடம் உள்ள கையிறுப்பு தொகைக்கு அதிகமாக கடனை கொடுக்கிறது.அவ்வாறு கடனாக கொடுக்கப்படும் பணத்தை உபயோகபடுத்தப்பட்டு மீண்டும் வங்கியில் கையிறுப்பாக வைக்கப்படும் போது மீண்டும் அதிக அளவு கடன் கொடுக்கப்படுகிறது.உதாரணமாக 10,000 ரூபாயை ஒருவர் வங்கியில் டெபாசிட் செய்கிறார் என்று வைத்து கொள்வோம். அந்த வங்கி மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவித பணத்த கையிறுப்பாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக இது 5 லிருந்து 20 சதவிதமாக இருக்கும். இந்த உதாரணத்தில் 10% என்று வைத்து கொள்வோம்.வங்கி 1000 ரூபாயை கையிறுப்பாக வைத்து விட்டு 9000 ரூபாயை மற்றொருவருக்கு கடனாக கொடுக்கும். அந்த 9000 ரூபாயை கடன் வாங்குகிறவர் அந்த பணத்திற்கான காசோலையை இன்னொருவருக்கு கொடுத்து, அந்த மற்றொருவர் அந்த காசோலையை மீண்டும் ஒரு வங்கியில் செலுத்துவதாக வைத்து கொள்வோம்.

இந்த உதாரணத்தில் அனைவரும் ஒரே வங்கியை உபயோகப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம்.அந்த வங்கி அந்த பணத்தில் 900 ரூபாயை கையிருப்பாக வைத்து 8100 ரூபாயை கடனாக மற்றொருவருக்கு கொடுக்க முடியும். இது போல் தொடர்ச்சியாக கடன் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த பணத்திலிருந்து பல பேருக்கு அவ்வாறு கடன் கொடுப்பதன் மூலம் 100,000 ரூபாய் கொடுக்க முடியும். ஆனால் வங்கி வைத்திருக்கும் கையிருப்பு தொகையோ 10,000 ரூபாய் மட்டுமே. இந்த படத்தில் உள்ள புள்ளி விவரத்தை பார்த்தீர்களானால் வங்கி எவ்வாறு அதிக அளவு பணத்தை உருவாக்குகிறது என்பது விளங்கும்(Fractional Reserve System). கடன் வாங்குகிறவர் நேரடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பணத்தை மீண்டும் வங்கியில் செலுத்தாவிட்டால் இந்த சுழற்சி நடுவில் நின்று விடும். ஆனால் அவ்வாறு நடப்பது அரிது. இந்த சுழற்சசியின் வேகம் அப்போதைய பொருளாதார நிலையை பொறுத்து அமையும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், ஒவ்வொரு முறை அது கடன் கொடுக்கும் போதும் அந்த பணத்திற்கு வட்டியாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வருடமும் பெருமளவு வசூலிக்கிறது. மிக குறைந்த முதலீடு மட்டும் கொண்டு, இல்லாத பணத்தை உருவாக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். நாட்டில் பொருளாதாரம் மிகவும் வளர்ச்சி அடையும் போது பணமும் வேகமாக கை மாறி கொண்டிருக்கும்(velocity of money) போது மேற்கூறிய நிகழ்வும் வேகமாக நடக்கிறது. அதனால் தான் வங்கிகளும் அனைவருக்கும் முடிந்த வரை பணத்தை கடனாக கொடுத்து தங்களது வளர்ச்சியை மிக வேகமாக பெருக்கி கொள்ள முனைகிறது.



இந்த செயல்முறைக்கு ஆதரவானவர்களின் கருத்து, இவ்வாறு பணத்தை அதிக அளவு உற்பத்தி செய்து கொடுப்பதினால் அது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பது.

வங்கிகள் கடனுக்கு அடமானமாக பொருளை வைத்து தருவதால் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. அடமானமாக வைத்திருக்கும் பொருளின் விலை பெருமளவு குறைந்தால் தான் வங்கிகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது அல்லது அடமானமாக பொருளை பெறாமல் பெருமளவு கடன் கொடுத்தாலும் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு வங்கிகள் பணத்தை அதிக அளவு உருவாக்கி கடனாக கொடுத்துக் கொண்டே செல்வதனால் நாட்டில் பணப் புழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பொருட்கள் உற்பத்தியை விட பணத்தின் உற்பத்தி மிக அதிகமானால் அது பெரிய பண வீக்கத்தை உண்டாக்குகிறது.

மேலும் இது முக்கியமாக நிலம் மற்றும் வீடுகளின் விலையை பெரிய அளவில் உயர்த்துகிறது. இந்தியா போன்ற நாடுகளில் கடன் கொடுக்கும் முன் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு குறிபிட்ட தொகையை வாங்கி மீதி தொகையை வங்கி கடனாக கொடுக்கிறது. எனவே கடன் வாங்கி பொருளை, உதாரணமாக வீடு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வாங்கிய வீட்டின் மதிப்பு குறைந்தாலும் கணிசமான அளவு சொந்த பணத்தை போட்டிருப்பதால் எப்படியாவது முழு கடனையும் அடைத்து விட முயற்சி செய்வர், ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் தன் கையிலிருந்து மிக சொற்ப தொகை மட்டும் போட்டு வீடு வாங்க கடன் வாங்கி கடனுக்கான வட்டியை மட்டும் தவணை முறையில் செலுத்த முடியும்.

அவ்வாறு வீடு வாங்குபவர்களின் நோக்கமே, வீட்டின் விலை உயர்ந்தவுடன் விற்று விடலாம் என்பது தான். வரைமுறையின்றி இவ்வாறு கடன் கொடுத்ததால் அமெரிக்க ரியல் எஸ்டேட்டின் விலை பல மடங்கு செயற்கையாக உயர்த்தப்பட்டது. உண்மையில் சராசரி நடுத்தர வர்க்கத்தினரின் சம்பளத்தில் உயர்வில்லை. செயற்கையாக உயர்ந்த விலை உண்மையான நிலைக்கு வர தொடங்கிய போது கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிக் கொடுக்க விருப்பம் இல்லாமலும், திருப்பிக் கொடுக்க முடியாமலும் கடனை திருப்பிக் செலுத்தாத போது வங்கிகளின் கையில் மதிப்பு பெருமளவில் குறைந்த வீடுகளின் பத்திரம் மட்டுமே எஞ்சியது. அது உலக பொருளாதாரத்தையே படுபாதாளத்திற்கு தள்ளியது.

இவ்வாறு வங்கிகள் பெருமளவு கடனாக கொடுப்பதினால், முக்கியமாக நாட்டின் உற்பத்தி திறனை விட மிக அதிகமாக பணபுழக்கத்தை ஏற்படுத்துவதால் மற்றொறு பிரச்சனையும் ஏற்படுகிறது. கடனின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வட்டியின் அளவும் அதிகரிக்கும். அந்த வட்டியை திருப்பிக் செலுத்த பணபுழக்கத்தை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும். வங்கிகளின் நிலை மோசமானாலும் பெருக்கபட்ட வட்டியை திருப்பிக் கொடுக்க அரசுகள் செயற்கையாக பணத்தை வங்கிகளிடம் செலுத்தி பண புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். இது சுழற்ச்சியாக மாறும். இதுதான் அமெரிக்காவில் இன்று நடக்கிறது. இவ்வாறான செயலால் ஏற்படும் மற்றொரு விளைவு, இந்த பணபுழக்கம் ஆரம்பிப்பதற்கு முன் மக்களிடம் இருந்த பணத்தின் (சேமிப்பு மற்றும் சம்பளம்) வாங்கு திறன் குறைந்து செல்வ சீரழப்பு (wealth destruction) நிகழ்கிறது.இது போன்ற boom மற்றும் bustஇனால் அதிகம் பாதிக்க பட போவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தான்.

வங்கிகள் பற்றி படிக்கும் போது கல்லூரி காலங்களில் படித்த புது கவிதை தான் ஞாபகம் வருகிறது(அப்துல்ரகுமான் அல்லது கல்யாண்ஜியினுடையது என்று நினைக்கிறேன்)

வரங்களே இங்கு
சாபங்களானால்
தவங்கள்
எதற்காக?



வங்கிகள் இந்த முறையால் அடையும் லாபத்தை பார்ப்போம். அமெரிக்காவில் $1 மில்லியன்(10 லட்சம்) பணம் டெபாசீட் வைத்து கொண்டு மேற் சொன்ன முறையில் $10(1 கோடி) மில்லியன் வரை கடன் கொடுக்க முடியும். வங்கி 6 சத வட்டிக்கு கடன் கொடுக்கிறது என்று வைத்து கொள்வோம், வங்கிக்கு 1 ஆண்டில் வட்டியாக கிடைக்கும் பணம் $600000(6 லட்சம்). பணம் கையிறுப்பாக(depositors) வைத்திருப்பவர்களுக்கு 2% வட்டி கொடுத்தால் சுமாராக $200000($2 லட்சம்) கொடுக்க வேண்டும். எனவே $1 மில்லியன்(10 லட்சம்) வைப்பு நிதியின் மூலம் ஒரு வருடத்தில் வங்கி அடையும் லாபம் $400000(4 லட்சம்)! (குறிப்பு: இந்த கணக்கீடு ஒரு உதாரணமே. பணத்தின் திசைவேகம் மற்றும் திரும்ப கொடுக்க படாத கடன்களால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பு இதில் சேர்க்கபடவில்லை)


--

Sunday, March 01, 2009

தங்கத்தின் விலை தொடர்ந்து உயருமா?


இனி வரும் காலங்களில் தங்கம் விலை எந்த அளவு உயரும்? இதுதான் இன்று உலக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் மக்கள் முக்கியமாக இந்திய மக்களிடம் அதிகம் விவாதிக்க படும் செய்தியாக உள்ளது?

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து இந்திய பெண்மணிகளும் விரும்பி அணிவது தங்க ஆபரணங்கள். அப்படிபட்ட தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கான சாத்திய கூறுகளுக்கான காரணங்களை பற்றி பார்ப்போம்.

