Wednesday, August 25, 2010

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas) 2

பல பெரிய சூதாட்ட விடுதிகள் நகரத்தை 'Theme' ஆக கொண்டன. உதாரணமாக நியூயார்க் விடுதியின் வெளியே பெரிய சுதந்திர தேவியின் சிலையும், புரூக்ளீன் பாலத்தின் அமைப்பும் இருக்கும். இந்த விடுதியை சுற்றி அமைக்க பட்டுள்ள சாகச ரயிலில் (Train Ride) பயணிப்பபவர்களை பார்த்தாலே அடி வயிறு கலக்கும்.



பாரீஸ் விடுதி ஈபில் கோபுரத்துடன் வடிவமைக்க பட்டுள்ளது. அங்கு பணம் செலுத்தி கோபுரத்தின் உயரத்திற்கு சென்று வேகாஸின் அழகை கண்டுகளிக்களாம்.



வெனிஸ், பாரிஸ் போன்ற விடுதிகளின் உள்ளமைப்பு அந்நகரங்களின் தெருக்களை போலவே வடிவமைக்க பட்டுள்ளதால் அந்த நகரங்களிலே இருப்பது போன்ற உணர்வு உண்டாகும். வெனிஸ் விடுதியில் உண்மையான வெனிஸில் இருப்பது போல் படகு சவாரியும் உண்டு.அந்த விடுதிகளின் உள் வேலைபாடுகளும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் காணபடும்.



பெலாஜியோ விடுதி நீறூற்றும் மிராஜ் விடுதி எரிமலையும் காண்பவர்களை திகைக்க வைப்பவை. முக்கியமாக பெலாஜியோ நீறூற்றை ஈபில் கோபுர உயரத்திலிருந்து பார்த்தால் மிக அழகாக இருக்கும்.



அது தவிர சர்க்கஸ் சர்க்கஸ் போன்ற பெரிய விடுதிகளும் உள்ளன. கடைசியாக உள்ள விடுதி ஸ்டேரேட்டோஸ்பியர். இதை ஸ்டிரேட்டோ 'FEAR' என்றே கூறலாம். கோபுர வடிவில் உள்ள இந்த விடுதியின் 103ம் மாடிக்கு(1149 அடி உயரம்) சென்று வெளியே பார்த்தால் ஒட்டு மொத்த லாஸ்வேகாஸும் தெரியும். அங்கு இருக்கும் ரைடுகள் தான் மிகவும் மயிர் கூச்செரிக்க வைப்பவை. எத்தனையோ ராட்டினம் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு உள்ள ராட்டினமோ கட்டிடத்தை விட்டு வெளியே வந்து அதல பாதாளத்தை பார்க்க வத்து சுழல கூடியவை.



அதே போல் இங்கு உள்ள கார் ரைடு 1159 அடி உயரத்தில் பூமியை பார்ப்பது போல் சிறிது தூரம் கீழாக பயனித்து , அந்த உயரத்தில் கீழி நோக்கி காட்டிய படி சிறிது நேரம் வைத்திருக்கும்.



அது போல் மற்றொன்றில் கண்ணாடி லிப்டில் இருந்தவாறு அந்த உயரத்தில் மிக வேகமாக மேலும் கீழும் செல்லும். தற்போது புதிதாக ஒரு ரைடு வந்துள்ளது. அதன் படி மக்களை ஒரு கொக்கியில் கட்டிவிட்டு கயிறு கட்டி 1000 அடி உயரத்திலிருந்து தள்ளி விட்டு விடுவார்கள்! லாஸ் வேகாஸ் நகரின் நகர் பகுதியான 'Freemont Street' ல் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அங்கு தெருவில் நடக்கும் ஒலி-ஒளி காட்சி பிரசித்தி பெற்றது.



லாஸ் வேகாஸ் அருகில் உள்ள பகுதிகள் என்று பார்த்தால் கீழ்கண்டவற்றை சொல்லலாம்.

1.ஈதல் சாக்லேட் பாக்டரியில் சாக்லேட் செய்வதை நேரடியாக பார்க்கலாம்.



2. ஹூவர் அணைக்கட்டு 1 மணி நேர பயணத்தில் உள்ளது.



3. அங்கிருந்து கிராண்ட் கென்யான் செல்லலாம். கிராண்ட் கென்யானின் Sky Walk ம் மேற்கு பகுதியும் அருகாமையில் உள்ளது. தெற்கு பகுதியை சென்றடைய நிறைய நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் அங்கிருந்து தான் கிராண்ட் கென்யானின் உண்மையான அழகை கண்டு களிக்கலாம். Sky Walk என்ற பகுதியில் கிராண்ட் கென்யான் பள்ளதாக்கின் ஆழமான பகுதியில் கண்ணாடியாலான ஒரு நடை பாதையை அதள பாதாளத்தின் மேல் கட்டி உள்ளனர். அங்கிருந்து கீழே பார்த்தால் ????







இந்த புகைபடத்தை பார்த்தால் ஜீன்ஸ் படத்தின் "எனக்கே எனக்கா" பாட்டு ஜாபகம் வருகிறதா?

அடுத்த பகுதியில் லாஸ் வேகாஸின் 'Trade Mark'குகளான சூதாட்டம்,மது,மாது மற்றும் மாமிசம் பற்றி பார்ப்போம்

--

Monday, August 23, 2010

அமெரிக்க அரசின் தங்கத்திற்கு எதிரான போர் ஆரம்பம்?

அமெரிக்க அரசு தனது மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செலவீனங்களை சரி கட்ட புதிய சட்டத்தை(Health Care Reform Act of 2010,-Section 9006) அறிமுக படுத்தி உள்ளது. அந்த புதிய சட்டத்தின் படி $600க்கும் மேல் பொருட்களை விற்றால் முக்கியமாக தங்கம் மற்றும் வெள்ளியை விற்றால் அதனை வாங்குபவர்கள் அமெரிக்க அரசின் வருமான வரி துறையினரிடம் 2012 முதல் IRS க்கு form 1099 மூலம் அந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்க பட்டு அரசுக்கு $18 பில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.இதில் என்ன Conspiracy Theory என்று நினைக்கிறீர்களா?ஆது பற்றி அறிய பொருளாதாரத்தையும், சரித்திரத்தையும் சிறிது பின் சென்று பார்ப்போம்.

1500க்களில் இங்கிலாந்தில் வாழ்ந்த கிரஷாம் என்பவரின் கூற்று படி
"Bad money drives out good if their exchange rate is set by law."

அதாவது இரண்டு வகையான பணங்கள் நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதில் ஒரு பணத்தின் உலோக மதிப்பு அதிகமாகவும் மறு பணத்தின் உலோக மதிப்பை அரசு குறைத்து வெளியிடுகிறது என்றால், அதாவது இரு வேறு நாணயங்களில் 25 பைசாவில் 10கிராம் உலோகம்(உதாரணமாக தாமிரம்) இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அரசுக்கு அதிக அளவு பணம் தேவை தேவை படுவதால் ஒரு நாணயத்தில் 25 பைசாவில் 5 கிராம் மட்டும் உலோகம் வைத்து வெளியிட தொடங்கினால் மக்கள் குறைவாக உலோகம் உள்ள நாணயத்தை முடிந்த அளவு செலவு செய்து அதிக உலோகம் உள்ள முதல் நாணயத்தை சேமித்து வைக்க ஆரம்பிப்பார்கள். நாளாக நாளாக, வியாபாரிகள் முதல் நாணயத்தை கேட்க தொடங்குவார்கள். அதன் விளைவு முதல் நாணயத்தின் மதிப்பு மேலும் அதிகமாக, உலோக மதிப்பு குறைந்த இரண்டாம் நாணயத்தின் மதிப்பு மேலும் குறையும்.இதனை கிரஷாம் விதி என்பார்கள்.


இந்த விதி இரு உலோக அடிப்படையில் உள்ள நாணயத்தை பற்றியது என்றாலும், தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட கூடியது.1930க்களில் அமெரிக்க அரசு தேவைக்காக அதிக அளவு பணத்தை அச்சடிக்க ஆரம்பித்தது. அது வரை முழுமையாக, டாலருக்கு இணையான தங்கத்தை அரசு திரும்பி தரும் நிலையில் இருந்தது. ஆனால் அரசின் பண உற்பத்தியை கண்டு சந்தேகமடைந்த மக்கள் மிக பெறிய பண வீக்கம் அடைந்து பணத்தின் மதிப்பு குறையும் என்ற சந்தேகத்தில் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்கள். பொதுவாக தங்கத்தை பணவீக்கத்திலிருந்து தங்களை பாதுகாக்கும் காரணியாக (Hedge against Inflation)மக்கள் நினைப்பது வழக்கம்.டாலருக்கு இணையாக தங்கமும் ஒரு சேமிப்பு மற்றும் பண்ட மாற்று சக்தியாக வளர்வதை கண்ட அன்றைய அமெரிக்க பிரதமர் ரூஸ்வெல்ட் , மக்கள் வைத்திருக்கும் தங்கம் அனைத்தையும் அன்றைய மார்கெட் மதிப்புக்கு பணம் கொடுத்து பறிமுதல் செய்ய தொடங்கினார். மக்கள் தங்கத்தை வைத்திருந்தால் அதை குற்றமாக அறிவித்தார்.

தற்போதைய நிதி நெறுக்கடி மற்றும் தொடர்ச்சியான போரின் காரணமாக அமெரிக்க அரசு மற்றும் வங்கிகளின் பண நெறுக்கடி அதிகமானதால் பல ட்ரில்லியன் டாலர்களை சிறிது சிறிதாக அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்தில் கலக்க தொடங்கி உள்ளது. இது இன்னும் சில ஆண்டுகளில் Fractional Reserve System மூலம் மிக அதிகமான பண புழக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.இந்த சூழ்நிலையை கிரஷாம் விதியுடன் தொடர்பு செய்து பாருங்கள்.முன்பு சொன்னது போல் மதிப்பு மிக்க முதல் நாணயமாக தங்கத்தையும், மதிப்பு இழந்து கொண்டிருக்கும் இரண்டாம் நாணயமாக பணமும் இருப்பாதாக பாருங்கள்.

இனி அமெரிக்க அரசின் Health Care Reform Act of 2010,-Section 9006 சட்டத்திற்கு வருவோம். மேற் சொன்ன சட்டம் மூலம் அரசுக்கு தங்க விற்பனை பற்றிய அனைத்து செய்தியும் முழுமையாக போய்விடும். யார் யாரிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து விடலாம். மேலும் பிற்காலத்தில் தங்க விற்பனையை தனிமை படுத்தி அதற்கு மிக அதிகமான வரியை விதித்து, சாதாரண மக்களிடமிருந்து தங்க சேமிப்பை அன்னிய படுத்த முயலலாம். நிலமை மோசமானால் ரூஸ்வெல்ட் செய்தது போல் ஒட்டு மொத்த தங்கத்தையும் மக்களிடமிருந்து பறிமுதல் செய்து விட்டு, அரசு அடிக்கும் பணத்திற்கு மாற்றாக எதுவுமே இல்லாமல் செய்யலாம்.

ஆனால் தங்கத்துக்கு ஆதரவான பொருளியல் வல்லுனர்கள், தங்கம் என்பது பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ற சேமிப்பு செல்வமாக உள்ளது. தங்கத்தை அழிக்க முயன்றவர்கள் யாருமே வெற்றி பெற்றதில்லை என்கிறார்கள்.

இதையடுத்த அமெரிக்காவில் தங்கத்தை சேமித்து வைத்துள்ள நிறுவனங்கள் , தங்கத்தை அய்ரோப்பிய வங்கிகளுக்க மாற்ற முயல தொடங்கி விட்டதாக செய்திகள் வர தொடங்கியுள்ளன.

தங்கத்தின் மதிப்பு எவ்வாறு இருக்கும் எனபதை Supply angleலிருந்து பிறிதொரு பதிவில் காண்போம்

--

Sunday, August 22, 2010

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

லாஸ் வேகஸ்

இது மண்ணில் மனிதன் நிர்மாணித்த சொர்க்கம்

அடர்ந்த பாலைவனத்திற்கு நடுவே ஒர் புதிய உலகம்

இங்கு வரும் மக்களை நேற்றைய நினைவிலிருந்தும் நாளைய கனவில் இருந்தும் மறக்கடித்து இன்றைய நினைவில் (இங்கு தங்கியிருக்கும் வரை) வாழ வைக்கும் இடம்

மதங்களால் பாவங்கள் என நிர்ணயம் செய்தவை அனைவற்றையும் மக்கள் சுதந்திரமாக செய்ய அனுமதி பெற்றுள்ள பாவ நகரம்(Sin City)

நாள் தோறும் பல கோடீஸ்வரர்களை உருவாக்கியும் அழித்து கொண்டும் இருக்கும் இடம்

உலகின் உல்லாச தலை நகரம்(Entertainment Capital od World)



அமெரிக்க மக்கள் வேலை மற்றும் குடும்ப அழுத்தங்கள் மற்றும் பிரச்சனைகளை மறந்து சில நாட்கள் முழு சந்தோசமாக கழிக்க விரும்பும் இடம் லாஸ் வேகஸ். மக்கள் மகிழ்ச்சி கொடுக்க கூடியது என்று எதை பிரதானமாக நினைக்கிறார்களோ அது அனைத்தும் இங்கு கிடைக்கும். மது, மாது,மாமிசம்,சூதாட்டம்,கலை நிகழ்ச்சிகள்,உல்லாசம் மற்றும் பிரமாண்டம் அனைத்தும் உலகளவில் அதிகம் கிடைக்கும் இடம் என்றால் லாஸ் வேகஸை கூறலாம்.



(ஈபில் கோபுர உயரத்திலிருந்து இரவு நேர வேகாஸ்)





(ஸ்டிராட்டோஸ்பியர் உயரத்திலிருந்து பகல் நேர வேகாஸ்)

இந்த நகரின் சிறப்பே இங்கு அமைந்திருக்கும் பிரமாண்டமான சூதாட்ட வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் தான். லாஸ் வேகஸின் முக்கிய பகுதி முக்கிய ஸ்டிரிப்(Main Strip) என்று அழைக்க படும் வீதி தான். அந்த வீதியின் இரு ஒரங்களிலும் ராட்சஸ சூதாட்ட விடுதிகள் இருக்கும்.


ஒவ்வொரு விடுதியும் தனக்கென சில சிறப்பான கலை நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும். கலை நிகழ்ச்சி என்பது சிறந்த இசை நிகழ்ச்சியாகவோ, நகைச்சுவை நிகழ்ச்சியாகவோ அல்லது தனி திறமைகளை காட்டும் நிகழ்ச்சியாகவோ இருக்கலாம்.புளு மேன் காட்சி,சர்க் டியூ சொலி காட்சி, லயன் கிங் காட்சி போன்றவை இங்கு பிரபலம்.


அதே போல் ஒவ்வொரு விடுதியும் எதாவது ஒரு தீம் அடிப்படையில் வடிவமைக்க பட்டிருக்கும். ஒவ்வொரு விடுதியும் பிரமாண்டத்தில் ஒன்றுக்கொன்று போட்டி போடும்.ஒவ்வொரு விடுதிக்கும் எதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கும்.ஒரு சில விடுதிகளை பற்றி பார்ப்போம்.





