Tuesday, June 21, 2011

கூகிள் மொழி பெயர்பு சேவையில் தமிழும் இணைந்தது

கூகிள் மொழி பெயர்பு சேவையின் மூலம் பல மொழிகளை மொழி பெயர்பு செய்ய முடிந்தது அனைவரும் அறிந்ததே. இந்த சேவை என்று தமிழுக்கும் கிடைக்கும் என பல நாட்களாக நாம் எதிர்பார்த்திருந்தோம். கடைசியாக கூகிள் மொழி பெயர்பு சேவையில் தமிழும் இணைக்க பட்டு விட்டது.

இனி ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகளையும், தமிழ் வார்த்தைகளுக்கான ஆங்கில மொழி பெயர்பையும் இங்கு சென்று பார்க்கலாம்.
http://translate.google.com/?sl=ta&tl=en#en|ta|test.

அது மட்டுமல்ல. எந்த ஒரு தமிழ் இணைய பக்கத்தை பிறமொழிகளுக்கும், பிற மொழி(ஆங்கிலம் உட்பட) இனைய பக்கங்களை தமிழிலும் மொழி பெயர்பு செய்து வாசிக்க முடியும்.என்னுடைய பதிவை கூகிள் சேவை மூலம் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்த போது, இது போல் மொழி பெயர்பு செய்தது.

இந்த சேவை ஆல்பா நிலையில் தான் உள்ளது. எனவே நிறைய தவறுகள் இருக்களாம்.தனி பட்ட வார்த்தைகளை மொழி பெயர்பு செய்யும் சேவை தற்போது நன்றாக உள்ளது. ஆனால் இணைய பக்கங்களை மொழி மாற்றம் செய்யும் போது நிறைய தவறுகள் உள்ளது.

இது பற்றி கூகிள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இங்குள்ளது.


இதை பார்த்தவுடன் Google Translation API கொண்டு தமிழ் மொழிபெயர்பு செய்யும் Widget செய்யலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் Translation APIல் இன்னும் தமிழுக்கு support கொடுக்கவில்லை!

--

Thursday, June 02, 2011

அபாயத்தில் இந்திய சீனா உறவு

இந்தியாவிற்கு சீனாவிடம் ராணுவ ரீதியான அபாயம் பற்றி பல செய்தி வந்து விட்டது. அதை விட மிக அபாயமான செய்தி தற்போது வளர்ந்து வரும் சீனாவுடனான வர்த்தக பெருக்கம் தான். கடந்த சில காலமாக இந்தியா சீனாவுடனான வர்த்தக உறவு பெருமளவு வளர்ந்து சீனா இந்தியாவின் வெளிநாடுகளுடனான வர்த்தகத்தின் முதலிடத்தை பெருமளவுக்கு வந்துள்ளது.

இந்தியா சீனாவிடமிருந்து செய்யும் இறக்குமதியின் மதிப்பு சீனாவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியை விட பெருமளவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 70% மூல பொருட்கள் ஆகும். அதாவது இந்தியாவின் இயற்கை வளத்தை நேரடியாக வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்கிறோம். அதே சமயம், சீனாவிடமிருந்து உற்பத்தி செய்ய பட்ட பொருளை அதிக அளவு இறக்குமதி செய்கிறோம்.

இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ய பட்ட மூல பொருட்களை கொண்டு சீனா, தன்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் தன்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவின் சிறு மற்றும் குறு தொழிற்கள் முற்றிலுமாக அழிய வாய்ப்புள்ளது.

தற்போதைய மத்திய அரசுக்கு இதை பற்றியெல்லாம் சிந்திக்க நேரமெங்கு இருக்க போகிறது!.

--