பொருளாதார வல்லுனர்களில் இரு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் தங்கம் என்பது பணத்தை போல் நினைத்த அளவு அதிகம் உற்பத்தி செய்ய முடியாது.அதை உற்பத்தி செய்யும் செலவும் பணத்தை உற்பத்தி செய்வதை விட மிக அதிகம். மேலும் தங்கத்தின் மதிப்பு பல காலமாக நிலை நிறுத்த பட்டுள்ளது(Stable Price). முக்கியமாக பணத்தை நாடுகள் செய்யும் உற்பத்தியை(Production) விட அதிக அளவு வெளியிடுவதால் பண வீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு குறைந்து விடும் நேரங்களில், மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை பணவீக்கத்தில் இருந்து காக்க தங்கத்தில் முதலீடு செய்ய முனைவதால் தங்கத்தின் மதிப்பு இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று வாதிடுவர்.

தங்கத்தின் விலை உயராது என்று கூறுகிறவர்கள் தங்கம் என்பது ஆபரண மதிப்பு மட்டுமே உள்ள ஒரு பொருள். தங்கத்தின் மதிப்பு பணத்துக்கு பதிலாக தங்கத்தை மாற்றாக (gold convertibility) அரசுகள் கொடுத்த வரை இருந்தது. அமெரிக்கா 1971ல் இந்த முறையை கைவிட்டதிலிருந்து தங்கத்தின் செயற்கையான மதிப்பு குறைய தொடங்கி விட்டது. மேலும் பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவை அரசாங்கம் அச்சிடும் பணத்தை அடிப்படையாக கொண்டவை,என்வே பணத்தை அடிப்படையாக கொண்ட இவ்வகை சொத்துக்களில் முதலீடு செய்தால் அவற்றின் வளர்ச்சி தற்போது குறைவாக இருந்தாலும் நிச்சயம் பொருளாதார சீர்கேடு சரியான பிறகு , தங்கத்தில் செய்யும் முதலீடு தரும் லாபத்தை விட அதிகமாக இருக்கும் என்பர். இவ்வகை காரணங்களால் தங்கத்தை Anti dollar(பணம்) என்று கூறுவர்


தங்கத்தை பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவும் ஆபரணம் செய்வதற்காகவும் வாங்குவார்கள். அரசோ செல்வ கையிருப்புக்காக (Reserve) வாங்குவர். உலகில் உள்ள தங்கத்தில் 19% நடுவண் வங்கிகளில்(Central Banks) சேமிப்பாக உள்ளது. பிற முதலீடுகளில்(அதாவது பாண்டுகள்,பங்கு சந்தை, நிலம் etc) அதிக அளவு லாபம் ஏற்படவிலலை என்றாலும், தங்கள் நாட்டின் நாணய மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடையும் என்று நினைத்தாலும் பொதுவாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முற்படுவர். உலகிலேயே அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இதற்கு காரணம் தங்கம் ஒவ்வொரு இந்தியராலும் முதலீடு செய்வதற்காகவோ அல்லது ஆபாரணம் செய்வதற்காகவோ வாங்குவதால் தான்.கடந்த சில வருடங்களாக சீன மக்களும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்து விட்டனர்.அவர்களுடைய தங்கம் வாங்கும் திறன் அமெரிக்காவை தாண்டி விட்டது.


தங்கத்திற்கு எதிராக கூறப்படும் வாதம்.

1. தங்கத்திற்கு என்று தொழிற்சாலைகளில் பெரிய உபயோகம் கிடையாது. கச்சா எண்ணெய் போன்ற commodityகளுக்கு அனைத்து துறைகளிலும் உள்ள உபயோகம் போல் தங்கத்திற்கு இல்லை.டாலரை கொடுத்து தங்கத்தை திருப்பி பெற(convertibility to gold) வாய்ப்பு முன்பு இருந்ததால்(விவரத்திற்கு டாலர் அரசியல் படிக்கவும்) தங்கத்திற்கு மதிப்பு இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லாததால் தங்கத்திற்க்கு மதிப்பு எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது.

2. உலகில் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது பணத்தின் மதிப்பு குறையும் என்பதால் தங்கத்தின் மதிப்பு கூடும் என்பர், ஆனால் பொருளாதார விழ்ச்சியின் போது அடிபடை பொருட்களின் தட்டுபாட்டாலும், மக்கள் வாங்கும் திறன் குறைவதாலும் அதன் மதிப்புதான் கூடுமே தவிர தங்கத்தின் விலை கூடபோவதில்லை.

3. பொருள்களுக்கு மதிப்பு உள்ளது.அனால் பணத்திற்கு? (டாலருக்கு) பணம் என்பது வெறும் பேப்பர் தான்.அதன் மதிப்போ மக்கள் அதன் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் உள்ளது. இதே போல் தான் தங்கதிற்கும். நாம் நம்பிக்கை வைத்துள்ளவரை தான் அதற்கு மதிப்பு. எனவே தங்கம் மற்றும் டாலர் இரண்டும் ஒரே நிலையில் தான் உள்ளது
‘Confidence is the most important thing, more important than gold or currency’

4. கடந்த கால வரலாற்றை பார்த்தால் பங்கு சந்தை மற்றும் Bondல் செய்த முதலீடு தங்கத்தை விட அதிக லாபத்தை தந்துள்ளது. உதாரணமாக 1801ம் ஆண்டு ஒரு டாலர் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு $8.8 மில்லியனாக பெருகியிருக்கும். அதையே Bondல் முதலீடு செய்திருந்தால் அது $14,000 அகியிருக்கும். அதையே தங்கத்தில் முதலீடு செய்தால் அது இன்று $150 ஆக மட்டுமே ஆகியிருக்கும்.

தங்கத்திற்கு ஆதரவாக கூறப்படும் வாதம்

1. தங்கத்தையும் பணத்தையும் ஒப்பீடு செய்பவர்கள் 1700ஆம் ஆண்டிலிருந்து கணக்கை எடுப்பர். ஆனால் 1971 வரை தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யபட்டதாக(Fixed Price) இருந்தது.அது முதலீடாக பார்க்க பட்டதை விட பணமாக தான் பார்க்க பட்டுள்ளது. அது போல் 1700ல் இருந்த எந்த கம்பெனியும் தற்போது இல்லை.எனவே தங்கத்தின் விலையை 1970க்கு பிறகுதான் பார்க்க வேண்டும் 1968- 80 க்குள் தங்கதின் விலை 230% உயர்ந்துள்ளது. ஆனால் பங்கு சந்தை அந்த அளவு உயரவில்லை. மேலும் பங்கு சந்தை வளர்ச்சியை, மூடிய நிறுவனங்கள் மற்றும் தோல்வி அடைந்த நிறுவனங்களை நீக்கி செயற்கையாக உயர்த்தி காண்பித்தும் தங்கதின் வளர்ச்சி அளவுக்கு அது இல்லை.

2. உலகின் சேமிப்பு செல்வமாக அதிக அளவில் இருப்பது டாலர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அமெரிக்க நிதி நெருக்கடியும் , அதன் அதிகரித்து வரும் பற்றாக்குறை பட்ஜெட் காரணமாகவும் அது அதிக அளவில் டாலரை அச்சடித்து வினியோகம் செய்வதால் டாலரின் மதிப்பு நீண்ட கால அளவில் எவ்வாறு நீடிக்கும் என்பது கேள்விக்குறியே. டாலருக்கு மாற்றாக கருதபட்ட யூரோவும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. எனவே உலக அளவில் அனைவரின் கவனமும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அதிக பணத்தை அடிப்பதால் பண வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.என்வே பணத்தின் மதிப்பு மிக அதிக அளவில் குறையலாம். அவ்வாறு குறையும் போது தற்போது உள்ள செல்வத்தை மதிப்பிழக்காமல் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்தால் தான் முடியும்.எனவே தங்கத்தில் அதிக அளவு மக்கள் முத்லீடு செய்வர்(Gold is best inflation hedge). இதன் மூலம் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.

3. தங்கத்தை நல்ல முதலீடாக கருதுபவர்கள் அதன் விலை பெருமளவுக்கு உயராமல் இருப்பதற்கான காரணம் தங்கத்தின் விலையை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த முதலீட்டு வங்கிகளும், மேல்நாட்டு மத்திய வங்கிகளும் நேரடியாக/மறைமுகமாக செய்த பரிவர்த்தணை காரணமாக செயற்கையாக குறைத்து வைத்து இருந்தது தான் என்கிறார்கள். இது நாள் வரை தங்கத்தின் விலை டாலரின் மதிப்பை சார்ந்து ஏற்ற இறக்கமாக இருந்தது.அதாவது இரண்டின் விலையும் ஒன்றை ஒன்று சார்ந்ததாக கருத பட்டது.தற்போது ஏற்பட்ட முதலீட்டு வங்கிகளின் வீழ்ச்சியால், இனி அவர்களால் இது போல் செய்வது கடினம் என்று கருதுகிறார்கள். அவர்களின் கருத்தை ஆமோதிப்பது போல் சர்வ தேச சந்தையிலும் தங்கத்தின் மதிப்பு கடந்த சில காலமாக டாலரின் ஏற்ற இறக்கத்திர்கு மதிப்பளிக்காமல் சீராக விலை ஏற தொடங்கி உள்ளது

4. Gold convertibility to dollar இல்லாததால் தங்கத்திற்கு மதிப்பு இல்லை என்று சொல்ல படுவது உண்மை என்றால், தங்கத்தின் விலை 1971க்கு பிறகு பெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ந்டக்க வில்லை. தங்கத்தின் விலை 1971 க்கு பிறகு gold convertibility to dollar மறைந்த பின்னும் விலை ஏறி கொண்டு தான் உள்ளது. எனவே அந்த கூற்று உண்மையில்லை.