MGM விடுதி சிங்கத்திற்கு பெயர் போனது. அங்கு எப்போதும் மக்கள் பார்வைக்காக நிஜ சிங்கம் வைக்க பட்டிருக்கும்.






லக்ஸார் விடுதியின் தீம் எகிப்து. அது பிரமாண்ட பிரமீடு வடிவில் கட்டபட்டிருக்கும். அதன் மேல் அமைக்க பட்டுள்ள விளக்கு பல மைல் தூரத்திற்கு வெளிச்சம் தரும். சில வருடங்களுக்கு முன் வரை அங்கு பண்டைய எகிப்து நாகரீகத்தை விவரிக்கும் விதம் அழகிய சிலைகள் இருக்கும். ஆனால் தற்போது அவற்றில் பெருமளவு அகற்றபட்டு மக்களை கவரும் பைக் போன்றவை வைக்க பட்டுள்ளது.இங்கு மனித உடல் மற்றும் டைடானிக் கப்பலின் நிஜ பாகங்களை கொண்ட கண்காட்சி வைத்திருக்கிறார்கள்.



எக்ஸ்காலிபர் விடுதி அரண்மனை தீமை கொண்டது.



மிக பெரிய பாலைவனத்தின் நடுவே அமைந்த இந்நகரில் உள்ள மாண்டலி பே விடுதியின் தீமோ கடல்(குடா?)!.இங்கு டால்பின் கண்காட்சி, கடல் சார்ந்த உணவு பொருட்களுக்கான சிறப்பான உணவகங்கள் மற்றும் செயற்கையாக அலை எழுப்பும் அழகிய கடல் ஒன்றையும் நிர்மானித்துள்ளனர்.

மற்ற விடுதிகள் மற்றும் சூதாட்டங்களை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Thursday, August 19, 2010

இன்றைய உலக பொருளாதாரம் - ஒரே நிமிடத்தில் விளக்கம்

இன்றைய உலக பொருளாதாரத்தின் போக்கை புரிந்து கொள்ள "The International" என்ற படத்தில் வந்த இந்த ஒரு கிளிப்பிங் போதுமானது. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் The International.






இது அமெரிக்காவின் Federal Reserve கடனுக்கும் பொருந்துமா?

ஒரு சிறிய விளக்கம்

"The International" என்ற படம் தற்போதைய பன்னாட்டு நிதி நிறுவனக்கள் எப்படி செயல் படுகிறது என்பது பற்றியது. அவர்களிடம் உள்ள மித மிஞ்சிய அதிகாரம் மற்றும் பணம் கொண்டு உலகளவில் எவ்வாறு சட்டத்துக்கு புறம்பான செயல்களை(ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல்) கொண்டு உலகெங்கிலும் அமைதியின்மை, போர் மற்றும் கலவரம் ஏற்படுத்தி அதில் காசு பார்க்கும் விதம் பற்றியதுமானது கதை.

ஆனால் நான் இந்த பதிவில் போட்டதிற்கு முக்கிய காரணம் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் கடனுக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும் இடைபட்ட தொடர்பை பற்றி இது கூறுவதால் தான்.

எந்த ஒரு நாட்டையும் அடிபணிய வைத்து அவர்களிடமிருந்து செல்வத்தை அட்டையாக உரிய முக்கிய வழி அவர்கள் மீது போர் தொடுத்து ஆக்கிரமிப்பு செய்வதோ அல்லது பிற வழிகளோ இல்லை. அவர்களை மிக நெடிய கடன் வலையில் வீழ வைத்தால் அந்த நாடுகளின் முடிவெடுக்கும் அதிகாரம் கடன் கொடுத்தவர்கள் கைக்கு சென்றுவிடும்.

உதாரணமாக 1970க்கு பிறகு அமெரிக்க அரசு செயற்கையாக ஏற்படுத்திய எண்ணை விலை உயர்வால் உலகின் பெரும்பான்மையான நாடுகள் தங்கள் Sovereignty ஐ இழந்து விட்டனர்(இந்தியா உட்பட). அதன் தொடர்ச்சியாக ஈராக் போர்,ஆப்கான் போர் என நடத்தி தீவாரவாதத்தை பெருக்கி உலகெங்கிலும் ஒரு பாதுகாபற்ற நிலை உருவாக்கி வரவுக்கு மீறிய ராணுவ செலவீனங்களை ஏழை நாடுகள் மீது திணித்து அவர்களை மாபெரும் கடனாளி ஆக்கி, உலக நிதி நிறுவனங்களின் கட்டுபாட்டிற்கு அவர்களை தள்ளி செல்கின்றனர்.


இதன் அடிபடையில் தான் இந்த படத்தில் நாடுகளை கட்டு படுத்த எளிய வழி அவர்களை கடனாளிகளாக ஆக்குவது தான் என்கிறது.


--

Sunday, August 15, 2010

கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்


1700ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP உலக GDPல் 2.8% ஆக இருந்தது. இந்தியாவின் GDP 25% ஆக இருந்தது. ஆனால் அதுவே 1850 ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP 9% ஆக உயர்ந்தும் ஆகவும் இந்தியாவின் GDP 12% ஆக தேய்ந்தும் போனது. இந்த அதிசயம் எப்படி நடந்து என்று பார்ப்போம்.

1600 லிருந்து 1800 வரை ஐரோப்பாவிற்கு வரும் வெள்ளியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து நெசவு,வாசனை மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய செலவிடபட்டது. மேலும் அந்த கால கட்டத்தில் உலக உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியில் 25% இந்தியா வசம் இருத்தது. அப்போதைய வியாபாரத்தால் கி.இ.கம்பெனிக்கு நல்ல லாபம் கிடைத்தாலும் இங்கிலாந்து நாட்டிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

அப்போதுதான் கி.இ.கம்பெனிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மொகலாய பேரரசு சிறிது சிறிதாக பலமிழக்க தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் ஆட்சியாளர்கள் சிறிய சிறிய மாகாணங்களை ஆள தொடங்கினர். மேலும் அவர்களுக்குள் பங்காளி சண்டை பெரிய அளவில் நடை பெற்றது. இதை கி.இ.கம்பெனி நன்கு பயன் படுத்த தொடங்கியது. ராணுவ பலம் மூலம் நாடெங்கிலும் தன் கட்டுபாட்டில் உள்ள பொம்மை அரசாங்கங்களை வைக்க தொடங்கியது.அவர்களிடமிருந்து பெருமளவு கம்பெனியும், கம்பெனியில் வேலை செய்யும் அதிகாரிகளும் பணம் கறந்தனர்.உதாரணமாக பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு, மீர் ஜபார் என்னும் பொம்மை ஆட்சியாளரை வங்காள மற்றும் வட இந்திய ஆட்சியில் அமர்த்தி அவரிடமிருந்து சுமார் 37.7 லட்சம் பவுண்டுகளை போருக்கு செலவாக பெற்றனர்.இது தற்போதைய மதிப்பில் டிரில்லியன்களை தாண்டும்.அதன் பிறகு அவர் டச்சு காரர்களுடன் சேர்ந்து கி.இ.கம்பெனிக்கு எதிராக திரும்பியவுடன் அவரை முழுமையாக அகற்றிவிட்டு ஆட்சியை தன் கையில் எடுத்து கொண்டது.

இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க இனி இங்கிலாந்திலிருத்து தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுவருவதை தவிர்க்க தொடங்கியது. தனக்கு தேவையான பணத்தை அநியாய வரி மூலம் இந்தியர்களிடமிருந்தே பெற்று கொண்டு அந்த பணத்தில் இந்திய பொருட்களை வாங்கி அதை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியது.மேலும் இந்தியாவிலிருந்து வரியாக பெற்ற பணத்தின் ஒரு பங்கையும் இங்கிலாந்து அரசுக்கு கொடுத்து இந்தியாவின் மீதான தன் கட்டுபாட்டையும், வியாபார தனி அதிகாரத்தையும் தன்னிடமே வைத்து கொள்ள தொடங்கியது.இதன் விளைவு இந்திய செல்வங்களை கி.இ.கம்பெனி அட்டையாக உரிய தொடங்கியது.இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்திலிருந்து பணம் செலவு செய்யாமலேயே ஒரு பக்க வர்த்தகமாக இந்திய்-இங்கிலாந்து வர்த்தகம் மாறியது.


முகலாயர்கள் காலத்தில் ஜமீந்தார்கள் என்போர் விவசாயிகளிடம் வரி வசூலித்து அரசுக்கு கொடுக்கும் பணியாளர்களாக இருத்தார்கள். ஆனால் கி.இ.கம்பெனியோ இந்திய நிலங்களை ஜமீந்தார்களிடம் ஏலம் விட தொடங்கியது. யார் அதிக வரி தருகிறார்களோ அவர்களுக்கே நிலம் சொந்தம் என அறிவித்தது. நிலம் ஏலத்தில் விடுவதால் ஏல தொகை அதிகமானது. அதன் விளைவு கம்பெனிக்கு லாபமும்,விவசாயிகளுக்கு கடுமையான இழப்பும் ஏற்பட்டது. ஜமீந்தார்கள் கடுமையான முறைகளை பின் பற்றி விவசாயிகளிடம் பணம் வசூல் செய்தனர். அவர்களால் பணம் வசூல் செய்ய முடியவில்லை என்றால் நிலம் அவர்களிடமிருத்து பிடுங்க பட்டு மீண்டும் ஏலம் விட படும். இதன் முக்கிய விளைவு என்ன என்றால் நிலத்தின் உரியாளர்களான ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தின் உரிமை பிடுங்க பட்டு ஜமீந்தார்கள் கைக்கு போனது. உண்மையான நில உரிமையாளர்கள் குத்தகைதாரர்களாக்க பட்டனர்.இம்முறைக்கு ஜமீந்தாரி முறை என்று பெயர்.ஜமீந்தாரி முறையினால் சுமார் 2 கோடி விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றும் இன்னும் முறையாக நில் சீர்திருத்தம் நடை பெறாததால் இழந்த நிலங்களை இன்னும் அவர்கள் பெற வில்லை. அதன் விளைவை தான் நாம் தற்போது மாவோயிஸ்ட் இயக்கமாக வட மற்றும் வட கிழக்கு இந்தியாவில் பார்க்கிறோம்.


தென்னிந்திய பகுதியில் கி.இ.கம்பெனி ரியோத்வாரி முறை என்னும் முறையை அமுல் படுத்தியது. இதன் படி நிலத்தின் உரிமை விவசாயிகளிடமே இருக்கும். அவர்கள் நேரிடையாக வரியை அரசிடம் கொடுக்க வேண்டும். அவர்களால் வரியை கொடுக்க முடியவில்லை என்றால் நிலம் பிறறிடம் கொடுக்கபடும். இது ஒருவகையில் ஜமீந்தாரி முறையை விட நல்ல முறையாக இருந்தாலும் சிறு விவசாயிகள் , ஒரு சில வருடங்கள் பருவ மழை பொய்ப்பின் காரணமாக வரி கட்ட முடியவில்லை என்றால் அவர்கள் நிலத்தை இழக்கும் அபாயம் இருந்தது.

அதிக வரியை கொடுக்க வேண்டி இருந்ததால் விவசாயிகள் உணவு பயிரிலிருத்து பணபயிர்களுக்கு(பருத்தி) மாற நிர்பந்திக்க பட்டனர்.மேலும் முகலாயர் ஆட்சியில் பஞ்சம் ஏற்பட்டால் மன்னர் அவ்வப்போது வரி விலக்கு அளிப்பது வழக்கம். ஆனால் கி.இ.கம்பெனியினருக்கோ லாபம் ஒன்றே குறிக்கோள். எனவே எப்படி பட்ட பஞ்சம் வந்தாலும் அவர்களுக்கு பணம் வந்து சேர வேண்டும் அதன் விளைவு வங்காலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு சுமார் 1 கோடி மக்கள் இறந்தனர்

முன் பதிவில் கூறியது போல் நெசவாளர்களும் துன்புறுத்தபட்டு குறைந்த லாபத்தில் அனைத்து துணிகளையும் கி.இ.கம்பெனிக்கு விற்க வற்பறுத்தபட்டார்கள். இதன் மூலம் குறைந்த விலையில் துணிகளை வாங்கி இங்கிலாந்தில் நிறைந்த விலைக்கு விற்றும் கம்பெனி நல்ல காசு பார்த்தது.

இவ்வாறாக இந்தியாவிலிருந்து கி.இ.கம்பெனியால் சுரண்டபட்ட செல்வத்தின் மதிப்பு வருடத்திற்கு 2 மில்லியனை தாண்டும் என கணக்கிடபட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்ன என்றால், இந்த பணம் தான் இங்கிலாந்தின் தொழில் புரட்சி நடப்பதற்கு தேவையான மூலதனமாக இருந்தது.தொழிற்புரட்சிக்கு தேவையான இயந்திரங்களை உருவாக்க 0.6 - 2 மில்லியன் பவுண்டுகள் தான் இங்கிலாந்திற்கு தேவை பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி முழுமையாக வளர்ச்சி பெற்ற பின் இந்திய - இங்கிலாந்தின் வணிக போக்கு வேறு மாதிரி திரும்ப தொடங்கியது. இங்கிலாந்து தொழிற் சாலைகளுக்கு தேவையான மூல பொருட்களை(பருத்தி, இரும்பு போன்றவை) குறைந்த விலைக்கு இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தது கி.இ.கம்பெனி. அந்த மூல பொருட்களை கொண்டு மதிப்பு கூடிய பொருட்களை இங்கிலாந்தில் உற்பத்தி செய்து அதை மிக அதிக விலைக்கு இந்தியாவில் இறக்குமதி செய்தது. அதன் விளைவு, இந்திய செல்வங்கள் பெருமளவு இங்கிலாந்து நோக்கி செல்ல ஆரம்பித்தது.

அடுத்த பதிவில் கி.இ.கம்பெனி இங்கிலாந்தில் செயல் பட்ட விதம் மற்றும் அதற்கும் இங்கிலாந்து அரசுக்குமான உறவு பற்றி பார்ப்போம்.

--

Saturday, August 07, 2010

மாபெரும் வீட்டு கடன் தள்ளுபடி- அமெரிக்காவில் உலவும் வதந்தி

தற்போது அமெரிக்க அரசு மற்றும் நிதி நிறுவனக்களில் அதிகாரத்தில் இருப்போர் மற்றும் விவரமறிந்தோர் மத்தியில் ஒரு பெரும் வதந்தி உலவி வருகிறது. அது தான் அமெரிக்க அரசு செய்ய போகும் வீட்டு கடன் தள்ளுபடி பற்றியது, கடந்த ஒரு வருடமாக என்ன ஸ்டிமுலஸ்(stimulus-- ஊக்கம்?) கொடுத்தாலும் அமெரிககாவின் பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை காட்டமுடியவில்லை. தற்போது முக்கியமான இடைக்கால தேர்தல் வேறு வர போகிறது. ஆனால் ஒபாமாவின் செல்வாக்கு தற்போது சிறிது சிறிதாக சரிந்து வருகிறது. எனவே எதாவது செய்து மக்களின் ஆதரவை பெர வேண்டிய நிலைக்கு ஒபாமா தள்ளபட்டுள்ளார்.