உலக பொருளாதாரத்தில் எது எப்பொழுது நடைபெறும் என்று கணிப்பது இயலாத காரியம். சமீப காலமாக பொருளாதாரத்தின் அடிப்படை விதிகள் களங்கடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரியல் எஸ்டேட் துறை 30% மேல் வீழ்ச்சி அடையாது என்பது அனைவரின் கருத்து.அது பொய்த்து போனது தான் சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானது. இந்த பதிவை படிப்பவர்கள் தங்கத்திற்கான ஆதரவு மற்றும் எதிப்பு கருத்துகளை படித்து இனி வரும் காலங்களில் எந்த கருத்துக்கு அதிக வாய்ப்புள்ளது என்று முடிவு செய்து அதன் ஏற்றம் பற்றி முடிவு செய்யலாம்.

என்னை பொருத்தவரையில் தற்போதய நிதி நெருக்கடியால் டாலரின் தேவை அதிகம் இருப்பதால் தங்கம் விலை குறுகிய கால அளவில் தொடர்ந்து ஏறி கொண்டிருப்பது கடினம். ஆனால் தற்போது அமெரிக்க அரசு பல்லாயிரம் பில்லியன் பணத்தை வங்கிகளுக்கு கொடுத்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால் வங்கிகள் அவற்றை இன்னும் கடனுக்கு கொடுக்க ஆரம்பிக்கவில்லை. அவற்றை கடன் கொடுக்க ஆரம்பித்தால் அது பல டிரில்லியன் டாலர்கள் பண புழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும்(பில்லியன் எவ்வாறு ட்ரில்லியன் ஆகிறது என்று அடுத்த பதிவில் விளக்குகிறேன்).அப்போது பண வீக்கம் பெருமளவு அதிகரித்து டாலரின் மதிப்பு குறைய வய்ப்புள்ளது. எனவே அது போன்ற சூழ்நிலை(1-2 ஆண்டுகளில்) வந்தால் அல்லது வரும் என்று யூகம் கிளம்பும் போது தங்கம் விலை பெருமளவு உயர வாய்ப்புள்ளது. அதேசமயம் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் 1971 ல் Convertibility to gold எடுத்தது போன்ற தார்மீக ரீதியாக தவறான மற்றும் யாரும் எதிர் பார்க்காத unconventional ந்டவடிக்கை ஏதேனும் எடுத்து தங்கத்தின் விலையை குறைத்து டாலரின் மதிப்பை தக்க வைக்க முயலலாம்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் மேலை நாடுகளின் வங்கிகள் தங்களிடம் உள்ள தங்கத்தை சிறிது சிறிதாக விற்க தொடங்கி உள்ளது.அதற்கு காரணம் அரசுகளின் பணத்தை(டாலர்) அடிப்படையான முதலீடுகளின் லாபம், தங்கத்தினால் கிடைக்கும் லாபத்தை விட அதிகம் என்று கூற பட்டாலும், உலகலவில் தங்கத்தை சேமிப்பு செல்வமாக இருக்கும் பழக்கத்தை சிறிது சிறிதாக அழித்து நாடுகள் அடிக்கும் பணத்திற்கு மற்றாக பெரிய அளவில் எந்த செல்வமும்(govt reserve) முக்கியமாக தங்கம் வந்து விட கூடாது என்பதே என்று கருத பட்டது. (இங்கிலாந்து சுமார் 400 டன் தங்கத்தை 1999- 2002 ல் விற்று, தற்போதைய தங்க விலை ஏற்றத்தால் $10 பில்லியன் நட்டத்தை சந்தித்துள்ளத்து என்பது வேறு விஷயம்! )தற்போது உலகில் உள்ள பல பெரிய வங்கிகள் வீழ்ந்து உலக அளவில் விரல் விட்டு எண்ண கூடிய அளவில் மிக பெரிய வங்கிகள் உருவாவதால், இது போன்ற குறுக்கு வழி மற்றும் தார்மீகத்திற்கு அப்பாற்பட்ட வழிகளை உலக நாடுகளும் வங்கிகளும் சேர்ந்து பின் பற்றுவது மிகவும் எளிதாகலாம்.

Warren Buffett on Gold:
It gets dug out of the ground in Africa, or someplace. Then we melt it down, dig another hole, bury it again and pay people to stand around guarding it. It has no utility. Anyone watching from Mars would be scratching their head.



--

Monday, February 23, 2009

ஆஸ்கார் விருது சந்தோஷமும்(A.R.Rahman) ,வருத்தமும்(MIA)




இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று A.R.Rahman சரித்திரம் படைத்த செய்தி உண்மையிலேயே உலக தமிழர்களுக்கு எல்லாம் மாபெரும் சந்தோஷம் கொடுக்கும் செய்தியாகும். அதுவும் இளம் வயதில் இவ்விருது பெற்றதாலும், அவருக்கு ஹாலிவுட்டில் பெரிய அளவில் அறிமுகம் கிடைத்ததாலும் அவருக்கு ஹாலிவிட்டில் மிகப்பெரிய பிராஜெக்ட்களில் இனி வாய்ப்பு கிடைத்து உலகலவில் அவர் பல சாதனைகளை படைக்க போகிறார் என்பதும் நிச்சயம்.அவருடைய வெற்றி பயணம் தொடர நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.

இந்த ஆஸ்காரில் வருத்தம் அடைய வைத்த செய்தி, விருது பெற பரிந்துரைக்க பட்டவர்களில் ஒருவரான MIAக்கு இந்த முறை விருது கிடைக்க வில்லை என்பது. ஹிப் ஹாப் படகர்களில் உலக அளவில் கலக்கி கொண்டிருக்கும் தமிழர் MIA. இலங்கையில் நடைபெரும் இன அழிப்பு பற்றி தைரியமாக மேல் நாட்டு மீடியாக்களில் எடுத்து கூரியவர் .அவருக்கு இந்த ஆண்டு கிராமி விருது பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தும் அது கிடைக்க வில்லை. இந்நிலையில் ஆஸ்கார் விருதும் கிடைக்காமல் போய்விட்டது பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் நிச்சயம் அவர் பல ஆஸ்கார் மற்றும் கிராமி விருது பெறுவார் என்பது நிச்சயம்

சுவிஸ் வங்கியின் ரகசியம்- அமெரிக்காவை பின்பற்றுமா இந்தியா?

உலகில் உள்ள அனைத்து நாடுகளிளும் உள்ள பெரிய ஊழல் பெருச்சாளிகளின் பணத்திற்கு பாதுகாப்பான சொர்க்கமாக உள்ளது சுவிஸ் வங்கி. அதற்கு முக்கிய காரணம் அங்கு பணத்தை முதலீடு செய்பவர்களின் பெயரும் கணக்கும் மிகவும் ரகசியமாக வைக்கபடுவது தான்.இவ்வாறு தன் சொந்த நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை சுவிஸ் வங்கியில் கணக்கில் வைப்பதால் அந்த நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றில் சில- வரி இழப்பு,பணத்தை வங்கியில் போட்டால் அதன் மூலம் புதிதாக உருவக்க படும் பணப்புழக்கம் குறைவு, ஊழல் மற்றும் லஞ்சப்பெருக்கம் மற்றும் சமூக விரோத கும்பல்களின் குழுமம் பெருக்கம் போன்றவை.

இந்த பிரச்சனகள் அமெரிக்காவை கூட விட்டு வைக்கவில்லை.2002 - 2006 வரை அமெரிக்கர்கள் சுமார் $20 பில்லியன் பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்து உள்ளனர். இதன் மூலம் $200 மில்லியன் அமெரிக்க அரசுக்கு வரி இழப்பாகி உள்ளது. சுவிஸ் வங்கி தன் வாடிக்கையாளர்களின் கணக்குகளை இரகசியமாக வைப்பது பல ஆண்டுகளாக உள்ள பழக்கம். ஆனால் அமெரிக்கா தற்போது சுவிஸ் வங்கியிடம் அழுத்தம் தெரிவித்து இவ்வாறு சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்யும் அமெரிக்கர்களின் பட்டியலை அமெரிக்க அரசிடம் தெரிவிக்க அனுமதி பெற்று விட்டது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சட்ட விரோதமாக வைத்திருக்கும் பணம் தான் அதிக அளவு உள்ளது என்று ஒரு பேச்சு வெகு காலமாக உள்ளது. அமெரிக்க அரசு செய்ததை போல் ஏன் இந்திய அரசும் சுவிஸ் வங்கியிடம் அழுத்தம் தெரிவிக்க கூடாது? மற்ற அனைத்திற்கும் அமெரிக்காவை பின் பற்றும் மன்மோகன் அரசு இதற்கு மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறது. இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஏன் அனைத்து கட்சியினரும் எழுப்ப முற்படவில்லை? மற்ற விஷயத்திற்கு எல்லாம் பத்திரிக்கை தர்மம் பேசி பெரிய பிரச்சனையை கிளப்பும் இந்திய பத்திரிக்கைகள் இந்த அத்தியாவசிய முக்கிய பிரச்சனையில் மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன்?

சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளது பெரும்பாலும் இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும்,மாபியாக்களும் அவர்களின் பிடியில் இருக்கும் பத்திரிக்கை உலகும் தான் என்பது இதன் மூலம் புலனாகிறது. மற்ற பிரச்சனைகளுக்கு பார்லிமெண்ட் மற்றும் இந்தியாவையே ஸ்தம்பிக்க வைக்கும் இடது சாரிகள் இந்த பிரச்சனையில் மட்டும் ஓடி ஒளிவது ஏன்?

அமெரிக்கா தற்போது நடவடிக்கை எடுத்து உள்ளதால், இந்த சந்தர்பத்தை இந்தியா அழகாக பயன் படுத்தி அங்கு பதுக்க பட்டுள்ள இந்திய பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்யலாம். உண்மையிலேயே இந்தியா முயற்சி செய்யுமா? இது பற்றி யார் கவலை பட போகிறார்கள்.


--

Tuesday, February 17, 2009

இந்திய steelகளில் கதிரியக்க(radioactive) பொருட்கள் கலப்படம்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் steelகளில் கதிரியக்க பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.முதலில் ரஷ்யாவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய பட்ட பொருட்களில்(steel) கதிரியக்க அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்க பட்டது.ஒரு வருடத்துக்கு அனுமதிக்கபடும் கதிரியக்க அளவை ஒரே நாளில் இந்திய steelகள் வெளியிடுவது கண்டுபிடிக்கபட்டது.உடனடியாக அது இந்தியாவிற்கு திரும்பி அனுப்பபட்டுள்ளது. அந்த steel முறையாக அழிக்கபட்டுள்ளதா? அல்லது அது இந்திய சந்தையில் விற்க பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

ரஷ்யாவிற்கு அனுப்ப பட்ட steelகளில் மட்டும் இவ்வகை கதிரியக்க பொருள் இல்லை. ஜெர்மனிக்கு அனுப்பபட்ட steelலும் கதிரியக்க பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது. கதிரியக்க பொருட்கள் உடல்நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பவை. இவை கேன்சரை கூட விளைவிக்களாம்.

இந்த செய்தியை நான் இது வரை இந்திய செய்தி தளங்களில் காண வில்லை.இது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. இந்த steelஐ உற்பத்தி செய்த நிறுவனம் மும்பையை சேர்ந்த Vipras Casting.

மேலை நாடுகளில் இது இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு மிகவும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய இறக்குமதியை எதிர்க்கும் லாபிக்கள் இதை முக்கிய ஆயுதமாக எடுத்துள்ளனர்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது- இத்தகைய அபாயகரமான steelகளை மீண்டும் இந்திய மார்க்கெட்டிலேயே லாப நோக்கில் விற்று விட கூடாது.இது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்படுவது அவசியம். இது பற்றிய செய்திகளை ஜெர்மனியின் முக்கிய பத்திரிக்கையான spiegel தலைப்பு செய்தியாக வெளியுட்டுள்ளது குறிப்பிட தக்கது.

--

Thursday, February 05, 2009

சிதம்பரம்- இன்னொரு சுனாமியை தமிழகம் தாங்குமா?

இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிவதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு தற்போது தமிழ் நாட்டில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழர்களையும் கூண்டோடு கைலாசம் அனுப்ப புதிய சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதுவே உண்மையான செய்தி. கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியால் பல்லாயிரம் தமிழ் மக்கள் இறந்தது நினைவிருக்களாம். இந்த துயர சம்பவத்துக்கான காரணத்தை கமல் போன்ற நோபல் பரிசு பெற தவறிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து தசாவதாரம் படத்தில் தெளிவாக விளக்கி உள்ளார். தில்லை வாழ் அந்தணர்கள் கோவிலில் செய்யும் ஆன்மீக பணிகளில் அரசியல்வாதிகள்(சோழ மன்னர்கள் ) தலையிட்டதுதான் சமீபத்திய சுனாமிக்கு காரணம் என்ற அறிவியல் உண்மையை அறிவியல் உலகின் சமீபத்திய கண்டு பிடிப்பான String Theoryயின் மூலம் சிறு குழந்தைக்கும் புரியும் வகையில் கமலகாசன் அவர்கள் நிருபித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு நீதி துறையின் உதவியோடு நடராஜரையும்,கோவிலையும் அங்கு வரும் வருமானத்தையும் தீட்சிதர்களிடமிருந்து விடுவித்து தன் பொறுப்பில் எடுத்து கொண்டுள்ளது. அன்று ஒரு அந்தணரை வெளியேற்றியதற்கே இன்று மாபெரும் சுனாமி தாக்கி உள்ளது. இன்று அனைவரின் அதிகாரத்தையும் பிடுங்கியதால் உலகில் என்ன என்ன அழிவுகள் ஏற்படும் என்பதை கற்பனையில் நினைத்து பார்த்தாலே படு பயங்கரமாக உள்ளது. இதன் விளைவு தமிழகத்தின் அழிவோடு விட்டு விடுமா அல்லது ஒட்டு மொத்த இந்தியா அல்லது உலகத்தையே அழிக்குமா என்பதுதான் இப்போதைய கேள்விகுறியாக உள்ளது. இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஆச்சாரியார்கள் கண்டறிந்து அதை நிறைவேற்றினால் உலகை காக்கும் புண்ணியமாவது கிடைக்கும்.

--

Sunday, February 01, 2009

தேசியவாதிகளை குழப்பும் கார்போரேட்டுகள்

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டினரால் தொடங்கபடும் கம்பெனிகளின் வளர்ச்சிக்கும் அதற்கு சலுகைகளை கொடுத்து அதன் முன்னேற்றத்திற்கும் போராடுவதுதான் பல காலமாக தேசியவாதிகளின் நோக்கமாக இருந்தது. உள் நாட்டு முதலீட்டாளர்களின் வளர்ச்சியால் உள்நாட்டு தொழில் துறை வளர்ந்து, நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் அதற்க்கான காரணமாக இருந்தது. இதில் பெருமளவு உண்மையும் இருந்தது. ஆனால் ஒரு சில உள்நாட்டு தொழில் அதிபர்கள இதையே போட்டியை குறைக்க ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, தனக்கு கிடைக்கும் லாபங்களை அத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு செலவிடாமல், தவறான வழிகளில் தங்களுடைய சொந்த லாபங்களுக்கு பயன்படுத்த தொடங்கினர்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின் வளர்ந்த நாடுகளின் முதலாளிகளால் உலகுக்கு திணிக்க பட்ட உலகமயமாதல் கொள்கை(Globalalization) ,உலக நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் களங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கின.வளரும் நாடுகள் மற்றுமின்றி வளர்ந்த நாடுகளிலும் இந்த மாற்றத்தின் தாக்கம் வெகுவாக இருக்கிறது.தேசியவாதிகளிடம் தற்போது ஏற்பட்டுள்ள மிக பெரிய குழப்பம், உண்மையிலேயே எந்த கம்பனியை தங்களுடைய நாட்டின் கம்பெனி என்று அழைப்பதுதான்.இதில் எதற்கு குழப்பம், இது மிகவும் எளிதான விஷயம் தான் என்று நினைக்கிறார்களா?தற்போது கம்பெனிகளின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்களும் பாருங்களேன். உலகமயமாக்காலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானது பொருளின் உற்பத்தியை எப்பாடுபட்டாவது மலிவாக உற்பத்தி செய்வதும், மூலதனங்கள் நாடுகளின் எல்லையை கடப்பது எளிதானதும் ஆகும்.

பொருளின் உற்பத்தியை மலிவாக்க கம்பெனிகள் செய்யும் முயற்ச்சியால் ஏற்படும் பாதிப்பு பற்றி பார்ப்போம்.ஒரு உற்பத்தி பொருளை சுதேசி பொருள் என்று எப்படி அழைப்பது?அந்த பொருளை உற்பத்தி செய்யும் கம்பெனி துவங்க பட்ட நாடு சொந்த நாடாக இருந்தால் அதை சுதேசி பொருள் என்று அழைப்பதா? அல்லது அந்த பொருளின் உற்பத்தி முழுவதும் அந்நாட்டு தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்து, அந்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் வியாபார பெருக்கம் செய்யும் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்ட கம்பெனிதயாரித்த பொருளை சுதேசி பொருள் என்பதா?. இப்பிரச்சனை அமெரிக்க கார் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தற்போது பெருமளவு வெளியில் பேச தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக போர்டு கம்பெனியின் கார்களின் பெரும்பாலான பகுதிகள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்ய பட்டு, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் இணைக்க படுகின்றன. ஆனால் கம்பெனி அமெரிக்காவை தலமையிடமாக கொண்டுள்ளது.ஒரு சில டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் 85% பகுதிகள் அமெரிக்காவில், அமெரிக்கர்களை கொண்டு தயாரிக்க படுகிறது.அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் வெளி நாட்டினரை வைத்து வெளி நாட்டில் தயாரித்து அமெரிக்காவில் விற்கும் காரை அமெரிக்க கார் என்பதா? அல்லது அமெரிக்கர்களை வைத்து அமெரிக்காவில் தயாரிக்கும் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்ட காரை அமெரிக்க கார் என்பதா?(ஏனென்றால் லாபத்தை தன் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது). இதை படிக்கும் உஙகளுக்கு இதன் விடை தெரிந்தால் அமெரிக்கர்களுக்கு கொஞ்சம் தெரியபடுத்துங்களேன்?.

அடுத்ததாக ஒரு சில கம்பெனிகளை சுதேசி கம்பெனி என்று அரசு பல சலுகைகள் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அந்த நிறுவனம் பலம் வாய்ந்த பன்னாட்டு நிறுவங்களோடு போட்டி போட வேண்டும் என்பதால் அதற்கு பல சலுகைகளை இந்தியா போன்ற நாடுகளின் அரசுகளும் தங்கள் நாட்டு கம்பெனிக்கு பல சலுகைகளை கொடுத்து ஊக்குவிக்கிறது. கம்பெனியும் நன்கு குறிப்பிடதக்க வளர்ச்சியை அடைந்த பின் அதை ஒரே நாளில் மற்றொரு பன்னாட்டு கம்பெனி வாங்கிவிடுகிறது. அதுவரை அதன் வளர்ச்சிக்கு lobby செய்த தேசியவாதிகள் வாயடைத்து போகின்றனர். இதற்கு ரான்பாக்சி கம்பெனி ஒரு நல்ல உதாரணம்.மருந்து உற்பத்தி தொழிலில்(Pharmaceutical) இந்திய திறமைக்கு ஒரு எடுத்துகாட்டாக உலக அரங்கில் பேச பட்டது.அரசும் நேரடியான மற்றும் மறைமுக சலுகைகள் பல அளித்தது. ஆனால் ஜப்பானை சேர்ந்த டெய்ச்சி நிறுவனம் அதை வாங்கிவிட்டது.தற்போது அது ஜப்பானிய நிறுவனமாக ஆகிவிட்டது.

உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடைக்கலமாவது மேற்கண்ட முறையில் மட்டும் இல்லை. சில ஆண்டுகளாக ஏற்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தாலும், உலகமயமாக்களாலும் பல நாடுகளும்(உதாரணமாக அரபு நாடுகள்), தனியாரும் தங்களிடம் உள்ள அளவிட முடியாத செல்வங்களை சொவரைன் முதலீடு மூலமும் பிற வழிகளிளும் சிறிது சிறிதாக நல்ல எதிர்காலம் உள்ளதாக கருத படும் கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.இவை வளரும் நாடுகள் அன்றி வளர்ந்த நாடுகளில் உள்ள சிட்டி குரூப்,UBS போன்ற நிறுவனக்களில் கூட முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது கம்பெனிகளின் பங்குகளில் இவர்களது பங்கு பெரும் பங்கு இல்லை என்றாலும் முடிவுகளை கட்டுபடுத்தும் அளவுக்கு அதிகாரம் உள்ள நிலையை நோக்கி அவை நகர்ந்து வருகிறது.கம்பெனி உள்நாட்டு கம்பெனியாக இருந்தாலும் அதை கட்டு படுத்துவது(நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ) வெளி நாட்டினர் என்றால் அது உள்நாட்டு கம்பெனியா அல்லது வெளிநாட்டு கம்பெனியா என்ற வாக்குவாதம் கூட வர தொடங்கியுள்ளது.

உலகமயமாக்கலாலும், சமீபத்திய பெட்ரோல் விலை ஏற்றத்தால் அதிக பணம் சிலரிடம் சேர்ந்ததாலும், அமெரிக்க நிதி நெறுக்கடியால் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது மதிப்பின் பெரும் பகுதியை இழக்க ஆரம்பித்ததாலும் இது போன்ற குழப்பங்கள் மிக அதிகமாகி பின் வரும் காலங்களில் மிக பெரிய வாதபொருளாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.

நிறுவனங்களின் முதலீட்டளர்களினால் நிறுவனங்களுக்கு மட்டும் இந்நிலை என்றால் பரவாயில்லை. தற்போது மேலை நாடுகளின் அரசும் ஒரு நிறுவனம் போல்தான் செயல்படுகிறது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை ட்ரில்லியன் டாலரை தாண்டி விட்டது. அது தன் பற்றாக்குறையை ஈடுகட்ட சீனா மற்றும் ஜப்பானின் முதலீட்டை தான் நம்பி உள்ளது. அமெரிக்க அரசின் பெரும்பகுதி முதளீட்டாளர்களாக இந்நாடுகள் ஆகி விட்டால், அமெரிக்காவை அமெரிக்க அரசு என்றழைப்பதா? அல்லது ஆசிய அமெரிக்க அரசு என்று அழைப்பதா? என்ற விவாதம் பிற்காலத்தில் வராமல் இருந்தால் நல்லதுதான்!


--

Friday, January 23, 2009

புஷ்ஷை (அமெரிக்க)வரலாறு விடுதலை செய்யுமா?

புஷ்ஷின் பதவிகாலம் முடிவை நோக்கி நெருங்க தொடங்கிவிட்டது. அமெரிக்க வரலாற்றில் தோல்வி அடைந்த ஜனாதிபதிகளில் ஒருவராக புஷ் கருதபடுகின்றார். தற்போது ஒட்டு மொத்த அமெரிக்க மக்களின் அதிருப்தியையும் அவர் பெற்றுள்ளார். அவரது தோல்விகளை பட்டியலிட்டால் ஒரு பதிவு போதாது. அவரது தோல்விகளில் முக்கியமானதாக கருதபடுவது
1.தேவையற்ற ஈராக் போர்
2.உலகெங்கிலும் தீவிரவாதத்தின் வளர்ச்சி
3.நிதி நெருக்கடி
4.காத்ரீனா சூறாவளி நிவரணத்தில் திறமையின்மை


புஷ்ஷின் தோல்விகளை விளாவாரியாக விவரித்து பதிவுகள் இணையமெங்கும் வந்து விட்டது. அது பற்றி கைக்குழந்தைக்கு கூட விஷயம் தெரிந்து விட்டது. ஆனால் அவருக்கு ஆதரவான கருத்துக்களை அறிவது மிகவும் கடினமாகவே உள்ளது. தனிபட்ட முறையில் புஷ்ஷின் ஆட்சியில் எனக்கு திருப்தி இல்லை. ஆனால் அவருக்கு சாதகமாக கூறபடும் கருத்துக்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக இந்த பதிவை இடுகிறேன்.

1.தேவையற்ற ஈராக் போர்

தோல்வி -ஈராக்கில் Weapans of Mass Destruction(WMD) இருக்கிறது என்று கூறி போர் செய்ய சென்று விட்டு அங்கு கத்தி,கடப்பாறை,ரைபிள் போன்ற WMD மட்டுமே கண்டுபிடித்தார்.

உண்மை காரணமாக கூறபடுபவை :அமெரிக்கா மனதில் வைத்திருந்த WMD என்பது அணு ஆயுதங்கள் அல்ல. யூரோ நாணயம்.அமெரிக்காவின் இந்த அளவு வளர்ச்சிக்கும், அதன் மிகப்பெரிய ராணுவ பட்ஜெட்டிற்கும், அது உலகின் மிகப்பெரிய ராணுவ சக்த்தியாக இருப்பதற்கும் முக்கிய காரணம் டாலர் உலக நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது தான். இது பற்றி என்னுடைய டாலர் அரசியல் என்ற பதிவில் கூறி இருந்தேன். சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு டாலருக்கு போட்டியாக எந்த நாணயமும் இல்லாமல் இருந்தது.புஷ் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு வருடம் முன்பு தான் யூரோ புழக்கத்துக்கு வந்தது. டாலரின் மதிப்பு உலக சந்தையில் நன்கு இருப்பதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் டாலரில் விற்கபடுவது தான். ஈராக்கிய அதிபர் சதாம் அமெரிக்காவின் மீது நடத்திய மிக பெரிய தாக்குதல், பெட்ரோலை யூரோவில் விற்பனை செய்ய முன் வந்தது தான். அதற்கு பதில் நடத்திய எதிர் தாக்குதல் தான் ஈராக் போர். இராக்கை அமெரிக்கா பெட்ரோலை டாலரில் விற்க அனுமதித்திருந்தால் உலக சேமிப்பு நாணய சந்தையில் பெருமளவை யூரோ பிடித்திருக்கும். அது அமெரிக்காவிற்கு பொருளாதார அணுகுண்டு தாக்குதல் போன்றது.ஈராக்கின் இந்த முயற்ச்சி இல்லாமலேயே யூரோ உலக சேமிப்பு நாணய சந்தையில் 10 வருடத்தில் 25% பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு உலக பொருளாதாரமே அரபு நாடுகளின் கச்சா எண்ணையை நம்பி இருப்பதால், அரபு நாடுகளிடையே ஒரு வலிமையான அரசு தோன்றி, அவர்களுக்குள் வலுவுள்ள leadership பிற்காலத்தில் தோன்றுவதை அமெரிக்காவினால் ஒருகாலும் அனுமதிக்க முடியாது.போருக்கு சென்ற பின் அங்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஒரு இசுலாமிய நாட்டில் முழு அமெரிக்க ஆதரவுள்ள அரசை அமெரிக்க ஆதரவுடன் ஏற்படுத்துவது இயலாத காரியம்.இனி வரும் காலங்களில் பிற அரபு நாடுகள் நாணயத்தை டாலரிலிருந்து மாற்றும் போது , அப்போதய அமெரிக்க அதிபர் அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதே புஷ்ஷின் செயலுக்கு ஒப்பீடாக அமையும்.

2.உலகெங்கிலும் தீவிரவாதத்தின் வளர்ச்சி


தோல்வி -உலகெங்கிளும் தீவிரவாதத்தின் வளர்ச்சி அதிகரித்த்ள்ளது. அமெரிக்காவில் நடை பெற்ற தீவிரவாத செயலை தடுக்க தவறிவிட்டார்

அவர் பக்க நியாமாக கூறபடுபவை:சோவியத் யூனியன் உடையும் வரை விடுதலை போராட்ட வீரர்களாக, அமெரிக்காவினால் வளர்த்து விடபட்டவர்கள் தான் இன்று தீவிரவாதிகளாக கருதபடுபவர்கள். சோவியத் யூனியன் அழிந்தவுடனே அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கவேண்டும் அப்போது ஆட்சியில் இருந்தவர்கள். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. கிளிண்டனின் ஆட்சியின் போது அவர்கள் குறிப்பிட தக்க வளர்ச்சி அடைந்தாலும், அவர்களை முழுமையாக ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அந்த கால கட்டத்தில் தங்கு தடையின்றி networkஐ உலகெங்கும் விரிவு படுத்தினர்.மேலும் செப்டம்பர் 11 தாக்குதல் புஷ் ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே நடைபெற்றது. எனவே அந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் அவருக்கு முன் இருந்த ஆட்சியாளர்களே. மேலும் அந்த தாக்குதலுக்கு பின் அமெரிக்காவில் அடுத்த தாக்குதல் நடைபெறாமல் தடுத்ததே புஷ் இன் சாதனையாக கருதபடுகிறது.அல் கொய்தா மற்றும் தலிபான் கூட்டனியின் வளர்ச்சியை பெருமளவு தௌத்து பெரிய தாக்குதலை ஏற்படுத்த முடியாமல் தடுத்ததும் அவரது வெற்றியாகவே கருத படுகிறது.