இதற்கு அவர் எடுக்கும் பிரம்மாஸ்த்திரம் தான் கடன் தள்ளுபடி என்று வதந்தி மிக வேகமாக பரவி விடுகிறது. அமெரிக்க பொருளாதாரம் மிக சூடாக இருந்த போது(2004 - 2008) வீடுகளின் மதிப்பு மிக வேகமாக உயர்ந்தது. சமீபத்திய பொருளாதார நெருக்கடி சமயத்தில் அதன் மதிப்பு மிக வேகமாக குறைய ஆரம்பித்தது. அதனால் வீடு வாங்கியவர்கள் தங்களின் வீட்டின் தற்போதைய மதிப்பை விட அதிக அளவு கடனை திருப்பி செலுத்த வேண்டி உள்ளது. ஒபாமாவின் புதிய திட்டத்தின் படி அவர்கள் வீடு வாங்கிய போது இருந்த விலைக்கும் அதன் தற்போதைய மதிப்பிற்கும் இடை பட்ட பணத்தை தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிகிறது. அதாவது ஒருவர் 2007ல் $700000 க்கு வீடு வாங்கி உள்ளார் என்று வைத்து கொள்வோம். தன் தற்போதைய மதிப்பு $400000 என்றால் $300000 தள்ளுபடி செய்ய பட்டு விடும். அதற்கான $500 பில்லியனுக்கும் மேலான பணத்தை அரசு கொடுத்து விடும்.இந்த வதந்தி உண்மையானால் அது இடை தேர்தல்களின் முடிவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளது.

அட இங்கியும் நம்ப ஊர் அரசியல் தான்!

இது ஒரு வதந்தி தான்.எந்த அளவு உண்மையான செய்தி என்று தெரியவில்லை.

முன்பு ஆசிய நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, உலக வங்கி மற்றும் IMF மூலம் அரசு மக்கள் நல திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும் செய்யும் செலவை குறைத்தால் தான் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரியாகும் என்று போதனை செய்தது.Structural Adjustment என்று புதிய நடைமுறைகளை திணித்தது.( அதை நடை முறை செய்ய முயன்ற சந்திர பாபு நாயுடு மற்றும் ஜெயலலிதாவுக்கு நடந்தது நாடறியும்). அதே பிரச்சனை மேலை நாடுகளுக்கு சென்ற ஆண்டு வந்த போது Structural Adjustment பற்றி ஒன்றுமே பேசாமல் பல டிரில்லியன் டாலர்களை Stimulus ஆக அள்ளி வீசியது.

விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை வெளி நாட்டில் படித்து இங்கு பீட்டர் விட்டு கொண்டிருக்கும் பொருளாதாரவாதிகள் மேலை நாடுகளை எடுத்து காட்டாக காட்டி அவ்வகை திட்டங்களை எள்ளி நகையாடி கொண்டிருந்தினர். தற்போது மேலை நாடுகளில் பிரச்சனை என்று வந்தவுடன் இந்தியாவை விட பல மடங்கு பணத்தை Tax Credit,Stimulus,தள்ளுபடி என்று அள்ளி வீசி கொண்டு ஊள்ளார்கள்.

தலை வலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்

--

Monday, August 02, 2010

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்


கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றம்,ஆரம்ப கால வளர்ச்சி மற்றும் தேயிலை தொடர்பு பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது இந்திய தொழில் துறையை எப்படி நசித்தது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.கி.இ.கம்பெனி வியாபாரத்தை மட்டும் நடத்திய வரை அது ஒரளவுக்கு இந்தியாவிற்கு நல்லதாகத்தான் இருந்தது.அவுரங்கசீப்பின் கடைசி காலத்திலிருந்து முகலாய பேரரசு பலமிழக்க தொடங்கியது. அவரின் மறைவிற்கு பிறகு முகலாய பேரரசு இந்தியாவின் மீது இருந்த தன் கட்டுபாட்டை இழக்க தொடங்கியது. அந்த காலத்தில் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியாவை வெற்றி கொண்டதோடு இல்லாமல் டெல்லியில் ஒரு ரத்த ஆறையே ஓட விட்டு சென்றான். இது முகலாய பேரரசை மேலும் பலவீனபடுத்தியது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவின் தெற்கு பகுதி மற்றும் பிற பகுதிகளை சிறிது சிறிதாக தன் ஆதிக்கத்தில் எடுத்து வர ஆரம்பித்தார்கள்.பல்வேறு மகாணங்களை வென்று அல்லது அங்கு தனது அதரளாவர்களை பொம்மை அரசாக வைத்து தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு பிரன்ச்சு ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் விரிய தொடங்கியது.இந்த கால கட்டத்தில் இந்தியாவின் நெசவு தொழில் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வீழ்ச்சி அடைந்தது என்று பார்ப்போம்.

நெசவு தொழில் முதலீடு - இங்கிலாந்து,இந்தியா - இரு வேறு முறைகள்

முன் பதிவில் கூறியது போல் கி.இ.கம்பெனியின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து, அய்ரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு துணிகளை அதிக அளவு ஏற்றுமதி செய்தது. அதன் விளைவாக இந்தியாவில் நெசவு தொழிலின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.இந்த வளர்ச்சி இந்தியாவில் பிற தொழிலில் இருப்பவர்கள் பலரை நெசவு தொழில் நோக்கி கொண்டு வந்தது. இதில் முக்கியமாக கவனிக்க பட வேண்டியது நெசவு தொழில் வளர்ச்சி நவீன தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சி அடைய வில்லை.இதன் வளர்ச்சி இந்தியாவில் அதிக மக்களை இழுப்பதன் மூலம் வளர்ந்தது. புதியவர்கள் நெசவு தொழிலில் இறங்கும் போது முதலீடு தேவை பட்டது. நெசவு தொழிலாளர்களுக்கு டாட்னி எனப்படும் முறைப்படி கடன் கொடுக்க பட்டது.முதலீட்டாளர்கள் பணத்தை நெசவு தொழிலாளிகளிடம் முதலீடாக கொடுப்பர்.உற்பத்தி செய்யும் துணிகளை முதலீட்டாளர்களிடம் முன்பே நிர்ணயிக்கபட்ட விலையில் விற்க வேண்டும். இங்கிலாந்தில் அதே கால கட்டத்தில் புட்டிங் அவுட் முறையில் கடன் கொடுக்க பட்டது. அதன் படி வியாபாரி உற்பத்தியாளரிடம் பருத்தி போன்ற மூல தனங்களை கொடுத்து உற்பத்தி செய்ய சொல்வார்கள். உற்பத்தியாளர்கள் துணியாக நெய்த பின் அதை வந்து வாங்கி கொள்வார்கள். இந்திய வியாபாரிகளோ பருத்தி வாங்குவது, எவ்வாறு உற்பத்தி செய்பது போன்ற முடிவுகளை உற்பத்தியாளர்களிடமே விட்டு விடுவார்கள்.இங்கிலாந்தில் மேற் கூறிய படி தொடங்கிய நெசவு தொழில் நாளாக நாளாக வேறு வடிவம் எடுக்க தொடங்கியது. வியாபாரிகள் ஒவ்வொரு உற்பத்தியாளரையும் பார்த்து மூலப்பொருட்களை கொடுத்து, உற்பத்தியை கண்காணித்து, துணியை வாங்குவதை விட, அனைத்து உற்பத்தியாளரையும் ஒரே இடத்துக்கு வர செய்து அங்கு அவர்களுக்கு மூல பொருட்களை கொடுத்து அங்கேயே துணியை நெய்ய வைத்து அவர்களிடம் நெய்ய பட்ட துணிகளை வாங்க தொடங்கினர். இது பிற்காலத்தில் தொழிற்கூட முறையில் (Industrial Production) உற்பத்தியை தொடங்க முன் மாதிரியாக இருந்தது .அதே நேரத்தில் அப்போது இங்கிலாந்தில் ஏற்பட்ட பருத்தி தட்டு பாடும்,இவ்வகை தொழிற்கூட முறை துணி உற்பத்தியும் இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட ஒரு காரணியாக இருந்தது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி போட்டியாளர்களை விட அதிக துணிகளை வாங்க இந்த டாட்னி முறையை உபயோக படுத்த தொடங்கியது. கி.இ.கம்பெனி டாட்னி கடன்களை கொடுத்து நெசவாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது .நெசவாளர்களிடம் இருத்து பல முறை துணிகளை வாங்க முடியாமல் இம்முறை பல தடவை கடை பிடிக்க படுவதும், விட்டு விடுவதாகுமாக இருந்தது.

கி.இ.கம்பெனியின் கட்டுபாட்டில் இந்திய நெசவாளர்கள்

கி.இ.கம்பெனி வியாபாரம் மட்டும் செய்து வந்த வரை இந்திய நெசவு தொழிலாளர்கள் நல்ல லாபமடைந்தனர். ஆனால் கி.இ.கம்பெனியினரிடம் அரசியல் அதிகாரம் கிடைக்க ஆரம்பித்தவுடன் நிலமை மாற தொடங்கியது.டாட்னி முறை வணிகம் மாறி, கம்பெனி படித்த இந்திய உயர் சாதியினரை குமாஸ்தாக்களாக பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் கடன் கொடுத்து நெசவாளர்களை கண்காணிக்க செய்து துணிகளை வாங்க ஆரம்பித்தது. நெசவாளர்களும் கி.இ.கம்பெனிக்கு மட்டும் துணிகளை நெய்து கொடுக்க கட்டாயபடுத்த பட்டனர். மறுத்தவர்கள் துன்புறுத்தபட்டார்கள். கி.இ.கம்பெனியினர் நிர்ணயித்த விலையிலேயே துணிகளை விற்க கட்டாய படுத்தபட்டார்கள்.இதன் விளைவி கி.இ.கம்பெனிக்கு இந்திய துணி ஏற்றுமதி மிக பெரிய லாபத்தை கொடுத்தது. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் துணிகளை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்து மிக பெரிய பணம் பார்த்தனர் கி.இ.கம்பெனி. இவ்வகை துணி வர்த்தகத்தில்,கம்பெனிக்கு முதலீட்டை விட மும்மடங்கு லாபம் கிடைத்தது.

இங்கிலாந்து நெசவாளர்கள் லாபி

இங்கிலாந்தில் இந்திய துணிகள் கடல் போல் பரவ தொடங்கியதால் இங்கிலாந்து நெசவு தொழில் பாதிக்க பட தொடங்கியது.இங்கிலாந்து நெசவு தொழிலாளர்கள் லாபி இதை தடுக்க மிக வேகமாக செயல்பட்டது. அவர்களின் வற்புறுத்தளால் 1685ம் ஆண்டு இந்திய துணிகளுக்கு 10 சதம் சுங்க வரி விதித்தது. 5 ஆண்டுகளில் அது 10 சதமாக உயர்த்தபட்டது.1719 ம் ஆண்டு இந்திய துணிகளை அணிபவர்களுக்கு 5 பவுண்டும் விற்பவர்களுக்கு 20 பவுண்டும் அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது.1813ம் ஆண்டு சுங்க வரி 85% அளவுக்கு உயர்த்த பட்டது.

இங்கிலாந்தில் ஒரு புரட்சி



அப்போது இங்கிலாந்தில் நடந்த ஒரு புரட்சி உலக பொருளாதாரம் மற்றும் வாணிபத்தின் போக்கையே மாற்ற தொடங்கியது. அந்த புரட்சி கத்தியின்றி ரத்தமின்ற நடந்தது. அது ஒரு அரசியல் புரட்சி அல்ல. அது ஒரு அறிவியல் புரட்சி அது தான் தொழிற்புரட்சி. உற்பத்திக்கு மனிதர்களை மட்டும் நம்பி கொண்டிருந்த நிலையை மாற்றி இயந்திரங்களை கொண்டு உற்பத்தியை தொடங்க ஆரம்பித்தனர். Production by mass என்ற நிலையை மாற்றி mass production என்ற சிந்தனைக்கு உலகை கொண்டு சென்றது.சாமுவேல் கிராம்டன் 1779ம் ஆண்டு கண்டு பிடித்த நெசவு இயந்திரம் தொழில் புரட்சிக்கு வித்திட்டது..

இந்திய நெசவு தொழிலின் வீழ்ச்சி

இந்திய நெசவு தொழிலின் அழிவுக்கு இங்கிலாந்து தொழிற்புரட்சி தான் காரணம் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் உண்மையில் இந்திய துணிகளின் தரத்திற்கு இணையாக இங்கிலாந்து தொழிற்சாலைகளில் நெய்ய பட்ட துணிகள் போட்டி போட முடியவில்லை.தொழிற்புரட்சி ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதாவது 1815ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 1.3 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. அதே நேரம் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 26000 பவுண்டுதான் இருந்தது. இதிலிருந்து இங்கிலாந்து தொழிற்புரட்சியால் இந்தியாவின் நெசவு தொழிலை நேர்மையான வாணிபத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று தெரிகிறது.

அதன் பிறகு இந்தியாவின் நெசவு தொழில் மிக வேகமாக அழிய தொடங்கியது.1832 ம் ஆண்டு முதல் இந்தியா இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்த நெசவு பொருட்களை விட, இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்த நெசவு பொருட்களின் மதிப்பு அதிகமாக தொடங்கியது.இந்தியாவின் நெசவு தொழிலின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை கூறலாம்.. முதலாவதாக இங்கிலாந்து தொடர்ச்சியாக இந்திய தூணிகளுக்கு விதித்த சுங்க வரையை தொடர்ச்சியாக அதிகரித்ததை கூறலாம். அடுத்ததாக நெப்போலியன் கால பிரான்ஸுக்கு எதிரான போரின் காரணமாக இங்கிலாந்தில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளை தடை செய்தது.இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளில் பாதிக்கு மேல் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்டது. ஆனால் பிரான்சுக்கு எதிரான போரின் போது, இங்கிலாந்து இவ்வகை ஏற்றுமதிக்கு தடை செய்தது. இதனால் இந்திய நெசவு வணிபம் பெரிதும் பாதிக்க பட்டது. கிழக்கிந்தய கம்பெனி அரசியல் அதிகாரம் பெரும் வரை,விவசாயிகளிடமிருந்து அரசு பெற்ற வரியின் மூலம் பெருமளவு நகர் புற வசதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் மற்றும் ஆட்சியாளார்களின் செலவினங்களும் அதிகரித்திருந்தது, அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக நெசவு தொழில் வளர்ச்சி தேவை பட்டது, ஆனால் கி,இ.கம்பெனி வரி வசூல் செய்ய அரம்பித்தவுடன் அந்த செல்வங்கள் இங்கிலாந்து நோக்கி செல்ல தொடங்கிஅதால் இந்திய நகர் புர வர்க்கத்தின் எண்ணிக்கையும் குறைந்தது, இதன் விளைவாக நெசவு பொருட்களுக்கு உள்நாட்டு தேவையும் குறைய ஆரம்பித்தது.ஆரம்ப காலங்களில் கி.இ.கம்பெனிக்கு இங்கிலாந்து அரசின் மீது அதிக தாக்கம் (influence) இருந்தது. அப்போது அதன் லாபத்திற்காக இந்திய துணிகளை இங்கிலாந்தில் விற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசின் மீது முடிந்த வரை அழுத்தம் கொடுத்து ஏற்படுத்தி வந்தது. ஆனால பிற்காலத்தில் அதன் தாக்கம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. 1813ம் ஆண்டு ஆங்கில அரசின் சட்டத்தின் மூலம் அதன் அதிகாரம் பெருமளவு குறைக்க பட்டு ஆங்கில அரசுக்காக இந்தியவை ஆளும் ஒரு ஏஜென்டு மட்டும் தான் என்ற நிலைக்கு தள்ள பட்டது. ஆங்கில அரசின் கட்டுபாட்டிற்கு இந்தியா வர ஆரம்பித்தவுடன், ஆங்கில அரசு தன் நாட்டு நெசவு தொழிலை ஊக்குவிப்பதே முதல் குறிக்கோளாக கொண்டு இந்திய நெசவு தொழிலை முழுமையாக அழிக்க தொடங்கியது. கடைசியாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியும் இந்திய சவு தொழிலின் அழிவுக்கு ஒரு காரணமாக இருந்தது எனலாம்.