3.நிதி நெருக்கடி

தோல்வி-புஷ் ஆட்சியின் முக்கிய தோல்வியாக கருதபடுவது அமெரிக்காவின் பொருளாதாரத்தை மொத்தமாக சீரழித்து விட்டு உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பை குறைத்தது

அவர் பக்க நியாமாக கூறபடுபவை:இப்போது ஏற்பட்ட நிதி நெறுக்கடிக்கு முக்கிய காரணமாக கருத படுவது subprime என்றழைக்கபடும் கடனை திருப்பி தர இயலாதவர்களுக்கு தந்த கடன்கள்,பெரிய அளவில தங்கு தடையற்ற கடன் கொடுத்து ஒரு housing bubbleஐ வங்கிகள் உருவாக்க விட்டது மற்றும் Credit Default Swapஎன்னும் கடன் வகை .
அவர் பக்க நியாமாக கூறபடுபவை: கிளிண்டன் ஆட்சி காலத்தில் , ஏழை மக்கள் அனைவரும் வீடு வாங்க வேண்டும் என்பதற்காக Community ReInvestment Act என்னும் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தினார். இதன் விளைவாக ஏழை மக்களுக்கும் வீட்டு கடன் எளிதாக கிடைத்தது. அவ்வாறு கடன் பெற்றவர்களில் பெரும்பாலோனோர்க்கு கடனை திருப்பி தரும் வளிமை குறைவாகவே இருந்தது. அந்த வகை கடன்கள் தான் இன்று ட்ரில்லியன் டாலரை தாண்டி விட்டது. என்வே இந்த Subprime கடன்களுக்கு மூல கார்த்தாவாக கிளிண்டனே உள்ளார்.
1930களில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகபெரிய நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் கொண்டுவர பட்ட சட்டம் தான் Glass-Steagall சட்டம்.
அது மக்களிடம் டெப்பாசீட் வாங்கி வியாபாரம் செய்யும் வங்கிகள் அந்த பணத்தை பொறுப்பின்றி Investment Bankingல் முத்லீடு செய்வதை தடுத்தது.
கிளிண்டன் ஆட்சி காலத்தில் அதில் திருத்தம் செய்ய பட்டு சாதாரன வங்கிகளும் Investment bankingல் செயல்படலாம் என்று அறிவிக்க பட்டது. அதன் விளைவாக பெருமளவிலான் மக்கள் பணம் speculation அடிப்படையாக கொண்ட மற்றும் risk அதிகம் உள்ள முதலீடுகளில் முதலீடு செய்ய பட்டு பொருளாதாரம் சூதாட்டம் போல் வளர ஆரம்பித்தது.அதுவும் நெறுக்கடிக்கு ஒரு காரணமாகியது.
Credit Default swap என்ப்படும் சந்தை product கூட அறிமுக படுத்த பட்டது கிளிண்டனின் ஆட்சிகாலத்தில் தான். (ஆனால் அது பூதாகரமாக வளர்ந்தது புஷ்ஷின் ஆட்சிகாலத்தில்).

தவறுகளுக்கு மூல காரணம் கிளிண்டன் என்றாலும் புஷ் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்க தோன்றும். புஷ்ஷை பொருத்தவரை அவர் தீவிர முதலாளித்துவ கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்.அவருடைய அரசியல் ஆசானாக கருதபடும் ரொனால்ட் ரீகனுடைய கட்டுபாடற்ற பொருளாதாரம் மற்றும் உலகளாவிய கட்டுபடுத்தல் போன்ற கன்சர்வேட்டிவ் கொள்கையில் அதீத நம்பிக்கையுடையவர் புஷ்.அவருக்கு ஓட்டளித்தவர்களும் அப்படி பட்ட கொள்கையை பின் பற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் ஓட்டளித்தனர். ரீகன் காலத்தில் வெற்றி சூத்திரமானது புஷ் கலத்தில் தோல்விக்கு இட்டு சென்றது. எந்த ஒரு ஏற்ற இறக்கத்தையும் சந்தைதான் தீர்மானிக்க வேண்டும் என்ற கொள்கையால் அவர் அவற்றை சந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டார்.(சில நிறுவனங்கள் அழிவை நோக்கி சென்ற போது அதையும் மார்கெட் தான் தீர்மானிக்க வேண்டும் என்று விடாமல், அவை அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை காரணம் காட்டி அவற்றை மீட்டு லிபெரல் கன்செர்வேட்டிவ்களிடமும் கெட்ட பெயர் சம்பாதித்தது வேறு விஷயம்.)
இதைதான் புஷ் பின்வருமாறு கூருகிறார்.
“I inherited a recession, I’m ending on a recession,”

4.காத்ரீனா சூறாவளி நிவரணத்தில் திறமையின்மை

இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவாக எவரும் எதுவும் கூறவில்லை.இந்த விஷயம் அவரது நிர்வாக திறமையின்மையையே எடுத்து காட்டுகிறது.எதிபாராத மாபெரும் இயற்கை சீரழிவு வரும் போது, அதை அமெரிக்க எதிர்கொள்ள தயார்படுத்த படவில்லை. இனி அது போன்ற எதிர்பாராத இயற்கை பேரிழப்பு நடைபெரும் போது அதை எதிர் கொள்ள அமெரிக்கா தன்னை தயார் படுத்தி உள்ளதா? என்பதை எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

புஷ் பின்பற்றிய கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் , குறைவான வரி நிர்ணயம் (அதிகம் பணம் சம்பாதிக்கும் மேல் நிலையில் உள்ள 1% அமெரிக்கர்களுக்கு $1.35 ட்ரில்லியன் வரி விலக்கு அளித்தார்.)மற்றும் உலகளாவிய ராணுவ வலிமையை நிலைநாட்டுதல் காரணமாக $5.6 ட்ரில்லியன் அதிக இருப்பாக இருந்த அமெரிக்க நிதி நிலைமையை $6 ட்ரில்லியன் இழப்பாக இட்டு சென்றது.ஓய்வு பெற்றவர்களுக்கான health care benefit செலவு $13 ட்ரில்லியனிலிருந்து $43 ட்ரில்லியனாக உயர்ந்ததற்கு புஷ்ஷின் medicare drug benefit திட்டமும் ஒரு காரணம். இந்த செலவுகளை செய்ய இது வரை ஒவ்வொரு வருடமும் அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
கட்டுபாடற்ற சந்தையில் முழு நம்பிக்கை வைத்திருந்த புஷ் தனது ஆட்சியின் இறுதியில் deregulation என்ற நிலையிலிருந்து மாறி reregulation என்று நிலைக்கு இட்டு சென்றது. அனைத்து துறையிலும் தனியாருக்கு முழு பங்கு அளிக்க வேண்டும் என்ற அவரது கொள்கையை மாற்றி மிக பெரிய நிதி நிறுவனம் மற்றும் கார் நிறுவனங்களில் அரசின் பங்கை அதிக படுத்தும் நிலைக்கு தள்ளபட்டார்.

இந்தியாவை பொருத்த வரை புஷ் ஆட்சி இந்திய-அமெரிக்க உறவை வேறெப்போது இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்தது என்பது உண்மை.அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமலேயே அணு தொழில்நுட்ப தடையிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளித்தததற்கு புஷ்ஷின் தனிபட்ட ஆதரவே காரணம் எனலாம்.வேறு எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இது போன்ற ஒப்ப்ந்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே. புஷ் ஆட்சி காலத்தில் காஷ்மீர் பிரச்சனையில் சிறிதளவும் தலையீடு செய்ய வில்லை என்பதும் குறிப்பிட தக்கது.எந்த ஒரு பிரச்சனையிலும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவு, இந்திய எதிர்ப்பு என்ற நிலை மாறி இந்திய ஆதரவு என்ற நிலையும் இந்த ஆட்சியில் தான் ஏற்படுத்த பட்டது என்பது குறிப்பிட தக்கது.outsourcingக்கு எந்த தடையும் விதிக்காமல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிருவனங்களின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தார்.


இனிவரும் காலங்களில் அமெரிக்க எதிர் கொள்ள போகும் பிரச்சனைகளும், அதை அப்போது இருக்கும் ஜனாதிபதிகள் எவ்வாறு கையாள போகிறார்கள் என்பதை பொருத்து தான் புஷ்ஷை வரலாறு விடுதலை செய்யுமா என்பது முடிவு செய்ய படும்.


--

Saturday, January 17, 2009

தமிழ் Typewritterயை உங்கள் blogல் எளிதாக இணைப்பது எப்படி?

தமிழ் எழுத்துகளை ஆங்கில வார்த்தை கொண்டு எழுத உபயோகபடுத்தும் unicode writterஐ என்னுடைய தளத்தில் இணைப்பது பற்றி பல நாட்களாக முயன்று எளிதான வழி ஒன்றும் என்க்கு கிடைக்கவிலலை. அந்த நேரத்தில் கூகிளின் AJAX API பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கூகிள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றும் Transliteration எழுதி செய்வதற்கான APIஐ பொது உபயோகத்திற்காக வெளியிட்டுள்ளது.அதை உபயோகபடுத்தி ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழி மாற்றும் Transliterator எழுதுவது மிக எளிதானது.

நான் கூகிளின் இந்த APIஐ பயன் படுத்தி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றும் எழுதி ஒன்றை தயாரித்துள்ளேன். இதை எளிதில் மற்றவர்களும் பயன்படுத்த widgetஆக உருவாக்கி http://www.widgetbox.comல் போட்டுள்ளேன். இதை அனைவரும் எளிதாக ஒரு கிளிக்கில் உங்களது blogல் இணைத்து கொள்ளலாம்.

பதிவர்கள் இந்த எழுதியை உங்கள் blogல் இணைக்கும் முறை

1.இந்த பதிவின் வலது புறம் உள்ள amma=அம்மா என்ற எழுதி widgetன் கீழ் உள்ள Get Widget linkஐ சொடுக்கவும் அல்லது
widgetஐ பெற இங்கு(http://www.widgetbox.com/widget/thanglish) சுட்டவும்.

2.அது திறக்கும் பக்கத்தில்(http://www.widgetbox.com/widget/thanglish) வலது புறம் உள்ள get widget ஐ சொடுக்கவும்

3.அது இன்னொரு சன்னலை திறக்கும். அந்த சன்னலின் அடியில் blogger,wordpress,typepad,igoogle போன்ற iconகள் இருக்கும்.

4.நீங்கள் உபயோகபடுத்தும் blogging வகையை சொடுக்கினால் அது login க்கு இட்டு செல்லும். அதன் பின் உங்கள் பிளாக்கில் எளிதாக இணைக்கலாம் .
அதில் கூறபட்ட blogging toolஐ நீங்கள் உபயோக படுத்தவில்லையென்றால், அது தரும் javascript code ஐ உங்கள் இணைய தளத்தில் தேவையான இடத்தில் paste செய்தால் உஙகள் இணைய தளம் எதுவானாலும், அதில் இந்த தமிழ் எழுதியை உபயோகபடுத்த முடியும்.

இதில் எதாவது பிரச்சணை இருந்தால் இதன் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இது பற்றிய கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளவும்.


--

Wednesday, January 14, 2009

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 2-கடன் தர சான்றிதழ்(Rating Agency) கொடுக்கும் அமைப்புகளின் செயல்பாடு

சோவியத் யூனியன் வீழ்ந்த பின் முதலாளித்துவம் உலகம் எங்கும் மிக வேகமாக பரவியது. சோவியத் யூனியன் இடத்தை இனி பிடிக்க போவது யார் என்று நினைத்த போது, பொருளாதார வல்லுனர்கள் கூறியது பான்டுகளை தர வரிசை படுத்தும் அமைப்புகள் என்றனர். அப்போது நகைச்சுவையாக கருதபட்டது தற்போது உண்மையாக மாற தொடங்கியது.

முதலில் தரவரிசை படுத்தும் நிறுவனங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு கடனை ஒரு முதலீட்டாளர் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். முதலில் அந்த கடனை வாங்கியவர் யார் என்று பார்க்க வேண்டும். பிறகு வாங்கியவரின் வருமானம் எவ்வளவு என்றும் அந்த வருமானத்தின் மூலம் என்ன? என்றும் பார்க்க வேண்டும்.ஒரே ஒரு கடன் என்றால் எளிதில் விசாரித்து விடலாம். பத்து பேர் வீட்டுகடன் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம். வங்கிகள் வீட்டுகடனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விட்டு, அந்த கடன்கள் அனைத்தையும் ஒன்றாக்கி அந்த ஒன்று படுத்தபட்ட கடனை முதலீட்டு வங்கிகளுக்கு(Investment bank) விற்று விடும். அனைத்து கடனையும் இம்முதலீட்டு நிறுவனங்கள் சரி பார்ப்பது மிகவும் கடினமான செயல். பல கடன்களை ஒன்று சேர்த்து ஒரே கடனாக கொடுக்கும் போது எவ்வாறு அதை சரி பார்ப்பது? அங்கு தான் தரவரிசை படுத்தும் நிறுவனங்களின் சேவை வருகிறது. இது போன்ற கடனின் தன்மையை அராய்ந்து , அதன் சாதக பாதகங்களை சரிபார்த்து அதற்கு தர சான்றிதழ்களை அளிப்பது இந்த நிறுவனங்களின் வேலை.உதாரணமாக இது போன்ற நிறுவனங்கள் ஒரு கடனுக்கு "AAA" என்று சான்று அளித்தால் அந்த கடன்கள் மிகவும் நம்பகமானவை.அந்த கடனை வாங்கியவர்கள் நிச்சயம் திருப்பி கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.AAA என்று தரவரிசை படுத்த பட்ட எந்த ஒரு கடனையும் முதலீட்டளர்கள் தைரியமாக முதலீடு செய்யலாம். ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதார முதலீட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிறுவன தரச்சான்றிதழ்கள் தான் அஸ்திவாரமாக உள்ளது.பென்சன் நிதி முதலீட்டு நிறுவனங்கள் போன்ற குறைவான் riskல் அதிக அளவு முதலீடு செய்யும் நிறுவங்கள், கடனின் riskஐ இது போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவங்கள் கொடுக்கும் சான்றிதழை கொண்டுதான் நிர்ணயிக்கின்றனர்.கடன் மட்டுமின்றி பத்திரம், கம்பெனி போன்ற பலவற்றிற்கும் இந்த நிறுவனங்கள் தர சான்றிதழ் அளிக்கும்.Moody's,Standard&Poor மற்றும் Fitch போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணம்.

அமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியாக உள்ள இந்த நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் நடந்ததோ வேறு.இந்த நிறுவங்கள் அதிக லாபத்துக்கு ஆசை பட ஆரம்பித்தன.இந்நிறுவங்களின் வாடிக்கையாளர்கள், கடனை தர வரிசை படுத்தி தர கேட்பவர்கள். எனவே வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தினால் தான் மீண்டும் தங்களிடம் வருவார்கள். மேலும் அதிக அளவு கட்டணமும் வசூலிக்க முடியும். அதன் விளைவு, தரசான்றிதழ் கேட்கபடும் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ஆராயாமல், AA மற்றும் AAA என சான்றிதழ்களை அடித்து தள்ளி விட்டனர்.இதன் மூலம் தர சான்றிதழ் கொடுக்கும் நிறுவனங்களின் லாபம் பல நூறு மடங்கு பெருகியது.
தனிபட்டவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும், பணம் திரும்பி கிடைக்க பல ஆண்டு பொருத்திருக்காமல், முதலீட்டு நிறுவங்களுக்கு இந்த கடனை தர சான்றிதழ் காட்டி விற்று(Credit Dedault Swap), மேலும் மேலும் கடன் கொடுக்க தொடங்கியது. இந்த வகை அடமான கடனின் மதிப்பு, சில ட்ரில்லியன் டாலர்களை கடந்தது .அவற்றில் இருந்த பெரும்பாலான subprime கடன்களை வாங்கியவர்களின் நம்பகதன்மை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுக்கு நிலையான வருமானமும் இல்லை.இருந்தாலும் அந்த கடனுக்கு மிகவும் அதிக தரவரிசை கொடுத்தனர். அமெரிக்க real estate வீழ தொடங்கிய போது இதுபோன்ற கடன்களை வாங்கியவர்கள் திருப்பி கொடுக்க முடியாத போது, அதில் முதலீடு செய்த நிறுவங்கள் படு பாதாளத்த்ற்கு விழ ஆரம்பித்தது.அது ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது.இது போன்ற நிறுவனங்களில், உண்மையை கூற முன் வந்த ஊழியர்களும் நீக்க பட்டனர்.நிறுவனங்கள் அதிக பத்திரங்களை கண்காணித்தாலும், குறைந்த அளவே ஊழியர்களை வைத்து லாப நோக்கில் செயல் பட்டனர்.
இனியாவது இது போன்ற நிறுவனங்களை அரசாங்கம் கண்கானித்து ஒழுங்கு படுத்துமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின் கட்டுப்பாடு


--

Monday, January 12, 2009

நிதி நெருக்கடி பற்றி படிக்க! சிரிக்க!




நிதி நெருக்கடியை பற்றிய சில நகைச்சுவை வாதங்கள் மின்னங்ஞ்சல் மூலம் வந்தது. உண்மையிலேயே நகைச்சுவையாக உள்ளது. இதை முன்பே படிக்காதவர்கள் படித்து ரசிக்கலாம்(நிதி நெருக்கடியின் தாக்கம் உஙகளை பாதிக்காதவரை )


1. The US has made a new weapon that destroys people but keeps the building standing,. Its called the stock market - Jay Leno

2. Do you have any idea how cheap stocks are ?? Wall Street is now being called Wal Mart Street Jay Leno

3. The difference between a pigeon and a London investment banker . The pigeon can still make a deposit on a BMW

4. What's the difference between a guy who lost everything in Las Vegas and an investment banker ? A tie

5. The problem with investment bank balance sheet is that on the left side nothing's right and on the right side nothing's left.

6. I want to warn people from Nigeria who might be watching our show, if you get any e mails from Washington asking for money, it's a scam. Don't fall for it - Jay Leno

7. Bush was asked about the credit crunch. He said it was his favourite candy bar - Jay Leno

8. The rescue bill was about 450 pages. President Bush's copy is even thicker. They had to include pictures Jay Leno

9. President Bush's response was to meet some small business owners in San Antonio last week. The small business owners are General Motors, General Electric and Century 21. - Jay Leno

10. What worries me most about the credit crunch, is that if one of my cheques is returned stamped 'insufficient funds'. I won't know whether that refers to mine or the bank's.


--

Friday, January 09, 2009

IT நிறுவனங்கள் தொடங்க தடை விதிக்கும் தமிழ்நாடு

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டு கொண்டு IT நிறுவனங்களை தங்களது மாநிலத்தில் தொடங்க வைக்க முயற்ச்சி செய்வது அனைவரும் அறிந்ததே. தொழில் துறை வளர்ச்சியை ஒதுக்கி வந்த மேற்கு வங்காளம் போன்ற பிற்பட்ட மாநிலங்கள் கூட தற்போது IT நிறுவங்களை தங்கள் மாநிலத்தில் இழுக்க முயற்ச்சி செய்து வருகிறது.ஆனால் ஒரே ஒரு மாநிலம் மட்டும் தன் மாநிலத்தில் கம்பெனிகளை தொடங்க வருபவர்களை, இங்கு தொடங்க கூடாது என்று அறிவுறித்தி திரும்பி அனுப்ப முயற்ச்சி செய்கிறது. அந்த மாநிலம் தமிழகம்
என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

இனி IT துறையில் தமிழகத்தில் முதலீடு தேவை இல்லை என்றும், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பினால் வேறு துறைகளில் மட்டும் தான் தனியார் கம்பெனிகள் தொழில் தொடங்க
அனுமதிக்க படும் என்று வெளிப்படையாக வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காட்டு வீராச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் திறமை சிறிதும்
இல்லாத அமைச்சரின் கையில் மின் துறை இருப்பதால், தமிழகத்தில் மின்சார சிக்கல் பல மடங்கு பெருகி, அது மாநில அரசிற்கே மிகப்பெரிய கெட்டப்பெயற் பெற்று கொடுப்பது உலகம்
அறிந்தது. இது வரை மின் துறையை மட்டும் கெடுந்து வந்த ஆற்காட்டார் தற்போது தமிழக IT துறையையும் கெடுக்க கிளம்பி விட்டதாக தெரிகிறது.IT துறை முதல்வரின் வசம்
இருப்பது குறிப்பிட தக்கது. எனவே இது முதல்வரின் கருத்தா? அல்லது முதல்வரின் பெயரை கெடுக்க செய்யப்படும் சதியா என்பது தெரிய வில்லை. சில நாள்களுக்கு முன்னர் கட்சியின்
பொருளாளர் பதவி ஆற்காட்டாரிடமிருந்து பறிக்க பட்டது நினைவில் இருக்கலாம்.