அடுத்த பதிவில் கி.இ.கம்பெனியால் எவ்வாறு இந்திய செல்வங்கள் கொள்ளை போயின என்று பார்க்கலாம்.

--

Saturday, July 10, 2010

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1


கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்



உலகிலேயே தண்ணீருக்கு அடுத்த படியாக அதிகம் குடிக்கபடும் பாணம் தேயிலை. தேயிலை தோன்றியது வடகிழக்கு இந்தியா,பர்மா, சீனா போன்ற பகுதியாக இருக்கலாம் என்று கருதபடுகிறது.இந்தியாவில் பல நூற்றாண்டுக்கு முன்பே தேயிலையை உபயோகபடுத்திய சான்று இருந்தாலும் சீனாவில் தான் தேயிலை அதிக அளவில் உபயோகபடுத்த பட்டு, அதிக அளவில் பயிரிட பட்டும் வந்தது.இங்கிலாந்தில் தேயிலை 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அறிமுகம் இல்லாமல் தான் இருந்தது. சார்லஸ் 2ம் மன்னர் 1660ல் ஆட்சிக்கு வந்தார். அவருடைய போர்ச்சுகீசிய மனைவிக்கு டீ குடிக்கும் பழக்கம் இருந்தது.இதை தொடர்ந்து 1664 ம் ஆண்டு 100 பவுண்டு தேயிலையை கிழக்கிந்திய கம்பெனி முதன் முதலாக ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்தது. நாட்டின் ராணி டீ குடிப்பார் என்ற உண்மையை பயன் படுத்தி சிறிது சிறிதாக ராஜ குடும்பம் மற்றும் பணக்கார இங்கிலாந்து பிரபுக்களிடம் அதை விற்க தொடங்கியது. ( இன்றும் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் உற்பத்தி செய்யும் புதிய பொருட்களுக்கு விளம்பரம் மற்றும் மற்ற வழிகளில் சந்தையை உருவாக்குவது போல்?).தேயிலையின் பயன்பாடும் இங்கிலாந்தில் சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது.1813ம் ஆண்டு இறக்குமதி செய்ய பட்ட தேயிலையின் அளவு 1.45 கோடி கிலோவை தொட்டது.அந்த கால கட்டத்தில் கி.இ.கம்பெனியின் ஒட்டு மொத்த வர்த்தக மதிப்பில் 60% தொட்டது தேயிலை வர்த்தகம்.இங்கிலாந்து அரசின் வரி வருவாயில் 10% வருவாய் தேயிலையின் மீது விதிக்க பட்ட வரி மூலம் மட்டும் கிடைத்தது என்றால் தேயிலை இறக்குமதியின் அளவை புரிந்து கொள்ளுங்களேன்!.

இங்கிலாந்து வேலு நாயக்கர்கள்

சீனா மற்றும் இந்தியாவுடனான வர்த்தகத்துக்கு கி,இ.கம்பெனிக்கு ஏக போக உரிமையை அளித்திருந்தது ஆங்கில அரசு. அதன் விளைவாக தேயிலையின் விலையை மிக அதிக அளவிற்கு நிர்ணயித்து பெரும் லாபத்தை கண்டது கம்பெனி. அதே நேரத்தில் இங்கிலாந்து அரசு நடத்திய போர்களுக்கு செலவிழிக்க தேயிலைக்கு அதிக வரி விதித்தது. அதன் விளைவாக தேயிலையின் விலை அதிகமானது.சாதாரண மக்கள் தேயிலையை வாங்குவது கடினமானது. அதே நேரத்தில் மற்ற அய்ரோப்பிய நாடுகளில் தேயிலை மிக குறைந்த விலைக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதன் விளைவு இங்கிலாந்தில் பல "வேலு நாயக்கர்கள்" தோன்றினர். தேயிலை கடத்தல் மிக பெரிய தொழிலாக வளர்ந்தது. தேயிலை கடத்தல் மூலம் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் டீ கிடைத்ததால், தேயிலை கடத்தல் மன்னர்கள் சாதாரண மக்களிடையே ஹீரோவானார்கள். அது மட்டுமல்ல. கி.இ.கம்பெனி ஊழியர்கள் கப்பலில் திரும்பி வரும் போது தனிபட்ட முறையில் நிறைய தேயிலை கொண்டு வந்து நன்கு பணம் பார்த்தார்கள்.

சீனாவும் அபினி போரும்

தேயிலை இறக்குமதியின் அளவு அதிகம் ஆகி கொண்டே சென்`ற போது மற்றொரு விளைவும் ஏற்பட்டது. தேயிலையை எதாவது கொடுத்து தானே வாங்க வேண்டும். இங்கிலாந்து பொருட்களை சீனர்கள் விரும்பி வாங்குவது இல்லை. சீனர்கள் தேயிலைக்கு மாற்றாக கேட்டது வெள்ளி.17ம் நூற்றாண்டின் நடு பகுதி வரை அய்ரோப்பிய நாடுகள் சுமார் 28 மில்லியன் கிலோகிராம் வெள்ளியை சீனாவிடம் கொடுத்து தேயிலையை வாங்கின. இதன் விளைவு பெருமளவு செல்வம் சீனா நோக்கி செல்ல ஆரம்பித்தது. வெள்ளிக்கு மாற்று எது என்று அய்ரோப்பியர்கள் யோசித்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு ஒரு அதிசய பொருள் கிடைத்தது. அது தான் ஓப்பியம். அதாவது நம்ம ஊர் அபின் தான் அது.சீனர்களுக்கு ஒப்பியத்தை விற்று அதற்கு மாற்றாக தேயிலையை வாங்க ஆரம்பித்தார்கள்.அதனால் ஓப்பியத்தின் தேவை அதிகமானது. இந்திய வங்க மாநிலத்தில் பெருமளவு ஓப்பியத்தை பயிரிட தொடங்கியது. ஒப்பியம் என்பது போதை பொருள் ஆனாலும் லாபம் ஒன்றே குறிக்கோளான கி.இ.கம்பெனிக்கு நியாய தர்மம் பற்றி யோசிக்க அவசியமில்லை.சீன மக்கள் போதைக்கு அடிமை ஆவதை தடுக்க சீன அரசு ஒப்பியம் விற்பனையை தடை செய்தது. ஆனால் கி.இ.கம்பெனி சீன வியாபாரிகளிடம் சீனாவில் கடனுக்கு தேயிலை வாங்கி, வங்காலத்தில் அதற்கு ஈடான ஓப்பியத்தை சீனா வியாபரிகளுக்கு விற்பனை செய்தது. அது கி.இ.கம்பெனியின் கப்பலில் சீனாவின் கடல் ஓரத்தில் இறக்க பட்டு அதை சினாவிற்குள் சீன வியாபரிகளால் கடத்த பட்டு கொண்டு செல்ல பட்டது.இந்த போதை பொருள் வியாபாரத்தை சீனா முழுமையாக தடை செய்ய முயன்ற போது கி.இ.கம்பெனி மற்றும் சீனாவிடையே இரு ஓப்பியம் போர்கள்(அபினி போர்கள்) நடந்தது. இதன் மூலம் கி.இ.கம்பெனிக்கு சீனாவில் நிறைய இடங்களில் வியாபாரம் செய்யும் உரிமையும் ஹாங்காங் நகரின் மீது முழு கட்டுபாடும் கிடைத்தது.

போஸ்டன் தேனீர் விருந்து

கி.இ.கம்பெனிக்கும் இந்திய அரசியலுக்கும் இடைபட்ட தொடர்பை தான் நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்பர். கி.இ.கம்பனிக்கும் அமெரிக்க விடுதலை போருக்கும் மிக பெரிய நெருக்கம் உள்ளது.கி.இ.கம்பெனியின் நிதி நிலை மோசமாக இருந்ததாலும் இங்கிலாந்து அரசு போர்களை புரிய அதிக அளவு செலவிட வேண்டியதாலும் அரசு மற்றும் கி.இ.கம்பெனியின் வருமானத்தை பெருக்க புதிய யுத்தியை கையாண்டது. அதன் படி அமெரிக்கா உட்பட்ட இங்கிலாந்து காலனி நாடுகளில் தேயிலையை இங்கிலாந்தில் இருந்து மட்டும் வாங்க வேண்டும் என்று சட்டமியற்றியது. அதாவது சீனாவிலிருந்து இங்கிலாந்திற்கு தேயிலையை க்.இ.கம்பெனி மட்டும் வாங்கி விற்க முடியும். அந்த தேயிலை இங்கிலாந்தில் விற்பனை செய்ய பட்ட பின் , அதை வர்த்தகர்கள் இங்கிலாந்திலிருந்து வாங்கி அமெரிக்காவில் விற்பனை செய்வார்கள்.இங்கிலாந்தில் தேயிலைக்கு விதிக்க பட்ட வரி அதிகமாக இருந்ததாலும் டச்சு காரர்கள் அய்ரோப்பாவில் வரியின்றி தேயிலை விற்றதாலும் டச்சு காரர்கள் மற்றும் பிற அய்ரோப்பியர்களின் தேயிலை மிக மலிவாக கிடைத்தது. இதனால் அமெரிக்காவில் பெருமளவு கடத்தல் தேயிலை விற்பனை ஆனது..இங்கிலாந்திலிருந்து பல இடை தரகர்களை கடந்து அமெரிக்காவிற்கு தேயிலை செல்ல வேண்டியிருந்ததால், கடத்தல் தேயிலையை விட இந்த தேயிலையின் விலை மிக அதிகமாக இருந்தது. எனவே அங்கீகரிக்க பட்ட தேயிலை வியாபாராம் மிகவும் குறைந்தது. இதனால் கி.இ.கம்பெனியின் வருமானமும், அரசுக்கு தேயிலை வரி மூலம் வரும் வருமானமும் குறைந்தது.


இதை சரிகட்ட 1773ம் ஆண்டு கி.இ.கம்பெனிக்கு தேயிலையை அமெரிக்காவில் நேரடியாக விற்பனை செய்ய இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. மேலும் காலனி நாடுகளில்(அமெரிக்காவில்) விற்பனை செய்யும் தேயிலைக்கென்று தனி வரி விதித்தது..இதன் விளைவாக கி.இ.கம்பெனி இடை தரகர்களை நீக்கி குறைந்த விளைக்கு தேயிலையை அமெரிக்காவில் விற்க தொடங்கினர். இது அமெரிக்காவில் தேயிலையை கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பேரிடியாக இருந்து. அமெரிக்கர்களுக்கோ காலனி நாட்டின் மீது இங்கிலாந்து தனி வரியை விதித்ததை ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் கி.இ.கம்பெனி பிற பொருட்களின் விற்பனைக்கும் பிற்காலத்தில் தனியுரிமை பெற்றுவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. அந்த நேரத்தில் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு தேயிலை ஏற்றி வந்த கப்பல் போஸ்டன் துறைமுகத்தில் நின்றது..கி.இ.கம்பெனியின் தேயிலையை எதிர்த்த அமெரிக்கர்கள் போஸ்டன் துறைமுகத்தில் நின்ற கப்பலில் இருந்த தேயிலையை தூக்கி வீசி கடலில் எரிந்தார்கள். இது அமெரிக்க சுதந்திர போருக்கு முன்னோடியாக இருந்தது எனலாம்.இதன் மூலம் கி.இ.கம்பெனி அமெரிக்கா சுதந்திர போருக்கு காரணியாகவும் இருந்தது.

போஸ்டன் தேனீர் விருந்து காந்தி அடிகள் இந்தியாவில் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்க முன்னோடியாக இருந்தது.அன்று அமெரிக்கர்கள் தேயிலை மூலம் சுதந்திர போராட்டத்தை நடத்தினார்கள். காந்தி அதையே உப்பு மூலம் இந்தியாவில் தொடர்ந்தார். இன்று அதே பாஸ்டன் தேனீர் விருந்து ஒபாமாவின் அரசாங்க செலவு மற்றும் அரசாங்க அதிகார விரிவு படுத்தலை எதிர்த்து திரும்ப ஆரம்பிக்க பட்டுள்ளது


இந்தியாவில் தேயிலை




சீன தேயிலையை இங்கிலாந்தில் விற்க ஏக போக உரிமை இருந்த வரை கி.இ.கம்பனி தேயிலை வர்த்தகத்தில் மட்டும் ஈடுபட்டு வந்தது. அதாவது சீனாவிலிருந்து வாங்கி இங்கிலாந்தில் விற்றது. தன் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டு அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. கி.இ.கம்பெனியின் ஊழியரான புரூஸ் முதன் முதலில் 1831ம் ஆண்டு அசாமில் தேயிலை உற்பத்தி செய்யலாம் என்றும் அசாம் தேயிலை சுவையும் நன்றாக இருக்கும் என்று கண்டறிந்தார்.அதன் பிறகு சிறிது சிறிதாக இந்தியாவில் தேயிலை பயிரிடும் பகுதி அதிகமானது.1888ம் ஆண்டு இந்திய தேயிலை இறக்குமதியின் மதிப்பு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் தேயிலையின் மதிப்பை விட அதிகமானது

கி.இ.கம்பெனியின் தேயிலை அரசியலும் இன்றைய பன்னாட்டு கம்பெனிகளும்

கி.இ.கம்பெனியின் மேற் கூறிய செயல்பாட்டுக்கும் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளின் செயல்பாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்

1.எந்த ஒரு தொழிலிலும் ஒரு சில கம்பெனியின் கைக்கு மட்டும் முழு உரிமை வந்துவிட்டால் அது நுகர்வோர்களை பெருமளவில் பாதிக்க படுவதை பார்த்தோம். முன்பு கி.இ.கம்பெனி அரசின் கட்டுபாட்டின் மூலம் தனியுரிமை பெற்றது. தற்போது ஒவ்வொரு துறையிலும் ஒரு சில கம்பெனிகள் நிதி நிறுவனக்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் மூலம் தனது துறையில் உள்ள சிறு கம்பெனிகளை வாங்கியும், பெரிய கம்பெனிகளுடன் Merger and Acqusition மூலம் ஒன்றினைந்தும் oligopoly ஆக மாறுவதை காண்கிறோம். இதன் விளைவு முக்கியமாக மருந்து மற்றும் வேதியல் பொருட்கள் துறையில் தற்போது காண ஆரம்பிக் கிறோம்

2.கி.இ.கம்பெனி தேயிலை இறக்குமதியில் ஏகபோக உரிமை பெற்றவுடன் அதற்கு போட்டி இல்லாததால் இந்தியா போன்ற தன் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் தேயிலை உற்பத்தியை பெருக்கி , அதிக தேயிலையை உற்பத்தி செய்து தேயிலை குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைத்து தன்னுடைய லாபத்தையும் அதிகரிக்க முயலாமை பற்றி பார்த்தோம்.

தற்போது பன்னாட்டு கம்பெனிகள் காப்புரிமை என்ற பெயரில் ஒரு சில கண்டுபிடிப்புகளுக்கு தனியுரிமை பெற்று அதன் மூலம் பெரிய அளவில் லாபம் அடைகின்றனர். உதாரணமாக பன்னாட்டு மருந்து கம்பெனிகள் (கண்டு பிடிப்பின் பெரும்பான்மையான பகுதி மேல் நாட்டு அரசு பணத்தில் பல்கலை கழகத்தில் நடைபற்றதாக இருந்தாலும்) ஒரு சில மருந்துகளுக்கு காப்புரிமை பெற்று அதை கொள்ளை லாபத்திற்கு விற்று பணம் சம்பாதிக்கின்றனர். அதில் வரும் லாபத்தை கூட புதிய கண்டுபிடிப்புகளுக்கு செலவிடுவதில்லை. பழைய மருந்துகளிளேயே சிறிய மாறுதல் செய்து விளம்பரம் செய்து வருவாயை பெருக்குகின்றனர்.

3.கி.இ.கம்பெனி சீனாவில் போதை மருந்தை விற்று லாபம் அடைந்ததை பார்த்தோம்.

இன்றைய பன்னாட்டு கம்பெனிகளும் பங்கு சந்தையில் தன் மதிப்பை நிலை நிறுத்த எது வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர். உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களில் கலப்படம், பழுதுள்ள கார்களை தெரிந்தே விற்பனை செய்வது என பல அடுக்கி கொண்டே செல்லலாம்.

வரலாற்றில் காலமும், கம்பெனிகளின் பெயர்களும் தான் மாறி வருகிறது. நிகழ்வுகள் என்னவோ மீண்டும் மீண்டும் அதே தான் நடக்கிறது!

இந்தியாவிலிருந்து எவ்வாறு செல்வங்கள் சூறையாட பட்டது என்பது பற்றியும், இந்திய தொழில் துறையை எவ்வாறு கி.இ.கம்பெனி நசித்தது என்பது பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்

--

Sunday, July 04, 2010

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1





முதல் பகுதியில் ஆசியாவுக்கான வர்த்தக வழிகளை பற்றியும் கிழக்கிந்திய கம்பெனி(கி.இ.க) ஆரம்பிக்க பட்ட வரலாறு பற்றியும் பார்த்தோம். கி.இ.க இந்தியாவில் இருந்த கால கட்டத்தை இரு பிரிவாக பிரிக்கலாம்.முதல் கால கட்டம் அது இந்தியாவிடம் வர்த்தகம் மட்டும் செய்த காலம். இரண்டாம் கால கட்டம் அது இந்தியாவை சிறிது சிறிதாக அரசியல் ரீதியாக தன் கட்டுபாட்டில் எடுத்து வைத்து கொண்ட காலம்.

இவற்றில் முதல் கால கட்டத்தில் இந்தியாவிற்கு நிறைய நன்மை கிடைத்தது எனலாம்.கி.இ.க ஆரம்பிக்க பட்ட போது அது 30,000 ஸ்டெர்லிங் பவுண்டு மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளியை இங்கிலாந்தில் இருந்து ஏற்றுமதி செய்து அதற்கு ஈடான வாசனை பொருட்கள், துணி மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கபட்டது.அனுமதிக்க பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் ஏற்றுமதி மதிப்பு சிறிது சிறிதாக வருடந்தோரும் அதிகரிக்கபட்டது. உதாரணமாக 1629ம் ஆண்டு அது 160,000 பவுண்டாக(125,000 -வெள்ளி, 40,000 - தங்கம்) அதிகரிக்க பட்டு இருந்தது.அதாவது செல்வமாக கருதபடும் தங்கம், வெள்ளி இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய பட்டு இந்தியாவிலிருந்து வாசனை பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் இங்கிலாந்திற்கும் அதன் பிறகு அங்கிருந்து பிற மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் தொழில் வளர்ச்சி மற்றும் செல்வ வளம் இந்தியாவில் பெருகியது. ஆனால் அப்போது இருந்த முகலாய அரசாங்கமோ அந்த செல்வங்களை மாட மாளிகைகள் கட்டவும் பிற ஆடம்பர செலவுகளுக்கும் செலவிட்டது. பிற்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் கிடைத்த செல்வ பெருக்கை முதலாளித்துவ இங்கிலாந்தோ தொழிற்புரட்சி ஏற்படுத்த முதலீடாக மாற்றியது.

கி.இ.க ஆசியாவிலிருந்து பொருட்களை வாங்க பெருமளவு தங்கம் வெள்ளி செலவிட்டதால் இங்கிலாந்தின் செல்வம் வெளியேற தொடங்கியது.இதை தவிர்க்க இங்கிலாந்தில் உற்பத்தி ஆன துணிவகைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட பணிக்க பட்டது. இங்கிலாந்து துணிவகைகள் கடுங்குளிரில் அணிபவையாக இருப்பதால் ஆசியாவில் உள்ள வெப்ப பிரதேசங்களில் உடுத்தி கொள்ள உகந்ததாக இல்லை. எனவே இங்கிலாந்து துணிகள் ஆசிய மக்களுக்கு மிதியடிகளாகவும் ஜன்னல் விரிப்புகளாக மட்டும் பயன் பட்டன. அது மட்டுமின்றி இந்திய மற்றும் சீன துணிகளின் தரத்திற்கும் அது இல்லை.நம்மில் பெரும்பாலானோர் வாசனை பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தான் எப்போதும் முதலிடம் பெற்றிருந்தது என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அது உண்மையில்லை. கிழக்கு இந்திய தீவுகள் என்று அழைக்கபடும் ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகள் வாசனை பொருட்கள் உற்பத்தியிலும், வாணிபத்திலும் முதலிடத்தில் இருந்தது(அதனால் தான் என்னவோ ராஜேந்திர சோழன் இந்நாடுகள் மீது போர் தொடுத்து தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான் போலும்!). எனவே கி.இ.க- பொதுவாக வாசனை பொருட்களை ஜாவா சுமத்திரா போன்ற நாடுகளில் பெருமளவு கொள்முதல் செய்தது. அந்நாட்டினர் இங்கிலாந்து துணிகளை வாங்க விரும்பவில்லை. எனவே வெள்ளியை கொடுத்தே வணிபம் செய்ய வேண்டி இருந்தது. அப்போது இந்திய துணிகளுக்கு அந்நாட்டு மக்களிடம் வரவேற்பு இருப்பதை கண்ட கி.இ.க, உடனே இந்தியாவில் துணி தொழிற்சாலை நிறுவி, அந்த துணிகளை கீழை நாடுகளில் வாசனை பொருட்களுக்கு மாற்றாக விற்க தொடங்கியது. இதன் மூலம் கி.இ.க கம்பெனிக்கும் வருமானம் கிடைத்தது. இங்கிலாந்தின் வெள்ளியும் சேமிக்க பட்டது, இந்திய துணிகளுக்கு பெருமளவில் புதிய சந்தை கிடைத்ததால் இந்திய தொழில் துறையும் வளர்ந்தது.

இந்திய துணிகளை கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு இருந்து விடாமல், அதை இங்கிலாந்திலும் விற்க ஆரம்பிக்க பட்டது. இங்கிலாந்தில் இந்திய துணிகளுக்கு பெருமளவு கிராக்கி ஏற்பட்டது.இந்திய துணிகளின் இறக்குமதியும் கிழக்கிந்திய கம்பெனியின் செல்வ செழிப்பும் பல மடங்கு பெருகியது. அது இங்கிலாந்து துணி தொழில் துறையையே அழித்து விடும் அளவு வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் இந்திய துணிகளை அணிவதையே இங்கிலாந்து அரசு தடை செய்யும் அளவிற்கு சென்றது.1770 ஆண்டு கம்பெனியின் வணிப மதிப்பில் 60% இடத்தை துணி வர்த்தகமே பிடித்து கொண்டது. இந்திய துணி தொழிற்துறை பெருமளவு வளர இது உதவியது.

அந்த காலத்தில் வாசனை பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்த ஜாவா,சுமத்திரா போன்ற கிழை நாடுகள் பிற ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழ் நாடு மற்றும் கேரளா பகுதியில் வாசனை பொருட்கள் உற்பத்தியை பெருமளவு பெருக்க அதிக முயற்சி எடுத்து வாசனை பொருட்கள் வாணிபத்தையும் இந்தியாவில் பெருக்கியது.

1664ம் ஆண்டு முதன் முதாலாக கி.இ.க சீன டீயை இங்கிலாந்தில் அறிமுக படுத்தியது. அதன் பிறகு இங்கிலாந்தில் டீயின் தேவை அதிகமாக இருந்ததால் , டீயை சீனாவிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்தது. பிறகு சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவிலும் பெருமளவு டீயை பயிரிட தொடங்கி தோட்டக்கலை வளர்ச்சிக்கும் உதவியது.

மேற்கூறிய வியாபார பொருட்களை இங்கிலாந்துக்கு மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய பட்ட பொருட்கள் அங்கிருந்து பிற அய்ரோப்பிய நாடுகள் மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக இருந்த அமெரிக்க,ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டது. இந்திய பொருட்களின் சந்தை உலகலவில் பெரிதாக விஸ்தரிக்கபட்டது.

கிழக்கிந்திய கம்பெனியின் வரவால் இந்திய வியாபாரிகள் முக்கியமாக குஜராத்திய வியாபாரிகள் மற்றும் பிற ஆசிய நாடுகளின் வியாபாரிகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் வியாரிகளின் வியாபாரம் பெருமளவு பாதிக்க பட்டது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி என்றவுடன் அது இந்தியாவை அடிமை படுத்தி, வர்த்தக ரீதியாக சுரண்டியது பற்றி தான் அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் கிழக்கிந்திய கம்பெனியால் வர்த்தக ரீதியாக மேற் கூறிய நன்மைகளும் இந்தியாவிற்கு கிடைத்தது.

அடுத்த பதிவில் கிழக்கிந்திய கம்பெனியின் தேயிலை தொடர்பையும் அது உலக அரசியலில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பார்ப்போம்


--

Tuesday, June 22, 2010

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1






கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் செல்வத்தை சுரண்டியது என்று பள்ளியிலும் பத்திரிக்கைகளிளும் படித்து இருக்கிறோம். ஆனால் அது எவ்வாறு பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக இந்தியாவை சுரண்டியது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெளிவாக தெரியாது.வரலாற்றை தெளிவாக தெரிந்து வைத்து கொள்வது பிழைகளை திரும்பி செய்வதை தவிர்க்குமல்லாவா?

கடல் வழி வாணிபம் என்பது பல காலமாக பணம் கொழிக்கும் தொழிலாக இருந்தது.அரசாங்கங்களும் தங்கள் நாட்டு வணிபர்களின் தடையற்ற வியாபாரத்திற்காக பல வழிகளிலும் உதவி வந்தனர்.தற்போது இருப்பது போல் மின்னனு பொருட்கள், கார்கள் போன்றவை அந்த காலத்தில் இல்லை. எனவே அந்த கால வணிபம் என்பது வாசனை பொருட்கள் சார்ந்த உணவு பொருட்கள், துணிகள், ஆடம்பர பொருட்கள் சார்ந்ததாகவே இருந்து.பல நுற்றாண்டுகளாக ஜாவா, இந்தோனிசியா, இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் வாசனை பொருட்களுக்கும் சீனா மற்றும் இந்திய துணி வகைக்களுக்கும் உலக சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது.இந்த வாசனை பொருட்கள் வியாபாரத்தில் தங்களது நாட்டை சேர்ந்த வணிபர்களின் உதவிக்காக போரை நடத்துவது பல காலமாக நடைமுறையில் இருந்துள்ளது.பல நூறு ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் ஜவா,சுமத்திரா போன்ற நாடுகளின் மேல் நடத்தபட்ட போர், உலக வரலாற்றில் வியாபாரத்திற்காக நடத்தபட்ட போர்களில் ஒன்று.

இந்தியா,சீனா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இருந்து வியாபார பொருட்களை அய்ரோப்பாவிற்கு கொண்டு செல்ல இரு வழிகள் இருந்தது. ஒன்று பட்டு பாதை(Silk Route) எனப்படும் சீனா,மத்திய ஆசியா வழியாக செல்லும் நில வழி பாதை. மற்றொன்று அரேபியா வரை கடல் வழியும் அங்கிருந்து அய்ரோப்பாவிற்கு தொடர்ந்து செல்லும் நில வழி பாதை.இந்த இரு பாதைகளில் வியாபாரம் நடந்தாலும் எகிப்து மற்றும் அரேபியர்களை தாண்டி செல்ல வேண்டி இருந்ததால் அவர்களது ஆதிக்கம் அதிகம் இருந்தது.



எகிப்து மற்றும் அராபியர்களின் கட்டுபாட்டில் இருந்த வாசனை பொருட்கள் வாணிபம், இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின் அய்ரோப்பியர்களின் கட்டுபாட்டிற்கு வர தொடங்கியது.நிலம் மற்றும் கடல் மூலம் வாணிபம் நடந்த வரை, ஆசியாவில் இருந்த பல நாடுகளில் இருந்த வணிபர்கள் இடைதரகர்களாக இருந்து லாபத்தின் பெரும் பகுதியை அனுபவித்து வந்தனர். முழுமையான கடல் வழி வாணிபம் தொடங்க பட்ட பின் ஒட்டு மொத்த லாபமும் அய்ரோப்பிய வாணிபர்களின் கைக்கு போக தொடங்கியது.

கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின், ஆசியாவிற்கிடையேயான வாசனை பொருட்கள் வாணிபம் முதலில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஸ்பெயின் நாட்டினர் வசம் இருந்தது. ஸ்பெயின் நாட்டினர் இங்கிலாந்திற்கு எதிராக கடல் வழி போரை தொடுத்து 1588ம் ஆண்டு தோல்வி அடைந்தனர். இந்த சமயத்தில் டச்சுகாரர்களால் டச்சு கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனியும் ஆரம்பிக்க பட்டது. இவை இரண்டும் தான் முதன் முதலில் தொடங்க பட்ட பன்னாட்டு கம்பெனிகள் எனலாம்.1600ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் கிழக்கிந்திய கம்பெனி தொடங்க பட்டது. அது ஆரம்பிக்க பட்ட போது அதன் பெயர் Governor and Company of Merchants of London Trading into the East Indies.ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு கப்பலின் கடல் பிரயாணமும் தனி தனி வியாபாரம் போல் எடுத்து கொள்ள பட்டு அதற்கென்று தனி முதலீட்டாளர்கள் இருந்தனர்.பின்னர் 1657ம் ஆண்டு தற்போதைய பெரிய கம்பெனிகள் போல் பங்குகளை தனியாருக்கு வினியோகித்து கூட்டு பங்கு வணிக முறையில் செயல்பட்டு வந்தது.