தற்போது 50% நிறுவனங்கள் தமிழகத்தில் மூட பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளார். அது உண்மை என்றால் பத்திரிக்கைகளில் எப்போதே செய்திகள் வந்திருக்கும் அனைத்து தொழிற் துறைகளும் தமிழகத்தில் வளர வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. உற்பத்தி துறை வளர்வதன் மூலம் unskilled மற்றும் semiskilled தொழிளாலர்களுக்கு வேலை கிடைக்கும்.படித்த மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறையாக IT துறை உள்ளது .கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் பல நூறு பொறியியல் கல்லூரிகள் தொடங்க பட்டுள்ளன. அறிவியல் கல்லூரிகளிலும் பல கணிணி தொடர்பான பட்ட படிப்புகள் தொடங்க பட்டுள்ளன. இதில் பல லட்ச கணக்கான மாணவர்கள் பல லட்சம் கட்டணம் செலுத்தி படிக்க சேர்வதன் நோக்கமே IT துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தான். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை நடத்துவதும், இந்நாள் மற்றும் முந்நாள் அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பினாமிகளுமே ஆவர்.

தமிழகத்தில் IT நிறுவனங்கள் தொடங்கினால், இங்கு உள்ள கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.பிற மாநிலத்தில் கம்பெனி தொடங்கினாலும்,தமிழகத்தில்
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், IT நிறுவங்கள்,fesher recruitmentல் அந்தந்த மாநில கல்லூரிகளில் படிப்பவருக்கே முக்கியத்துவம் தருகிறது.மேலும்
நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் வாங்கும் திறனினால் மற்ற தொழில்களும் வளர்கிறது.
தமிழகத்தில் சென்னையை தவிர்த்த மற்ற நகரங்களிளும் IT கம்பெனிகளை தொடங்க கடுமையான முயற்சி செய்து வரும் நிலையில், இது போன்ற அமைச்சர்களின் செயல்பாடு பெரும்
பாதகங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.IT துறையின் எதிகாலம் பிரகாசமாக இல்லை என்றும், அதனால் அத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க கூடாது என்றும் ஆற்காட்டார் கூறியுள்ளார். முழு விவரங்களுக்கு இங்கு சுட்டவும், தான் தொடங்கும் தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று முடிவு செய்பவர்கள் அந்த தொழிலை தொடங்குபவ்ர்களே அன்றி அரசாங்கம் இல்லை.அப்படி பட்ட நிலையில் ஆற்காட்டார் இவ்வாறு கூறியிருப்பதன் காரணம் விளங்க வில்லை.IT கம்பெனிகளை இழுக்க பல மாநிலங்கள் முயற்ச்சி செய்வதால், அந் நிறுவனங்களை தொடங்க கம்பெனிகள் லஞ்சம் எதுவும் கொடுக்க மறுப்பதுதான் காரணமா என்று தெரியவில்லை.

தமிழகத்தை சேர்ந்த சில அமைச்சர்கள் நன்றாக செயல்பட்டு தமிழக முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், இது போன்ற மோசமான அமைச்சர்களை தொடர்வதன் மூலம் தி.மு.க மீண்டும் 20 வருட காலம் வெற்றியின்றி வனவாசம் செல்ல வேண்ய நிலை வந்தாலும் வரலாம்


--

Thursday, January 08, 2009

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின் கட்டுப்பாடு

கடந்த சில மாதங்களாக உலகில் நடந்து வரும் பொருளாதார மாற்றங்கள், இதுவரை நடைமுறை உண்மைகளாக நம்பப்பட்டு வந்த அடிப்படை விதிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது நிறைய பாடங்களை நிகழ்காலத்திற்கு மற்றும் வருங்காலத்திற்கு அளித்துள்ளது. முக்கியமாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு, கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் தான் வளர்ச்சிக்கு ஒரே வழி என்று நம்பப்பட்டு வந்தது. அரசாங்களின் அதிகார எல்லை குறைக்கபட்டு கார்பரேட்டுகளின் எல்லை விரிவாக்க தொடங்கியது.வளர்ந்த நாடுகளில் இந்த மாற்றம் பல காலமாக இருந்தாலும், இந்த மாற்றத்தின் வேகம் சில காலமாக அதிகரிக்க தொடங்கியது. IMF மற்றும் உலக வங்கிகளின் மூலமாக இந்த மாற்றங்கள் வளரும் நாடுகளின் மீதும் திணிக்க பட்டுள்ளது.

சர்வதேச நிதி நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சில விளைவுகளையும்,அது கொடுக்கும் சில பாடங்களையும் இனி வரும் சில பதிவுகளில் காண்போம்.

சந்தையில் அரசின் கட்டுப்பாடு

பொருளாதார சந்தையில் அரசின் கட்டுப்பாடு கூடாது என்றும் பொது சந்தையில் அரசின் தலையீடு இருக்க கூடாது (Free Market)என்றும், எந்த செயல் நடந்தாலும் அது நல்லதா அல்லது கெட்டதா என்பதை சந்தை தான் தீர்மானிக்க வேன்டும் என்றும் வளர்ந்த நாடுகள் கூறி வந்தன. கடந்த சில வருடங்களாக சந்தையில் பலவிதமான புதிய வகை விற்பனை பொருட்கள்(Credit Default Swap போன்றவை) அறிமுகபடுத்த பட்டு மிக அதிக ஆளவில் சந்தையில் கலக்க தொடங்கியது.அது போன்ற பொருட்கள் சந்தையில் எந்த அளவு பெருகி வருகிறது? அது சந்தையில் ஏற்படுத்த போகும் உண்மையான பாதிப்பு போன்றவற்றை அரசு கண்காணிக்க தவறியது.

கம்பெனிகளும் உண்மை நிலமையை மூடி மறைக்க தொடங்கியது. அதிக அளவு லாபம் ஏற்படுவதாக கணக்கு காட்டி,நிதி நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் பல பில்லியன் டாலர்களை போனசாக பெற்றெனர்.அரசாங்கம் இது போன்ற நிகழ்வுகளை ஒழுங்காக
கண்காணித்திருந்தால் இது போன்ற தவறுகள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க பட்டு, பிரச்சனை இந்த அளவு வராமல் தடுக்க பட்டிருக்களாம்.

நிதி நிறுவனங்களின் வளர்ச்சி அளவுக்கு மீறி இருந்த போது அமெரிக்க அரசு அதை எவ்வாறு கையான்டது என்று பார்த்தால் நகைச்சுவையாக இருக்கும்.அமெரிக்காவின் பொது சந்தையில் உள்ள Riskஐ கண்காணிக்கும் அமைப்பு Securities & Exchange Commission (SEC).பொருளாதாரமும் அதில் உள்ள complexity அதிகரிக்கும் போது அந்த நிறுவனத்தின் பணியாற்றும் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும்.ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை சில நூற்றிலிருந்து வெறும் ஒன்றாக குறைக்க பட்டுள்ளது.நீங்களே நினைத்து பாருங்கள், ஒரே ஒருவர் உலக பொருளாதாரத்தையே எவ்வாறு கண்காணிக்க முடியும் என்று?

செனட் விசாரணையில் நடந்த உரையாடல் இங்கே

In recent testimony under oath by Mr Lynn Turner, Chief Accountant of the Securities & Exchange Commission (SEC) testified that the SEC Office of Risk Management which had oversight responsibility for the Credit Default Swap market, an exotic market worth nominally some $62 trillions, was cut in Administration ‘budget cuts’ from a staff of one hundred down to one person. Yes, that was not a typo. That’s one as in ‘Uno.’

Vermont Democratic Congressman Peter Welsh queried Turner, ‘... was there a systematic depopulating of the regulatory force so that it was impossible actually for regulation to occur if you have one person in that office? ...and then I understand that 146 people were cut from the enforcement division of the SEC, is that what you also testified to?’ Mr. Turner, in Congressional testimony replied, ‘Yes…I think there has been a systematic gutting, or whatever you want to call it, of the agency and it's capability through cutting back of staff.’

இதே அமெரிக்க ஊடகங்கள்தான் இந்தியாவில், அரசு சந்தையை கண்காணிப்பதும் கட்டுபடுத்துவதும் தவறு என்று கூறி வந்துள்ளது.தற்போது மேல்நாட்டு கம்பெனிகள் இந்திய பங்கு சந்தையில் அதிக அளவு செயல்பட ஆரம்பித்துள்ளனர். எனவே தவறுகள் நிறைய நடக்க சாத்திய கூறுகள் உள்ளது.எனவே அரசும் கண்காணிப்பை அதிக படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.

1930களில் நடைபெற்ற மாபெரும் பொருளாதார நெருக்கடியில் கற்ற பாடங்களின் அடிப்படையில், மக்களின் நன்மைக்காகவும், சந்தையின் நன்மைக்காகவும் பல முக்கிய கட்டுபாட்டு சட்டங்கள்(Glass-Steagall Act of 1933) இயற்றப்பட்டன.50 ஆண்டுகளாக அந்த சட்டங்களும் நன்றாக செயல் படுத்த பட்டு பெரிய விபரீதங்கள் நடைபெறாமல் தடுக்க பட்டு வந்தது. ஆனால் ரீகன் ஆட்சி காலத்திலிருந்து கட்டுபாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. கிளின்டன் காலத்தில் அதில் பெரிய அளவு கட்டுபாடுகள் தளர்த்த பட்டது.கட்டுபாடுகளை தளர்த்த நிதி நிறுவன லாபிக்கள் சுமார் $200 மில்லியன் செலவு செய்துள்ளனர்.அதன் விளைவு பல ட்ரில்லியன் டாலர் இழப்பு உலகத்துக்கும், பல பில்லியன் டாலர்கள் லாபமாக நிதி நிறுவன நிர்வாகிக்களுக்கும் கிடைத்தது.

அடுத்த பதிவில் கடன் தரச்சான்றிதழ்(Credit Rating Agency) கொடுக்கும் நிறுவனங்களின் பங்கு பற்றி காண்போம்


--