பல கம்பினிகள் ஆரம்பிக்க பட்டால் போட்டி ஏற்பட்டு விலை குறைந்து லாபம் கிடைக்காது என்பதால் டச்சு மற்றும் ஆங்கிலேய அரசுகள் அந்த இரு கம்பெனிகளுக்கும் வாசனை பொருள் வாணிபத்திற்கு தனியுரிமை கொடுத்தது.1615 ம் ஆண்டு முகலாய மன்னர் ஜகாங்கீருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலை மற்றும் தளத்தை அமைத்து கொள்ள அனுமதி அளிக்கபட்டது.அதன் பிறகு பல நகரங்களில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலையை தொடங்கியது(சென்னையில் 1639 ம் வருடம்). 1647 ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி 23 நகரங்களில் தன் தொழிற்சாலைகளை தொடங்கி இருந்தது.வியாபரத்தில் ஈடுபட்ட கிழக்கிந்திய கம்பெனிக்கு நாடுகளின் மீது போர் தொடுக்கவும்,ஆட்சி அமைக்கவும், தனி படையை வைத்து கொள்ளவும் 1670ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் அனுமதி அளித்தார். கிழக்கிந்திய கம்பெனி ஒரு சாதாரன கம்பெனியாக இருந்தாலும், இந்த முடிவின் விளைவாக பிற்காலத்தில் 20% உலக மக்கள் தொகையை ஆளவும், இங்கிலாந்தை விட அதிக அளவு வருமானத்தை ஈட்டவும் , சுமார் 250000 பேர் கொண்ட படையை வைத்து நடத்தவும் வழி வகுத்தது.

இனி வரும் பதிவுகளில் கிழக்கிந்திய கம்பெனி வியாபார ரீதியாக எவ்வாறு இந்தியைவை சுரண்டியது என்றும் இந்திய தொழிற் வளர்ச்சியை எவ்வாறு சீரழித்தது என்றும் அதன் விளைவாக இங்கிலாந்து அடைந்த லாபங்களை பற்றியும் காண்போம்

--

Monday, June 21, 2010

தங்கத்தை வாங்கி குவிக்கும் சவுதி அரேபியா

1989ம் ஆண்டு உலக சேமிப்பு செல்வத்தில்(Reserve) தங்கத்தின் பங்கு 32.7 சதவிதம் இருந்தது.யூரோ அறிமுகபடுத்த பின் அய்ரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை சிறிது சிறிதாக விற்க ஆரம்பித்தனர்.ஆசிய வங்கிகளோ அமெரிக்க கடன் பத்திரங்களை(டாலர்) அதிக அளவில் சேமிப்பு செல்வமாக வாங்கி குவிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக தங்கத்தின் பங்கு சேமிப்பு செல்வத்தில் 10.3 சதமாக குறைந்தது.அரசாங்கங்களால் அடிக்கப்படும் பணம் மற்றும் பணம் அடிப்படையிலான செல்வங்களுக்கு மாற்றாக இருக்கும் சேமிப்பு செல்வமாக( anti dollar) தங்கத்தை கருதலாம்.சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக மத்திய வங்கிகள் பண புழக்கத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் கூடிய விரைவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கணிப்பு பல பொருளாதார வல்லுனர்களிடம் உள்ளது.அதனால் பண வீக்கத்திடமிருந்த ஓரளவு பாதுகாப்பு பெற அனைவரும் தங்கத்தை நாடுவது வழக்கம்.அதன் விளைவாக தற்போது அய்ரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கும் வேகத்தை சிறிதளவு குறைத்துள்ளனர்.

தற்போது ஆசிய மற்றும் பிற வளரும் நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தியா 200 டன் தங்கத்தை சர்வ தேசிய நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கியது.ஆனால் சீனாவோ கடந்த 6 ஆண்டுகளில் கமுக்கமாக தன் தங்க கையிருப்பை இரு மடங்காக்கி விட்டது. சீனா மறைமுகமாக அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.இந்தியா சீனா மட்டுமின்றி ரஸ்யா,வெனிசூலா,மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தியா சீனா போன்ற நாடுகள் தங்கத்தை அதிக அளவு வாங்கினாலும் தங்களது சேமிப்பு செல்வத்தில் தங்கத்தின் பங்கு 2 - 6 சதவிதம் மட்டுமே உள்ளது.ஆனால் அமெரிக்காவிடம் உலக சேமிப்பு செல்வத்தில் உள்ள தங்கத்தில் 77 சதவிதம் உள்ளது குறிப்பிட தக்கது.

இந்த வரிசையில் வெளி வந்துள்ள சமீபத்திய செய்தி சவுதி அரேபியா பற்றியது. சவுதி அரேபியாவின் தங்க கையிருப்பு 322.9 டன்கள் என்று தெரிய வந்துள்ளது. இது சவுதி அரேபியா வைத்திருந்ததாக கருதபட்ட தங்கத்தின் அளவை விட ( 143 டன்கள் ) இரு மடங்கிற்கும் அதிகமானது ஆகும்.சமீப காலமாக வளைகுடா நாடுகள் இணைந்து பொது நாணயத்தை வெளியிட முயற்சி செய்தனர். இந்த வருடம் அந்த நாணயம் வந்து இருக்க வேண்டும். யூரோ பிரச்சனையினாலும் பிற காரணங்களினாலும் அது மேலும் 5 ஆண்டுகளுக்கு தள்ளி போய் உள்ளது. அந்த பொது நாணயம் தங்க கையிருப்பை கொண்டு, தங்க மாற்று நாணயமாக இருக்கலாம் என்ற வதந்தி உளவி வந்தது.அந்த வதந்திக்கும் இந்த செய்திக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சீனா மிக அதிக அளவு தங்கத்தை வாங்கினால் தங்கத்தின் விலை அதிகம் உயர்ந்து, அதற்கு மாற்றான அமெரிக்க டாலரின் மதிப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.சீனாவின் சேமிப்பு பெருமளவு டாலராக இருப்பதால்,இது சீனாவுக்கு பெரிய பாதிப்பாக அமைய வாய்ப்புள்ளது. உலகில் அதிகமாக உபரி பணம் வைத்துள்ள சீனா இதனால் அதிக அளவு தங்கத்தை குறைந்த கால இடைவெளியில் வாங்குமா என்பதும் சந்தேகமே.மேலை நாடுகளின் தங்க கையிருப்பு குறைந்து வருவதால் அந்நாடுகள் மரபு சாரா முறைகளில் எதாவது உத்தியை கொண்டு தங்கத்தின் விலை ஏற்றத்தை கட்டு படுத்த வாய்ப்பு எப்போதும் உள்ளது!

--

Tuesday, June 15, 2010

சபிக்கப்படும் வரங்கள் - மெக்காலே கல்வித் திட்டம்


இந்தியாவின் கல்வி முறை மேற்கத்திய கல்விக்கு இணையாக வளராததற்கு முக்கிய காரணமாக பொது ஜன ஊடகம் மூலம் ஒட்டு மொத்தமாக பரப்பப்படும் காரணி மெக்காலே கல்வித் திட்டமாகத் தான் இருக்கும். மெக்காலே வழி கல்வி கற்றவர்களை மெக்காலைட்டுகள் என்றும், சொந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காதவர்கள் என்றும் சொல்லாடலாக வலம் வருகிறது. மெக்காலே கல்வித் திட்டம் என்றால் என்ன என்றும் அது பரிந்துரைக்கப்பட்ட காலத்தின் பின்னனியைப் பற்றியும் அறிமுகம் இல்லாத பெரும்பாலோர் அது உண்மை என்றே நம்பி வருகின்றனர். மெக்காலே கல்வித் திட்டம் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு 1835ம் ஆண்டு. முதலில் அந்த காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில் வர்ணாஸ்ரம முறை வலுவாக காலை ஊன்றி இருந்தது. இதன் விளைவாக கல்வி என்பது மதத்தின் பெயரால் பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கபட்டு வந்தது. புத்த மதம் இந்தியாவில் ஆட்சி செய்தபோது தற்போதைய பல்கலைகழகங்களைப் போன்றே நாலந்தா போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் கல்வி அளித்தது (அந்தக் காலத்தில் கல்வி என்பது மத போதனை தான் என்பது வேறு செய்தி). ஆனால் அதன் பிறகு இந்து மதம் தழைத்தோங்கிய பின் சமஸ்கிருத வழி குருகுல கல்வி வளர்ந்து அது உயர் சாதியினருக்கும் மட்டும் சென்றடைந்தது. அதுமட்டுமன்றி இந்தியாவில் இருந்த பல்வேறு சிறு மற்றும் குறுநில மன்னர்களைச் சுற்றி உயர் சாதியினரை மட்டும் உள்ளடக்கிய பெரிய அதிகார வர்க்கம் உருவானது. அந்த அதிகார வர்க்கம், கல்வி சாமனியரை சென்றடைவதைத் தடுத்து, அவர்கள் மட்டும் பயனடைய உதவி செய்தது.

அது மட்டுமன்றி சமஸ்கிருத மொழி கடவுள் பேசும் தேவ மொழி என்ற செய்தி பரப்பப்பட்டு அதைப் படிக்கும் உரிமை ஒரு சில உயர் சாதியினருக்கே உரியது என்பதும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அதைப் படிக்க முயல்வது பாவம் என்பதும் நீதி ஆனது. அப்போதைய கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களும் சமஸ்கிருத மொழியில் வேதம் ஓதுவது எப்படி என்பது பற்றிய பாடங்களும் பிற மத ரீதியான பாடங்களும் தான். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இஸ்லாமிய மன்னர்கள் தொடங்கிய கல்விக் கூடங்களில் குரான் மற்றும் இசுலாமிய மதரீதியான பாடங்கள் தான் இருக்கும். ஒரு புறம் இந்து மன்னர்களின் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை அடிப்படையான இந்து சமய பாடமுறைகளும், மறுபுறம் இசுலாமியப் பள்ளிகளில் அராபிய மற்றும் பெர்சிய மொழிகளில் இசுலாமிய மத பாட முறைகளும் தான் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்தது. பிரிட்டன் பாராளுமன்றம், கிழக்கு இந்தியக் கம்பெனி கட்டாயமாக இலட்சம் ரூபாயை இந்தியர் கல்விக்காக செலவிட வேண்டும் என்று உத்திரவிட்டது. அந்த லட்சம் ரூபாயை எவ்வாறு செலவிடுவது என்று கிழக்கிந்தியக் கம்பெனி சிந்தித்தபோது அப்போதைய கல்வியாளர்களால் இறுதி செய்யபட்டது இரண்டு முறைகள். ஒன்று இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த "தாய் மொழி" வடிவில் கற்று கொடுக்கப்பட்டு வந்த கல்விமுறை. மற்றொன்று ஆங்கில் முறையில் மேற்கத்திய வழிக் கல்வி. அந்த இரண்டில் மெக்காலே தேர்ந்து எடுத்தது மேற்கத்திய முறை அடிப்படையான ஆங்கில வழிக் கல்வி. அது தான் இன்றைய தேசியவாதிகளாலும், இந்து மத அடிப்படைவாதிகளாலும் சாடப்பட்டு வருகிறது.

தாய்மொழிக் கல்வி என்றவுடன் ஏதோ இந்தியாவில் இருந்த அனைத்து மக்களும் தங்களது தாய் மொழியில் கற்க வாய்ப்பு கிடைத்து அதை மெக்காலே தடுத்து விட்டதாக நினைத்து விட வேண்டாம். அந்தக் கால தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்படுவது சமஸ்கிருதம், அரேபிய மற்றும் பெர்சிய மொழி வழிக் கல்விதான். இது அவரது குறிப்புகளில் தெளிவாக இருக்கிறது. அன்று மெக்காலே பாரம்பரிய கல்வி முறையை தேர்ந்து எடுத்து இருந்தால், அதன் விளைவாக இந்தி ஆதிக்கம் இந்தியா முழுதும் படர்ந்து மற்றைய பிராந்திய மொழிகளின் அடிப்படையிலான கல்வியை முழுமையாக அழித்திருக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி மத ரீதியான காரணங்களைச் சொல்லி 1000 ஆண்டுகளாக நடந்து வந்ததைப் போல் கல்வி செல்வத்தையும் அதன் மூலம் வரும் வளர்ச்சி மற்றும் பொருள் செல்வத்தையும் ஒரு சில ஆதிக்க சாதியினருக்கு மட்டும் தனியுடமை ஆக்கி, தங்களின் வளர்ச்சிக்கு ஒரு போட்டியே இல்லாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இவையெல்லாம் உண்மை என்றாலும் மேற்கத்தைய கல்விக்கு ஆதரவாக மெக்காலே சொன்ன காரணங்கள் இவை இல்லை. அவரது கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக அவர் கூறிய காரணங்களைப் பார்ப்போம். .

“மெக்காலேயின் கருத்துப்படி ஆங்கிலத்தில் தான் கலை, அறிவியல், வரலாறு என அனைத்துத் துறைகளிளும் அதிக அளவு புத்தகம் உள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களில் உள்ள கருத்துகள் ஒரு பீரோவின் பாதி அளவில் உள்ள ஆங்கிலப் புத்தகங்களில் உள்ளதை விட குறைவாகவே இருந்தது என்பது தான். அது மட்டுமன்றி கம்பெனியினரின் பணத்தை அறிவியல் சார்ந்த கல்விக்காக செலவிடுவதை விடுத்து மத போதனைகளை மட்டும் கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியான கல்விக்கு செலவிடுவது என்பது வீண். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தும் கல்வி முறை இருக்க வேண்டும். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்க உதவுவது ஏராளமான கலை பொக்கிஷங்களை உள்ளடக்கிய ஆங்கில மொழி வழியில் இருப்பது தான் நன்று. எனவே இந்தியர்கள் ஆங்கிலத்தைப் படித்தால் அவர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து கலை பொக்கிஷங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது அவர்களது அறிவின் வளர்ச்சிக்கு உதவும். அந்த சமயத்தில் கூட இந்திய அதிகார வர்க்கத்தினர் ஆங்கிலத்தில் நன்கு பேசும் புலமை பெற்று ஆங்கிலப் புத்தகங்களை படிக்கின்றனர். எனவே ஆங்கில மொழிக் கல்வியை அனைவருக்கும் அளித்தால் அது அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் விரிவடைகிறது. இனி வரும் காலங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிடையே ஏற்படும் வர்த்தகத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும். எனவே ஆங்கில வழிக் கல்வி பிற்காலத்தில் இந்தியர்களுக்கு இந்த வர்த்தகத்துக்கும் உதவியாக இருக்கும். 15ம் நூற்றாண்டில் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்த அளவு கலை செல்வம் ஆங்கிலத்தில் இல்லை. ஆனால் அப்போது இங்கிலாந்தில் இருந்தவர்கள் ஆங்கிலத்தில் தான் படிப்போம் என்று கூறி பிற மொழிகளில் இருந்த கருத்துகளைப் புறக்கணிக்கவில்லை. மாறாக சில காலத்துக்குப் பின் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அனைத்து புத்தகங்களையும் சமஸ்கிருதத்திலும் அரேபிய மொழியிலும் குறைந்த காலத்தில் மொழி பெயர்ப்பது என்பது கடினம். அதுமட்டுமின்றி இந்தியர்களும் ஆங்கில வழி கற்று உலக நடப்புகள் மற்றும் அறிவியலைக் கற்றால், இந்தியர்களும் மேற்கத்திய சிந்தனை மற்றும் மேற்கத்திய நீதி நெறிமுறைகளை அறிந்து அதை பின்பற்றப் வாய்ப்பாகவும் இருக்கும்.”

இனி அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றி பார்ப்போம். மெக்காலேவின் கல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கி சிந்தனை ரீதியான அடிமைகளாக உருவாக்க முயன்றார் என்பது தான். அதற்கு அவர்கள் காட்டும் மேற்கோள்

"We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste"

ஆனால் இந்த மேற்கோள் பாதியை மட்டும் கொண்டது. அந்த மேற்கோளின் மீதி பாதியை பெரும்பான்மையானோர் மறைத்து விடுவர். அதன் முழு செய்தியையும் படித்துப் பாருங்கள். அவர் கூறியதற்கான காரணம் உங்களுக்கு புரியும்.

"In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them, that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population. "

அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைபட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்று கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும் என்பதேயாகும்.

தற்போது வலையுலகத்தில் வேகமாகப் பரவி வரும் செய்தி மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசியதாக வரும் செய்தி. அதில் கூறபட்டுள்ள செய்தி

"I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation. "

அதாவது இந்தியாவில் ஏழைகளே இல்லையாம். பாலாறும் தேனாறும் ஓடியதாம். வருணாஸ்ரம வழி கல்வி முறையால் தான் இந்தியா இவ்வாறு வளமாக இருந்ததாம். என்வே அந்தக் கல்வி முறையை அழித்து ஆங்கிலக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை அடிமைப்படுத்த முடியுமாம். இந்தச் செய்தியை படிக்கும் யாவருக்கும் அது உண்மையான செய்தியா என்பது புரிந்து இருக்கும். 1835ம் ஆண்டு மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்ட்டில் மேற்கூறியவற்றை கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் மெக்காலே பற்றிய எந்த வரலாற்று குறிப்புகளிலும் இது பற்றி இல்லை. அது மட்டுமன்றி 1835ம் ஆண்டு மெக்காலே இந்தியாவில் தான் இருந்தார். எனவே பிரிட்டன் பார்லிமெண்ட்டில் அவர் இவ்வாறு பேசியிருப்பது சாத்தியமில்லை.

மெக்காலே ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தாமல் பாரம்பரிய கல்வியை சிபாரிசு செய்திருந்தால் ஆங்கிலேயர்களுக்கு அன்றைய இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருக்க முடியும். அது மட்டுமன்றி, சமஸ்கிருத மற்றும் அரேபிய வழி இரு மொழிக் கல்வியை தனித்தனியே கொடுப்பதின் மூலம் இந்து முஸ்லீம் பிரிவினையை நன்கு வளர்த்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பையும் திசை திருப்பி இருக்கலாம். மேலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மேற்கத்தைய சிந்தனைகளை இந்தியாவில் வளர விடாமல் வருணாஸ்ரமம் சார்ந்த குறுகிய மனப்பான்மையிலேயே இந்தியர்களை வளர விட்டிருக்கலாம். அன்று அவர் கொடுத்த ஆங்கிலக் கல்வி முறை தான் பிற்காலத்தில் பல்லாயிரம் இந்தியத் தலைவர்கள் சிந்தனாவாதியாக உருவாகி, இந்திய சுதந்திர இயக்கத்தை வளர்க்க உதவியது என்பதும் மறுக்க இயலாது.

மெக்காலே கல்வித் திட்டத்தின் பயனாகக் கிடைத்த ஆங்கில அறிவின் மூலம் இன்று ஏராளமான இந்தியர்கள் உலகின் பல நாடுகளிளும் வேலை வாய்ப்பைப் பெற உதவி செய்து வருகிறது. இந்தியாவில் ஆங்கில அடிப்படையிலான கல்வியை அறிமுகப்படுத்தி சமஸ்கிருத/இந்தி வழிக் கல்வியை தடுத்ததன் விளைவாக பிராந்திய மொழி தொடக்கக் கல்வியை எளிதாக அறிமுகப்படுத்தவும் காரணியாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மெக்காலே சமஸ்கிருத வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி இருந்தால், இந்திய தேசியவாதத்தைக் காரணம் காட்டி, மற்ற பிராந்திய மொழி கல்வி வளர்ச்சிக்கு முழுமையாக சமாதி கட்டி இருப்பார்கள். ஆங்கிலம் என்பது வெளிநாட்டினரின் மொழியாக இருந்ததால், பிராந்திய மொழி வழி தொடக்கக் கல்வியை ஆங்கிலத்துக்கு இணையாக அறிமுகப்படுத்திய போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது.

தற்போது பாக்கிஸ்தானிய மதராசாக்களிலும், ஆப்கானிஸ்தானிலும் கற்று கொடுக்கப்படும் கல்வி அன்றைய இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்த கல்வி முறையாகத் தான் உள்ளது. இன்றைய இந்து தேசியவாதிகளும் முன்னனி ஊடகங்களும் பாராட்டிப் பேசும் இந்திய பாரம்பரியக் கல்விமுறையை மெக்காலே அறிமுகப்படுத்திய மேற்கத்தைய கல்விமுறைக்கு பதில் நடைமுறைப்படுத்தி இருந்தால், இந்தியாவும் அறிவு சார் சமுதாயமாக வளராமல், ஆப்கானில் இருப்பதுபோல் மத அடிப்படைவாத சமுதாயமாக வளர்ந்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மெக்காலே கல்வித் திட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.english.ucsb.edu/faculty/rraley/research/english/macaulay.html


--

Tuesday, April 27, 2010

இந்திய வைர ஏற்றுமதி தொழிலுக்கு ஆப்பு வைக்கும் சீனா?


பட்டை தீட்டிய வைர ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு $17 பில்லியன் டாலருக்கும் மேல் ஏற்றுமதி வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் மகாராஷ்ட்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் லட்ச கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இத்தொழிலில் உலகலவில் முதலிடத்தில் இருப்பது இந்தியா. இப்போது இந்தியாவில் இத்தொழிலுக்கான ஆப்பு வைக்க சீனா தயாராகி விட்டது. எப்படி என்கிறீர்களா? வைரம் தாது பொருளாக பெரிய அளவில் அங்கோலா காங்கோ போன்ற ஆப்ரிக்க நாடுகளில் கிடைக்கிறது. இந்த வைர தாது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பட்டு அது இந்தியாவில் பட்டை தீட்ட பட்டு, ஆபரணமாக செய்ய பட்டு பெல்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்ய பட்டு உலகம் முழுதும் விற்பனை செய்ய படுகிறது.

சீனா தற்பதோது காங்கோ அங்கோலா போன்ற நாடுகளுக்கு பெருமளவு நிதி உதவி செய்து அங்கு உற்பத்தியாகும் வைரத்தின் பெரும் பகுதியை சீனாவிற்கு ஏற்ருமதி செய்ய நிர்பந்திப்பதாக கூற படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் மூல பொருள் இல்லாமல் வைரம் பட்டை தீட்டும் தொழில் இந்தியாவில் நலிவடைய தொடங்கும்.

ஆனால் ஒரு சில நிபுணர்களின் கருத்து படி டிபியர்ஸ் மற்றும் அல்ரோசா என்ற இரு கம்பெனிகள் தான் உலக வைர விற்பனையில் பெரும் பங்கு வகிக்கின்றனர். எனவே இவ்விரு கம்பெனிகளும் முடிவு செய்து ஒத்துழைத்தால் தான் சீனாவால் வைர பட்டை தீட்டும் தொழிலில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்திய் அரசு வழக்கம் போல் இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள போவது இல்லை.

--

Sunday, April 18, 2010

நக்சலைட் இயக்கத்தை அழிக்க ஒர் நூதனமான அணுகுமுறை!

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 1

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 2

தேசிய வேளாண் நிறுவனம் பற்றியும் அது விவசாயம் சார்பாக செய்து வரும் பணிகளை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது செய்து வரும் சமூக பணிகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

1.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 300க்கும் அதிகமான சுய உதவி குழுக்களை அமைத்துள்ளனர். ஆனால் பெயரளவிற்கு குழுவாக மட்டும் விட்டு விடாமல், அவர்களுக்கு தேவையான தொழில் நுட்ப பயிர்ச்சிகளை அளித்து, கடனுதவி பெற உதவி செய்து,தொடர்ச்சியாக தொழில் நுட்ப ஆலோசனை செய்து அவர்களின் குழுக்கள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக நடைபெற உதவி செய்கிறது. அது மட்டுமில்லாமல் அவர்களின் உற்பத்தியை சந்தை படுத்தவும் உதவி செய்கிறது.

2. சுகாதாரம் பற்றி கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் சிறந்த சுகாதார கிராமமாக அது கவனித்து கொள்ளும் கிராமத்திற்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

3.சமீப காலமாக சென்னையில் ஏற்றுமதிக்கென்று பல தொழில் நிறுவனங்கள் தொழிற் சாலையை தொடங்கி உள்ளது. அவற்றில் மனித வளத்தை மட்டும் அதிகம் சார்ந்துள்ள தைத்த துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும்(export garments) பல. அவற்றிற்கு வேலை பார்க்க வரும் தொழிலாளர்களுக்கு சம்பளமோ குறைவு. பெரும்பான்மையான தொழிலளர்கள் கிராமத்திலிருந்து சென்னை வந்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள். சென்னையில் அவர்கள் தங்கி இருந்து வாழ்க்கை நடத்துவ்து மிகவும் கடினம்.மறுபுறம் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பதும் கடினம்.இந்த கம்பெனிகளையே கிராம சூழ்நிலையில் ஏற்படுத்தினால் எப்படி இருக்கும்?. வேலை செய்பவர்களும் தங்கள் வீட்டிலிருந்து வேலைக்கு எளிதாக செல்லலாம் . அவர்களுக்கு சேமிப்பும் அதிகமாக இருக்கும். தேசிய வேளாண் நிறுவனத்தின் முயற்சியால் இது போன்ற ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியை மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு என்ற கிராமத்தில் தொடங்கி வைத்துள்ளது.கிராமத்தில் உள்ள பெண்களுக்கு தேசிய வேளாண் நிறுவனம் தையல் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

4.M.V. Diabetics நிறுவனத்தின் உதவியுடன் கிராம மக்களுக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்று மொபைல் அராய்ச்சி கூடம் மூலம் கிராமங்களுக்கே சென்று பரிசோதனை செய்து சாட்டிலைட் மூலம் புகழ் வாய்ந்த மருத்துவ நிபுனர்களின் ஆலோசனையை கிராமத்திலிருந்தபடியே கிடைக்க செய்கிறது.

5.நகரத்தில் உள்ள குழந்தைகளுக்கு தரம் வாய்ந்த மழலையர் பள்ளிகள் உள்ளது. கிராமத்தில் கூலி வேலை செய்யும் ஏழை தொழிளாலர்களுக்கு தேசிய வேளாண் நிறுவனம் தரம் வாய்ந்த மழலையர் பள்ளியை நடத்தி வருகிறது.




6.கிராம பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிர்ச்சியை கொடுக்கிறது.

7.IGNOUவுடன் இணைந்து விவசாயம் சார்ந்த பட்டய படிப்புகளை கற்று கொடுக்கிறது.இதன் மூலம் கிராமங்களில் இருக்கும், பள்ளி படிப்பை பாதியில் முடித்த இளைஞர்களுக்கு விவசாய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களுக்கு விவசாயம் சார்ந்த கம்பெனிகளில் வேலை கிடைக்கவும் வழி செய்கிறது. பட்டய படிப்பை படித்து வேலைக்கு செல்ல விரும்பாதவர்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ஆலோசனை தருகிறது.


8.விவசாய பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க நபார்டு வங்கியிடம் கடன் வாங்க தேவையான(Agri Clinic வைக்க) பயிர்ச்சியையும் தருகிறது.

9.நகரில் வளரும் குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரிவதில்லை. என்வே சென்னை போன்ற மாநகரங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி அறிமுகம் கொடுக்க கிராமத்துக்கு ஒரு நாள் சுற்றுல்லா வர வழி வகை செய்து கிராம புற விளையாட்டுகளை காட்டுவதுடன் விவசாயத்தில் அறிமுக பாடமும் நடத்துகிறது.

10.கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு team outing யை கிராமபுறங்களில் ஏற்பாட்டு செய்து eco tourism வளர வழிவகை செய்கிறது. இந்த team outingல் கிராமபுற விளையாட்டு நடத்துவது, மாட்டு வண்டி சவாரி,நாட்டு புற கலைகள் என்று மிகவும் வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது.

இந்த தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா?

இது போன்ற நிறுவனங்கள் நாடு முழுதும் தோன்றினால் கிராம- நகர ஏற்ற தாழ்வு குறைந்து நக்சலைட் போன்ற இயக்கங்கள் நாட்டில் வளர்வதற்கான சூழ்நிலையை அழிக்கும்.

--

Saturday, April 17, 2010

Goldman Sachன் தந்திரம்


அமெரிக்க நிதி நெருக்கடி காலங்களில் மிக பெரிய வங்கிகள் எவ்வாறு சம்பதித்தனர் என்று பல விதமாக செய்திகள் வெளி வந்தாலும் தற்போது SEC(Security and Exchange Commission)0 கோல்ட்மேன் சாக்ஸ் மீது அறிவித்துள்ள குற்றச்சாட்டு இது போன்ற பெரும் நிதி நிறுவனக்களின் நம்பகத்தன்மையே சந்தேகத்தில் ஆழ்த்த தொடங்கி உள்ளது.
அப்படி என்னத்தான் SEC குற்றசாட்டு சொல்கிறது என்று பார்ப்போம். நிதி நெருக்கடிக்கு முன் அமெரிக்க ரியல் எஸ்டேட் கடன் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே. அப்போது முதலீட்டார்கள் அனைவரும் நம்பியது அமெரிக்க ரியல் எஸ்டேட் வளர்ச்சி இப்போதைக்கு குறையாது என்பதே. அதனால் வங்கிகள் கொடுத்த கடனின் அபாயத்திலிருந்து(default) தங்களை காத்து கொள்ள, பல கடன்களை ஒரு கலவையாக்கி அவற்றை ஒரு பொருளாதார பொருளாக(financial product) விற்க தொடங்கின. ஒவ்வொரு CDOவிலும் இருக்கும் கடன் பத்திரங்களின் நம்பக தன்மையை தனி தனியே ஆராய்வது கடினம். அதற்கு தர நிர்ணய படுத்தும் அமைப்புகள் (Credit rating Agencies), அதன் தரத்தை ஆராய்ந்து அவற்றிற்கு மதிப்பீடுகளை வழங்கும். (CDO வை உருவாக்கும் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்து தன்னுடைய CDOவின் தரத்தை பதிப்பீடு செய்ய சொல்லும். அப்படி என்றால் தரம் நிர்ணயம் செய்பவர்களின் மனபாங்கு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்!).2006ம் ஆண்டு ABX என்ற குறியீட்டு முறை அறிமுக படுத்தபட்டது. அதன் படி CDO போன்ற பொருளாதார பொருட்களின் மதிப்பு உயரும் அல்லது குறையும் என்று பெட் செய்ய முடியும். முதலீட்டளர்களின் நட்டத்தின் அளவை மோசமான கால்ங்களில் குறைக்கவே இம்முறை உதவும்.ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் இந்த முறையை தந்திரமாக உபயோக படுத்தி முதலீட்டளர்களை நட்டத்திற்கு தள்ளி தான் பெரும் லாபம் அடைந்ததாக் குற்றசாட்டு எழுப்ப பட்டுள்ளது.
2006 ல் அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்கெட் மிகவேகமாக வளரும் என்று நம்பிய போது அது கூடிய சீக்கிரம் விழ போகிறது என்ற உண்மை ஒரு சிலருக்கு தெரிய ஆரம்பித்தது.அதை உணர்ந்த ஒரு சில கோல்ட்மேன் நிறுவன விற்பனையாளர்கள்,மேற் சொன்ன CDO சிலவற்றை உருவாக்கினார்கள்.அவற்றிற்கு நல்ல மதிப்பீடு பெற்று தர மோடி போன்ற தர நிர்ணய அமைப்புகளிடம் நெருக்குதல் கொடுத்தார்கள் என்று கூற படுகிறது. அவற்றிற்கு நல்ல மதிப்பீடு பெற்றவுடன் நடந்தது தான் கோல்ட்மேன் நிறுவனத்தின் நம்பகதன்மையை கேள்வி குரியாக்கி உள்ளது. இந்த CDOகளை உருவாக்கும் போதே அது நிச்ச்யம் தேறாது என்று அவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் கோல்ட்மேன் நிறுவனம் அதை வெளியுட்டள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் அது தரம் வாய்ந்தது என்று நம்பி அது சார்ந்த முதலீடுகளில் ஈடுபட்டனர். ஆனால் மறுபுறம் கோல்ட்மேன் நிறுவனமோ அந்த CDOக்கள் நம்பக தன்மை குறைந்தது என்று மிக பெரிய அளவுக்கு பெட் செய்தது. அவர்களுக்கு தான் அதன் தரம் தெரியுமே. ஆனால் தன் வாடிக்கையளர்களிடம் அந்த CDOஅதிக மதிப்புடையதாகபொய்யாக காட்டியது.18 மாதங்களில் CDOல் உள்ள கடன்களை உண்மையில் வாங்கியவர்கள் கட்டாமல் மஞ்சள் நோட்டீசு விட்ட்தால் அதன் தர மதிப்பீடும், மதிப்பும் மிக வேகமாக வீழ்ந்தது. அதன் மதிப்பு வீழும் என்று பெட் கட்டிய கோல்ட்மேனுக்கு பில்லியன் டாலருக்கும் மேல் லாபம். அதை நம்பிய வாடிக்கையளர்களுக்கோ பட்டை நாமம்!

--

Wednesday, April 14, 2010

பள்ளி மேம்பாட்டிற்கு $10 ல் ஓர் புரட்சி


வெளி நாடுகளில் தமிழர்கள் பொது இடத்தில் கூடி பேசும் போது தவறாமல் விவாதிக்க படும் விஷயம் தாயகத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல் பற்றிய பேச்சாக இருந்தாலும்
தமிழ் நாட்டின் ஆக்க பூர்வமான வளர்ச்சிக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற விவாதமும் சில சமயங்களில் இருக்கும்.ஆனால் பெரும் பாலான நேரம் அது பேச்சோடே முடிந்து விடும்.
தாய் நாட்டு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை எப்படி செய்ய முடியும் என்ற மலைப்போடு மறந்து விடுவோம். இந்தியாவில் இருக்கும் ஒரு சில
சேவை நிறுவனங்களுக்கு பண உதவி செய்ய முடிந்தாலும் அது எந்த அளவு வளர்ச்சிப்பணியை அடையும் என்ற கேள்விக்குறி தான் முன் நிற்கும்.
.தனியே நாமே எதாவது உருப்படியாக செய்யலாம் என்றால் மிக பெரிய தொகை செலவாகுமே என்ற மலைப்பு ஏற்படும். என்வே இது போன்ற சிந்தனைகள் பேச்சோடு முடிந்து விடும்.
10 வருடங்களுக்கு முன் இதே போன்ற விஷயம் ஒரு குழுவினரிடம் விவாதிக்க பட்டது. ஆனால் அது பேச்சோடு நிற்காமல் ஒரு திட்டமாக தீட்டப்பட்டு
இன்று வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு மிக வேகமாக வளர்ச்சி அடையவும் செய்கிறது.

அது என்ன முயற்சி என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா?இந்தியாவில் கல்வி வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும் கிராமப்புற மற்றும் நகர்புற பள்ளிகளில் உள் கட்டமைப்பின்
நிலை மிக மோசமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளுக்கு கட்டிடம் சரியாக இல்லை. உட்கார மேஜை வசதி சரியாக இருக்காது.மேலும் பிற வசதிகளும் ஒழுங்காக இருக்காது.
கி.பி 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் ஏழைப்பள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஒரு சிலரிடையே விவாதிக்கப்பட்டு பின் தொலை பேசியிலும் மின்னஞ்சலிலும் விவாதத்தில் வளர்ந்து விதையாக வித்திடப் பட்டது தான்
TEAM(TEAM for Educational Activities in Motherland)(http://www.IndiaTEAM.org)
என்ற அமைப்பு..மிகப்பெரிய தொகையை தாயகக்கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்குவது என்பது நடைமுறையில் கடினம். எனவே இத்திட்டதின் படி ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறுந்தொகையை
,அதாவது $10 ஒவ்வொரு மாதமும் குழுவிடம் செலுத்துவார்கள். உதாரணமாக 100 பேர் மூன்று மாதம் $10 கொடுத்தால் ,அது $3000 டாலராக பெருகும். குலுக்கல் முறையில்
6 பேரை தேர்ந்தெடுத்து ஆளுக்கு $500 டாலர் பிரித்து கொடுக்க படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரும் இந்தியாவில் உள்ள ஏழைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து $500 டாலருக்குண்டான
பள்ளி உட்கட்டமைப்புக்கான பணிகளை மேற்கொள்ளுவார்கள். பணிகள் செவ்வனே முடிந்த பின், ரசீது மற்றும் புகைப்படங்களை அமைப்பிடம் சமர்பிப்பர். 50 மாதங்களில்
ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பள்ளியையாவது மேம்படுத்தி இருப்பார்கள்.

இதை படிக்கும் போது ஒருவர் மாதம் $10 டாலர் கொடுப்பதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட போகிறது என்று தோன்றும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இவ்வமைப்பினர்
தாயகக்கல்வி வளர்ச்சிக்காக செய்த மொத்த தொகை அரை மில்லியன் டாலரையும் தாண்டி விட்டது .ஆச்சரியமாக இருக்கிறதா? தமிழ் நாட்டுப்பள்ளிகளுக்கு இவ்வமைப்பினரால் செய்ய பட்ட உதவிகளை
காண இந்தச் சுட்டியை
(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=TamilNadu) அழுத்திப்பாருங்கள்.
.இந்த அமைப்பின் மூலம் பயனடைந்ததில் தமிழகப்பள்ளிகள் முதலிடம் வகிக்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அமர மேஜை, கட்டிடங்கள் மற்றும் பிற அடிப்படை தேவைகள் நிறைவேறியுள்ளன.\\
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் மூலம் பயன் பெற்றுள்ள பள்ளிகளை இங்கு

(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=All)காணலாம்.(இந்த சுட்டியில் 6 பக்கங்கள் உள்ளது.கவனம்).இந்த அமைப்பின் உறுப்பினர்களால் தற்போது செயல்
படுத்த பட்டு வரும் பணிகளை காண இங்கு
http://www.indiateam.org/projects/Pub_qCurrent_PrjList.php சுட்டுங்கள்

இந்த அமைப்பின் சிறப்பம்சமே இந்த அமைப்பு நிறைவேற்றும் பணிகள் யாவும் யாரோ ஒரு தெரியாதவர்கள் மூலம் நடை பெறாமல் இந்த அமைப்பில் உள்ளவர்கள் மூலம் செயல்படுத்துவது தான்.
இந்த அணுகுமுறையே இந்த அமைப்பிற்கும் அதன் செயல் பாட்டிற்குமான வெற்றியை ஈட்டிக்கொடுத்து வருகிறது என்று கூறலாம்.

இதைப்படிக்கும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் தமிழக பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதை ஒரு சமுதாயக்கடமையாக ஏற்று கொண்டு இவ்வமைப்பில்
தங்களையும் ஈடுபடுத்தி சேவை மனப்பன்மையோடு பணி செய்தால் தாய் நாட்டின் கல்வி வளர்ச்சியில் ஒரு புரட்சியே ஏற்படுத்த முடியும்..இதை படிக்கும் உங்களுக்கும்
இது போன்ற சமூகப்பணியை ஆற்ற ஆர்வமாக இருந்தால் info@indiateam.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.


--

Sunday, April 04, 2010

அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் வெளி நாட்டவரின் பங்கு

நியுயார்க் டைம்ஸ்ல் தாமஸ் பிரெட்மென் பகுதியில் அவர் இன்று எழுதிய கட்டுரை . அமெரிக்க வேலைவாய்ப்பு பெருக்கத்தில் சிறு நிறுவனங்கள் பங்கு பற்றியும் வெளிநாட்டினரின் பங்கு பற்றியும் உள்ளது. அதில் உள்ள செய்தி படி பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் வேலை வாய்ப்பு பெரும் பாலும் கீழை நாடுகளில் தான் உள்ளது???. அக்கட்டுரையை தொடர்ந்து படிக்க இங்கு அழுத்தவும்

http://www.nytimes.com/2010/04/04/opinion/04friedman.html?hp

கடந்த வாரம் அவர் எழுதிய இந்த பதிவையும் படித்து பாருங்கள்


-

Sunday, October 25, 2009

இப்படியும் ஒரு பொழைப்பு!

ஒவ்வொரு கம்பெனியும் திவாலாகும் போது அதை ஏற்று நடத்தும் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பு அளவிட முடியாததாக இருக்கும். இது தானே நாம் அனைவரும் நினைப்பது.ஆனால் உண்மை அது இல்லை. கேட்க ஆச்சிரியமாக இருக்கிறதா? திவாலாகும் நிறுவனத்தை ஏற்று நடத்திய நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. இது நடப்பது அமெரிக்காவில்.

சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் போது ஒரு சில வலுவான கம்பெனிகளும் நட்டமடைந்து திவாலாகும் நிலைக்கு வர வாய்ப்புண்டு. ஆனால் அந்நிறுவனங்களுக்கு அதிக அளவு சொத்துக்களும், சந்தையில் நல்ல பிராண்டு பெயரும் இருக்கும். அதை வீணாக்காமல் புதிய தனியார் முதலீட்டு நிறுவனம் அது போன்ற திவாலாகும் நிறுவனங்களை திவாலுக்கு பின் புதிதாக எடுத்து நடத்தும். ஒரு முறை இது போல் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கையில் மாட்டினால் அவ்வளவு தான். அடுத்த சில வருடங்களில் தொடர்ச்சியாக இது போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்கள் வீழும் நிறுவனத்தை சூறையாடி விடுவார்கள். அதன் முதன்மை முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பர். வேலை செய்பவர்களும் பல இன்னலுக்கும் வேலை இழப்பிற்கும் உள்ளாவார்கள் ஆனால் அதை ஏற்று நடத்தும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள்.

எப்படி என்கிறீர்களா?. உதாரணமாக ஒரு நிறுவனம் திவாலாக போகிறது என்று வைத்து கொள்வோம். அது திவாலான உடன் ஒரு சில தனியார் நிறுவனங்கள் அதை புதிதாக எடுத்து நடத்தும். திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு அடிமாட்டு விலையில் இருக்கும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கடன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு குறைந்த விலைக்கு இந்த நிறுவனத்தை வாங்குவார்கள். அதை வாங்குவதற்கு மற்றும் நடத்துவதற்கு என்று அந்நிறுவன பணத்தையே தட்சணையாக பெருவர். பல மில்லியன் டாலர்களையும் சிறப்பு டிவிடெண்டாக பெருவர். அமெரிக்க வங்கிகளும் இந்த நிர்வாக மாற்றம் மற்றும் பாண்டுகளை விற்க என பல மில்லியன் லாபம் அடைவர்.

இதற்கெல்லாம் பணம் எவ்வாறு வருகிறது என்று கேட்கிறீர்களா? இந்நிறுவனத்தை அளவுக்கு மீறி கடன் வாங்க வைப்பர்கள்.வாங்கிய கடனின் பெரும் பகுதியை மேற் கூறிய வகையில் சுருட்டி கொள்வார்கள். மீதி பணம் மட்டும் கம்பெனியின் வளர்ச்சிக்கு செலவிடபடும்.இவ்வாறாக ஏற்று நடத்தும் ஒரு சில வருடத்தில் முதலை எடுத்து கொண்டு நன்கு லாப பணத்தையும் எடுத்து கொல்வார்கள். பிறகு கம்பெனி நிலை மீண்டும் மோசமானவுடன் அதை மீண்டும் திவாலாக்க அறிவிப்பார்கள். தற்போது வேறொரு தனியார் முதலீட்டு நிறுவனம் அதை எடுத்து நடத்தும். ஆனால் நடக்கும் நிகழ்வுகள் ஒன்றாகாவே இருக்கும். கம்பெனியின் கடன் அதிகமாகும். அதை எடுத்து நடத்தும் நிறுவனம் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக லாபமடையும்.10 - 12 வருடங்களில் கரும்பு சக்கையை புழிவது போல் பணத்தை ஒவ்வொரு தனியார் நிதி நிறுவனங்களாக புழிந்து எடுத்து சக்கையாக்கி போட்டு விடுவார்கள்.

உதாரணமாக சிம்மன்ஸ் என்கின்ற படுக்கை தயாரிப்பு கம்பெனி 1991ம் ஆண்டு வெறும் $164 மில்லியன் கடன் கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு மேற்கூறியவாறு பல தனியார் முதலீட்டு கம்பெனிகளின் கைக்கு சென்று அதன் கடன் $1.3 பில்லியனாக மாறி விட்டது. தனியார் முதலீட்டு நிறுவனக்களோ திவாலாகி கொண்டிருந்த அந்த நிறுவனத்திலிருந்து சுமார் $750 மில்லியன் லாபம் எடுத்து விட்டனர். அந்த கம்பெனியின் கடன் பாண்டுகளை வாங்கியவர்களுக்கோ $575 மில்லியனுக்கும் மேலாக நட்டம். ஒவ்வொரு முறை அது கடன் வாங்கும் போதும் அதன் வட்டி அதிகமாகி கொண்டே செல்வதால் அது போன்ற நிறுவனக்களை பொருளாதார சரிவு நேரங்களில் வெற்றிகரமாக நடத்துவதும் கடினம்..

ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் கம்பெனியை மீண்டும் லாபமாக நடத்த முயற்சி செய்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் தற்போது ஒட்டுண்ணியாக பணத்தை உறிஞ்சும் செயல் இவ்வகை நிறுவனங்களிடம் அதிகரித்து உள்ளது

2003 லிருந்து 2008ம் ஆண்டு வரை மட்டும் தனியார் நிதி நிறுவனங்களால் கட்டு பாட்டுக்கு எடுக்க பட்ட 188 கம்பெனிகளிலிருந்து மட்டும் சுமார் $75 பில்லியன் கடனாக பெறபட்ட பணம் தனியார் நிதி நிறுவனக்களுக்கு டிவிடென்டாக சென்று கம்பெனிகளை கடனில் மூழ்கடிக்க செய்துள்ளது.

திவாலாகும் நிறுவனத்திலிருந்தும் பணத்தை கறக்கும் அதிசயம் இன்றும் நடந்து கொண்டுள்ளது. இப்படியும் ஒரு பொழைப்பு!

--